நாட்டு நடப்பு!

இதுவரை எழுதிய பொதுபுத்தி பதிவிலும் சரி, இப்பொழுது எழுதுகின்ற பொதுபுத்தி பதிவிலும் சரி! மதவாதிகளின் தர்க்கம் கொஞ்சமும் மாறப்போவதில்லை என்பது மூன்று வருட வலையுலக அனுபவம் முழுமையாக உணர்த்திவிட்டது! ப்ளாக்கை படிக்கவே வேண்டியதில்லை, வால்பையன் பதிவா, பின்னூட்டத்தில், உங்களால் இந்துமதத்தை மட்டும் தான் கேலி செய்ய முடியும், கிறிஸ்துவத்தையும், இஸ்லாத்தையும் கேள்வி கேட்டு பாருங்களேன் என்று வரும்! மந்தையில் இருப்பதும், தனிதன்மையுடன் இருப்பதும் அவரவர் வாழ்வியல் சூழலையும், அவரவர் விருப்பு வெறுப்புகளையும் சார்ந்தது! நான் வழக்கம் போல புலம்பிட்டு போறேன்!

பயம் என்ற ஆதாரம் தான் கடவுள் நம்பிக்கையின் வேராக இருக்கிறது! எந்த ஒரு மதவாதியியையும் வெங்காயம் உரிப்பது போல் கேள்வி கேட்டு கொண்டே போனால் இறுதியில் இறைபயமும், மறுமையின் வாழ்க்கை பயமும் நிற்கிறது! பூச்சாண்டி வந்துரும் ஒழுங்கா சாப்பிடு என்று குழந்தையை பயமுறுத்துவதற்கும், இதற்கும் பெரிய வித்தியாசமில்லை! இரண்டிலுமே யாரோ ஒருவரின் சுயநலம் நிச்சயமாக ஒழிந்திருக்கிறது! பொதுபுத்தியில் உள்ளவர்கள் தன்னைவிட வயதில் குறைந்தவர்கள், கல்வியில் குறைந்தவர்கள் கருத்துகளை காதில் போட்டு கொள்வதில்லை! அவர்களது சமூக விருப்பு வெறுப்புகள் அவர்கள் பெற்றோர்களாலேயே திணிக்கப்படுகிறது!

அவர்களை சொல்லியும் பிரயோசனமில்லை, அவர்களும் அப்படியே வளர்க்கபட்டார்கள், உதாரணமாக ஒரு சினிமா எடுக்க நல்ல கதை, நல்ல நடிகர்கள், சிறந்த உழைப்பு வேண்டும் என்பது அனைவருக்கும் தெரியும் ஆனாலும் ஆரம்பிக்கும் முன் ஒரு பூசை போடுவார்கள், தயாரிப்பாளருக்கும் தெரியும் இது வெட்டி செலவென்று ஆனால் என்ன செய்வது எவ்வளவோ செலவு செய்யுறோம், இதையும் பண்ணிடுவோமோ என்ற எண்ணம் இவ்வாறு வளர்த்து விடுகிறது! பூசை போடுவதினால் ஒரு விசயம் வெற்றியடைய முடியுமா என்ற சந்தேகம் அனைவருக்கும் உண்டு, ஆனால் அதுவே நிலைத்து விட்டால் பூசாரிகளுக்கும், சாமியார்களுக்கும் வேலையில்லையே! அதனால் உங்களை சிந்திக்கவிடாமல் மழுக்கட்டையாக வைத்திருப்பதே அவர்களது வேலையாக இருக்கிறது! ஒரே மந்தை போல தோன்றினாலும் அதில் மேய்ப்பவன் பூசாரி வேடத்திலும், சாமியார் வேடத்திலும் தனியாக தெரிகிறான்!. பலரின் வேடம் கலைந்தும் இன்னும் சப்பைகட்டு கட்டி கொண்டிருப்பவர்களின் பூர்வீகத்தை கொஞ்சம் ஆராய்ந்து பாருங்கள் அவர்களும் உங்களை மேய்க்க ஆசைப்படுபவர்கள் தான், உங்களை என்றுமே அடிமையாக வைத்திருக்க நினைப்பவர்கள் தான்!


நித்தியானந்தரின் லேட்டஸ்ட் பேட்டி பற்றி அறிந்தேன்! மனிதர் செக்ஸ் பற்றி ஆராய்ச்சி செய்தாராம், இந்த விசாரணையில் இன்னும் எத்தனை பேரிடம் செக்ஸ் ஆராய்ச்சி செய்தார் என்று வெளிவரலாம்! பொண்டாட்டி, குழந்தைகளை இம்மாதிரி ஆசிரமத்திற்கு அனுப்புபவர்கள் தயவுசெய்து இனிவாவது மாறுங்கள், ஏமாறுபவன் இருக்கும் வரைக்கும் ஏமாற்றுபவன் குறையப்போவதில்லை, எல்லாம் வல்ல கடவுள் என்று தானே கடவுளை நம்புகிறீர்கள், கடவுளுக்கும், உங்களுக்கும் இடையில் எதற்கு புரோக்கர் வைத்து கொள்கிறீர்கள், அந்த புரோக்கர்களை சாமியார்களுக்கு புரோக்கர் வேலை செய்ய அனுப்புங்கள்! எல்லாம் வல்ல கடவுள் உங்கள் மொழியையும் புரிந்து கொள்வார் என நம்புங்கள், தேவ பாஷை என்று ஒன்றும் இல்லை, அவையனைத்தும் உங்களை காலங்காலமாக ஏமாற்றி கொண்டிருப்பதற்கே என்பதை உணருங்கள், கடவுள் கோவிலில் மட்டும் இருப்பார் என்ற கூற்றை உங்கள் கோவில் நுழைவு எதிர்ப்பின் மூலம் கடவுள் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என காட்டுங்கள்(என்னடா பல்டி அடிக்கிறானேன்னு பாக்குறிங்களா, ஊசி போடும் முன்னர் டிஞ்சர் தடவுவாங்கல்ல அது மாதிரி இது மற்றும் நண்பர்கள் வேண்டுகோளுகினங்க மென்மையாக)


இஸ்லாமிய சகோதரர்கள் வலையில் பெரியார்தாசன் இஸ்லாமிராக மாறிவிட்டார் என எழுதியிருந்தார்கள், எனக்கு இது ஒரு சாதாரண நிகழ்வு தான் ஆனால் நண்பர்களுக்கு உலகத்தையே புரட்டி போட்டது போல் ஒரு சந்தோசம், இருந்துட்டு போகட்டும், இதையே தான் மைக்கேல்ஜாக்ஸன் செய்த போது செய்தார்கள், ஜாக்ஸனின் பாலியல் குற்றசாட்டுகள், போதை பழக்கம் அதனால் மாறிவிட்டதா என்ன!? பெரியார்தாசன் என்பவர் யார், முதலில் அவரது இயற்பெயர் என்ன என்பது யாருக்காவது தெரியுமா!?
அவரது உண்மையான பெயர் சேஷாசலம் அது எங்கேயாவது குறிப்பிடுகிறார்களா இல்லை, மதவாதிகளுக்கு கடவுள்மறுப்பின் கதவை உடைத்துவிட்டது போல் ஒரு மகிழ்ச்சி! சேஷாசலம் ஒரு நாத்திகவாதியே அல்ல என்பது உங்களுக்கு தெரியுமா!?



கண்ணனுக்கு தாசன் கண்ணதாசன் என்றால் நான் கண்ணனை எனது தலைவனாக ஏற்றுக் கொள்கிறேன் என்று அர்த்தம், அதுவே தான் பெரியார்தாசனுக்கும் பொருந்தும்! பெரியார் தன்னை என்றுமே தோழராக தான் அறிவித்து கொண்டாரே தவிர தலைவர் என்று அல்ல! இவர்களது கொள்கை திரிபுக்கு பெரியார் என்னய்யா பண்ணுவார்! பெரியாரின் கருத்துகளை நயம்பட மேடைகளில் பேசி வந்ததனால் அவரை பெரியார்தாசன் என்று அழைத்தார்கள், அதுவும் அவரே காசு கொடுத்து கூவ சொன்னாரானு தெரியல, இரண்டு வருடங்களுக்கு முன்னரே பெயரியல் பேரரசர்!? ராஜராஜசோழனுக்கு(அந்த பெயர் தானே) சொம்பு தூக்கி மரியாதையை இழந்தார்!
அந்த பெயரியல் பேரரசர் தான் டீ.ராஜேந்தர் என்ற பெயரை மாற்றி விஜய டீ. ராஜேந்தர் என்று மாற்றியது! என்ன மாற்றம் நிகழ்ந்ததென்று நாடறியும்! அப்படிபட்ட ஒரு ஏமாற்றுகாரனுக்கு சொம்புதூக்கியாக இருந்த சேஷாசலம் நல்லவேளையாக பகுத்தறிவு பிரச்சாரம் செய்யாமல் இஸ்லாத்திற்கு சென்றது எனக்கு தான் முதல் மகிழ்ச்சி! பாவம் இஸ்லாமியர்களுக்கு தான் எவ்வளவு செலவாச்சின்னு தான் தெரியில!

192 வாங்கிகட்டி கொண்டது:

Rajan said...

// நாட்டு நடப்பு //

நல்லா தானே இருக்கு ! காணும் எடம் அத்தனையும் கலர் கலரா இருக்கு

தண்ணிக் கொடமே தஞ்சாவூரு கடமே
மந்திரிச்சு விட்டுப் புட்ட மலையாளப் படமே

Rajan said...

//இஸ்லாத்தையும் கேள்வி கேட்டு பாருங்களேன் என்று வரும்!/


கேட்டுடலாம் விடுங்க .... என்ன ஒன்னு கெரகம் அதப் பத்திப் படிக்க தான் பயமா இருக்கு

Rajan said...

// பொண்டாட்டி, குழந்தைகளை இம்மாதிரி ஆசிரமத்திற்கு அனுப்புபவர்கள் தயவுசெய்து இனிவாவது மாறுங்கள்,//

சாறு மாற மாட்டாராமா ! சொல்லிட்டாரு ! கேட்டா எம்பொண்டாட்டி நா எங்க வேணா அனுப்புவேன் நீ என்னடா கேக்கறது மாமாப் பைய்யான்னு திட்டறாரு

உமர் | Umar said...

//அப்படிபட்ட ஒரு ஏமாற்றுகாரனுக்கு சொம்புதூக்கியாக இருந்த சேஷாசலம் நல்லவேளையாக பகுத்தறிவு பிரச்சாரம் செய்யாமல் இஸ்லாத்திற்கு சென்றது எனக்கு தான் முதல் மகிழ்ச்சி! பாவம் இஸ்லாமியர்களுக்கு தான் எவ்வளவு செலவாச்சின்னு தான் தெரியில!
//


இங்க எல்லாருமே வசதியா ஒரு விஷயத்தை மறந்திருறாங்க அல்லது மறைச்சிருறாங்க; பெரியார்தாசன் நாத்திகர் என்று அறிவித்துக்கொண்டது பல வருடங்களுக்கு முன்பு. சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் பௌத்த மதத்தைத் தழுவினார். பிறகு இஸ்லாமியராய் மாறினார். இதுதான் உண்மை. நாத்திகராய் இருந்த ஒருவர் இஸ்லாமியராய் மாறினார் என்று கூவுபவர்களே கொஞ்சம் அடக்கி வாசியுங்கள். அவர் முழுமையான நாத்திகர் இல்லை என்பது. வால்பையன் குறிப்பிட்டுள்ளது போல், ராஜராஜனுக்கு சொம்புத் தூக்கியபோதே தெரிந்த விஷயம்.

Rajan said...

//ஊசி போடும் முன்னர் டிஞ்சர் தடவுவாங்கல்ல//

இல்ல தல சுன்னத் பண்ணும்போது வாய்ல கேக் வெப்பாங்களே அது போல

உமர் | Umar said...

//கேட்டுடலாம் விடுங்க .... என்ன ஒன்னு கெரகம் அதப் பத்திப் படிக்க தான் பயமா இருக்கு//

அப்படியெல்லாம் பயப்படக் கூடாது. நான் இருக்கேன்ல!

சைவகொத்துப்பரோட்டா said...

