ஆதலால் காதல் செய்வீர்!

அவரவர்க்கான சமரசங்களில்
காதல் அர்த்தபடுத்தப்படுகிறது!
புணர்தலில் காதலின்
வெளிபாடு தெரியும் என்கிறான்
நண்பனொருவன்
எதிர்பார்பற்ற காதலே
நேர்மையானது என்கிறாள்
தோழியொருத்தி
அர்பணித்தலில் காதலின்
சுகம் என்கிறான் மற்றொரு நண்பன்
காதலே பைத்தியகாரத்தனம் என்கிறாள்
மற்றொரு தோழி
பார்வையற்றோர் தடவிப்பார்த்த
யானையைப்போல் நின்றது காதல்
இதனால் யாதொரு
பாதகமும் இல்லை அதற்கு
எப்போதும் போல் அது காதலர்களை
மகிழ்வித்துக்கொண்டிருந்தது
எதோ ஒரு இடத்தில்!

5 வாங்கிகட்டி கொண்டது:

Yaathoramani.blogspot.com said...

காதல் குறித்த அருமையான
வித்தியாசமான கவிதை
மிகவும் ரசித்தேன்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

காதலுக்கு மரணமில்லை..

அழகிய கவிதை

test said...

வணக்கம் நண்பர்களே

உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்

ஒன்னும் தெரியாதவன் said...

குருடர் கையில் யானையாக // உண்மை

Unknown said...

வணக்கம்,

நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

www.Nikandu.com
நிகண்டு.காம்

!

Blog Widget by LinkWithin