சொந்த செலவில் சூனியம்!

மக்களின் இந்த இன்னலுக்கு காரணம் மக்களே தான் என்பதை உணராத வரை இந்த இன்னல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.

திமுக அமைச்சர்களுக்கு சுதந்திரம் இருந்தது. சிபாரிசில், வாரிசு அடிப்படையில் வந்தவர்கள் சிலரை தவிர மற்றவர்களுக்கு செயல் திறனும், மக்கள் நலனும் இருந்தது. ஆனாலும் மொத்த குடும்பமும் கட்சியை ஆக்கிரமிக்க பிறகு அவர்களால் பெரும்பான்மை வெற்றி பெற முடியவில்லை.

அதிமுக முழுக்க முழுக்க ஒன் மேன் ஆர்மியாக இருந்தது என்பதை சமீபகாலமாக நாம் பார்த்துகொண்டு தான் இருக்கிறோம். 110 அறிக்கைகள் வந்த போதே அதை எழுதினேன். மற்ற யாருக்கும் அமைச்சராக இருக்கும் தகுதி கூட இல்லையென்று.

சட்ட மன்றத்தில் அமைச்சர்கள் எதிர்கட்சிகளுக்கு பதில் சொல்கிறார்களே என கேட்கலாம். சட்டமன்றம் கூடும் முன்னர் கேள்வி கேட்க விரும்புபவர் கேள்வியை சபாநாயகரிடன் அனுமதி வாங்க வேண்டும். அதற்கு அவர் நேரம் ஒதுக்கும் கேப்பில் துறை சார்ந்த அதிகாரிகள் புள்ளி விபரங்களை எடுத்து கொடுத்து விடுவார்கள். அதை பார்த்து தான் படிப்பார்கள்.



நவநீதகிருஷ்ணன்னு ஒரு அதிமுக எம்.பி. பாராளுமன்றத்தில் காஷ்மீர் பற்றி பேச அனுமதி கேட்டிருந்தார். அவரே எதிர்பார்க்காமல் அனுமதி அளிக்கப்பட்டது. மாச கணக்காக ஊரடங்கு உத்தரவு, மக்கள் மேல் பெல்லட் குண்டுகள் வீச்சு என பேச எவ்வளோ விசயங்கள் இருந்தும் அந்த எம்.பி.
காஷ்மீர் ப்யூட்டிபுல் காஷ்மீர்னு பாட்டு பாடினார்.

முதன் முதலில் அப்பொழுது பெரும்பான்மைக்கு அதிமுகவின் நிர்வாக திறன் லட்சணம் புரிந்தது. அடுத்ததாக தெர்மாக்கோல் போட்டு நீர் ஆவியாமல் தடுத்தது. நொய்யல் ஆறு மக்கள் போடும் சோப்பு நுரையால் நிரம்பி உள்ளது. கம்ப ராமாயணத்தை எழுதிய சேக்கிழார் போன்றவரை அட மங்குணி அமைச்சர்களா என முனுமுனுக்க வைத்தது.



ஆனாலும் அக்கட்சி ஏன் தெரியுமா வெற்றி பெறுகிறது. நம்மை போன்ற தமிழகத்தின் 1% மக்கள் தான் இதை பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். மற்றவர்கள் சீரியல் பார்ப்பதிலும் அதிக காசு கொடுப்பவர்களூக்கு ஓட்டு போடுபவர்களாகவும் இருக்கிறார்கள்.

இவர்களை அம்பலபடுத்த வேண்டிய எதிர்கட்சிகள் அறிக்கையுடன் முடித்து கொள்கின்றன. அதிமுக ஆட்சியில் பேருந்து கட்டண உயர்வு, மின்சார உயர்வு, விலைவாசி ஏற்றம், சமீபத்தில் பெட்ரோல், டீசலுக்கு வாட் கூட போட்டார்கள். 1% நிர்வாக திறமையற்ற இவர்கள் 99% ஊழல் செய்வது எப்படி என அறிந்து வைத்துள்ளார்கள். பணத்துக்கு உங்கள் ஓட்டை விற்றால் நாளை நம் பிள்ளைகள் பிச்சை தான் எடுக்கும்

3 வாங்கிகட்டி கொண்டது:

'பரிவை' சே.குமார் said...

அருமையாச் சொல்லியிருக்கீங்க....
இதுதான் உண்மை நிலை...
நாம் திருந்தினால்தான் திருட்டை ஒழிக்க முடியும்.

Mythees said...

100 % உண்மை... வால்

ஆதி said...

உண்மை

!

Blog Widget by LinkWithin