parenting without pressure

நம் எல்லோர் வாழ்க்கையுமே ப்ராக்டீஷ் தான். ஒன்னு வாழ பழகுறோம், இல்லைனா வளர்க்க பழகுறோம்.

மூணு வருச இடைவெளி இருந்தும் என்னை என் பொண்ணுக்கு இன்னும் நண்பனா தான் வச்சிருக்கு. அவள் எனக்கு இன்னும் சிறு குழந்தையா தான் தெரியிறா. எதையும் அனுபவத்தில் கற்றுகொள்வதே சிறந்ததுன்னு கொள்கை இருந்தாலும் அவள் சொல்லும் சில விசயங்களில் இந்த அனுபவத்திற்கு நாம் கொடுக்கும் விலையை நினைத்தால் வயிற்றில் புளியை கரைப்பதை தடுக்க முடியல.

”ஹவ் டு பேரண்டிங் வித் அவுட் பிரஸ்ஸர்” என்ற தலைப்பில் நண்பர்களுடன் உரையாடுவேன். பல பிரச்சனைகளுக்கு எளிதான தீர்வை என்னால் அப்ப சொல்ல முடிந்தது ஏன்னா அப்ப நான் பிரச்சனை என்னும் வட்டத்திற்கு வெளியில் இருந்து வட்டத்தை முழுதாக பார்க்கிறேன். வாதி, பிரதிவாதி இரு தரப்பு நியாயங்களும் புரியும்.



ஆனா எனக்கே ஒரு பிரச்சனைன்னு வந்தா நான் வட்டத்திற்கு உள்ளே நிற்கிறேன். என்னால் வட்டத்தின் பாதியை தான் பார்க்க முடிகிறது. என்னை நியாயபடுத்திக்கொள்ளவும், தீர்வு எனக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்றே ஈகோ செயல்படுது. சில சயமங்களில் இயலாமை தரும் கோவம் ந்ம் இன்னொரு முகத்தை காட்டுகிறது.

அந்த இயலாமை தான் குழந்தையை அடிப்பதில் தொடங்கி., காதலியை கொலை செய்வது வரை செல்கிறது. நம் உள்ளார்ந்த சுய மதிப்பீடுகள் தாண்டி பிறர் தரப்பு நியாயங்களும் கருத்தில் கொள்ளாமல் மனிதம் பிழைக்காது!

1 வாங்கிகட்டி கொண்டது:

Atheist said...

very true. Our own problems are difficult to solve because our emotions are also involved. Emotional intelligence is what makes a person successful or failure rather than book intelligence.

!

Blog Widget by LinkWithin