ஹிட்லர் - அறியாத தகவல்கள்!

1889 ல் ஜெர்மனிக்கு அருகில் ஆஸ்திரா என்ற நாட்டில் ஹிட்லர் பிறந்தார். அவருடைய நான்கு சகோதர்கள் இறந்து விட்டனர், ஹிட்லர் மட்டுமே பிழைத்தார்.

நான்கு வயது இருக்கும்பொழுது கிணற்றில் தவறி விழுந்த ஹிட்லரை காப்பாற்றியது ஒரு கத்தோலிக்க பாதிரியார். முதலாம் உலக போரில் சாவின் எல்லையை தொட்ட ஹிட்லரை காப்பாற்றியது ஒரு பிரிட்டீஷ் சிப்பாய். ஆட்சி காலத்தில் கூடவே இருந்த ஒருவன் வைத்த சூட்கேஸ் வெடிகுண்டில் கேட்கும் திறனை இழந்தார்.(மூன்று முறை உயிர் தப்பியவர்)

சிறுவயதில் பாதிரியாராக விரும்பினார், பின் நடிகராக ஆசைப்பட்டார். வியான்னா அகடாமி ஆஃப் ஆர்ட்ஸ் கல்லூரியில் இருமுறை நுழைவுதேர்வில் தோற்று பின் அந்த ஆசையை கை விட்டார்.

1933 ஜனவரியில் ஆட்சியை பிடித்த ஹிட்லர், அவ்வருடமே மிருகவதை தடுப்பு சட்டம் கொண்டு வந்தார். பல லட்சம் யூதர்களை கொன்று குவித்த ஹிட்லர்  சைவ உணவு பழக்கம் கொண்டவர்.


Eduard Bloch என்ற யூதர் ஹிட்லரின் குடும்ப டாக்டராக இருந்தார். மற்ற யூதர்களோடு அவரை கொடுமை படுத்தவில்லை ஹிட்லர். அவரை புனிதயூதர் என்று அழைத்தார்.

1930-1940ல் ஹிட்லர்(அரசு) தான் முதல் முதல் புகை பழக்கத்திற்கு எதிரான பிரச்சாரம் செய்தார்

ஹிட்லரின் கார் ஓட்டியும், அவரது நெருங்கிய நண்பரும் யூதர்கள் என பின்னாளில் தெரியவந்தது. அவர்களை நேர்மையான ஆரியர்கள் தான் என அறிவித்தார்.

1939ல் ஹிட்லர் நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார், பின்னாளில் ஹிட்லர் நோபல் பரிசையே தடை செய்தார். பதிலாக ஜெர்மன் அறிவியல் பரிசு என ஒன்றை ஆரம்பித்து அறிவியலாளர்களை ஊக்குவித்தார். அவரது காலத்தில் தான் முதல் ஹைபிரிட் வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது(ஃபோக்ஸ்வேகன் - Volkswagen )

1938 ஆம் ஆண்டு டைம்ஸ் பத்திரிக்கை ஹிட்லருக்கு மேன் ஆஃப் த இயர் பட்டம் வழங்கியது. ஆனால் அமெரிக்கன் சீக்ரெட் சர்வீஸ் ஹிட்லரின் உணவில் பெண் தன்மையை தூண்டும் ராசாயனத்தை கலந்தது.

முதலாம் உலகப்போரின் போது தொடையில் பலத்த காயம் பட்டதில் அவரது ஒரு விதைகொட்டை நீக்கப்பட்டது.

ஹிட்லருக்கு பூனையை கண்டால் அலர்ஜி(Ailurophobia) பயம் என்று கூட சொல்லலாம்.

ஹிட்லரின் மாமா பையன் அமெரிக்க ராணுவத்தில் சேர்த்து ஹிட்லருக்கு எதிராக போர் புரிந்தார், why i hate hitler என்ற புத்தகமும் எழுதியுள்ளார்.

ஹிட்லர் எழுதிய Mein kampf என்ற புத்தகத்தில் கிடைத்த வருமானம் எல்லாம் தொண்டு நிறுவனத்திற்கு தரப்பட்டது, மக்களால் அது ரத்தபணம் என அழைக்கபப்ட்டது.

பாரிஸ் ஈஃபில் டவரில் 1500 படிக்கட்டுகள் ஏறினார். காரணம் ஹிட்லர் அதில் ஏறக்கூடாது என எலிவேட்டரின் கம்பிகள் அறுக்கபட்டு இருந்தன.

1939 ஜூலை 23 மற்றும் 1940 டிசம்பர் 24 தேதிகளில் காந்தி ஹிட்லருக்கு இரண்டு கடிதங்கள் எழுதியுள்ளார். கடிதத்தின் ஆரம்பம் “டியர் ஃப்ரெண்ட்”

சீனர்கள் மற்றும் ஜப்பானியர்களை ஹிட்லர் ஆரியர்களாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஆரிய நாகரீகம் அவர்களுக்கு முந்தையது என நம்பினார்.

ஹிட்லரின் முதல் காதலி ஒரு யூதர் ஆனால் அவரிடம் ஹிட்லர் பேசியதே இல்லை. ஈவா பிரானை 1945 ஏப்ரல் 29 ஆம் தேதி மணந்தார். 1945 ஏப்ரல் 30 இருவரும் தற்கொலை செய்து கொண்டனர்.

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin