பார்பனீயத்தின் புதிய தில்லாலங்கடி!

பார்பனீயம் என்பது ஒரு சாராரை அடிமைப்படுத்தி அல்லது அறிவு ரீதியாக சிறுமைப்படுத்தி அடக்கி ஆளும் குணம்! அக்குணம் இருப்பவர்கள் பார்பனரல்லாத மற்ற மனிதர்களும் இருக்கிறார்கள், அக்குணம் இல்லாத பார்ப்பனர்களும் இருக்கிறார்கள். நான் பொதுவாகவே சாதியத்தை எதிர்ப்பதால் இது எந்த வகையிலும் பார்பனர்களுக்கு எதிரான பதிவல்ல என்பது தெரியும், ஒருவேளை இதில் குறிப்பிட்டு பார்பனர்களை சாடுவது போல் இருந்தால் அது சாதி ரீதியாக குறிப்பீடாமல் பார்பனீய ரீதியாக குறிப்பிடுவது மட்டுமே!

***


பைபிள் என்றாலே புத்தகம் என்று தான் அர்த்தம், தமிழில் விவிலியம் என்று சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன், இதன் மூல மொழி ஹீப்ரு,யூத மக்களால் பேசப்படும் மொழி, இன்று உலகில் அதிகமாக மொழி பெயர்கப்பட்டுள்ள நூலில் விவிலியத்திற்கே முதலிடம்! எங்கேயும் விவிலியத்தை அதன் மூல மொழியில் தான் படிக்க வேண்டும் என்று குறிப்பிடவில்லை! இத்தனைக்கும் அதன் ஆதி மொழியான ஹீப்ரு கிட்டதட்ட அழியும் தருவாயில் உள்ளது!

குர் ஆன் என்று அழைக்கப்படும் இஸ்லாமியர்களின் புனித நூலின் ஆதி மொழி உருது!அரபி, அரேபிய நாடுகளின் ஆட்சி மொழியும் அது தான்! இஸ்லாமியர்களின் பெரும்பாலோர்க்கு உருதுஅரபி தெரிந்திருக்கிறது, அதே நேரம் உருதுஅரபி தெரியாமல் தமிழ் மட்டுமே தெரிந்த இஸ்லாமியர்களும் இருக்கிறார்கள், அவர்களுக்கு தமிழ் அர்த்தத்துடன் குரானும் இருக்கிறது, நானே பார்த்துள்ளேன்!, ஆனாலும் இவர்கள் பிரார்த்தனைக்கு உருதுஅரபி மட்டுமே பயன்படுத்துகிறார்கள்! இவர்கள் கடவுளுக்கு உருதுஅரபி மட்டும் தான் தெரியும் போல! அதை பற்றி பிறகு விவாதிக்கலாம், ஏனென்றால் இவர்கள் உருதைஅரபியை மொழியாக தான் பார்க்கீறார்கள், உருதுஅரபி என்ற மொழியை மந்திரம் என்று எங்கேயும் பீலா விடவில்லை!,
(இவர்களுக்கும் பார்பனீய சிந்தனை உண்டா இல்லையான்னு இவுங்க தான் வந்து சொல்லனும்!)


மொழி என்பது ஒலி வடிவ தகவல் தொடர்பு சாதனம் மட்டுமே!, ஆண்டாண்டு காலமாக நம்மிடையே இருக்கும் பல மொழிகள் நம் தேவைகேற்ப சுருங்கியும், விரிந்தும் தற்போதய நிலையில் இருக்கிறது, ஆயினும் அதன் அடிப்படை இலக்கணம் மாறவில்லை என்பது முக்கியம், சங்ககால தமிழ் பாடல்களை இன்று விளக்கவுரை இல்லாமல் படிக்க முடியாது!, உலகில் உள்ள பல மொழிகளில் வெகு சில மொழிகளுக்கே இந்த சிறப்பம்சம், அதில் தமிழ் மொழியும் ஒன்று, அதற்காக யாரும் எங்கள் மொழி தான் வேதம், அதை தினம் நான்கு முறை சொன்னால் சோறு கிடைக்கும், அந்த பாட்டை பாடினால் உடலிலுள்ள நோய்களெல்லாம் பறந்துவிடும் என்று யாரும் சொல்லவில்லை! ஆனால் சிலகாலமா நான் கவனிக்கிறேன்!

தமிழ் வலையுலகில் சமஸ்கிருதத்தின் திணிப்பு அதிகமாக இருக்கிறது! அந்த மந்திரத்தை சொன்னால் மூச்சு வரும், இந்த மந்திரத்தை சொன்னால் பேச்சு வரும் என்று காட்டுத்தனமாக மூளைச்சலவை நடந்து கொண்டிருக்கிறது!, எதை சொன்னாலும் நம்பிவிடும் நம் மக்கள் கூட அதே பாணியில் இடுகைகள் எழுதி கொண்டிருக்கிறார்கள், வேதத்தில் ஒவ்வோரு சொல்லும் மந்திரமாம்! கடவுளுக்கு பூஜை செய்ய இருக்கும் துதிகள் இல்லாமல் சமஸ்கிருதம் என்பதே மனிதனை நோயிலிருந்து மீட்க வந்த ஒரு மருத்துவ மொழி என்று!



சமஸ்கிருதத்துக்கும், வட மொழி எழுத்துகளுக்கும் உள்ள ஒற்றுமைகளை விளக்கவே இந்த இரண்டு படங்களும், எல்லோரும் ஹிந்தி கத்துகோனும்னு டில்லியில ஒருத்தன் ஏன் கத்திகிட்டு இருக்கான்னு இப்ப புரியுதா!? இதுக்கு பேர் தான் பார்பனீய சிந்தனைன்னு சொல்றது!



கவனிக்க திராவிட(தென் இந்திய) மொழிகளில் நாந்தாண்டா பெரிய கொம்பன் என்பது போல் தலையில் கீரீடம் இல்லை!, இந்த வித்தியாசம் போதுமென்று நினைக்கிறேன் மொழி கூட பார்பனீயம் பேசுகிறது என்பதை சுட்டிகாட்ட!


தஞ்சாவூர் பொம்மையாவது ஆட்டிவிட்டால் தான் மண்டையை ஆட்டுகிறது! நம் ஆட்கள் மட்டும் ஏன் எதை சொன்னாலும் மண்டையை ஆட்டுகிறார்கள்!, மொழி எப்படிடா மருத்துவமாகும், ஓம் என்தற்கும் பூம் என்பதற்கும் கிட்டதட்ட ஒரே உச்சரிப்பு தானே வருகிறது! அப்படியே இருந்தாலும் தமிழ் பேசும் போது உள் செல்லும் காற்று மருத்துவ வேலைகள் செய்யாதா!?, என்னத்த சொல்ல, என்னயிருந்தாலும் ரோட்டில் வித்தை காட்டுபவன் ”ரத்தம் கக்குவ” என்று சொன்னது பாக்கெடில் இருப்பதை அள்ளி கொடுத்து வரும் மனிதர்கள் தாமே இங்கிருப்பவர்கள்!

427 வாங்கிகட்டி கொண்டது:

«Oldest   ‹Older   401 – 427 of 427   Newer›   Newest»
Anonymous said...

நிஜாம் said...
////அரபிகளுக்கு உலகில் மொத்தமாக அடிமைகள் தேவை , அதை இஸ்லாம் பெயரில் செய்கிறார்கள் .அவ்வளவுதான் //

உலக இஸ்லாமியர்களின் புனித தளமான காபாவில் தொழுகைக்கு ஒரு இந்தியன் முதலிலே இடம் பிடித்தால் அவனுக்கு தான் முன்வரிசை, கடைசியாக வரும் அரபு மக்காவாசி தாமதாமாக வந்தால் குவிக்கப் பட்டிருக்கும் செருப்புகளை தள்ளிவிட்டு விட்டு அந்த இடத்திலே நின்று தொழுவார்.ஆதாரம் உங்கள் நண்பர்கள் யாராவது மக்கா போயிருப்பார்கள் அவர்களைக் கேளுங்கள்.
இதுவா அடிமைத் தனம். இது புரிந்து கொள்ளாத அல்லது வம்படியான முட்டாள் தனம்.

//

காபாவிற்கு தொழுகப்போறதே அடிமைத்தனம்தான்

Anna said...

Looks like I've come late for the party. Nonetheless I'll leave few of my thoughts.

"நான் பொதுவாகவே சாதியத்தை எதிர்ப்பதால் இது எந்த வகையிலும் பார்பனர்களுக்கு எதிரான பதிவல்ல என்பது தெரியும், ஒருவேளை இதில் குறிப்பிட்டு பார்பனர்களை சாடுவது போல் இருந்தால் அது சாதி ரீதியாக குறிப்பீடாமல் பார்பனீய ரீதியாக குறிப்பிடுவது மட்டுமே!"

Even though this is true. I think since the word 'பார்பனீயம்' has always been associated with the actions of bramins, many people will find it hard to read passed this word to grasp the actual message of this article. You can see this for yourself in most of the comments.

"உருது என்ற மொழியை மந்திரம் என்று எங்கேயும் பீலா விடவில்லை!,

I have heard many muslims glorifying arabic many times. They normally say that you can only understand quran properly by reading it in arabic. Apparently none of the translations are that great.

I've had some arguments with few blog writers when they claim that quran has many scientific facts. If I bullet point the inconsistencies in quran with science, then they say 'or but that's because you've read the English translation, it's perfect in Arabic'. :) Which I think, is pretty much what the sanskrit fans think of sanskrit as well.

"நீங்க ஒரு அப்பனுக்கு பிறந்திருந்தா என்னைய கொன்னுட்டு போங்க!"
WOW! I did not expect this from you. That guy was way out of line and was very rude. I accept that. Please show your diagreement to him only and don't bring his mother in this in any way. This statement is very sexistic in nature. I understand that this was not your intention and it's almost cultural norm to say things like this (very similar to saying 'son of a b--ch', but I find it unacceptable.

I expected better from you, having seen some of your comments in other blogs. I was somewhat dissappointed that you had said this.

Anonymous said...

நன்றி வால் பதிலுக்கு. உங்கள் பெண் சுதந்திரத்தை பற்றிய விவாதத்தை தள்ளி விட்டு நான் கிடக்கும் இந்த அடிப்படை சந்தேகங்களை pattriÉ
மதத்தின் பெயரால் அடக்குமுறை அதிகமே அதை நான் ஆதரிக்கவில்லை.
ஆனால் அந்த மதத்தின் சில நல்ல விசயங்களை மறுக்க முடியுமாÉ
மதத்தின் சாடுங்கள் பெரும்பாலும் அந்தந்த பகுதி வாழ்வியலை சார்ந்ததுவே . தென்னகthதில் இந்து பெண்கள் முக்காடு போடுவது என்பது அமங்கலம். ஆனால் வடக்கில் திருமணப் பெண்ணே முக்காடு இட்டுக்கொள்ள அதை கணவன் முதலிரவில் நீக்கி தனது துணைவியை பார்ப்பான். எனவே மதம் சார்ந்த அனைத்தும் மக்களின் அனுபவங்களை சார்ந்த்தது வடக்கில் படையெடுப்புகள், குளிர் என்று எத்தனையோ அவர்கள் பெண்களின் உடை முறையில் பங்கு கொண்டிருக்கிறது.

மதம் மறுப்பவர்கள் அதிகமானதாக காட்டும் இன்றைய இளைய சமுதாயம் சகிப்புத்தன்மை அறவே இல்லாமல் இருக்கின்றதே. இது நல்ல ஆரோக்கியமான போக்கா É மதம் தவறு என்றால் அதற்காக புதிய வழியாக தனி தீவுகளாய் மனிதன் மாறுவதற்கு வழி வகுக்கும் இந்த நவீனத்துவம் எப்படி சரியாகும் É
ஒவ்வொரு மத கிரந்தங்கள் வாழ்வியலை சொல்லிவந்தது அதில் அடக்குமுறை அதிகம் ஆனபோது அடிமைகள் உருவாக்கப்பட்டார்கள் . மதம் இலக்கியங்கள் சரியானவகையில் போதிக்கப்படாத போது ஏற்பட்ட விளைவுகளுக்காக மொத்தமும் தவறு என்று சொன்னால் எப்படி
ஒன்றும் இல்லை தசாவதாரம் என்ற இந்து மத தத்துவத்தில் டார்வின் சொன்ன வழியில் அறிவியலாய் சொல்லப்பட்ட உலக உருவாக்கம் எனக்கு போதிக்கப்பட்டது .
நீரில் வாழம் உயிர் மச்ச அவதாரம் அதன் வழியாக மனித பரிமாணத்தை சொன்னார்கள் . நாரதன் கிண்ணத்தில் எண்ணய் வைத்து தனது பக்தியை நிரூபிக்க சொன்ன போது அடுத்தவனை அவன் சூழல் அறியாது எள்ளாதே என்று போதித்தார்கள் அனவே சமயத்தை சரிவர சொல்லிவைக்கும் மனிதர்கள் இல்லை என்பதால் மதம் எப்படி தவறாகும்
அணுவின் ஆக்க சக்தியை பயன்பாட்டில் இருந்தாலும் அணு ஆயுதம் பற்றி சொல்லி அணுக்கொள்கையை கையில் எடுக்கும் அமெரிக்காவின் புதிய ஏகாதிபத்தியம் போல இருக்கு இந்த மத மறுப்பு கொள்கை

இப்னு அப்துல் ரஜாக் said...

குரானுடைய மொழி உருது என்பது மிக தவறு.அரபி மொழியே குரானின் மொழி.தற்போது அலுவல் மொழியாக நூறுக்கும் மேற்பட்ட நாடுகளில் புழக்கத்தில் உள்ளது.மேலும் பல விவரங்களுக்கு
www.irf.net
www.whyislam.org
பார்க்கவும்.நன்றி சகோதரா.

Bhuvanesh said...

//குரானுடைய மொழி உருது என்பது மிக தவறு.அரபி மொழியே குரானின் மொழி.//

இது ரொம்ப தாமதம் :)

Unknown said...

adengappa illa vaal payan nalla than antha katturaiyai vazhanki ullaar.
athil enna kuttham kandu ulleerkal ayya.
konjam pakutharivoodum vimarsanam seiunkal.
mozhiyil sirithum illai perithum
illai.
ellam samam endru than solli ullar .
avar solla vantha ull karuthu athuthan

atharku poi avarai paadai paduthi unkal katturai mosam endu sila nanbarkal vimarsanam seithullaarkal ennal athai yetru kolla mutiyavillai .

namalaku theriyatha visayathai avar theilivu paduthi ullar athai konjam kavaniyunkal .


www.sundaramahalingam.blogspot.com

Anonymous said...

இணைய ரவுடிகளால் பரிதாபமாக பறிபோன உயிர் http://a1realism.blogspot.com/2009/09/blog-post_20.html

supersubra said...

//தென் இந்திய மொழிகளில் நாந்தாண்டா பெரிய கொம்பன் //
இதை பற்றி கண்ணதாசன் ஒரு கவிதையில் அவர் இந்தி எதிர்ப்பாளராக இருந்த பொழுது எழுதிய கவிதை
கோடொன்று போடாது தொங்க வொன்னா குரங்கு மொழி
பின்னர் அவர் இந்தியை ஆதரித்து எழுதிய கவிதை
இமயம் சுற்றி வருவேன் இந்தி பேசி திரிவேன்
-------------------------------------------------------------------------------------------
சில சத்தங்களுக்கு சில உணர்வுகளை தூண்டும் திறன் உண்டு
முரசொலி வீரத்தை கோபத்தை தூண்டும் (திமுகவின் முரசொலி அல்ல)
பைபிள் இல் ஜெரிகோ என்ற நகரத்தின் மாதிர சுவற்றை தூள் தூளாக்க
சப்தம் உபயோகித்த கதை அறிவியல் பூர்வமாக முடியும் என்று நிரூபிக்க பட்ட ஒன்று.
தொங்கு பாலத்தின் மேல் ராணுவம் ஒழுங்கு நடை போட்டால் ஒத்தர்வின் மூலம் அது நொறுங்கும் வாய்ப்புண்டு என்பது அறிவியல் தெளிவு. அதை போல் ஒலிககு வெவ்வேறு பரிணாமம் உண்டு. அது ஸம்ஸ்க்ரிதம் மட்டும் சார்ந்ததல்ல. திருமூலம் திருமந்திரம் அபிராமி அந்தாதி திவ்ய பிரபந்தம் திருவாசகம் போன்ற பல நூல்களில் இத்தகு திறன் மிகு பாடல்கள் உள்ளன. நன்மை பயக்கும் எதுவாக இருந்தாலும் அது எந்த மொழியில் இருந்தாலும் எடுத்துகொள்தல் அறிவுடைமை. பகுத்தறிவு என்ற பெயரில் அனைத்தையும் எதிர்ப்பது அதுவும் எந்த வித அடிப்படை ஆய்வும் இன்றி எதிர்ப்பது மடமை என்பது என்கருத்து.

Sanjai Gandhi said...

//பார்பனீயம் என்பது ஒரு சாராரை அடிமைப்படுத்தி அல்லது அறிவு ரீதியாக சிறுமைப்படுத்தி அடக்கி ஆளும் குணம்! அக்குணம் இருப்பவர்கள் பார்பனரல்லாத மற்ற மனிதர்களும் இருக்கிறார்கள், அக்குணம் இல்லாத பார்ப்பனர்களும் இருக்கிறார்கள். நான் பொதுவாகவே சாதியத்தை எதிர்ப்பதால் இது எந்த வகையிலும் பார்பனர்களுக்கு எதிரான பதிவல்ல என்பது தெரியும், ஒருவேளை இதில் குறிப்பிட்டு பார்பனர்களை சாடுவது போல் இருந்தால் அது சாதி ரீதியாக குறிப்பீடாமல் பார்பனீய ரீதியாக குறிப்பிடுவது மட்டுமே!//

ரொம்ப நல்லவருங்க எங்க வாலு. அதென்ன அந்த செயலுக்கு பார்பப்னீயம்னு பேர்? கவுண்டரினியம், செட்டியாரினியம், தேவரினியம்னு வைக்கிறது தானே?

மதி.இண்டியா said...

//ரொம்ப நல்லவருங்க எங்க வாலு. அதென்ன அந்த செயலுக்கு பார்பப்னீயம்னு பேர்? கவுண்டரினியம், செட்டியாரினியம், தேவரினியம்னு வைக்கிறது தானே?//

அதுக்கு பேரு செத்த பாம்பை அடிக்கறது .

அண்ணே , நம்ம ஊருல பாப்பாந்தான் சாதி பெயரால் அராஜகம் பண்றானா ?

கேட்டா அவன் சொல்லி குடுத்ததும்பாங்க , நமக்கு எங்க போச்சு ?

புதிய பார்ப்பனர்கள் என்று சொல்லலாமோ ?

வீணாபோனவன் said...

ஆஹா, மதம் என்ற பெயரில் 423 காமெண்ட தட்டிடிங்க அருண் தல. எப்படி இப்படி எல்லாம்?. முடியல சாமி. மதம் என்பது நமது நம்பிக்கை. மதம் மனிதனை நல்வழி படுத்த உறுவாக்கிய ஒரு வழி. அது எந்த மொழி ஆகட்டும். மாற்றான் மதத்தை தயவு செய்து இழிவு செய்ய வேண்டாம். உங்களுக்கு மத நம்பிக்கை இருக்காமல் இருக்கலாம். அதற்காக மாற்றான் நம்பிக்கையை சீண்ட வேண்டாம் தல. ஒரு அரபிய மொழிக்கும், ஹிந்தி மொழிக்கும் உருது மொழிக்கும் வித்தியாசம் காணமுடியவில்லை உங்கலால். திருக்குரான், பைப்ல், கீதை, மகா வம்சம் முலுதும் படித்த படியால் நீங்கள் கூறிய கூற்றை என்னால் ஒற்றுகுக்கொள்ள முடியவில்லை. தாங்கள் ஈரோ-டில் பிறந்திருந்தாலும், மற்றவர் மனதை புண்பதுத்த வேண்டாமே.

You are always my bro boss. However certain times you behave crazy. Please avoid attacking other religions . They all have their own believes and faith. My humble request is that do not post any new entry when you are drunk. BTW: am also posting this while I'm drinking. However we need to have some sense, isn't?. Correct me if am wrong.

Your bro,
-Ganesh.

Unknown said...

ஓம் என்பதற்கும் பூம் என்பதற்கும் கிட்டதட்ட ஒரே உச்சரிப்பு தானே வருகிறது!..... ஏம் மாப்புள....அப்புடி பார்த்தா தாய் என்பதற்கும் நாய் , பேய் என்பதற்கும் கிட்டதட்ட ஒரே உச்சரிப்பு தானே வருது..... ஒங்கள பெத்த நாய் சொகமா இருக்காங்களானு கேட்டா இயல்பா எடுத்துப்பீங்களா???? ஏன்யா இப்புடி காமால கண்ண வெச்சுக்கிட்டு அலயறீங்க....போங்கய்யா....போயி புள்ளைங்கள படிக்க வெய்யுங்க.... கப்பித்தனமா பேசிக்கிட்டு......

வால்பையன் said...

டாஞ்சூர்!

உங்க பேருக்கு சரியான அர்த்தம் என்ன?
டேஞ்சரா? தஞ்சாவூரா?

அதை முதல்ல கிளியர் பண்ணிட்டு, உங்க அம்மாவை தாய்ன்னு கூப்பிடுற்தா, நாய்ன்னு கூப்பிடுறதான்னு முடிவுக்கு வரலாம்!

Unknown said...

அடாடா அப்புடி போடுறா டகால்டி மவராசா..... ஓமும், பூமும் ஒண்ணுதான்னு நான் சொல்லல ராசா.... அதுனால பெத்த தாயும் நாயும் எங்களுக்கு ஒண்ணு கெடயாது.... ரெண்டும் ஒண்ணுமாறிதான கீது ... இன்னா இசுபெசல் கீதுன்னு பொன்மொழிஞ்சது நீனு ..... நீதான் முடிவு செய்யனும் ஒன்ன பெத்த ஆத்தாள தாய்னு கூப்புடறதா நாய்னு பாராட்டறதான்னு ....

வால்பையன் said...

தாய்னா வேறு மொழிகாரனுக்கு கெட்ட வார்த்தையா கூட இருக்கலாம்!
என்னை பெற்றவளை தலையில் தூக்கி வைத்து கொள்வதற்கும் தாய் என்ற சொல்லை தலையில் தூக்கி வைத்து கொள்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது!

என்னைப்பொறுத்தவரை ஓமும், ஊ..ம் ஒரே மாதிரி இருக்கும் வேற என்னாத்த சொல்ல!

நாம சன்னி முஸ்லீம்னு சொல்றத ஒரிஜினல் அராப் முஸ்லீம் எப்படி சொல்லுவாங்க தெரியுமா?

உங்க மந்திரமும், மாங்காயும் ரொம்ப நாளைக்கு வேகாது!

Unknown said...

இந்த ஆராய்ச்சிக் கட்டுரையைப் படித்துப் பாருங்கள் நண்பரே
http://paper.ijcsns.org/07_book/200808/20080825.pdf

இதேபோல் 'பூம்"முக்கும் ஆராய்ச்சி செய்து பாருங்கள். இன்னொன்றையும் கவனிக்க, ஆராய்ச்சியாளர் நம்மைப்போல் பார்பனரல்லாதாரே. எல்லாமே ஒன்றுதான் என்றால், சில இசையை கேட்டால் இனிக்கிறது, சில தலைவலி தருகிறது ? ஏன் ? இயற்பியலில் "ரெசோனன்ஸ்" என்கிற 'ஒத்ததிர்வு" சில மந்திரங்களின் கட்டமைப்பால், அலைநீளத்தால் ஏற்படும் அதனால் நல்ல, தீய நிகழ்வுகள் நிகழாலாம். அதனால் தான் மிலிட்டரி வீரர்கள் பாலத்தை கடக்கும்போது left-right என்று ரிதமாக செல்லாமல் சாதாரணமாக நடப்பார்கள். ஏன்? ஒத்ததிர்வு காரணமாக பாலம் உடைய வாய்ப்புள்ளது என்பதால். இதை மடத்தனம் என்பிர்களா? பார்ப்பனர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக எதிர்க்காமல் அதில் ஏதாவது நன்மை, உண்மை உள்ளதா என்றும் பாருங்கள் . மனிதனால் கேட்க முடியாத அல்ட்ராசொனிக் எனப்படும் ஒலி அலையைக் கொண்டுதான் வவ்வால்கள் பறப்பதாக அறிவியலார் கூறுகின்றார்கள். நமக்கு காதில் கேட்கவில்லை என்பதால் அல்ட்ராசொனிக் அலையே இல்லை என்று ஆகிவிடுமா?

வால்பையன் said...

//சில இசையை கேட்டால் இனிக்கிறது, சில தலைவலி தருகிறது ? //

அதற்கும் நமது மனநிலைக்கும் சம்பந்தம் இருக்கிறது! எவ்வளவு தேனான இசை என்றாலும் எனக்காக ஒரு பிகர் காத்து கொண்டிருக்கும் பொழுது அது எனக்கு பேரிரைச்சல் தான்!

//ஒத்ததிர்வு காரணமாக பாலம் உடைய வாய்ப்புள்ளது என்பதால். இதை மடத்தனம் என்பிர்களா?//

ஒத்ததிர்வின் திடதன்மையும், அதன் மந்திர சக்தியும் ஒன்றா!? ஒத்ததிர்வும், மந்திரமும் ஒன்றென்றால் நான் மடையன் தான் விடுங்கள்!

//மனிதனால் கேட்க முடியாத அல்ட்ராசொனிக் எனப்படும் ஒலி அலையைக் கொண்டுதான் வவ்வால்கள் பறப்பதாக அறிவியலார் கூறுகின்றார்கள். நமக்கு காதில் கேட்கவில்லை என்பதால் அல்ட்ராசொனிக் அலையே இல்லை என்று ஆகிவிடுமா? //

அது இல்லையென்று நான் சொல்லவில்லையே!
சமஸ்கிருதம் இருக்கு! அதுவும் ஒரு மொழிதான், நாம் தேவையென்றால் அதை எடுத்து படிக்கவும் முடியும்!

நான் சொன்னது சமஸ்கிருதம் மந்திரமல்ல! புரியுதா!?

Unknown said...

கண்டிப்பாக .... நானும் சமஸ்கிருதம் முழுதும் மந்திரம் என்று சொல்லவில்லை. ஆனால் அதிலுள்ள மந்திரங்கள் எல்லாம் டுபாக்கூர் என்று ஒட்டு மொத்தமாக தள்ளிவிடமுடியாது.வேத மந்திரங்கள் என்பதை அவர்கள் ஒரேவித கட்டுப்பாடான உச்சரிப்பில் குறிப்பிட்ட ஏற்ற இறக்கங்களுடன் நுற்றாண்டுகளாக பின்பற்றி வருகிறார்கள். எழுதினால் கூட உச்சரிப்பு மாறக்கூடும் என்பதால்தான் தமிழில் இதற்கு "எழுதாக் கிளவி" என்று பெயர். மந்திரங்களுக்கு தான் இந்த ஒலி கட்டுப்பாடு. ஸ்தோத்திரங்கள், பஜனைப்பாடல்கள் போன்றவற்றிர்க்கு கிடையாது. அதனால் தான் மந்திரத்தில் சொல்லின் பொருள் தெரியவில்லை என்றாலும் தவறில்லை என்கிறார்கள். ஏனென்றால் ஒலிக்குத்தான் இங்கு முக்கியத்துவம். முடிந்தால் இயற்பியலில் ஒலி, அலை (wave & field theory) போன்ற விளக்கங்களைப் படித்துப் பாருங்கள், மிகவும் ஆச்சரியமாக இருக்கும். தமிழில் கந்த சஷ்டி கவசம் போன்ற இனிய தெய்வ வழிபாட்டுப் பாடல்கள் இத்தகைய இனிய அனுபவம் அளிக்க வல்லவை. எனவே வேறு மொழிகளில் இதை செய்ய முடியாது என்பதல்ல வாதம் .... இத்தகைய அட்டெம்ப்ட் பிற மொழிகளில் எனக்குத் தெரிந்து இயற்பியல் விதிகளுக்கு உட்பட்டு வடமொழி (அதிலும் வேத மந்திரங்கள் எனப்படும் தொடர்களில் மட்டும்) தவிர்த்து பெரும்பாலும் இல்லை.

வால்பையன் said...

//தமிழில் கந்த சஷ்டி கவசம் போன்ற இனிய தெய்வ வழிபாட்டுப் பாடல்கள் இத்தகைய இனிய அனுபவம் அளிக்க வல்லவை.//

பதினெட்டு வயது இளமொட்டு மனது
ஏங்குது பாய் போட!

அப்படியே உருகி ஓடுதா மனசு!

பாப்பான் மத்தவங்களை முட்டாள்னு சொல்லுவான் கேள்வி பட்டிருக்கேன், முட்டாளாய் மாத்துவான்னு இப்போ தான் கேள்விப்படுறேன்!

கடவுளே இல்லைங்கிறேன், மந்திரம் மட்டும் எப்படியிருக்கும்!

Unknown said...

வெரிகுட் .... நான் கடவுளை இழுக்க வில்லை , ஒலி அலைகள் பற்றிதான் கூறிக்கொண்டு இருக்கிறேன் .... ஆனாலும் கடவுளும் இல்லை மந்திரமும் இல்லை என்று மக்களை மாங்காய் மடையர்களாக நினைத்துக்கொண்டு மஞ்சளும் மாலையுமாக பாங்காய் அலையும் ஊர்க்காரர்களையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

வால்பையன் said...

//கடவுளும் இல்லை மந்திரமும் இல்லை என்று மக்களை மாங்காய் மடையர்களாக நினைத்துக்கொண்டு மஞ்சளும் மாலையுமாக பாங்காய் அலையும் ஊர்க்காரர்களையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். //

அதற்கு நான் பொறுப்பாளி கிடையாது!
நான் பேசி கொண்டிருப்பது என் கருத்துகளை மட்டுமே!
கடவுள் மறுப்பும்,சாதி, மத மறுப்பும் எனக்கு சொல்லிக் கொடுத்து வந்ததில்லை!

TBCD said...

சரித்திர புகழ் பெற்ற இந்தப் பதிவில் நானும் பின்னுட்டமிட்டுக்கொள்கிறேன்.

வாலூ...!

///பாப்பான் மத்தவங்களை முட்டாள்னு சொல்லுவான் கேள்வி பட்டிருக்கேன், முட்டாளாய் மாத்துவான்னு இப்போ தான் கேள்விப்படுறேன்!///

இதில் நீங்க சொன்னது பாப்பானா, பார்ப்பனீயனா...புதசெவி !

(இதெப்படி இருக்கு )

வால்பையன் said...

//இதில் நீங்க சொன்னது பாப்பானா, பார்ப்பனீயனா...புதசெவி !//

முட்டாளாக்குவதும் முட்டாள் என்று சொல்வதும் பார்பனீயம் தானே!
அதை யார் செய்தாலும் பார்பனீயம் தான்!
இங்கே பேச்சு பார்பனர்கள் பற்றி வந்ததால் அதை சேர்த்திருக்கிறேன்!
அதாவது சமஸ்கிருதம் மந்திரம் என்று சொல்வது பார்பனன் தானே!

வால்பையன் said...

மிக காரமான உரையாடல்களில் கலந்து கொண்ட நண்பர்களுக்கு நன்றி!

Anonymous said...

//தொங்கு பாலத்தின் மேல் ராணுவம் ஒழுங்கு நடை போட்டால் ஒத்தர்வின் மூலம் அது நொறுங்கும் வாய்ப்புண்டு என்பது அறிவியல் தெளிவு. அதை போல் ஒலிககு வெவ்வேறு பரிணாமம் உண்டு. அது ஸம்ஸ்க்ரிதம் மட்டும் சார்ந்ததல்ல. திருமூலம் திருமந்திரம் அபிராமி அந்தாதி திவ்ய பிரபந்தம் திருவாசகம் போன்ற பல நூல்களில் இத்தகு திறன் மிகு பாடல்கள் உள்ளன. நன்மை பயக்கும் எதுவாக இருந்தாலும் அது எந்த மொழியில் இருந்தாலும் எடுத்துகொள்தல் அறிவுடைமை. பகுத்தறிவு என்ற பெயரில் அனைத்தையும் எதிர்ப்பது அதுவும் எந்த வித அடிப்படை ஆய்வும் இன்றி எதிர்ப்பது மடமை என்பது என்கருத்து.//

Proof please.

Anonymous said...

you have learn more,,,Just should go to school. some one said in tamil "Kakkaravan keana payla irunda, yeruma flight ottumaam"

வால்பையன் said...

//Anonymous said...

you have learn more,,,Just should go to school. some one said in tamil "Kakkaravan keana payla irunda, yeruma flight ottumaam"//

இதை தமிழில் சொன்னால் பழமொழி!
அப்படியே சமஸ்கிருதத்தில் சொல்லி, அது மந்திரம் என்று பூச்சி காட்டும் கூட்டம் சொல்வதை தான் நிங்க கேப்பிங்களோ!?
இல்ல நீங்களும் அந்த பார்பன கும்பலில் ஒரு ஆளா!?

«Oldest ‹Older   401 – 427 of 427   Newer› Newest»

!

Blog Widget by LinkWithin