பார்பனீயம் vs பெரியாரியம்

கேணி நிகழ்வில் எழுத்தாளர் ஞாநி ஒரு முறை கூறினார். என்னை ஆர்.எஸ்.எஸ் ஆட்கள் தொடர்பு கொண்டாங்க, நீங்கள் எங்களுக்கு எவ்ளோ எதிரா எழுதினாலும் நாங்கள் உங்களை ஏத்துக்குவோம் ஆனால் நீங்கள் ஆதரிக்கும் இடதுசாரிகள் சிறுது கருத்து வேறுபாடு வந்தாலும் தூக்கி போட்ருவாங்கன்னு. ஏன் அப்படி சொன்னாங்கன்னு ஒரு நண்பர் கேட்டார், ஞாநி பிறப்பால் பார்பனர்னு சொன்னேன். அது ஒரு காரணமா என்றார். ஒரு காரணமில்லை அதான் மொத்த காரணமும் என்றேன். பெரியார் காலத்தில் பார்பனீயம் ஊறி போய் கிடந்தது. தீண்டாமை பார்க்காத பார்ப்பான் லட்சத்தில் ஒருத்தன் இருந்தால் ஆச்சர்யம். மேலும் அப்போதைய பார்பனர்கள் பெரியாரை எதிர்ப்பு கண்ணோட்டத்தில் அனுகினார்கள். அதனால் தான் பாம்பை விட பார்ப்பானுக்கு விசம் அதிகம் என்ற பொருள் படி கூறினார். அதே நேரம் அவர் ராஜாஜியுடன் அந்தரங்கம் பகிரும் அளவுக்கு நட்புடன் இருந்தார் என்பதையும் கவனிக்கனும் இன்றைய நிலையில் பார்பனீய கூறுகள் பார்பனர்களிடம் மட்டும் இல்லை. பிறப்பால் உயர்வு, தாழ்வு பார்ப்பதே பார்பனீயம், இன்று தங்களை உயர்சாதி, ஆண்ட பரம்பரை என சொல்லிக்கொள்ளும் அனைவரும் தீண்டாமை கடைபிடிக்கிறார்கள். அவர்களும் பார்பனர்களே. ஆனால் பிறப்பால் பார்ப்பனாக பிறந்து சாதி மறுக்கும் பலரை நான் அறிவேன். நம்கூடவே பலர் இருக்கிறார்கள். அவர்களே வெளிகாட்டிக்கொள்ள விரும்பாத அதை நானும் காட்ட விரும்பவில்லை. பதிவின் பொருள் குறித்து ஞாநி விஷயம் மட்டும்.

பூனை குறுக்கால போனா அப சகுனம், கொஞ்சம் நேரம் நின்னுட்டு போன்னு சொல்ற மூடநம்பிக்கைக்கு சமமாக பார்க்குறேன் பாம்பையும், பார்ப்பானையும் கண்டால் பாம்பை விடு, பார்ப்பானை அடி என்ற நிலைதகவல்களை. ஒரு மதவாதிக்கு உண்டான அனைத்து திணிப்புகளும் உங்களுக்கு நடந்துள்ளது. ஒரு மதவாதியை போலவே பகுத்தறியாமல் நீங்கள் வேதம் போல் அதை ஓதிக்கொண்டு இருக்கிறிர்கள். ஹலோ, ஹலோ பார்ப்பஸ். உங்களுக்கு இனிமேல் தான் இருக்கு. பார்பனியத்தை அதாவது பிறப்பால் உயர்வு, தாழ்வு பார்ப்பதை விடுத்த எவரும் பார்ப்பான் என்ற சொல்லுக்கு கோவம் அடைய தேவையில்லை. பார்ப்பான் என்ற சொல் உங்களை குறிப்பதாக கருதினால் அந்த பார்பனீய சிந்தனை உங்களுக்குள் இருக்கிறது என்று அர்த்தம். நான் ஒன்னும் பண்ணல, என்னை ஏன் பார்ப்பான்னு திட்டுறான்னு கேட்பவர்களுக்கு. எவனோ திருடன்னு கத்துனா திருடன் தான் திரும்பி பார்ப்பான், நீ ஏன் முக்குற திருமுருகன் காந்தி பேசியது பார்ப்பனிய நோக்கில் சிறுபான்மையினரை ஒடுக்கும், அவர்கள் வாழ்வாதரத்தை பாதிக்கும் சட்டம் இயற்றும் பார்ப்பனர்களை. அவரை தெரு முருகன் காந்தி என எழுதினால் நீ ஒரு அக்மார்க் பார்பனிய சிந்தனையுள்ள பார்ப்பான். பெரியார் சொன்னது உன்னை தான். உன் விசம் தான் அனைத்தையும் விட கொடியது #வால்பையன் #பார்பனீயம்

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin