அடிமைகள் அரசு!

இன்று 11.08.16 34 வது நாள். காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு,
பதிவு செய்யப்பட்ட மரணம் 54. கிளச்சியாளர்கள் என்ற பெயரில் கொல்லப்பட்ட அப்பாவி மக்கள் கணக்கு தெரியவில்லை.

இந்த விசயம் இந்தியாவில் இருக்கும் மக்களுக்கு மட்டுமல்ல. காஷ்மீரில் என்ன நடக்கின்றது என்று உலக நாடுகள் கவனித்துக்கொண்டு இருக்கின்றது.
காஷ்மீரினால் இந்தியா, பாகிஸ்தான் போர் மூளக்கூடும். பாகிஸ்தானுக்கு எதாவது பெரிய நாடு ஆதரவு தெரிவித்தால் இந்தியாவுக்கு வலிய வந்து ஒரு நாடு ஆதரவு தெரிவிக்கும். காஷ்மீர் என்ற சிறு நில பகுதி மூன்றாவது உலக போரை கூட கொண்டு வரலாம்.

அப்படி கொழுத்து விட்டு எரியும் காஷ்மீர் பற்றி உங்கள் நிலைபாடு என்ன என்று ஒரு நாடாளுமன்ற உறுப்பினரிடம் கேட்டால் அவர் என்ன செய்துள்ளார்?

காஷ்மீர் ப்யூட்டிஃபுல் காஷ்மீர் என்று பாட்டு பாடியுள்ளார்...

சென்ற முறை ஜே,கே.ரித்தீஸை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்தெடுத்தபொழுது எழுதினேன். ஒரு நடிகருக்கு அதுவும் இளம் நடிகருக்கு எப்படி அரசியல் தெரியும்? அரசியல் அனுபவமில்லாத அவருக்கு ஒரு பெரிய கட்சியில் சீட்டு கிடைக்கின்றது என்றால் எவ்வளவு செலவு செய்திருப்பார். அவர் வெற்றி பெற்றால் மக்களுக்கு நல்லது செய்வாரா அல்லது அவரது செலவு தொகையை மீட்டெடுப்பாரா என்று(அப்பொழுது ரித்தீஸ் திமுக, இப்பொழுது அதிமுக)



திமுக ரித்தீஷ் விசயத்தில் சறுக்கியது என்றே கூறலாம்.
நான் அறிந்து திமுகவின் அடிமட்ட தொண்டன் வரை பகுத்தறிவு பேசுவான்.
சாமியே கும்பிட்டாலும் உலக நடப்புகள் விரல் நுனியில் இருக்கும்.
எந்த விவாதமாக இருந்தாலும் தரவுகள் முன் வைத்து பேசுவார்கள்.
அதிமுகவை பொறுத்தவரை எந்த கேள்விக்கும் பதில் ஒன்னு. இது மக்கள் நல அரசு அதனால் செலவாக தான் செய்யும், இரண்டு. எல்லாம் அம்மாவுக்கு தெரியும்(அப்ப நீங்க புடுங்கவா கட்சியில இருக்கிங்க)

எண்ணிக்கை அடிப்படையில் பெரும்பான்மை ஜனநாயகம் கேலி கூத்தாகும் என்பதை சாக்ரடீஸ் காலத்திலயே சொல்லிட்டாங்க. ஒரு செயல்முறை(சிஸ்டம்) தோற்கும் பொழுது அதற்கு மாற்று செய்ய வேண்டும். ஆனால் இப்பொழுது இருக்கும் அரசியல் கட்சிகள் எதுவும் அதற்கு தயாராக இல்லை.

விளம்பர நிறுவனம் ஒரு பொருளை வாங்க நம்மை மூளை சலவை செய்வது போல் மத்திய அரசும் மாநில அரசும் நம்மை முட்டாளாக்கி கொண்டிருக்கிறது.
மின்சார துறையில் நட்டம், போக்குவரத்து துறையில் நட்டம், பால்வள துறையில் நட்டம். லாபமாக இயக்கிகொண்டிருக்கும் ஒரே துறை டாஸ்மாக்.

பத்தி எரியும் காஷ்மீர் பற்றி கேட்டால் பாட்டு பாடும் நாடாளுமன்ற உறுப்பினர் இருக்கும் கட்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டும் திறமையா செயல்பட போறாங்களா?
ஆமா நாங்க அடிமைங்க தான்னு ஒத்துகிட்டார் ஒரு எம்.எல்.ஏ.

ஆனாலும் இந்த மக்கள் ஏன் திரும்ப திரும்ப அடம் பிடிச்சு நாசமா போறாங்க?

2 வாங்கிகட்டி கொண்டது:

ராஜவம்சம் said...

வாலு மறுபடியும் வலைப்பதிவு வாழ்த்துக்கள்
(திரும்பி வந்துட்டார்ன்னு சொல்லு வாலு வந்துட்டார்ன்னு சொல்லு)

bandhu said...

கொடுமை என்னவென்றால் இந்த ஆள் தான் தமிழகத்தின் அட்டர்னி ஜெனரலாக இருந்தவர். காஷ்மீர் பிரச்சனையை பேச சொன்னால் அங்கு எடுத்த தமிழ் படங்களை பற்றி பேசுகிறவரை என்ன சொல்வது! இதில் கொடூரமாக பாடியது வேறே.

எந்த அளவு முட்டாள்கள் தமிழர்கள் என்று காண்பிப்பதற்க்கே இவரை அனுப்பியிருப்பார்கள் போல!

!

Blog Widget by LinkWithin