கேள்வி - பதில் (பேய்)

கேள்வி:
பேய் இருக்கா? இல்லையா ?
பதில்:
பேய் இல்ல
ஆனா பெரும்பான்மை மனிதன் பேய் இருக்கனும்னு ஆசை படுறான், நமக்கு மேல் ஒரு சக்தி இருக்குன்னு நம்பும் மனிதன் அந்த எதிலிருந்து நம்மை காப்பாத்துதுன்னு யோசிக்கிறேன், அதற்கு தீய சக்தி என்ற ஒன்று தேவை. அதை பேயாக உருவக படுத்துறான்
மறு பிறவி என்ற நம்பிக்கையே மனிதனுக்கு கனவில் இறந்த மனிதர்கள் வந்த பிறகு தான் தோன்றியது. கனவு என்பது மூளையின் செயல்பாட்டில் தோற்றும் காட்சிபிழை. அப்படி இறந்த மனிதர்கள் எங்கேயோ வாழ்வதா நம்பினா நமக்கு பேய் நம்பிக்கையும் வந்துரும்
எப்பவும் கூட நமக்கு பல வியாதிகளுக்கு என்ன காரணம். அதுக்கு சிகிச்சை என்னன்னு புரியல. ஆனா தேடிகிட்டு இருக்கோம். ஆதியில் மனநோயை எப்படி பார்த்திருப்பாங்கன்னு நினைக்கிறிங்க? சம்பந்தம் இல்லாம பேசுறது. முறையற்ற செயல்கள் செய்வது மனநோயின் அறிகுறிகள். அதற்கு அர்த்தம் புரியாதவர்கள் அதற்கு பேய் பிடிச்சிருக்குன்னு பேர் வச்சிட்டாங்க.
மனசிதைவு நோய்க்கு ஆட்பட்டவர்கள் தாங்கள் கற்பனை செய்வது, கனவில் பார்ப்பதை உண்மையென்றே நம்புவார்கள். இல்யூசன் என சொல்லப்படும் மாயதோற்றங்களும் அவர்களுக்கு தோன்றும். அது சாத்தியமா என்றால் சாத்தியம் தான். நீங்கள் தெளிவான ஆள் தான். ஆனால் என்றோ ஒருநாள் தனியா மனதுக்குள் நினைப்பதை வாய்விட்டு உங்களுக்கு நீங்களே பேசிகிட்டு போயிருப்பிங்க. மனம் செய்யும் கற்பனை உங்களை கேரக்டராவே மாத்திரும்
நிறைய பேய் கதைகள் பதிவு செய்யபட்ருக்கு. 2014ல அமெரிக்காவும் பேய் ஓட்டும் வேலை மட்டும் 50000க்கும் மேல். ஆனா நாம புரிஞ்சிக்க வேண்டியது வளரும் மக்கள் தொகை. நம் மன அழுத்தம் குழந்தைகளை சரியா கவனிக்கிறதில்ல. தனிமையில் கற்பனை உலகில் வாழும் அவர்கள் மிக எளிமையா மனநோயாளி ஆகிருவாங்க. இந்தியாவில் பெரும்பாலும் நாம் குழந்தைகளுடன் உறங்குவதால் அந்த பிரச்சனை குறைவு
நாம ஒன்றை தீவிரமா நம்புறோம், கடவுள் நம்பிக்கையாளர்கள் கடவுள் இருக்குன்னு நம்புவது. இல்லை என்று நம்புவது. இதெல்லாம் நார்மல் பிராஸஸ். அதை பகுத்தறிவுடன் பார்க்கக்கூடிய மூளை பகுதி வேலை செய்யலைன்னா என்னாகும், கடவுள் இல்லைன்னு சொல்றவனை கொலை செய்யக்கூட தோணும், அப்படி தான் பேய் பிடித்தலும். இருக்குன்னு நம்பியதால் அவர்களே எனக்கு பேய் பிடிச்சிருக்குன்னு சொல்வாங்க
அவர்களுக்கு தேவை உளவியல் சிகிச்சை


0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin