தோல்வியின் நாயகனே!

திட்டமிடலின்மை!

பணமதிப்பை திரும்ப பெறுவது அவ்வளவு சுலபமான காரியமா? 130 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் அதை செயல் படுத்த எவ்வளவு திட்டமிடல் தேவை. குறைந்தபட்சம் திட்டத்தின் நோக்கம் நிறைவேற இருக்கும் ஓட்டைகளை கண்டறிந்து அதை முன்கூட்டியே அடைத்திருக்க வேண்டாமா. எத்தனை ஓட்டைகள்....
பெட்ரோல் மூலமாக, அடுத்தவர் வங்கி கணக்கு மூலமாக, வங்கி அதிகாரிகள் மூலமாக.

6% கருப்பு பணம் இருப்பதாக ரிசர்வ் வங்கி சொல்லியது. 18 லட்சம் கோடியில் அதன் மதிப்பு ஒரு லட்சம் கோடியே 8 லட்சம். ஆனால் பிடிபட்டு இருப்பதாக ஆர்பிஐ சொல்லியுள்ளது 1472 கோடி ரூபாய் மட்டுமே. வங்கிக்கு வராமல் இருப்பதை சேர்த்து 50 ஆயிரம் கோடி என வைத்துகொண்டாலும் திட்டம் தோல்வி தான். ஏனென்றால் புது ரூபாய் நோட்டுகள் அடிக்க அரசுக்கு அதை விட செலவு ஆகும்.

பணமில்லா பரிவர்த்தனை!

இந்தியா 80% ரூபாய் நோட்டுகளை நம்பியிருக்கும் நாடு. காரணம் நாம் அடிப்படையில் விவசாய நாடு. நம் விவசாயத்தில் 72% உணவு பொருட்களே. அதை மாற்ற பணமில்லா பரிவர்த்தனை சாத்தியமில்லை. மேலும் அந்த பரிவர்த்தனைக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் நம்மிடம் இல்லை.

கிராமங்களில் கூட அந்த திட்டத்தை செயல்படுத்தி விட்டோம் என சில விளம்பர அறிவிப்புகள் வருகின்றன. அவை யாவும் அரசின் செலவில் வெளியிடப்படும் விளம்பரங்களே. அந்த ஊரில் அப்படினா என்னான்னே தெரியாதவங்க நிறைய பேர் இருக்காங்க.

நம் நாட்டில் 10 வகுப்பை தாண்டியவர்கள் வெறும் 48% மட்டுமே. எஞ்சியுள்ளவர்கள் விவசாயிகளும் வேறு துறை கூலி தொழிலாளிகளும். டிகிரி முடித்துவிட்டு வெளிநாட்டில் வேலை செய்பவரிடம் கேட்ட கேள்விகளுக்கு அவருக்கு பதில் தெரியாது.

இந்துதுவா ஆதரவாளர்கள் மட்டுமே இது வெற்றியடையும் திட்டம் எனவும் இதனால் கருப்பு பணம் ஒழிந்து விட்டது எனவும் ஒருவர் ஒரு படி மேலே போய் இதனால் வெளிநாட்டு கடன் நமக்கு குறையும் என்றும் எழுதியுள்ளார்

நம் நாட்டில்
100% கல்வியறிவு இல்லை
100% மின்சார வசதி இல்லை
100% இணைய வசதி இல்லை.

நானும் படிச்சேன்னு மக்கடிச்சிட்டு, வெளிநாடு போய் அவனுக்கு சம்பாரிச்சு கொடுத்துட்டு இங்கே கஷ்டபடும் மக்களை தேச விரோதிகள் என நாக்கூசாமல் சொல்கின்றனர்.

கருப்பு பணம் திட்டம் தோல்வி, அதனால் கேஸ்லெஸ் எக்கானமி என பல்டி அடிக்கின்றனர். அவர்களின் தோல்வியின் இயலாமையால் மாற்றி மாற்றி அறிக்கை விட்டு மக்களை குழப்புகின்றனர்.
இதனால் பல சிறுதொழில்கள் முடங்கியுள்ளன. பலர் வேலை வாய்ப்பை இழந்தனர் என எவ்வளவு தான் புள்ளி விபரத்தோடு விளக்கி சொன்னாலும்

அதெல்லாம் தெரியாதுங்க, மோடி பண்ணா சரியா தான் இருக்குன்னு சொல்லும் போது ங்கோத்தா டேன்னு வரும் பாருங்க ஒரு கோவம், அதெல்லாம் வாய்ல சொல்ல முடியாது..

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin