நகக்கீறல் பட்ட சாருவின் தேகம் 1!

இந்திரா காந்தியிடம் சென்றிருந்தால் இந்நேரம் ப. சிதம்பரத்தின் இடத்தில் இருந்திருப்பேன்!

இது தான் சாருவின் ஒரிஜினல் ஸ்டேட்மெண்ட், இதுக்கே இப்படினா இன்னும் சாரு என்ன பண்ணியிருந்தா என்ன ஆகியிருப்பார்ன்னு நம்ம டுவிட்டர் நண்பர்கள் யோசிச்சு கொடுத்த பாயிண்டுகள் இங்கே தொகுக்கப்படுகிறது!

***
3 வயதில் நடிக்க தெரியாமல் மேடை ஏறியவன் தொடருந்து இருந்தால் விஜய் ஆகி இருப்பேன்.
Vaanmugil

**

3வது படிக்கும்போது ப்ளேன பாத்தேன், அப்பயே அதுல ஏறிருந்தா, இப்ப அமெரிக்க ஜனாதிபதி ஆயிருப்பேன்.

@gpradeesh

**

அப்பவே நண்பன் திருட்டு ரயில் ஏறக் கூப்பிட்டான். போயிருந்தா பெருந்தலையா ஆகியிருப்பேன்

அப்போவே ஜேம்ஸ் கேமரூன் என்னைய கூப்பிட்டாரு. போயிருந்தா கேட் வின்ஸ்லெட்டை தள்ளிட்டு போயிருப்பேன்

2 வயதில் நான் தத்தக்கா பித்தக்கா என்று உளறிக் கொண்டிருந்தேன். அப்படியே கண்டினியூ செய்திருந்தால் இன்றைக்கு கருணாநிதி ஆகியிருப்பேன்.

மாயவரத்தான்

**

நான் 3 வயதில் உளறிக் கொண்டிருந்தேன், அப்படியே தொடந்திருந்தால் இந்நேரம் கமல் ஆகியிருப்பேன்

@karthi_1

**

அப்பவே நான் நல்லா கவிதை எழுதுவேன் கருணாநிதிட்ட காமிச்சு இருந்தா நான் தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஆகி இருப்பேன்

@4SN

**

3 வயசில் சுவரெல்லாம் கரிக்கட்டியால் கிறுக்கியிருக்கேன், அதை தொடர்ந்திருந்தால் பிகாசோ ஆகியிருப்பேன்

@kanapraba

*****************



நன்றி டுவிட்டர்ஸ் மற்றும் தொகுத்த கரையான்!

இன்னும் என்னவெல்லாம் சாரு ஆக வாய்ப்பிருக்குன்னு பின்னூட்டத்தில் சொல்லலாம்!

தயவுசெய்து யாரும், சாரு குப்பி கொடுத்ததால் குனிஞ்சி குதிரை ஆகிட்டாருன்னு சொல்லாதிங்க, குதிரை கோவிச்சிக்கும்!

34 வாங்கிகட்டி கொண்டது:

சக்தி கல்வி மையம் said...

ரொம்ப நல்லா இருக்கு..

மு.சரவணக்குமார் said...

சாரு கைபுள்ள கணக்கா அப்பப்ப வந்து உங்க க்ரூப்கிட்ட மாட்றாரு....எம்புட்டு அடிச்சாலும் வலிக்காத மாதிரியே கண்டினியூ பன்றதுல அவரை அடிச்சிக்க ஆளே இல்லை!

உமர் | Umar said...

// சாருவின் தேகம் 1//

அப்ப, தேகம் 2, தேகம் 3 எல்லாம் வரப்போகுதா?

சாரு: அவ்வ்வ்வவ்வ்வ்!

Unknown said...

உங்க போதைக்கு இன்றைய பலி சாரு...
அடி... ஜோரு....

Unknown said...

//3 வயதில் நடிக்க தெரியாமல் மேடை ஏறியவன் தொடருந்து இருந்தால் விஜய் ஆகி இருப்பேன்.//
இங்கயும் விஜய்?

NKS.ஹாஜா மைதீன் said...

ஹி ஹி சூப்பர்....

உமர் | Umar said...

சாரு எழுதுன லவ் லெட்டர் பாக்காதவங்க இங்க போயி படிக்கலாம்.

KARTHIK said...

வால்பையன் கூட நட்பு வெச்சிருந்தா இந்நேரம் ஒரு தொழிலதிபர் ஆயிருப்பேன்

KARTHIK said...

வால்பையன் பிளாக்க படிச்சிருந்தா இந்நேரம் நல்ல எழுத்தாளர் ஆயிருப்பேன்

உமர் | Umar said...

//இந்நேரம் நல்ல எழுத்தாளர் ஆயிருப்பேன்//

நல்ல எளுத்தாளர் ஆயிருப்பேன்

சமுத்ரா said...

nice

Prabu M said...

:-)

Unknown said...

சாரு: நான் நானாக இருப்பதால் நாலுபேர் தாளிக்கவாது பயன்படுகிறேன்.

சி.பி.செந்தில்குமார் said...

ADA ADA KALAKKAL THALA

சி.பி.செந்தில்குமார் said...

SAARU PAARU VAARU

Ashok D said...

//அப்பவே நான் நல்லா கவிதை எழுதுவேன் கருணாநிதிட்ட காமிச்சு இருந்தா நான் தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஆகி இருப்பேன்

@4SN//

கடுமையாக ஆமோதிக்கிறேன்.. சாருவுக்கு கவிதையெல்லாம் எழுத வராதே ;)

Ashok D said...

ஹிஹி.. அது ’ஆட்சேபிக்கிறேன்’

அஞ்சா சிங்கம் said...

சின்ன வயசுல யாருக்கும் தெரியாம சுவர் ஏறி குதிச்சிருக்கேன் ..
அதா அப்படியே ப்ராக்டீஸ் பண்ணிருந்தா ஒலிம்பிக்ல தங்கம் வாங்கீருப்பேன்..........

அஞ்சா சிங்கம் said...

சரக்கடிக்காமல் இருந்திருந்தா சாக்ரடீஸ் ஆகிருபேன் .......

அஞ்சா சிங்கம் said...

பகவத் கீதையை மனபாடம் பண்ணிருந்தா இந்நேரம் ரஞ்சீதாவை நான் தள்ளிக்கிட்டு போயிருப்பேன் ..........

உமர் | Umar said...

@அஞ்சா சிங்கம்

சரி பார்ம்ல இருக்க மாதிரி தெரியுது. போட்டுத் தாக்குங்க.

:-)

damildumil said...

wikipedia மட்டும் இல்லைன்ன இன்னேரம் நடுத்தெருவுல தான் இருந்திருப்பேன்

damildumil said...

இருவர் படத்திற்காக ஐஸ்வர்யா ராய் சென்னை வந்திருந்த போது நானும் சென்னையில் தான் இருந்தேன், ஒரு முறை நேரில் சந்தித்திருந்தால் இன்னேரம் ஐஸ்வர்யா ராய் ஐஸ்வர்யா சாருவாகியிருப்பார்.

Venkat Saran. said...

சின்ன‌ வ‌ய‌சுல‌ வீட்டுக்கு வீடு ஈசியா தாவி விளையாடுவோம். தொட‌ர்ந்திருந்தா ராம‌தாஸ் ஆகியிருப்பேன்

சின்ன‌ வ‌ய‌தில் யார் அடித்தாலும் சுவ‌ர் மாதிரி நிற்பேன். தொட‌ர்ந்திருந்தால் திராவிட் ஆகியிருக்க‌லாம்

7 வ‌ய‌தில் த‌மிழ் தேர்வில் யாருக்கும் புரியாத‌ மாதிரி எழுதிய‌வ‌ன் நான்.தொட்ர‌ந்திருந்தால் கோண‌ங்கி ஆகியிருப்பேன்

எல்.கே.ஜி ப‌டிக்கும்போதே அடுத்த‌வ‌னை ஏமாற்றி மிட்டாய் வாங்கிய‌வ‌ன் நான் . தொட‌ர்ந்திருந்தால் சாரு ஆகியிருப்பேன்.

- Karki's Twitter updates

ராவணன் said...

எதுக்கு ஒன்னும் இல்லாத ஆளை இந்த மிதி மிதிக்கவேண்டும்?

சிறு வயதில் இருந்தே குனிந்து இருப்பவரை இப்படியா துவைப்பது?

குனிந்து நின்றால் ஆயிரம் ரூபாய் ஜட்டி கிடைக்கும் என்ற அரிய தத்துவத்தை நமக்கு அருளிய அந்த மகத்துவ புருஷனை நீங்கள் பெண்டெடுத்து நிமிரவைக்காதீர்கள்.

