எதிர்கட்சிகளின் தேவை!..

இடதுசாரிகளே ஆட்சி அமைத்தாலும் எதிர்கருத்து ஆளே இல்லாத ஒற்றை கொள்கை ஜனநாயகத்திற்க்கு ஆபத்து என்பது எனது புரிதல்.

பாஜக சிறுபான்மையினருக்கு எதிரி, தலித் மக்களின் விரோதின்னு நாம பேசிகிட்டு இருக்கோம். ஆனா பாஜக இஸ்லாமியர் ஒருவரை ஜனாதிபதி ஆக்கியது, பார்ப்பனர் அல்லாத ஒருவரை(மோடி) பிரதமர் ஆக்கியது தற்பொழுது தலித் சமூகத்தில் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளாராக அறிவித்துள்ளது

பாஜகவின் ஒற்றை கொள்கை இந்துத்துவா, அதை எதிர்ப்பது பார்ப்பானா இருந்தாலும் ஆண்டி இண்டியன்னு சொல்லிருவாங்க. கலாமுக்கு பொட்டு வைக்காத குறை தான். சிவன் சிலையை வைத்து நோபல் பரிசு(அப்பல்லாம் நாம பொறக்கவேயில்ல, எதிர்த்து கேள்வி கேட்டா ஆண்டி இண்டியன்) வாங்கினார்னு இப்பவும் வாட்ஸ் அப்பில் சுத்துது.

எனது வருத்தம் என்னான்னா, எதிர் கருத்துக்கு வலுவான எதிர்கட்சிகள் இல்லாது போனதே. அதற்கு காரணம் அந்த எதிர்கட்சிகள் தான். காங்கிரஸ் கட்சி இரண்டாம் முறையாக ஆட்சியை பிடித்த பொழுது போட்ட ஆட்டம் இவ்ளோன்னு இல்ல. ஊழல் இல்லாத துறைகளும் இல்ல.(இப்ப அந்த நிலை தான் தமிழகத்துக்கு)



மக்கள் சேவை என்ற பதத்தை மறந்து அரசியல் நிறுவனமயமாகியதும், கார்ப்ரேட் பணத்தில் ஆட்சி நடத்துவதும் நிச்சயமாக ஜனநாயகமே அல்ல. அதற்கு எந்த கட்சியில் விதிவிலக்கும் இல்லாமல் செயல்படுகிறது. ஜனாதிபதி ஒரு ரப்பர் ஸ்டாம்ப் பதவி. ஆனால் அவர் கையெழுத்து இந்தியாவின் தலை எழுத்தை மாற்றக்கூடும்

பாஜகவின் திட்டம், யூனிபார்ம் சிவில் கோட் சட்டம், காஷ்மீர் மீதான சிறப்பு சலுகைகளை ரத்து செய்தல், இந்தியா முழுவதும் மாநிலத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல், இந்தி, இந்து, இந்தியா போன்ற அனைத்தும் அடுத்த இரண்டு வருடங்களில் நம் மீது திணிக்கப்படும்.

இடதுசாரிகள் தொலைகாட்சி விவாதங்கள் மட்டும் அரசியல் செய்து கொண்டிருப்பது வருத்தம் அளிக்கிறது. இடது சாரிகளின் களைப்பு, மதவாத சக்திகளின் பூஸ்ட்

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin