தலைப்பு!

நாகரிகத்தின் ஆரம்பங்களில் மக்களின் பொழுதுபோக்காக புதினமும், நாடகமும் தான் பெரும்பங்கு வகித்தது. அதன் முதல் விளம்பரமாக அதன் தலைப்பே பிரதானப்படுத்தியது. என் நண்பர் சொல்லுவார், தலைப்பு என்பது அலங்காரம் செய்த பெண்ணை போல வசீகரம் அதிகமாக இருக்கவேண்டும் என்று. உடன்பாடு இல்லையென்றாலும் நாம் விளம்பர உலகில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை மறந்து விட வேண்டாம்.

ஆரம்பங்களில் கதாப்பாத்திரத்தின் பெயரே தலைப்பாக இருந்தது, பின்னர் எதாவது பெருட்பெயர் அல்லது இடப்பெயர், ஆனால் தற்போது சினிமாவானாலும் சரி புதினங்கள் ஆனாலும் சரி தலைப்பு என்பது சுண்டி இழுக்கும் தூண்டிலை போல ஆகிவிட்டது. பதிவுலகமும் அதற்கு விதிவிலக்கல்ல!

சூடாவது எப்படி?
ஜொள்ளு விடுவது தவறா?(ஆரம்பித்தது நானல்ல, இளையகவி)
பகிரங்க கடிதம்?

இன்னும் நிறைய கண்ணில் படாமல் போயிருக்கலாம், உங்கள் கண்ணை குத்தியிருக்கலாம்.

ஆனாலும் தலைப்பில், விசயத்தை தொட்டு காட்டி விட்டு பெரிய பெரிய ஜாம்பாவன்களுக்குச் சமமாக கட்டுரை எழுதுவதில் நமது வலையுலகினர் தற்போது முதலிடத்தில் நிற்கின்றனர்.
அவர்களிடம் சாட்டியது போது அவர்கள் சொன்ன தலைப்பும், கதை சுருக்கமும்.

அதிஷா
சனி பிடித்தலும், சாராயம் காய்ச்சுதலும்

கதையின் சுருக்கமாக அவர் சொன்னது ஒருவன் சாராயம் காய்ச்சியதால் சனி பிடித்து ஜெயிலுக்கு செல்கிறான், ஜெயிலுக்கு போன பின்பு தான் தெரிந்தது அவனுக்கு சனி பிடித்ததால் தான் சாராயம் காய்ச்சவே போகிறான். பல்வேறு திருப்பங்கள் இருக்கும் என்றும் கூறினார். படிக்கும் போது பார்த்து படியுங்கள்.


அய்யனார்
மெளன மொழியின் பிரஞ்சை வடிவம்

உரையாடிலினி, மெளன விரதம் இருந்த போது இவரிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டு சைகையால் சொன்னதை சிறிது டக்கிலா வாசனையுடன் நமக்கு மொழி பெயர்ந்து தருகிறாராம், கண்டிப்பாக தாவூ தீரப்போவது உறுதி, வசதி படைத்தவர்கள் டக்கிலா ரெண்டு ஷாட்டும், வசதியில்லாதவர்கள் மானிட்டர் கட்டிங்கும் அடித்து விட்டு படிப்பது நலம்.

ஜ்யோவ்ராம் சுந்தர்
சதுரம்

மொழி மற்றும் வார்த்தைகள் ஒரே மாதிரியான நீள அகலங்களை கொண்டவை, அதனால் அதை சதுரத்துடன் ஒப்பிடலாம் என்று சொல்கிறார்.
”சதுரம் என்றும் மதுரம்” என்ற கவிதை ஆரம்பிக்கும் போதே எனக்கு குறட்டை வந்து விட்டதால் அனுஜன்யா அந்த கவிதையை பிரித்து எழுதும் போது படித்து கொள்ளலாம் என்று காத்திருக்கிறேன்.

ச்சின்னபையன்
ஒரு மென்பொருளாலர், மென்பொருளாலரானால்.

நான்:என்ன இது வித்தியாசமான தலைப்பா இருக்குது, சரி என்னா தான் செய்வாங்க
ச்சின்னபையன்: என்னத்த செய்யுறது, அதான் வரிசையா வீட்டுக்கு அனுப்புறாங்களே!
இனிமே சமையல், துணி துவைத்தல் தான்.