முதலில் இந்த "ஆராய்ச்சியாளர்களை" ஒழிக்க வேண்டும்.

வால்பையன் said...

//பெரியார்தாசன் நாத்திகர் என்று அறிவித்துக்கொண்டது பல வருடங்களுக்கு முன்பு. சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் பௌத்த மதத்தைத் தழுவினார். பிறகு இஸ்லாமியராய் மாறினார். இதுதான் உண்மை.//


வர்ணபேதம் இந்துமதத்திஉல் கொடி கட்டி பறந்து கொண்டிருந்த காலத்தில் தாழ்த்தபட்ட மக்கலீன் இட ஒதுக்கீட்டிற்காக பாடுபட்ட அம்பேத்கார் ஒரே ஒரு விசயத்தை மாற்ற முடியவில்லை, அது மக்களின் கடவுள் நம்பிக்கை!, எதாவது ஒரு அடிப்படை நம்பிக்கை மக்கலூக்கு தேவையாக இருந்தது, அதனால் ஏற்றதாழ்வற்ற புத்த மதத்தை தழுவினார்! அதற்காக பின்னாலே பலர்!

அம்பேத்கார் என்னைக்கு கடவுளாக போறாரோ!?

ஸ்ரீ.கிருஷ்ணா said...

போட்டு தாக்குங்க .. அப்டியே உங்க ப்ளாக் கூகிள் ad பாருங்க நாட்டு நடப்ப அதுகூட சொல்லுது .....

Rajan said...

//பகுத்தறிவு பிரச்சாரம் செய்யாமல் இஸ்லாத்திற்கு சென்றது எனக்கு தான் முதல் மகிழ்ச்சி! பாவம் இஸ்லாமியர்களுக்கு தான் எவ்வளவு செலவாச்சின்னு தான் தெரியில! //

ஆமா ! அதுலயும் ரெண்டு மூணு கோஷ்டி இருக்கு தல ! வக்காளி பேருதான் வாய்ல நொழைய மாட்டேங்குது

Rajan said...

//அப்படியெல்லாம் பயப்படக் கூடாது. நான் இருக்கேன்ல!//

பப்ளிக் ! பப்ளிக் !

தருமி said...

//இரண்டு வருடங்களுக்கு முன்னரே பெயரியர் பேரரசர்!? ராஜராஜசோழனுக்கு(அந்த பெயர் தானே) சொம்பு தூக்கி மரியாதையை இழந்தார்!//

இது என்னன்னு புரியலையே ..!

விநாயக முருகன் said...

நித்தியானந்தர் செக்ஸ் பற்றி டெஸ்ட் செய்திருக்கார். பாவம் அந்த குழந்தையை போய்? உங்களுக்கு வேறு வேலை இல்லையா? ஆ‌மா..ரஞ்சிதா என்ன டெஸ்ட் செஞ்சாங்க? மைக் டெஸ்ட்டிங். 1...2..3 ஆ?

Rajan said...

//ரஞ்சிதா என்ன டெஸ்ட் செஞ்சாங்க? மைக் டெஸ்ட்டிங். 1...2..3 ஆ?

//

இல்ல ! அவங்க நலந்தானா வாசிச்சுட்டு இருந்தாங்க !

வால்பையன் said...

//தருமி said...

//இரண்டு வருடங்களுக்கு முன்னரே பெயரியர் பேரரசர்!? ராஜராஜசோழனுக்கு(அந்த பெயர் தானே) சொம்பு தூக்கி மரியாதையை இழந்தார்!//

இது என்னன்னு புரியலையே ..!//

இரவு தொல்லைகாட்சியில் ராசிகல், வாஸ்த்து, நியுமரலாஜி வருமே அதில் தான் ஒருவருக்கு பரிந்து பேசினால் பெரியார்தாசன்!

பணம் கொடுத்தால் நடிகைகள் உடையை குறைத்து கொள்வார்கள், பெரியார்தாசன் கொள்கையை அடமானம் வைத்தார் ரெண்டும் கிட்டதட்ட ஒன்னு தானே!

Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...

ஆமா பரிணாம வளர்ச்சி ? பத்தி ஆரம்பிச்சீங்க அதை அப்படியே கிடப்புல போட்டுடீங்க...

உமர் | Umar said...

//அவர்களது சமூக விருப்பு வெறுப்புகள் அவர்கள் பெற்றோர்களாலேயே திணிக்கப்படுகிறது!//

சமூகமும் ஒரு சிலப் பகுதிகளில் பெரும்பங்கு வகிக்கிறது. ஒரு இனம் மட்டும் பெரும்பான்மையாய் வசிக்கும் பகுதிகளில், பெற்றோரை விட சமூகமே, சமூக விருப்பு வெறுப்புகளைத் தீர்மானிக்கின்றது.

Anonymous said...

மக்கள் நிம்மதி தேடும் எல்லா இடத்திலும் பணம் சம்பாதிக்க அலையும் கூட்டம் ஒன்று இருக்கத்தான் செய்யும்..அதற்காக நிம்மதி,மகிழ்ச்சி தரகூடிய இடங்களை தடை செய்ய முடியுமா?

வால்பையன் said...

//ஆர்.கே.சதீஷ்குமார் said...

பெரியார் சொம்பு தூக்கி ,பெரியார் தாசன் இவ்லோ நாள் கழித்து இப்போது தான் கடவுல் உண்மை என தெரிந்திருக்கிறது..அது போல் உங்களுக்கும் ஒரு நாள் ’’தெளியும்’’//


பெரியார்தாசனுக்கு அப்பொழுது பெரியார் கடவுளாக தெரிந்திருக்கிறார், அவர் என்றுமே நாத்திகவாதி கிடையாது! அவர் ஒரு சரக்கை விட்டு வேறு சரக்குக்கு மாறியிருக்கிறார்! நீங்கள் இன்னும் பழய சரக்கு!

தெளிய வைக்க வேண்டியது உங்களை தான்!

Rajan said...

/பெரியார் சொம்பு தூக்கி ,பெரியார் தாசன் இவ்லோ நாள் கழித்து இப்போது தான் கடவுல் உண்மை என தெரிந்திருக்கிறது..அது போல் உங்களுக்கும் ஒரு நாள் ’’தெளியும்’’//

இத்தன நாள் பெரியாருக்கு தூக்கினத இப்போ கடவுளுக்கு தூக்கறாரு ! பெரியாருக்காவது ஈரோட்டுல சொத்து கெடக்குது ! கடவுளுக்கு கோவணம் கூட சொந்தமில்ல

வால்பையன் said...

// ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஆமா பரிணாம வளர்ச்சி ? பத்தி ஆரம்பிச்சீங்க அதை அப்படியே கிடப்புல போட்டுடீங்க...//


தோணும்போது எழுதுவேன்!

உமர் | Umar said...

//பொண்டாட்டி, குழந்தைகளை இம்மாதிரி ஆசிரமத்திற்கு அனுப்புபவர்கள் தயவுசெய்து இனிவாவது மாறுங்கள், //

forwarded to சாரு & கோ

வால்பையன் said...

//சமூகமும் ஒரு சிலப் பகுதிகளில் பெரும்பங்கு வகிக்கிறது. ஒரு இனம் மட்டும் பெரும்பான்மையாய் வசிக்கும் பகுதிகளில், பெற்றோரை விட சமூகமே, சமூக விருப்பு வெறுப்புகளைத் தீர்மானிக்கின்றது. //

அதுவும் ஒரு வகையில் உண்மை தான்!
ஒரு குறிட்ட சாதியினர் பெரும்பான்மையாக இருக்கும் இடங்களில் அந்த சாதியையே மற்றவர்களும் சொல்லி கொள்ள ஆசைப்படுகின்றனர்! பெரும்பான்மையை விட அது ஆதிக்க சாதியாக இருந்தால் நிச்சயமாக அனைவரும் அதையே தான் சொல்வார்கள்!

ஈரோடு கதிர் said...

இவரு ரெண்டு வாரத்துக்கு முன்னே விஜய் டிவில விட்ட ஜொள்ளுக்கு ஷகீலா தாசன்னு பேர் மாத்தியிருக்கலாம்...

ஜாபர் ஈரோடு said...

\\ பெயரியர் பேரரசர் \\


வால் அது \\பெயரியர் பேரரசர்\\ இல்ல
பெயரியல் பேரரசர்.

வால்பையன் said...

//மக்கள் நிம்மதி தேடும் எல்லா இடத்திலும் பணம் சம்பாதிக்க அலையும் கூட்டம் ஒன்று இருக்கத்தான் செய்யும்..அதற்காக நிம்மதி,மகிழ்ச்சி தரகூடிய இடங்களை தடை செய்ய முடியுமா? //


விசா ரொம்ப நாளா மகிழ்ச்சி தரும் பாலியல் தொழிலை தமிழகத்தில் கொண்டு வரசொல்லி கேட்டு கொண்டிருக்கிறார்! ஆவன செய்யவும்!

சதிஷ் அண்னே! எனக்கு நிம்மதியும், மகிழ்ச்சியும் தரக்கூடிய இடம் எது தெரியுமா?!

கக்கூஸ்!

காலையில் எங்கேயும் கக்கூஸ் கிடைக்காமல் மாட்டி பாருங்கள் தெரியும்!

உமர் | Umar said...

//ஜொள்ளுக்கு ஷகீலா தாசன்னு பேர் மாத்தியிருக்கலாம்..//

ஒரு வாசகம்னாலும் திருவாசகம்

Rajan said...

//சதிஷ் அண்னே! எனக்கு நிம்மதியும், மகிழ்ச்சியும் தரக்கூடிய இடம் எது தெரியுமா?!

கக்கூஸ்!

காலையில் எங்கேயும் கக்கூஸ் கிடைக்காமல் மாட்டி பாருங்கள் தெரியும்!//

கக்கூஸ்ல கால் மாட்டிச்சுனா அத விட கொடுமையா இருக்கும் தல

இரசிகை said...

//கண்ணனுக்கு தாசன்// கண்ணதாசன் என்றால் நான் கண்ணனை எனது தலைவனாக ஏற்றுக் கொள்கிறேன் என்று அர்த்தம்//

nijamaavevaa?

kankalukku thaasan illaiyaa?
kavingnar kankalin kaathalan illaiyaa?

Rajan said...

// நிம்மதி,மகிழ்ச்சி தரகூடிய இடங்களை தடை செய்ய முடியுமா?//

இவ்வளவு அப்பாவியா ! அவ்வவ்வ்வ்வ்

உமர் | Umar said...

//ஒரு குறிட்ட சாதியினர் பெரும்பான்மையாக இருக்கும் இடங்களில் அந்த சாதியையே மற்றவர்களும் சொல்லி கொள்ள ஆசைப்படுகின்றனர்! //

சாதி என்பது இங்கே மதத்துக்கும் பொருந்தும். அப்பகுதிகளில் கடவுள் மறுப்புக் கொள்கை உடையவர்களை சமூகப் புறக்கணிப்பு என்னும் ஆயுதம் கொண்டே மிரட்டுவர். சமீபத்திய உதாரணம்; தக்கலையைச் சார்ந்த ரசூல்.

Rajan said...

//kankalukku thaasan illaiyaa?
kavingnar kankalin kaathalan illaiyaa?

//

அப்பிடின்னு ஒரு தடவ கண்ணதாசன் தென்றலல சொல்லிருக்காரு !

கண்ணதாசன்னா அழகான கண்களுக்கு தாசன்னு

உமர் | Umar said...

//அந்த பெயரியல் பேரரசர் தான் டீ.ராஜேந்தர் என்ற பெயரை மாற்றி விஜய டீ. ராஜேந்தர் என்று மாற்றியது! என்ன மாற்றம் நிகழ்ந்ததென்று நாடறியும்! //

உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணா!

Rajan said...

//சமூகப் புறக்கணிப்பு என்னும் ஆயுதம் கொண்டே மிரட்டுவர். சமீபத்திய உதாரணம்; தக்கலையைச் சார்ந்த ரசூல்.

Post a comment.//

இவனுக என்ன புறக்கநிக்கறது பரதேசிப் பசங்க ! கூட்டிட்டு வந்து தோலுரிச்ச வாழப் பலத்த முழுசா வெட்டிடணும்

Anonymous said...

அண்ணே ஆராய்ச்சி பண்ணினது குத்தமான்னே? அவரு அத வச்சி புக் எழுதலாம்னு இருந்தாரு. நம்மாளு அத மொழிபெயர்ப்பு செஞ்சிருபாரு.

:)

க.பாலாசி said...

//எல்லாம் வல்ல கடவுள் என்று தானே கடவுளை நம்புகிறீர்கள், கடவுளுக்கும், உங்களுக்கும் இடையில் எதற்கு புரோக்கர் வைத்து கொள்கிறீர்கள்//

நியாயம்...

Rajan said...

இஸ்லாத்தின் தகிடு தத்தங்களை ஆதாரங்களுடன் வெகு சீக்கிரம் சேதாரப் படுத்துவோம்

ஆல் இன் ஆல் அழகு ராசா அண்ட் கோ !

Rajan said...

//அண்ணே ஆராய்ச்சி பண்ணினது குத்தமான்னே?//

யோவ் கும்மி இங்க ஒரு சாமியாரு காவியக் கட்டிட்டு குள்ளயா வந்துருக்காரு புடிச்சு அமுக்கு

உமர் | Umar said...

//குறுமுனி said...
அண்ணே ஆராய்ச்சி பண்ணினது குத்தமான்னே? அவரு அத வச்சி புக் எழுதலாம்னு இருந்தாரு. நம்மாளு அத மொழிபெயர்ப்பு செஞ்சிருபாரு.

:)//

முனின்னு சொல்லிக்கிட்டு இவ்வளவு அலைஞ்சா, அப்புறம் அந்த சாமிக்கும் உமக்கும் வித்தியாசமே இல்லாம போயிரும்!

Anonymous said...

//
யோவ் கும்மி இங்க ஒரு சாமியாரு காவியக் கட்டிட்டு குள்ளயா வந்துருக்காரு புடிச்சு அமுக்கு//

புடிச்சு அமுக்கி வீடியோ எடுக்க போறீங்களா? சின்னதா வந்தா சிரிபீங்களா..

small things hurt a lot. you can sit on a mountain.. but not on a small pin...
:)

Beski said...

//கிறிஸ்துவத்தையும், இஸ்லாத்தையும் கேள்வி கேட்டு பாருங்களேன்//
அவ்வளவுதான, கேட்டுருவோம்.

உமர் | Umar said...

//இஸ்லாத்தின் தகிடு தத்தங்களை ஆதாரங்களுடன் வெகு சீக்கிரம் சேதாரப் படுத்துவோம்
//

நேத்துப் போட்ட ஒரு கமெண்டுக்கே அந்தத் தம்பி ஜகா வாங்கிச்சே! பாக்கலையா?

உமர் | Umar said...

//புடிச்சு அமுக்கி வீடியோ எடுக்க போறீங்களா? சின்னதா வந்தா சிரிபீங்களா..
//
எப்பப் பாத்தாலும் விடியோ நெனப்புதான் இந்த சாமிக்கு! லைட்டு ஆப் பண்ணதுக்கு அப்புறம் எடுத்த அந்த விடியோவப் பத்து தடவை பாக்க சொல்லுப்பா அவர

Anonymous said...

//முனின்னு சொல்லிக்கிட்டு இவ்வளவு அலைஞ்சா, அப்புறம் அந்த சாமிக்கும் உமக்கும் வித்தியாசமே இல்லாம போயிரும்!//

இந்த நாட்ல பொழைக்க விடமாட்டேன்கிறாங்க.... என் ரெண்டு நாய்க்கு வேற சாப்பாடு போடணும்.. அதுங்களுக்கு தயிர் சாதம்தான் போடறேன்... நான் வேற குடிக்கணும்... பாரின் வைன்தான் குடிப்பேன்...
:)

Anonymous said...

//எப்பப் பாத்தாலும் விடியோ நெனப்புதான் இந்த சாமிக்கு! லைட்டு ஆப் பண்ணதுக்கு அப்புறம் எடுத்த அந்த விடியோவப்//

லைட்ட ஆன் பண்ணி எடுத்த படத்தையே கண் கொண்டு பாக்க முடியல.. சாமி வேற சமாதில இருந்தாரா, எனகென்னன்னு படுத்து கிடந்தாரு..

உமர் | Umar said...

//கிறிஸ்துவத்தையும், இஸ்லாத்தையும் கேள்வி கேட்டு பாருங்களேன்//

எல்லாரும் ஒண்ணாதானே திருட வந்தோம். அவர விட்டுட்டு என்ன மட்டும் ஏன் புடிக்கிறீங்க அப்படிங்கறதுதான் இதுப் போன்ற கேள்வி கேட்பவர்களின் எண்ணம்! அவர்களை பற்றி பேச ஆரம்பித்தால் நாம் தப்பித்து விடலாம் என்று எண்ணியே இதை திரும்பத் திரும்ப கூறுவார்கள்.

நம்மைப் பொறுத்தவரை, அனைவரையுமே கேள்விகள் கேட்போம்.

Anonymous said...

//இஸ்லாத்தின் தகிடு தத்தங்களை ஆதாரங்களுடன் வெகு சீக்கிரம் சேதாரப் படுத்துவோம்//

நீங்க சேதாரப்படுதுனா நாங்க திருந்தீருவமா...

உமர் | Umar said...

//இந்த நாட்ல பொழைக்க விடமாட்டேன்கிறாங்க.... என் ரெண்டு நாய்க்கு வேற சாப்பாடு போடணும்.. அதுங்களுக்கு தயிர் சாதம்தான் போடறேன்... நான் வேற குடிக்கணும்... பாரின் வைன்தான் குடிப்பேன்...
:)//

தமிழின் தலைசிறந்த இலக்கியம்; இதுவரை இதுப் போன்று யாருமே எழுதியதில்லை என்று அந்த அதிர்ஷ்டப் பார்வைத் தம்பி சொல்லுதாம்

உமர் | Umar said...

//லைட்ட ஆன் பண்ணி எடுத்த படத்தையே கண் கொண்டு பாக்க முடியல.. சாமி வேற சமாதில இருந்தாரா, எனகென்னன்னு படுத்து கிடந்தாரு..//

கூட சேத்துக்களையேன்கிற ஏக்கம் தெரியுது. ஆனா என்ன பண்ணுறது?

உமர் | Umar said...

//நீங்க சேதாரப்படுதுனா நாங்க திருந்தீருவமா...//

டேய் அவன் அடிக்கக் கெளம்பிட்டாண்டா; உடம்பைத் தயார்ப் பண்ணிக்கங்கடா.

Mythees said...

//பலரின் வேடம் கலைந்தும் இன்னும் சப்பைகட்டு கட்டி கொண்டிருப்பவர்களின் பூர்வீகத்தை கொஞ்சம் ஆராய்ந்து பாருங்கள் அவர்களும் உங்களை மேய்க்க ஆசைப்படுபவர்கள் தான், உங்களை என்றுமே அடிமையாக வைத்திருக்க நினைப்பவர்கள் தான்!//

இன்று உலகில் காணப்படும் அனைத்து மதங்களிலும் கடவுள்களின் பெயரால் மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் மத குருமார்கள் புகுந்து கொண்டு தங்களின் மனிதக் கற்பனைக் கருத்துக்களை மனுதர்மத்தை - மனுநீதியை மதச் சட்டமாக்கி மக்களை ஏமாற்றி, அவர்களிடையே ஏற்றத்தாழ்வை உண்டாக்கி (இதுவே பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் ஜாதியாக உருவாகிறது) கடவுளின் பெயரால் மக்களை சுரண்டி வாழ்வதைப் பார்த்து வருந்தும் சுய சிந்தனையாளர்களே நாத்திக பகுத்தறிவாளர்களாக மாறுகிறார்கள்.

எங்கையோ படிச்ச நியாபகம்

Anonymous said...

சொம்புதூக்கியா சேஷாசலம் ??? கேட்டுடலாம் விடுங்க ....

ஒரே ஒரு விசயத்தை கலர் கலரா தூக்கியபோதே பெரும்பான்மையாய் தெளிய வைக்க வேண்டியது ஈரோட்டுல பெரியார்தாசனுக்குதெரிந்திருக்கிறது ..

பரிணாம வளர்ச்சி இருக்கத்தான் காலையில் எங்கேயும் தூக்கறாரு !!!! மரியாதையை பற்றி டெஸ்ட் செய்திருக்கார்

பெரியார்தாசன்,ஏமாற்றுகாரனுக்கு,ராஜனுக்கு நிம்மதி தரக்கூடிய இடம் தஞ்சாவூரு ?

ஈரோட்டுக்கு வரசொல்லி சாறு மாற
மாட்டாரா என்னன்னு புரியலையே ..!என கேட்டு பாருங்கள் தெரியும்!

Anonymous said...

//
டேய் அவன் அடிக்கக் கெளம்பிட்டாண்டா; உடம்பைத் தயார்ப் பண்ணிக்கங்கடா.//

நான் ஏன் அடிக்கப்போகிறேன். நான் ஒரு சமூக சேவகன். அன்பையும் அமைதியையும் போதிப்பவன். தவிர பல்வேறு ஆராய்ச்சிகளையும் செய்துவருகிறேன்.

Anonymous said...

மஞ்சள் முக ராஜன் போனவுடன் "கும்மி" வரும் மர்மம் என்ன?. தவம் செய்யாமலையே அனைவரும் ஒன்று என ஞானம் கிட்டிவிடும் போலிருக்குதே!

;)))

KULIR NILA said...

கடவுள் என்பது ஒரு அப்பாற்பட்ட சக்தி
கடவுள் மதம் சம்பந்தப்பட்டவர் அல்ல
உணரகூடியவர்
உணர்ந்தவர்களுக்கு கடவுள் உண்டு
உணராதவர்களுக்கு கடவுள் இல்லை

உன் அனுபவத்தில் இல்லாத ஒன்றை
உண்டு என்று நம்புவதும் ஆபத்து
இல்லை என்று முடிவு செய்வதும் ஆபத்து

உமர் | Umar said...

//மஞ்சள் முக ராஜன் போனவுடன் "கும்மி" வரும் மர்மம் என்ன?. தவம் செய்யாமலையே அனைவரும் ஒன்று என ஞானம் கிட்டிவிடும் போலிருக்குதே!

;))) //

நல்ல ஞானம் கிட்டிச்சிப் போங்க ! ஆல் இன் ஆல் சைட்டுல சேந்துக் கும்மி அடிக்கிரதப் பாக்கலையா? ராஜன் சீக்கிரம் வாப்பா! அவரு கொஞ்சம் குழப்பத்திலையே இருக்காரு.

Ashok D said...

//கடவுள் என்பது ஒரு அப்பாற்பட்ட சக்தி
கடவுள் மதம் சம்பந்தப்பட்டவர் அல்ல
உணரகூடியவர்
உணர்ந்தவர்களுக்கு கடவுள் உண்டு
உணராதவர்களுக்கு கடவுள் இல்லை

உன் அனுபவத்தில் இல்லாத ஒன்றை
உண்டு என்று நம்புவதும் ஆபத்து
இல்லை என்று முடிவு செய்வதும் ஆபத்து//

நல்லா சொன்னீங்க நிலா...

உமர் | Umar said...

//நான் ஏன் அடிக்கப்போகிறேன். நான் ஒரு சமூக சேவகன். அன்பையும் அமைதியையும் போதிப்பவன். தவிர பல்வேறு ஆராய்ச்சிகளையும் செய்துவருகிறேன்.//

முனி! நான் அந்த குரூப் சொல்லுற மாதிரி அந்த கமென்ட போட்டேன்!

Anonymous said...

இது சாருதாசனா? நித்திதாசனா?

உமர் | Umar said...

//கடவுள் என்பது ஒரு அப்பாற்பட்ட சக்தி
கடவுள் மதம் சம்பந்தப்பட்டவர் அல்ல
உணரகூடியவர்
உணர்ந்தவர்களுக்கு கடவுள் உண்டு
உணராதவர்களுக்கு கடவுள் இல்லை

உன் அனுபவத்தில் இல்லாத ஒன்றை
உண்டு என்று நம்புவதும் ஆபத்து
இல்லை என்று முடிவு செய்வதும் ஆபத்து//

ஒவ்வொன்றிற்கும் ஒரு attributes/properties உண்டு. அதன் அடிப்படையில் அவற்றை விளக்கிவிட முடியும். காதல் என்பதும் ஓர் உணர்வுதான். அதனுடைய attributes குறித்தும் (dopamine உள்ளிட்ட வேதிப் பொருட்கள்) அறிவியல் ஆராய்ச்சிகள் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் ஒருவர் காதல்வயப்பட்டுள்ளாரா என்று அறிய முடியும்.

அதுபோல் கடவுளை உணர்ந்த நீங்கள் சொல்லுங்களேன், அந்த உணர்வின் attributes- ஐ!

Dr.Rudhran said...

சந்தோஷப்படுங்கள். பெரியாரிஸ்ட் என்று சொல்லிக்கொண்டு அதிர்ஷ்டக்கல் விற்பதைவிடவும் முஸ்லிமாக மாறுவது பரவாயில்லை.

உமர் | Umar said...

//D.R.Ashok said...
நல்லா சொன்னீங்க நிலா...//

நீங்க சொல்லுங்களேன் அந்த attributes-ஐ?

Anonymous said...

//சந்தோஷப்படுங்கள். பெரியாரிஸ்ட் என்று சொல்லிக்கொண்டு அதிர்ஷ்டக்கல் விற்பதைவிடவும் முஸ்லிமாக மாறுவது பரவாயில்லை.//

டாக்டர் அய்யா, பெரியாரிஸ்ட்னு சொல்லபடர எழுத்தாளர் ஒருத்தர் சாமி ஒருத்தர் அமெரிக்காவுல இருந்து புத்து நோயை குணபடுத்துநாறுன்னு சொன்னாரே அத பத்தி உங்க கருத்த சொல்லுங்க..

Anonymous said...

//
அதுபோல் கடவுளை உணர்ந்த நீங்கள் சொல்லுங்களேன், அந்த உணர்வின் attributes- ஐ!//

மகனே கும்மி, அதை சொல்லில் விளக்க முடியாது.. உணர்துந்தான் விளங்க முடியும். ஜெயமோகன் தளத்தில் இருந்து....

"அருகே நின்ற என்னைச் சுட்டிக்காட்டி ”ஒரு பெரிய இலக்கியவாதி இங்கே நிற்கிறான். நீங்கள் இலக்கியமே வாசிக்காதவர் என்றால் இவரை நான் உங்களுக்கு எப்படி அடையாளம் காட்டுவேன்?” என்றார் நித்யா. ”எபப்டி நீங்கள் இவரை புரிந்துகொள்வீர்கள்? இவர் இலக்கியவாதி என்பதற்கான புற அடையாளம் ஏதேனும் இருக்கிறதா என்று பார்ப்பீர்கள் இல்லையா? ஜிபப போட்டிருக்க வேண்டும். நல்ல தாடி இருக்க வேண்டும்… இவர் முழுக்கை சட்டை போட்டு ஒரு பாவம் அரசாங்க ஆபீசர் மாதிரி இருக்கிறார். எப்படி கண்டுபிடிப்பீர்கள், எப்படி நம்புவீர்கள்?

ஞானிகள் எங்கும் இருக்கிறார்கள். ஞானிகள் யாரென்ன்று அறிந்து தேடுபவர்கள் கண்டுகொள்கிறார்கள். "
இங்க கடவுள் என்று சேர்த்து கொள்ளவும்..

http://www.jeyamohan.in/?p=6752

உமர் | Umar said...

//மகனே கும்மி, அதை சொல்லில் விளக்க முடியாது.. உணர்துந்தான் விளங்க முடியும். ஜெயமோகன் தளத்தில் இருந்து....//

குறுமுனி! ஏதும் கோபம் இருந்தால் நேரடியாக சொல்லிவிடுங்கள். இப்படியெல்லாம் அந்த எழுத்தாளரின் பத்தியை இங்கே வெளியிட்டு என்னை தலைதெறிக்க ஓட வைக்காதீர்கள்.

ப.கந்தசாமி said...

நானும் ஆஜர்-தமிழ்மணத்தில் ஒரு ஓட்டு

ரவி said...

பாவம் இஸ்லாமியர்களுக்கு தான் எவ்வளவு செலவாச்சின்னு தான் தெரியில&&&&&&&&&&&&&&&

ஓட்டல் ரூம், சரக்கு அப்புறம் அவரோட இன்ஸூரன்ஸ் பாலிஸிய கட்டிட்டாங்களாம்.

கார்க்கிபவா said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

Anonymous said...

Anonymous said...

சொம்புதூக்கியா சேஷாசலம் ??? கேட்டுடலாம் விடுங்க .... //
கண்டுபிடிச்சிட்டேன் ..இந்த அனானி சாருவே தான்....

ரஜின் அப்துல் ரஹ்மான் said...

அன்பர் அவர்களுக்கு.பெரியார்தாசன் இஸ்லாத்துக்கு வந்தார்,அதனால் ஒரு எண்ணிக்கை கூடிவிட்டது,என்றல்ல எங்களுக்கு மகிழ்ச்சி..அவரல்ல,நாளை யார் வந்தாலும் மகிழ்வோம்..
எதற்காக..எங்களது நம்பிக்கைபடி அவர் தன்னை படைத்த இறைவனை அறிந்து கொண்டார்.அவர் நேர்வழி யடைந்து விட்டார் என்றே..இன்னக்கி கடவுள் நம்பிக்கையுள்ளவர் வந்து,கடவுள் இல்ல,எல்ல பொய் அப்டீன்னு,உங்கள்ட்ட சொன்னா,உங்க மனசுல,ஒரு சுயநலம் இல்லாத சந்தோசம் இருக்குமே..அதுதா இது,,,வெரேன்ன..நீங்க சொன்ன மாரி நாங்கூட எம்பிளாக்ல எழுதீர்க்கே..சுய நலமில்லா சந்தோசதோட...

மத்தபடி,உங்க வளைபூவ அடிக்கடி க்ராஸ் பண்ரவன்.ஆனா பின்னூட்டம் போடாம எஸ்கேப் ஆயிடுவேன்...நல்லா எழுதுரீங்க..இத நா வேர சொல்லனுமா?

நன்றி
நட்புடன்
ரஜின்

Anonymous said...

சாறு சம்பந்தப்பட்டவர் கடவுள் அல்ல அவரு பெரும்பங்கு இலக்கியமே வாசிக்காதவர்.அனைவரும் ஒன்று வேணா அனுப்புவேன், அது நம்பிக்கை!

பெரும்பங்கு வகிக்கிறது நம்பிக்கை!, நிம்மதி,மகிழ்ச்சி தரகூடிய இடங்களை தடை செய்ய முடியுமா?
அப்புறம் மற்றவர்களும் மந்திரிச்சு சொல்லி கொள்ள ஆசைப்படுகின்றனர்! அவரோட ஒதுக்கீட்டிற்காக மலையாளப் படமே இருக்க்கு,
பயப்படக் கூடாது

Ashok D said...

///D.R.Ashok said...
நல்லா சொன்னீங்க நிலா...//

நீங்க சொல்லுங்களேன் அந்த attributes-ஐ?//

கும்மி... தன்னைஉணர்ந்தவன்.. நாலு லார்ஜ் போட்டாலும் அடுத்தவன்கிட்ட அன்பா மட்டுமே பேசுவான்... உளறிகொட்டமாட்டான்... மன பிறழ்ச்சிஅடையமாட்டான்...கைய தூக்கிட்டு குத்த போகமாட்டான்.

அறிபடும் நீதியாதனில்.. எது செஞ்சாலும் அதில் ஒரு ஒழுங்கும் அழகும் நிறைந்து இருக்கும்.

Ashok D said...

நல்லா காமெடியா தான் போகுது :))))

உமர் | Umar said...

//கும்மி... தன்னைஉணர்ந்தவன்.. நாலு லார்ஜ் போட்டாலும் அடுத்தவன்கிட்ட அன்பா மட்டுமே பேசுவான்... உளறிகொட்டமாட்டான்... மன பிறழ்ச்சிஅடையமாட்டான்...கைய தூக்கிட்டு குத்த போகமாட்டான்.

அறிபடும் நீதியாதனில்.. எது செஞ்சாலும் அதில் ஒரு ஒழுங்கும் அழகும் நிறைந்து இருக்கும்.
//

கடவுளை உணர்தல் குறித்து நிலா பேசினார்! திடீரென்று நீங்கள் ஏன், தன்னை உணர்தல் என்று out of syllabus செல்கின்றீர்?

ஒழுங்கும் அழகும் நிறைந்து இருக்காதவை? - கொஞ்சம் விளக்குங்களேன்

Ashok D said...

தன்னை உணர்தல் தான்யா கடவுள உணர்தலும்

உமர் | Umar said...

//D.R.Ashok said...
தன்னை உணர்தல் தான்யா கடவுள உணர்தலும்//

அப்ப, தான் என்பதுதான் கடவுளா?

Ashok D said...

அதான்... அதேதான்

உமர் | Umar said...

//D.R.Ashok said...
அதான்... அதேதான்//

அப்ப ஏன் இத்தனை கோயிலு? மசூதி? சர்ச்?

Ashok D said...

இது பத்தி உண்மையிலேயே..தெரியாதா?

உமர் | Umar said...

// D.R.Ashok said...
இது பத்தி உண்மையிலேயே..//

வயிறு வளர்க்கும் ஒரு கூட்டத்தின் வேலை என்று நான் நினைதுக்கொண்டிருக்கின்றேன். உங்களுடைய கருத்து?

"உழவன்" "Uzhavan" said...

சகட்டு மேனிக்கு எல்லாத்தையும் மிதிச்சுத் தள்ளிட்டுப் போய்க்கிட்டேயிருக்கீங்க :-)

Rajan said...

Innum mudiyalaya... Ada pongappa ... Naalaiku varen

உமர் | Umar said...

/ராஜன் said...
Innum mudiyalaya... Ada pongappa ... Naalaiku varen//

வந்ததுதான் வந்துட்டீங்க! ஒரு தத்துவ முத்த உதிர்த்துட்டு போங்க

Ashok D said...

தவறான கருத்து... இப்படி தவறாய் இருப்பீர்களானால்... தன்னை உணர்தல் சாத்தியமில்லைதான்

Ashok D said...

ராஜன் இப்பதான் கல கட்டியிருக்கு...

உமர் | Umar said...

//தவறான கருத்து... இப்படி தவறாய் இருப்பீர்களானால்... தன்னை உணர்தல் சாத்தியமில்லைதான்
//

பிறகு அவை எதற்கு என்று நீங்கள்தான் கூறுங்களேன்?

உமர் | Umar said...

//D.R.Ashok said...
ராஜன் இப்பதான் கல கட்டியிருக்கு...
//

தல எக்ஸாமுக்குப் படிக்கப் போயிரிச்சு

Ashok D said...

அதில் ஏதாவது ஒன்றினை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்... வணங்க ஆரம்பியுங்கள்.... atleast 10 years... but be.. prayful... then come and ask ME, I... would try to show u wat is GOD

உமர் | Umar said...

//அதில் ஏதாவது ஒன்றினை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்... வணங்க ஆரம்பியுங்கள்.... atleast 10 years... but be.. prayful//

தான் தான் கடவுள் என்றால், பிறகு அவை எதற்கு? (நானும் 15 ஆண்டுகள் அதில் வசித்துவிட்டுதான் வெளியே வந்தேன்)

Anonymous said...

//தவறான கருத்து... இப்படி தவறாய் இருப்பீர்களானால்... தன்னை உணர்தல் சாத்தியமில்லைதான்//

டியர் அசோக், உலகத்தில் அனைத்தும் ஒன்றுன்னு சொல்றாங்க அல்லது கடவுள் அனைத்திலும் இருகிறார்னு வச்சுக்கலாம். அப்படினா எது சரி எது தவறு? தவறா இருந்த அசுரர்கள் பலபேர் கடவுளை அடைந்ததாக சொல்லபடுகிறதே? உங்க கருத்த சொல்லுங்க..

Ashok D said...

//தான் தான் கடவுள் என்றால், பிறகு அவை எதற்கு?//

அதை பற்றி மேலோட்டமாக புரிந்துகொள்ளதான் சமயங்கள்... அதாவது குழந்தைக்கு toys வாங்கிகொடுப்பதுபோல

//(நானும் 15 ஆண்டுகள் அதில் வசித்துவிட்டுதான் வெளியே வந்தேன்)//

வசித்தீர்கள்.. வசித்தீர்களா....

Ashok D said...

//டியர் அசோக், உலகத்தில் அனைத்தும் ஒன்றுன்னு சொல்றாங்க அல்லது கடவுள் அனைத்திலும் இருகிறார்னு வச்சுக்கலாம். அப்படினா எது சரி எது தவறு? தவறா இருந்த அசுரர்கள் பலபேர் கடவுளை அடைந்ததாக சொல்லபடுகிறதே? உங்க கருத்த சொல்லுங்க..//

கருத்துசொல்லறது என்பதே பெரிய பொய்... அதனாலே ஜாலியா இருங்க.. :)

Ashok D said...

94.. ம்..........

Ashok D said...

95 ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

உமர் | Umar said...

//அதை பற்றி மேலோட்டமாக புரிந்துகொள்ளதான் சமயங்கள்... அதாவது குழந்தைக்கு toys வாங்கிகொடுப்பதுபோல//

கொஞ்சம் விளக்கமாக நீங்கள் அறிந்தவற்றை ஒரு பதிவாகப் போடுங்களேன்! புரிந்துகொள்ள முயற்சிப்போம்!

//வசித்தீர்கள்.. வசித்தீர்களா...//

வாக்கியம் புரியவில்லை !. இன்று கிளம்புகின்றேன். மீண்டும் நாளை சிந்திப்போம்

Anonymous said...

//கருத்துசொல்லறது என்பதே பெரிய பொய்... அதனாலே ஜாலியா இருங்க.. //

அப்ப அந்த பொய்யும் தவறு செய்யுரதுலதான வரும்..தவறு செஞ்சுட்டு,பின்ன எப்படி ஜாலியா இருக்கிறது...

Ashok D said...

எலலோரும் கொண்டாடுவோம்...... எல்லோரும் கொண்டாடு ஓம்........

Ashok D said...

100................

Ashok D said...

அல்லாவின் பெயரை சொல்லி நல்லோர்கள் வாழ்வை எண்ணி எல்லோரும் கொண்டாடுவோம்.............

Ashok D said...

bye kummi...


தவறு...பொய்... எது செஞ்சாலும் மனநிம்மதி குலையும்... so அதனால நீங்களே முடிவு செஞ்சுக்கோங்க... :))

Anonymous said...

//அல்லாவின் பெயரை சொல்லி நல்லோர்கள் வாழ்வை எண்ணி எல்லோரும் கொண்டாடுவோம்.............//

Ashok,முதல்ல இருந்து வருவோம்.. பெரியார்தாசன் அல்லாவின் பெயரை சொல்லி மதம் மாறிட்டாரு, இத பத்தி நீங்க ஒன்னும் சொல்லலியே

Ashok D said...

//பெரியார்தாசன் அல்லாவின் பெயரை சொல்லி மதம் மாறிட்டாரு, இத பத்தி நீங்க ஒன்னும் சொல்லலியே///

யாரு என்னவா ஆன என்ன? நாம நம்ம வேலைய பாத்துகிட்டு போய்கிட்டே இருக்க வேண்டியதுதான்...

இதுக்கு பதில் ஏற்கனவே செந்தழல் ரவி சொல்லிட்டாரு..

Anonymous said...

சோடி போட ஆள் இல்லாததால் நானும் கிளம்பறேன்... வால் அண்ணே அடுத்த பதிவு கும்மி அடிக்க வசதியா போடுங்க. ஓடியாந்திறேன்...

Anonymous said...

bye ashok..

Ashok D said...

ஒரு டீ போட்டு வாரேன்.... அது வரைக்கும் உங்களிடமிருந்து விடைபெறுவது.. இறை இறை இறை

Ashok D said...

bye குறுமுனி

Ashok D said...

100ரை... ஞாபக படுத்திய ’குலதெய்வம் ராஜகோபாலுக்கு’ சாரி ’எறும்பு ராஜகோபாலுக்கு’ நன்றி :)

Ashok D said...

கடவுள் என்பது.. emptiness.... பாருங்க யாருமேயில்லை... இந்த அமைதிதான் நல்லது.. மனசுக்கும்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

உலக அளவில் அறிந்தது குத்துச்சண்டை வீரர் கசியள் கிளே- முகமது அலி; பின் நில் ஆம்ஸ்ரோங் (சந்திரனில் கால் பதித்தவர்) இஸ்லாத்துக்கு மாறினார்கள். இப்போ நம்ம பெரியார் தாசன் இதனால்
இஸ்லாத்துக்கு எந்த லாபமும் இல்லை.இஸ்லாம் நல்லாதான் இருக்கு!; இனி முக்கி முக்கி இஸ்லாத்துக்கு ஆதரவாகப் பேசுவார்.
இத்தனை நூற்றாண்டுகளாக ஆதரவாக; எதிராகப் பேசுகிறார்கள். என்ன? ஆனது.

எல்லாம் உள்ள படியே உள்ளது. பெரியார் தாசனுக்கு ஏதாவது லாபமிருந்தால் சந்தோசம்.

Radhakrishnan said...

//குழந்தைகளை இம்மாதிரி ஆசிரமத்திற்கு அனுப்புபவர்கள் தயவுசெய்து இனிவாவது மாறுங்கள், ஏமாறுபவன் இருக்கும் வரைக்கும் ஏமாற்றுபவன் குறையப்போவதில்லை, எல்லாம் வல்ல கடவுள் என்று தானே கடவுளை நம்புகிறீர்கள், கடவுளுக்கும், உங்களுக்கும் இடையில் எதற்கு புரோக்கர் வைத்து கொள்கிறீர்கள், அந்த புரோக்கர்களை சாமியார்களுக்கு புரோக்கர் வேலை செய்ய அனுப்புங்கள்! எல்லாம் வல்ல கடவுள் உங்கள் மொழியையும் புரிந்து கொள்வார் என நம்புங்கள், தேவ பாஷை என்று ஒன்றும் இல்லை, அவையனைத்தும் உங்களை காலங்காலமாக ஏமாற்றி கொண்டிருப்பதற்கே என்பதை உணருங்கள், கடவுள் கோவிலில் மட்டும் இருப்பார் என்ற கூற்றை உங்கள் கோவில் நுழைவு எதிர்ப்பின் மூலம் கடவுள் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என காட்டுங்கள்//

எப்படியோ உங்களுக்குள்ளும் ஒரு மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது தல ;)

ராஜ நடராஜன் said...

//இஸ்லாமிய சகோதரர்கள் வலையில் பெரியார்தாசன் இஸ்லாமிராக மாறிவிட்டார் என எழுதியிருந்தார்கள், எனக்கு இது ஒரு சாதாரண நிகழ்வு தான் ஆனால் நண்பர்களுக்கு உலகத்தையே புரட்டி போட்டது போல் ஒரு சந்தோசம், இருந்துட்டு போகட்டும்//

எனது இடுகையின் நேர்கோடு.மனிதனை மனிதனாகப் பாருங்கள்.மதம் என்ற ஒருநாள் முகப்பூச்சுக்கு மயக்கம் ஏன் கொள்கிறார்கள் எனத் தெரியவில்லை.

நாளும் நலமே விளையட்டும் said...

அவர் மதம் மாறியது சிலருக்கு மிக சந்தோசம் தந்ததற்கு காரணம்!
ரொம்ப தெளிவா சொன்னாரே- "எல்லா மதப் புத்தகங்களையும் படித்தேன்,
அவைக் கடவுளைக் காட்ட வில்லை. ஆனால் இஸ்லாம் தான் கடவுளைக் காட்டியது."

மத்த மதக் காரன் எங்கப் போய் முட்டிக்குவான்?

எனது பதிவு

http://ungalnanbansarath.blogspot.com/2010/03/periyardaasan.html

வால்பையன் said...

//"எல்லா மதப் புத்தகங்களையும் படித்தேன்,
அவைக் கடவுளைக் காட்ட வில்லை. ஆனால் இஸ்லாம் தான் கடவுளைக் காட்டியது."//


காசே தான் கடவுளப்பா!
அந்த கடவுளுக்கும் அது தெரியுமப்பா!

pradeep said...

நன்பர் வால்,
உங்களின் படைப்புகளில் சிறந்தது இதுவே.என்னை பொருத்து மட்டுமே!
வாழ்த்துக்கள்.

கார்த்திகைப் பாண்டியன் said...

யாரையும் குற்றம் சொல்லாத நேர்மையான இடுகை.. நல்லாயிருக்கு தல

அண்ணாமலையான் said...

"பெரியார்தாசன் மொழிப்பெயர்த்த புத்தரும் அவருடையும் தம்மும் என்று நூலின்
முன்னுரையில் இருந்து சில பகுதிகள்:
"இத்தமிழாக்கத்திற்காக, பாபாசாகேப் அவர்களின் மூலநூலைப் பயிலப்பயில நான்
பவுத்தத்தில் மெல்ல மெல்ல கரைந்து கொண்டிருந்தேன்.

இதற்கிடையில் [...] பவுத்தமேற்ற பெரியவர் [...] போன்றோரை சந்தித்து
பவுத்த விளக்கம் பெற்றேன்.

அந்த உந்துதலின் அடிப்ப்டையில் 1992 ஜூலையில் முறைப்படி தீக்‌ஷா பெற்று
பவுத்தனாகி என் இயற்பெயரை வீ.சித்தார்த்தன் என மாற்றிக்கொண்டேன்.
தமிழ்நாடு அரசு கெஜட்டிலும் இச்செய்தி ப்திவாகி வெளீயானது.

[...]

பவுத்தத்தில் சாமியில்லை - சடங்கு இல்லை - சாதி இல்லை - மாயம் இல்லை -
மந்திரம் இல்லை - பூஜை இல்லை - பிரார்த்தனை இல்லை - எல்லாவற்றுக்கும்
மேலாக தனியுடைமைச் சுரண்டல் இல்லை - இவைகளில் எதுவொன்றிருப்பதும்
பவுத்தமில்லை.

(மேற்கண்டவை முற்றிலும் தவறு என்பது வேறு விஷயம்.. ... )

பவுத்தத்தில் அன்பு உண்டு - அறிவு உண்டு - சமத்துவம் உண்டு - சமதர்மம்
உண்டு - ஒழுக்கம் உண்டு - இரக்கம் உண்டு - வீரம் உண்டு - இவைகளில்
எதுவொன்று இல்லாதது பவுத்தமில்லை."

கோவி.கண்ணன் said...

:)

இஸ்லாத்துக்கு பெரியார் தாசன் கிடைத்தது போல் கிறித்துவர்களுக்கு ஒரு ஏவிஎம் இராஜன் போன்றவர்கள் கிடைக்க மாட்டார்களா என்ன ?

மதம் மாறும் சுதந்திரம் இந்தியாவில் இருப்பது போல் இஸ்லாமிய நாடுகள் பலவற்றில் கிடையாது.

அதனால் வந்தவரை இலாபம் என்று நினைத்து மகிழ்வார்கள். நாமும் வாழ்த்துவோம்.

Santhappanசாந்தப்பன் said...

பெரியார் படத்துக்கு பூஜை போட்டாங்களா இல்லியா? டவுட்டு!

இடைத் தரகர்கள் தேவையா? நியாயமான கேள்வி..!

Robin said...

//இஸ்லாத்துக்கு பெரியார் தாசன் கிடைத்தது போல் கிறித்துவர்களுக்கு ஒரு ஏவிஎம் இராஜன் போன்றவர்கள் கிடைக்க மாட்டார்களா என்ன ?//
உங்களுக்கு ஜேசுதாஸ் இருக்காரு. நீங்களும் கொண்டாடலாம் :)

smart said...

இவ்வளவுநாள் கடவுளில்லை கடவுளில்லை என சொல்லி மக்களை ஏமாற்றி இப்ப மதம் சேர்ந்துள்ள பெரியார்தாசனால் எல்லா நாத்திகர்களையும் போலிகள் என அழைக்ககூடும்
என்று பயந்துட்டேங்களா?
இவ்வளவு நாள் சாமியார் சாமியார் என சொல்லிக்கொண்டு மக்களை ஏமாற்றியதற்காக எல்லா சாமியாரும் போலிச் சாமியார் என்று சொன்னேரே அவரும் ஒருவேளை சாமியாரேயில்லாமல் இருக்கலாம் அல்லவா?

இவ்வளவு நாள் நீங்க சொன்னதெல்லாம் உளறலா நான் கூட பெரிய பகுத்தரிவோனு நினைச்சேன்

Unknown said...

Annan luckiar blog-la innum nithi photo irukku.. kudutha kaasukku mela koovaraar pola irukku.. kandanam.

வால்பையன் said...

@ ஸ்மார்ட்!

நல்லார் ஒருவர் உளரேல்!

குறள் தெரியுமா!?


:)

Busy said...

Islam not to do compel to come to islam, & even if they come by Money , he will feel, but y u people talk like this, this rajan comment is Volger

Blogger ராஜன் said...

//ஊசி போடும் முன்னர் டிஞ்சர் தடவுவாங்கல்ல//

இல்ல தல சுன்னத் பண்ணும்போது வாய்ல கேக் வெப்பாங்களே அது போல


//

But so many people convert Islam, this is not important to Islam

வால்பையன் said...

//
Islam not to do compel to come to islam, & even if they come by Money , he will feel, but y u people talk like this, this rajan comment is Volger//

அது வல்கர் தான்!
ஆனா எதுக்கு கேக்கு கொடுக்குறிங்கன்னு சொல்லுங்க!

கேரளாவில் மதமாற்றம் ஒரு இயக்கம் நடத்தி செய்து கொண்டிருந்தது அம்பலமாகியும் நாங்கள் யாரையும் மதம் மாற சொல்லவில்லை என்பது வேடிக்கையாக இருக்கிறது!

Busy said...

Thts not in Islam, These r people created , In India some of the things created by people,

ur talking abt Love Jihad, Thts not done by muslim, thts done by RSS & Created using Muslims Name, U Know In our Tamil Nadu also thy r doing, so many native gone by this type of people

வால்பையன் said...

//Thts not in Islam, These r people created , In India some of the things created by people,

ur talking abt Love Jihad, Thts not done by muslim, thts done by RSS & Created using Muslims Name, U Know In our Tamil Nadu also thy r doing, so many native gone by this type of people //


மும்பை தாஜ் ஹோட்டல் தாக்குதல் நடத்தியது கூட முஸ்லீம் வேடமணிந்த பிற மதத்தவர் தான்!
என்ன செய்ய அல்லா எதுவும் கண்டுக்காமல் சும்மா அமுக்கிகிட்டு அமர்ந்திருப்பதால் எல்லாத்துக்கும் குளிர் விட்டு போச்சு! எழுந்து வரச்சொல்லுங்க!

ராஜ நடராஜன் said...

//மதம் மாறும் சுதந்திரம் இந்தியாவில் இருப்பது போல் இஸ்லாமிய நாடுகள் பலவற்றில் கிடையாது.//

மதம் மாறியோ அல்லது பூர்வீக வழியாகவோ எனத் தெரியவில்லை.கிறுஸ்தவ ஆலயங்களில் பிரார்த்திக்கும் சிறுபான்மை அரேபியர்களையும்,சிரியா,லெபனான்,எகிப்து போன்ற நாட்டின் கிறுஸ்தவர்களையும் பார்த்திருக்கிறேன்.

Nathan said...

போச்சு போச்சு, இல்லாததை மன்னிக்கவும் இஸ்லாத்தை பற்றி பேசியதற்காக, வால்பையனைத் தேடி அல்லாவின் ஆட்கள் ஏகே 47னுடன் வருவதாக தகவல்.

நண்பர்கள் சொல்லிவிடவும்

Ashok D said...

//வால்பையனைத் தேடி அல்லாவின் ஆட்கள் ஏகே 47னுடன் வருவதாக தகவல்.//

வால்ல எல்லாரும் சுழ்ந்துகிட்டாங்க.. ஒடனே வால் தான் முதன்முதலா எழுதன பதிவெல்லாம் படிக்கசொல்றாரு... எல்லாத்தையும் ஒன்னுவிடமா படிச்சவங்க ஏகே 47 போட்டுட்டு ஓடியே போறாங்க... இதுக்கு மேல கதை யாருவேன்னாலும் தொடரலாம். :))

K.MURALI said...

தொடர்வதர்க்காக

smart said...

//நல்லார் ஒருவர் உளரேல்!

குறள் தெரியுமா!?//

திருகுறள் எழுதியது ஒரே ஆளா என்பதே இன்று வரை தெரியாத உண்மை! மேலும் திருக்குறள் மேல் எனக்கு பெரிய அபிபிராயம் இல்லை!
அது நிலபிரபுத்துவ காலத்தில் எழுதப்பட்ட ஆணாதிக்க அறிவுரைகள்

என் கேள்விக்கு பதில் சொல்லும்

smart said...

ஒருவேளை இப்படியிருக்குமோ நாத்திகத்துக்குள்ளேயே ஜாதியிருக்கோ, இல்ல நாத்திக தீவிரவாதத்தால நல்ல இடத்துக்கு வந்துட்டாரோ

எது எப்படியோ சிக்கிட்டாண்டா அடிமை. நீங்க எப்ப மதம் மாறுவேங்க? இல்ல பெரியார்தான் உங்க சாமிய? பெரிய சிலை வைப்பேங்களா சின்னசிலையா? இல்ல யாரும் ஆட்டைக்கு சேர்த்துக்க மாட்டாங்கள?

smart said...

ஆனால் நீங்க மாறிட்ட உங்க சொம்பு தூக்கிகள்தான் (ராஜன் ) பாவம்

அப்துல் சலாம் said...

//அப்படியெல்லாம் பயப்படக் கூடாது. நான் இருக்கேன்ல!//


நானும் இருக்கேன் கும்மி.......

புலவன் புலிகேசி said...

சூப்பர் தல..பெரியார்தாசன் என்ற பெயரையே நீக்க வேண்டும்...

Kandumany Veluppillai Rudra said...

விரைவில், தன்னைப் பெற்ற தாயையும், இவங்க எங்க அம்மா இல்ல? என்று சொன்னாலும் சொல்லுவார்,செலவு செய்ய யாரும் தயார இருந்தா.

பனித்துளி சங்கர் said...

அய்யோ என்னை காப்பாற்ற யாருமே இல்லையா ?????????????????

பனித்துளி சங்கர் said...

இதற்கு விடை தெரியாமல் தான் இவளவு நாளா இருக்கேன் இதுல நீங்கவேர புதுசா !

மோனி said...

லட்சோபலட்ச வருடங்கள்
தாவாகட்டையில் கைவைத்து
சும்மா தான் இருந்தேன்
பொழுது போகாமல்
வானத்தை படைத்தேன்
பூமியை படைத்தேன்
காடு,மலைகள் என கடைவிரித்தேன்
அத்தோடு நிறுத்தியிருக்கலாம்
மனிதனை படைத்தேன்
நான் செத்தேன்.

விடு நண்பா ...
செத்துப் போன கிளிக்கு
எதுக்கு சிங்காரம் ?

வால்பையன் said...

//நீங்க எப்ப மதம் மாறுவேங்க? இல்ல பெரியார்தான் உங்க சாமிய? பெரிய சிலை வைப்பேங்களா சின்னசிலையா? இல்ல யாரும் ஆட்டைக்கு சேர்த்துக்க மாட்டாங்கள?//

என்னுடய பழய பதிவான “பெரியார் என்ன கடவுளா!? பகுத்தறிவென்ன வெங்காயாமா” பதிவை தேடி பார்த்து படிக்கவும்!

வால்பையன் said...

//திருகுறள் எழுதியது ஒரே ஆளா என்பதே இன்று வரை தெரியாத உண்மை! மேலும் திருக்குறள் மேல் எனக்கு பெரிய அபிபிராயம் இல்லை!
அது நிலபிரபுத்துவ காலத்தில் எழுதப்பட்ட ஆணாதிக்க அறிவுரைகள்//


என் பிட்டை எனக்கே திருப்பி போடுறிங்களா!?

Thamira said...

இதுவிஷயத்தில் எப்போதும் உங்களுடன்..

பித்தனின் வாக்கு said...

வால்ஸ், நீங்க ஒன்னும் புதுசா எழுதவில்லை, வழக்கமா சொல்றதுதான். கண்ணதாசன்,சிவாஜி,எம்ஜியார்,மஞ்சள் துண்டு இன்னும் சிலர் பகுத்தறிவு பாசறையில் இருந்து கிளம்பிய போது வரும் வழக்கமான டயலாக்குகள் தான் இவை. இந்த பகுத்தறிவுக்கு ஒரு இராசி என்னவென்றால் ஒரு கட்டத்தில் (இரத்தம் சூடாக இருக்கும் போது) தீவிரமாக இருக்கும் சிலர், பின்னால் பல்டி அடிப்பார்கள்,ஆனாலும் புதுசா இளரத்தங்கள் கருத்துக்களால் கவரப்பட்டு வந்து கொண்டே இருப்பார்கள். இது திராவிடக் கழகத்தின் வழக்கம். நன்றி வால்ஸ்.

வால்பையன் said...

//ஒரு கட்டத்தில் (இரத்தம் சூடாக இருக்கும் போது) தீவிரமாக இருக்கும் சிலர், பின்னால் பல்டி அடிப்பார்கள்,ஆனாலும் புதுசா இளரத்தங்கள் கருத்துக்களால் கவரப்பட்டு வந்து கொண்டே இருப்பார்கள். இது திராவிடக் கழகத்தின் வழக்கம். நன்றி வால்ஸ். //


நான் எந்த கழகத்தையும் சேர்ந்தவனல்ல!
அப்படியே என் ரத்தத்தில் சூடு குறைந்தாலும் அடுப்பு மேல ஏறி உட்கார்ந்துகிறேன்!
நன்றி பித்தன்ஸ்.

Anonymous said...

//பாவம் இஸ்லாமியர்களுக்கு தான் எவ்வளவு செலவாச்சின்னு தான் தெரியில!//

ஆமாங்க, எப்படீங்க உங்களுக்குத் தெரியும் ? தெரிய வாய்ப்பில்லையே


உங்க அம்மா அக்கா விஷயத்துல எவ்வளவு செவாகும்னு எங்களுக்குத் தெரியாது இல்லையா, அது மாதிரித்தான். சொன்னா எங்களுக்குத் தெரியும்

மோனி said...

http://valpaiyan.blogspot.com/2008/02/blog-post_11.html

வால்பையன் said...

//உங்க அம்மா அக்கா விஷயத்துல எவ்வளவு செவாகும்னு எங்களுக்குத் தெரியாது இல்லையா, அது மாதிரித்தான். சொன்னா எங்களுக்குத் தெரியும்//

நித்தியானந்தரின் ஆராய்ச்சிக்கு அனுப்பியவர்களிடம் கேளுங்க, எனக்கு எப்படிங்க தெரியும்!

எல்லா மதவாதிகளின் டவுசர்களும் ஒருநாள் கிழயப்போறது தான், உங்களுக்கு கொஞ்சம் லேட்டாகுது, ஆனாலும் கிழிக்காம வுடமாட்டோம்!

Anonymous said...

மதம் மாத்துறதுக்கு சொன்னேன்

வால்பையன் said...

//மதம் மாத்துறதுக்கு சொன்னேன் //


நானும் மதவாதிகளுக்கு தான் சொன்னேன்! மற்றவர்கள் தவறாக எடுத்து கொள்ள வேண்டியதில்லை!

வால்பையன் said...

சுட்டியை தேடி கொடுத்ததற்கு நன்றி தோழரே!

ப்ராட்பேண்ட் கூவிவிட்டது! எனது நோக்கியா 5130 மொபைலில் ஜிபிஆரெஸ் மூலம் இணைய தொடர்பில் இருக்கிறேன், கொஞ்சம் ஸ்லோவாக இருக்கிறது! அதனால் தான் நான் சுட்டி கொடுக்கமுடியவில்லை!

மோனி said...

@வால்பையன் said...
என்னிடம் யாராவது வந்து கடவுள் இருக்கிறார் என்று வாதம் செய்தால் இல்லை என்று வாதிட எனக்கு உரிமை உண்டு. வாதிட மட்டுமே சண்டை போட அல்ல. கடவுளை பற்றிய வாதம் முடிவில்லாதது என்றும் அனைவருக்கும் தெரியும், இருந்தும் ஏன் அதில் நேரத்தை செலவிட்டு செய்ய வேண்டிய வேலைகளை புறக்கணிக்க வேண்டும்.

ஆன்மிக வாதியான விவேகானந்தர் கூட மதவாதிகள் கிணற்று தவளைகள் என்று குறிப்பிட்டு உள்ளார். கடலில் இருப்பவர் நாம். நாம் அனுபவிக்க கடலில் நிறைய இருக்கிறது. அதை விட்டுவிட்டு கிணற்றில் குதித்து சண்டை போடுவது தேவையா?

---

So
தண்ணியிலதான் இருக்கோம்.
(Yes - தண்ணியிலதான் இருக்கோம்)

அட ஏன்யா கிணத்துல இருக்கீங்க ?
கடலுக்கு வாங்க அனுபவிக்க நெறைய இருக்குன்னு சொன்னா புரிஞ்சிக்குங்க மக்கா...

Anonymous said...

ராஜன்,நல்லா தானே இருக்கு !

எது எப்படியோ நீ தான்,என்னுடய பழய சொம்பு தூக்கி.

எனக்கு தாவாகட்டையில் கைவைத்து, எப்ப மதம் மாறுவேங்கறதுக்கு மரியாதையா பதில் சொல்லும????

செலவு செய்ய யாரும் தயார இருந்தா @@னத் பண்ணும்போது பயப்படக் கூடாது!! நான் இருக்கேன்ல!

நம்மைப் பொறுத்தவரை, ந‌மா..பகுத்தறிவு பிரச்சாரம் செய்யாமல் பப்ளிக்கா!உளறலாம்!!!

வால்பையன்-தக்கலை

உமர் | Umar said...

பாவம் இங்க ஒரு சிலருக்கு ரொம்ம்ம்ப சூடாயிடிச்சு போலிருக்கு. அடுப்புல உட்காராம, பாய்லர் மேலய உட்காந்திருப்பாங்க போலிருக்கு.

இந்த லிங்குல இருக்குற தம்பியோட பதிவையும், பதிலையும் படிச்சாவது தெளியிராங்கலான்னு பாப்போம்.

http://tamilislam25.blogspot.com/2010/03/01.html

@ வால்பையன்

திரும்பவும் அனானி ஆப்ஷன வச்சிட்டீங்களா? நாம் முன்வைக்கும் கருத்துகளை எதிர்கொள்ள திராணியற்று, தனிப்பட்ட முறையில் வசைச் சொற்களை வீசி, விவாதத்தின் போக்கை வேறு பக்கம் கொண்டு செல்லும் இது போன்றோரை, அனானி ஆப்ஷனை நீக்குவதன் மூலம் தவிர்த்து விடலாமே!

உமர் | Umar said...

//அப்துல் சலாம் said...
//அப்படியெல்லாம் பயப்படக் கூடாது. நான் இருக்கேன்ல!//


நானும் இருக்கேன் கும்மி.......//

வாங்க சலாம். எங்க நேத்து ஆளக் காணோம்?

மங்குனி அமைச்சர் said...

சார் இது சிம்பிள் லாஜிக் , கடவுள் இருக்கார் என்றால் உன் பிறப்பு முதல் இறப்பு வரை நிர்ணயம் செய்யப்பட்டு விட்டது , அதை யாராலும் மாற்ற முடியாது , சரியா ? அப்படின்னா அப்புறம் என்னா மயி....... துக்கு பொய் ஜோசியக்காரன் , சாமியார் (நான் சொல்றது எல்லா மத்ததுக்கும் பொருந்தும் ) கிட்ட போய் கடைசீல அடிவாங்கிட்டு போலம்புரீங்க மக்கா .......... அப்படியே ஜோசியம் , சாமியார்கள் நால உங்க விதிய மாத்த முடிஞ்சா அப்போ கடவுள் எதுக்கு ?
ஏதாவது ஒரு நல்லா முடிவ எடுங்க மக்களே

Anonymous said...

கும்மி....நீ தான் என்னுடய ...வசதியான புதிய
பள... பள....சொம்பு

வால்ஸ்-தஞ்சாவூரு

உமர் | Umar said...

@ அனானி
அடிக்கடி ஊருப் பேர மாத்திக்கிட்டே இருக்கீங்க. முடிவெடுத்து ஏதாவது ஒரே ஊருப் பேர போடுங்க. இல்லன்னா மாரியம்மன் கோயிலுக்கு கூட்டிட்டுப் போயி வேப்பிலை அடிச்சி விட்டுரப்போறாங்க.

அப்துல் சலாம் said...

//வாங்க சலாம். எங்க நேத்து ஆளக் காணோம்?//

நான் நேத்தே அட்டண்டன்சு போட்டுட்டேன் கும்மி

-----------------------------------

//நித்தியானந்தரின் ஆராய்ச்சிக்கு அனுப்பியவர்களிடம் கேளுங்க, எனக்கு எப்படிங்க தெரியும்//

வால் இந்த அனானிகளின் கமெண்டுகளை அடியோடு நீக்கிவிடுங்கள் தொல்லை தாங்கமுடியவில்லை...
நாகரீகமற்ற வார்த்தை பிரயோகம் செய்யும் ( தீவிர மத பற்று உள்ளவர்களாக காட்டிகொள்ளும்) இவர்கள் ஒதுக்கபடவேண்டியவர்கள்.
உங்கள் கருத்து பிடிக்கவில்லை என்றால் நாகரீகமாக தங்கள் மறுப்பை தெரிவிக்கலாம் அல்லது அமைதியாக பதிவை விட்டு வெளி ஏறிவிடலாம்.
போற போக்கை பார்த்தல் அனானிகளின் அக்கிரமத்தால் வால் மற்றும் நம்ம ராஜன் ப்லோகுகளுக்கு A சர்டிபிகட் கொடுக்க வேண்டும் போல இருக்கிறது.

அப்துல் சலாம் said...

//உங்க அம்மா அக்கா விஷயத்துல எவ்வளவு செவாகும்னு எங்களுக்குத் தெரியாது இல்லையா, அது மாதிரித்தான். சொன்னா எங்களுக்குத் தெரியும்//


அனானி உங்கள் பதில் கருத்தை சொல்வதற்கும் ஒரு எல்லை உண்டு -
பணம் வாங்கிகொண்டு பெரியார் தாசன் மதம் மாறியதாக வால் பையன் குற்றம் சுமத்தினால் உங்களுக்கு பதிலுரைக்க வேறு நாகரிகமான வழிமுறைகளே தெரியாதா?
இதுதான் நீங்கள் சார்ந்திருக்கும் மதம் உங்களுக்கு கற்று கொடுக்கிறதா?
உங்களை யாராவது இதுபோல் திட்டினால் உங்கள் மனம் என்ன பாடுபடும் - கொஞ்சம் சிந்தியுங்கள்!!!

வால்பையன் said...

@ அப்துல்சலாம்

தீவிர(மத)வாதிகளால் நேர்மையான முறையில் உரையாட முடியாது, இது அனைத்து மதவாதிகளுக்குமே பொருந்துகிறது!

நான் பல முறை சொல்லியிருக்கிறேன், நீங்கள் கொடுப்பதை நான் வாங்கி கொண்டால் தான் அது எனக்கு, இல்லையென்றால் அது உங்களுடயதே! உங்களை நீங்களே திட்டி கொள்வதில் எனக்கு எந்த வருத்தமுமில்லை!


அவர்கள் மாறப்போவதில்லை தோழரே! நீங்க டென்சன் ஆகாம இருங்க!

அப்துல் சலாம் said...

//அவர்கள் மாறப்போவதில்லை தோழரே! நீங்க டென்சன் ஆகாம இருங்க!//

டென்ஷன் ஆகவில்லை நண்பா - எல்லா மத அனானிகளின் மனதிலும் வக்கிரம் நிறைந்து இருப்பதை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது

தருமி said...

//இந்த அனானிகளின் கமெண்டுகளை அடியோடு நீக்கிவிடுங்கள் தொல்லை தாங்கமுடியவில்லை...அப்துல் சலாம்//

//அவர்கள் மாறப்போவதில்லை தோழரே! நீங்க டென்சன் ஆகாம இருங்க!.... வால்ஸ்//

சலாம் சொல்வதை முழுமனத்துடன் நானும் எனது வேண்டுகோளாக வைக்கிறேன். நீங்கள் சொல்வது போல் டென்சன் ஆகாம இருக்க எல்லோராலும் முடியாது.

வாசிப்பவர்களுக்கு அந்தக் கொச்சை வார்த்தைகள் தரும் அருவருப்பை இல்லாமல் ஆக்கலாமே. அந்த வகைப் பின்னூட்டங்களை நீங்கள் போடுவதால் யாருக்கும் எந்த லாபமும் இல்லை. நஷ்டம்தான் உண்டு.

நானும் சலாமுடன் இணைந்து இந்த உதவியை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

அப்துல் சலாம் said...
This comment has been removed by the author.
அப்துல் சலாம் said...

//நானும் சலாமுடன் இணைந்து இந்த உதவியை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.//

கைகோர்ததர்க்கு நன்றி திரு. தருமி அவர்களே

வால்பையன் said...

//நானும் சலாமுடன் இணைந்து இந்த உதவியை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். //


அனானி ஆப்சன் நீக்கப்பட்டு விட்டது!

உமர் | Umar said...

//அனானி ஆப்சன் நீக்கப்பட்டு விட்டது!
//

வாழ்த்துகள்!

விவாதம் ஆரோக்கியமாய்த் தொடரட்டும்!

தருமி said...

நனி நன்றி

அப்துல் சலாம் said...

//அனானி ஆப்சன் நீக்கப்பட்டு விட்டது!//

நன்றி...நன்றி...நன்றி...நன்றி...நன்றி...நன்றி...நன்றி...நன்றி...

Eswari said...

காவிரி எங்கோ பிறக்கிறது. ஆனால் அது ஈரோடு, பள்ளிபாளையம், கரூர் வழியாக வரும் போது அந்த காவிரியில் பல விஷமங்களை(சாயக் கழிவுகள்) கலந்து அந்த காவிரி தாயை கொலை பண்ணுகின்றனர். இருந்தாலும் அக்காவிரி தாய் திருச்சியில் வரும் போதே அதன் புனித தன்மை மீண்டும் பெற்று பலரை வாழ வைக்கிறாள். எத்தனை பேர் நாசம் செய்தாலும் அவள் அழிவதில்லை. தன் தன்மையை இழப்பதில்லை

அது போல போலி சாமியார்கள் எத்தனை பேர் தோன்றி இந்து மதத்தை இழிவு செய்தாலும், அவர்கள் காவிரியில் கலக்கும் சாக்கடை போல தான்.

இம்மதம் என்றும் அதன் புனித தன்மையை இழக்காமல் நிலைத்திருக்கும். ஆதலார் சாமியார்களை நம்பாமல் கடவுளை நம்புங்கள் என்பதை இந்த வரிகளில்

//கடவுளை நம்புகிறீர்கள், கடவுளுக்கும், உங்களுக்கும் இடையில் எதற்கு புரோக்கர் வைத்து கொள்கிறீர்கள்,//

//கடவுள் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என காட்டுங்கள்//

அழகாக சொல்லி நல்ல அறிவுரையும் கொடுத்துள்ளீர்.

(God nowhere என்பதை கொஞ்சம் பிரித்தால்
God now here)

Rajan said...

//உங்க அம்மா அக்கா விஷயத்துல எவ்வளவு செவாகும்னு எங்களுக்குத் தெரியாது இல்லையா, அது மாதிரித்தான். சொன்னா எங்களுக்குத் தெரியும்

//

வந்துட்டாண்டா வக்காளி புடிச்சு அமுக்கு மாப்ள ! டேய் வாடா வாடா ! ரொம்ப நாளாச்சுடா ! தோல் மட்டும் எதுக்கு வெட்டனும் இங்க வா நா மொத்தத் தையும் தரிச்சுவிடறேன்

Unknown said...

அந்த அனானிமஸ் கமென்ட் போட்டது நாந்தான்.

இடம் அறிஞ்சி போட்டோம். வாலோட மொழியில பேசுனாத்தான் அதுக்குப் புரியும். அது அப்புடித்தான் அங்கங்க கமென்ட் போடுது. அப்புடி நான் பேசுனதும், அனைவருக்கும் அநாகரிகமாத் தெரியுது, ஆனா வாலுக்குத் தெரியல. அதத்தான் நான் இப்ப சொன்னேன்.

அப்புறம், ராஜன், நீ வாயை நவத்திக்க. என்னோட நீளம்.

வால்பையன் said...

உங்கள் பெயர் ஆனந்த் தானே! தமிழ் என்ற பெயரில் வந்துள்ளீர்களே நண்பரே!

உங்கள் விவாதத்தை தொடங்கலாம்!
பதிவில் உங்களுக்கு இருக்கும் மாற்றுகருத்துகள் என்னவோ!?

உமர் | Umar said...

//உங்கள் விவாதத்தை தொடங்கலாம்!
//

டவுசர் கிழிஞ்சதுக்கு அப்புறமும் விவாதத்துக்கு வருஊம்?

Unknown said...

நான் ஆனந்த் இல்ல வாலு,

உங்கள் பதிவுல எனக்கு அட்சேபனை எந்தெடத்துல இருக்கு ? உங்களோட பிரிஜூடிஸ் தான் எனக்கு புடிக்கல. ஒருத்தவரை கண்ணியக்குறைவா அவதூறு சொல்றதுக்கு எந்த உரிமையையும் எடுத்துக்கிறீர். அதைப் பத்தி யோசிச்சீரா ?

அவர் ராஜராஜனுக்கு சொம்புதூக்கியா ? அவரை ஆதரிச்சு பேசுனதுக்கு ஆதாரம் இருக்கா ? அவர் பணம் வாங்கிதான் வேறொரு நம்பிக்கையைக்கு போனாரா ? இதுக்கு மொதல்ல பதில் சொல்லுங்க, பிறகு நான் ஒத்துக்கறேன், நான் பேசுனது தப்புத்தான்னு.

வால்பையன் said...

//அவர் ராஜராஜனுக்கு சொம்புதூக்கியா ? அவரை ஆதரிச்சு பேசுனதுக்கு ஆதாரம் இருக்கா ? அவர் பணம் வாங்கிதான் வேறொரு நம்பிக்கையைக்கு போனாரா ? இதுக்கு மொதல்ல பதில் சொல்லுங்க, பிறகு நான் ஒத்துக்கறேன், நான் பேசுனது தப்புத்தான்னு. //

ராஜராஜனிடம் பெயர் மாற்றி கொண்டால் தன்னம்பிக்கை பிறக்கிறது என்று பேசியது நான் மட்டுமல்ல, பலர் விஜய் தொலைகாட்சியில் பார்த்திருக்கிறார்கள்! ஏன் அவ்வாறு பேசினார் என்று சொல்லுங்கள்.

இஸ்லாத்துக்கு மாற என்ன தகிடுதத்தங்கள் நடந்ததென்று நித்தி மேட்டர் மாதிரி விரைவில் வெளிவரும்!

மாறன் said...

//
இஸ்லாத்துக்கு மாற என்ன தகிடுதத்தங்கள் நடந்ததென்று நித்தி மேட்டர்
மாதிரி விரைவில் வெளிவரும்!
//
அப்படின்னா அதப்பத்தி வெளிவந்தனோ போட்டிருக்கணும் நீ.
மதம் ஏற்றுக்கொள்வது என்பது அவன் அவன் இஷ்டம். கமெண்ட் பண்றதுக்கு " நீ யார் ?" , "நான் யார் ?"

மாறன் said...

இந்த பதிவுல இருந்து ஒன்னு தெரியுது காசு கொடுத்தா என்னவேனா நடக்கும் அப்படின்றத நம்பற ஒரு ஆள்ன்னு தெரியுது.

//
அவரை பெரியார்தாசன் என்று அழைத்தார்கள், அதுவும் அவரே காசு கொடுத்து கூவ சொன்னாரானு தெரியல
//
//
பாவம் இஸ்லாமியர்களுக்கு தான் எவ்வளவு செலவாச்சின்னு தான் தெரியில
//

இந்த வாக்கியங்களுக்கு எந்த ஆதாரமும் இல்ல, எல்லாம் பதிவரின் நம்பிக்கையின் பிரதிபலிப்புகள்...

மாறன் said...

//
நான் வழக்கம் போல புலம்பிட்டு போறேன்!
//

இந்த ஒரு வரிதான் உண்மையான வரி.

டிராகன் said...

/ எல்லாம் வல்ல கடவுள் என்று தானே கடவுளை நம்புகிறீர்கள், கடவுளுக்கும், உங்களுக்கும் இடையில் எதற்கு புரோக்கர் வைத்து கொள்கிறீர்கள்//

இத இத தான் சொல்லி வீட்டுல திட்டு வாங்கிகொண்டு இருக்கிறேன்,கடவுள் என்ற பெயரில் முட நம்பிக்கைகள் என்னால் சகித்து கொள்ள முடியவில்லை தோழரே ,

வால்பையன் said...

//
//
இஸ்லாத்துக்கு மாற என்ன தகிடுதத்தங்கள் நடந்ததென்று நித்தி மேட்டர்
மாதிரி விரைவில் வெளிவரும்!
//
அப்படின்னா அதப்பத்தி வெளிவந்தனோ போட்டிருக்கணும் நீ.
மதம் ஏற்றுக்கொள்வது என்பது அவன் அவன் இஷ்டம். கமெண்ட் பண்றதுக்கு " நீ யார் ?" , "நான் யார் ?" //

சேஷாசலத்த கேள்வி கேட்க எனக்கு எப்படி உரிமையில்லையோ அதே மாதிரி என்னையும் கேள்வி கேட்க உமக்கும் உரிமையில்ல, சேஷாசலம் வந்து ஏண்டா என்னை பத்தி அப்படி எழுதுனேன்னு கேக்கட்டும் பதில் சொல்லிகிறேன்!

நீர் அமுக்கிட்டு போறும்!

வால்பையன் said...

//இந்த வாக்கியங்களுக்கு எந்த ஆதாரமும் இல்ல, எல்லாம் பதிவரின் நம்பிக்கையின் பிரதிபலிப்புகள்... //


ரெண்டு வாக்கியத்தின் முடிவிலும் ”தெரியல”ன்னு தான் போட்டிருக்கேன், அது எப்படியா எனது நம்பிக்கை ஆகும்!
ரொம்ப வெயிலில் அழையாதீரும்!

Rajan said...

// கமெண்ட் பண்றதுக்கு " நீ யார் ?" , "நான் யார் ?"//

திருப்பி கேட்டா என்ன பண்ணுவீங்க சகா !

Antagonistic Protagonist said...
This comment has been removed by the author.
மாறன் said...

//
//
இஸ்லாத்துக்கு மாற என்ன தகிடுதத்தங்கள் நடந்ததென்று நித்தி மேட்டர்
மாதிரி விரைவில் வெளிவரும்!
//
அப்படின்னா அதப்பத்தி வெளிவந்தனோ போட்டிருக்கணும் நீ.
மதம் ஏற்றுக்கொள்வது என்பது அவன் அவன் இஷ்டம். கமெண்ட் பண்றதுக்கு " நீ யார் ?" , "நான் யார் ?" //

சேஷாசலத்த கேள்வி கேட்க எனக்கு எப்படி உரிமையில்லையோ அதே மாதிரி என்னையும் கேள்வி கேட்க உமக்கும் உரிமையில்ல, சேஷாசலம் வந்து ஏண்டா என்னை பத்தி அப்படி எழுதுனேன்னு கேக்கட்டும் பதில் சொல்லிகிறேன்!
//
சேஷாஷலத்த கேட்க உரிமை இல்லாத பட்சத்துல எப்படி கேள்வி கேட்கலாம் நீங்க....

எனக்கு கேள்வி கேட்க உரிமையில்லைல அப்படின்னா எதுக்கு comment box துறந்து வச்சுருக்க
மூடிட்டு போக வேண்டியது தான ....

Rajan said...

//எனக்கு கேள்வி கேட்க உரிமையில்லைல அப்படின்னா எதுக்கு comment box துறந்து வச்சுருக்க
மூடிட்டு போக வேண்டியது தான .... //

பாக்ச தொறந்தா வந்து கமென்ட் போடுவியா ! வேற எதையாவது தொறந்தா ?

மாறன் said...

//இந்த வாக்கியங்களுக்கு எந்த ஆதாரமும் இல்ல, எல்லாம் பதிவரின் நம்பிக்கையின் பிரதிபலிப்புகள்... //


//ரெண்டு வாக்கியத்தின் முடிவிலும் ”தெரியல”ன்னு தான் போட்டிருக்கேன், அது எப்படியா எனது நம்பிக்கை ஆகும்!
ரொம்ப வெயிலில் அழையாதீரும்!
//

இந்த வாக்கியங்கள் உங்களோட speculations தான அத தான் உங்க கருத்து சொன்னேன்.
இது ஒரு வேளை மற்ற கருத்தாயிருப்பின் குறிப்பிட்டிருக்கலாமே ....
அப்படின்னா இந்த speculations வெளியிடாமலே இருக்கலாமே...

மாறன் said...

@ ராஜன்
// கமெண்ட் பண்றதுக்கு " நீ யார் ?" , "நான் யார் ?"//

திருப்பி கேட்டா என்ன பண்ணுவீங்க சகா
//

திருப்பி கேட்டா கேட்டுக்க வேண்டியதுதான் சகா

Rajan said...

//திருப்பி கேட்டா கேட்டுக்க வேண்டியதுதான் சகா//

திருப்புனா குண்டிதான் இருக்கும் அது கிட்ட போயி என்னத்த கேப்பீங்க ?

மாறன் said...

//எனக்கு கேள்வி கேட்க உரிமையில்லைல அப்படின்னா எதுக்கு comment box துறந்து வச்சுருக்க
மூடிட்டு போக வேண்டியது தான .... //

பாக்ச தொறந்தா வந்து கமென்ட் போடுவியா ! வேற எதையாவது தொறந்தா ?
//
" வேற " ஏதாவதுன்னா ?
தைரியமா பேசுங்க

மர்மயோகி said...

கடவுள் இல்லை என்று வாதிடும் உரிமை உங்களுக்கு உண்டு அது போல கடவுளை வணங்கும் உரிமை அந்தந்த மதத்தவருக்கும் உண்டு. மனிதர்கள் செய்யும் தவறுகளுக்கு மதம் பொறுப்பாகாது. ராஜன் என்பவன் வாழைபழத்தை வாயில் வைத்து ஏதாவது பிரச்சினயா? ஏன் வாழைப்பழத்தின் மேல் அவனுக்கு அவ்வளவு கோபம்? அதுவும் தோலுரித்த வாழைப்பழத்தின் மேல்? ஒரு பொருளை அதிகமதிகம் உபயோகப் படுத்தினால் அதன் மீது ஒரு வெறுப்புத்தான் வரும்..பாவம் இந்த ராஜன் நிறைய வாழைப்பழம் சாப்பிட்டுவிட்டான் போல..

மாறன் said...

//திருப்பி கேட்டா கேட்டுக்க வேண்டியதுதான் சகா//

//
திருப்புனா குண்டிதான் இருக்கும் அது கிட்ட போயி என்னத்த கேப்பீங்க ?
//

திருப்பி நீ கேட்டா நான் என்ன பண்ணுவ கேட்ட ,..
நான் கேட்டுக்குவேன்னேன்..
இப்ப திருப்புனா ஆசனவாய் இருக்கும்ன்ற அப்ப நீ என்ன ஆசன்வாயா ?

!

Blog Widget by LinkWithin