யாகூப் மேமன்!

மும்பையில் 1993 ஆம் ஆண்டு  மார்ச் 12 ஆம் தேதி 13 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. அதில் 257 பேர் கொல்லப்பட்டனர், 713 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடையவர் மற்றும் ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்தார் என சஞ்சத் தத் அதே வருடம் ஏப்ரல் 19 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

சஞ்சத் தத் உட்பட மொத்தம் 189 பேர் இந்த குற்ற செயலில் சம்பந்தபட்டிருப்பதாக குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்தது காவல்துறை. அவ்வருடமே வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.




கிட்டதட்ட பத்து வருடங்கள் விசாரனைக்கு மட்டுமே எடுத்துக்கொண்ட வழக்கில் இறுதி குற்றவாளிகளாக 35 பேர் எடுத்துக்கொள்ளப்பட்டனர். 2006 செப்டம்பர் 12 ஆம் தேதி தீர்ப்பு வழக்கப்பட்டது.

யாகூப் மேனன் உட்பட 12 பேருக்கு மரணதண்டனையும். 20 பேரு ஆயுள் தண்டனையும் 3 பேர் குற்றங்களில் சம்பந்தபடாதவர்கள் என விடுதலையும் செய்யப்பட்டனர்.

மேல்முறையீட்டின் போது பத்து பேருக்கு மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. யாகூப் மேனனுக்கு மரணதண்டனை உறுதிபடுத்தப்பட்டது,

மேல்முறையீட்டு மனு, மறு ஆய்வு மனு, சீராய்வு மனு என யாகூப் மேனன் தரப்பு எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்து 30.07.2015 அன்று அதிகாலை மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.

2 வாங்கிகட்டி கொண்டது:

வெட்டிப்பேச்சு said...

யாகூப் மேமன் ஆ இல்லை யாகூப் மேனன் ஆ?

Raja said...

Bro, Its Yakub Memon not Yakub Menon!

!

Blog Widget by LinkWithin