ஞாஞளஙலாழன் said...

ஒரு தனிமனிதரை நீங்கள் எல்லாரும் இப்படி குறி வைத்து தாக்குவது ரசிக்க முடியவில்லை வால். அவரை விமர்சிப்பதை விடுத்து அவர் படைப்புகளை விமர்சிக்கலாமே?

வால்பையன் said...

அண்ணே இங்க யாரும் சாருவை விமர்சிக்கல, அவரோட ஸ்டேட்மெண்டை தான் விமர்சிக்கீறாங்க!

தமிழ்படம்னு ஒன்னு வந்துச்சு நியாபகம் இருக்கா? ஒரிஜினல் சினிமாவை கிண்டல் பண்ணி, அது மாதிரி இது, சாருவையே நாங்க இனிமே அடிக்க என்ன இருக்கு, அவரே பாவம் குப்பி கொடுத்து கொடுத்து சோர்ந்து போயிருப்பார், அவரை போய் தொந்தரவு செய்வோமா!?

Unknown said...

மூணாங் கிளாஸ்லயே பக்கத்துப் பெஞ்சு புள்ள வாந்தி எடுத்தா! அவ அப்பவே கர்பமாகிருந்தா சந்தேகத்தின் பேர்லயாவது அப்பா ஆகிருப்பேன்! #சாரு எஃபெக்ட்

suvanappiriyan said...

சுவைபட சில விபரங்களை சொல்லும் சாரு, இடையிடையே ஏன் இப்படி காமெடி பண்ணுகிறார்?

suneel krishnan said...

சின்ன வயசுலயே பக்கத்துக்கு பெஞ்சு புள்ளைங்க பேசுறத ஒட்டு கேப்பேன் அப்டியே விட்ருந்த இந்நேரத்துக்கு விக்கி லீக்ஸ் அசஞ் ஆகிருப்பேன் ..
அப்பப்ப நல்ல கதை எல்லாம் சொல்லுவேன் அதா அப்டியே தொடர்ந்து இருந்தா இன்னிக்கு ஒரு நல்ல எழுத்தாளர் ஆயிருப்பேன் :)

மங்குனி அமைச்சர் said...

நான் 3 வயசிலே பதிவுலம் படிக்க ஆரம்பிச்சிட்டேன் . இப்படி வாழ் பையன்னு ஒருத்தன் வந்து என் உயிரை வாங்குவான்னு தெரிஞ்சிருந்தா , அப்பவே நானே வால்பையனா ஆகிருப்பேன் .


இப்படிக்கு
லைட்டாக டீ சாப்ட்டு ஸ்ட்ராங்காக யோசிப்போர் சங்கம்

yeskha said...

எழுத்தாளனை மதிக்காத சமூகம் உருப்படாது.. கேரளாவில் என்னைக்கொண்டாடுவார்கள் தெரியுமா? இங்கே கமெண்ட் மட்டும் போடுகிறார்கள்.. எவனும் தாத்தாஸ்க்கி, எம்பர்த்தோ சொக்கா படிப்பதே இல்லை.. ஸீரோ வில் எவ்வளோ பெரிய ஓட்டை இருக்கு தெரியுமா? அதை பாடமாக வைத்திருக்கிறார்கள் தெரியுமா? (டயர்டா இருக்கு.. ஒரு ரெமி மார்டின் அடிச்சுட்டு வந்து வச்சிகிறேன் உங்கள)

damildumil said...

இங்க கமெண்ட் போட்டால் முதுகுல பிராண்டி வச்சுருவோம்ன்னு சாரு பக்தர்கள் மெயில் அனுப்பி தொல்லை பண்றாங்கப்பா

Anonymous said...

வால்பையனின் வழக்கமான பதிவுகளைக் காணவில்லை. அவரும் மொக்கை பதிவுகள் போட ஆரம்பித்துவிட்டாரோ????
பதிவுகளுக்கிடையே இடைவெளி விழுகக்கூடாது என்பதற்காக இப்படி சாதாரணமான கடி ஜோக்ஸ் மாதிரியான பதிவுகளை எழுதுறீங்களே..
பழையபடியான நச் பதிவுகளை மறுபடியும் தொடருங்கள் நண்பரே..

!

Blog Widget by LinkWithin