மீண்டும் ஒரு முறை!!....

அது ஆட்டத்தின் முக்கியமான கட்டம். அந்த கோல் தான் அந்த அணியின் எதிர்காலத்தையும் அவனுடைய எதிர்காலத்தையும் தீர்மானிக்க போகிறது.
சீனியர் முதல் ஜூனியர் வரை அனைவரும் அட்வைஸ். இத்தனைக்கும் அவன் தான் அந்த டீமின் பீலே என்று பெயர் வாங்கியவன். பல புதியவர்களின் வருகையால் தனது முழுத் திறமையையும் காட்டவேண்டிய சூழ்நிலையில் இருக்கிறான்.

எதிர்பாராமல் கிடைத்தது தான் அந்த பெனால்டி ஷாட். கோல் போஸ்டின் நடுவே எதிர் அணியின் கோல் கீப்பர் நின்று கொண்டிருக்கிறான். அவனையும் தாண்டி உள்ளே செல்லவேண்டும் அவன் உதைக்கும் பந்து. பெனால்டி ஷாட்டில் அவனது திறமை அறிந்தே மொத்த அணியினரும் அவனை தேர்வு செய்திருந்தனர். அந்த கோலை போடவில்லை என்றால் அந்த தகுதி சுற்றிலேயே அந்த அணி வெளியேற வேண்டும்.

நொடிப்பொழுதில் சில கணக்குகள் போட்டான் அவன். பொதுவாக மனிதர்கள் வலது பக்கத்தில் உறுதியானவர்கள். கீப்பரின் இடது பக்கத்தை பயன்படுத்தி கொண்டால் இந்த கோலை போட்டுவிடலாம். இருப்பினும் அவனை திசை திருப்ப அந்த வலது பக்கத்தில் அடிப்பது போல் பாவனை செய்ய வேண்டும். அவன் அறிந்த பல யுக்திகளை பயன்படுத்தி பந்தை உதைத்து விட்டான்.

அது அந்தரத்தில் பறந்தது.

கோல் கீப்பர் பாலை தடுக்க அவனது வலது பக்கத்தில் பறந்தான்.

பந்து அவனுக்கு போக்கு காட்டி விட்டு இடது பக்கத்தில் பறந்தது.

அது கண்டிப்பாக கோல் தான் என்று எதிர்பார்த்து அனைவரும் சீட்டின் நுனியில் அமர்ந்திருந்தனர்.

பந்து பறந்து சென்று இடது பக்க கோல் போஸ்டில் அடித்தது

பந்து உள்ளே செல்லாமல் வெளியே பாய்ந்தது.

எல்லோரும் அவனை பூச்சியை பார்ப்பது போல் பார்த்து சென்றனர்.
அவனால் அவமானத்தில் அங்கே நிற்க முடியவில்லை.
எந்நேரமும் கண்ணில் அணை ஒடிந்து வெள்ளம் பெருக்கேடலாம் என்பதை உணர்ந்தான்.

தனி அறையில் வாய் விட்டே கதறினான்.

கடவுளே உன்னை எவ்வளவு நம்பினேன். என்னை கை விட்டு விட்டாயே.

உணர்ச்சி பெருக்கில் அருகில் இருந்த கத்தியை எடுத்து கை வெட்டி கொள்ள போனான்.

தீடிரென்று அந்த குரல்

"மகனே"

யார் அது?

நான் தான் கடவுள்!

எதற்காக வந்தீர்கள், நான் சாவதை பார்ப்பதற்கா!

இல்லை, இன்னும் வாழ்வு உண்டு என்று சொல்வதற்காக!

இனிமேல் என்ன வாழ்க்கை, எல்லாம் தொலைந்து விட்டதே!

அப்படி நினைக்காதே, வேண்டியதை கேள்!

மீண்டும் நான் அங்கே செல்ல வேண்டும்!

எங்கே?

அந்த கோலை நான் மறுபடியும் போட வேண்டும்!.

அதில் ஒரு சிக்கல் இருக்கிறது!

என்ன?

ஏற்கனவே நீ அந்த முயற்சியை செய்திருக்கிறாய் எனற ஞாபகம் உனக்கு இருக்காது!

பரவாயில்லை, எனக்கு நம்பிக்கை இருக்கிறது. என்னால் முடியும்!

சரி உன் ஆசை படியே நடக்கும்!


இப்போது மீண்டும் நீங்கள் பதிவின் முதல் பத்திக்கு செல்லலாம்

*************************************

டிஸ்கி: சென்ற வருட அக்டோபர் மாதம் வலைச்சரத்தில் ஆசிரியராக இருந்தபோது எழுதியது!

47 வாங்கிகட்டி கொண்டது:

SUBBU said...

1ச்ட்

கார்க்கிபவா said...

படிச்ச ஞாபகம் இருக்கு சகா

Bleachingpowder said...

முடிவை மாத்துங்க முடிவை மாத்துங்க. இப்போ அதான் புது டிரெண்ட்

Bleachingpowder said...

கடவுள் பாவம் அவரும் எத்தனை பினால்டி கார்னர் தான் கொடுப்பாரு, இருந்தாலும் கொய்யால அவன் இடது பக்கத்துலேயே கோல் போடுறான்

Bleachingpowder said...

//பல யுக்திகளை பயன்படுத்தி பந்தை உதைத்து விட்டான்.

அது அந்தரத்தில் பறந்தது.
//

அந்தரத்தில்ல தானே தல பறக்கும்

selventhiran said...

அட நம்ம வாலா இது!

கார்த்திகைப் பாண்டியன் said...

நான் படிச்ச உங்க பதிவுகள்ள இதுதான் டாப்பு தல.. சூப்பரா இருக்கு

Venkatesh Kumaravel said...

!

//
//பல யுக்திகளை பயன்படுத்தி பந்தை உதைத்து விட்டான்.

அது அந்தரத்தில் பறந்தது.
//

அந்தரத்தில்ல தானே தல பறக்கும்
//
LOL

//படிச்ச ஞாபகம் இருக்கு சகா//
அதான் சொல்லிட்டாரே அண்ணாத்த...

prabhu said...

எப்போங்க பையன் goal அடிப்பான்?

தேவன் மாயம் said...

போட்ட பதிவையே போட்டு!
போட்ட பெனால்ட்டியே போட்டு!!.........ம்ம்ம்ம்.

Anonymous said...

nalla irukku

mankuthiray

Tech Shankar said...

ஆஹா.. மீள்பதிவை

@@#$@#$^$^$^#%#$%&&^$%!@#$#@$&#$^#%^#$^$@#$~#

படித்ததில் கணினிக்கு வைரசு வந்துருச்சு. அதான் மேலே நான் என்ன எழுதினேன்னு எனக்கே புரியல..

தீப்பெட்டி said...

நல்லாயிருக்கே..

g said...

///கார்த்திகைப் பாண்டியன் said...
நான் படிச்ச உங்க பதிவுகள்ள இதுதான் டாப்பு தல.. சூப்பரா இருக்கு///

ரொம்ப கரெக்டு... ரொம்ப கரெக்டு... ரொம்ப கரெக்டு... ரொம்ப கரெக்டு... ரொம்ப கரெக்டு... ரொம்ப கரெக்டு... ரொம்ப கரெக்டு... ரொம்ப கரெக்டு... ரொம்ப கரெக்டு... ரொம்ப கரெக்டு... ரொம்ப கரெக்டு... ரொம்ப கரெக்டு... ரொம்ப கரெக்டு... ரொம்ப கரெக்டு... ரொம்ப கரெக்டு... ரொம்ப கரெக்டு... ரொம்ப கரெக்டு... ரொம்ப கரெக்டு... ரொம்ப கரெக்டு... ரொம்ப கரெக்டு... ரொம்ப கரெக்டு... ரொம்ப கரெக்டு... ரொம்ப கரெக்டு... ரொம்ப கரெக்டு... ரொம்ப கரெக்டு... ரொம்ப கரெக்டு... ரொம்ப கரெக்டு... ரொம்ப கரெக்டு... ரொம்ப கரெக்டு... ரொம்ப கரெக்டு... ரொம்ப கரெக்டு... ரொம்ப கரெக்டு... ரொம்ப கரெக்டு...

கன்ட்ரோல் வி போட்டேன். ‘வி’ கீ. அழுத்தின அழுத்திலே போய் மாட்டிக்கீச்சு. இந்த பின்னூட்டத்திலே தமிழ்நெஞ்சம் பின்னூட்டத்துக்கு 100 மார்க் போடலாம். பிளஸ் டூ தேர்வு என்றால் 200 மார்க் போடலாம்.

Jackiesekar said...

நல்ல கதை இன்டிரஸ்டிங்

ivingobi said...

vaalpaiyanukku vaaaaaaaaaaaaaaaaaaal neelam nu nirupichuttar....

அன்புடன் அருணா said...

படித்த ஞாபகம்...
அன்புடன் அருணா

வினோத் கெளதம் said...

வால்ஸ் கதை நன்று..

Mahesh said...

நல்லா இருக்கே !!!

Sanjai Gandhi said...

பஸ் ஸ்டேண்டில் ஒரு அழகான பெண். அங்கு அவளைப் பார்க்கும் ஒரு ஆண் ஹாய் சொல்லி அப்படியே நெருக்கம் ஆகி அவளைக் காதலிக்கிறான். கொஞ்ச நாளில் இருவருக்கும் சண்டை. பிரிந்துவிடுகிறார்கள் . இருவருக்கும் அது கொடுமையான நினைவுகளா இருக்கு. இருவரும் அவர்கள் காதலை மறந்துவிடும் வரத்தைக் கடவுளிடம் கேட்கிறார்கள். கடவுளும் அந்த வரம் கொடுக்கிறார். இருவரும் தங்கள் காதலை மறந்துவிடுகிறார்கள். அடுத்த நாள் அதே ஆண் அதே பஸ் ஸ்டாண்டில் அதே பெண்ணைப் பார்த்து சொல்கிறான் “ ஹாய் “

இது சுஜாதா கதை.. வால், இந்தக் கதையை படிச்சிட்டு இதே மாதிரி கதை எழுத முயற்சி பண்ணிங்களா? இல்லை எதேச்சையானதா? எதேச்சையானதெனில் மிகப் பெரிய ஆச்சர்யம்.

Kumky said...

நன்னாருக்குன்னா....

BEST FUNDS ARUN said...

அருமை
அருமை

Suresh Kumar said...

அருமையான கதை அழகாக கோல் போட்டுட்டீங்க வால்

சுந்தர் said...

ஒன்ஸ் மோர்

கடைக்குட்டி said...

நான் ஏற்கனவே படிச்சதில்ல...

நல்லா இருக்கு

Unknown said...

நன்றாக உள்ளது..

Thamira said...

சுவாரசியம்.!

அ.மு.செய்யது said...

அருமையான பதிவு வால் !!! ரொம்ப நாளைக்கு பிறகு !!!

உபரிமொக்கை: கோல் கீப்பருக்கும் விக்கெட் கீப்பருக்கும் என்ன வித்தியாசம் ?

அ.மு.செய்யது said...

விக்கெட் கீப்பர் நிறைய கோல் விடுவாரு..

ஆனா கோல்கீப்பர் விக்கெட் விட மாட்டாரு..

Arasu said...

கதை நன்றாக இருந்தது ஆனால் எனக்கு ஒரு சந்தேகம். இந்த கருவை மையமாக வைத்து சுமார் ஒரு மாதத்துக்கு முன்பு tamilishil ஒரு கதையை படித்தேன். மற்றும் சுஜாதா அவர்களின் ஒரு கதையும் இது மாதிரிதான் இருக்கும். என்ன நான் சொல்வது சரியா.

அக்னி பார்வை said...

அடடே இந்த ரிஅக்கரிங் கதை யும் நல்ல தானே இருக்கு

Anbu said...

நான் ஏற்கனவே படிச்சதில்ல...

நல்லா இருக்கு

வால்பையன் said...

நன்றி சுப்பு

நன்றி கார்க்கி
டிஸ்கி பார்க்கலையா

நன்றி ப்ளீச்சிங்
அங்க என்ன சொல்லியிருக்கேன்னு பாருங்கங்க!

நன்றி செல்வேந்திரன்
நம்ம கடை அட்ரஸ் கிடைச்சிடுச்சா

நன்றி கார்த்திகைபாண்டியன்
நிஜமாவா சொல்றிங்க

நன்றி வெங்கிராஜா

நன்றி பிரபு
அதுக்கு வாய்ப்பில்லையே

நன்றி டாக்டர் தேவன்
இது நம்ம பதிவுல போட்டதில்லையே

நன்றி மண்குதிரை

நன்றி தமிழ்நெஞ்சம்
மாத்திரைய கரைச்சு ஊத்துங்க

நன்றி தீப்பெட்டி

நன்றி ஜிம்ஷா
ஜூனியர் என்ன பண்றார்

நன்றி ஜாக்கிசேகர்

நன்றி இவன்கோபி

நன்றி அன்புடன் அருணா

வால்பையன் said...

நன்றி வினோத்

நன்றி மகேஷ்

நன்றி சஞ்சய்
நீங்க சொன்ன கதையும் நல்லாருக்கு!
ஆனா பாருங்க நாலே வரியில முடிச்சிட்டார் அது தான் சுஜாதா!
அந்த கதைய இப்போ தான் நான் படிக்கிறேன்! இது ஒரே இடத்துக்கு மூன்று முறை ஒரே வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால் தோன்றிய கரு!

நன்றி கும்க்கி
நன்னா சொன்னேள் போங்கோ

நன்றி அருண்

நன்றி சுரேஷ்குமார்

நன்றி தேனீ சுந்தர்

நன்றி பட்டிக்காட்டான்

நன்றி ஆதிமூலகிருஷ்ணன்

நன்றி அ.மு.செய்யது
நல்லா கண்டுபிடிச்சிங்க வித்தியாசம்

நன்றி அரசு
இது எழுதி எட்டு மாசம் ஆச்சு!
இதே போல் சுஜாதா ஒன்னு எழுதியிருக்காராம், இப்போ தான் பார்க்கிறேன்

நன்றி அக்னிபார்வை

நன்றி அன்பு

நசரேயன் said...

நான் புதுசா படிச்சதுக்கு இந்த பின்னூட்டம், நல்லா இருக்கு

வீணாபோனவன் said...

அண்ணா நீங்க பொரிய ஆளுங்கண்ணா.. கொடிய... சே, கொரிய மொழி எல்லா தெரிஞ்சி வச்சிருக்கிங்க... இங்கேயும் கொஞ்சம் போய் பாருங்க:

http://bleachingpowder.blogspot.com/2009/03/blog-post.html


-வீணாபோனவன்.

கிரி said...

என்னென்னவோ பண்ணுறீங்க..என்னமோ போங்க ;-)

Anonymous said...

Hi vaal,
I want to relate this to TN election. People did the wrong side goal, hope god give them energy!!!( what ?? nothing but briyani and money) to do good in the next election..

OOPs..

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

வால் கதையில் கடவுள் ????!!!!!!!. கதை சூப்பர்.

Prabhu said...

சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.................சாஆஆஆஆஅன்ஸே இல்ல......... இந்த மாதிரி கதை ஒண்ணு எழுதனும்னு ரொம்ப நாளா ஆசை. அதை நீங்க எழுதி தீர்த்து வச்சிட்டீங்க.

வால்பையன் said...

//நசரேயன் said...

நான் புதுசா படிச்சதுக்கு இந்த பின்னூட்டம், நல்லா இருக்கு//

வருகைக்கு நன்றி நசரேயன்!

வால்பையன் said...

//வீணாபோனவன் said...
அண்ணா நீங்க பொரிய ஆளுங்கண்ணா.. கொடிய... சே, கொரிய மொழி எல்லா தெரிஞ்சி வச்சிருக்கிங்க... இங்கேயும் கொஞ்சம் போய் பாருங்க:
http://bleachingpowder.blogspot.com/2009/03/blog-post.html
-வீணாபோனவன்.
//

ப்ளீச்சிங் பவுடர் என்னோட ஆல்டர் ஈகோன்னு தெரிஞ்சி தான் இந்த லிங்க் கொடுக்குறிங்களா?

வால்பையன் said...

கிரி said...

என்னென்னவோ பண்ணுறீங்க..என்னமோ போங்க ;-)//

உங்களை விடவா தல!

வால்பையன் said...

Anonymous said...
Hi vaal,
I want to relate this to TN election. People did the wrong side goal, hope god give them energy!!!( what ?? nothing but briyani and money) to do good in the next election..
OOPs..
//


மக்களை குறை சொல்லமுடியாது அனானி நண்பரே!

தன்னளவில் திருப்தியாக இருப்பவர்களை எதை கொண்டு மனம் மாற்ற முடியும்! வெளி உலகில் என்ன நடக்குதுன்னு தெரிஞ்சிக்க கூடாதுன்னு தான் ”மானாட மயிலாட” போன்ற நிகழ்ச்சிகள் இருக்கே!

வால்பையன் said...

ஸ்ரீதர் said...

வால் கதையில் கடவுள் ????!!!!!!!. கதை சூப்பர்.//

கடவுள் இருந்தாலும் ஒரு பயனும் இல்லை என்பதே கதையின் கரு!

வால்பையன் said...

//pappu said...
சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.................சாஆஆஆஆஅன்ஸே இல்ல......... இந்த மாதிரி கதை ஒண்ணு எழுதனும்னு ரொம்ப நாளா ஆசை. அதை நீங்க எழுதி தீர்த்து வச்சிட்டீங்க.//


ரொம்ப நன்றி பப்பு!
நீங்களும் எழுதுங்க! நீங்க எழுதினா இன்னும் நகைச்சுவையா இருக்கும்!

விக்னேஷ்வரி said...

ஹிஹிஹி..... நல்லாருக்கு வால் பையன்.

!

Blog Widget by LinkWithin