மீண்டும் சின்மயி

அடிக்கிற அடியில் தாரை தப்பட்டைகள் கிழியட்டும் என்ற சினிமா டயலாக் டுவிட் தான். சின்மயி ராஜன் மீது செக்ஸுவல் அபூஸ் புகார் கொடுக்க காரணம். சின்மயி சும்மா இருந்திருந்தாலும் ராஜனின் அரசியலுக்கு எதிர்நிலைப்பாடு கொண்டவர்கள் சின்மயியை தூண்டு விட்டார்கள் என்பதும் உண்மை, அதில் பெரும்பாலும் இருந்தது பார்பனர்கள் தான்.

அதே போல் வைரமுத்துவின் எதாவது பேச்சோ, சைகையோ சின்மயிக்கு தவறாக தெரிந்திருக்கலாம் என்றாலும் முற்றிலுமாக மறுக்க முடியுமா என்றால் யோசிக்க வேண்டிய விசயமாக தான் தெரிகிறது, புகழ் போதையில் இருப்பவர்கள் வெகு சுலபமாக எதிர்பாலினர் தன் வலையில் விழுந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை பலருக்கு இருக்கத்தான் செய்கிறது



இருவர் மனமுவந்து கொள்ளும் உறவு தவறில்லை என்பது என் நிலைபாடு. சாரு நிவேதிதா செய்தது போல் சும்மா பேசிய பெண்ணிடம் உனக்கு வெட் ஆகலையான்னு கேட்டது தான் உண்மையான செக்ஸுவல் அபூஸ். இதை ஏன் சொல்கிறேன் என்றால் ஒருவேளை சின்மயின் செய்கைகள் கூட வைரமுத்துவுக்கு கிரீன் சிக்னலாக தெரிந்திருக்கலாம்

ஆதியில் உணவுக்கும், பெண்ணுக்கும் தான் பெறும் போட்டியாக இருந்தது. நாடு பிடிக்க நடந்த சண்டையில் கூட எதிரி நாட்டு ராணியை அபகரிப்பது, தோற்ற நாட்டு பெண்களை அடிமைகளாக தூக்கி சென்றது பெருமையாக பார்க்கப்பட்டது.



பெண்கள் விசயத்தில் அந்த காட்டுமிராண்டிதனம் முற்றிலுமாக விலகி இருக்கும் என நான் கருதவில்லை. சமூக பார்வைக்காக, நம் மேல் நமக்கு இருக்கு இமேஜை தக்கவைக்க ஆண்கள் வேசம் போடலாமே தவிர. உளவியல், உடலியல் விசயத்தில் பெண் மீது ஆண் ஈர்ப்பு கொள்வது தவிர்க்கமுடியாமல் இருக்கிறது.

விரும்பமில்லாத பெண்ணை தொடக்கூடாது
இதுதான் நான் சொல்ல வந்தது

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin