ஒரு கதை சொல்லட்டா சார்.......

மெமரீஸில் ஷேர் பண்ணப்பட்ட ஒரு போட்டோவுக்கு இயேசுவின் மேல் அன்பு கொண்டு, ட்ராபிக்ல மாட்டுகிட்டார் இல்லைனா இந்நேரம் வந்துருப்பார் என வாஞ்சையுடன் போஸ்டர் ஒட்டும் நல்லுள்ளங்கள். அதெப்படி படைப்பாளி இல்லாமல் படைப்பு உருவாகும் என்ற கேள்வியை வைக்கும் அறிவாளிகள், உலகை படைத்தது கடவுள்னா கடவுளை படைத்தது என்ற கேள்விக்கு அப்பாலே போ சாத்தானே என கொஞ்சும் பாசக்காரர்கள் முட்டு கொடுக்குறாங்க சாலையோரம் இருக்கும் குப்பை தொட்டியை கிளரினால் எப்படி விதவிதமான குப்பைகள் வருமோ அத்தனை பிரிவுகள் இருக்கும் மதத்தில் கிறிஸ்தவமும் ஒன்று, அத்தனை பிரிவுகளில் ஒன்றில் கூட பழைய ஏற்பாட்டை புறக்கணிக்கிறோம் என்று ஒருவரும் சொன்னதில்லை. வாகனத்தில்/ சர்ச் சுவற்றில் கூட பெரும்பாலும் பழைய ஏற்பாடு வசனங்களே எழுதப்பட்டுள்ளன. ((நான் கூட இருந்து செய்யும் காரியம் பயங்கரமானதாக இருக்கும்)- (அதுக்கு தான் இப்ப உன்னை வச்சு செய்றேன்)) ஆனா இவர்கள் பழைய ஏற்பாட்டை 90% மக்கள் புறக்கணிப்பதா சொல்றாங்க இயேசு பிறப்பால் ஒரு யூதர், அவரது காலத்தில் சிலை வழிபாடும், கடவுளுக்கு பலி கொடுக்கும் பழக்கமும் இருந்தது. நிச்சயமாக கடவுள் அதை விரும்ப மாட்டார் என்றார். இயேசு தனிமையில் தியானத்தில் இருந்த பொழுது தான் சாத்தனை பார்த்ததாக கூறீயுள்ளார், மனசிதைவு நோயாளிகள் பலரும் அப்படி சொல்லியுள்ளார்கள். கண்ணு கொடுத்தது, உயிர் கொடுத்தது அவரது சீடர்களின் செய்திகள், நித்தியானந்தா சீடர்களுக்கு/ ஜக்கி சீடர்களுக்கு ஒப்பானவர்கள் என்பதை விட அதை விட அறிவியலில் பின் தங்கியவர்கள் என்பதை மறுக்க முடியாது, இயேசு உயிர்தொழுந்ததாக சொல்லப்படுவது கூட பொதுமக்கள் யாரும் பார்த்ததா குறிப்புகள் இல்லை.

ஆக இயேசு காலத்தில் பின் தங்கி இருந்த சமூகம் இயேசுவின் சீர்திருத்தற்க்கு பின் எவ்வாறு செயல்பட்டிருக்க வேண்டும், ஆனால் அந்த முட்டாபதர்கள் செய்தது என்ன? பூமியை சூரியன் சுற்றவில்லை. பூமி தான் சூரியனை சுற்றுகிறது என்றால் வீட்டு சிறை, பூமி தட்டை அல்ல, உருண்டை என்றால் உயிரோடு எரிப்பு. இதுல காமெடி என்னான்னு இன்னும் கூட அறிவியலை ஏற்றுக்கொள்ளாத மடமதவாதிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்ப நான் ஒரு கதை சொல்றேன், உங்களுக்கும் நிச்சயம் பிடிக்கும், ஒரு ஊரில் ஒரு சர்ச் ஒன்று இருந்தது, அந்த சர்ச்சில் எதிரில் அரசு அனுமதியுடன் ஒருவர் பார் ஓப்பன் பண்றார், உடனே சர்ச் பாதிரியார் என்ன பண்றார், ஊர்ல இருக்கும் எல்லா மக்களுக்கும் அழைப்பு விடுக்கிறார், எல்லாரும் வாங்க, நாம கூட்டு பிரார்த்தனை பண்ணி, அந்த பாரை அங்கியிருந்து அகற்றுவோம்னு, பிரார்த்தனை முடிந்து அன்று இரவு ஒரு மீன்னல் தாங்கி பார் சேதமடைந்தது. பார் ஓனர் கோர்ட்டில் வழக்கு போடுறார், சர்ச் பாதிரியாரி கூட்டு பிரார்த்தனையால் என் பார் சேதமடைந்தது, எனக்கு நஷ்ட ஈடு தர வேண்டும் என்று வழக்கு விசாரணையில் பாதிரியார் சொன்னார், பிரார்த்தனையினால் கேட்டது நடக்கும்னா நாட்ல எவ்ளோ மாற்றங்கள் வந்துருக்கும், பிரார்த்தனையினால் அம்மாதிரி நடந்ததா குறிப்புகள் இல்லை, இது தற்செயலாக நடந்தது, எங்க பிரார்த்தனைக்கும் இதுக்கும் சம்பந்தமில்லைனு. சுருக்கமா சொல்லனும்னா. கன்னிமேரியை நம்புவானுங்க, கலவி கொள்ளாமல் கர்ப்பம் ஆனேன்னு அவங்க பொண்ணு சொன்னா நம்ப மாட்டாங்க, டிசைன்ல இருக்காம்

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin