பிடித்த பாடல்கள்!...

நண்பர் பாலமுருகன் மார்ச் 24 ஆம் தேதி என்னை இந்த தொடர் பதிவு எழுத அழைத்திருந்தார், ஆறு மாதம் கழித்து அதை நான் தொடர்கிறேன், அவ்ளோ பிஸியா சீன் போடுறேன் அவ்ளோ தான், உண்மையில் நான் வெட்டியா தான் இருக்கேன், ரியல் மேட்டர் என்னான்னா, யூடியூப்பில் ஒரு பாட்டு கடைசி வரை கிடைக்காமல் சதி செய்து விட்டது, தற்பொழுது அதற்கான டெக்ஸ்ட் மட்டும் தருகிறேன்!

சக்கரவர்த்தி திருமகள் என்ற படத்தில் வரும் பாட்டு இது, கலைவாணரும், எம்.ஜி.ஆரும் கலக்கி இருப்பார்கள், ரொம்பப் பிடிக்கும் இந்த பாட்டு, எப்போதாவது கேட்கனும் போல இருக்கும், சரியா சன் மியூசிக்கில் போடுவாங்க. :)




எனக்கு எம்.ஆர்.ராதாவை கொள்கை ரீதியாக எனக்கு பிடிக்கும், அவரது சேட்டைக்காக இந்த பாட்டு பிடிக்கும், செம வேகம் இந்த பாட்டு!, உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்!




ஆர்பாட்டமில்லாத அருமையான இசை, மனதை வருடும் வரிகள், அனைவருக்கும் பிடிக்கும் பாடல்!




வர்ணிப்பு பாட்டில் பல பாடல்கள் இருந்தாலும் இது கொஞ்சம் வித்தியாசமானது, அப்பாவித்தனமான நடிப்பு விசுவலாகவும் நல்லாயிருக்கும்





பர்சனலா எனக்கு இந்த பாட்டு பிடிக்கும்!

படம்:அமர்களம்

என் செய்தாயோ விதியே
இனி என் செய்வாயோ விதியே
ஒரு பிஞ்சு மொழி பேசும் பிள்ளை
பெற்றவர் பெற்றும் பெற்றோராய் இல்லை
பிள்ளையின் பாதை தெளிவாக இல்லை விதியே


ஒரு சொந்தம் இல்லாத தந்தை
சுய பந்தம் இல்லாத அன்னை
இரு கண்ணில் வலியோடு பிள்ளை விதியே
விதை மண்ணில் முளைகொண்ட போதே
அதன் தலையில் இடி வீழ்ந்ததென்ன
இனி வாழ்ந்து பயனென்ன என்ன விதியே

*****************

நாமளும் யாரையாவது சிக்க வைக்கனுமுல்ல!

எனக்கு ஏன் இந்த பாட்டு பிடிக்கும்னு சுருக்கமா சொல்லியிருப்பதால் நீங்களும் அப்படியே தான் பண்ணனும் என்றோ யூடியூப் லிங்கெல்லாம் கொடுக்கனும் என்றோ அவசியமில்லை!, பாட்டை குறிப்பிட்டு ஏன் பிடிக்கும்னு சொன்னால் கூட போதும்!

டோண்டு (நிச்சயம், மச்ச மச்சினியே பிடிக்கும் என்பார் பாருங்கள்)

தமிழரசி

தமிழ் அமுதன்

விந்தை மனிதன் (இவர் ரசனை தெரிந்து கொள்ள ஆவல்)

பங்காளி ராஜன் (குசும்புக்கு ஒரு ஆள் வேணாமா)

35 வாங்கிகட்டி கொண்டது:

நட்புடன் ஜமால் said...

இந்த லிஸ்ட்டில் செந்தாழம் பூவில்

ரொம்ப பிடிக்கும்

கொல்லான் said...

வால், அருமையான செலக்சன்.

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அருமை....

கொல்லான் said...

தெய்வீகராகம் விட்டுட்டீங்களே?

அன்பரசன் said...

கடைசி ரெண்டுமே எனக்கும் ரொம்ப பிடிக்கும்.

marimuthu said...

"கண்வழி புகுந்து கருத்தினில் கலந்த மின்னொளியே ஏன் மௌனம் " என்ற சவுந்தரராஜனும் எம் .எஸ் ராஜேஸ்வரியும் பாடிய "தூக்கு தூக்கி" பட பாடலை கேட்டு பாருங்கள்! ஜி .ராமநாதன் இசையமைத்த இனிய பாடல்!

R. Gopi said...

நீயே உனக்கு என்று நிகரானவன் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

கிருஷ்ண மூர்த்தி S said...

வாலு!

இது எல்லாத்தையும் விட

"வாலு போயிக் கத்தி வந்தது டும் டும் டும்
கத்தி போயி.........."

இந்தப் பாட்டு ரொம்ப ரொம்பப் பிடிக்கும்! சின்ன வயசுல,பள்ளிக் கூடத்துல ராகம் போட்டுப் பாடச் சொல்லிக் கொடுத்தது!

இப்ப எதுக்காக அந்தப்பாட்டைச் சொல்றேன்னு சேக்காளி ராஜன் வந்து விலாவாரியா விளக்குவார்!

vinthaimanithan said...

நீங்க சொல்லி இருக்குற பாட்டெல்லாம் நெதானமா கேட்டுட்டு மறுபடி வாரேன். ரொம்ப நாளாவே நானும் பிடிச்ச பாடல் பத்தி எழுதனும்னு நெனப்புல இருந்தேன். ஜமாய்ச்சிடலாம்

மோகன்ஜி said...

அன்பிர்க்கின்ய வால்,
நல்ல ரக்சனைங்க உங்களுக்கு..
ஒன்று கூட சோடையில்லை

பிரதீபா said...

அது என்னம்மோ தெரியலீங்க எனக்கு செந்தாழம் பூவில் பாட்டு மட்டும் அவ்வளவா பிடிக்காது.

அமர்க்களம் படத்துல அப்படி ஒரு பாட்டா? ஆஹா !!

Kumky said...

இந்த சமாச்சாரத்துக்கு என்னய கூப்டிருக்கலாம் வாத்தி..

:((

ஹேமா said...

எனக்கு அழகே அழகே தேவதை எப்போ கேட்டாலும் பிடிக்கும் பாட்டு.

ஜோதிஜி said...

விந்தை மனிதன் ரசனை உள்ள நபர் தான்.

vinthaimanithan said...

வாலு.. நெசமாவே நல்ல ரசனைய்யா உமக்கு! ரசிச்சி கேட்டேன்... எம்.ஆர்.ராதா எனக்கும் பிடிச்ச கலைஞன்... முகமூடி இல்லா மனிதன்...

//விந்தை மனிதன் ரசனை உள்ள நபர் தான்.//

இப்பிடி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ரணகளமாக்கிட்டாய்ங்கய்யா! முடியல...!

தமிழ் அமுதன் said...

ரைட்டு எழுதிடுவோம்...!

//பர்சனலா எனக்கு இந்த பாட்டு பிடிக்கும்!//

எனக்கும்தான்.. ஆனா பாட்டு வரிகளை கவனிச்சது கிடையாது
அந்த கண்ணழகி,கன்ன அழகி
மாதவிக்காகத்தான்..!

thiyaa said...

அழகிய மலரும் நினைவுகள்
அருமை....

suneel krishnan said...

ஜானி படத்தில் வரும் காற்றில் எந்தன் கீதம் எனக்கு ரொம்பவே பிடிக்கும் ..வள்ளி படத்தில் வரும் என்னுள்ளே பாட்டு ..இப்போதைக்கு அங்காடி தெரு உன் பேரை சொல்லும் போது கூட பிடிச்சிருக்கு ..அந்த பலே பாண்டியா பாட்டு சும்மா பட்டய கெளப்பும் , காசே தான் கடவுளடா ஜம்பு லிங்கமே பாட்டும் பாக்க நல்லா இருக்கும்

சௌந்தர் said...

இதில் இருக்கும் m.r ராதா பாட்டு எனக்கும் புடிக்கும் அந்த படமே சூப்பர்

Anonymous said...

அட.. எனக்குப் பிடித்த அழகே பாடல்(ராஜபார்வை) கூட இருக்குதே..

jothi said...

//வர்ணிப்பு பாட்டில் பல பாடல்கள் இருந்தாலும் இது கொஞ்சம் வித்தியாசமானது, அப்பாவித்தனமான நடிப்பு விசுவலாகவும் நல்லாயிருக்கும்//

குரலை விட்டுட்டீங்களே,.. அட்டகாசமான பாடல்வரிகள் பாடலாசிரியர் யார்ன்னு தெர்ல

உங்கள் நண்பன் பாலசந்தர் said...

பழைய நினைவுகள் மனதை வருடுகின்ற ஓர் அருமையான பதிவு.. நன்றி வால் பையன் அவர்களே....
ஒரு வேண்டுகோள்.... என்னுடைய இந்த கட்டுரையை நீங்கள் படிக்க வேண்டும்... உங்களுடைய நண்பரிடமும் கண்டிப்பாக சொல்லுங்கள்...நன்றி...
http://nanbanbala.blogspot.com/2010/09/blog-post_22.html

Anonymous said...

'மிகச்சிறந்த‌ sharing button'- tell a friend sharing button for every posts in your blog

http://ramasamydemo.blogspot.com/2010/09/sharing-button-tell-friend-sharing.html

(dont miss to place this tell a friend button mentioned in above link)

vasan said...

செந்தாழ‌ம் பூவில், ம‌லைப்பாதையில் ஜீப் ஸ்டேரிங்கை, பாதையையே பார்க்காம‌ல் திருகிக்கொண்டேயிருப்ப‌து ப‌ய‌மாய் இருக்கும்.
எம் ஆர் ஆர், சிவாஜி, பால‌ஜி மூவ‌ரும் ச‌லைக்காம‌ல் க‌ல‌க்கி இருப்பார்க‌ள்.
ராதாவுக்கு முதுகை காண்பித்து அம‌ருவார், சிவாஜி. ராதா ஏன்னென்று கேட்க‌
"முக‌த்தைப் பார்க்க‌ ..வெட்க‌மாய்..இருக்கிற‌து மாமா..அவ‌ர்க‌ளே" என‌ அஸ்ட‌கோண‌த்தில் நெளிவார். ராதா புலாங்கித‌ம‌டைவார். அருமையான‌ க‌லைஞ‌ர்க‌ள். இப்பையும் இருக்குக‌ளோ
ப‌ண‌த்துக்கா எந்திர‌மாய் ந‌டிக‌ர்க‌ள்.
க‌ம‌லின் வருண‌னைக்கு, வாகாய், த‌ன்னை வ‌ளைத்துக் கொடுக்கும் கண்ண‌ழ‌கி மாத‌வி
த‌மிழில், அதிக‌ம் வ‌ராத‌து ர‌சிக‌ர்க‌ளின் ந‌ஷ்ட‌ம்.
அருமையான தேர்வு வாலு.
என‌க்கு யார் அந்த‌ நில‌வு...ஏன் இந்த‌ க‌னவு.. சாந்தி திரைப்ப‌ட‌த்தில் சிவாஜி வொய்ட் & வொய்ட்ல‌ சிக‌ரெட் பிடிச்சுகிட்டே செடிக‌ளில் திரிவ‌து இன்னும் க‌ண்க‌ளில்.

Thamira said...

நல்ல பாடல்கள்தான். இவற்றைக் காணும்போது சானல் மாற்றமுடியாது நம்மால்.

Balamurugan said...

நண்பரே, என்றோ நான் அழைத்ததை நினைவில் வைத்துக் கொண்டு பதிவை தொடர்ந்தமைக்கு மிக்க நன்றி. மங்களூரில் இருந்து கோயம்புத்தூர் வந்ததிலிருந்து பல நாட்களாக பதிவுகளின் பக்கமே வர முடியவில்லை. புது இடம், வேலை விழி பிதுங்குகிறது.

தங்களின் பாடல் தெரிவுகளை கண்ணொளியில் காண முடியாதவாறு அலுவலகத்தில் youtube தடை செயப்பட்டுள்ளது. வெளியில் முயற்சிக்கிறேன். அமர்க்களம் பாடல் நல்ல தேர்வு.

