இலக்கியம்,இசக்கியம்,இயக்கியும்!

வாலு, கார்த்தி வரேன்னு சொன்னாரே! ஏன் கடைசியில வரலைன்னுட்டார்!?

கார் பார்க்க போறாங்களாமா!

அப்ப சரி! நானும் நிறைய பேர பார்த்துட்டேன்!, கார் பார்க்க போலாமா, பொண்ணு பார்க்க போலாமான்னு கேட்டா கார் பார்க்க தான் போறான்!

ப்ராக்டிகல் பிபுள்ஸ்!

எப்படி!

கார் பார்க்க போன ஓட்டி பார்க்கலாம், ஆனா.....

யோவ்!, வாலு காலையிலேயே ஆரம்பிச்சிடியா

பேசக்கூட முடியாதுன்னு சொல்லவந்தேங்க!

********************************************

சரி தல! இதுக்கு மேல நமக்கு ஆவாது, நீங்க வர்றிங்களா இல்ல இருந்து கேக்குறிங்களா!?

இருங்க கேப்போம்!

என்னத்த கேக்க, கொண்டிருக்கிறான்னு படிக்க சொன்னா கொற்றிருக்கிறான்னு படிக்கிறாங்க,
வெளியே போறவன் உள்ளே என்ன நடக்குதுன்னு முழிக்க போறான்.

தனியாவா வால்!

இல்ல ராஜாவ கூட்டிகிட்டு போறேன்! நீங்க சாப்பிடுங்க.

*********************************************

கடை எங்கிருக்குன்னு தெரியுமாடா!?

இலக்கிய கூட்டம்னால நாலு பேர் நிக்கமுடியாம தள்ளாடிகிட்டே பேசிகிட்டு இருப்பாங்க, அப்படி யாராவது நிக்கிறாங்களா பாரு, நான் கேட்டுகிறேன்.

அங்க ஒருத்தர சுத்தி பத்து பேர் நின்னு பேசிகிட்டு இருக்காங்க, நடுவுல ஒரு பெரியவர் நீ சொன்ன மாதிரி தான் நிக்கிறார்.

அவர் தாண்டா விக்கிரமாதித்தன். நான் கடவுள் படன் பார்த்தியா, அதுல நடிச்சிருக்கார்.

நீயே போய் கேளு!

சார் ஒரு சந்தேகம் கேக்குனும்.

கேளு தம்பி, சங்க இலக்கியம், நவீன இலக்கியம் எல்லாத்துலயம் விக்கிரமாதித்தன் சார் பதில் சொல்லுவாரு!

ஒரே ஒரு சந்தேகம் தான். கடை எங்க இருக்கு,

ஏ, வாய்யா, வாய்யா, உன்னை தான்யா தேடிகிட்டு இருந்தேன், வா போகலாம்.

வாடா ராஜா, போலாம்!

************************************

ஏண்டா, ஹோட்டல் வாசல்ல நின்னுட்ட!

ஆட்டோ எதாவது வருதான்னு பார்க்கலாம்.

டே! அழகர்கோவிலுக்கு ரெண்டு கிலோமீட்டர் முன்னாடி இருக்கோம், அழகர்கோவில்ல ஆட்டோ கிடையாது! பஸ் அரை மணிநேரத்துக்கு ஒண்ணுதான்!

சார்! என் வண்டிய வேணா எடுத்துட்டு போங்க!

நீங்க!?

நானும் பங்ஷனுக்கு தான் வந்திருக்கேன்!, என் பேரு விசு!

என்னை யாருன்னே உங்களுக்கு தெரியாதே!

காலையிலருந்து உங்கள பார்த்துகிட்டு தான் இருந்தேன்,நீங்க எல்லார் கூடவும் பேசிகிட்டு இருந்திங்க, நோ பிராபளம் எடுத்துட்டு போங்க!

ரொம்ப நன்றிங்க! ஆனா எனக்கு வேணாம், அய்யாவ மட்டும் கடையில இறக்கி விட்டுடுங்க நானும் என் ப்ரெண்டும் நடந்து வந்துர்றோம்

*****************************************

அய்யா, உங்களுக்கு என்ன சரக்கு வேணும்!

ஜே.டி.எஸ்!

கேட்டா செருப்பலயே அடிப்பான்! என்ன சரக்கு அடிச்சிங்க!

அது மேன்ஷன் ஹவுஸ்

டே ஒரு ஆஃப் வாங்கிட்டு அப்படியே சைடிஷ் வாங்கிட்டு வந்துரு!

*******************************************



காட்சிகளை விளக்க பிடிக்காமல் சென்ற இஅடங்களையும், செய்த காரியங்களையும் உரைநடையாகவே கொடுத்துள்ளேன், புரிஞ்சா பாருங்க, புரியாட்டி படிங்க!

மீண்டும் சந்திப்போமா!

45 வாங்கிகட்டி கொண்டது:

Romeoboy said...

மீ தி பஸ்ட்

அகநாழிகை said...

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை வாழ்க !

நல்லாயிருங்க..
வெறென்னத்தச் சொல்ல...

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

தினேஷ் said...

சே ரொம்ப கஷ்டப்பட்டிங்க போல ..

கடைசில கிடைச்சதா ?

/கார் பார்க்க போன ஓட்டி பார்க்கலாம், ஆனா.....///
பொண்ணு பார்க்க போன பேசி(?) பார்க்கலாம் ..

ஹி ஹி ...

சென்ஷி said...

யாராச்சும் எதிர்வினை எழுதிடப்போறாங்க வால். :)))

ச.முத்துவேல் said...

அண்ணாச்சிக்கிட்டயே முகவரியா? நாங்க உள்ளே நுழையும்போது வாசல்லயே அண்ணாச்சியும், இன்னொரு முக்கியமான கவிஞரும் இருந்தார்கள். எங்களிடம் வண்டி ஏதாவது இருக்கிறதா,கடை எங்கே? என்றுதான் பேச்சையே ஆரம்பித்தார்கள்.

அப்பாவி முரு said...

முடியலை...

இச்சீசி...

புரியலை....

அ.மு.செய்யது said...

கார்த்திகை பாண்டியன் போட்ட கூடல் சங்கமம் பற்றிய பதிவா ??

ம‌ண்ட‌ காயுது..!!!!

கணேஷ் said...

/கார் பார்க்க போன ஓட்டி பார்க்கலாம், ஆனா.....
பொண்ணு பார்க்க போன பேசி(?) பார்க்கலாம் ..

ஹி ஹி ..

//

ரீப்பீட்ட்டு ...


//
மீண்டும் சந்திப்போமா!
//

மீண்டும்மா ????????

Suresh said...

/கார் பார்க்க போன ஓட்டி பார்க்கலாம், ஆனா.....//

அப்படியே சுரேஷ் மாதிரி பேசுறிங்க ஹீ ஹீ

Anbu said...

புரியுது ஆனா புரியலை வால்..

உண்மைத்தமிழன் said...

புரிஞ்சது..

இப்ப உங்க சமூக சேவையை இலக்கியக் கூட்டத்திலேயும் ஆரம்பிச்சாச்சா..

க.பாலாசி said...

எப்படீங்க, உங்களால மட்டும்....

தேவன் மாயம் said...

இலக்கியச்சந்திப்புன்னாலே
புரியாது!

தேவன் மாயம் said...

இதுல இப்பிடி எழுதினா எப்படி!!...
மீண்டும் படித்துப் பார்க்கிறேன்!!

சிம்பா said...

படிச்சு, பார்த்ததுல அடிச்சது எல்லாம் இறங்கி போச்சு...

Anonymous said...

நல்லாயிருங்க..
வெறென்னத்தச் சொல்ல...

அப்துல்மாலிக் said...

புரியுது நல்லாவே புரியுது

பீர் | Peer said...

ப்ராக்டிகல் பிபுள்ஸ்!

ஜெட்லி... said...

//ஜே.டி.எஸ்!//
அது என்னப்பா ஜே.டி.எஸ்,
எனக்கு தெரியுமா?....
விரிவாக்கம் ப்ளீஸ் வால்.

cheena (சீனா) said...

நல்லா இருக்கு வாலு - கார் பாக்கப் போனா ஓட்டிப் பாக்கலாம் . பொண்ணு பாக்கப் போனா .......

எல்லாமே நல்லாத்தான் எழுதி இருக்கே

Arun Kumar said...

உங்களை ஏன் இது வரை எந்த இலக்கிய சந்திப்புக்கும் கூப்பிடுவதில்லை??

VISA said...

மாமியாருக்கும் மருமகளுக்கும் சண்ட வரலாம்.
ஆனா
மாமி யாருக்குன்னு சண்ட வரலாமோ.....
இப்படி எல்லாம் யோசிச்சா பின் நவீனுத்துவவாதின்னு பட்டம் கொடுப்பாங்களா.

வாலு நீ போட்டுட்ட கோலு
உனக்கு சிக்கிடிச்சா கேர்லு
கெடைச்சா உன் வாழ்க்க பாழு

சூப்பர் பதிவு மச்சி....

Anonymous said...

/உங்களை ஏன் இது வரை எந்த இலக்கிய சந்திப்புக்கும் கூப்பிடுவதில்லை??//

என்னா வில்லத்தனம்!! வேலியில் போற ஓணானை மடியில் கட்டுவது என்பது இதுதான்....

T.V.ராதாகிருஷ்ணன் said...

சூப்பர் பதிவு

:-))

Kumky said...

யோவ் வாலு ...எம்புத்திய எதால அடிச்சிக்கிறதுன்னும் சொல்லிடுங்க....

வால்பையன் said...

//கும்க்கி said...

யோவ் வாலு ...எம்புத்திய எதால அடிச்சிக்கிறதுன்னும் சொல்லிடுங்க....//

இதுக்கு பேரு தான்,
எங்கப்பன் குதுருகுல்ல இல்லைன்னு உளரது!
உங்க பேரு எங்கயாவது வந்துருக்கா பதிவுல!

பீர் | Peer said...

அப்ப குதுருகுல்ல இருக்குறது கும்க்கியா???

சிவக்குமரன் said...

ம்ம்ம் இலக்கியசேவை?

மணிஜி said...

எனக்கு புரியலன்னு சொன்னா நம்பமாட்டே இல்ல....

Prabhu said...

பிராக்டிகல் பிபுள்ஸ்

சரக்கடிச்சிருக்கீன்ங்க! அதுவும் மதுரைக்கு வந்துன்னு மட்டும் தான் புரியுது!

S.A. நவாஸுதீன் said...

இலக்கிய கூட்டத்தில் சரக்கு இருக்கோ இல்லையோ சரக்கு இருக்குற இடத்துக்கு பக்கத்துல இலக்கிய கூட்டம் நடத்தனும்னு சொல்லவர்றது புரியுது தல.

Prapa said...

பெண் பார்க்க போகும் போது நானும் வருவேன் !!!!!!!! அச்சா பிள்ளையாட்டம் என்னையும் கூட்டிட்டு போங்க.

கலையரசன் said...

உங்களுக்கு விக்ரமாதித்தியன்...
எங்களுக்கு நீங்கதாங்கோ...

கார்த்திகைப் பாண்டியன் said...

எனக்கு இதுல முக்காவாசி புரியுதே..:-)))))))

வினோத் கெளதம் said...

Ennaku Onnu mattum Puriyuthu..

*&^86*6*^*87..

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நடத்து ,நடத்து.

கிரி said...

ஒண்ணும் புரியல

கணினி தேசம் said...

சகா,

அடுத்த வாரம் விடுமுறையில் திருப்பூர் வருகிறேன்.

வாய்ப்பு கிடைத்தால் சந்திப்போம். :))

Contact me at :indkumar@gmail.com

தமிழ் அமுதன் said...

அய்யா, உங்களுக்கு என்ன சரக்கு வேணும்!

ஜே.டி.எஸ்!

கேட்டா செருப்பலயே அடிப்பான்! என்ன சரக்கு அடிச்சிங்க! ??? puriyalaye

thamizhparavai said...

வரவர உன்னையும் கெடுத்துட்டாய்ங்க போல....
மத்தபடி உரையாடல் வழிச்செய்தி கேட்க(படிக்க) நல்லாத்தானிருக்கு(பாதி புரிஞ்சும், புரியாம இருந்தாலும்)...

Unknown said...

எங்க போனாலும் நீங்க நிக்கிறிங்க தல..

//.. கார்த்திகைப் பாண்டியன் said...

எனக்கு இதுல முக்காவாசி புரியுதே..:-)))))))..//

உங்களுக்கு புரியாம எப்படி..??!!

ரா.கிரிதரன் said...

நானும் இதைப் போல முயற்சி செய்தது இங்கே. கொஞ்சம் கஷ்டமாதான் இருந்தது.

http://beyondwords.typepad.com/beyond-words/shortstory_enrendrumthazmaiyudan.html

யாத்ரா said...

வாலு கலக்கியிருக்கீங்க

//தனியாவா வாலு//

:)

selventhiran said...

கில்பகாஸ்ரணம்!

வால்பையன் said...

நன்றி ராஜராஜன்
நன்றி அகநாழிகை
நன்றி சூரியன்
நன்றி சென்ஷி
நன்றி ச.முத்துவேல்
நன்றி அப்பாவி முரு
நன்றி அ.மு.செய்யது
நன்றி கணேஷ்
நன்றி சுரேஷ்
நன்றி அன்பு
நன்றி உண்மைத்தமிழன்
நன்றி பாலாஜி
நன்றி தேவன்மயம்
நன்றி சிம்பா
நன்றி மயில்
நன்றி அபுஅஃப்ஸர்
நன்றி பீர் | Peer
நன்றி ஜெட்லி
நன்றி சின்னா ஐயா
நன்றி அருண்குமார்
நன்றி விசா
நன்றி T.V.Radhakrishnan
நன்றி கும்க்கி
நன்றி இரா.சிவக்குமரன்
நன்றி தண்டோரா
நன்றி பப்பு
நன்றி S.A. நவாஸுதீன்
நன்றி பிரபா
நன்றி கலையரசன்
நன்றி கார்த்திகைப்பாண்டியன்
நன்றி வினோத்கெளதம்
நன்றி ஸ்ரீதர்
நன்றி கிரி
நன்றி கணிணிதேசம்
நன்றி ஜீவன்
நன்றி தமிழ்ப்பறவை
நன்றி பட்டிக்காட்டான்
நன்றி ரா.கிரிதரன்
நன்றி யாத்ரா
நன்றி செல்வேந்திரன்!

!

Blog Widget by LinkWithin