மூளையின் செயல்திறனை அதிகரிப்பது எப்படி?

எளிய அறிமுகம் மட்டும். எல்லா மூளையும் கொழுப்பால் ஆனது தான். அதன் வளார்ச்சிக்கு புரதமும், செயல்பாட்டுக்கு பிராணவாயுவும் தேவை. நம் வலப்பக்க மூளை உடலின் இடது பாகத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அது போக கலை சார்ந்த கிரியேட்டிவ் வேலையும் அந்த பக்கம் தான் கவனித்துக்கொள்கிறது. இசை, ஓவியம், சிற்பம் வகையறா, இடதுபக்க மூளை லாஜிக்கல் வேலையை செய்கிறது. ஒப்பிடுதல், முன் அனுபவம் ஆகியவற்றை கணக்கிட்டு முடிவு எடுக்கும் வேலை. மனிதர்களில் 85% பேர் இடது பக்க மூளை செயல்பாட்டில் உள்ளவர்கள் தான்.

மனித மூளையை பயோ கம்பியூட்டர் என்பார்கள். அதாவது உயிருள்ள கணிணி. அதன் உண்மையான செயல்திறன். ஒரு லட்சம் சூப்பர் கம்பியூட்டரை விட அதிகம். மூளையை சூப்பர் பிராஸஸர்னு சொல்லலாம். ஆனா பிரச்சனை என்னான்னா நம் மக்கள் அந்த பிராஸஸரை அப்டேட் பண்றதேயில்ல. மூளை தான் ஹார்ட் டிஸ்கும், உங்கள் ஞாபக அடுக்குகளும் அங்கே தான் இருக்கு. பிராஸஸர் அப்டேட்டா இல்லைனா அதனால் ஞாபக அடுக்கில் இருந்து சரியான பதிலை எடுத்துத்தர இயலாது போய் விடும்.



இந்த கட்டுரையின் புரிதல் முழுக்க முழுக்க என்னுடையது மட்டுமே, என் பயிற்சி மட்டுமே. மூளையின் செயல் திறனை குறைக்கக்கூடியது ஆல்கஹால். நான் இரண்டு முறை டீஅடிக்சன் போயும் பிராஸஸர் நல்லா இருக்குன்னா அதற்கு நான் செய்து வரும் பயிற்சிகளே காரணம். மூளையின் செயல்திறனை கூட்ட ஆதி பால பாடம் கணிதம் மட்டுமே. கணிதத்தை மனப்பாடம் செய்ய இயலாது. சிந்திக்கனும். சிந்தனை மட்டுமே மூளையை உயிர்ப்புடன் வைத்திருக்கும்.



குறுகிய சிந்தனை என்பார்கள், அதை பொதுபுத்தியுடன் வகைப்படுத்தலாம்.,  குறுகிய சிந்தனை என்பது மாற்று சிந்தனை இல்லாமல் இதுவரை எல்லாரும் என்ன பண்ணாங்களோ அதையே தானும் செய்வது. இதற்கான பயிற்சி புதிர்கள் விடுவிப்பது. கணித புதிர்கள், எழுத்து புதிர்கள், அடுத்து என்ன என்னும் லாஜிக்கல் புதிர்கள் உங்களுக்கு மாற்று சிந்தனைக்கு வழி வகுக்கும்.
பதில் தெரியாத புதிர்களை ஒதுக்கி விடாமல் பதிலை அறிந்து கொள்ளுதல் நல்லது. அப்படி ஒரு கோணம் இருப்பதை உணராமல் உங்களால் மாற்று சிந்தனைக்கு செல்ல முடியாது

ஞாபக சக்தி என்பது தான் இன்றைய தலையாய பிரச்சனை. நம் கல்வி முறை 80% மனப்பாடம் செய்து அதை ஞாபகம் வைத்து கொள்ளவதை மட்டுமே செய்கிறது. ஞாபகசக்தியின் பாலபாடம் ஆர்வம். ஒன்றை கடமைக்கு படிக்கனும்னு படிக்கக்கூடாது, மதிப்பெண்ணுக்காக படிக்கக்கூடாது. இதில் எதோ இருக்கு, அது என்னான்னு நான் தெரிஞ்சிக்கனும் என்ற ஆர்வத்தை மையப்படுத்தனும். சினிமா, கதை படிப்பதில் போல் ஆர்வம் இல்லாமையே அது நம் மனதில் தங்காமல் இருப்பது. மறக்காதீர்கள், ஞாபக சக்தியின் சூத்திரம். :இதில் எதோ இருக்கு, அது என்னான்னு நான் தெரிஞ்சிக்கனும்”

கணிதம், கணித புதிர்கள் விளையாட்டாய் செய்யலாம், அதே போல் உள்ள இன்னொரு எளிய பயிற்சி. எண்கள்.
ஒன்னு, டூ, மூணு, ஃபோர், அஞ்சு, சிக்ஸ் இப்படி 50 வரை தவறில்லாமல் சொல்லிபழகுங்கள், பழக பழக வேகம் கூட்டுங்கள், 100 வரை சொல்லுங்கள், உங்களுக்கு மூன்றாவதாக வேறு மொழி தெரியும் என்றால் அம்மொழியையும் சேர்த்துக்கொள்ளுங்கள். தினம் காலையில் இப்பயிற்சி செய்வது கவனமுடன் வேலை செய்யவும், ஒருநிலை மனதில் எதையும் கவனிக்கவும் வழி செய்யும்.

வலதுகை பழக்கக்காரர்கள், இடது கையில் எழுதி பழகுங்கள். ஆரம்ப இடத்தில் சரியாக முடிக்கும் முட்டை(ரவுண்டு) போட்டு பழகுங்கள்(வேடிக்கையா இருக்கும், அழகான கையெழுத்துக்காக பயிற்சி இது) இசை கேளுங்கள். கூடவே பாடுங்கள். இல்லையென்றால் இசை ஒருபக்கம் ஒலிக்கும், உங்கள் சிந்தனை வேறு பக்கம் இருக்கும். நடனமாடுங்கள்.

இதை 3 வயசு குழந்தையில் இருந்து 113 வயசு குழந்தை வரை செய்து பார்க்கலாம்

மகிழ்ச்சியாக இருங்கள் எல்லாம் உங்கள் வசப்படும்

1 வாங்கிகட்டி கொண்டது:

Unknown said...

மகிழ்ச்சி

!

Blog Widget by LinkWithin