பரிசல்காரன்
நான்கு பேரும், நானுறு சிந்தனைகளும்

நான்: ரொம்ப பெரிய பதிவா இருக்கும் போலருக்கே
பரிசல்: எங்கே! இது வரைக்கும் நானுறு பேர்த்த பார்த்துட்டேன், நாலு மேட்டர் கூட அகப்படல
நான்: என்னாது உங்களுக்கே மேட்டர் பஞ்சமா? அப்போ நாங்கெல்லாம் எங்கே போறது?

அதிரை ஜமால்
திருடன புடிச்சாச்சுங்கோ!

சமீபகாலமாக சில ப்ளாக்குகள் காணாமல் போவது யாவரும் அறிந்ததே!
அந்த திருடர்களை எலிப்பொறி வைத்து எப்படி பிடிப்பது என்று அவரது வலைப்பூவான ”கற்போம் வாருங்கள்” வலையில் சொல்லி கொடுக்கிறார். இதில் முக்கியமாக திருட்டு பயம் உள்ள வலைப்பூ வைத்திருபவர்களுக்கு ஒரு ஊசிப்போன வடைப்படம் அனுபுவாராம் அதை உங்களது வலையில் வைத்து கொள்ள வேண்டும். திருட வரும் திருடன் ஊசிப்போன வடையின் நாற்றம் தாங்காமல் மயங்கி விழுந்து விடுவான் என அந்த வடை மேல் அடித்து சத்தியம் செய்கிறார்.

பூர்ணிமாசரண்
உன்னை காணாத கண்ணும்

ஊரிலிருந்து திரும்பி வந்த ரங்கமணியை வந்ததும் வராததுமாக தான் எழுதிய எல்லா கவிதைகளையும் படிக்க சொல்லி மிரட்டியதால், ஒரே ஒரு சின்ன வேலையை மறந்துட்டு வந்துட்டேன், இதோ முடிச்சிட்டு வந்துடுறேன் என்று திரும்பி சென்ற கணவரை நினைத்து எழுதிய சோக கவிதை தான் ”உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல!”


இன்னும் நிறைய பேரு நல்லா தான் தலைப்பு வச்சு எழுதுறாங்க!
ஆனா அவங்கெல்லாம் கொஞ்ச நாளா எங்கூட சாட் பண்றதில்லை,
அதனால அவுங்க பதிவுகள் விட்டு போச்சு.

103 வாங்கிகட்டி கொண்டது:

நட்புடன் ஜமால் said...

சிறிதாக சொல்லி பெரிய விடயம்

நண்பரே

நையாண்டி நைனா said...

வாலு... பதிவ எங்கே வாலு?

ஹான்...இவ்ளோ தான் பதிவெ வா....

நல்லா இருக்கு.

narsim said...

எப்பிடித்தான் யோசிக்கிறீங்களோ..

ஆ! இதழ்கள் said...

நாகரிகத்தின் ஆரம்பங்களில் மக்களின் பொழுதுபோக்காக புதினமும், நாடகமும் தான் பெரும்பங்கு வகித்தது. அதன் முதல் விளம்பரமாக அதன் தலைப்பே பிரதானப்படுத்தியது.//

தற்பொழுது இடுகைக்களுக்கும் அதுவே. சரியா?

Mahesh said...

ம்ம்ம்... அப்பறம்?

வால்பையன் said...

எனதருமை நண்பர்களே, சகோதரர்களே!
உங்க பாசத்தை பார்த்து பூரிச்சி போயிட்டேன்.
பதிவு எழுத ஆரம்பிக்கும் போது தீடிரென சிஸ்டம் ரீஸ்டார்ட் கேட்டுச்சு!
சேவ் பண்றதுக்கு பதிலா, பப்ளிஷ் பண்ணீட்டேன்,
பதிவ எழுதீட்டு வந்து பார்த்தா இத்தனை பின்னூட்டம்.

ஆனா ரெண்டே வரியில பதிவ போட்டுட்டு எப்படி உங்களை சும்மா விடுறது,
திரும்பவும் வாங்க கும்மிக்கு!

Anonymous said...

நல்லா இருக்கு.

Jackiesekar said...

இன்னும் நிறைய பேரு நல்லா தான் தலைப்பு வச்சு எழுதுறாங்க!
ஆனா அவங்கெல்லாம் கொஞ்ச நாளா எங்கூட சாட் பண்றதில்லை,
அதனால அவுங்க பதிவுகள் விட்டு போச்சு.//


அந்த விட்டு போனவங்க யாருப்பா? சொல்லு வாலு

தேவன் மாயம் said...

பதிவர்களை நல்லா அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள்!!!

Sanjai Gandhi said...

சூடாண இடுகைல இடம் பிடிக்கிற மாதிரி தலைப்பு வைக்கிறவங்களை விட்டுட்டிங்களே.. :))

MADURAI NETBIRD said...

//
பதிவு எழுத ஆரம்பிக்கும் போது தீடிரென சிஸ்டம் ரீஸ்டார்ட் கேட்டுச்சு!
சேவ் பண்றதுக்கு பதிலா, பப்ளிஷ் பண்ணீட்டேன்,
//

அப்ப என்னுடைய கணிப்பு சரி தான்..................

இராகவன் நைஜிரியா said...

தலைப்பு அப்படின்னு பிரமாதமான தலைப்பு வச்சு இருக்கீங்க

இதுதான் தலைப்பின் மகிமையோ...!!!

ers said...

இனிமே சமையல், துணி துவைத்தல் தான்


ரொம்ப வேதனையான விஷயம் வால்பையன்...

கணேஷ் said...

:))
:))
:))

நட்புடன் ஜமால் said...

என்ன நண்பா.

இருப்பினும் என்னை பற்றி சொல்லியது அருமை நண்பா.

ஆமா அந்த வடைய கானோமே எங்கப்பா.

உன் கடையிலா இருக்கா.

(சம்பந்தபட்ட பதிவுகளுக்கு சுட்டி கொடுத்திருக்கலாமோ)

அ.மு.செய்யது said...

செம்ம கலாயா ????

அ.மு.செய்யது said...

//ஊரிலிருந்து திரும்பி வந்த ரங்கமணியை வந்ததும் வராததுமாக தான் எழுதிய எல்லா கவிதைகளையும் படிக்க சொல்லி மிரட்டியதால், ஒரே ஒரு சின்ன வேலையை மறந்துட்டு வந்துட்டேன், இதோ முடிச்சிட்டு வந்துடுறேன் என்று திரும்பி சென்ற கணவரை நினைத்து எழுதிய சோக கவிதை தான் ”உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல!”
//


ultimatuuuuuu !!!!!!!

அ.மு.செய்யது said...

இப்படி தலைப்ப வச்சே பீதிய கிளப்ப ஆரம்பிக்கிறாய்ங்க...

சினிமா போஸ்டர பாத்து, தியேட்டர் ல போய் உக்காந்து ஏமாந்த கதையா...

நட்புடன் ஜமால் said...

சாட் பண்ணாட்டியும் போடனும்

யார் அது யார் அது

என்கிட்ட சொல்லுங்க

அவங்கள பத்தி எழுதி சுடாக்கிடறேன்

நாம் என்ன தலைப்பு வச்சாலும் சூடாக மாட்டேங்குது.

நட்புடன் ஜமால் said...

\\அ.மு.செய்யது said...

இப்படி தலைப்ப வச்சே பீதிய கிளப்ப ஆரம்பிக்கிறாய்ங்க...

சினிமா போஸ்டர பாத்து, தியேட்டர் ல போய் உக்காந்து ஏமாந்த கதையா...\\

என்னா என்னா படம் கண்ணு

சொல்லு ஒண்ணு

சின்னப் பையன் said...

புடவை வாங்கும்போதுகூட இந்த தலைப்பை பாத்துதாங்க வாங்கறாங்க...

அதனால் நான் அடிச்சி சொல்றேன்... தலைப்புதான் முக்கியம்...

அ.மு.செய்யது said...

எது எப்படியிருந்தாலும் தலைப்ப தமிழ்ல வைங்கப்பா போதும்...

நட்புடன் ஜமால் said...

\\அப்ப என்னுடைய கணிப்பு சரி தான்..................\\

என்னா கணிப்புண்ணே

அ.மு.செய்யது said...

//என்னா என்னா படம் கண்ணு

சொல்லு ஒண்ணு//

பக்திப் பரவசமிக்க தமிழ் திரைப்படங்கள்.

அ.மு.செய்யது said...

//மெளன மொழியின் பிரஞ்சை வடிவம்
//

இப்படி பிரெஞ்சு லலாம் பேர் வைக்கப் படாது.

அ.மு.செய்யது said...

//ச்சின்னபையன்: என்னத்த செய்யுறது, அதான் வரிசையா வீட்டுக்கு அனுப்புறாங்களே!
இனிமே சமையல், துணி துவைத்தல் தான்.
//

ஆஹா...எங்கள குறிவச்சே தாக்குதல் ஆரம்பமாயிருக்கு..

பொட்டு தட்டுபவர்கள் போர்க்கொடி தூக்குங்கள்...

அ.மு.செய்யது said...

//இதில் முக்கியமாக திருட்டு பயம் உள்ள வலைப்பூ வைத்திருபவர்களுக்கு ஒரு ஊசிப்போன வடைப்படம் அனுபுவாராம் அதை உங்களது வலையில் வைத்து கொள்ள வேண்டும். திருட வரும் திருடன் ஊசிப்போன வடையின் நாற்றம் தாங்காமல் மயங்கி விழுந்து விடுவான் என அந்த வடை மேல் அடித்து சத்தியம் செய்கிறார்.

//


வட போச்சே !!!!!!!

அ.மு.செய்யது said...

//ச்சின்னப் பையன் said...
அதனால் நான் அடிச்சி சொல்றேன்... தலைப்புதான் முக்கியம்...//

அவ‌ரே அடிச்சிட்டு தாங்க‌ எழுதியிருக்காரு...

நட்புடன் ஜமால் said...

\\ஆஹா...எங்கள குறிவச்சே தாக்குதல் ஆரம்பமாயிருக்கு..

பொட்டு தட்டுபவர்கள் போர்க்கொடி தூக்குங்கள்...\\

எந்தக்கொடியும் தூக்க முடியாது.

ஆப்பு பலம்

வால்பையன் said...

//நட்புடன் ஜமால் said...
என்ன நண்பா.
இருப்பினும் என்னை பற்றி சொல்லியது அருமை நண்பா.
ஆமா அந்த வடைய கானோமே எங்கப்பா.
உன் கடையிலா இருக்கா.
(சம்பந்தபட்ட பதிவுகளுக்கு சுட்டி கொடுத்திருக்கலாமோ)//

இதில் நிறைய பதிவர்கள் விடுபட்டுள்ளது, அவர்கள் இரண்டாம் பாகத்தில் வரலாம், இப்போது சுட்டி கொடுத்து விட்டேன்.

வடையை பார்த்தவுடம் மயக்கமாயி விட்டேனாம், வடை செக்-அப்புக்கு போயிருக்கு

தேவன் மாயம் said...

அடிச்சிட்டு எழுதினா தலைப்பே ஆடுமே

தேவன் மாயம் said...

அடிச்சிட்டு எழுதினா தலைப்பே ஆடுமே

வால்பையன் said...

//narsim said...

எப்பிடித்தான் யோசிக்கிறீங்களோ..//

முதல்ல திரும்ப வந்து முழுசா படிங்க

வால்பையன் said...

அ.மு.செய்யது said...

செம்ம கலாயா ????//

இன்னும் இருக்கு நண்பரே!

தேவன் மாயம் said...

ஆமா அந்த வடைய கானோமே எங்கப்பா.
உன் கடையிலா இருக்கா.///

வடையா?
இருக்கா?
என்ன வடை?

வால்பையன் said...

நட்புடன் ஜமால் said...

சாட் பண்ணாட்டியும் போடனும்

யார் அது யார் அது

என்கிட்ட சொல்லுங்க

அவங்கள பத்தி எழுதி சுடாக்கிடறேன்//

போட்டுடலாம் அடுத்து!

வால்பையன் said...

ச்சின்னப் பையன் said...

புடவை வாங்கும்போதுகூட இந்த தலைப்பை பாத்துதாங்க வாங்கறாங்க...

அதனால் நான் அடிச்சி சொல்றேன்... தலைப்புதான் முக்கியம்...//

உங்களை அடிச்சி புடவை வாங்குனதுக்காக நீங்க அடிச்சி சொல்றிங்களா?

தேவன் மாயம் said...

வடையை பார்த்தவுடம் மயக்கமாயி விட்டேனாம், வடை செக்-அப்புக்கு போயிருக்கு///

செக்கப்புக்கு
இன்னும்
என்கிட்ட வல்லையே

வால்பையன் said...

அ.மு.செய்யது said...

எது எப்படியிருந்தாலும் தலைப்ப தமிழ்ல வைங்கப்பா போதும்..//

வரி விலக்கு உண்டா!?

தேவன் மாயம் said...

சாட் பண்ணாட்டியும் போடனும்///

என்னையும் வெளையாடுல
சேத்துக்கணும்

தேவன் மாயம் said...

இல்லன்னா கா விட்டுருவேன்//

வால்பையன் said...

//thevanmayam said...

வடையை பார்த்தவுடம் மயக்கமாயி விட்டேனாம், வடை செக்-அப்புக்கு போயிருக்கு///

செக்கப்புக்கு
இன்னும்
என்கிட்ட வல்லையே//

வடை, போண்டா ஸ்பெஷலிஸ்ட் டோண்டு சாரிடம் செக்-அப் போயிருக்கு, அவரு அதை பார்த்துட்டு ரிப்போர்ட் தருவாரு

நட்புடன் ஜமால் said...

இது சூடாகுமா ...

வால்பையன் said...

thevanmayam said...

சாட் பண்ணாட்டியும் போடனும்///

என்னையும் வெளையாடுல
சேத்துக்கணும்//

நீங்க இல்லாமையா?

அ.மு.செய்யது said...

// வால்பையன் said...
அ.மு.செய்யது said...

எது எப்படியிருந்தாலும் தலைப்ப தமிழ்ல வைங்கப்பா போதும்..//

வரி விலக்கு உண்டா!?//

வ‌ரி வில‌க்கும் உண்டு..

கூட‌வே "இல‌வ‌ச‌ இணைப்புக‌ளும்" உண்டு.

தேவன் மாயம் said...

ஆஹா ஆரம்பிசிட்டீங்களே!!

வால்பையன் said...

thevanmayam said...

இல்லன்னா கா விட்டுருவேன்//

கா வேண்டாம்,
வேற எதாவது விடுங்க!

அ.மு.செய்யது said...

நம்ம தான் 50 ஆஆ...

அ.மு.செய்யது said...

நம்ம தான் 50 ஆஆ...

வால்பையன் said...

வ‌ரி வில‌க்கும் உண்டு..

கூட‌வே "இல‌வ‌ச‌ இணைப்புக‌ளும்" உண்டு. //

அப்போ சப்-டைட்டில் ஆங்கிலத்தில் வச்சுக்கலாம்,

தேவன் மாயம் said...

வடை, போண்டா ஸ்பெஷலிஸ்ட் டோண்டு சாரிடம் செக்-அப் போயிருக்கு, அவரு அதை பார்த்துட்டு ரிப்போர்ட் தருவாரு///

சாப்பிட்டு
பாத்தாருன்னா பொச்சே!!

அ.மு.செய்யது said...

//நட்புடன் ஜமால் said...

எந்தக்கொடியும் தூக்க முடியாது.

ஆப்பு பலம்//


ஆமாங்க..டங்குவார் அறுந்து விட்டது.

தேவன் மாயம் said...

hevanmayam said...

இல்லன்னா கா விட்டுருவேன்//

கா வேண்டாம்,
வேற எதாவது விடுங்க!//

டுக்கா விடவா?

நட்புடன் ஜமால் said...

\\உங்களை அடிச்சி புடவை வாங்குனதுக்காக நீங்க அடிச்சி சொல்றிங்களா?\\

வாங்கி வந்த புடவையை அடிச்சி துவைக்கனும்ன்னு சொல்றாரோ.

வால்பையன் said...

நட்புடன் ஜமால் said...

இது சூடாகுமா ...//

நான் ஏற்கனவே சூடான பார்ட்டின்னு என்னைய அந்த ஆட்டையில இருந்து தூக்கிட்டாங்க!
ஒருவேளை சூடாச்சுன்னா தெரியப்படுத்துங்க

அ.மு.செய்யது said...

//thevanmayam said...
ஆஹா ஆரம்பிசிட்டீங்களே!!
//


வாங்க...காலையில் லஞ்சுக்கு போனவரு..இப்ப தான் வர்ரீங்க...

இன்னா மேட்ருப்பா ??

நட்புடன் ஜமால் said...

\\வால்பையன் said...

அ.மு.செய்யது said...

எது எப்படியிருந்தாலும் தலைப்ப தமிழ்ல வைங்கப்பா போதும்..//

வரி விலக்கு உண்டா!?\\

எந்த வரிக்கு

நட்புடன் ஜமால் said...

\\வால்பையன் said...

நட்புடன் ஜமால் said...

இது சூடாகுமா ...//

நான் ஏற்கனவே சூடான பார்ட்டின்னு என்னைய அந்த ஆட்டையில இருந்து தூக்கிட்டாங்க!
ஒருவேளை சூடாச்சுன்னா தெரியப்படுத்துங்க\\

அந்த இரகசியம் தெரியலையே இது வரைக்கும்.

நாமலும் ஒன்னாவது சூடாவுமான்னு பார்க்கிறேன் ம்ஹூம்ம்

வால்பையன் said...

thevanmayam said...

வடை, போண்டா ஸ்பெஷலிஸ்ட் டோண்டு சாரிடம் செக்-அப் போயிருக்கு, அவரு அதை பார்த்துட்டு ரிப்போர்ட் தருவாரு///

சாப்பிட்டு
பாத்தாருன்னா பொச்சே!!//

சாப்பிடல்லாம் மாட்டார்,
ஒன்லி ஆராய்ச்சி தான்!

தேவன் மாயம் said...

புடவை வாங்கும்போதுகூட இந்த தலைப்பை பாத்துதாங்க வாங்கறாங்க...///

புடவைத்தலைப்பும்
தமிழில் தான் வைக்கோணும்
இல்லாட்டி போராடுவோம்

வால்பையன் said...

அந்த இரகசியம் தெரியலையே இது வரைக்கும்.

நாமலும் ஒன்னாவது சூடாவுமான்னு பார்க்கிறேன் ம்ஹூம்ம்//

உங்களை வேண்டுமானால் சூடாக்கிடலாம்

நட்புடன் ஜமால் said...

கா-வும் வேண்டாம்
டுக்-கா-வும் வேண்டாம்
2-கா-வும் வேண்டாம்

இதுக்கு மேல (அதான் இருக்கு)

நட்புடன் ஜமால் said...

\\வால்பையன் said...

அந்த இரகசியம் தெரியலையே இது வரைக்கும்.

நாமலும் ஒன்னாவது சூடாவுமான்னு பார்க்கிறேன் ம்ஹூம்ம்//

உங்களை வேண்டுமானால் சூடாக்கிடலாம்\\

எப்படி எப்படி

சொல்லுங்க சீனியர்.

தேவன் மாயம் said...

சாப்பிட்டு
பாத்தாருன்னா பொச்சே!!//

சாப்பிடல்லாம் மாட்டார்,
ஒன்லி ஆராய்ச்சி தான்!///

என்ன வடைப்பா
அது
ஆமை வடையா?
ஓட்டை வடையா?

வால்பையன் said...

நட்புடன் ஜமால் said...

கா-வும் வேண்டாம்
டுக்-கா-வும் வேண்டாம்
2-கா-வும் வேண்டாம்

இதுக்கு மேல (அதான் இருக்கு)//

ஏன் காக்கா இருக்கே!

நட்புடன் ஜமால் said...

\\வால்பையன் said...

thevanmayam said...

வடை, போண்டா ஸ்பெஷலிஸ்ட் டோண்டு சாரிடம் செக்-அப் போயிருக்கு, அவரு அதை பார்த்துட்டு ரிப்போர்ட் தருவாரு///

சாப்பிட்டு
பாத்தாருன்னா பொச்சே!!//

சாப்பிடல்லாம் மாட்டார்,
ஒன்லி ஆராய்ச்சி தான்!\\

பெரிய ஆராய்ச்சி ஆளரோ

Tech Shankar said...

அடடா!

தேவன் மாயம் said...

கா-வும் வேண்டாம்
டுக்-கா-வும் வேண்டாம்
2-கா-வும் வேண்டாம்

இதுக்கு மேல (அதான் இருக்கு)///

என்னது?
புரியலியே

நட்புடன் ஜமால் said...

\\வால்பையன் said...

நட்புடன் ஜமால் said...

கா-வும் வேண்டாம்
டுக்-கா-வும் வேண்டாம்
2-கா-வும் வேண்டாம்

இதுக்கு மேல (அதான் இருக்கு)//

ஏன் காக்கா இருக்கே!\\

2-கா-வே வேண்டாம்ங்கறேன்

கா-க்-கா முக்-கான்னுகிட்டு

அ.மு.செய்யது said...

// வால்பையன் said...
நட்புடன் ஜமால் said...

கா-வும் வேண்டாம்
டுக்-கா-வும் வேண்டாம்
2-கா-வும் வேண்டாம்

இதுக்கு மேல (அதான் இருக்கு)//

ஏன் காக்கா இருக்கே!
//

ஆஆ..கருத்தியல் வன்முறை..

கிளம்பிட்டாய்ங்கய்யா.....

நட்புடன் ஜமால் said...

\\தமிழ்நெஞ்சம் said...

அடடா!\\

நெஞ்சம் கணக்குதா

கண்கள் இணிக்குதா

தேவன் மாயம் said...

ஓ காக்கா வடையா?
பாட்டி சுட்டதுதானே//

வால்பையன் said...

பெரிய ஆராய்ச்சி ஆளரோ //

ஆமா பல நாட்டு போண்டாக்களை டே(டெ)ஸ்ட் பார்த்தவரு

வால்பையன் said...

நெஞ்சம் கணக்குதா

கண்கள் இணிக்குதா //

இருக்கும் இருக்கும்

நட்புடன் ஜமால் said...

\\ஆஆ..கருத்தியல் வன்முறை..\\

என்னாது புச்சாக்கீது

வால்பையன் said...

எப்படி எப்படி

சொல்லுங்க சீனியர்.//

புதுசா என்ன?
யாராவது பெரிய பதிவர்களுக்கு பகிரங்க கடிதம் எழுதுங்க!

தேவன் மாயம் said...

நெஞ்சம் கணக்குதா

கண்கள் இணிக்குதா //

இருக்கும் இருக்கும்///

வயிறு பசிக்குதா?

வால்பையன் said...

வயிறு பசிக்குதா? //

யாரும் அந்த வடையை மட்டும் சாப்பிடாதிங்க!

தேவன் மாயம் said...

எப்படி எப்படி

சொல்லுங்க சீனியர்.//

புதுசா என்ன?
யாராவது பெரிய பதிவர்களுக்கு பகிரங்க கடிதம் எழுதுங்க!//

அமைதி அமைதி..

தேவன் மாயம் said...

வயிறு பசிக்குதா? //

யாரும் அந்த வடையை மட்டும் சாப்பிடாதிங்க!///

அந்த வடை அவருக்கு மட்டுமா?

வால்பையன் said...

என்னுடய பின்னூட்டங்கள் தமிழ்மணத்தில் திரட்டப்படுதா?

அ.மு.செய்யது said...

//ஆமா பல நாட்டு போண்டாக்களை டே(டெ)ஸ்ட் பார்த்தவரு//

//புதுசா என்ன?
யாராவது பெரிய பதிவர்களுக்கு பகிரங்க கடிதம் எழுதுங்க!//

நானும் உங்கள மாதிரி தான் ஒருத்தருக்கு பகிரங்க கடிதம் எழுதினேன்..

ஸ்கூல் படிக்கும் போது..என்ன‌த்த‌ சொல்ல‌..

தேவன் மாயம் said...

சாப்பிடப்போறேன்!!
வரட்டா!!!

அ.மு.செய்யது said...

//வால்பையன் said...
என்னுடய பின்னூட்டங்கள் தமிழ்மணத்தில் திரட்டப்படுதா?
//

திட்டப்படாமல் இருந்தா சரி..

சென்ஷி said...

//இன்னும் நிறைய பேரு நல்லா தான் தலைப்பு வச்சு எழுதுறாங்க!
ஆனா அவங்கெல்லாம் கொஞ்ச நாளா எங்கூட சாட் பண்றதில்லை,
அதனால அவுங்க பதிவுகள் விட்டு போச்சு.//


கலக்கல் :-))

கணினி தேசம் said...

பிரமாதமான கற்பனை!! (அலுவலகத்துல) உக்கார்ந்து யோசிப்பீங்களோ?

கலக்கறீங்கோ..!!

A Blog for Edutainment said...

கலக்கறீங்கோ

VIKNESHWARAN ADAKKALAM said...

அண்ணே சூடான தலைப்பு டெம்பிலேட் ஒன்னு செஞ்சி கொடுத்திங்கன்னா நாங்க பதிவு போட சுலபமா இருக்கும்ல...

gayathri said...

thevanmayam said...
வயிறு பசிக்குதா? //

யாரும் அந்த வடையை மட்டும் சாப்பிடாதிங்க!///

அந்த வடை அவருக்கு மட்டுமா?

venumna neengalum avar ketta share kelunga kodupparu

புதியவன் said...

//இன்னும் நிறைய பேரு நல்லா தான் தலைப்பு வச்சு எழுதுறாங்க!
ஆனா அவங்கெல்லாம் கொஞ்ச நாளா எங்கூட சாட் பண்றதில்லை,
அதனால அவுங்க பதிவுகள் விட்டு போச்சு.//

இது தான் வால் பையன் ஸ்டைல்...

ராம்.CM said...

கலக்கறீங்கோ.....

அருமையாக உள்ளது!..

Thamira said...

அளவான கேலி, ரசனையாக இருந்தது..

g said...

///ஆனாலும் தலைப்பில், விசயத்தை தொட்டு காட்டி விட்டு பெரிய பெரிய ஜாம்பாவன்களுக்குச் சமமாக கட்டுரை எழுதுவதில் நமது வலையுலகினர் தற்போது முதலிடத்தில் நிற்கின்றனர்.///

யாரைச் சுட்டிக் காட்டுகிறீர்...? நன்றாக இருந்தது படிக்க.

Maximum India said...

//ஆனாலும் தலைப்பில், விசயத்தை தொட்டு காட்டி விட்டு பெரிய பெரிய ஜாம்பாவன்களுக்குச் சமமாக கட்டுரை எழுதுவதில் நமது வலையுலகினர் தற்போது முதலிடத்தில் நிற்கின்றனர்.//

வழக்கம் போலவே நல்ல பதிவு

திறமை & அறிவு என்பவை எவருக்கும் தனிப்பட்ட சொத்துக்கள் அல்ல என்பதையும். திறமை & அறிவு உள்ள எவரும் (எந்த ஒரு godfatherஉம் இல்லாமலேயே) தனக்கென ஒரு வட்டத்தை உருவாக்க முடியும் என்பதை நிரூபிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தது இந்த பதிவு வலை. இதில் வெற்றி பெற்ற அனைவரையும் (உங்களையும் சேர்த்து) வாழ்த்துகிறேன்.

Poornima Saravana kumar said...

வால் என்ன இது!!!!!

Poornima Saravana kumar said...

சொல்லவே இல்லை:(

Poornima Saravana kumar said...

ஆமா ஏன் இந்த கொலை வெறி????

Poornima Saravana kumar said...

me the 100th

anujanya said...

நிறைய பிரபலங்களை கசக்கித் துவைத்து விட்டீர்கள். என்னை இந்த மட்டில் விட்டதற்கு நன்றி. நல்ல பகடி வால். ஆமாம், எங்க ஆளக் காணோம்? உங்கள் எதிர்-கவிதைக்கு ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கு :)

அனுஜன்யா

g said...

தலைப்பு என தலைப்பு வைப்பதைவிட ‘தலைப்பில்லாத மேட்டரு’னு வைத்திருந்தால் இன்னும் சூப்பராக இருந்திருக்கும்.

Dr.Rudhran said...

பல நல்ல பதிவுகளை சுட்டியதற்கு நன்றி. வாழ்த்துகள்.

cheena (சீனா) said...

வாலு - வடயப் பத்தின ஆராச்சி நல்லாவெ இருக்கு - முடிவென்ன ?

Anonymous said...

முத்துகுமாருக்கு வீர வணக்கம்.
---------------------
அணையப் போவதாய்
எண்ணிக் கொண்டிருந்த
இனநெருப்பை பற்றவைத்த
அக்கினிக்குஞ்சு நீ!

ஆம்!உன் தாய் தமிழச்சி தான்
உயிரை துச்சமென மதிக்கும்
விவேகமிக்க வீரனைப் பெற்றெடுக்க
ஓர் தமிழச்சியால் தானே முடியும்...
நீ தூத்துக்குடிதான்
கலப்படமில்லா முத்து அங்குதானே கிடைக்கும் ...

முராரியால்
பூபாளம் பாடிய
புதிய வரலாறு நீ!

அவர்கள் புலியாய் போரிடுகின்றனர்
நீ ஒளியாய் போரிட்டாய்
நாங்கள் வாய்மொழியாலாவது
போரிட வேண்டாமா?

முத்துக்குமார் தமிழ்க்கடவுள்
என்றனர் நம்பவில்லை...
முத்துக்குமார்தானே தமிழ்க்கடவுளாக
இருக்க முடியும்
இப்போது நம்புகிறேன்...

நீ எழுதி வைத்த மரண ஓலைதான்
இனி எங்கள்
புதிய புறநானூறு!

பல அரசியல் வாதிகள்
பிணங்களாய்ப் போனார்கள்....
நீ எப்போதும் உயிரோடு இருப்பாய்!

தூக்குக்கயிற்றை முத்தமிட்டான் பகத்சிங்
தீயை முத்தமிட்டாய் நீ!
அன்று இந்தியா கிடைத்தது...
நாளை ஈழம் கிடைக்கும்!

வீர வணக்கத்துடன்
Dr.ச.தெட்சிணாமூர்த்தி,
அறந்தாங்கி.

!

Blog Widget by LinkWithin