மிக்க நன்றி.

வேங்கை said...

niiiiiiiiiiiiiiiiice vaaaaaaaaaal

செல்வா said...

அட எல்லாமே கொஞ்சம் பழைய பாட்டு மாதிரி தெரியுது ..?!

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நடத்து.

வீணாபோனவன் said...

There are so much of songs out there, despite language barriers. For example such songs are belows:

Just listen, and try to understand the song :-) As far as I know the movie never got released:

http://www.mediafire.com/?lj0egvsnres

Couple of Ghandasala songs are below:

http://www.mediafire.com/?2gwyjljzmyt
http://www.dhool.com/sotd/muthukku.rm
http://www.mediafire.com/?zhnnkyuklju
http://www.mediafire.com/?wjdhmt2mj4o
http://www.mediafire.com/?gy1qh0yzhrg
http://www.mediafire.com/?2moh0zzjzm4

Two songs from Vaanaratham: (need Real Player)
http://www.dhool.com/sotd/vanaradham1.rm
http://www.dhool.com/sotd/vanaradham2.rm

Some other songs:
http://www.youtube.com/watch?v=MewOsMqwg3Y&feature=related
http://www.dhool.com/sotd/1012.rm
http://www.dhool.com/sotd/kallile.rm
http://www.dhool.com/sotd/ninnaiye.rm
http://www.dhool.com/sotd/neevaruvaai.rm
http://www.youtube.com/watch?v=NmcMxmveCv4&feature=related
http://www.youtube.com/watch?v=1yXQqoMrV84&feature=related


Song by P.B.Sreenivas:
http://www.dhool.com/sotd/iravinmadiyil.rm

Song by Seergazhi:
http://www.dhool.com/sotd/samarasam.rm

Two more sad song:
http://www.dhool.com/sotd/enpenn.rm
http://www.raaga.com/player4/?id=138009&mode=100&rand=0.8504747990518808

Now let's move to Europe. Our own Apache Indian :-))
http://www.youtube.com/watch?v=Moio5q_1b8o
http://www.youtube.com/watch?v=K2fijJhkUIw

Let come back to Punjab :-)
http://www.youtube.com/watch?v=_FwhLonMupc

Now we are moving towards of our Southern neighbourhoods.
Song by Milton:
http://www.youtube.com/watch?v=cDB-EPH6w0M

Some other songs from Ceylon:
http://www.youtube.com/watch?v=BQ3t3R-3eXg
http://www.youtube.com/watch?v=-V7YvTK6WII&feature=related
http://www.youtube.com/watch?v=75Lp6OiRl18&feature=related

Now turn back to Guyana :-))
http://www.youtube.com/watch?v=PONK3s3Rw54&feature=related

Regards,
-Ganesh.

Shanmugam Rajamanickam said...

எனக்கு பிடித்த பாடல்: நெஞ்சிருக்கும் வரை படத்திலிருந்து உனக்கென பிறந்தேன் பாடல்.


//உண்மையில் நான் வெட்டியா தான் இருக்கேன்,// இத மட்டும் சரியாய் சொல்லி இருக்கீங்க.............

Unknown said...

வால் அண்ணா
அருமை
புதுவிதமாய்
பாடல்கள்
அதவும்
செமையாக...

dondu(#11168674346665545885) said...

//டோண்டு (நிச்சயம், மச்ச மச்சினியே பிடிக்கும் என்பார் பாருங்கள்)//
ஆம், சரியான சுட்டியை காட்டுங்கள்:
http://dondu.blogspot.com/2007/02/blog-post_16.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

வால்பையன் said...

////டோண்டு (நிச்சயம், மச்ச மச்சினியே பிடிக்கும் என்பார் பாருங்கள்)//
ஆம், சரியான சுட்டியை காட்டுங்கள்:
http://dondu.blogspot.com/2007/02/blog-post_16.html//

மீதி பாட்டெல்லாம் யாரு சொல்லுவா?
பதிவு போடுங்க!

dondu(#11168674346665545885) said...

இதோ நீங்கள் கேட்ட பதிவு: http://dondu.blogspot.com/2010/09/blog-post_6969.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

!

Blog Widget by LinkWithin