தமிழ் சமூகத்தின் விச ஜந்து ஜெயமோகன்!

எத்தனை பேர் படித்தீர்கள் தேர்வு செய்யப்பட்ட சிலர் என்ற http://www.jeyamohan.in/?p=13982 இந்த கட்டுரையை.

ஜெயமோகனின் சொம்புகளுக்கு அந்த கட்டுரை வேதவாக்காக இருக்கலாம், ஆனால் உங்களுக்கும் அவ்வாறே தோன்றினால் ஜெயமோகன் சொல்லியிருப்பது உங்களைத்தான், நீங்கள் பிறப்பாலே முட்டாள்கள் உங்களால் தம்படி பிரயோஜனம் கிடையாது. ஆம் என்று ஒத்துக்கொள்வீர்களா?

ஜெயமோகன் தம்மை எழுத்தாளாரக மட்டுமல்ல, உலகை உய்விக்க வந்த ஞானப்பிறவி என நினைத்துக்கொள்ளும் மனபிறழ்வு நோய்க்கு ஆளானவர். அவர் கண்ணில் படபவர்கள் அனைவரும் முட்டாள்கள் தான், அதிலும் மாற்று கருத்து கொண்டவர்கள் வாழவே தகுதியில்லாதவர்கள் என்று கூசாமல் சொல்லக்கூடியவர்.

தமது பேச்சை நிராகரித்து சென்ற ஈரோட்டு மக்களை காக்கைகள் கூட்டம் என்ற விமர்சித்து யானைப்பால் குடித்த மரமண்டை. இன்று வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் வருணாசிரம கொள்கையை தமது வாசகர்களுக்கு திணித்து கொண்டிருக்கிறது.

தொழில் அடிப்படையில் சாதி உருவானது ஆனால் இன்று சாதி அடிப்படையில் தொழில் இருக்கிறது, அதை மாற்றவே பெரியார் போன்ற சமூக ஆர்வலர்கள் போராடி அனைத்து மக்களும் சமம் என்ற கோட்பாட்டை நிறுவினர்.

பார்பனிய சமூகத்தில் பிறந்த சுஜாதா கூட வெகுஜன மக்களால் சிறந்த எழுத்தாளர் என ஏற்றுக்கொள்ளப்பட்ட போதும், என் எழுத்தை படிக்காதவர்கள் எல்லாம் முட்டாள்கள், அவனுங்க இதுக்கு தான் லாயக்கு என என்றும் பேசியதில்லை.

பார்பனியம் என்ற கொள்கையை எந்த மூதேவி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் தம்மை எழுத்தாளர் என கூறிக்கொள்ளும் விசஜந்து ஜெயமோகன்.

சரி, அப்படி என்ன அந்த கட்டுரையில் இருக்குன்னு கேக்குறிங்களா? நீங்க ஜெயமோகனுக்கு குண்டி கழுவிவிட வரிசையில் நிற்கலாம்.

//ஆகவேதான் ‘எனக்கு புத்தகம் வாசிக்கவேண்டும் என்றே தோன்றவில்லை, ஏன் நான் வாசிக்கவேண்டும்?’ என்று ஒருவர் கேட்டபோது ‘என்ன வேலைசெய்கிறீர்கள்?’ என்றார் நித்யா. ‘மர ஏற்றுமதி’  என்றார் அவர். ‘அதைச்செய்யுங்கள். உங்கள் அம்மா அதற்காகத்தான் உங்களைப்பெற்றார்’ என்றார். குரூரமான பதில் என்று எனக்கு இப்போதும் தோன்றுகிறது. ஆனால் அது உண்மை.//

உங்க அம்மா உங்களை மரம் விற்கத்தான் பெற்றார் என்பதற்கும்,
உங்க அம்மா உங்களை கக்கூஸ் கழுவத்தான் பெற்றார் என்பதற்கும் என்ன வித்தியாசம் இருக்க முடியும், அதுவும் பிறப்பின் அடிப்படையில். உங்க அம்மா அதுக்கு தான் பெற்றாராம். என்ன மாதிரியான விச வார்த்தைகள்.

அது நித்யா சொன்னது தானே என அப்பாவித்தனமாய் கேட்பவர் சற்றே ஓரம் நில்லுங்கள், உங்களுக்கு தடவி கொடுக்க ஜெயமோகன் வந்து கொண்டிருக்கிறார்.

ஈரோட்டு மக்களை காக்கைகள் கூட்டம் என்று சொன்ன போதே நேரில் பார்த்தால் கேட்கனும்னு தான் இருந்தேன். ஆனா இனி நேரில் பார்த்தால் வேற எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஜெயமோகன் முதலுதவி பெட்டியுடன் உலவுவது நலம்!

7 வாங்கிகட்டி கொண்டது:

Sunantha said...

அவர் சொன்னது எதுவும் பிறப்பை பற்றி அல்ல.பொருள் ஈட்டுதல் மற்றும் கொண்டாட்டங்கள் தவிர அறிவார்ந்த எதையும் தெரிந்து கொள்ள மறுப்பவர்கள் பற்றி..
நித்யா,ஜெமோ மட்டுமல்ல..எந்த அறிஞனிடமும் "இதெல்லாம் படிப்பதால், தெரிந்துகொள்வதால் எனக்கு என்ன லாபம்? என்று கேட்டால் ஒன்று நேரடியாக நீ ஒரு முட்டாள் என்று சொல்லிவிடுவார்கள்..அல்லது நித்யா சொன்னதுபோல் சொல்வார்கள்..

விஞ்ஞானி ராமன் "ராமன் விளைவை " கண்டறிந்த போது அதன் உபயோகம் அறியப்படவில்லை...இதனால் என்ன பிரயோசனம் என்று அவரிடம் கேட்டவனிடம் அவர் சொன்னது "அறிவியல் கண்டுபிடிப்புகளால் என்ன பிரயோசனம் என்று கேட்பவன் முட்டாளாகவே இருக்க முடியும்.."

வருண் said...

***புதிய விஷயம் அல்ல. உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே என்றுதான் நம் மரபும் சொல்லியிருக்கிறது.

அந்த அப்பட்டத்தால் நான் எத்தனை சீண்டப்பட்டேன் என்று இன்று சொல்வது கடினம். நமக்கு பள்ளியில் சொல்லித்தரும் பாடம் அல்ல அது. எல்லோரிடமும் திறமை இருக்கிறது, எல்லோரும் ஏதோ வகையில் முக்கியம்தான். அனைவருமே இறைவனின் பிள்ளைகள்தான்… ஆம், அதெல்லாம் பள்ளிப்பாடங்கள் மட்டுமே. முதிர்ந்த மனங்களுக்கு உரிய உண்மைகள் அல்ல.

ஆகவேதான் ‘எனக்கு புத்தகம் வாசிக்கவேண்டும் என்றே தோன்றவில்லை, ஏன் நான் வாசிக்கவேண்டும்?’ என்று ஒருவர் கேட்டபோது ‘என்ன வேலைசெய்கிறீர்கள்?’ என்றார் நித்யா. ‘மர ஏற்றுமதி’ என்றார் அவர். ‘அதைச்செய்யுங்கள். உங்கள் அம்மா அதற்காகத்தான் உங்களைப்பெற்றார்’ என்றார். குரூரமான பதில் என்று எனக்கு இப்போதும் தோன்றுகிறது. ஆனால் அது உண்மை.***

அவன் அவனுக்கு எது பிடிக்கிதோ அதைச் செய்றான்..புத்தகம் படிக்கப் பிடிக்கலைனு சொன்னா இந்த நாயிக்கென்ன?

இந்த முட்டாள் எழுதுறான்..

ஒரு நாள் திடீர்னு ஒரு சிலை ஆடுச்சாம். எவனோ ஒரு பூசாரிப்பய, ஏதோ மந்திரத்தைச் (ஏதோ ஒரு எழவு மந்திரமாம்) சொல்லி ஒரு தேங்காயை உடைத்தானாம். உடனே இயற்கை பயந்து அந்த ஆட்டம் நின்னுடுச்சாம். இதை வெக்கமே இல்லாமல் உலகறியச் சொல்லுறான் இந்த ஜெயமோகன் என்கிற அடிமுட்டாப்பய!!

இதையெல்லாம் படிச்சு முட்டப்பயளாவதுக்கு படிக்காமலே இருக்கலாம்.

இது ஜெயமோஹன் என்கிற அடி முட்டாளுடைய பிதற்றலைப் படிக்கிறவன், அவனுக்கு உருவிவிடுறவன் எல்லாம் "சூனா", "பொன்னம்பலம்" "முத்துகுமார்" னு சொல்லிக்கிட்டு அலையிற சில மூளைஇல்லாத பொணநக்கிப் பண்டாரப்பயளுகதான் . ஜெயமோகன் மாதிரி முட்டாப் பய எழுதுறதைப் படிக்காமல் இருப்பதே எவ்வளவோ மேல்.

viyasan said...

நல்ல பதிவு. ஜெயமோகன் சரியான அதிகப் பிரசங்கி மலையாளி.அவரது எழுத்துக்களில் பார்ப்பன வாடையும் அதிகம். ஒருவர் கொஞ்சம் பிரபலமானவுடன் தலையில் தூக்கி வைத்தாடுவது தமிழர்களின் வழக்கம், அது தான் எல்லாவற்றுக்கும் காரணமென்று நான் நினைக்கிறேன்.

sunaa said...

வருண் தம்பி,

ஒதறல் ஓவரா இருக்கே..இன்னும் எவ்ளோ நாளைக்கோ போ..

ஜெயமோகன விடு..ஒடம்ப கவனி..

கிருஷ்ணா said...

சக மனிதனை மதிக்கத் தெரியாத இந்த வெங்காயம், ஊருக்கு உபதேசம் சொல்கிறது.
இது எழுதுவதில் பாதி தற்பெருமை, மிச்சமெல்லாம் கூட சுற்றித் திரியும் அல்லக்கைகளுக்கு.

@வால்பையன், இவர் எப்பொழுது சாநி யை தனது போட்டியாளராக நினைத்து கட்டுரை வடிக்க ஆரம்பித்தாரோ அன்றே எழுத்தாளர் என்ற தகுதியை இழந்துவிட்டார்.

Anonymous said...

""ஜெயமோகன் மாதிரி முட்டாப் பய எழுதுறதைப் படிக்காமல் இருப்பதே எவ்வளவோ மேல்""".

Repeat!

chandrasekaran said...

பாம்பிற்கு பல்லில் மட்டும்தான் விஷம் இந்த ஜெயமோகன் என்ற விலங்கிற்கு உடல் எல்லாம் விஷம்.

!

Blog Widget by LinkWithin