கேள்வி - பதில் (மரபணு)

கேள்வி:
ஓரே இனக்குழுவுக்குள் திருமணம் செய்தால் மரபணு குறைபாடு வரும் என்றால் யூதர்கள் மட்டுமே அதிக அளவில் அறிவாளிகளாக இருக்க காரணம் என்ன???

பதில்:
ஒரே இனக்குழுவுக்கள் அல்ல, நெருங்கிய சொந்தத்திற்குள் திருமணம் செய்து குழந்தை பெற்றால் அந்த குழந்தைகள் மேன்பட்ட உயிரினமாக வளராது.

மரபயிலியின் தந்தை என அழைக்கப்பட்ட கிரிக்கோரி மெண்டல் ஒரு விசயம் கண்டுபிடித்தார். ஒரே குடும்பத்தை சேர்ந்த பூக்கள் வேறு வண்ணம் பெற்றிருப்பது(ரோஜா கூட) கனிகள் வெவ்வேறு சுவை பெற்றிருப்பது(எலும்பிச்சை, ஆரஞ்ச்) காரணம் குடும்பம் கடந்த மகரந்த சேர்க்கை.

ஒரே குடும்பத்தில் திருமணம் செய்து குழந்தை பெற்றால் அவர்களின் டீ.என்.ஏ ஒற்றாகவே இருக்கும். அவற்றால் நோய் தடுப்பு, மேம்பட வேண்டும் என்ற பரிணாம உத்துதல் தோன்றாது. உலகில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்ரிக்காவில் சில நாடுகள் மட்டுமே குடும்ப திருமணத்தை ஊக்குவிக்கிறது. அதான் நாம பின் தங்கியே இருக்கோம்.

நான் பல காலமாக சொல்லி வருவது. பெற்றோர்கள் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பதை தன் கடமையாக நினைக்கக்கூடாது(எனக்கு ரெண்டு பெண் குழந்தைகள்) நாம் பேச தெரிந்த விலங்கு அவ்வளவே. எல்லா விலங்கும் பொண்ணு, மாப்பிள்ளை பார்த்துட்டா இருக்கு. அவர்கள் தேர்வில் விடுவதே மேம்பட்ட குழந்தைகள் பெறவும். சமூகம் பிரிவினை இன்றி ஒன்றுபடவும் சாத்தியமாகும்.

யூதர்கள் இனமாக இருக்கலாம், ஆனால் சாதியாக பிரிந்து கிடக்கவில்லை.

அறிவு என்பது தொகுப்பு, நீங்கள் நிற்கும் படியில் இருந்து அடுத்த படிக்கு நகர்வது, நாம் எல்லாருமே அதை செய்யலாம், நமக்கு சாமி கும்பிடுவது. சகுனம் பார்ப்பது என ஏகப்பட்ட வேலைகள், அவன் அதெல்லாம் இல்லாம அறிவை தொகுத்து வாழ்வியலை மேம்படித்தினான். அம்புட்டு தான்


0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin