புலம்பல்கள்!!!

இன்று மதியம் சன் தொலைக்காட்சியில் முதல்வன் படம் போட்டிருந்தார்கள்,
மற்ற சேனல்களில் ஓடும் படத்தை விட இதுவே என்னை கவர்ந்ததால் நான் முதல்வன் படத்தையே பார்த்தேன், கவனிக்க "நான் பார்த்தேன்" என்று தான் சொல்லியிருக்கிறேன், தமிழகமே பார்த்தது, இந்தியாவே பார்த்தது, உலகமே பார்த்தது என்றெல்லாம் நான் சொல்ல வரவில்லை, காரணம் இந்த பதிவு முதல்வன் படத்தை பற்றியும் அல்ல, அதை ஒளிப்பரப்பிய தொலைக்காட்சியை பற்றியும் அல்ல.

நாடும்,நாட்டு மக்களும் உருப்பட வேண்டும் என்று நினைப்பவன் எவனுக்கும் அந்த படத்தை பார்த்து இரத்தம் கொதிக்காமல் இருக்காது. கடந்த இருபது வருடங்களாக தமிழகத்தில் நடந்தவைகள் தான் அந்த படத்தில் காட்டப்பட்டது என்றால் அது மிகையல்ல. முதலில் வரும் கலவரக்காட்சியே ஒரு உதாரணம், ஒரு சின்ன பிரச்சனைக்கும் கும்பல் சேருவது சாதிக்காரனும் ,கட்சிகாரனும் தான். இவர்கள் எங்கேயிருந்து சாதியை ஒழிக்க போகிறார்கள்.

பல நூற்றாண்டுகளாய் இருப்பது சாதி, அதை சுலபத்தில் ஒழிக்க முடியாது, சாதியை ஒழிக்க மக்களே முன் வரவேண்டும் போன்ற காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆறாவது படிக்கும் ஒரு மாணவனுக்கு சாதியை பற்றி ஒன்றுமே தெரியாது, அவன் நல்ல மதிப்பெண் வாங்கியிருந்தாலும் அவனுக்கு சலுகை வழங்க அவன் சாதி சான்றிதல் தரவேண்டும், சிறு வயதிலேயே அவன் மனதில் சாதியின் வன்மம் ஊன்றப்படுகிறது.

சாதியும் ,மதமும் விரும்பி ஏற்கப்படுவதில்லை, அது திணிக்கப்படுகிறது, எந்த குழந்தையும் தான் இந்த சாதியில் பிறந்ததற்காக பெருமைப்படுவதில்லை, ஆனால் வளர்ப்பில் அதையும் சேர்த்து விடுகிறார்கள் பெருசுகள். ஒரு குழந்தையை ஒண்ணாம் வகுப்பு சேர்க்க சென்றால் அங்கேயும் சாதி சான்றிதல் கட்டாயம். திறமை மிக்கவன் நல்ல மதிப்பெண்கள் பெற்றும், அவன் வசதி குறைவாக இருந்தாலும், அவன் பேக்வேர்ட் க்ளாசாக இருந்தால் அவனுக்கு சலுகை இரண்டாம் பட்சம் தான். தகுதியின் அடிப்படையில் இல்லாமல் சாதியின் அடிப்படையில் புறக்கணிக்க படுவதால் அப்போதே அவனுக்கு மற்ற சாதிகளின் மீது வெறுப்பு ஏற்படுகிறது பிறகு எங்கிருந்து அழியும் இந்த சாதிகள்.

இடஒதுக்கிட்டீற்கு நான் எதிரி இல்லை, ஒரு காலத்தில் பார்பநிசம் இருந்தது, பார்பனர்களை ஆதரிப்பவர்களுக்கே பதவிகள் தரப்பட்டன. இருக்கலாம் ஆனால் தமிழகத்தை ஆண்ட எந்த மன்னனும் பார்ப்பான் என்ற சரித்திரம் இல்லை பின் எப்படி வந்தது பார்ப்பினிய ஆதிக்கம், வெகு இடைக்காலத்தில் அல்லது ஆங்கிலேயர்களின் ஆட்சிகாலத்தில் தான் நடந்திருக்க வேண்டும். அதை மாற்ற பெரியாரின் தலைமையில் நடந்த சீர்திருத்தங்களை நான் வரவேற்கிறேன்.

நன்றாக படிக்கும் மாணவன், பொருளாதாரத்தில் குறைவாக இருந்தால் அவனது நண்பர்களே அவனுக்கு உதவி செய்வது இன்று எல்லா பள்ளியிலும் நடக்கிறது.
அந்த பிஞ்சு உள்ளங்களில் சாதி என்னும் நஞ்சை புகுத்துவது யார். அரசாங்கத்தின் சலுகைக்காக எங்களை பேக்வேர்டிலிருந்து, மோஸ்ட் பேக்வேர்டாக மாற்றுங்கள் என்று கெஞ்ச வைப்பது யார். ஒரு பார்ப்பனம் நான் இன்ன சாதி என்று சொல்லிகொள்வது போல் மற்றவர்கள் சொல்ல முடியவில்லை, அதன் காரணம் என்ன. இனி அரசாங்கத்தின் எந்த இடத்திலும் சாதி தேவையில்லை என்று சொல்வதற்கு அரசினை தடுப்பது யார்.

சாதியின் பெயரால் அரசியல் நடத்துபவர்கள்.
அரசியல் நன்மைக்காக சாதி கலவரத்தை தூண்டுபவர்கள்.
சாதி இரண்டொழிய வேறில்லை என்று சொல்லிவிட்டு சாதி கட்சி நடத்துபவர்கள்.
இவர்களை தானா எதிர்பார்க்கிறது இந்த தமிழகம், இவர்களாளா தமிழகத்துக்கு விடுவு காலம் பிறக்கும்.

முதல்வன் படத்தில் ஒரு காட்சி வரும், ஊனமுற்ற ஒருவன் அர்ஜுனின் கழுத்தில் மாலையிட்டு இந்த தமிழகம் என்னைப் போலவே நொண்டியாக இருக்கிறது தூக்கி விடுங்கள் தலைவா என்பான், இங்கு தமிழக அரசியலே நொண்டியாக இருக்கும் பொது எங்கிருந்து தமிழகத்தை தூக்கி நிறுத்த போகிறார்கள்

54 வாங்கிகட்டி கொண்டது:

ers said...

இடஒதுக்கிட்டீற்கு நான் எதிரி இல்லை, ஒரு காலத்தில் பார்பநிசம் இருந்தது, பார்பனர்களை ஆதரிப்பவர்களுக்கே பதவிகள் தரப்பட்டன. இருக்கலாம் ஆனால் தமிழகத்தை ஆண்ட எந்த மன்னனும் பார்ப்பான் என்ற சரித்திரம் இல்லை பின் எப்படி வந்தது பார்ப்பினிய ஆதிக்கம், வெகு இடைக்காலத்தில் அல்லது ஆங்கிலேயர்களின் ஆட்சிகாலத்தில் தான் நடந்திருக்க வேண்டும். அதை மாற்ற பெரியாரின் தலைமையில் நடந்த சீர்திருத்தங்களை நான் வரவேற்கிறேன்.????

நல்ல முடிவு... அப்புறம் ஆட்சியாளர்களை துவம்சம் செய்த கடைசி வரிகள் நச். இவ்வளவு நடந்த பின்னும் சப்பைக்கட்டு போட்டு வரும் திமுக ஆதரவு முன்னணி பதிவரும் இந்த பதிவை படித்து பின்னோட்டம் போட வேண்டும் என்பதே என் விருப்பம்.

Anonymous said...

நல்ல முடிவு... அப்புறம் ஆட்சியாளர்களை துவம்சம் செய்த கடைசி வரிகள் நச். இவ்வளவு நடந்த பின்னும் சப்பைக்கட்டு போட்டு வரும் திமுக ஆதரவு முன்னணி பதிவரும் இந்த பதிவை படித்து பின்னோட்டம் போட வேண்டும் என்பதே என் விருப்பம்.

அவரோட டவுசரை வால் பையன் அவுத்ததில் இருந்து அவரு பேஜாரு புடிச்சு அலையுறாராம்.

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

சுயநலம் பிடித்த மக்களால் உருவாக்கப்படும் சுயநலம் பிடித்த , தன்னை மட்டும் அல்லது தன் குடும்பத்தின் நன்மையினை மட்டும் நினைக்கின்ற அரசுகள் இருக்கும் வரை இது மாறாது !!!!

Anonymous said...

//ஒரு குழந்தையை ஒண்ணாம் வகுப்பு சேர்க்க சென்றால் அங்கேயும் சாதி சான்றிதல் கட்டாயம்.//


Who told you that ??? It is not true dear.

சாதி உங்கள் சாய்ஸ !
http://kalvetu.blogspot.com/2007/09/blog-post.html

**

Please do not talk like VijiyaKhan. The reason govt has reservation is for different purpose and not to promote caste.

It is up to you to practice caste and religion. Of course to live in the man made society there are few rules you need to follow to get benefits.

If you think you are not interested in practicing the caste and religion you can get away from that. But remember one thing, though we have law, to stand against the mainstream practice you need to have thick skin and be prepared to face worst challenges. It is hard to practice such a thing but have it own benefits.

-Kalvetu

Anonymous said...

கிழட்டு தாத்தா கருணாநிதி தான் தமிழ்நாடு கெட்டு போக காரணம்.இன்னமும் பாருங்க ஒன்னுக்க அடிக்க முடியாத வயதில் கூட பதவி வெறி

மங்களூர் சிவா said...

//
இனி அரசாங்கத்தின் எந்த இடத்திலும் சாதி தேவையில்லை என்று சொல்வதற்கு அரசினை தடுப்பது யார்.
//

ஐய்யோ நான் இல்லை
:)))))

மங்களூர் சிவா said...

//
tamil cinema said...

இவ்வளவு நடந்த பின்னும் சப்பைக்கட்டு போட்டு வரும் திமுக ஆதரவு முன்னணி பதிவரும் இந்த பதிவை படித்து பின்னோட்டம் போட வேண்டும் என்பதே என் விருப்பம்.
//

:))))))))))))))))))

Anonymous said...

சாதி வெறியன் கிறுக்கன் கல்வெட்டு வந்துட்டான்.. பெரிய புடிங்கி போல பேசுவான்.. அப்புறம் அமெரிக்காவுல் என்ன புடுங்குறான் வந்து இந்தியாவில் இந்த பேசற புடுங்கறதை எல்லாம் செய்யலாமே

Anonymous said...

இந்த முதல்வன் படத்தை மதுரையில் கேபிளில் தினமும் பல காட்சிகள் ஓட்டிய வீரன் தானே அழகிரி அவன் அப்பா எப்படி இருப்பாரு?

Anonymous said...

பெரியார் கொள்களையில் முக்கியதுவமானது பெண் விடுதலை..

ஆணால் அவரே அந்த பெண் விடுதலை என்ற கொள்கையை விட்டு தன்னை விட பல வயது சிறியவரான மேலும் வளர்ப்பு மகளயே திருமணம் செய்தார்..இதற்க்கு ஆயிரம் சப்பாணிதனம் சொல்லாம்.

ஏன்லே இயக்கதுக்கு பாதுகாப்பான ஆள் வேணும் தானே அப்ப வீரமணிக்கு மணியம்மைக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டியது தானே..இரண்டும் ஒட்டிகொண்டு திரிந்தது தனி கதை..

இதே பெரியார் புகழ் பாடும் வேந்தர்களான கருணாநிதி..எத்தனை பொண்டாட்டின்னு தெரியலை. இதான் இவனுங பெரியார் கொள்கையை பின்பற்றும் லட்சணம். தூ வாயில் வருது.

Anonymous said...

45 வயசுல ஒரு கீப்பு அதுக்கு குழந்தை வேறு. தோளுக்கு மேல குழந்தைங்க இருக்குற நேரத்துல கீப் தேடி அலைந்த தலைவர் .

Anonymous said...

//தூ வாயில் வருது //

கருமம் கருமம்.. எங்களுக்கெல்லாம் குண்டில தான் வரும்

Anonymous said...

//கருமம் கருமம்.. எங்களுக்கெல்லாம் குண்டில தான் வரும்//
எல்லாருக்கும் குண்டில தான் வரும் ஆனால் இந்த மஞ்சள் துண்டுக்கு குண்டில போகறது எல்லாம் அப்படியே போறதாம் ஓய்

Anonymous said...

எழுதுந்து ஒண்ணுக்கு அடிக்க முடியாத கிழபோல்ட்டு எல்லாம் முதல்வர் அதுக்கு ஜால்ரா வேற

Anonymous said...

இங்கே ஒருத்தன் தேவையில்லாம ஜெயிலுக்குப் போகப்போறான்..

TN-LEADARS-WALLPAPER said...

visit my blog

Itsdifferent said...

First thing we need is respect each other's views and do not trash the other point of view.
2. If common man becomes disciplined, then the ruling elite will have to follow. Touch your heart and say, have you done the right thing all (atleast most of the time? right from standing in line to getting things done with money. Can each one of us stop that?

Kumky said...

அடப்பாவி வாலூ.. ஒரு 5ம் கிளாஸ் பையனவிட நல்லா யோசிச்சி இந்த மாரில்லாம் எழுத வருதே உங்களுக்கு.
. pls dont write like this without knowing anything.

நல்லதந்தி said...

இந்த சாதிஅரசியல் பகுத்தறிவு அரசியல் ஒழியும் போதுதான் ஒழியும்.எனென்றால் இவர்களுடைய சாதி ஒழிப்பு திட்டம் சாதியை வளர்க்ககூடியதே அன்றி ஒழிக்கக் கூடியது அல்ல!.நீங்களே நினைத்துப் பாருங்கள் பிராமணர்களையோ,இடைப்பட்ட சாதியினரையோ,அல்லது கீழ்சாதி எனப்படும் நம் உடன் பிறப்பினரையோ ஒழித்து விட்டால் இவர்கள் அரசியல் நடத்துவது எப்படி?
இப்படிக்கு

BC நல்லதந்தி

Kumky said...

ஒட்டுமொத்த மரியாதையையும் கெடுத்திக்கிட்டாச்சி.......
சே.....அனானிமஸ் கமெண்ட்ஸ் போடரவங்கதான் உங்களுக்கு லாயக்கு...i m very sorry .

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

இதில் நீங்கள் சொல்லியிருக்கும் பல விஷயங்களை உளறல்களாகவே என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. இப்படிச் சொல்வதற்கு மன்னிக்கவும்; ஆனால் சொல்லாமல் இருக்க முடியவில்லை :(

Anonymous said...

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...

இதில் நீங்கள் சொல்லியிருக்கும் பல விஷயங்களை உளறல்களாகவே என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. இப்படிச் சொல்வதற்கு மன்னிக்கவும்; ஆனால் சொல்லாமல் இருக்க முடியவில்லை :(//

இதோபார்ரா யார் இதை சொல்றது. திமுக ஜால்ரா காமகதை எழுத்தாளர் . கரண்ட் கட் ஆகவில்லை என்று முழு பூசணிக்காயை சோற்றில்மறைத்த சுந்தர் சொல்றாரு.

உலகின் ஒரே அறிவாளி சுந்தர் சொல்லிட்டாரு. பிரச்சனை வேணாம்.

கார்க்கிபவா said...

ம்ம்ம்... இன்னும் என்னெல்லாம் நடக்கப் போகுதோ? அட அரசியல்ல சொன்னேன்ப்பா.. மறுபடியும் அட, தமிழ்நாட்டு அரசியல்ல சொன்னேன்.

Anonymous said...

வால்பையன்.... ரொம்ப அபத்தமான பதிவு. உங்க வலைப்பக்கத்துக்கு திருஷ்டி பொட்டா இருக்கட்டும்.

இதுக்கு முன்னாடிப் பதிவு கூட எவ்வளவோ பெட்டர்.

கூடுதுறை said...

இதற்கு அந்த படத்திலேயே ஒரு நல்ல யோசனையும் சொல்லி இருப்பார்களே...

ஜாதி பெயரே இருக்கக்கூடாது அதற்கு பதிலாக forward,backward,most backward என்று மட்டும்தான் இருக்க வேண்டும்...என மூன்று மட்டும்தான் இருக்கவேண்டும்

சில காலங்களுக்கு பிறகு இட ஒதுக்கிடு எடுத்தபின் ஒரு ஜாதிதான் இருக்கும் என்று...

தற்போதைய சூழ்நிலையில் அரசியல்வாதிகள் இருக்கும் வரையில் ஜாதிகள் ஒழியாது...

யாரவது ஒரு சர்வாதிகாரி வந்து சுமார் 40 வருடங்கள் ஆட்சி செய்தால் அடுத்த தலைமுறையில் ஜாதி இருக்காது....

http://urupudaathathu.blogspot.com/ said...

இங்க சாதிக்குன்னு ஒவ்வொரு கட்சிகள் இருக்கும் போது, சாதிகளாவது ஒழிக்கிரதாவது??
முதல்ல, இந்த சாதி கட்சிகளை ஒழிக்க முடியுதான்னு பார்ப்போம்..
பின்னாடி , அதுக்கு அப்புறமா, சாதி ஒழிக்க பார்ப்போம்..

Anonymous said...

வால் பையன்.. லக்கிலுக்கோடு உங்களுக்கு இருக்கும் தனிப்பட்ட விரோதம் உங்கள் கண்ணை மறைக்கிறது. அவருக்கு கலைஞர் பிடிக்கிறது - உங்களுக்கு பிடிக்கவில்லை. ஆனால் அவர் கலைஞர் மட்டுமல்ல ஒரு பெரிய இயக்கத்தின் தலைவர் / மாநில முதல்வர்.

ஒரு மாநில முதல்வர் குறித்து நீங்களே அனானிமஸாக இப்படிக் கீழ்தரமாக பதிந்து வைப்பது தவறான செயல் - சட்டரீதியான தண்டைக்குரியதும் கூட. நீங்கள் லக்கியிடம் கற்றுக்கொள்ள ஒன்றிருக்கிறது.. அவர் தி.மு.க வாக இருந்தாலும் எங்காவது ஜெயலலிதா பற்றி இப்படி கீழ்தரமாக பேசி பார்த்திருக்கிறீர்களா? அப்படிப்பட்ட அடிப்படை பன்பு கூடவா உங்களுக்கு இல்லாமல் போய் விட்டது?

என் நன்பர்கள் சிலர் மூலம் கேள்விப்பட்டது - நீங்கள் கவனிக்கப்படுகிறீர்கள். தேவையின்றி இன்னுமொரு போலி டோண்டுவாக உருவெடுத்து உங்கள் வாழ்க்கையை கெடுத்துக் கொள்ள வேண்டாம்.

வேறொன்றும் சொல்வதற்கில்லை..

போலி டோண்டு அத்தியாயம் முடிந்தது

இப்போ நல்லதந்தி, நீங்கள், ப்ளீச்சிங் பவுடர், பின்னூட்டம் பாலா.. ( உங்களைத் தவிர மற்றவர்கள் முகமிலிகள் என்பதை கவனிக்க - அதாவது சிக்கினால் களி உங்களுக்கு மட்டும் தான்!)

ரவி said...

தரமற்ற பின்னூட்டங்கள் அதிகம் இருப்பதால் இதனை தரமற்ற பதிவு என்பதில் தவறேதும் இல்லை...

பார்ப்பணீயம் - சாதீயம் - இடஒதுக்கீடு போன்ற விடயங்களில் நீங்கள் படித்து தெரிந்துகொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது...

கடைசீயாக ஒரு அனானி நன்பர் போட்ட பின்னூட்டத்தை அப்படியே வழிமொழிகிறேன்...

அநாகரீக பின்னூட்டங்கள் போடவேண்டாம் என்று சொல்லுங்கள்...!!!!

Anonymous said...

தரமற்ற பின்னூட்டங்கள் அதிகம் இருப்பதால் இதனை தரமற்ற பதிவு என்பதில் தவறேதும் இல்லை...

@ செந்தழல் ரவி என்று முதல் இதை போல தரபதிவாளர் வேலை செய்கிறார்? @

பார்ப்பணீயம் - சாதீயம் - இடஒதுக்கீடு போன்ற விடயங்களில் நீங்கள் படித்து தெரிந்துகொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது..

@செந்தழல் ரவி,

//அதென்ன "இஸ்லாமிய" தீவிரவாதிகள் என்ற தலைப்பு ?

தீவிரவாதியில கிறிஸ்டீன் தீவிரவாதி, இஸ்லாமிய தீவிரவாதி, இந்து தீவிரவாதி என்று இருக்கா ?//

சாதீயம்ன்னு சொல்லாம நீங்க பார்ப்பனீயம்ன்னு சொல்றத எந்த வகையில சேர்க்கிறதாம்? எந்த சாதிக்காரன் அடிச்சுக்கிட்டாலும் அதன் பெயர் பார்ப்பனீயம் தான் என்று சொல்லும் போது இந்த அறிவு எங்க போவுது? அதையும் நடுநிலையாக சாதீயம்ன்னு தானே சொல்லணும்? உங்களுக்கு அறிவு இல்லாம இல்ல; சந்தர்ப்பவாதமா பயன்படுத்துறீங்க. அது தான் கொஞ்சம் சரியில்ல.

//மூளைச்சலவை செய்யப்பட்ட, மனித உணர்வுகள் கொஞ்சமும் இல்லாத, கொலைபாதகம் செய்ய துணிந்துவிட்ட மிருகத்தை "தீவிரவாதி" என்று மட்டும் அழைக்கலாமே தவிர அவர் சார்ந்துள்ள மதத்தை இணைத்து பார்க்கலாகாது...

அதனால் வெறும் "தீவிரவாதி" என்பது தான் சரி....//

அதே தான் சாதி விஷயத்திலும். உங்களால ஒரு இசை நிகழ்ச்சியக் கூட சாதிக் கண்ணோட்டத்துல தான் பார்க்க முடியுது! இப்போ சமீபத்துல கூட நீங்க "பாப்பாத்திகள்"ன்னு ஒரு பதிவு போடல? எதுக்குங்க இந்த இரட்டை நிலைப்பாடு?

//என்னுடைய இஸ்லாமிய மதத்தை சேர்ந்த சகோதரர்களின் மனம் புண்படாமல் இருக்க நீங்கள் பகிரங்கமாக உங்கள் மன்னிப்பை கேட்பது தான் சரி.//

சரிதான். என்னுடைய பிராமண சகோதரர்கள் மனம் புண்படாமல் இருக்க நீங்கள் பகிரங்கமாக உங்கள் மன்னிப்பை முதலில், எங்கே கேளுங்கள், பார்க்கலாம்.

த்விஜன் @

Anonymous said...

அவர் தி.மு.க வாக இருந்தாலும் எங்காவது ஜெயலலிதா பற்றி இப்படி கீழ்தரமாக பேசி பார்த்திருக்கிறீர்களா? அப்படிப்பட்ட அடிப்படை பன்பு கூடவா உங்களுக்கு இல்லாமல் போய் விட்டது?

@ காண்டு கஜேந்திரன் அடிப்படை நாகரீகம் புல்லரிக்குது ப்பா @

என் நன்பர்கள் சிலர் மூலம் கேள்விப்பட்டது - நீங்கள் கவனிக்கப்படுகிறீர்கள். தேவையின்றி இன்னுமொரு போலி டோண்டுவாக உருவெடுத்து உங்கள் வாழ்க்கையை கெடுத்துக் கொள்ள வேண்டாம்

@ கவனிக்கபடுவதும் விள்மபரம் தான் @

வால்பையன் said...

சாதியின் மேல் எனக்கிருக்கும் வெறுப்பினாலே இந்த பதிவு, நானும் தனிமனித தாக்குதலுக்கு எதிரானவன் தான், இங்கே தனி மனித தாக்குதல் தேவையில்லை.
அவரவர் கருத்துகளை சொல்ல அனைவருக்கும் உரிமை இருக்கிறது. அதற்காக கோபப்படுவதால் உங்கள் கருத்துகள் அடுத்தவர்களுக்கு புரியாமல் போகலாம்.
எனக்கு புரிதல்கள் குறைவாக இருக்கலாம், ஆனால் நான் சாதிகளை முழுவதுமாக வெறுக்கிறேன் என்பதற்கு சான்றே இந்தபதிவு.

நன்றி

Anonymous said...

//ஒரு மாநில முதல்வர் குறித்து நீங்களே அனானிமஸாக இப்படிக் கீழ்தரமாக பதிந்து வைப்பது தவறான செயல் - சட்டரீதியான தண்டைக்குரியதும் கூட. நீங்கள் லக்கியிடம் கற்றுக்கொள்ள ஒன்றிருக்கிறது.. அவர் தி.மு.க வாக இருந்தாலும் எங்காவது ஜெயலலிதா பற்றி இப்படி கீழ்தரமாக பேசி பார்த்திருக்கிறீர்களா? அப்படிப்பட்ட அடிப்படை பன்பு கூடவா உங்களுக்கு இல்லாமல் போய் விட்டது?//

அடேங்கப்பா,இவர்கள் எம்புட்டு டீசண்டாக பேசுவார்கள் என்பதைத்தான் வெற்றிகொண்டான் தீப்பொறி (முன்பு) மீட்டிங்களில் கேட்டிருக்கோமே!!!

//என் நன்பர்கள் சிலர் மூலம் கேள்விப்பட்டது - நீங்கள் கவனிக்கப்படுகிறீர்கள். //

அதானே எங்கட இவுங்க சனநாயகத்தை காப்பாத்த இன்னும் வர்றிலியேன்னு பார்த்தேன்.

Anonymous said...

//தி.மு.க தொண்டன் said...

//தூ வாயில் வருது //

கருமம் கருமம்.. எங்களுக்கெல்லாம் குண்டில தான் வரும்//

அதான் நீங்க பேசின இம்புட்டு நாறுதா?

வால்பையன் said...

//The reason govt has reservation is for different purpose and not to promote caste. //

அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த பாடுபடுவது போல், சாதியையும் ஒழிக்க ஏதாவது செய்தால் நலம்

//you need to follow to get benefits. //

அந்த சலுகைகளை பெற உருவாக்கி வைத்திருக்கும் சில அடிப்படை தகுதிகளையே நான் சாடுகிறேன். சலுகைகளைப் பெற தகுதி கடின உழைப்பா இல்லை சாதி சான்றிதலா

//If you think you are not interested in practicing the caste and religion you can get away from that.//

ஆம். நான் விலகி தான் நிற்கிறேன், அதற்காக சாதிகளை கொண்டாடுபவர்களை பார்த்து கொண்டு சும்மா இருக்க முடியுமா.

வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி கல்வெட்டு

வால்பையன் said...

//கிழட்டு தாத்தா கருணாநிதி தான் தமிழ்நாடு கெட்டு போக காரணம்.இன்னமும் பாருங்க ஒன்னுக்க அடிக்க முடியாத வயதில் கூட பதவி வெறி //

அவர் மட்டுமல்ல, எல்லா கட்சிகளுமே சாதியை ஆதரிக்கின்றன, சாதியற்ற கட்சியாக கம்யூனிஸ்ட் மட்டுமே இப்போது இருக்கிறது

வால்பையன் said...

//சாதி வெறியன் கிறுக்கன் கல்வெட்டு வந்துட்டான்.. பெரிய புடிங்கி போல பேசுவான்.. அப்புறம் அமெரிக்காவுல் என்ன புடுங்குறான் வந்து இந்தியாவில் இந்த பேசற புடுங்கறதை எல்லாம் செய்யலாமே //

உங்களுடைய எதிர்கருத்துகளை வையுங்கள் நண்பரே, நேரடியான தாக்குதல்கள் கருத்து சுதந்திரத்துக்கு அழகல்ல

வால்பையன் said...

//பெரியார் கொள்களையில் முக்கியதுவமானது பெண் விடுதலை..
ஆணால் அவரே அந்த பெண் விடுதலை என்ற கொள்கையை விட்டு தன்னை விட பல வயது சிறியவரான மேலும் வளர்ப்பு மகளயே திருமணம் செய்தார்..இதற்க்கு ஆயிரம் சப்பாணிதனம் சொல்லாம்.//

பெரியாரும் கேள்விகளுக்கு உள்ளாக்கப்பட வேண்டியவரே, நான் இங்கே சொல்லியிருப்பது அவருடைய சாதிய, மத எதிர்ப்பு பிரச்சாரங்ககளை பற்றி மட்டுமே, அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேச வேண்டியதில்லை

வால்பையன் said...

//கருமம் கருமம்.. எங்களுக்கெல்லாம் குண்டில தான் வரும் //

திறந்து வைத்திருக்கிறேன் என்பதற்காக, எதை வேண்டுமானாலும் சொல்லலாம் என்றில்லை. விவாதங்கள் நாகரிகமாக இருக்கட்டும்

வால்பையன் said...

//வால்பையன்.... ரொம்ப அபத்தமான பதிவு. உங்க வலைப்பக்கத்துக்கு திருஷ்டி பொட்டா இருக்கட்டும்.//

நன்றி நண்பரே , உங்கள் ஆசைபடியே ஆகட்டும்

Anonymous said...

நான் பார்ப்பான் ..நீங்க ..?
டோண்டூ மாதிரி ஓபனா சொல்லுங்க ....

வால்பையன் said...

//யாரவது ஒரு சர்வாதிகாரி வந்து சுமார் 40 வருடங்கள் ஆட்சி செய்தால் அடுத்த தலைமுறையில் ஜாதி இருக்காது.... //

அவரும் தனது சாதியை மட்டுமே ஆதரித்தால், இன்னொரு ஹிட்லர் கதையாகி விடும்

வால்பையன் said...

//இந்த சாதி கட்சிகளை ஒழிக்க முடியுதான்னு பார்ப்போம்..
பின்னாடி , அதுக்கு அப்புறமா, சாதி ஒழிக்க பார்ப்போம்.. //

என் பதிவின் காரணமே இது தான் நண்பரே

Anonymous said...

எனக்கு ஒரு சந்தேகம் பக்கி லுக் யாரு ?
நீங்களா இல்ல ப்ளீசிங் பவுடரா ?...
இதெல்லாம் Don't do தப்புன்னு சொல்ல மாட்டேன் ...
நல்ல தான் இருக்கு ....

இன்னும் கொஞ்சம் காரசாரமா எழுதலாம்

வால்பையன் said...

//அவருக்கு கலைஞர் பிடிக்கிறது - உங்களுக்கு பிடிக்கவில்லை. //

அவரை பிடிக்காது என்று உங்களிடம் சொன்னேனா,
ஒரு மனிதராக நான் எல்லோரையும் நேசிக்கிறேன். அவருடைய கொள்கைகளை கேள்வி கேட்பது தவறா?

//ஒரு மாநில முதல்வர் குறித்து நீங்களே அனானிமஸாக இப்படிக் கீழ்தரமாக பதிந்து வைப்பது தவறான செயல் -//

நான் அனானியல்ல, என் பெயர் மற்றும் அலைபேசி எண் இந்த பிளாக்கிலேயே இருக்கிறது

//அவர் தி.மு.க வாக இருந்தாலும் எங்காவது ஜெயலலிதா பற்றி இப்படி கீழ்தரமாக பேசி பார்த்திருக்கிறீர்களா?//

அதிகாரமையத்தை தான் கேள்வி கேக்க வேண்டும், நான் வேறு யாரையும் ஆதரிப்பதாக எங்கேயும் சொல்லவில்லையே, எனக்கு அரசியல்வாதிகளையே மொத்தமாக பிடிக்கவில்லை

//இன்னுமொரு போலி டோண்டுவாக உருவெடுத்து உங்கள் வாழ்க்கையை கெடுத்துக் கொள்ள வேண்டாம். //

எனக்கு அது தேவையில்லாத வேலை, அதை செய்வது உங்களை போல் அனானிகள் தான். உங்கள் நண்பரை ஜாக்கிரதையாக இருக்க சொல்லுங்கள் , உங்கள் ஆலோசனைக்கும் நன்றி

வால்பையன் said...

//தரமற்ற பின்னூட்டங்கள் அதிகம் இருப்பதால் இதனை தரமற்ற பதிவு என்பதில் தவறேதும் இல்லை...//

தவறு என்மேல் இல்லை, அந்த பின்னூட்டம் போட்டவர்களே அதற்கு பொறுப்பு

//பார்ப்பணீயம் - சாதீயம் - இடஒதுக்கீடு போன்ற விடயங்களில் நீங்கள் படித்து தெரிந்துகொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது...//

இவை பற்றி எனக்கு புரிதல்கள் குறைவாக இருக்கலாம், ஆனாலும் சாதி என்ற அமைப்பையே சுவடில்லாமல் அளிக்க வேண்டும் என்பது என் ஆசை

வால்பையன் said...

//நான் பார்ப்பான் ..நீங்க ..?
டோண்டூ மாதிரி ஓபனா சொல்லுங்க .... //

மனிதன்

வால்பையன் said...

