புவியின் தோற்றம்!-1

இக்கட்டுரையில் வரும் அனைத்தும் அதிகப்பட்ட சாத்தியகூறுகள் அடிப்படையில் என் புரிதல்கள் மட்டுமே. இதுவே இறுதி முடிவல்ல.

எனது பரிணாமம் தொடர் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தொடரமுடியாமல் போயிற்று. மீண்டும் அதை தூசிதட்டும் முயற்சி இது,

பெருவெடிப்பு அதன் பின்னான நெபுலாவின் கூட்டமைப்பு இணைந்து சூரியனாக உருவெடுப்பது பற்றியெல்லாம் வேறு ஒரு கட்டுரையில் படிக்கலாம். இதில் பூமியை பற்றி மட்டுமே விவாதிக்கலாம்.

நாம் வாழும் இப்பூமியின் வயது தோராயமாக 450 கோடி ஆண்டுகள் என கணக்கிட்டுள்ளனர். அதன் பின் பூமி அதன் நிலையான தோற்றத்தை பெற கிண்டதட்ட 100 கோடி ஆண்டுகள் வரை காத்திருந்தது. இந்த 350 கோடி ஆண்டுகள் என்ற கணகெடுப்பு பூமியின் பாறைகளை கார்பன் டேடா கருவி மூலம் ஆராய்வதின் மூலமும். ஆற்று நீர் பூமியிலிருந்து உப்பை கரைத்து எடுத்து கொண்டு போய் கடலின் சேர்ப்பதன் மூலம் அதின் உப்பின் அளவை கொண்டும் கணக்கிடப்பட்டது.

450 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமி முழுவதும் ஒரு நெருப்பு பந்து அப்பொழுது முழுமையான கோளவடிவமும் இருந்தது. அந்த காலகட்டத்தில் சூரிய மண்டலத்தில் எல்லா கோள்களும் முழுமையடையவில்லை. தற்பொழுது செவ்வாய் கிரகத்திற்கும், வியாழன் கிரகத்திற்கும் இடையில் சுற்றி வரும் அஸ்ட்ராய்டு பெல்ட் என அழைக்கப்படும் குறுங்கோள்கள் ஒரு பெரிய கோளாக உருவெடுக்க வேண்டியது, இணைய முடியாமல் சிறு சிறு கற்களாக சுற்றி வருகின்றது என்ற ஒரு கூற்றூ உண்டு.


என் புரிதலின் படி சூரிய மண்டலத்தின் பெரிய கோளான வியாழனின் துணை கோளாகவோ அல்லது செவ்வாய்க்கு அடுத்து மற்றொரு தனிக்கோளாகவோ தான் அது இருந்திருந்த வேண்டும். அதற்கு தற்போதைக்கு யனி என பெயர் வைத்து கொள்வோம். யனிக்கோளின் மீது வியாழனின் மற்றொரு துணைக்கோளோ அல்லது சூரியனை சுற்றிவரும் எதோ ஒரு வால்நட்சந்திரமோ பயங்கராக மோதியுள்ளது. அப்பொழுது சுக்குநூறாக உடைந்தது யனிக்கோளே தற்பொழுது அஸ்ட்ராய்டு பெல்டாக சுற்றி வருகிறது.



இந்த விபத்தின் போது செவ்வாய் பூமிக்கும் அப்பால் சூரியனை சுற்றி வந்துக்கொண்டிருந்த வேண்டும் என்பது என் புரியல். இல்லையேல் பூமியின் மீது நடந்திருக்க வேண்டியது விபத்து செவ்வாய் கிரகத்தை தாக்கியிருக்கும். யனி மீது ஏற்பட்ட தாக்குதல் நேரடியாக முழுமையடையாமல் இருந்த பூமியை வந்து தாக்கியது. பெரும் விபந்து அது. அந்த விபத்து மட்டும் இல்லையெற்றால் பூமியில் வாழக்கூடிய சாத்தியக்கூறுகள் ஏற்படவே சாத்தியமில்லை என்பது என் புரிதல்.

அந்த விபத்தின் மோது தான் பூமியின் ஒரு துண்டு உடைந்து நிலவாக உருவெடுத்துத்தது. இப்பொழுது பூமியில் இருக்கும் பசிபிக் கடலின் ஆழத்தில் நிலவை முழுதாக மறைக்கமுடியும் என்பது அதற்கான சாட்சி. மேலும் இந்த விபத்தின் மூலமே பூமி தன் அச்சில் இருத்து 23.5 டிகரி சாய்ந்தது. நீள்வட்ட பாதையில் சுற்றி வரும் பூமியில் பருவகாலங்கள் நான்கு விதமாக மாறி வர அது தான் காரணாம். பூமி ஒரே அச்சில் இருந்தால் மூன்று மாதத்திற்கு ஒரு முறை குளிர் காலமும், வெயில் காலமும் மாறி மாறி வந்திருக்கும்.


அந்த விபத்தின் போது பூமியில் இருந்து தாதுக்கள் பிய்த்து எரியப்பட்டன, பல ஆவியாகி தனிதனி மூலக்கூறுகளாக சுற்றின. எடை அதிகமான மூலகூறுகள் மீண்டும் பூமியை அடைந்தது. எடை குறைந்த மூலகூறுகள் பூமியை சுற்றி வந்தது. பூமியை சுற்றி அமைந்த வளி அல்லது பெரும் புகை மண்டலம் சூரிய ஓளி பூமியை அடையாமல் செய்தது. பூமி கொஞ்சம் கொஞ்சமாக குளிர ஆரம்பித்தது.


அந்த காலக்கட்டத்தில் பூமியில் நீர் ஆதாரம் உருவானது. ஹைட்ரஜன் மூலக்கூறுகளும் ஆக்ஜிசன் மூலக்கூறும் சேரும் போது தான் நீர் உருவாகிறது என படித்திருப்போம். பூமியை புதிதாக உருவான வளிமண்டத்திலிருந்து நீர் உருவாகி பெரும்மழை பூமியை அடைந்தது. மழை, மழை, மழையை தவிர வேறொன்றூம் இல்லை என்ற நிலை உருவானது.


பூமியின் தற்போதைய தோற்றத்திற்கும் மேலும் பூமியின் மேல் தட்டுகள் இடம் மாறி பூகம்பம் ஏற்படவும் அந்த தொடர் மழை தான் காரணம் என்றால் நம்ப முடிகிறதா? பூமியை தவிர பிற கோள்களை பாருங்கள். எவ்வளவு வட்டமாக அழகாக இருக்கின்றது. பூமியில் நீர் இல்லாமல் பூமியை கற்பனை செய்து பாருங்கள். கோள வடிவத்தில் இருக்குமா? ஒழுங்கன்று இருக்குமா?

தொடரும்!


1 வாங்கிகட்டி கொண்டது:

Unknown said...

உளவியல் பற்றி ஒரு தொடர் எழுதுவதாக நீங்கள் கூறினீர்கள் என்று நினைக்கிறேன்.. எழுதுகிறீர்களா ?

!

Blog Widget by LinkWithin