டியர் டம்ப்ளர் பாய்ஸ்!

வன்னியர்கள் எப்படி தங்களை பேண்ட பரம்பரைன்னு சொல்லிகிறாங்களோ அதே போல் நீங்களும் என் முப்பாட்டன் முருகன்னு சொல்லிகளாம். ஆனா அதுக்கு வீரதமிழர் முண்ணனினு பேரு எதுக்கு? தமிழன் எல்லாருக்குமே முப்பாட்டன் முருகன் தான்னு ஏன் கதை விடனும்?

உங்களுக்கும் இந்தியாவில் எல்லாரும் ராமர் பிள்ளைகள்னு சொன்ன காவிக்கும் என்ன வித்தியாசம். ஒ அவுங்க காவி, நீங்க பச்சையா?

திராவிட கட்சிகள் முன்னாடி நாத்திகம் பேசிட்டு கொல்லைபக்கம் வழியா கோவிலுக்கு போனதா படம் போட்டு காட்டுறிங்க, தமிழக திராவிட கட்சிகளின் பகுத்தறிவு பல்லிளித்து பல ஆண்டுகள் ஆகின்றது. அவுங்க திருட்டுதனமா பண்றதை நீங்க ஓப்பனா பண்றிங்க. நீங்க உங்க முப்பாட்டனை வணக்க என்னாத்துக்கு திராவிட கட்சிகளை துணைத்து கூப்பிடுறீங்க. நீங்க பண்றது தப்புன்னு உங்களுக்கே தெரியவதால் தானே!

உளவியல் ரீதியாக மனிதர்களின் பலவீனம் கடவுள் நம்பிக்கை, அதை அறிவியல் ரீதியாக உடைத்தது பகுத்தறிவு, ஆனால் நீங்கள் மனிதர்களின்(தமிழர்களின்) பலவீனத்தை பயன்படுத்தி அரசியல் செய்ய நினைக்கிறீர்கள். அதை விமர்சிக்க கூடாது என கோவம் வேற வருது.

முருகன் உங்க முப்பாட்டனாவே இருக்கட்டும். என்னாத்துக்கு அவனுக்கு மொட்டை போடனும். என்னாத்துக்கு காவடி தூக்கனும். வேல தூக்கனும். உங்களுக்கே கோமாளிதனமா தெரியல.

உங்களால் மக்கள் பிரச்சனை குறித்து பேசி களத்தில் அரசியல் செய்யமுடியாது என்பது அப்பட்டமாக தெரிகிறது, இன்று மக்களிடன் பிரச்சனை யார் எங்கள் முப்பாட்டன் என்பதா அல்லது அடிப்படை தேவைகளா? வேற எதோ கோவிலில் போடும் பணத்தை கொண்டுவந்து முருக்ன் கோவிலில் போட்டுட்டா தமிழகம் செழித்திடுமா?

நிஜமாகவே சந்தேகபட்டு தான் கேட்டுகிறேன். உங்களுக்கு இந்த கோமளிதனமான ஐடியாவெல்லாம் யார் கொடுக்குறா 


2 வாங்கிகட்டி கொண்டது:

Raja said...

அதே டவுட்டு தான் எனக்கும்!

Annogen said...

இங்க ஸ்ரீலங்காவில் கதிர்காமன முருகனை தங்களுடைய சிங்கள கடவுள் என்கின்றார்கள் சிங்களவர்கள்.. அவர்கள்தான் பூசைகூட செய்கின்றார்கள்..

!

Blog Widget by LinkWithin