//எனக்கு ஒரு சந்தேகம் பக்கி லுக் யாரு ?
நீங்களா இல்ல ப்ளீசிங் பவுடரா ?...
இதெல்லாம் Don't do தப்புன்னு சொல்ல மாட்டேன் ...
நல்ல தான் இருக்கு ....
இன்னும் கொஞ்சம் காரசாரமா எழுதலாம் //

வால்பையனை தவிர எனக்கு வேறு ப்ளாக்குகள் இல்லை, அதை ஏற்கனவே குறிப்பிட்டு உள்ளேன்,

Anonymous said...

////நான் பார்ப்பான் ..நீங்க ..?
டோண்டூ மாதிரி ஓபனா சொல்லுங்க .... //

மனிதன்
//

ஆஹா கண்டுபிடிசிடான்யா ...
நானும் வால் இருந்ததால வேற என்னவோனு நினைச்சேன்

Anonymous said...

()நீங்கள் லக்கியிடம் கற்றுக்கொள்ள ஒன்றிருக்கிறது.. அவர் தி.மு.க வாக இருந்தாலும் எங்காவது ஜெயலலிதா பற்றி இப்படி கீழ்தரமாக பேசி பார்த்திருக்கிறீர்களா? அப்படிப்பட்ட அடிப்படை பன்பு கூடவா உங்களுக்கு இல்லாமல் போய் விட்டது?//))

வாய்யா பன்(ம்)பு பரமசிவம்,
முதல்ல ஒன் பிரண்டை மத்தவிங்க பிளாக்ல போயி பு**,பூ* அப்படில்லாம் கமெண்டு போடாம இருக்க சொல்லு..

மவனே,பாத்துகிட்டுதான் இருக்கம்,வசமா மாட்டுனா சைபர் கிரைம்ல ஒன்னுக்கு அடிக்கப் போறான் அந்த நாயி...

வால்பையன் said...

நான் பள்ளியில் படிக்கும் போது சில நண்பர்களுடன் பழக கூடாது, அவர்களுடன் மதியம் உணவருந்த கூடாது என்று தடுக்கப்பட்டேன், அப்போது அது ஏன் என்று கூட எனக்கு தெரியாது. பின்னாளில் சாதிய முறைகளே அதற்க்கு காரணம் என்று நினைத்தேன்.
பார்பணியத்தில் மட்டும் தீண்டாமை இல்லை மற்ற சாதிகளிலும் உள்ளது என்பதை தெரிந்து கொண்டேன்.

எனக்கு நண்பனாய் இருக்க எல்லா தகுதியும் உள்ள ஒரு தலித் நண்பனுக்கு நான் நூறு சதவிகிதம் என் மனதில் இடமளிக்கிறேன். அந்த நோக்கத்தில் தான் நான் இட்ட "புலம்பல்கள்" என்ற பதிவு.

என் அப்பனுக்கும் உன் அப்பனுக்கும் ஆகாது, அதனால் நீயும் எனக்கு ஆகாது என்பது போல் இருக்கிறது இப்போதைய பார்ப்பனிய துவேசம். உள்ளுக்குளேயே புற்றை வளர்த்து கொண்டிருக்கிறோம். உத்தா புரத்தில் தலித்துக்கு எதிரான சுவரும், சேலத்தில் கோவிலுக்குள் கோவிலுக்குள் விடமாட்டேன் என்று சொன்ன சாதியினரையும் இதே வேகத்தில் கேள்விகள் கேட்க எத்தனை பேர் தயாராக இருக்கிறார்கள்.

இதெற்கெல்லாம் காரணமான சாதிகள் அடியோடு ஒளிந்து போக வேண்டும் என்று நான் ஆசைபடுவதில் என்ன தவறு.

இந்த பின்னூடத்தை என் பதிவிலும் டோண்டுவின் பதிவிலும் இடுகிறேன்

Ramesh said...

Erodele enge?

Appuram, enakku therinja varai, refusal of caste certificate enbathu eluthapadatha vithi - automatica forward caste aaga eduthukolvaargal.

Then, College admission timela problem varum, athu than...

Anonymous said...

தரமற்ற பின்னூட்டங்கள் அதிகம் இருப்பதால் இதனை தரமற்ற பதிவு என்பதில் தவறேதும் இல்லை...

100% correct. grow man..Grow

Sathappan

Anonymous said...

You can now get a huge readers' base for your interesting Tamil blogs. Get your blogs listed on Tamil Blogs Directory - http://www.valaipookkal.com and expand your reach. You can send email with your latest blog link to

valaipookkal@gmail.com to get your blog updated in the directory.

Let's show your thoughts to the whole world!

வால்பையன் said...

நன்றி ரமேஷ்

கருத்துகளுக்கு நன்றி சாத்தப்பன்.
தரமற்ற பின்னூட்டங்களுக்கு அதனை இட்டவர்களே பொறுப்பு

!

Blog Widget by LinkWithin