பார்பனீயத்தின் புதிய தில்லாலங்கடி!

பார்பனீயம் என்பது ஒரு சாராரை அடிமைப்படுத்தி அல்லது அறிவு ரீதியாக சிறுமைப்படுத்தி அடக்கி ஆளும் குணம்! அக்குணம் இருப்பவர்கள் பார்பனரல்லாத மற்ற மனிதர்களும் இருக்கிறார்கள், அக்குணம் இல்லாத பார்ப்பனர்களும் இருக்கிறார்கள். நான் பொதுவாகவே சாதியத்தை எதிர்ப்பதால் இது எந்த வகையிலும் பார்பனர்களுக்கு எதிரான பதிவல்ல என்பது தெரியும், ஒருவேளை இதில் குறிப்பிட்டு பார்பனர்களை சாடுவது போல் இருந்தால் அது சாதி ரீதியாக குறிப்பீடாமல் பார்பனீய ரீதியாக குறிப்பிடுவது மட்டுமே!

***


பைபிள் என்றாலே புத்தகம் என்று தான் அர்த்தம், தமிழில் விவிலியம் என்று சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன், இதன் மூல மொழி ஹீப்ரு,யூத மக்களால் பேசப்படும் மொழி, இன்று உலகில் அதிகமாக மொழி பெயர்கப்பட்டுள்ள நூலில் விவிலியத்திற்கே முதலிடம்! எங்கேயும் விவிலியத்தை அதன் மூல மொழியில் தான் படிக்க வேண்டும் என்று குறிப்பிடவில்லை! இத்தனைக்கும் அதன் ஆதி மொழியான ஹீப்ரு கிட்டதட்ட அழியும் தருவாயில் உள்ளது!

குர் ஆன் என்று அழைக்கப்படும் இஸ்லாமியர்களின் புனித நூலின் ஆதி மொழி உருது!அரபி, அரேபிய நாடுகளின் ஆட்சி மொழியும் அது தான்! இஸ்லாமியர்களின் பெரும்பாலோர்க்கு உருதுஅரபி தெரிந்திருக்கிறது, அதே நேரம் உருதுஅரபி தெரியாமல் தமிழ் மட்டுமே தெரிந்த இஸ்லாமியர்களும் இருக்கிறார்கள், அவர்களுக்கு தமிழ் அர்த்தத்துடன் குரானும் இருக்கிறது, நானே பார்த்துள்ளேன்!, ஆனாலும் இவர்கள் பிரார்த்தனைக்கு உருதுஅரபி மட்டுமே பயன்படுத்துகிறார்கள்! இவர்கள் கடவுளுக்கு உருதுஅரபி மட்டும் தான் தெரியும் போல! அதை பற்றி பிறகு விவாதிக்கலாம், ஏனென்றால் இவர்கள் உருதைஅரபியை மொழியாக தான் பார்க்கீறார்கள், உருதுஅரபி என்ற மொழியை மந்திரம் என்று எங்கேயும் பீலா விடவில்லை!,
(இவர்களுக்கும் பார்பனீய சிந்தனை உண்டா இல்லையான்னு இவுங்க தான் வந்து சொல்லனும்!)


மொழி என்பது ஒலி வடிவ தகவல் தொடர்பு சாதனம் மட்டுமே!, ஆண்டாண்டு காலமாக நம்மிடையே இருக்கும் பல மொழிகள் நம் தேவைகேற்ப சுருங்கியும், விரிந்தும் தற்போதய நிலையில் இருக்கிறது, ஆயினும் அதன் அடிப்படை இலக்கணம் மாறவில்லை என்பது முக்கியம், சங்ககால தமிழ் பாடல்களை இன்று விளக்கவுரை இல்லாமல் படிக்க முடியாது!, உலகில் உள்ள பல மொழிகளில் வெகு சில மொழிகளுக்கே இந்த சிறப்பம்சம், அதில் தமிழ் மொழியும் ஒன்று, அதற்காக யாரும் எங்கள் மொழி தான் வேதம், அதை தினம் நான்கு முறை சொன்னால் சோறு கிடைக்கும், அந்த பாட்டை பாடினால் உடலிலுள்ள நோய்களெல்லாம் பறந்துவிடும் என்று யாரும் சொல்லவில்லை! ஆனால் சிலகாலமா நான் கவனிக்கிறேன்!

தமிழ் வலையுலகில் சமஸ்கிருதத்தின் திணிப்பு அதிகமாக இருக்கிறது! அந்த மந்திரத்தை சொன்னால் மூச்சு வரும், இந்த மந்திரத்தை சொன்னால் பேச்சு வரும் என்று காட்டுத்தனமாக மூளைச்சலவை நடந்து கொண்டிருக்கிறது!, எதை சொன்னாலும் நம்பிவிடும் நம் மக்கள் கூட அதே பாணியில் இடுகைகள் எழுதி கொண்டிருக்கிறார்கள், வேதத்தில் ஒவ்வோரு சொல்லும் மந்திரமாம்! கடவுளுக்கு பூஜை செய்ய இருக்கும் துதிகள் இல்லாமல் சமஸ்கிருதம் என்பதே மனிதனை நோயிலிருந்து மீட்க வந்த ஒரு மருத்துவ மொழி என்று!



சமஸ்கிருதத்துக்கும், வட மொழி எழுத்துகளுக்கும் உள்ள ஒற்றுமைகளை விளக்கவே இந்த இரண்டு படங்களும், எல்லோரும் ஹிந்தி கத்துகோனும்னு டில்லியில ஒருத்தன் ஏன் கத்திகிட்டு இருக்கான்னு இப்ப புரியுதா!? இதுக்கு பேர் தான் பார்பனீய சிந்தனைன்னு சொல்றது!



கவனிக்க திராவிட(தென் இந்திய) மொழிகளில் நாந்தாண்டா பெரிய கொம்பன் என்பது போல் தலையில் கீரீடம் இல்லை!, இந்த வித்தியாசம் போதுமென்று நினைக்கிறேன் மொழி கூட பார்பனீயம் பேசுகிறது என்பதை சுட்டிகாட்ட!


தஞ்சாவூர் பொம்மையாவது ஆட்டிவிட்டால் தான் மண்டையை ஆட்டுகிறது! நம் ஆட்கள் மட்டும் ஏன் எதை சொன்னாலும் மண்டையை ஆட்டுகிறார்கள்!, மொழி எப்படிடா மருத்துவமாகும், ஓம் என்தற்கும் பூம் என்பதற்கும் கிட்டதட்ட ஒரே உச்சரிப்பு தானே வருகிறது! அப்படியே இருந்தாலும் தமிழ் பேசும் போது உள் செல்லும் காற்று மருத்துவ வேலைகள் செய்யாதா!?, என்னத்த சொல்ல, என்னயிருந்தாலும் ரோட்டில் வித்தை காட்டுபவன் ”ரத்தம் கக்குவ” என்று சொன்னது பாக்கெடில் இருப்பதை அள்ளி கொடுத்து வரும் மனிதர்கள் தாமே இங்கிருப்பவர்கள்!

427 வாங்கிகட்டி கொண்டது:

«Oldest   ‹Older   1 – 200 of 427   Newer›   Newest»
Mahesh said...

அருண்... தெளிவாத்தான் எழுதியிருக்கீங்க... எல்லாம் ஓகே... ஆனா..

//கவனிக்க திராவிட(தென் இந்திய) மொழிகளில் நாந்தாண்டா பெரிய கொம்பன் என்பது போல் தலையில் கீரீடம் இல்லை!, இந்த வித்தியாசம் போதுமென்று நினைக்கிறேன் மொழி கூட பார்பனீயம் பேசுகிறது என்பதை சுட்டிகாட்ட! //

இது கொஞ்சம் சிறுபிள்ளைத்தனமா இருக்கு (மன்னிக்கவும்) மொழியோட வரிவடிவத்துக்கும் மக்களோட ஆளுமைக்கும் முடிச்சுப் போடறது புரியவே இல்லை.

வால்பையன் said...

அந்த வார்த்தை ஹிந்தி கத்துக்க சொன்ன கபிலுக்காக!
அவர் மொழி வெறி அவருக்கு,
என் ஆதங்கம் எனக்கு!

மற்றபடி வழக்கம் போல லுலுலாயி தான்!

dondu(#11168674346665545885) said...

உயர்சாதீயம் என்னும் தனிச்சொல்லே இருக்கும்போது ஏன் பார்ப்பனீயம் என எழுத வேண்டும்? நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உங்கள் பதிவு பார்ர்ப்பனருக்கு விரோதமாகத்தான் பார்க்கப்படும்.

இல்லாவிட்டால் உங்களுக்கு பார்ப்பனரிடமிருந்து எதிர்வினைகள் வராது. முதலிலேயே ஒரு பிரிவினரை இம்மாதிரி விலகியிருக்கச் செய்வதால் உங்கள் பதிவின் நோக்கம்தான் அடிப்படும். பிறகு உங்கள் விருப்பம்.

//இத்தனைக்கும் அதன் ஆதி மொழியான ஹீப்ரு கிட்டதட்ட அழியும் தருவாயில் உள்ளது!//
முழுக்க முழுக்க உளறல். இஸ்ரவேலின் ஆட்சி மொழி அது. அங்குள்ள சாதாரண மக்களும் பேசும் மொழி அது. அது அழியும் தருவாயில் இருப்பதாக யார் சொன்னது உங்களுக்கு? பேச்சுவழக்கில் இல்லாமல் அது இருந்த நிலையிலிருந்து அதை மீண்டும் பொது மக்களுக்கான மொழியாக இஸ்ரவேலர்கள் ஆக்கியுள்ளார்கள். உலக சரித்திரத்திலேயே இம்மாதிரி ஒரு மொழிக்கு புத்துணர்வு தருவது இதுதான் முதல் முறை.

//குர் ஆன் என்று அழைக்கப்படும் இஸ்லாமியர்களின் புனித நூலின் ஆதி மொழி உருது!//
ரொம்பவும் தண்ணிபோட்டுவிட்டு எழுதியுள்ளீர்கள் என நினைக்கிறேன். அது அரேபிக் மொழி, உருது அல்ல. உருது இந்திய மொழி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

sriram said...

வாலு
”பார்பனீயம் என்பது ஒரு சாராரை அடிமைப்படுத்தி அல்லது அறிவு ரீதியாக சிறுமைப்படுத்தி அடக்கி ஆளும் குணம்! அக்குணம் இருப்பவர்கள் பார்பனரல்லாத மற்ற மனிதர்களும் இருக்கிறார்கள், அக்குணம் இல்லாத பார்ப்பனர்களும் இருக்கிறார்கள். நான் பொதுவாகவே சாதியத்தை எதிர்ப்பதால் இது எந்த வகையிலும் பார்பனர்களுக்கு எதிரான பதிவல்ல என்பது தெரியும், ஒருவேளை இதில் குறிப்பிட்டு பார்பனர்களை சாடுவது போல் இருந்தால் அது சாதி ரீதியாக குறிப்பீடாமல் பார்பனீய ரீதியாக குறிப்பிடுவது மட்டுமே!”
இந்த டிஸ்கியும் உன் (நெருக்கமாய் உணர்கிறேன் எனவே “ங்க” கட், நீயும் அவ்வண்னமே உண்ர்ந்தால் மகிழ்வேன்) பார்வையும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.
நான் வாழ்ந்த்தெல்லாம் சென்னை, டில்லி, பாஸ்டன் போன்ற மெட்ரோ நகரங்கள், அதனாலோ அல்லது என் பெற்றோர் பாகுபாடு பாக்க கொடுக்காத்தனாலோ நான் என்றுமே மனிதருக்குள் பிரித்துப் பார்த்தில்லை.

coming to the content of the post மொழிக்குள் கடவுளைக் காண்பவர்களைப் பற்றி சொல்ல ஒன்றும் இல்லை. இறைவன் அவர்களை மன்னிப்பாராக என்று சொல்வதைத் தவிர.

ஹிந்தி கற்றல்: இது பத்தி எனக்கு ஒரு கருத்து இருக்கு, தமிழ்நாட்ட விட்டு வெளியில போன acceptance / usage of Hindi ரொம்ப அதிகம், படிச்சா 4 இடம் போய் வர உபயோகமா இருக்கும், நான் ஹிந்தி தெரியாமல் டெல்லி சென்று 5 வருடம் கஷ்டப்பட்டது எனக்குத் தான் தெரியும்.
ஆனால் ஹிந்தி திணிப்பில் எனக்கு உடன்பாடு இல்லை. விருப்பம் உள்ளவர்கள் கற்பதில் தடை ஏதும் இருக்கக் கூடாது. இத்த வச்சுத்தான் தயாநிதி மாறன் டில்லி வட்டாரத்தில் நல்ல பேர் வாங்கி விட்டார், அழகிரி மாட்டிகிட்டு முழிக்கிறார்.

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Pebble said...
This comment has been removed by the author.
வால்பையன் said...

குரானின் மூல மொழி அராபிக்!
அரேபியாவின் ஆட்சி மொழியும் அதுவே!
பெயர் குழப்பத்தால் உருது என்று குறிப்பிட்டு விட்டேன்!

அரபியாக இருந்தாலும் எந்த இஸ்லாமியரும் அரபியை மந்திரம் என சொல்ல கேள்விப்படவில்லை!

Pebble said...
This comment has been removed by the author.
வால்பையன் said...

//உலக சரித்திரத்திலேயே இம்மாதிரி ஒரு மொழிக்கு புத்துணர்வு தருவது இதுதான் முதல் முறை.//

அதை தான் சமஸ்கிருதத்திற்கும் கடைப்பிடிக்கிறார்களோ!

ஹீப்ருவை பாதுகாக்க வேண்டியது யூதர்களின் கடமை!

அரேபிக் தான் குரானின் மூல மொழி.
அதை குறிக்கத்தான் இது!
//அரேபிய நாடுகளின் ஆட்சி மொழியும் அது தான்!//

சட்டென்று பெயர் ஞாபகம் வரவில்லை!
உங்க அளவுக்கு எனக்கு ஞாபக சக்தியில்லை என்பதை ஒப்பு கொள்கிறேன்!

பார்பனர்களுக்கும், பார்பனீயத்திற்கும் நெருங்கிய சம்பந்தமுண்டு என்று நினைத்தீற்களேயானால் நான் அதை உயர்சாதியினர் என்று மாற்றுகிறேன்!

அ.மு.செய்யது said...

//குர் ஆன் என்று அழைக்கப்படும் இஸ்லாமியர்களின் புனித நூலின் ஆதி மொழி உருது!, அரேபிய நாடுகளின் ஆட்சி மொழியும் அது தான்!//

தல !!! குர் ஆன் ஆதிமொழி மட்டுமல்ல..ஆதி முதல் இன்று வரை உலகம் உள்ளளவும் அரபிமொழியில் தான்.( உருது அல்ல )

மேலும் அரேபிய நாடுகளின் ஆட்சி மொழியும் அரபி தான்.

உருது என்பது நம்நாட்டில் பேசப்படும் ( அரபி,இந்தி டெரிவேஷன் ) மொழி !!!!!!!

Joe said...

//
அதன் ஆதி மொழியான ஹீப்ரு கிட்டதட்ட அழியும் தருவாயில் உள்ளது!
//
It's not completely true. Hebrew is still alive.

Some excerpts from another website
----------------------------------
In 1948, Modern Hebrew became, not an official language, but THE official language, of Israel. Yiddish and German, contenders for some measure of recognition, were tossed out completely. To fully appreciate the impact of this decision, note that language-reanimation requires near-universal agreement on emotional issues, including:

o Standarded spelling.

o Standardised and updated grammar, including elimination of cumbersome syntax.

o Standard pronunciation, in the face of participants' "foreign" accents.

o Use of the target language in all contexts formal and informal, in spite of the fact that virtually all participants are fluent in another. This issue, more than any other, kills most revival movements.

Similar squabbles have crippled attempts to revive other languages, such as Cornish and Cadien French. Yet the Israelis established and promulgated a single, Modern Hebrew, which resembles the biblical version about as closely as contemporary English resembles Shakespeare.

Most astonishing of all, Israel's founders abandoned their native languages practically overnight. Hebrew is once again the native tongue of most Jewish Israelis. (Some Orthodox Israelis continue to speak Yiddish, arguing that only the Messiah has the right to restore Hebrew.) A Hebrew Academy oversees the language, which has spawned an impressive body of literature. Israeli universities teach in Hebrew. There are Hebrew sitcoms and comic strips. Doctors, truck drivers, rappers, and street thugs speak Hebrew. Amid the roar, the critics' silence booms like thunder.

The Hebrew Miracle is no less astounding, and no less fascinating to linguists, than Michael Crichton's fictional clones. Granted, big lizards are a bigger commercial draw than phonetics and vocabulary. I doubt children, or adults for that matter, would queue up for "Linguistic Park." Nonetheless, to peoples who have lost their language, and to those who love language in general, the Hebrew Miracle is both a compelling tale and a beacon of hope.

வால்பையன் said...

ஸ்ரீராம் அண்ணே!

வடநாட்டில் வேலை தேடி போறவங்களை ஹிந்தி படிக்க சொல்வதற்கும், அனைவரும் ஹிந்தி படிக்க வேண்டும் என்று சொல்வதற்கும் நிறைய வித்தியாசம்!

”ங்க” விகுதி தான் நமக்குள் இருந்த இடைவெளி! இப்போ அதுவும் இல்லை!
:)

Anonymous said...

Learning an additional language is never harmful. Only when it is forced, by that force undermining another languagure is absolutely wrong.
I dont know whether you have lived anywhere outside of TN, within India or Abroad.
Let me tell you, Hindi is a language that is spoken and understood by a majority in India. So when there are many Indians in a place (outside of India I mean, and except where Tamils are in majority) they all speak Hindi, and enjoy their time. We, idiots, who were indoctrinated by the so called Kazhagams, feel left out and unless you were in such a situation, you will never understand. There are smart TN folks who have learnt Hindi outside of school, and I have seen them have lots of fun as well in those situations.
So gundu chattila kudirai ottina, kazhaga sindanai dhan varum.
Have an open mind and learn a language thats going to help you in your life. Maran, Azhagiri is a good example. Namma Madurai Annan, english thagararu pola irukku. So in this case, clearly language has become a qualification.

குழலி / Kuzhali said...

இலங்கையில் தமிழினத்தை அழிக்கும் இராஜபட்சேவுக்கு அடைமொழி பாசிஸ்ட் இது போல பாசிஸ்ட் என்ற சொலவடை இரண்டாம் உலகப்போரிற்கு பின் தமக்கு எதிரானவர்களை மிகக்கொடூரமக நடத்தும் அழிக்கும் அனைவருக்குமான அடைப்பெயராக பாசிஸ்ட் என்று சொல்வது வழக்கம், இந்த செயலை இராஜபக்சே செய்திருந்தாலும் யாரும் இராஜபக்சேயிஸ்ட் என்று சொல்வதில்லை... இராஜபக்சேயை பாசிஸ்ட் என்றுதான் சொல்கிறார்கள்...

பார்ப்பனீயம் என்பது சாதிவெறியின் உச்ச குறீயீட்டு சொல்...

Anonymous said...

bengaliyum hindiyum andha melirukum kodu illamalum eludhalam endru kelvi patiruken.

//உயர்சாதீயம் என்னும் தனிச்சொல்லே இருக்கும்போது ஏன் பார்ப்பனீயம் என எழுத வேண்டும்?//

dondu ragavan endru peyar irukum podhu dondu ragava "iyengar" endru yane eludha vendum?

JesusJoseph said...

நல்ல இருக்கு

நன்றி,
ஜோசப்
http://www.sirippuulagam.com

ஊர்சுற்றி said...

@Sriram,

//நான் ஹிந்தி தெரியாமல் டெல்லி சென்று 5 வருடம் கஷ்டப்பட்டது எனக்குத் தான் தெரியும்.//

என்னங்க கொடுமை இது! அஞ்சு வருஷமாங்க ஆகப்போகுது அந்த மொழியைக் கத்துக்கிறதுக்கு! அஞ்சு மாசம்கூட ஆகாதுங்க! நம்ம ஆளுங்க இந்த மாதிரியான அனுபவங்களையே சொல்றதுதான், கபில் சிபிலுக்கு வக்காலத்து வாங்குறவனுங்களுக்கு ஊத்தி குடுத்த மாதிரி ஆகிடுது!

Anonymous said...

//அரபியாக இருந்தாலும் எந்த இஸ்லாமியரும் அரபியை மந்திரம் என சொல்ல கேள்விப்படவில்லை!??\

இஸ்லாமியர் எதுக்கு இந்த தமிழ் வார்த்தைய யூஸ் பண்ணுறங்க? அவுங்க ஏதாவது அரேபிய வார்த்தைதானே யூஸ் பண்ணுவாங்க!

சென்ஷி said...

//
குர் ஆன் என்று அழைக்கப்படும் இஸ்லாமியர்களின் புனித நூலின் ஆதி மொழி உருது!,//

உங்களுக்கு மாத்திரம் எங்கேர்ந்துதான் குறிப்புகள் கிடைக்குதோ தெரியலை :-(

சென்ஷி said...

//அரேபிய நாடுகளின் ஆட்சி மொழியும் அது தான்!//

நல்ல வேளை அரபிக்காரனுக்கு தமிழ் தெரியாது!

Anonymous said...

//அரபியை மந்திரம் என சொல்ல கேள்விப்படவில்லை//

சமஸ்கிருதமும் மந்திரமில்லை.

சென்ஷி said...

//ஆனாலும் இவர்கள் பிரார்த்தனைக்கு உருது மட்டுமே பயன்படுத்துகிறார்கள்! இவர்கள் கடவுளுக்கு உருது மட்டும் தான் தெரியும் போல! //

கொடுமை!

சென்ஷி said...

//தமிழ் மட்டுமே தெரிந்த இஸ்லாமியர்களும் இருக்கிறார்கள், அவர்களுக்கு தமிழ் அர்த்தத்துடன் குரானும் இருக்கிறது,//

எனக்குத் தெரிஞ்சு இது மாத்திரம்தான் ஒழுங்கா எழுதியிருக்கீங்க

சென்ஷி said...

//இத்தனைக்கும் அதன் ஆதி மொழியான ஹீப்ரு கிட்டதட்ட அழியும் தருவாயில் உள்ளது!//

சுத்தம் :-(

வால் அண்ணே.. ரொம்ப கஷ்டப்படுத்தறீங்க. இம்புட்டு சீரியசா காமெடி கூட செய்யமுடியாதே.. உங்களுக்கு மாத்திரம் எப்படி வருது இப்படில்லாம்!?

தனித்தனியா படிக்க முடியாம படிச்ச மொதோ ரெண்டு பாராவுக்கே தலைவலியை கொடுக்கற ரேஞ்சுலதான் எழுதியிருக்கீங்க.

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்

சென்ஷி said...

//ஓம் என்தற்கும் பூம் என்பதற்கும் கிட்டதட்ட ஒரே உச்சரிப்பு தானே வருகிறது!//

இதுவும் தப்புத்தான்.. :))

வாக்கிய அமைப்பு எழுதி வைச்சு பார்க்கறதுக்கும் பேச்சு மொழிக்கும் உள்ள வித்தியாசத்தை முதல்ல கத்துக்குங்க

சென்ஷி said...

மீ த 25 :-))

(அடப்போங்கப்பா!)

மணிகண்டன் said...

senshi, Good comments :)- me the 26th

ரவி said...

ithukkee ivlo naal aachhaa ?

Anonymous said...

//பார்ப்பனீயம் என்பது சாதிவெறியின் உச்ச குறீயீட்டு சொல்...//

கோழையை ஒம்போது எனறு அழைப்பது போல அசிங்கமானது இந்த வார்த்தை. மாலிக் கஃபூர் போன்ற வீரமான திருநங்கையரும் உண்டு (மாலிக் கஃபூர் அலாவுதீன் கில்ஜியின் தளபதி கம் சின்னவீடு). சாதி துறந்த பார்பனரும் உண்டு ராமானுஜர் போல. சாதி வெறி பிடித்த மற்ற சாதியினரும் உண்டு- ராமதாஸ் போல.

ஆனால் தமிழர்க்கு உள்ள பிரச்சனையே இதுதான். தகுந்த இடத்தில் தக்க வார்த்தை உபயோகப்படுத்துவது இல்லை.

எல்லா personal stero பிளைரும் 'வாக்மன்', photocopy எந்த மெசினை உபயோகித்து எடுத்தாலும் 'ஜெராக்ஸ்'.
இப்படி பொதுப்படுத்துவதே வழக்கமாகிவிட்டது.

பதிவுலக தருமி said...

//இதுவும் தப்புத்தான்.. :))//

பதிவு எழுதி பேர் வாங்கும் பதிவர்கள் இருக்கிறார்கள். குறை கண்டு பிடித்தே பேர் வாங்கும் பதிவர்களும் இருக்கிறார்கள். இதில் நீர் எந்த வகையென்று உமக்கே தெரியும்!!!

கல்வெட்டு said...

நாசிசம்,பாசிசம்,ரேசிசம் வரிசையில் பார்ப்பனீசம் (பார்ப்பனீயம் அல்லது பார்ப்பனீசம்.)

***

பார்ப்பனர்கள் ‍-> பார்ப்பனீயம் கடைபிடிப்பவர்கள்

கம்யூனசிம் -->கம்யூனிஸ்ட்
ரேசிசம்--> ரேசிஸ்ட்

***

பார்ப்பனீயம் என்பது பிறப்பால் வகுக்கப்படும் தமிழகச் சாதி அடுக்கு.
உச்சத்தில் இருக்கும் அய்யர்வாள் தொடங்கி ஆதிக்கச்சாதியாக அறியப்படும் வெள்ளார்(பிள்ளை) முக்குலத்தோர் முதல் இன்னபிற‌....

சாதியவாதியாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் எல்லா சுயநலவாதிகளும் பார்பனர்களே என்பது எனது கருத்து.

**
தமிழகத்தில் பார்ப்பனீயத்தின் கொடிய விளைவுதான் தீண்டாமை.பெரியார் வராமலிருந்தால் இன்னும் தமிழகப் பெண்களில் சிலர் 'முலை'வரிகட்டிக் கொண்டுதான் இருப்பார்கள்.

**

தாமஸ் பார்பரும், எலிசெபெத் கார்டனுரும், பில் கார்ப்பென்டரும் தீண்டாத்தகாதவர்கள் அல்ல. அது குடும்பப்பெயர்.
'தாமஸ் பார்பர்' சர்ச்சில் போதகராக இருக்கத் தடையோ தீண்டத்தகாத மனிதரோ அல்ல. ஆனால் தமிழகம் / இந்துமதம் கண்டுபிடித்த பார்ப்பனீசம் (நாசிசம்,பாசிசம்,ரேசிசம் வரிசையில் ) பிறப்பால் பலரை தீண்டத்தகாதவர்களாக ஞானஸ்தனாம் செய்கிறது.

**

பார்ப்பனீயச்சுவர் இன்னும் உத்தப்புரத்தில் உள்ளது. அதை எடுக்கப்போராடுவது அய்யர்வாள் இயக்கங்களோ அல்லது தேவர்மார் இயக்கங்களோ அல்லது கப்பலோட்டிய தமிழன் இயக்கங்களோ அல்லது காமராஜர் இயக்கங்களோ இல்லை என்பதறிக. கண்டதேவித்தேரும் , மேலவளவு இன்னும் பார்ப்பனீசத்தால் பீடிக்கப்பட்ட இடமாகவே உள்ளது.

**

திருமாவும், டாக்டர் கிருஷ்ணசாமியும் வேறுபடும் புள்ளி அதே பாழாய்ப்போன பார்ப்பனிசம். இவர்களை வைத்து கல்லாகட்டும் ராமதாசும் டாக்டர் சேதுராமனும் வேறுபடும் புள்ளி அதே பார்ப்பனீசம்.

நானும் ரவுடிதான் என்று அய்யர்வாள் மாநாட்டில் கர்ஜித்த கதைஎழுதி சுஜாதா என்பவ‌ரும், முந்தாநாள் முதல் 'வீரமறத்தியாக' மாறிய முன்னாள் 'ஆச்சி மனோரமா' போன்றோரின் உண்மைக்குணங்களை வெளிக்கொணர்வதும் சாதீய தூபங்கள்தாம்.

முந்தாநாள் முதல் 'வீரமறத்தியாக' மாறிய முன்னாள் 'ஆச்சி மனோரமா'
http://thatstamil.oneindia.in/movies/heroines/2009/09/05-manorama-gives-new-title-herself-veera-marathi.html

**

பார்ப்பனீசம் (நாசிசம்,பாசிசம்,ரேசிசம் வரிசையில் )இருக்கும்வரை தீண்டாமை இருக்கத்தான் செய்யும்.
வெளிப்பார்வையில் கொண்டை மாறியிருக்கிறது ஆனால் உள்மனக்கோரமான பூணூல் அப்படியேதான் உள்ளது.

அடிக்குறிப்பு 1:
-------------
பூணூல் என்பதைக் குறியீடாகவே சொல்கிறேன். பிள்ளை/முதலி/முக்குலத்தோர் ...இன்னபிற சாதியப்பிரிவுகள் பூணூல் அணியாவிட்டாலும் மனதளவில் அதே பார்ப்பனீச வக்கிரத்துடன்தான் உள்ளார்கள்.

அடிக்குறிப்பு 2:
-------------
நிகழ்காலத்தில் தீண்டாமை, சாதிப்பாகுபாடு பார்க்காதவர்கள் எந்த சாதியின் வழித்தோன்றல்களாக இருந்தாலும் அவர்கள் பார்ப்பனீசத்தில் இருந்து விடுபட்டவர்களாகவே நான் கருதுகிறேன்.

அடிக்குறிப்பு 3:
-------------
சாதியால் அழிக்கப்பட்ட/ஒடுக்கப்பட்ட ஒரு இனத்திற்கு அதே சாதியை வைத்துத்தான் இட ஒதுக்கீட்டுக்காக அடையாளம் காணப்படவேண்டியது கட்டாயம்.விசயகாந்த பாணியில் யாரும் அதைக் குழப்பிக்கொண்டால் நான் பொறுப்பல்ல.

Prabhu said...

எல்லாரும் ஹிந்தி கத்துக்கறதுல நமக்கும் நாட்டுக்கும் நல்லதுதான்!
நாடு ஒரு பொது மொழியில்லாம அங்க அங்க தேங்கி நிக்கறத உணருகிறீர்களா?

இனியா said...

"பைபிள் என்றாலே புத்தகம் என்று தான் அர்த்தம், தமிழில் விவிலியம் என்று சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன், இதன் மூல மொழி ஹீப்ரு,யூத மக்களால் பேசப்படும் மொழி"

Only the old testament was written in Hebrew. The new testament that describes the life of Jesus was written in greek.

குடுகுடுப்பை said...

வாலுக்கு முதுகு பெரிசோ.

சூர்யா said...

தங்களக்கு நேரம் கிடைத்தால், "எங்கே பிராமணன்" என்ற சோ எழுதிய புத்தகம் படிக்கவும். அங்கே படித்த சில வரிகளை இங்க பதிவு செய்கிறேன்.. "பார்பீனியம் என்பது ஒரு வாழ்வுமுறை" . இதிகாசங்களோ இல்லை கற்பனையோ எனக்கு தெரியாது, விஸ்வாமித்ரர் ஒரு ஷத்ரியர் ஆக இருந்தாலும் அவரை ஒரு பிராமினாகதான் கூறுகிறார். சோவின் எழுத்துப்படி , நல்ல ஒழுக்கங்களுடன் வாழ்ந்தால் அவர் பிராமின் ஆகலாம் என்கிறார். இப்போது இருப்பவர்கள் பிராமினா என்றால் எனக்கு தெரியாது. மற்றபடி அதை வைத்து ஜாதி பிரிவுகளை உண்டாகியது மனிதனின் அதிகார போதைக்குதான். நல்ல குடிதண்ணீர் எங்கு கிடைத்தாலும் பருகலாமே. அது நம் அப்துல்லா அண்ணன் வீட்டில் இருந்தாலும் சரி, இல்லை ஒரு பீட்டர் வீட்டிலும் இறந்தாலும் சரி.

பல கடற்கோளை பார்த்தாகி விட்டது "எம் தமிழ்" இந்த கபில் எம்மாத்திரம் ....

முக்கியம்: நான் பிராமின் இல்லை, :-). பிராமின் supporterum இல்லை. படித்ததை பரிந்துக் கொள்கிறேன் அவ்வளவே.

ஹேமா said...

மொழி என்பது ஒலி வடிவ தகவல் தொடர்பு சாதனம் மட்டுமே! நீங்க சொன்னது இது சரி.மந்திரம் என்பது அது எந்த மொழியானாலும் அது ஒரு ஓசை.இந்த ஓசையை இடையறாது சொல்லும் போது மனதின் எல்லா எண்ணங்களும் ஒரு கட்டத்தில் அடங்கி, மனம் என்பதே நாம் திரும்பத் திரும்ப சொல்லும் இந்த மந்திரச் சொல் மட்டுமே என்கிற நிலையை எய்துகிறது.

இப்படி நம் மனம் என்பதே ஒரு மந்திரச் சொல்லாகிவிட்ட நிலையில், அதற்கேற்ற அதிர்வலைகள் உருவாகத் தொடங்குகின்றன. அந்த அலைகள் முதலில் நம்மைச் சுற்றி மட்டுமே பரவ ஆரம்பிக்கிறது. பின்னர் அது வட்டவட்டமாய் விரிவடைந்து கொண்டே போகிறது. அப்படிப் போகும்போது பிற எண்ண அலை கள் நம்மைத் தாக்காதபடி ஒரு கவச மாகவும் அது அமைந்து விடுகிறது.இப்படி விரிவடைந்து கொண்டே போகும் அந்த அதிர்வலை ஓம் நமசிவாய என்பதாக இருந்தால்,...

கலாட்டாப்பையன் said...

\\நல்ல ஒழுக்கங்களுடன் வாழ்ந்தால் அவர் பிராமின் ஆகலாம் என்கிறார். //

அப்படி என்றால் சோவின் கூற்று படி மற்ற ஜாதி காரர்கள் நல்ல ஒழுக்கம் இல்லாதவர்கள் என்றே அர்த்தம் தொனிக்க படுகிறது. இதை தான் பிராமின்களின் திரிபு வதாம் என்கிறோம்

அது சரி(18185106603874041862) said...

//
மொழி எப்படிடா மருத்துவமாகும், ஓம் என்தற்கும் பூம் என்பதற்கும் கிட்டதட்ட ஒரே உச்சரிப்பு தானே வருகிறது! அப்படியே இருந்தாலும் தமிழ் பேசும் போது உள் செல்லும் காற்று மருத்துவ வேலைகள் செய்யாதா?
//

எல்லாரும் கேட்க வேண்டிய கேள்வி...ஓமில் ஆரம்பித்து அறுபது லட்சம் தடவை ராமன் பெயரை எழுதினால் ஐ.ஏ.எஸ். ஆகலாம் என்றெல்லாம் கதை இருக்கிறது.....அதை எந்த மொழியில் எழுதுவது என்று தான் எனக்கு தெரியவில்லை... நாம கஷ்டப்பட்டு எழுதி பாவம் ராமனுக்கு தமிழ் தெரியாட்டி என்ன புண்ணியம்?? :0)))

Anonymous said...

//எல்லாரும் ஹிந்தி கத்துக்கறதுல நமக்கும் நாட்டுக்கும் நல்லதுதான்!
நாடு ஒரு பொது மொழியில்லாம அங்க அங்க தேங்கி நிக்கறத உணருகிறீர்களா?//

எல்லாரும் ஒரே மதமா இருந்தாலும் நல்லதுதான். சண்டை சச்சரவு இருக்காது. எல்லாரையும் எந்த "பொது மதத்துக்கு" மாறலாம்னு கபில் சிபல் கிட்ட இருந்து இன்னொரு அரசு ஆணையை வாங்கீட்டு வாங்க.

T.V.ராதாகிருஷ்ணன் said...

உங்களை ஒரு தொடர் பதிவிற்கு அழைத்திருக்கிறேன்.என் பதிவை பார்க்கவும்

பிரபாகர் said...

நண்பா,

தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்ல மாட்டேன் என முடிவு செய்தால் இந்தி தேவையில்லை. வெளி மாநிலத்துக்கோ அல்லது வெளி நாட்டுக்கோ செல்லும்போது இந்தி மிக உறுதுணையாய் இருக்கும். டெல்லியில் இரு வருடம், வெளிநாட்டில் 6 வருடம் இருக்கும் அனுபவத்தில் சொல்கிறேன். உணர்ட்ந்து படிக்க வேண்டும், திணித்தல் என்றுமே பலனை தராது.

பிரபாகர்.

கோவி.கண்ணன் said...

////ஆனாலும் இவர்கள் பிரார்த்தனைக்கு உருது மட்டுமே பயன்படுத்துகிறார்கள்! இவர்கள் கடவுளுக்கு உருது மட்டும் தான் தெரியும் போல! அதை பற்றி பிறகு விவாதிக்கலாம், ஏனென்றால் இவர்கள் உருதை மொழியாக தான் பார்க்கீறார்கள், உருது என்ற மொழியை மந்திரம் என்று எங்கேயும் பீலா விடவில்லை!,
(இவர்களுக்கும் பார்பனீய சிந்தனை உண்டா இல்லையான்னு இவுங்க தான் வந்து சொல்லனும்!)
//

உருது அல்ல, அரபு.

அரபு மொழி இறைவணக்கத்துக்கு என்று பொதுப்படுத்தும் போது உலகில் இருக்கும் எந்த ஒரு இஸ்லாமியரும் எந்த மசூதியிலும் மொழித் தடை இல்லாமல் தொழ முடியும் என்கிற காரணங்களை இஸ்லாமியர்கள் சொல்லுகிறார்கள்.

இறைவணக்கத்திற்குத் தேவை ஜனகனமன போல ஒரு ஸ்லோகம், ஜனகனமன மனப்பாடம் செய்துள்ளவர்களுக்கு ஓரளவுக்கு அதன் பொருளும் சொல்லப்பட்டு இருக்கும். ஆனால் ஜனகனமன இந்தியாவெங்கும் பாடப்படும்போது அதன் பொருளில் லயத்து ஒன்ற இந்தி படிக்க வேண்டுமா ? என்கிற கேள்வி வருகிறது அல்லவா ? உலகெங்கிலும் மதராசா பள்ளிகள் மூலம் (அரபுத் தொழுகைக்காக ? ) அரபு சொல்லிக் கொடுப்பதும் இப்படிப் பட்ட புரிதலாகத்தான் தெரிகிறது.

தொழுகையைத் தவிர்த்து வேறு என்ன காரணங்களுக்காக அரபிப் பள்ளிகள் இயங்குகின்றன ? தொழுகைக்காக இஸ்லாமை ஏற்றுக் கொண்டார்கள் என்கிற ஒரு காரணத்திற்காக இஸ்லாமியர்கள் அனைவரிடமும் ஒரு மொழி வலிந்து திணிக்கப்படுவது
இஸ்லாமியர்கள் விளக்குவார்களா ?

எனக்கு தெரிந்து சமஸ்கிரதம் முன்னெடுத்துச் சொல்லப்படுவதற்கும் அரபி முன்னெடுத்துச் செல்ல்லப்படுவதற்கும் பெரிய வேறுபாடு தெரியவில்லை. சமஸ்கிரதக்காரார்கள் தேவமொழி என்று சொல்லுகிறார்கள், அரபிக்காரர்கள் சொல்லுவது இல்லை. ஆனால் மொழி மேன்மைப் போற்றும் அரசியல் ஒன்று தான்

Anonymous said...

thalaippe thavaru. china ilangai varai vandhachu. inimel mandarin dhan padikkanum.

Anonymous said...

edhirkalathil mandarin padikkati velai kedaikkadham

மேவி... said...

என் கருத்தை சொல்லி மீண்டும் ஒரு முறை "போடா லூசு" என்று பட்டம் வாங்க நான் தயாராக இல்லை........

மேவி... said...

ஐயா அனானி,

தயவு செய்து உங்கள் பெயருடன் பின்னோட்டம் போடுங்க ......

பித்தனின் வாக்கு said...

என்ன அண்ணா மப்பு ரொம்ப ஓவரா?
எனக்கு பார்பனீயம் என்றால் என்ன? அது எந்த நூலில் வலியுறுத்தி இருக்கிறது? அதன் விதிகள் என்ன? பின் பார்ப்பனியம் எப்பொழது யாரால் சொல்லப்பட்டது? என விளக்குங்கள். ஒரு பதிவு போட்ட நல்லா இருக்கும். (உண்மை,தீக்கதிர் விளக்க அல்வா வேண்டாம்) மூல விளக்கம் வேண்டாம்.
மற்றும் தற்போதைய வீரத்தமிழ்ர் பண்பாடாம் எதிர்த்து அடிக்காத எதிர்த்து போசாதவர்கள் துரத்தி அடிப்பது, வழக்கம் போல நமது வால்பையனும் தமது வீரத்தை காட்டி இருக்கிறார்.
அவருக்கு வீரத்சிந்தனை செம்மல் வால் பையர் என்னும் பட்டம் தருகிறேம்.

Romeoboy said...

ஒண்ணுமே புரியலையே !!!!!

Anonymous said...

நல்ல பதிவு தான். ஆனால் பார்ப்பானியம் அழிந்து விட்டது என்று தான் நான் நினைக்கிறேன்.

Anonymous said...

அவங்க அந்த காலத்துல செய்த தவறுகள் பல இருக்கின்றது. ஆனால் இப்ப எல்லாம் அந்த மாதிரி எல்லாம் இல்லன்னு நினைக்கறேன். இன்னும் 2 தலைமுறையில் ஜாதி முறை ஒழிந்து விடும். என்பது என் கருத்து.

dondu(#11168674346665545885) said...

//உலக சரித்திரத்திலேயே இம்மாதிரி ஒரு மொழிக்கு புத்துணர்வு தருவது இதுதான் முதல் முறை.//

அதை தான் சமஸ்கிருதத்திற்கும் கடைப்பிடிக்கிறார்களோ!

ஹீப்ருவை பாதுகாக்க வேண்டியது யூதர்களின் கடமை!//
மீண்டும் புரிந்து கொள்ளாமல் எழுதுகிறீர்கள். இஸ்ரவேலில் ஹீப்ரூ தினசரி பேச்சு மொழி. எல்லா தளத்த் மக்களும் பேசுகின்றனர்.

அதன் நிலையையும் வட மொழி இப்போது இருக்கும் நிலையையும் ஒப்பிடவே இயலாது.

ஹீப்ரூ இப்போது மிகவும் உயிருல்ள மொழி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

ஜாதியை பற்றி ஆரம்பித்து வைப்பதே பள்ளிகளில் தான். எனக்கு 6ம் வகுப்பு படிக்கும் போது டீச்சர் எங்க கிளாஸ்ல எல்லோர்ட்டயும் என்ன ஜாதின்னு கேட்டாங்க. அப்ப எனக்கு பதில் சொல்ல தெரியல. வீட்டில போய் கேட்டு தெரிஞ்சுக்கிட்டேன். ஸ்கூல்லயே இப்டி பண்ணலாமா?

Anonymous said...

அந்த காலத்துல இருந்தவங்க எல்லாம் படிக்காதவங்க. வெளி இடங்களுக்கு போகாதவங்க. அதுனால ஒரு ப்ராட் மைண்ட் அவங்கட்ட இல்லாம இருந்தது. இப்ப அப்டி கிடையாதுல்ல. மனிதர்கள் அனைவரும் ஒன்னு தான். நம்ப தாத்தா காலத்துல இருந்த அளவுக்கு ஜாதி வெறி நம்ப அப்பா காலத்துல இல்ல. நம்ப அப்பா காலத்துல இருந்த அளவுக்கு நம்ப காலத்துல இல்ல. இப்டியே குறைச்சுக்கிட்டே தான போகும்.

குழலி / Kuzhali said...

//MAHA said...
ஜாதியை பற்றி ஆரம்பித்து வைப்பதே பள்ளிகளில் தான். எனக்கு 6ம் வகுப்பு படிக்கும் போது டீச்சர் எங்க கிளாஸ்ல எல்லோர்ட்டயும் என்ன ஜாதின்னு கேட்டாங்க. அப்ப எனக்கு பதில் சொல்ல தெரியல. வீட்டில போய் கேட்டு தெரிஞ்சுக்கிட்டேன். ஸ்கூல்லயே இப்டி பண்ணலாமா?
//
அப்படிங்களா மகா, கொஞ்சம் இந்த பதிவுகளை படிச்சி பாருங்க, பின்னூட்டங்களையும் சேர்த்து படிச்சி பாருங்க

http://kuzhali.blogspot.com/2006/06/blog-post_16.html

கல்வெட்டு said...

மஹா ,
அன்று உங்கள் வீட்டில் சாதி கடைபிடிக்கப்பட்டு இருந்ததால்தான் உங்களால் டீச்சரின் கேள்விக்குப்பதில் சொல்ல முடிந்தது. என்பதை நினைவில் கொள்க.

"சாதியா ? அப்படி ஏதும் நமக்கு இல்லையே கொழந்தே. எல்லாரும் மனுச சாதிதான். உன் டீச்சரிடம் போய்ச் சொல்லு, என்று உங்கள் பெற்றோர்கள் சொல்லி இருந்தால். டீச்சருக்கு பிரச்சனையாகி, சரியான சட்டத்தகவலை அடைய உதவி இருக்கும்.

ஏதோ டீச்சர் கேட்டதால் உங்கள் பெற்றோர்கள் உடனே ஒரு சாதியில் சேர விண்ணப்பித்து, அன்று முதல் அந்தச் சாதியில் ஐக்கியமாகிவிட்டார்கள். எல்லாத்துக்கும் காரணம் அந்த டீச்ச்சர்தான் என்று சொல்வது போல உள்ளது. :-)))

***

"ஸ்கூல்லயே இப்டி பண்ணலாமா?" என்று உங்கள் கடந்த காலத்தை நினைத்து வருந்த வேண்டாம்.

தமிழக அரசு இந்தப் பிரச்னை குறித்து வெளியிட்ட அரசாணை எண்.1210 தேதி 02.07.73’. இந்த அரசாணையின்படி பள்ளிச் சான்றிதழ்களில் ஜாதி, மதம் போன்ற இடங்களை காலியாக விடவோ அல்லது இல்லை என்று குறிப்பிடவோ உரிமை உண்டு

உங்களுக்கோ அல்லது உங்களின் குழந்தைக்கோ யாராவது சாதி/மதம் என்ன என்று கேட்டால் இல்லை என்று சொல்ல உங்களுக்கு எல்லா உரிமையும் உள்ளது.

நான் என்ன செய்வது அரசாங்கம் கேட்குது / பள்ளி கேட்குது என்று இனியும் புலம்பிக்கொண்டு இருக்க வேண்டாம்.

****

உங்களின் சாதி எதுவாகிலும், அதைத் தொடர்வதும், அடுத்த சந்ததிக்கு விட்டுச்செல்வதும் எல்லாம் உங்கள் கையில்.

சாதி உங்கள் சாய்ஸ !
http://kalvetu.blogspot.com/2007/09/blog-post.html

அடிக்குறிப்பு:
அப்படிச் சொல்லும் பட்சத்தில் உங்களுக்கு அரசாங்கததின் சாதி சார்ந்த சலுகைகள் கிடைக்காது. உங்களுக்கு அந்த சலுகைகள் தேவை இல்லை என்னும் நிலையில் சாதியைக் கழட்டி எரிவது மிகவும் சுலபம்.

மதி.இண்டியா said...

//அரபியாக இருந்தாலும் எந்த இஸ்லாமியரும் அரபியை மந்திரம் என சொல்ல கேள்விப்படவில்லை!//


அப்ப ஏன் மசூதிகளில் தமிழில் பிரார்த்திக்க கூடாது ? எல்லாம் தெரிந்த அல்லாவுக்கு தமிழ் தெரியாதுங்களா ?

அரபிகளுக்கு உலகில் மொத்தமாக அடிமைகள் தேவை , அதை இஸ்லாம் பெயரில் செய்கிறார்கள் .அவ்வளவுதான்

aurs said...

dai naye dont you know that quran is in arabic, god knows all language but human doesnt know all the language, if some one from other country come and want to pray he also needs to understand what we are saying while pray. it is just a common language using to pray, this is not like fucking tamil language, islam is internation religion not like Hindu, bastard if you dont know anything dont write, if you write anything you cannot survive

ஈரோடு கதிர் said...

தனிமனிதனுடைய வாழ்க்கையில் சாதி சிதைந்து வருகிறது... ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இருந்த சாதி.. சிதைந்து போவது வெறும் நூறு ஆண்டுகளில் நடந்துவிடாது, ஆனால் சிதைந்து போகும் என்பது உறுதி

Raju said...

இந்தியால சர்வாதிகார ஆட்சி வந்தா நல்லாருக்கும்னு தோணுது..!
நீங்க என்ன நினைக்கிறீங்க வால்..?

மேவி... said...

"aurs said...
dai naye dont you know that quran is in arabic, god knows all language but human doesnt know all the language, if some one from other country come and want to pray he also needs to understand what we are saying while pray. it is just a common language using to pray, this is not like fucking tamil language, islam is internation religion not like Hindu, bastard if you dont know anything dont write, if you write anything you cannot survive"


i think there is nothing to talk about the author here..... all u say is about the article oly...
pls mind ur words...

தினேஷ் said...

60 ... அப்பீட்டு

Deepa said...

வணக்கம்,
//சாராரை அடிமைப்படுத்தி அல்லது அறிவு ரீதியாக சிறுமைப்படுத்தி அடக்கி ஆளும் குணம்//
இதுக்கு Superiority Compex ன்னு சொல்லுவாங்க.. சாதி பெயரை குறிப்பிடுவது சரியல்ல ( உதா: பார்பனீய சிந்தனை )

//பார்பனர்களுக்கும், பார்பனீயத்திற்கும் நெருங்கிய சம்பந்தமுண்டு என்று நினைத்தீற்களேயானால் நான் அதை உயர்சாதியினர் என்று மாற்றுகிறேன்!///

இதுவும் indian andministrative முறையில் FC ன்னு சொல்லப்படர உயர் " சாதியை" தான் குறிக்கும்.

.. இல்லை இல்லைன்னு சொல்லியே.. "ஜாதி" யை மறக்க முடியாத்த மாதிரி ஏன் தினம் தினம் சுமக்கணும்"
இந்த சுமையை இறக்கிவைக்கலாமே
... I am sure we have more words in Tamil vocabulary to specify a certain "trait".. rather than give it a "caste-based-tag"

((... இதை எனக்கு சரியா தமிழில் சொல்ல தெரியலை. தப்பா சொல்லி, கரெக்டா எல்லாரும் தப்பா புரிஞ்சுக்க வேண்டாமேன்னு இங்கிபிஷ்லேயே சொல்லிட்டேன் ))

புலவன் புலிகேசி said...

தான் பெரியவன் என்று என்னும் எண்ணம் நீர் சொன்ன பார்ப்பனரிடம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது. பெரியார் சொன்ன தீண்டாமை இன்னும் ஒழியவில்லை. மனிதனிடம் என்று மனிதம் முழுமையாக பதியத் தொடங்குமோ அன்றுதான் இத்தகைய வேற்றுமைகள் ஒளியும். இத்தகைய எண்ணம் பார்ப்பனர்களிடம் மட்டும் இல்லை. அனைத்து சாதியினரிடமும் இருக்கிறது. பாரதியார் சொன்னது போல் "சாதி இரண்டொழிய வேறில்லை" என்ற எண்ணம் அனைத்து மக்களிடமும் வர வேண்டும். அப்போது தான் மனிதனுக்கு மனிதம் என்றால் என்னவென்று புரியும்.....

வரதராஜலு .பூ said...

யப்பாடி, வாலு எழுதனத ஃபுல்லா படிச்சி முடிக்க 4 நாள் ஆவும் போலிருக்கே. எங்கேர்ந்து இப்பிடி மேட்டர் புடிக்கறிங்க?

மேவி... said...

guys dont try to pull others legs..

healthy debates pls

கல்வெட்டு said...

Deepa,

// rather than give it a "caste-based-tag" //

Iyer and Iyangars are castes.

Parpanism –Parppanar are not caste based tag.

Parpanism –Parppanar are similar to concepts like....

Racism- Racist
Nazism –Nazis
etc.,

Deepa said...

கல்வெட்டு,வணக்கம்.

Then why is it that brahmins are always refereed to as paarparan.

This is what that lead me to belove paarparanisim to be caste-based-tag

PS:- in an attempt towarding trying to understand the words used under these-topics. I have no intention of offending / defending / criminalising anyone

Vidhoosh said...

65. ஹா ஹா ஹா.. பதிவு காமெடிதானே?? இல்ல சீரியஸா??

--வித்யா

சுரேஷ்குமார் said...

################
//MAHA said...
ஜாதியை பற்றி ஆரம்பித்து வைப்பதே பள்ளிகளில் தான். எனக்கு 6ம் வகுப்பு படிக்கும் போது டீச்சர் எங்க கிளாஸ்ல எல்லோர்ட்டயும் என்ன ஜாதின்னு கேட்டாங்க. அப்ப எனக்கு பதில் சொல்ல தெரியல. வீட்டில போய் கேட்டு தெரிஞ்சுக்கிட்டேன். ஸ்கூல்லயே இப்டி பண்ணலாமா?
//
அப்படிங்களா மகா, கொஞ்சம் இந்த பதிவுகளை படிச்சி பாருங்க, பின்னூட்டங்களையும் சேர்த்து படிச்சி பாருங்க

http://kuzhali.blogspot.com/2006/06/blog-post_16.html

#######################

மகா சொல்வது 100 க்கு 100 உண்மை.இந்த பதிவை பார்க்கவும்.
http://priyamudantamilan.blogspot.com/2009/09/blog-post.html

கல்வெட்டு said...

//Then why is it that brahmins are always refereed to as paarparan.//


Deepa,
There is no caste called Brahmins. Iyer, Ayyangra (vadakalai-thenkalai..) are castes.

Brahmin is one of a group/category based on Varnam.

http://www.ias.ac.in/jgenet/Vol87No2/171.pdf

All Groups and All caste who practice Varnam need to be identified as Parpanism –Parppanar.

வால்பையன் said...

//bastard if you dont know anything dont write, if you write anything you cannot survive//


முதன் முக்கிய விசயம் சமஸ்கிருத திணிப்பு!
அராபிக்கும், உருதுக்கும் நடந்தது தகவல் பிழை! அதனால் உங்க அல்லா வருத்தப்பட்டு உங்ககிட்ட வந்து அழுதார் என்று நினைக்கும் போது வருத்தமாக தான் இருக்கிறது!

ஆனாலும் உங்க அப்ரோச் எனக்கு பிடிச்சிருக்கு! ஈரோடு வாங்க 9994500540 இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க! நானும் வர்றேன்!
நீங்க ஒரு அப்பனுக்கு பிறந்திருந்தா என்னைய கொன்னுட்டு போங்க!

இல்லைனா மேல சொன்னது உங்களுக்கு நீங்களே சொல்லிகிட்டது!

நான் அப்படிதாண்டா எழுதுவேன்!

யோ வொய்ஸ் (யோகா) said...

எனக்கும் இந்த கேள்வி வந்ததுண்டு நம்மள படைச்ச கடவுளுக்கு ஒரு மொழி தான் தெரியுமா?

Deepa said...

கல்வெட்டு,

Thanks for the pdf.
I under understand that "brahmin" belongs to the [[The caste (varna) system has four ranked categories]]

But, would it be wrong to say that, in a more social sense, "brahmin - the varna category" is used to collectively describe "iyer caste & Aiyyengar caste".

In which case.. the "Brahmin - the varna" is a more synonymous replacement for "Iyer && Aiyyengar - castes"..
eventually giving the "caste shade to the varna

Note:- feels good to know that some is interested in a healthy & non-defamatory discussion. Thanks for that.

வால்பையன் said...

ஒரு நிமிசம் பதிவோட எடிட் போட் உருது என்று இருப்பதையெல்லாம் அராபிக் என்று மாற்றியிருக்க முடியும்! நேற்றே அது பற்றி பின்னூட்டங்களும் வந்து விட்டது! ஆனால் பின்னூட்டத்தில் பதில் சொல்லிவிட்டேன்!

மீண்டும் மீண்டும் அதே விசயத்தை எடுத்து பேசுபவர்கள் அதை பற்றி என்னுடய எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லனும்!

அடுத்த பதிவு இஸ்லாமியர்களுக்காகவே!

வால்பையன் said...

இந்த பதிவு சாதியியம் பற்றி பேச அல்ல!

நேற்று கூட ஒருவரிடம் அது பற்றி உரையாடியிருக்கிறேன்!

இந்த உரலில் பார்க்கலாம் என் பின்னுட்டத்தை

http://tamilvaasal.blogspot.com/2009/09/blog-post_10.html


தெளிவாக குறிப்பிட்டுள்ளேன்!
பார்ப்பனரல்லாத பார்பனீயத்தை முன் நிறுத்துபவர்களும் உண்டு!
பார்பனீயத்தை மதிக்காத பார்பனர்களும் உண்டு!

நீங்கள் யார்ன்னு முதலில் உங்களை கேட்டு கொள்ளுங்கள்!

அதன் பிறகு தான் நீ எப்படி என்னை சொல்ல போச்சுன்னு சண்டைக்கு வரணும்!

வால்பையன் said...

மகா!

எனக்கு விவரம் தெரிந்து நான் சாதி சொல்லி கொண்டதில்லை!

என் மகள் நான்கு வருடமாக பள்ளியில் படிக்கிறாள்! சாதி சான்றிதழ் கேட்டப்போது, கட்டாயப்படுத்தினால் கேஸ் போடுவேன் என்று சொல்லியிருக்கிறேன்!

என் தலைமுறையில் இனி சாதி இருக்காது!

கல்வெட்டு said...

Deepa,
Varnam is an old and wrong concept.
Castes and Un-Touchability are basis for that Varnam.

When you say ‘I am XXX caste” then unknowingly you put yourself in the Varnam's ladder. By sitting in "one" position you automatically entitled to have "upper" and "lower" levels above and below you. since it is based on birth and that child can not do anything on this matter IT IS INHUMAN

**

Tamil’s caste's core idea is Un-Touchability it is not like western countries last name concept.

**

The reason Iyer and Iyengars are getting angry for this word "Parpanism" (like Racism and Nazism) is simply because they identify themselves as the sole proprietor all Vedas and its Varnam concepts.

Once they start moving away from this proprietorship and practicing they may get rid of this "Parpanism"

Deepa said...

Kalvettu
//By sitting in "one" position you automatically entitled to have "upper" and "lower" levels above and below you//
No denying this fact, basic principles of physics
//based on birth and that child can not do anything on this matter IT IS INHUMAN//
yes indeed.. and i doubt anyone in the right mind will contest this.


But this does not asnwer my question. It has been my understanding that Tamil population identifies "Parpanisim == brahmin". .. isnt it

Eswari said...

//சென்ஷி said...
//ஓம் என்தற்கும் பூம் என்பதற்கும் கிட்டதட்ட ஒரே உச்சரிப்பு தானே வருகிறது!//

இதுவும் தப்புத்தான்.. :))

வாக்கிய அமைப்பு எழுதி வைச்சு பார்க்கறதுக்கும் பேச்சு மொழிக்கும் உள்ள வித்தியாசத்தை முதல்ல கத்துக்குங்க//

நான் சொல்ல நெனைச்சேன். இவங்க சொல்லிட்டாங்க.

ஓம் சொல்லும் முறையும், அதன் பலன்களும், ஏதேனும் மூச்சு பயிற்சி பற்றி தெரிந்திருந்தால் உங்களுக்கும் புரிந்து இருக்கும்

வால்பையன் said...

தீபா!

பார்பனீசத்தை பார்பனர்கள் மட்டுமே கடைப்பிடிக்கிறார்கள் என்பதில் எனக்கு உடன்பாடில்லை!, நான் கொடுத்துள்ள லிங்கில் கூட அதை பற்றி பேசியுள்ளேன்!

நான் சொல்ல வந்தது உயர்சாதியியம் என்ற கூற்றே பார்பனீயம் தான்!

சாதி வெறி இல்லாத பார்பனர்களும் இருக்கிறார்கள், அதனால் ஒட்டு மொத்த சமுதாயத்தையும் குறை சொல்ல விரும்பவில்லை!

உயர்சாதி திமிரில் திரியும் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே!, அந்த எண்ணம் இல்லாதவர்கள் தயவுசெய்து டென்ஷன் ஆக வேண்டாம்!

Eswari said...

//என் மகள் நான்கு வருடமாக பள்ளியில் படிக்கிறாள்! சாதி சான்றிதழ் கேட்டப்போது, கட்டாயப்படுத்தினால் கேஸ் போடுவேன் என்று சொல்லியிருக்கிறேன்!//

உங்கள் மகள் பத்தாம் வகுப்பு படிக்கும் வரை நீங்கள் இப்படி பேசலாம். அதற்க்குமேல் மேற்படிப்பு படிக்கும் போது சாதி சான்றிதல் இல்லாமல் எந்த பள்ளியிலும் சேர்க்க முடியாது. நீங்க அப்படி படித்திருந்தால் அரசாங்க சட்டத்தை மீறிய அந்த பள்ளிகளையும், கல்லுரிகளையும் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.

Deepa said...

வால்பையன்
I understand & appreciate that you provided a very good definition of what you ment.. நான் உங்களை குத்தம் சொல்லலை..

I was only wondering why we are still using tags that identify caste [ varna] to represent such a "behaviour / attitude"

நீங்க குடுத்த definition க்கு Superiority complex ன்னு சொல்லுவாங்க...

வால்பையன் said...

//ஓம் சொல்லும் முறையும், அதன் பலன்களும், ஏதேனும் மூச்சு பயிற்சி பற்றி தெரிந்திருந்தால் உங்களுக்கும் புரிந்து இருக்கும் //

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

இதுக்கு தான் இந்த போஸ்டே!

கிராமத்துல நூறு வயசுக்கு மேல வாழ்ந்த வாழ்ந்துகிட்டு இருக்குற யாருக்கும் மூச்சு பயற்சின்னா என்னான்னே தெரியாது!

உங்க(அவுங்க) வியாபாரத்துக்கு வேற மெத்தேடே கிடைக்கலையா?
மக்களை ஏமாற்றுவது தப்புன்னு தெரியலையா உங்களுக்கு?

Eswari said...

Farward class என்று விண்ணப்பங்களில் குறிப்பிட்டால் எந்த சாதி சான்றிதலும் தேவை இல்லை

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

//என் மகள் நான்கு வருடமாக பள்ளியில் படிக்கிறாள்! சாதி சான்றிதழ் கேட்டப்போது, கட்டாயப்படுத்தினால் கேஸ் போடுவேன் என்று சொல்லியிருக்கிறேன்!

என் தலைமுறையில் இனி சாதி இருக்காது!//

நானும் அதை வழி மொழிகிறேன்.

கல்வெட்டு said...

//It has been my understanding that Tamil population identifies "Parpanisim == brahmin". .. isnt it//

Deepa,
I agree.
All I am trying to say is that approach is not correct and we need to change our view/perspective in this direction.

Parpanism –Parppanar
Racism- Racist
Nazism –Nazis

The reason is, other castes like Theevar,Pillay,Muthaliyaar,Vanniyar etc., try to rule other lower castes (lower with ref. to varnam). The damage they do is more visible than Iyer and Iyengar but that doesn't mean Iyer and Iyengar are left their
Varnam practice. If they do, then they are not Iyer and Iyengar any more. :-))

getting out of that ladder is first step for all.

**

Varnam practice is done by all the groups either knowingly or unknowingly. Iyer and Iyengar becomes the first victim because of their close relationship with vedam/varnam.

வால்பையன் said...

//நீங்க குடுத்த definition க்கு Superiority complex ன்னு சொல்லுவாங்க... //

அதோட்டு அடுத்தவனுக்கு தாழ்வு மனப்பான்மையையும் சேர்த்து உருவாக்குவது! அதாவது உனக்கு அது தெரியாது, இது தெரியாது! எனக்கு தான் எல்லாம் தெரியும் என்பது போல்!

ஒருவன் தன்னை புத்திசாலி என்று சொல்லி கொள்வது “உயர்வு மனப்பான்மை”

அடுத்தவனை முட்டாள் என்று சொல்வது “பார்பனீயம்”

வால்பையன் said...

//Farward class என்று விண்ணப்பங்களில் குறிப்பிட்டால் எந்த சாதி சான்றிதலும் தேவை இல்லை //

சாதி என்ற அமைபிற்கும் எனக்கும் எந்த சம்பந்தமில்லை என்று சொல்கிறேன்!

ஒரு இஸ்லாமிரை போய் நீங்கள் என்ன சாதி என்று கேளுங்கள், உதைக்க வருவார்!

Eswari said...

//கிராமத்துல நூறு வயசுக்கு மேல வாழ்ந்த வாழ்ந்துகிட்டு இருக்குற யாருக்கும் மூச்சு பயற்சின்னா
என்னான்னே தெரியாது!//


கிராமத்து காரங்க செய்யுற வேலை எல்லாம் உங்களால செய்ய முடியுமா?
கடினமான உடல் உழைப்பின் மூலமே அவங்க ஆரோக்கியமா இருக்கிறாங்க. நம்பலை போல நல்லா தின்னுட்டு Computer முன்னாடி உட்கார்ந்தே பொழுதை கழிக்களை. மூச்சு பயிற்சி நம்பலை போன்றவர்களுக்கே தேவை.

வால்பையன் said...

//Parpanism –Parppanar
Racism- Racist
Nazism –Nazis//

நீங்க சொல்ரதை பார்த்தா சைக்கியாட்ரிக் டாக்டர் தான் சைக்கோவா இருக்கனும் போல!

இம்மாதிரியான இஸங்கள் அவர்களது மனநிலையை பொறுத்தது!

நாஜிஸ்லயும் நல்லவர்கள் இருந்ததற்கு ஆதாரங்கள் உண்டு!

கல்வெட்டு said...

//நீங்க அப்படி படித்திருந்தால் அரசாங்க சட்டத்தை மீறிய அந்த பள்ளிகளையும், கல்லுரிகளையும் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.//

ஈஸ்வரி,
அரசாங்க சட்டத்தை தெரிந்து கொள்வது முக்கியம்.

தமிழக அரசு இந்தப் பிரச்னை குறித்து வெளியிட்ட அரசாணை எண்.1210 தேதி 02.07.73’. இந்த அரசாணையின்படி பள்ளிச் சான்றிதழ்களில் ஜாதி, மதம் போன்ற இடங்களை காலியாக விடவோ அல்லது இல்லை என்று குறிப்பிடவோ உரிமை உண்டு.

இதை மீற தமிழகத்தில் எந்த பள்ளி /கல்லூரிக்கும் உரிமை இல்லை.

வால்பையன் said...

//கிராமத்து காரங்க செய்யுற வேலை எல்லாம் உங்களால செய்ய முடியுமா?
கடினமான உடல் உழைப்பின் மூலமே அவங்க ஆரோக்கியமா இருக்கிறாங்க. நம்பலை போல நல்லா தின்னுட்டு Computer முன்னாடி உட்கார்ந்தே பொழுதை கழிக்களை. மூச்சு பயிற்சி நம்பலை போன்றவர்களுக்கே தேவை. //


கணினி முன் அமர்ந்து அரட்டையடிப்பதற்கும், மூச்சு பயிற்சி செய்வதற்கும் எனக்கு பெரிய வித்தியாசம் தெரியவில்லை!

ஒரு கிராமத்தானின் உழைப்பை, உடற்பயிற்ச்சியோடு ஒப்பிடலாம், மூச்சி பயிற்சியோடு ஒப்பிடுவது சிறுபிள்ளை தனமாக தெரிகிறதே தோழி!

கல்வெட்டு said...

// நீங்க சொல்ரதை பார்த்தா சைக்கியாட்ரிக் டாக்டர் தான் சைக்கோவா இருக்கனும் போல!

இம்மாதிரியான இஸங்கள் அவர்களது மனநிலையை பொறுத்தது!//


:‍)))
இல்லை வால்.
இது ஒருவகையான இசம்தான்

நாசிசம் என்பது ஒரு இன அழிப்பினை நோக்கமாக கொண்ட ஒரு கருத்தாக்கம்.

Nazism -Nazi Party Hitler's beliefs in German racial superiority which rejected liberalism, democracy, and human rights. It emphasized the inequality of individuals.

அய்யர் அய்யங்கார் சாதிகள் மன ரீதியில் "இது பத்தினி வாழும் வீடு" அடுத்தவர்களை பயமுறுத்துகிறது என்றால் தேவர்,வன்னியர் வகைகள் ஆதிக்க உணர்வால் பிறரை கேவலப்படுத்துகிறது. கண்டதேவி, மேலவளவு..

பார்பனிசத்தை ஒரு கேவலமான இசமாகப் பார்க்காதவரை அதை எல்லா மட்டத்திலும் களை எடுக்க முடியாது.

வால்பையன் said...

//
பார்பனிசத்தை ஒரு கேவலமான இசமாகப் பார்க்காதவரை அதை எல்லா மட்டத்திலும் களை எடுக்க முடியாது. //

அதை நான் மறுக்கவில்லையே

பார்பனிசத்தை கேவலமாக பார்க்கலாம், எதிர்க்கலாம், ஆனால் எல்லா பார்பனர்களையும் அல்ல!

பார்பனர்களுக்கு மேல் புரையீடி கிடக்கிறது உயர்சாதிய்யியம் மற்ற சாதியினரிடத்தில்,

களத்தில் இறங்கி களையை பிடுங்காமல் வரப்பில் நின்று களையை பிடிங்குவேன் என்பது நல்ல விளைச்சலை கொடுக்காது!

வால்பையன் said...

//10 வருடம் முன்பு இருந்த அண்டை அயல் நட்புறவு முஸ்ஸீம்கள் இன்று இல்லை ,(உங்கள் அனுபவம் சொல்லுமே , ?)//

நிஜமான நிச்சயமான உண்மை நண்பரே!
எனக்கு ஆரம்பத்தில் இருந்தே இஸ்லாமிய நண்பர்கள் அதிகம்!
ரம்ஜானுக்கு, பக்ரீத்துக்கு வீடு தேடி பிரியாணி வரும்!
அவர்கள் வீட்டிற்கும் என்னை அழைத்து செல்வார்கள்!

சில வருடங்களாக மற்ற நண்பர்களை தனிமைப்படுத்துவதாகவே தெரிகிறது!
மூளைச்சலவை இந்த காலகட்டத்தில் அதிகம் போல!

எப்படியே நண்பர்கள் நல்லா இருந்தா சரி!

அ.மு.செய்யது$ said...

நான் கோவி அவர்களுக்கு மட்டும் பதில் சொல்லி விடுகிறேன்.காரணம் அவர் இஸ்லாத்தின் மீது தீராப் பற்றும்
காதலும் கொண்டவர்.

அண்ணே அரபி மதராஸாக்கள் இருப்பதற்கு காரணம் தொழுகைக்காக மட்டும் இல்லை. குர் ஆன் அரபியில்
இருப்பதாலும் தான்.

மேலும் உண்மையான மார்க்கத்தை போதிக்கும் மதராஸாக்கள் அரபியை மட்டுமல்ல.மேலும் சில நல்ல விஷயங்களையும் கற்று தருகிறார்கள்.

அக்கீதா இஸ்லாத்தின் கொள்கைகள்
அஹ்லாக் ஒழுக்கங்கள்
மஸாயில் சட்டதிட்டங்கள்
தாரிக் வரலாறு
தர்ஜூமா குர் ஆன் மொழிபெயர்ப்பு ( தமிழில் )

என்று ஒரு சிலபஸ்ஸே உண்டு.நானும் அதுபோன்ற "நல்ல" மதரஸாவில் ஓதி, இந்த சப்ஜெக்டுகளில் மாநில அளவில்
தொடர்ந்து 3 வருடங்கள் முதல் மதிப்பெண்ணும் பெற்று விட்டேன்.( அனைத்தும் தமிழில் )ஆதாரத்தோடு
நிரூப்பீக்கவும் தயார்.

என்னுடைய பெற்றோர்களுக்கு, அரபியில் ஒரு எழுத்து கூட தெரியாது.அவர்கள் 5 வேளை தொழுகையை கடைபிடிபவர்கள் தான்.

//இஸ்லாமியர்கள் அனைவரிடமும் ஒரு மொழி வலிந்து திணிக்கப்படுவது
இஸ்லாமியர்கள் விளக்குவார்களா ? //

சோ..இங்கு யார் மீதும் எந்த ஒரு மொழியும் வலிந்து திணிக்கப்பட வில்லை.

விண்டோ ஷாப்பிங் செய்வதை விட கொஞ்சம் கடைக்கு உள்ளயும் போய் பாக்கணும் கோவி சார்.....

அ.மு.செய்யது

.

Deepa said...

@Kavettu , @vaalpaiyyan
// It has been my understanding that Tamil population identifies "Parpanisim == brahmin". .. isnt it//

Deepa,
I agree. //

Thanks. Glad that you identify with my point

//All I am trying to say is that approach is not correct and we need to change our view/perspective in this direction. //

Absolutely, I agree

//getting out of that ladder is first step for all.//

Couldnt have said in any better manner

//ஒருவன் தன்னை புத்திசாலி என்று சொல்லி கொள்வது “உயர்வு மனப்பான்மை”
அடுத்தவனை முட்டாள் என்று சொல்வது “பார்பனீயம்” //

“பார்பனீயம்” -- it for this, we "educated members" must take a muchcloser look at Tamil Lexicon
and come up with a word that defines an "attitude"

Thanks for hearing me out.
Best Regards
Take care
Deepa

சுரேஷ்குமார் said...

//என் மகள் நான்கு வருடமாக பள்ளியில் படிக்கிறாள்! சாதி சான்றிதழ் கேட்டப்போது, கட்டாயப்படுத்தினால் கேஸ் போடுவேன் என்று சொல்லியிருக்கிறேன்!//

#####################
திரு.வால்பையன் அவர்களே சொல்வதற்க்கு மன்னிக்கவும்.நீங்கள் பிராடிக்கலா யோசிக்கலனு தோனுது.உங்கள் மகள் 10 வகுப்பு படிக்கும் போது கேட்பாங்க அப்ப என்ன பன்னுவிங்கன்னு தெரியல்ல...

சாதி என்பது பள்ளில் கேட்காத போதுதான் இட ஒதுக்கீடு ஓழியம்!இட ஒதுக்கீடு ஓழியம் போதுதான் சாதி எனற சொல் மறையும்.இதைதான் என் பதிவிலும் சொல்லி உள்ளேன்.

அ.மு.செய்யது said...

//நிஜமான நிச்சயமான உண்மை நண்பரே!
எனக்கு ஆரம்பத்தில் இருந்தே இஸ்லாமிய நண்பர்கள் அதிகம்!
ரம்ஜானுக்கு, பக்ரீத்துக்கு வீடு தேடி பிரியாணி வரும்!
அவர்கள் வீட்டிற்கும் என்னை அழைத்து செல்வார்கள்!

சில வருடங்களாக மற்ற நண்பர்களை தனிமைப்படுத்துவதாகவே தெரிகிறது!
மூளைச்சலவை இந்த காலகட்டத்தில் அதிகம் போல!//

ஹா ஹா.....

வால் அண்ணே !!! எந்த மதராஸாவும் ரமலானுக்கு முஸ்லிமல்லாத சகோதரர் வீட்டுக்கு பிரியாணி கொடுக்காதீங்கனு
சொல்ல மாட்டாங்க..

மேலும், பள்ளி வாசலில் யார் கியூவில் நின்றாலும் நோம்பு கஞ்சி தருவார்கள்.

இது உங்க மனப்பிராந்தி.

வால்பையன் said...

//அண்ணே அரபி மதராஸாக்கள் இருப்பதற்கு காரணம் தொழுகைக்காக மட்டும் இல்லை. குர் ஆன் அரபியில்
இருப்பதாலும் தான்.//

எழுத்து வடிவ அராபிக் தெரியாவிட்டாலும், அனைவரும் ஒரி வடிவா அராபிக் மொழியில் தானே தொழுகிறார்கள்! ஆக உங்கள் கடவுளுக்கு அராபிக் ஒன்று தான் தெரியும் அல்லது அராபிக்கே கடவுளின் மொழி என்று தானே அர்த்தம்!

மற்ற மொழிகளில் தொழுகை நடத்தி நான் பார்த்ததில்லையே!

அ.மு.செய்யது said...

100 ......

ஜெட்லி... said...

ரொம்ப சூடா இருக்கே...
இப்போதைக்கு எஸ்....

வால்பையன் said...

//திரு.வால்பையன் அவர்களே சொல்வதற்க்கு மன்னிக்கவும்.நீங்கள் பிராடிக்கலா யோசிக்கலனு தோனுது.உங்கள் மகள் 10 வகுப்பு படிக்கும் போது கேட்பாங்க அப்ப என்ன பன்னுவிங்கன்னு தெரியல்ல..//

என் மகள் படிக்கிறதுக்கு சாதி எந்த வகையில் உதவும்னு கேட்பேன்!
டாக்டருக்கு படிக்க முடியாது என்றால் இந்தியா ஒரு டாக்டரை இழந்தது என்பேன்!

நான் சாதியையை மறுப்பதால் என் மகளுக்கு சரியான எதிர்காலம் கிடைக்காது என்றால் பரவாயில்லை, அவளுக்காக நான் சேர்த்து உழைக்கிறேன்!

மேலும் என் தந்தை குறிப்பிட்டுள்ள சாதியை குறிப்பிட்டாலும் பெரிதாக ஒன்றும் சலுகை ஏற்ப்படபோவதில்லை!
நான் இன்ன சாதின்னு பெருமைக்கு வேண்டுமானால் சொல்லி கொள்ளலாம்!

துரதரிஷ்டவசமாக நான் அந்த மாதிரி ஆள் கிடையாது!

சாதி இல்லை, சாதி வேண்டாம்!

அ.மு.செய்யது said...

//எழுத்து வடிவ அராபிக் தெரியாவிட்டாலும், அனைவரும் ஒரி வடிவா அராபிக் மொழியில் தானே தொழுகிறார்கள்! ஆக உங்கள் கடவுளுக்கு அராபிக் ஒன்று தான் தெரியும் அல்லது அராபிக்கே கடவுளின் மொழி என்று தானே அர்த்தம்!

மற்ற மொழிகளில் தொழுகை நடத்தி நான் பார்த்ததில்லைய //

கரெக்ட்டு...காரணம் குர் ஆன் என்பது ஒரே நாளில் 'தொபக‌ட்டீர்' என்று வானில் இருந்து விழுந்து விட்ட நூலில்லை.
22 வருடங்களாக நபிக்கு எத்தி வைக்கப் பட்ட இறைச்செய்திகளின் தொகுப்பு.

முஹம்மது நபிக்கு அப்போது எழுதப் படிக்க கூட தெரியாது.அந்த இறைச்செய்தி அவருக்கு கிடைக்கும் போதெல்லாம்
நபித்தோழர்கள், நபி சொல்ல சொல்ல கையில் கிடைத்தவற்றில் எழுதி வைத்து கொளவர்.

எலும்பிலும்,மரப்பட்டையிலும் எழுதி வைக்கப்பட்டு, இறுதியில் உஸ்மான் என்றொரு நபித்தோழரால்
ஒருங்கிணைக்கப்பட்டு ஒரு புத்தகமாக கொண்டு வந்தனர்.

எனவே, அந்த இறைச்செய்தி அரபியில் வந்ததால் அதில் ஓதுவதையே
இஸ்லாமியர்கள் சிறப்பென கொண்டிருக்கின்றனர்.மற்றபடி, பிரசங்கங்களும் தூஆக்களும் தமிழில் தான்.

எதையும் ஓதாமலும் தொழுகை நடத்தலாம்.

அ.மு.செய்யது said...

//ஆக உங்கள் கடவுளுக்கு அராபிக் ஒன்று தான் தெரியும்
அல்லது அராபிக்கே கடவுளின் மொழி என்று தானே அர்த்தம்!//

பள்ளி வாசல்களில் தமிழில் தூ ஆ கேட்பதை நீங்கள் பார்த்ததில்லையா ??

வால்பையன் said...

//பள்ளி வாசல்களில் தமிழில் தூ ஆ கேட்பதை நீங்கள் பார்த்ததில்லையா ?? //


தூ ஆ என்றால் என்ன?

ஈ ரா said...

//கவனிக்க திராவிட(தென் இந்திய) மொழிகளில் நாந்தாண்டா பெரிய கொம்பன் என்பது போல் தலையில் கீரீடம் இல்லை!,//

சார்,

கொம்பு என்று எழுத்தில் எதை சொல்கிறீர்கள்? தாங்கள் எழுத்தின் மேலே இருக்கும் குறியீடுகளை அவ்வாறு குறிப்பிடும் பட்சத்தில் தற்போதைய வழக்குத் தமிழில் "கீ" போன்ற ஈகார எழுத்துக்களுக்கும், "லி"போன்ற இகாரங்களுக்கும் கொம்பு உள்ளது...

லை, ளை எல்லாம் முப்பது நாற்பது ஆண்டுகள் முன் வரை கொம்புகளோடு தானே இருந்தன...?

தமிழ், சமஸ்கிருதம், ஹிந்தி, தெலுங்கு, என எல்லா மொழிகளுமே, வளமானவையே.. கட்டாயமாகப்படாமல், விருப்பத்துடன் படித்தால் இனிமையாகத் தான் இருக்கும்.

அ.மு.செய்யது said...

தூஆ என்பது கோரிக்கைகள்.. வேண்டுதல்கள்....

எனக்கு அத கொடு இத கொடு என்று கேட்பது...

கபிலன் said...

ரொம்ப மேலோட்டமா மேட்டர் சொல்லி இருக்கீங்க.....

1. பார்ப்பனீயத்தை, தீவிரவாதம் போல சொல்ல ட்ரை பண்ணி இருக்கீங்க.
நிலைமை இப்பொழுது பன்மடங்கு மாறி இருக்கிறது. பிராமணர்கள் எல்லோருடனும் சரி சமமாகத் தான் பழகி கொண்டிருக்கிறார்கள். சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வு என்பது இயல்பு. பணம் படைத்தவன்- ஏழை, முதலாளி-தொழிலாளி என வேறு வகையான ஏற்றத் தாழ்வுகள் தான் இப்பொழுது அதிகம்.


2.. இந்தி படிப்பது பாவம் போல சித்தரிக்கிறது உங்கள் பதிவு.

ஊர் உலகமே பேண்ட் போட்டுட்டு இருக்கும் போது, நான் மட்டும் கோவணம் தான் கட்டுவேன்னு அடம் பிடிக்கிற மாதிரி இருக்கு இந்த மேட்டர். இந்தி தெரியாத என் போன்றோருக்கு, தமிழ்நாட்டைத் தாண்டி எந்த ஊருக்கு சென்றாலும் வெளிநாடு போலத் தான் தோன்றுகிறது. காரணம் மக்களிடம் கருத்தே பரிமாற முடியல. மேல்தட்டு மக்கள் மட்டும் தனியாக இந்தி படிக்கும் போது, சாதாரண மக்களுக்கு அதை சென்று சேர்க்க வேண்டிய கடமை யாருடையது?

3. ஓம், பூம் ஒரே மாதிரி உச்சரிப்பா?

நல்லா சொல்லிப் பாருங்க வால்ஸ். ஓம்காரத்தை ஒழுங்காக சொல்லிப் பாருங்கள், ஒலி தொண்டையில் ஆரம்பித்தாலும் அதன் கர்ஜனை உடல் முழுவதும் உணர முடியும். அதெல்லாம் நோய் குணப்படுத்துமா இல்லையாங்குறது வேற மேட்டர்.


சாதி ஒழிய வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

Eswari said...

//ஒரு கிராமத்தானின் உழைப்பை, உடற்பயிற்ச்சியோடு ஒப்பிடலாம், மூச்சி பயிற்சியோடு ஒப்பிடுவது சிறுபிள்ளை தனமாக தெரிகிறதே தோழி!//

'இதற்கு தான் மூச்சு பயிற்சி பற்றி எதாவது தெரிந்திருந்தால்' என்று ஆரம்பித்தேன். உங்களுக்கு அதான் பயன்களை பற்றி விளக்க எனக்கு நேரம் இல்லை.

சாதி சான்றிதல் என்பது தாழ்த்தப்பட்டோர்க்கான இட ஒதுக்கீடிற்க்காக நம் அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட சட்டம். அதை வேண்டாம் என்று ஒரு தாழ்த்த பட்டவர் சொன்னால் அது வரவேற்க கூடியது. என்னில் அவர் தனக்காக அரசாங்கம் கொடுத்த சலுகையை மறுக்கிறார் என்றால் அது உயர்வான விஷயம்.
மற்ற உயர் வகுப்பினர் இதை எதிர்கிறேன், இது தேவை இல்லாதது என்று சொன்னால் அது யாருக்கும் பயனற்ற வார்த்தைகள் /விவாதம்

வால்பையன் said...

//பார்ப்பனீயத்தை, தீவிரவாதம் போல சொல்ல ட்ரை பண்ணி இருக்கீங்க.
நிலைமை இப்பொழுது பன்மடங்கு மாறி இருக்கிறது. பிராமணர்கள் எல்லோருடனும் சரி சமமாகத் தான் பழகி கொண்டிருக்கிறார்கள்.//


பார்பனீயத்துக்கும் பார்பனர்களுக்கும் நான் முடிச்சு போடவில்லை! அதை செய்வதே நீங்க தான்! பார்பனீயம் என்றால் என்னவென்று விளக்கமாக சொல்லியுள்ளேன்!

**

//இந்தி படிப்பது பாவம் போல சித்தரிக்கிறது உங்கள் பதிவு.//

இந்தி படிக்காமல் இருப்பது பாவச்செயல் ஒன்று ஒரு லூசு உளரியதாலும், சமஸ்கிருந்தம் என்பது தேவபாஷை(ஷை=சமஸ்கிருதம்) என ஒரு மாயையை உருவாக்குவதாலும் தான் இந்த பதிவு!

**

//ஒலி தொண்டையில் ஆரம்பித்தாலும் அதன் கர்ஜனை உடல் முழுவதும் உணர முடியும். அதெல்லாம் நோய் குணப்படுத்துமா இல்லையாங்குறது வேற மேட்டர்.//

கிட்டதட்ட ஒரே மாதிரி என்று தான் சொல்லியுள்ளேன்!
பேருந்தில் முன் அமர்ந்து சென்று பாருங்கள், இஞ்சின் சத்தம் நீங்கள் நினைப்பது போலவே பேசும்!
ஓம் சொல்லும், வா சொல்லும், போ சொல்லும்!.

வால்பையன் said...

//தூஆ என்பது கோரிக்கைகள்.. வேண்டுதல்கள்....

எனக்கு அத கொடு இத கொடு என்று கேட்பது... //

சொர்க்கத்தை கொடுன்னு கேட்டு செத்துட்டா சொர்க்கம் கிடைச்சிருமா!?

வால்பையன் said...

//சாதி சான்றிதல் என்பது தாழ்த்தப்பட்டோர்க்கான இட ஒதுக்கீடிற்க்காக நம் அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட சட்டம். அதை வேண்டாம் என்று ஒரு தாழ்த்த பட்டவர் சொன்னால் அது வரவேற்க கூடியது. என்னில் அவர் தனக்காக அரசாங்கம் கொடுத்த சலுகையை மறுக்கிறார் என்றால் அது உயர்வான விஷயம்.
மற்ற உயர் வகுப்பினர் இதை எதிர்கிறேன், இது தேவை இல்லாதது என்று சொன்னால் அது யாருக்கும் பயனற்ற வார்த்தைகள் /விவாதம் //


தாரளமாக சலுகைக்காக உங்களை(அவர்களை) நீங்களே தாழ்த்தி கொள்ளுங்கள், யார் வேண்டாம் என்றார்!

சுயமரியாதை என்பதை தேடி கொண்டே இருக்கிறேன்!

சிலர் அதை இழந்து தன்னை B.C யிலிருந்து M.B.C ஆக மாற்ற சொல்கிறார்!

உலகம் உருப்பட்டா மாதிரி தான்!

அ.மு.செய்யது said...

//////தூஆ என்பது கோரிக்கைகள்.. வேண்டுதல்கள்....

எனக்கு அத கொடு இத கொடு என்று கேட்பது... //

சொர்க்கத்தை கொடுன்னு கேட்டு செத்துட்டா சொர்க்கம் கிடைச்சிருமா!? //

அது கோரிக்கையை நிறைவேற்றுபவன் முடிவெடுக்க வேண்டியது...!!! கேட்பது என் உரிமை.

டாபிக் டீவியெட் ஆகுது ???????

வால்பையன் said...

//அப்ப ஏன் மசூதிகளில் தமிழில் பிரார்த்திக்க கூடாது ? எல்லாம் தெரிந்த அல்லாவுக்கு தமிழ் தெரியாதுங்களா ?

அரபிகளுக்கு உலகில் மொத்தமாக அடிமைகள் தேவை , அதை இஸ்லாம் பெயரில் செய்கிறார்கள் .அவ்வளவுதான் //


எனக்கும் அந்த கேள்வி உண்டு!
எல்லாம் வல்ல கடவுள் ஏன் மற்ற மொழிகளை புரிந்து கொள்ள முடியாது!
எல்லா தொழிகைகளையும் தமிழிலிலேயே செய்யலாமே!

பேசாத தொழுகை உண்டுடென்று செய்யது சொல்கிறார்! அப்போது மனதில் என்ன நினைத்து கொள்வார்ன்னு நமக்கு என்ன தெரியும்!

வால்பையன் said...

செய்யது ”சமாக்” என்றால் என்ன?

அதில் இருக்கும் போதை என்ன அளவு?

அ.மு.செய்யது said...

//எல்லாம் வல்ல கடவுள் ஏன் மற்ற மொழிகளை புரிந்து கொள்ள முடியாது!
எல்லா தொழிகைகளையும் தமிழிலிலேயே செய்யலாமே!
//

செய்யலாமே..கோவி சொன்ன ஜனகண ஏன் பெங்காலியில் பாடுகிறோம்.தமிழில் மொழிபெயர்த்து பாடலாமே !!!

எல்லாவற்றையும் தமிழிலே தான் செய்து ஆக வேண்டும் என்று நீங்கள் சொல்வதற்கு பெயர் தான் திணிப்பு.

குறிப்பிடத்தக்க சில ஸ்கிரிப்டுகள் ஒரிஜினல் மொழியில் தான் சுவை அதிகம்.

திருக்குறளை அதன் எதுகை மோனையோடு தமிழில் வாசிப்பது இன்பமா ?? இல்லை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து
வாசிப்பது இன்பமா ??

மற்ற மொழிகளை ஏற்று கொள்வதில் என்ன கேடு வந்து விடப் போகிறது ??

அ.மு.செய்யது said...

//வால்பையன் said...
செய்யது ”சமாக்” என்றால் என்ன?

அதில் இருக்கும் போதை என்ன அளவு?

September 17, 2009 12:22 ப்ம்//

சமாக் பற்றி நான் கேள்வி பட்டதில்லை.விரைவில் பதிலோடு வருகிறேன்.

வால்பையன் said...

/தற்போதைய வீரத்தமிழ்ர் பண்பாடாம் எதிர்த்து அடிக்காத எதிர்த்து போசாதவர்கள் துரத்தி அடிப்பது, வழக்கம் போல நமது வால்பையனும் தமது வீரத்தை காட்டி இருக்கிறார்.
அவருக்கு வீரத்சிந்தனை செம்மல் வால் பையர் என்னும் பட்டம் தருகிறேம். //


வாங்க பித்தன்!
மது மட்டுமே போதை தருவதில்லை!
உங்கள் மதம் தரும் போதையை விட இந்து அதிகமுமில்லை!

உங்களது தளத்தில் வேதத்தில் சொல்லியுள்ளது அனைத்தும் உண்மை என எழுதும் போது நினைத்தேன்,சந்தாகப்பட்டேன்!

இந்த பதிவு உங்களுக்கு தான்!

Bhuvanesh said...

//உங்கள் மகள் பத்தாம் வகுப்பு படிக்கும் வரை நீங்கள் இப்படி பேசலாம். அதற்க்குமேல் மேற்படிப்பு படிக்கும் போது சாதி சான்றிதல் இல்லாமல் எந்த பள்ளியிலும் சேர்க்க முடியாது.//

//Farward class என்று விண்ணப்பங்களில் குறிப்பிட்டால் எந்த சாதி சான்றிதலும் தேவை இல்லை//

இப்ப அது எல்லாம் forward கிடையாதுங்க.. இப்ப எல்லாம் OC.
(OC - Open Class??)

ஜாதி பேர சொல்லாம எவ்வளவு வேணா படிக்கலாம் !!

அ.மு.செய்யது said...

//அரபிகளுக்கு உலகில் மொத்தமாக அடிமைகள் தேவை ,
அதை இஸ்லாம் பெயரில் செய்கிறார்கள் .அவ்வளவுதான் ////

மதி இந்தியா ...ஐயாம் சாரி..

முற்றிலும் அடிப்படை அறிவற்ற, மகா கேவலமான கருத்துக்குப்பை இது....!!!ஆரோக்கியமான தகவல்களுட்ன்
விவாதங்களில் கலந்து கொள்ளுங்கள்.

உங்கள் சமஸ்கிருத, இந்தி சண்டைக்கு அரபிக்காரன் என்னங்க பண்ணுவான் ???

வால்பையன் said...

//கோவி சொன்ன ஜனகண ஏன் பெங்காலியில் பாடுகிறோம்.தமிழில் மொழிபெயர்த்து பாடலாமே !!!//

நல்ல பாயிண்டாத்தான் இருக்கு!
மத வித்தியாசமின்றி அனைவரும் ஒரே ஒலியாக இதை பயன்படுத்துகிறோம்!
ஒரு மத தொழுகைக்கும் இதற்கும் எந்த அளவு சம்பந்தம் உண்டு என்று தெரியவில்லை!

மத பற்றுடன் நாட்டுப்பற்றை ஒப்பிடுவது சரியல்ல என்றாலும் பெங்காலியில் ஏன் நாட்டுபற்றை பாட வேண்டும் என்பது ஒதுக்க முடியாத கேள்வி!

பதில் கிடைக்குதான்னு பார்ப்போம்!

வால்பையன் said...

தகவலுக்கு நன்றி புவனேஷ்!

சாதி சொல்லாமல் படிக்கலாம் என்று அரசு ஆணையே வந்துவிட்டதாக தகவல்!, கலப்பு மணம் செய்தவர்களுக்கு கூடுதல் சலுகையும் உண்டாம்!

Bhuvanesh said...

//அது கோரிக்கையை நிறைவேற்றுபவன் முடிவெடுக்க வேண்டியது...!!! கேட்பது என் உரிமை. //

ரொம்ப சரி.. அதே மாதிரி நாம் சொர்கத்துக்கு போக தகுதியான ஆளாக இருந்தால் நம்மை அங்கே அனுப்ப வேண்டியது கடவுளின் (அந்தந்த மத கடவுளின்!) கடமை, பொறுப்பு.. நான் ஏன் கேட்க்க வேண்டும்??

அ.மு.செய்யது said...

//ரொம்ப சரி.. அதே மாதிரி நாம் சொர்கத்துக்கு போக தகுதியான ஆளாக இருந்தால் நம்மை அங்கே அனுப்ப வேண்டியது கடவுளின் (அந்தந்த மத கடவுளின்!) கடமை, பொறுப்பு.. நான் ஏன் கேட்க்க வேண்டும்?//

சரி கேக்காதீங்க...!!!!!! உங்க இஷ்டம்...

அ.மு.செய்யது said...

//நல்ல பாயிண்டாத்தான் இருக்கு!
மத வித்தியாசமின்றி அனைவரும் ஒரே ஒலியாக இதை பயன்படுத்துகிறோம்!
ஒரு மத தொழுகைக்கும் இதற்கும் எந்த அளவு சம்பந்தம் உண்டு என்று தெரியவில்லை!
//

இஸ்லாத்திற்குள் எந்த பேதமும் வந்து வந்து விடக்கூடாது என்பதற்காகவும் ஒரே மொழி
பயன்படுத்த படலாமில்லையா ??

Bhuvanesh said...

//கலப்பு மணம் செய்தவர்களுக்கு கூடுதல் சலுகையும் உண்டாம்!//

அப்படியா??

அண்ணா. ஒரு டிவி நிகழ்ச்சியில் ஒருவர் (சு.ப.வீரபாண்டியன் சார் னு நினைக்கறேன்) சொன்னா ஞாபகம்.. கலப்பு திருமணம் னு ஏன் சொல்லணும்? மனுசனும் மாடுமா கல்யாணம் செஞ்சுக்குது? இல்ல மனுசனும் நாயும் செஞ்சுக்குதா??



அவரு சொன்னது சரி தான? உங்கள மாதிரி ஜாதி வேண்டாம்னு சொல்லற ஆள் இனி கலப்புனு சொல்லாதீங்க !!

Bhuvanesh said...

//சரி கேக்காதீங்க...!!!!!! உங்க இஷ்டம்...//
அப்பாடி.. வந்துட்டீங்க.. பதிவின் நோக்கமே.. கடவுளை வணங்கவே சாய்ஸ் இருக்கும்போது, "எனக்கு ஹிந்தி வேணும்னா நான் படிக்கறேன்.. கபில் யாரு கண்டிப்பா படிக்க சொல்ல?"..

வால்பையன் said...

//ஓமில் ஆரம்பித்து அறுபது லட்சம் தடவை ராமன் பெயரை எழுதினால் ஐ.ஏ.எஸ். ஆகலாம் என்றெல்லாம் கதை இருக்கிறது...//


ஒன்றிரண்டு குறைந்தால் ”ஐ.பி.எஸ்” ஆகலாமா தல!

Anonymous said...

//aurs said...

dai naye dont you know that quran is in arabic, god knows all language but human doesnt know all the language, if some one from other country come and want to pray he also needs to understand what we are saying while pray. it is just a common language using to pray, this is not like fucking tamil language, islam is internation religion not like Hindu, bastard if you dont know anything dont write, if you write anything you cannot survive//

மக்கா.... இங்க பார்ரா....
அய்யர் கடயில வந்து ஒருத்தன் பிரியாணி கேக்குரான்.... :‍)

வால்பையன் said...

//ஒரு டிவி நிகழ்ச்சியில் ஒருவர் (சு.ப.வீரபாண்டியன் சார் னு நினைக்கறேன்) சொன்னா ஞாபகம்.. கலப்பு திருமணம் னு ஏன் சொல்லணும்? மனுசனும் மாடுமா கல்யாணம் செஞ்சுக்குது? இல்ல மனுசனும் நாயும் செஞ்சுக்குதா??//


தகவலுக்கு நன்றி!
இனி சொல்லவில்லை!

ஆனால் அரசின் தகவலை பகிர்ந்து கொள்ள அந்த வார்த்தை தேவைப்பட்டது!

எனக்கு அண்ணா இல்லை!
வாலென்றே அழைக்கலாம்!

சாலிசம்பர் said...

//எனக்கு விவரம் தெரிந்து நான் சாதி சொல்லி கொண்டதில்லை!

என் மகள் நான்கு வருடமாக பள்ளியில் படிக்கிறாள்! சாதி சான்றிதழ் கேட்டப்போது, கட்டாயப்படுத்தினால் கேஸ் போடுவேன் என்று சொல்லியிருக்கிறேன்!//

VAALU THE GREAT.

வால்பையன் said...

//கபில் யாரு கண்டிப்பா படிக்க சொல்ல?"..//


அதை தான் நானும் சொல்லிகிட்டு இருக்கேன்!

அவர் யாரு கண்டிப்பாக படிக்கனும்னு சொல்ல!

கபிலன் said...

"பார்பனீயத்துக்கும் பார்பனர்களுக்கும் நான் முடிச்சு போடவில்லை! அதை செய்வதே நீங்க தான்! பார்பனீயம் என்றால் என்னவென்று விளக்கமாக சொல்லியுள்ளேன்! "

இது உலக மகா காமெடி வால்ஸ். பார்ப்பனீயத்தைப் பற்றி அதை உருவாக்கி மார்க்கெட்டிங் செய்த பெரியாராலேயே விளக்கம் சொல்ல முடியாது. மாயையை விளக்குவது எளிதான காரியமல்ல.

அ.மு.செய்யது said...

////சரி கேக்காதீங்க...!!!!!! உங்க இஷ்டம்...//
அப்பாடி.. வந்துட்டீங்க.. பதிவின் நோக்கமே.. கடவுளை வணங்கவே சாய்ஸ் இருக்கும்போது, "எனக்கு ஹிந்தி வேணும்னா நான் படிக்கறேன்.. கபில் யாரு கண்டிப்பா படிக்க சொல்ல?"..

//

சாரி கபிலின் இந்தி திணிப்பை எதிர்ப்பவர்களில் நானுமொருவன்...நான் உங்களின் கடவுள் குறித்த கேள்விகளுக்கு
மட்டுமே பதில் சொல்ல வந்தேன்.

Bhuvanesh said...

//எனக்கு அண்ணா இல்லை!
வாலென்றே அழைக்கலாம்!//

இல்ல அண்ணா.. நான் அண்ணானே சொல்லறேன்.. ஊரு பழக்கம்.. வயசுல பெரியவங்கள அப்படி தான் கூபிடுவோம் :)

அ.மு.செய்யது said...

////சரி கேக்காதீங்க...!!!!!! உங்க இஷ்டம்...//
அப்பாடி.. வந்துட்டீங்க.. பதிவின் நோக்கமே.. கடவுளை வணங்கவே சாய்ஸ் இருக்கும்போது, "எனக்கு ஹிந்தி வேணும்னா நான் படிக்கறேன்.. கபில் யாரு கண்டிப்பா படிக்க சொல்ல?"..

//

சாரி கபிலின் இந்தி திணிப்பை எதிர்ப்பவர்களில் நானுமொருவன்...நான் உங்களின் கடவுள் குறித்த கேள்விகளுக்கு
மட்டுமே பதில் சொல்ல வந்தேன்.

வால்பையன் said...

//பார்ப்பனீயத்தைப் பற்றி அதை உருவாக்கி மார்க்கெட்டிங் செய்த பெரியாராலேயே விளக்கம் சொல்ல முடியாது. மாயையை விளக்குவது எளிதான காரியமல்ல. //

என் புரிதல் தான் நான் சொன்னதென்று வைத்து கொள்ளலாமே!
நான் பார்பனர்களுக்கு எதிரியல்ல!
பார்பனீயத்திற்கு எதிரி!

வால்பையன் said...

//இல்ல அண்ணா.. நான் அண்ணானே சொல்லறேன்.. ஊரு பழக்கம்.. வயசுல பெரியவங்கள அப்படி தான் கூபிடுவோம் :) //

அப்படி ஒன்றும் பெரிதாக வயதாகிவிடவில்லை நண்பரே!

ஒரு நண்பரை அழைப்பது போலவே என்னை அழைக்கலாம்!

வால்பையன் said...

//எல்லாரும் ஹிந்தி கத்துக்கறதுல நமக்கும் நாட்டுக்கும் நல்லதுதான்!
நாடு ஒரு பொது மொழியில்லாம அங்க அங்க தேங்கி நிக்கறத உணருகிறீர்களா? //


பொது மொழி இல்லைனா இப்ப என்ன கெட்டு போச்சு!

ஆங்கிலம் இங்கிலாந்து மக்களின் தாய்மொழி! ஆனால் எத்தனை நாடுகளில் அது பொது மொழி!

ஆங்கிலமே இருக்கட்டுமே!

Eswari said...

//அரசாங்க சட்டத்தை தெரிந்து கொள்வது முக்கியம்.

தமிழக அரசு இந்தப் பிரச்னை குறித்து வெளியிட்ட அரசாணை எண்.1210 தேதி 02.07.73’. //

உபயோகமான(உருப்படியான) தகவல். எனக்கு தெரிய வைத்ததற்கு நன்றி கல்வெட்டு

கபிலன் said...

தமிழகம் இந்தி கற்றுக்கொண்டால், வட இந்திய கட்சிகள் உள்ளே வந்துவிடக்கூடும். பிறகு, திராவிட கட்சிகள் மண்ணைக் கவ்வ வேண்டிய நிலை வந்து விடும் என்ற பயமே இந்தி எதிர்ப்புக்கு முக்கிய காரணம் !

சில சினிமாக்காரங்க கூட ஒத்துக்க மாட்டாங்க..ஏன்னா...எல்லாம் இந்தி படம் பாக்க போயிடுவாங்க...தொழில் போயிடுமே என்கிற பயத்தாலே தவிர, கொள்கையல்ல...

எல்லாமே பதவிக்காகவும் பணத்துக்காகவும் சில திராவிட (அ)சிங்கங்கள் விளையாடுற ஆடு புலி ஆட்டம்.

கொஞ்சம் யோசிச்சு பாருங்க, இந்தியை புறக்கணிப்பதால் என்ன பயன் சாமானியனுக்கு?

Suresh Kumar said...

நல்ல தகவல் கடந்த காலங்களை விட இப்போது இந்தி திணிப்பு அதிகமாக இருக்கிறது .

பார்ப்பனியத்தை மாற்ற ஒரே வழி இந்தியாவில் அங்கீகரிக்க பட்ட அனைத்து மொழிகளும் ஆட்சி மொழிகளாக மாற வேண்டும் .

கோவி.கண்ணன் said...

//பார்பனீயத்துக்கும் பார்பனர்களுக்கும் நான் முடிச்சு போடவில்லை! அதை செய்வதே நீங்க தான்! பார்பனீயம் என்றால் என்னவென்று விளக்கமாக சொல்லியுள்ளேன்!//

பூணூல் பார்பனியத்துக்கும் பார்பனர்களுக்கும் முடிச்சு போடுது பாஸ் !

அ.மு.செய்யது said...

//கொஞ்சம் யோசிச்சு பாருங்க, இந்தியை புறக்கணிப்பதால் என்ன பயன் சாமானியனுக்கு?//

சரியாக சொன்னீர்கள் கபிலன்.

டால்மியாபுரம் என ஒரு வட இந்தியரின் பெயரைத் தமிழ்நாட்டிலுள்ள கிராமம் ஒன்றுக்குச் சூட்டுவதை
எதிர்த்து தண்டவாளத்தில் தலை வைக்க துணிந்த காலங்கள் பழங்கதையாகி, இன்று 'மகேந்திரா சிட்டி'கள் உருவாகி விட்டன.

நெய்வேலியில் தமிழ் மண்ணிலிருந்து தோண்டி எடுக்கப்படும் நிலக்கரிக்கு மத்திய அரசு ராயல்டி வழங்க வேண்டும்
எனப்போராடி பெற்றது ஒரு காலம்.டாடாக்கள் டைடானியம் ஆக்சைடு ஆலை நிறுவ அரசே முன்னின்று நிலம் கையகப்படுத்தி கொடுப்பது தான் இன்றைய நிஜம்.

அதே இந்தி எதிர்ப்பு என்பது தமிழ் வளர்ச்சி உதவுதல், தமிழ்ப் பற்று என்ற காலமெல்லாம் மலையேறி போய் விட்டது.

ஒரு திராவிட கட்சி தலைவரையும் பங்கு தாரராக சேர்த்து கொண்டு தொலைக்காட்சி நிறுவனம் துவங்க பட்ட போது
அது "சன் டிவியாக" தான் மலர்ந்தது.

எல்லாம் அரசியல்...!!!! கொள்கை அரசியல் அல்ல...தேர்தல் அரசியல் !!!

Anonymous said...

சாதி எதிர்ப்பாளர்கள் தங்களது சாதியை சான்ரிதழில் போட்டு கொள்ள கூடாது. சாதியை காட்டி கல்வி வேலை வாய்ப்புகளில் ஒதுக்கிட்டு கோரக் கூடாது.
’சாதியும் கூடாது ஆனால் சாதியால் கிடைக்கும் அனுகூலமும் வேண்டும்’ என்பது சுயநலத்தின் உச்சி.

Anonymous said...

இந்தி வேணாம் என்று கத்துகிற வறட்டு தவளைகளே! வட இந்தியா போய் பாருங்க. தாளம் போட்ருவீங்க. ஏன்யா இப்படி குருகிய மனட்தோட இருக்கீங்க? ஒரு மொழியை அதும் நம்ம தேசிய மொழியப் படிக்கிரதுல என்ன குறை? சாயப்பட்றை வேலையே எல்லாருக்கும் போதுமா?

உங்கள் ராட் மாதவ் said...

// Anonymous said...

இந்தி வேணாம் என்று கத்துகிற வறட்டு தவளைகளே! வட இந்தியா போய் பாருங்க. தாளம் போட்ருவீங்க. ஏன்யா இப்படி குருகிய மனட்தோட இருக்கீங்க? ஒரு மொழியை அதும் நம்ம தேசிய மொழியப் படிக்கிரதுல என்ன குறை? சாயப்பட்றை வேலையே எல்லாருக்கும் போதுமா?//

ஹிந்தி நம் தேசிய மொழி இல்லை.....
அங்கீகரிக்கப்பட்ட 'அலுவல்' மொழி மட்டும் தான்......!!!!!

மணிகண்டன் said...

***
ஜனகனமன இந்தியாவெங்கும் பாடப்படும்போது அதன் பொருளில் லயத்து ஒன்ற இந்தி படிக்க வேண்டுமா ?
***

கோவிக்கு,

தேவையில்லை. ஹிந்தி தெரிந்தாலும் புரியுமா என்பது சந்தேகமே ! ஜனகனமனவிலும் ஹிந்தி புகுத்துவதை கண்டித்து நான் வெளிநடப்பு செய்ய இருக்கிறேன்.

***
கோவி சொன்ன ஜனகண ஏன் பெங்காலியில் பாடுகிறோம்.தமிழில் மொழிபெயர்த்து பாடலாமே
***
செய்யது,

கோவி, எங்கு அப்படி சொன்னார் ?

***
இஸ்லாத்திற்குள் எந்த பேதமும் வந்து வந்து விடக்கூடாது என்பதற்காகவும் ஒரே மொழி பயன்படுத்த படலாமில்லையா ??
***

செய்யது,

இது எல்லாம் rationalize செய்து கொள்ள நமக்கு நாமே காரணம் சொல்லி கொள்வது. ஆம். அரபியில் தான் பாடுவோம். அர்த்தம் எல்லாம் தெரிந்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. எங்களுக்கு என்று தமிழில் தொழ தோன்றுகிறதோ அன்று செய்வ்வோம். உங்கள் வேலையை பார்த்து கொண்டு செல்லுங்கள் என்று சொல்லுவது தான் சரியான வாதம். அனைத்தையும் காரண / காரியங்களால் நிறுவ முடியாது.

தமிழில் அல்லாவை வழிபடும் பாடல்கள் பல இருக்கின்றன. அவற்றை பயன்படுத்தாமலா இருக்கிறார்கள். ஆனால் இவர்களிடம் உள்ள பிரச்சனை என்னவென்றால் வேற்றுமொழிகளில் உள்ள அனைத்தையும் தமிழ்ப்படுத்தி, அவற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

Rain rain go away என்று ரைம்சை தமிழ் படுத்துவார்கள். தமிழில் உள்ள பாப்பா பாடல்களை விட்டுவிட்டு.

பலருக்கும் கொண்டு செல்லவேண்டும் என்ற நல்லெண்ணம் தான். இருந்தாலும் பலமுறை நகைக்க வைக்கும் முயற்சிகள் அவை.

மணிகண்டன் said...

intha pathivukku yellaam :)

me the 150th

அ.மு.செய்யது said...

//கோவி சொன்ன ஜனகண ஏன் பெங்காலியில் பாடுகிறோம்.தமிழில் மொழிபெயர்த்து பாடலாமே
***
செய்யது,

கோவி, எங்கு அப்படி சொன்னார் ?
//

ஜனகணமனவை அவர் தான் ஞாபகப்படுத்தினார்..அதையே தான் நான் பயன்படுத்தி கொண்டேன்.

வால்பையன் said...

//இந்தியை புறக்கணிப்பதால் என்ன பயன் சாமானியனுக்கு? //

இந்தியை படிப்பதால் சாமானியனுக்கு எப்படி எந்த பயனுமில்லையோ அதே போல் அதுவும்!

தேவைக்கு படிப்பது வேறு, திணிப்பது வேறு!

டோண்டு சாருக்கு ஆறு வேற்று மொழிகள் தெரியும், யாரும் கட்டாயப்படுத்தியா படிக்க வைத்தார்கள்!?

வால்பையன் said...

//இந்தி வேணாம் என்று கத்துகிற வறட்டு தவளைகளே! வட இந்தியா போய் பாருங்க. தாளம் போட்ருவீங்க. ஏன்யா இப்படி குருகிய மனட்தோட இருக்கீங்க? ஒரு மொழியை அதும் நம்ம தேசிய மொழியப் படிக்கிரதுல என்ன குறை? சாயப்பட்றை வேலையே எல்லாருக்கும் போதுமா?//


வடநாட்டிலிருந்து வருபவர்கள்!

நம்மிள் படா குஷியாகிட்டான்!
நிம்மிள் ஷோக்கா வேல செய்யுறான்!
சேட் பத்து ருபா கூட போட்டுதர்றான்!

என்று தமிழ் பேசுவது போல் நாங்களும் வட நாடு போய் இந்தி பேசி ”கொல்லுவோம்”

வால்பையன் said...

//இஸ்லாத்திற்குள் எந்த பேதமும் வந்து வந்து விடக்கூடாது என்பதற்காகவும் ஒரே மொழி பயன்படுத்த படலாமில்லையா ??//


இந்துக்கள் அனைவரும் சமஸ்கிருதத்தில் தான் பூஜை செய்ய வேண்டும் என்ற பார்பனீய சிந்தனையை ஒட்டி வருகிறது இது!, நான் பதிவில் கேட்டது போல் இஸ்லாமியர்களுக்கும் பார்பனீய சிந்தனை உள்ளதா?

Nagaraj said...

ஒரு எழவும் புரியல. blog இருந்தா எது வேணும்னாலும் எழுதலாமா? உருப்படியா எதையாவது எழ்துபா!

அ.மு.செய்யது said...

@மணிகண்டன்,

உண்மைய எடுத்துரைத்தமைக்கு நன்றி !!!

சமஸ்கிருத,பார்ப்பனீய,இந்தி எதிர்ப்பு என்பது திராவிட கொள்கைகளின் ஆதார சுருதி.

மையப்படுத்தப்பட்ட அரசியல் அதிகாரம்,சுய அடையாளங்களைத் துறந்து ஒரு பொது அடையாளத்தை மேற்கொள்ள‌
வற்புறுத்தும் கலாசார ஆதிக்கத்தை (hegemony) எதிர்ப்பது, அதன் முதல் ஷரத்து.

இந்த இந்தி மொழி திணிப்பு என்பது, சுய அடையாளங்களுக்கு மாற்றாக ஓர் பொது அடையாளத்தை வற்புறுத்துவதால்
அந்தக் கருத்தியலை எதிர்ப்பது; அங்கே இந்திய தேசியம் என்ற கருத்து மேலோங்குகிறது.

எனவே, இவர்கள் சொல்வது போல ஏன் இஸ்லாமியர்கள் அரபியில் தொழுகை நடத்தக்கூடாது...?? போன்ற கேள்விகளும் இந்தி எதிர்ப்பும் முற்றிலும் வேறுபட்டவை.

மேலும் கோவி கண்ணனின், "அரபியில் தான் தொழுகை நடத்தவேண்டும் என்பதே ஒரு திணிப்பு" என்ற கருத்து
தவறான கண்ணோட்டம்....மொட்டத்தலைக்குக்கும் மொழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல.

காரணம் இஸ்லாமியர் உலகமெங்கும் இருக்கின்றனர்.அனைவருக்கும் ஒரு பொது மொழியில் வழிபாடு தவறா ??

சென்னையில் ஒரு மஸ்ஜிதில் தமிழில் தொழுகை நடத்தினால் அங்கு வரும் தெலுங்கு காரனுக்கும்,கன்னட காரனுக்கும்
இந்தி காரனுக்கும் எப்படி புரியும் ??

மேலும் சென்னை அடையாறு மஸ்ஜிதில் நிறைய ஆப்ரிக்கர்கள் தொழ வருகிறார்கள்.அவர்களை எல்லாம் தமிழ் கறக சொல்ல முடியுமா ??

அ.மு.செய்யது said...

வால்!!! உங்களுக்கும் மேலெ சொன்ன‌ பதில் பொருந்தும்.

உங்கள் ராட் மாதவ் said...

// வால்பையன் said...

//இந்தியை புறக்கணிப்பதால் என்ன பயன் சாமானியனுக்கு? //

இந்தியை படிப்பதால் சாமானியனுக்கு எப்படி எந்த பயனுமில்லையோ அதே போல் அதுவும்!

தேவைக்கு படிப்பது வேறு, திணிப்பது வேறு!

டோண்டு சாருக்கு ஆறு வேற்று மொழிகள் தெரியும், யாரும் கட்டாயப்படுத்தியா படிக்க வைத்தார்கள்!?//


சரிதான்....

தமிழ், ஆங்கிலம் இரண்டும் பள்ளியில் பயின்றது...

மலையாளம், கன்னடம் இரண்டும் விரும்பி கற்றது.....

ஹிந்தி.... 'மத்யமா' வரை மதுரை 'காந்தி மியுசியத்தில்' படித்தேன்...

ஆனால்... வளைகுடா' வந்த பிறகு....'ஹிந்தி, அரபி இரண்டும் பேசக் கற்றுக் கொண்டேன்...

உண்மைதான்.... விரும்பிப் படிக்கும்போது வருவது ஒரு சுகம்....

விருப்பமின்றி திணிக்கப்படும்போது வருவது, வெறுப்பு மட்டுமே....!!!

Anonymous said...

சாதி வேணாம் என்று கூவுகிறவர்களே சாதியை சர்டிபிகேட்டில் போட்டு சலுகை கோரிக்கை ஏன்? இதுக்கு பதில் சொல்லுய்யா மொதல்ல.

வால்பையன் said...

//சாதி வேணாம் என்று கூவுகிறவர்களே சாதியை சர்டிபிகேட்டில் போட்டு சலுகை கோரிக்கை ஏன்? இதுக்கு பதில் சொல்லுய்யா மொதல்ல. //

எவன் கேக்குறானோ அவனை போய் கேளுங்க!
நான் சலுகை கேட்டேன்னு உங்களுக்கு எவன் சொன்னான்!

Anonymous said...

யோவ்! உம்ம பொண்னை ஸ்கூல்ல சேக்கிறப்போ சாதி போடுவீரா மாட்டீரா?

சாதியத் திட்டிகிட்டே சாதி அழுகலைக் காமிச்சு சலுகை கேக்கிறவன்களைத்தான் சொல்றேன்.

வால்பையன் said...

//யோவ்! உம்ம பொண்னை ஸ்கூல்ல சேக்கிறப்போ சாதி போடுவீரா மாட்டீரா?//

என் பொண்ணு ரெண்டாவது படிக்கிறா!
இது வரைக்கும் சாதி சான்றிதழ் கொடுக்கல!
இனிமேலும் கொடுக்க மாட்டேன்!

மணிகண்டன் said...

****
இஸ்லாமியர் உலகமெங்கும் இருக்கின்றனர்.அனைவருக்கும் ஒரு பொது மொழியில் வழிபாடு தவறா ??

சென்னையில் ஒரு மஸ்ஜிதில் தமிழில் தொழுகை நடத்தினால் அங்கு வரும் தெலுங்கு காரனுக்கும்,கன்னட காரனுக்கும்
இந்தி காரனுக்கும் எப்படி புரியும் ??

மேலும் சென்னை அடையாறு மஸ்ஜிதில் நிறைய ஆப்ரிக்கர்கள் தொழ வருகிறார்கள்.அவர்களை எல்லாம் தமிழ் கறக சொல்ல முடியுமா ??
****

இதை தான் நான் rationalize செய்வது என்று கூறினேன்.

நீங்கள் கூறி இருக்கும் ஒவ்வொன்றையும் மற்றொரு கோணத்தில் தவறு என்று நிறுவமுடியும் எடுத்துக்காட்டுடன்.

அதை தான் நான் கூற வந்தேன். செய்யும் ஒவ்வொரு காரண காரியங்களையும் ஆராய்ந்து சரி என்று நிறுவ முயலும் அவசியம் இல்லை. (பெரிய அளவில் சமுதாய தாக்கம் இல்லாத வரை)

அ.மு.செய்யது said...

//இதை தான் நான் rationalize செய்வது என்று கூறினேன்.

நீங்கள் கூறி இருக்கும் ஒவ்வொன்றையும் மற்றொரு கோணத்தில் தவறு என்று நிறுவமுடியும் எடுத்துக்காட்டுடன்.

அதை தான் நான் கூற வந்தேன். செய்யும் ஒவ்வொரு காரண காரியங்களையும் ஆராய்ந்து சரி என்று நிறுவ முயலும் அவசியம் இல்லை. (பெரிய அளவில் சமுதாய தாக்கம் இல்லாத வரை)
//

அவசியம் இல்லை தான்....ஒரு ரேஞ்சில் எடுத்துச் சொன்னால் இவர்களுக்கு புரியாது.அல்லது புரியாதது போல நடிப்பார்கள்.

எனவே தான் இந்த Spoon feedings அவசியமாகின்றன.

கபிலன் said...

ஆங்கிலத்தை விரும்பியா படித்தோம்? பள்ளிப் பருவத்தில் நம் மேல் திணிக்கப்பட்ட ஒன்றே ஆங்கிலம்! அந்த மொழி நமக்கு வேலை வாய்ப்பைத் தரவில்லையா? உலகில் பலரிடம் நம் கருத்தை பகிர உதவவில்லையா?

இந்தியும் அப்படித் தான்? நம்மிடம் இந்தி படிக்கச் சொல்வது வேண்டுமானால் திணிப்பாக இருக்கலாம். நம் குழந்தைகளை படிக்கச் சொல்வது, அவர்களுக்கு அதுவும் ஒரு பாடம் போலவே தோன்றும். திணிப்பாகாது.

வேறு ஊரில் சென்று தொழில் செய்ய, வருவாயை உயர்த்த இந்தி இன்றியமையாதது. எனக்கு இந்தி தெரியாத காரணத்தால், எத்தனையோ இடங்களில் ஊமையாக இருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.

எனக்குத் தெரிந்த வரையில், நாடு என்றிருந்தால், நாட்டு மக்கள் தங்கள் உணர்வுகளை தெளிவாக பகிர்ந்துகொள்ள ஒரு பொது மொழி உண்டு. அதை ஏன் நாம் ஏற்க கூடாது?

இதே பதிவை நீங்கள் இந்தியில் வெளியிட்டிருந்தால், இந்தியா முழுவதும் உள்ள பதிவர்கள் கலந்து கொண்டிருப்பார்கள்...அதுமட்டுமல்ல உங்களை வால்ஜி என்று அழைத்திருப்பார்கள் : )

ஒரு வறட்டு கவுரவத்திற்காக இந்தியை எதிர்ப்பது போல காட்டிக்கொண்டு, தன் பிள்ளைகளை தனி டியூஷன் வைத்து சமஸ்கிருதம் பயிலச் சொ ல்லும் பலர் உள்ளனர்.

ஆரூரன் விசுவநாதன் said...

நல்ல பதிவு. சில விளக்கத்துடன் என் வலைப்பூவில் விரிவாக எழுதியிருக்கிறேன்.

arurs.blogspot.com

படித்துவிட்டு விமர்சியுங்கள்.

அன்புடன்
ஆரூரன்

Anonymous said...

சாதியைப் பற்றிய வால் அண்ணாவின் கருத்துக்கள் எனக்கு நியாயமானதாகவே படுகிறது. பார்ப்பனர்களை குறை சொல்லவில்லை. பார்ப்பனியத்தை ஆதரிப்பவர்களை தான் சொல்கிறேன் என்கிறார். சரி தானே. மேலோர் கீழோர் என்று பிரிவினை வரும் சாதி தேவையில்லை தான். எந்த விலங்கும் தன் இனத்தை தானே அடிமைப் படுத்தியது கிடையாது. ஆனால் அதை நம் மனித இனம் செய்திருக்கிறது. நன்கு யோசித்தால் தான் நமது பிழைகள் நமக்கு தெரியும். அதுவரை நாம் செய்வது நமக்கு நியாயமாகவே படும். ஏன்னா மனித சுபாவம் அப்படி.

வால்பையன் said...

//ஆங்கிலத்தை விரும்பியா படித்தோம்? பள்ளிப் பருவத்தில் நம் மேல் திணிக்கப்பட்ட ஒன்றே ஆங்கிலம்! அந்த மொழி நமக்கு வேலை வாய்ப்பைத் தரவில்லையா? உலகில் பலரிடம் நம் கருத்தை பகிர உதவவில்லையா?//

ஆங்கிலம் உலக பொது மொழி ஆகி பல வருடங்களாகி விட்டது!
நம்மிடையே தகவல் பரிமாற்றத்திற்கு தாய் மொழியும், அண்டை மாநிலங்களும், அண்டை நாடுகளுக்கும் ஆங்கிலத்தை பயன்படுத்தி கொள்ளலாமே!

ஆங்கிலம் என்றால் உலகம் முழுவதும் சமாளிக்கலாம், இந்தி என்றால் இங்கே மட்டும் தான்!
அகலமாக யோசிக்கலாமே!

இந்த பதிவை ஆங்கிலத்தில் எழுதியிருந்தால் உலகமே உரைடாயலில் கலந்து கொள்ளும்!
எல்லோரும் ”வால் சார்” என்று அழைத்திருப்பார்கள்!

கோவி.கண்ணன் said...

//மேலும் சென்னை அடையாறு மஸ்ஜிதில் நிறைய ஆப்ரிக்கர்கள் தொழ வருகிறார்கள்.அவர்களை எல்லாம் தமிழ் கறக சொல்ல முடியுமா ??//

தொழுகைக்குத் தேவை ஒரு வணக்கப் பாடல் அதைத்தான் அல்லாஹூ அக்பர் என்று இழுத்துப் பாடுகிறார்கள். நாளடைவில் மசூதிக்குச் செல்லுபவர்களுக்கு மனப்பாடம் ஆகிவிடும், அதன் பொருளை அங்கு அறிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்துக் கொள்ளலாம்.

ஆனால் தொழுக்கைக்காக என்ற பெயரில் அரபிப் பாடசாலைகளை வழியுறுத்துவது ஏன் என்று தான் கேட்டேன். ஒரு ஆப்ரிக்கர் ஆப்ரிக்க மொழியில் தான் தொழைகை செய்ய வேண்டும், அரபியில் தொழுகை செய்ய வேண்டாம் என்றெல்லாம் நான் சொல்லவில்லை.

அரபிப் பள்ளிகள் மூலம் அரபியர்கள் மொழித் திணிப்பில் ஈடுபவடுவதாக நீங்கள் கருதுவதில்லையா ? தொழுகைத் தவிர்த்தும், எப்போதாவது புனித பயணம் செய்யும் போது தவிர்க்க இயலாத காரணங்களினால் அரபிகளிடம் பேச வாய்ப்பு என்பதைத் தவிர்த்து வேறெதற்கெல்லாம் அரபி பயன்படுகிறது என்று சொன்னால் அறிந்து கொள்கிறேன்.

கபிலன் said...

ஒரு அறையில 100 பேர் இருக்காங்க. ஒரு டிவி இருக்கு. 94 பேர்க்கு இந்தி மட்டும் தான் தெரியும், அதனால Zee TV தான் பாக்கணும்னு சொல்றாங்க. 6 பேருக்கு, தமிழும், ஆங்கிலமும் மட்டும் தான் தெரியும் அதனால HBO பாக்கணும்னு சொல்றாங்க. 6 பேரு இந்தி படிக்கிறது வசதியா?அல்லது 94 பேர் ஆங்கிலம் கத்துக்குறது வசதியா?

அ.மு.செய்யது said...

//அரபிப் பள்ளிகள் மூலம் அரபியர்கள் மொழித் திணிப்பில் ஈடுபவடுவதாக நீங்கள் கருதுவதில்லையா ?//

எந்த ஒரு அரேபியனும் எந்த ஒரு நாட்டவரையும், நீ அரபியில் தான் தொழுகை நடத்த வேண்டும்
என்று சொல்லவில்லை.

அரபியில் தொழுகை நடத்துவதற்கு காரணம் நான் ஏற்கெனவே சொல்லிவிட்டேன்.மணிகண்டன் சொன்னது போல‌
அது Rationalized.

எல்லாருக்கும் பொதுவான மொழி என்பதால் அரபியை பயன்படுத்துகிறோம்.அதனால்
எங்களுக்கு எந்த பாதிப்போ தாக்கமோ வயிற்றுப்போக்கோ வாந்தியோ வரப்போவதில்லை.

எனவே முஸ்லிம்கள் அரபியில் தொழுகை நடத்துவதால் நீங்கள் ஐ மீன் கோவி சார் !!! உங்களுக்கு எதாவது
மன உளைச்சல் ஏற்பட்டுவிட்டதா ???

மேலும் அரேபிய பாடசாலை என்று தனியாக ஒன்று இல்லை.இஸ்லாமிய கல்வியை போதிக்கும் மதராஸாக்கள்
தான் இருக்கின்றன.அவை குர் ஆனை அரபியில் ஓதக்கற்றுத் தருவதோடன்றி,

அதன் தமிழாக்கமான தர்ஜீமாவும் மற்ற இஸ்லாமிய சட்டதிட்டங்களை
யும் கற்று தருகின்றன...அனைத்தும் தமிழில்..

அப்படிப்பட்ட மதராஸா ஒன்றில் தான் நானும் இஸ்லாம் கற்றேன்.தூய தமிழில்........!!!!!!!!!!

என்மீது யாரும் "நீ அரபியில் தான் கற்க வேண்டும் என்று திணிக்க வில்லை......."

Please dont be like a window shopper...!!! again...

Anonymous said...

\\தொழுகைக்காக இஸ்லாமை ஏற்றுக் கொண்டார்கள் என்கிற ஒரு காரணத்திற்காக இஸ்லாமியர்கள் அனைவரிடமும் ஒரு மொழி வலிந்து திணிக்கப்படுவது
இஸ்லாமியர்கள் விளக்குவார்களா ?

எனக்கு தெரிந்து சமஸ்கிரதம் முன்னெடுத்துச் சொல்லப்படுவதற்கும் அரபி முன்னெடுத்துச் செல்ல்லப்படுவதற்கும் பெரிய வேறுபாடு தெரியவில்லை. சமஸ்கிரதக்காரார்கள் தேவமொழி என்று சொல்லுகிறார்கள், அரபிக்காரர்கள் சொல்லுவது இல்லை. ஆனால் மொழி மேன்மைப் போற்றும் அரசியல் ஒன்று தான்\\

செய்யது பாய் சொன்னது போல கோவி கண்ணனுக்கு என்னுடைய பதில்..

முதலில் ஒரு விஷயம். நீங்கள் இஸ்லாத்தை பற்றி என்ன கேள்வி வேண்டுமானாலும் கேளுங்கள், அனால் ஒரு முடிவுக்கு வரும்முன் சிறிதளவேனும் ஆராய்ந்து பார்த்தல் நல்லது.

இஸ்லாத்தை பொறுத்தவரை எந்த மொழியும், எந்த இனமும், எந்த நாடும் ஒன்றுக்கொன்று மேன்மையானவை அல்ல. இறைவன் முன் எல்லாமே சமம் தான்.

"All mankind is from Adam and Eve, an Arab has no superiority over a non-Arab nor a non-Arab has any superiority over an Arab; also a white has no superiority over black nor a black has any superiority over white except by piety and good action. "
Prophet Muhammed's (pbuh) last sermon.

குரான் அரபி மொழியில் அருளப்பட்டாலும் ஒரு போதும் அது தான் உலகில் சிறந்த மொழி என்று கூறப்படவில்லை. ஒவ்வொவொரு மொழி பேசும் சமுதாயத்திற்கும் ஒரு இறை தூதரை இறைவன் அனுப்பி இருக்கிறான் என்பது குரான் கூறும் கருத்து.

நீங்கள் சொல்வது போல் அரபி என்பது ஒரு திணிப்பு என்பது உண்மை என்றால் இஸ்லாம் இவ்வளவு விரைவில் பரவி இருக்காது. இஸ்லாம் அரபு தேசத்தில் தோன்றினாலும் அந்த நாட்களில் அரபிகள் எவ்வளவு மூடநம்பிக்கை கொண்டிருந்தனர் அன்பதையும், தம் பெண் மக்களை உயிஒர்டு கொன்றுக்கொண்டிருந்தனர் என்பதையும், நபி (ஸல்) அவர்கள் அவற்றை எப்படி இறைவனின் உதவியோடு ஒழிதுக்கட்டினார்கள் என்பதையும் இஸ்லாத்தை பற்றி படித்தால் தெரியும்.

நான் முதற்கொண்டு அரபி அல்லாத பல முஸ்லிம்கள் தத்தமது தாய் மொழியிலேயே இறைவனை பிரார்த்திக்கின்றனர். இது மட்டுமா? தமிழ் நாட்டிலும், கேரளாவிலும், இலங்கையிலும் வாழும் முஸ்லிம்கள் ஒரு காலத்தில் அரபு நாடுகளில் இருந்து வியாபாரிகளாக வந்தவர்களே. இங்கே தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் ஆரம்ப காலத்தில் அரபி பேசி வந்தவர்கள், பின்னர் அர்வி (arwi) எனப்படும் அரபு தமிழை தங்கள் தாய் மொழியாக்கினார். இன்று அந்த அரபும் போய் முழு தமிழ் பேசும் முஸ்லிம்கள் ஆயினர். இன்றளவும் தமிழ் முஸ்லிம்களின் பேச்சில் சில அரபு சொற்கள் தெரிப்பதற்கு காரணம் அதுவே.

எதை மட்டும் பாதுகாக்க வேண்டுமோ, அந்தளவு பாதுகாத்தல் போதுமானது. அது போல தான் இறைவசனமும் தொழுகை முறையும். நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு தொழுதார்களோ, அதை அப்படியே பாதுகாத்து கடைப்பிடிப்பதே இதன் நோக்கம். மேலும், பிரக்டிகல் ஆக ஒரு மொழியின் மூலம் உணரப்படும் பொருள் நிச்சயம் அதை மொழி மாற்றம் செய்யும்போது உணர முடியாது.

இதோ, உங்களால் திருவள்ளுவர் பற்றி அறிந்தே இருக்க முடியாத ஒருவரிடம் போய் "குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள் மழலைச்சொல் கேளாதவர்" என்னும் குரலில் உள்ள 'மழலை' என்ற சொல்லுக்கு பொருள் விளங்க வேய்க்க முடியுமா? எனக்கு தெரிந்து ஆங்கிலத்தில் மழலை என்னும் சொல்லுக்கு அதன் பொருளை உணர்த்தக்கூடிய இன்னொரு சொல்லோ, அதை விளங்க வைக்க முடியும் என்ற நம்பிக்கையோ இல்லை.

அதே போல தான் அரபியிலும். இறை வசனங்களுள் பலவற்றிற்கு நம்மால் நேரிடையாக பொருள் உணர முடியாது. அந்த மொழியை படித்தால் மட்டுமே விளங்கும்.

-Indian Muslimah-

நிஜாம் கான் said...

//கோவி.கண்ணன் said...//

//அரபிப் பள்ளிகள் மூலம் அரபியர்கள் மொழித் திணிப்பில் ஈடுபவடுவதாக நீங்கள் கருதுவதில்லையா ? தொழுகைத் தவிர்த்தும், எப்போதாவது புனித பயணம் செய்யும் போது தவிர்க்க இயலாத காரணங்களினால் அரபிகளிடம் பேச வாய்ப்பு என்பதைத் தவிர்த்து வேறெதற்கெல்லாம் அரபி பயன்படுகிறது என்று சொன்னால் அறிந்து கொள்கிறேன்.//

அண்ணே! முஸ்லீம்களின் வேதம் குரான் உலகம் முழுவதும் அரபியில் தான் இருக்கின்றது. அதை அதன் மூல மொழியில் படிப்பதற்காக மட்டுமே அரபிப் பாடசாலைகள். அதைத் தவிர்த்து அரபு மொழிக்கென எவ்வித தனிச்சிறப்பும் கிடையாது. முகமது நபி அரேபியாவில் பிறந்த காரணத்தால் அவருக்கு அவருடைய தாய்மொழியாம் அரபிமொழியில் வேதம் கிடைத்தது. தமிழ் நாட்டில் பிறந்திருந்தால் தமிழில் கிடைத்திருக்கும். தவிரவும் அரபி மொழியால் அரபு நாட்டு முஸ்லீம்களைத் தவிர மற்றவர்களுக்கு வேறு எந்த பயனும் கிடையாது. ஆனால் சென்னை மற்றும் ஹைதராபாத் உருது முஸ்லீம்கள் அவர்களின் தாய்மொழி உருது என்பதால் அதை அவர்கள் பள்ளிவாசல்கள் மற்றும் இல்லங்கள் வாகனங்களில் எழுதி வைத்திருக்கின்றனர்.

உருது மொழி என்பது ஒரு கலப்பு காப்பி மொழி.அதற்கு எழுத்துக்கள் கிடையாது. எவ்வாறு மலாய் மொழிக்கு எழுத்துக்கள் இன்றி ஆங்கிலம் எழுத்துக்களாக பயன்படுகிறதோ அதேபோல உருதுமொழிக்கி அரபி எழுத்துக்களைப் பயன்படுத்துகின்றனர். எனவே தான் அதைக் கானும் போது ஏதோ அரபி ஆதிக்கம் போலத் தெரிகிறது. மலாய மொழிக்கு முன்னர் அரபி எழுதுக்கள் தான் பயன்படுத்தப் பட்டன. பின்னர் தற்சமயம் அது ஆங்கிலமாக மாற்றிக்கொள்ளப்பட்டது.

கோவி.கண்ணன் said...

//அதே போல தான் அரபியிலும். இறை வசனங்களுள் பலவற்றிற்கு நம்மால் நேரிடையாக பொருள் உணர முடியாது. அந்த மொழியை படித்தால் மட்டுமே விளங்கும்.

-Indian Muslimah-//

அது எல்லா மொழிகளுக்கும் பொதுவானது தான். அப்படிப்பார்த்தால் படிக்காத பாமரர்கள் இஸ்லாமியர்களாக இருக்கும் போது அவர்களுக்கு முதலில் அரபி சொல்லிக் கொடுத்துவிட்டு அதன் பிறகு குரானைப் படிக்கச் சொல்லுவிங்கள ?

ஒரு மொழியின் உண்மைப் பொருளை அறிந்து கொள்வதற்கு அம்மொழியை அறிந்து இருந்தால் மட்டுமே போதாது, அதன் வட்டார வழக்கு, அம்மொழி பேசுபவர்களின் பண்பாடுகள் அனைத்தும் அறிந்து இருந்தால் தான் முடியும், நீங்கள் சொல்வது போல் கற்றுக் கொள்வதால் மட்டுமே ஒரு மொழியின் பொருளை முழுதாக விளங்கிக் கொள்ள முடியாது.

நல்லவேளை 'இறைவன்' என்ற சொல்லுக்கு அரபியில் இன்னும் இதைவிட உயர்ந்த பொருள் உள்ளது என்று சொல்லாமல் போனீர்களே அதுவரை பாராட்டலாம்.

Anonymous said...

ஹிந்தி பற்றிய வால் அண்ணாவின் கருத்துக்கு எனக்கு உடன்பாடில்லை. ஏன்னா ஹிந்தி வளைகுடா நாடுகளில் ரொம்ப முக்கியம். நீ ஒரு இந்தியன் தானே உனக்கு ஹிந்தி தெரியாதா என கேட்கிறார்கள். ஹிந்தி தெரியாமல் பலர் துபாய் போன்ற நாடுகளில் துன்பப்படுகிறார்கள். அப்ப எல்லாம் அவர்கள் தமிழை திட்டுகிறார்கள். ஹிந்தி போராட்டம் பண்ணியவர்களை திட்டுகிறார்கள். இது தமிழுக்கு ஆரோக்கியமானதல்ல என்பதே என் கருத்து

அ.மு.செய்யது said...

"All mankind is from Adam and Eve, an Arab has no superiority over a non-Arab nor a non-Arab has any superiority over an Arab; also a white has no superiority over black nor a black has any superiority over white except by piety and good action. "
Prophet Muhammed's (pbuh) last sermon.
//

இந்த சமத்துவத்தை இஸ்லாத்தை தவிர தைரியமாக வேறெந்த மார்க்கம் சோல்லியிருக்கிறது ??

காட்டுங்கள் பார்ப்போம் !!!

வால்பையன் said...

//ஒரு அறையில 100 பேர் இருக்காங்க. ஒரு டிவி இருக்கு. 94 பேர்க்கு இந்தி மட்டும் தான் தெரியும், அதனால Zee TV தான் பாக்கணும்னு சொல்றாங்க. 6 பேருக்கு, தமிழும், ஆங்கிலமும் மட்டும் தான் தெரியும் அதனால HBO பாக்கணும்னு சொல்றாங்க. 6 பேரு இந்தி படிக்கிறது வசதியா?அல்லது 94 பேர் ஆங்கிலம் கத்துக்குறது வசதியா?//


ஒரு மாநிலத்தில் ஆறு கோடி பேர் இருக்கிறார்கள், அதிலிருந்து ஒரு லட்சம் பேர் வடநாட்ற்கு வேலைக்கு போகலாம்! அதற்காக அந்த ஒரு லட்சம் பேரை உனக்கு வேண்டுமானால் இந்தி படிச்சிகோன்னு சொல்றது சரியா, ஆறு கோடி பேரும் இந்தி படிச்சே ஆகனும்னு சொல்றது சரியா!?

வால்பையன் said...

//ஒவ்வொவொரு மொழி பேசும் சமுதாயத்திற்கும் ஒரு இறை தூதரை இறைவன் அனுப்பி இருக்கிறான் என்பது குரான் கூறும் கருத்து. //

அடேயப்பா எத்தனை லட்சம் தூதர்கள்!

கோவி.கண்ணன் said...

//இந்த சமத்துவத்தை இஸ்லாத்தை தவிர தைரியமாக வேறெந்த மார்க்கம் சோல்லியிருக்கிறது ??

காட்டுங்கள் பார்ப்போம் !!!//

'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்று திருமூலர் தமிழில் சொல்லி இருப்பதில் எந்த ஒரு மொழிப் பெயரையும், இனப்பெயரையும் கூட குறிப்பிட்டுச் சொல்லப்படவில்லை.

மற்றதையும் கொஞ்சம் படிங்க

கோவி.கண்ணன் said...

//எனவே முஸ்லிம்கள் அரபியில் தொழுகை நடத்துவதால் நீங்கள் ஐ மீன் கோவி சார் !!! உங்களுக்கு எதாவது
மன உளைச்சல் ஏற்பட்டுவிட்டதா ???//

ஏன் ஏன் இந்த டென்சன், இந்தக் கேள்விகளை நான் கேட்காவிட்டால் வேறொருவர் கேட்பார், எனது முகம் தெரிந்தது என்பதற்காக பாய்சல் ஏன் ?

ஒன்றே ஒன்று சொல்லுங்கள், இது போன்ற விவாதங்கள் எங்களுக்கு பிடிக்காது என்று சொல்லிவிட்டால் பேசப் போவதே இல்லை.

உங்கள் கருத்துக்களுக்கு அழுத்தம் கொடுக்க அதில் சீற்றம் காட்டவேண்டும் என்று எதாவது இலக்கணம் இருக்கிறதா ?

வால்பையன் said...

//நீ ஒரு இந்தியன் தானே உனக்கு ஹிந்தி தெரியாதா என கேட்கிறார்கள்.//

தமிழ்நாட்டில் தமிழே ஒழுங்கா தெரியாமல் இருக்கிறார்கள், ஹிந்தி ஒரு கேடாக்கும்!

//ஹிந்தி தெரியாமல் பலர் துபாய் போன்ற நாடுகளில் துன்பப்படுகிறார்கள். //

துபாய் நாட்டில் அவர்கள் பணம் தான் செல்லும்! இந்திய பணத்தை தான் செலவு செய்வேன் என்று அடம் பிடிக்க கூடாது! அவர்கள் தேவைக்கு அவர்கள் கற்று கொள்ளலாம்!

அனைவரும் கட்டாயம் என்றால் எப்படி!

Anonymous said...

\\அது எல்லா மொழிகளுக்கும் பொதுவானது தான். அப்படிப்பார்த்தால் படிக்காத பாமரர்கள் இஸ்லாமியர்களாக இருக்கும் போது அவர்களுக்கு முதலில் அரபி சொல்லிக் கொடுத்துவிட்டு அதன் பிறகு குரானைப் படிக்கச் சொல்லுவிங்கள ?\\

எனக்கே முதலில் அரபி தெரியாது. இன்றளவும் நான் குரானை அரபியிலும் (வெறும் வாசிப்பது), பின்னர் அதனுடைய அர்த்தத்தை தமிழிலும் ஒதுகிறவள். எல்லா முஸ்லிம்களும் அரபி கற்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. அனால் குறைந்தபட்சம் அரபியை வாசிக்கவாவது தெரிந்தால் நல்லது. ஒரு மொழியை கறப்பதன் மூலம் நிச்சயமாக நம் அறிவு மேலோங்குகிறதே தவிர நாம் தரம் குறைந்து போவதில்லை.


\\ஒரு மொழியின் உண்மைப் பொருளை அறிந்து கொள்வதற்கு அம்மொழியை அறிந்து இருந்தால் மட்டுமே போதாது, அதன் வட்டார வழக்கு, அம்மொழி பேசுபவர்களின் பண்பாடுகள் அனைத்தும் அறிந்து இருந்தால் தான் முடியும், நீங்கள் சொல்வது போல் கற்றுக் கொள்வதால் மட்டுமே ஒரு மொழியின் பொருளை முழுதாக விளங்கிக் கொள்ள முடியாது.\\

கண்டிப்பாக. நீங்கள் ஒரு மொழியை படிக்க விரும்பினால் இதை அனைத்துமே கற்றுதரப்படுமே.

\\நல்லவேளை 'இறைவன்' என்ற சொல்லுக்கு அரபியில் இன்னும் இதைவிட உயர்ந்த பொருள் உள்ளது என்று சொல்லாமல் போனீர்களே அதுவரை பாராட்டலாம்.\\

இந்த வாக்கியம் கண்மூடித்தனமான போக்கையே காட்டுகிறது. நிச்சயமாக அல்லாஹ் என்பதற்கு நிகரான வார்த்தை இவ்வுலகில் எந்த மொழியிலும் கிடையாது. அதன் origin அரபி அல்ல. ஹீப்ரூ. அல்லாஹ் என்ற வார்த்தை ஓரிறைவன் மட்டுமே என்பதை மிகதெளிவாக எடுத்துக்கூறும் ஒரே வார்த்தை. மற்ற எந்த மொழியிலும் உள்ள , பன்மை, ஆண்பால், பெண்பால் போன்ற விதிகளுக்கு அப்பாற்பட்டது.



-Indian Muslimah-

அ.மு.செய்யது said...

// கோவி.கண்ணன் said...
//எனவே முஸ்லிம்கள் அரபியில் தொழுகை நடத்துவதால் நீங்கள் ஐ மீன் கோவி சார் !!! உங்களுக்கு எதாவது
மன உளைச்சல் ஏற்பட்டுவிட்டதா ???//

ஏன் ஏன் இந்த டென்சன், இந்தக் கேள்விகளை நான் கேட்காவிட்டால் வேறொருவர் கேட்பார், எனது முகம் தெரிந்தது என்பதற்காக பாய்சல் ஏன் ?

உங்கள் கருத்துக்களுக்கு அழுத்தம் கொடுக்க அதில் சீற்றம் காட்டவேண்டும் என்று எதாவது இலக்கணம் இருக்கிறதா ?/

டென்ஷனா ??? ஹா ஹா...

என் கேள்விகளுக்கு முதலில் விடையளிக்க ட்ரை பண்ணுங்க சார் !!!!

அப்புறம் சீற்றங்கள் குறித்து விவாதிப்போம்.

//ஒன்றே ஒன்று சொல்லுங்கள், இது போன்ற விவாதங்கள் எங்களுக்கு பிடிக்காது என்று சொல்லிவிட்டால் பேசப் போவதே இல்லை.//

இதைப்பற்றிய விவாதம் நிச்சயம் அவசியப்படுகிறது.அதனால் தான் இன்று நான் வால்பையன் ப்ளாகில்
டெண்ட் கட்டி அமர்ந்திருக்கிறேன்.

வால்பையன் said...

//இன்று நான் வால்பையன் ப்ளாகில்
டெண்ட் கட்டி அமர்ந்திருக்கிறேன். //

இன்னும் வாடகை வந்து சேரவில்லை என்று ஞாபகபடுத்தி கொள்கிறேன்!

கோவி.கண்ணன் said...

//மற்ற எந்த மொழியிலும் உள்ள , பன்மை, ஆண்பால், பெண்பால் போன்ற விதிகளுக்கு அப்பாற்பட்டது. //

ஆண்பால் இல்லையா ?

'இறைவன் சொல்லுகிறான்' என்று குரானில் பல இடங்களில் வருகிறதே.

கோவி.கண்ணன் said...

//எனவே முஸ்லிம்கள் அரபியில் தொழுகை நடத்துவதால் நீங்கள் ஐ மீன் கோவி சார் !!! உங்களுக்கு எதாவது
மன உளைச்சல் ஏற்பட்டுவிட்டதா ???

டென்ஷனா ??? ஹா ஹா...

என் கேள்விகளுக்கு முதலில் விடையளிக்க ட்ரை பண்ணுங்க சார் !!!!//

நான் குடைச்சல், மனவுளைச்சல் என்று எங்காவது சொல்லி இருக்கிறேனா ?

ஒருவருக்கு மன உளைச்சல் என்றால் அவர் கிட்டதட்ட பைத்தியம் தான், அப்படியாக முடிவு செய்து கொண்டு, உங்கள் கருத்துக்கு எதிராக சொல்கிறேன் என்கிற ஒரே காரணத்தினால், அப்படி ஒரு சொல்லைப் பழகியவர்களிடமும் உங்களைப் போன்றவர் வீசும் போது, அங்கு என்போன்றவரின் விவாதம் விழலுக்கு இறைத்த நீர்.

உங்க ஊரில் மதக்கலவரம் நடக்கும் போது நான் உங்கள் அருகில் இருந்தால் இந்து என்பதற்காக என்னை வெட்டுவீர்களா ? முதலில் சொல்பவர் யார் என்று பாருங்கள் சார், அதன் பிறகு அவர் என்ன கருத்துச் சொன்னார், ஏற்கலாமா வேண்டாமா ? மறுப்புத் தெரிவிக்கலாமா ? அல்லது அப்படியே விட்டுவிடலாமா என்று நினைப்பது தான் சரி.

மன உளைச்சலா என்று பாய்வதெல்லாம் அதீத மத வெறி என்று படிப்பவர்கள் புரிந்து கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதை நான் விரும்புகிறேன்.

அ.மு.செய்யது said...

"நாம் செய்தோம்...நாம் கட்டளையிட்டோம்" என்று கூட குர் ஆனில் வருகிறது.

அதனால் இறைவன் என்ன பல பேரா என்று கேள்வி எழலாம்.

இங்கு "..நான்..செய்தான்... " என்றால்

Gender in royalty !!! not gender in feminine or masculine..

நாம் என்பது Plural in respect..not plural in quantity...

அ.மு.செய்யது said...

//மன உளைச்சல் என்றால் அவர் கிட்டதட்ட பைத்தியம் தான்,//

இதற்குப் பெயர் தான் Perceptual Biased.

மன உளைச்சலுக்கான புதிய விளக்கத்திற்கு நன்றி !!!

அப்போ !!! மன உளைச்சல் அடைந்ததாக நஷ்ட ஈடு கேக்குறவங்க எல்லாம் பைத்தியக்காரங்களா ??

நான் குறிப்பிட்ட மன உளைச்சலில் உள்ளார்ந்த அர்த்தம் அது இல்லை கோவி சார்.புரிந்து கொள்வீர்கள்
என நம்புகிறேன்.

அ.மு.செய்யது said...

//வால்பையன் said...
//இன்று நான் வால்பையன் ப்ளாகில்
டெண்ட் கட்டி அமர்ந்திருக்கிறேன். //

இன்னும் வாடகை வந்து சேரவில்லை என்று ஞாபகபடுத்தி கொள்கிறேன்!

//

விடுங்க தல....பூனே வாங்க....!!!

மகேந்திரன் எட்டப்பராசன் said...

அரபிக்கில் தொழுகை நடத்தினாலும் எந்த ஒரு இஸ்லாமியரும் தொழுகையில் சமமாக நடத்தப் படுகிறார்கள்.மொழி விஷயத்திலும்,பெண்கள் உரிமையிலும் பிற்போக்குத் தனமாக இருந்தாலும் குர் ஆன் கற்ற யாரும் ஓதுவார் ஆக முடியும்.இங்கே அப்படியா? தென்னாடுடைய சிவனானாலும் பள்ளிகொண்ட பரந்தாமனே ஆனாலும் வேறு யாரும் அர்ச்சனை செய்ய முடியாது.தப்பித் தவறி அரசு ஒரு உத்தரவு யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் என்று அரசாணை தான் போட்டது .காஞ்சி சங்கராச்சார்யர் முதல் மதுரை ஆதினம் வரை எதிர்த்து வழாக்காடப்ப்போனார்கள்.

அ.மு.செய்யது said...

//உங்க ஊரில் மதக்கலவரம் நடக்கும் போது நான் உங்கள் அருகில் இருந்தால் இந்து என்பதற்காக என்னை வெட்டுவீர்களா ? முதலில் சொல்பவர் யார் என்று பாருங்கள் சார், அதன் பிறகு அவர் என்ன கருத்துச் சொன்னார், ஏற்கலாமா வேண்டாமா ? மறுப்புத் தெரிவிக்கலாமா ? அல்லது அப்படியே விட்டுவிடலாமா என்று நினைப்பது தான் சரி. //

உங்கள் கருத்துகளுக்கு இன்று அரை புத்த்க அளவில் விளக்கம் அளித்தாயிற்று..கொஞ்சம் கொஞ்சமாக என்னுடைய‌
பின்னூட்டங்களை மேலே பாருங்கள்.

பிஸி என்றால் சொல்லுங்கள் மீண்டும் கீழே காப்பி பேஸ்ட் செய்கிறேன்.

Anonymous said...

\\'இறைவன் சொல்லுகிறான்' என்று குரானில் பல இடங்களில் வருகிறதே.\\

ஹ்ம்ம். இஸ்லாத்தை பற்றியும் ஓரிறைக்கொள்கையை பற்றியும் நீங்கள் இன்னும் நிறைய புரிந்துக்கொள்ள வேண்டும் கோவியார் அவர்களே.

"இறைவன் கூறுகிறான்" "கட்டளையிடுகிறான்" என்றே குரானில் குறிப்படப்பட்டிருக்கும். இதையே நீங்கள் ஆங்கிலத்தில் உள்ள மொழிப்பெயர்ப்பை பார்த்தல் அதில் capital letters ("He", "Him", "His") பதத்தை பாவித்திருப்பார்கள். இதுவும் மொழிபெயர்ப்பின் மூலம் ஏற்படுத்தப்பட்ட ஒரு compromise.

அரபி மொழியை பொறுத்தவரை, அல்லாஹ்வை "அவன்" என்று குறிப்பிடுவதற்கு காரணம், the word is grammatically masculine and not naturally masculine. ஆங்கிலத்திலும், கப்பலை பெண்பால் படத்தில் குறிப்பிடுவார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

அரபியில் பிரஞ்சு மொழியை போல சில வார்த்தைகளுக்கு ஆண்பால், பெண்பால் பதத்தை பாவிக்கிக்கபடுகிறது. அரபியில் neuter gender இல்லை. இறைவனை "அவன்" என்று மொழிப்பெயர்க்கபடுவதற்கு kaaranam மொழியின் கூறுகளே தவிர அல்லாஹ்வை ஆண் என்று கூறுவதற்கில்லை.


-Indian Muslimah-

அ.மு.செய்யது said...

//அரபியில் பிரஞ்சு மொழியை போல சில வார்த்தைகளுக்கு ஆண்பால், பெண்பால் பதத்தை பாவிக்கிக்கபடுகிறது. அரபியில் neuter gender இல்லை. இறைவனை "அவன்" என்று மொழிப்பெயர்க்கபடுவதற்கு kaaranam மொழியின் கூறுகளே தவிர அல்லாஹ்வை ஆண் என்று கூறுவதற்கில்லை.
//

Fair enough !!!!!

Anonymous said...

//மகேந்திரன் எட்டப்பராசன் said...

அரபிக்கில் தொழுகை நடத்தினாலும் எந்த ஒரு இஸ்லாமியரும் தொழுகையில் சமமாக நடத்தப் படுகிறார்கள்.மொழி விஷயத்திலும்,பெண்கள் உரிமையிலும் பிற்போக்குத் தனமாக இருந்தாலும் குர் ஆன் கற்ற யாரும் ஓதுவார் ஆக முடியும்.இங்கே அப்படியா? தென்னாடுடைய சிவனானாலும் பள்ளிகொண்ட பரந்தாமனே ஆனாலும் வேறு யாரும் அர்ச்சனை செய்ய முடியாது.தப்பித் தவறி அரசு ஒரு உத்தரவு யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் என்று அரசாணை தான் போட்டது .காஞ்சி சங்கராச்சார்யர் முதல் மதுரை ஆதினம் வரை எதிர்த்து வழாக்காடப்ப்போனார்கள்.//

சவூதீயீல் ஒரு குறிப்பிட்ட (மெக்கா) எல்லைக்கோட்டை தெரியாமல் கடந்தால் கூட அன்னிய மதத்தவரை கழுத்தறுத்துக்
கொல்வதை விடவா.... இது பெரிது... நண்பா,,,,,,,!!!!

அ.மு.செய்யது said...

//சவூதீயீல் ஒரு குறிப்பிட்ட (மெக்கா) எல்லைக்கோட்டை தெரியாமல் கடந்தால் கூட அன்னிய மதத்தவரை கழுத்தறுத்துக்
கொல்வதை விடவா.... இது பெரிது... நண்பா,,,,,,,!!
//

நீங்கள் சொல்லும் ஹரம் எல்லையை மாற்று மதத்தவர் தப்பித் தவறிக்கூட கடக்க முடியாது என்ற பட்சத்தில்
நீங்கள் சொல்லும் கழுத்தறுப்பு ஆதாரமில்லாத தகவல்.

நம் நேருவுக்கே அங்கு அனுமதி மறுக்கப்பட்டது.....

இந்த அனுமதி மறுப்பிற்கான காரணம்:

அந்த "ஹரம்" எல்லை முற்றிலும் புனித தலம். முழுக்க முழுக்க வழிபாடுகளுக்காக்வே ஏற்படுத்தப்பட்டது.
அங்கு கேளிக்கைகளுக்கோ, புல் பூண்டுகளுக்கு சேதம் விளைவிப்பதற்கோ அனுமதி இல்லை.

இந்த விஷயங்கள் தெரியாத மாற்று மதத்தவர் அதை மீற வாய்ப்புள்ளது என்ற ஒரே காரணத்திற்காகத்தான்
ஹரம் எல்லையில் மாற்றுமதத்தவருக்கு அனுமதி இல்லை !!!

S.A. நவாஸுதீன் said...

Anonymous said...

சவூதீயீல் ஒரு குறிப்பிட்ட (மெக்கா) எல்லைக்கோட்டை தெரியாமல் கடந்தால் கூட அன்னிய மதத்தவரை கழுத்தறுத்துக்
கொல்வதை விடவா.... இது பெரிது... நண்பா,,,,,,,!!!!

ஹா ஹா ஹா. இது செம காமெடியால்ல இருக்கு. மக்கா / மதீனாவின் நகருக்குள் எந்த வழியிலும் நுழையமுடியாது. எல்லா இடத்திலும் பலகைகலில் தெளிவாக எழுதி வைத்துள்ளனர். தெரியாமல் நுழைய என்ற பேச்சுக்கே இடமில்லை.

அடுத்து, யார் சொன்னா அன்னிய மதத்தவரை கழுத்தறுப்பங்கன்னு. ஏதோ சொல்லனுங்ரதுக்காக ஒன்றும் ஆதாரம் இல்லாமல் சொல்லவேண்டாம். விவாதம் நன்று. விதண்டாவாதம் நல்லதல்ல நண்பரே.

S.A. நவாஸுதீன் said...

Anonymous said...

சவூதீயீல் ஒரு குறிப்பிட்ட (மெக்கா) எல்லைக்கோட்டை தெரியாமல் கடந்தால் கூட அன்னிய மதத்தவரை கழுத்தறுத்துக்
கொல்வதை விடவா.... இது பெரிது... நண்பா,,,,,,,!!!!

ஹா ஹா ஹா. இது செம காமெடியால்ல இருக்கு. மக்கா / மதீனாவின் நகருக்குள் எந்த வழியிலும் நுழையமுடியாது. எல்லா இடத்திலும் பலகைகலில் தெளிவாக எழுதி வைத்துள்ளனர். தெரியாமல் நுழைய என்ற பேச்சுக்கே இடமில்லை.

அடுத்து, யார் சொன்னா அன்னிய மதத்தவரை கழுத்தறுப்பங்கன்னு. ஏதோ சொல்லனுங்ரதுக்காக ஒன்றும் ஆதாரம் இல்லாமல் சொல்லவேண்டாம். விவாதம் நன்று. விதண்டாவாதம் நல்லதல்ல நண்பரே.

Anonymous said...

//நீங்கள் சொல்லும் ஹரம் எல்லையை மாற்று மதத்தவர் தப்பித் தவறிக்கூட கடக்க முடியாது என்ற பட்சத்தில்
நீங்கள் சொல்லும் கழுத்தறுப்பு ஆதாரமில்லாத தகவல்.//


சில வருடங்களுக்கு முன்பு.... கேரளாவை சேர்ந்த ஒருவர், வழி தெரியாமல், உள்ளெ புகுந்து.... கழுத்து வெட்ட உத்தரவு பிறப்பிக்கப் பட்டு, கடைசியில், வாஜ்பாய் தலையிட்ட பின்பு, அவரை விடுவித்ததை பத்திரிக்கைகளில் படித்த நினைவு இல்லையா.... நண்பா...!!!!

Non-Muslims are not permitted to enter Mecca by Saudi law.[1][45]
"Non-Muslim Bypass:" Non-Muslims are not permitted to enter Mecca.

The Saudi government uses the following verse as a Qur’an confirmation for this law; however, there are other interpretations to this verse (in particular, People of the Book would usually not be regarded as pagans):[46]

"O you who believe(in Allâh's Oneness and His Messenger Muhammad صلي الله عليه و سلم)! Verily, the Mushrikun(polytheists, pagans, idolaters, disbelievers in the Oneness of Allâh, and in the Message of Muhammad صلي الله عليه و سلم) are Najasun (impure). So let them not come near Al-Masjiadal-Harâm (at Makkah) after this year; and if you fear poverty, Allâh will enrich you if He wills, out of His Bounty. Surely, Allâh is All-Knowing, All-Wise." -- Qur’an, 9:28

The existence of cities closed to non-Muslims and the mystery of the Hajjs aroused intense curiosity in people from around the world. Some have disguised themselves as Muslims and entered the city of Mecca and then the Grand Mosque to experience the Hajj for themselves. The first to leave a record was Ludovico di Varthema of Bologna in 1503.[47] The most famous account of a foreigner's journey to Mecca is A Personal Narrative of a Pilgrimage to Mecca and Medina, written by Sir Richard Francis Burton.[48] Burton traveled as a Qadiriyyah Sufi from Afghanistan; his name, as he signed it in Arabic below his frontispiece portrait for The Jew The Gypsy and El Islam was al-Hajj 'Abdullah.[citation needed] Individuals who use fake certificates of Muslim identity to enter may be arrested and prosecuted by Saudi authorities.[49]

Anonymous said...

Taken Without a Crime--How Saudis Treat Shiite Worshippers in Mecca
Al-Huda News ^ | 24 Aug 2007 | Sayed Jawad Qazwini

Posted on 27 August 2007 08:19:12 by Ooh-Ah

Following is the personal account of Sayed Jawad Qazwini who was among those arrested and beaten by the Saudi religious police.

1. Taken without any crime. I, Sayed Mohammad Jawad AlQazwini, a citizen of the United States of America, was praying in the grand holy mosque in Mecca on August 5, 2007 at 12:45AM when I realized that one of the appointed religious police was giving a lecture regarding Shi'a Muslims. He was attacking the belief system of the shi'a, stating that they are considered infidels.Among his comments were that the shi'a worship the dead, the shi'a worship stones and rocks, the shi'a are hypocrites, and the shi'a gave the Muslim land to the enemy (meaning Iraq's occupation by American troops). At this point a young man came with his old mother to perform prayer.He said to the religious police as he passed next to him that they should stop accusing the shi'a and allow them to pray in peace. At this point I told the young man to ignore him and to continue with his prayers. The religious police looked at us and said in a solid tone, "you are all cowards and we will purify the holy mosque from the shi'a."I told him we are the guests of Allah and that the king has given himself the title of "the servant of the grand masques" Thus, you are in no position to go against Allah and the government of your king. He then arrested me and began to push me and hit me in front of thousands of worshipers.He dragged me by the hand and took me to his headquarters located in the grand masque.I specifically asked to be taken by the police so that I knew I was dealing with the government itself, keeping the fact in mind that I was completely innocent.A police man was asked to take me to the detention center inside the masque. At this point some of the men in our group saw me and followed me to see what was going to happen to me. We were all peaceful, respectful, and obedient to all their orders. Until now we had not committed any crime. The police officer took me and threw me very roughly into a small room.

Anonymous said...

2. Physical abuse without any crime. Inside the room were some individuals. The one sitting behind the desk asked why I was brought in.The religious police responded by telling him that I was "an Iraqi shi'a causing problems." I realized immediately that the room and the prison cells were being emptied from true criminals such as pickpockets and thieves. I sensed that I was in danger, and sure enough, as soon as the door closed the man behind the desk threw his boot at me, which was launched directly on my head. I was then in pain due to the fact that the boot was very heavy, and that the distance between me and him was very short. He then threw a stapler and it missed me by an inch or so. Again, he managed to throw his other boot at my head and this time it landed right on my face. At this point I was in more pain and I could barely see.I had a severe headache. He then proceeded to beat me and he was laughing with amusement, telling the rest on the police in the room how good it felt to hit a shi'a. I realized that the door slightly opened and the men from my group were still behind the door. I shouted for help, and they came in. As soon as they entered the man behind the desk called for back-up which resulted in an immediate dispatch of over 30 police into that small room.

Anonymous said...

3. Torture of innocent American and British pilgrims. As they entered we told them we were all either American or British citizens, thinking that it would stop them from beating us.The responded by saying the hate us because we were shi'a and from the land of the "infidels."They began to hit us with chairs, bats, radio communication devices, their fists, kicks, and punches continually for at least 30 minutes. All our clothes were ripped and some individuals were bleeding heavily; one from the nose, one from the head and another from the mouth.I was slapped many times in the face. At one point one of the members begged them to stop hitting him in English and they continued. I witnessed them banging some of the individuals' heads to the wall. We were beaten harshly and brutally. We could not find mercy in any one of them. They handcuffed us all. We never fought back. When they realized we meant no harm, they calmed down. Moments later a long bearded policeman came in and went around the room hitting and punching us once again. He said, "I never got a chance" and kicked many in the genitals and stomach. He punched me very hard in the chest and ruthlessly injured my chest and ribs. He said to me "take this message with you back to America."One of the group members was suffering from an asthma attack.He could not breathe, his face turned purple, and we told them he needed a doctor. They responded by saying we all deserved to die.

«Oldest ‹Older   1 – 200 of 427   Newer› Newest»

!

Blog Widget by LinkWithin