பானைக்கு வைத்தியம் பார்த்தா எனக்கெப்படி வலிபோகும்!

ரொம்ப கஷ்டப்படுறேன்னு அம்மா பக்கத்துல விசாரிச்சாங்க,
ரத்த்கட்டா இருக்கும் இல்லைனா மூச்சுபிடிப்பா இருக்கும். மாணிக்கம்பாளையம் முக்குல ஒருத்தர் எடுப்பாருன்னு அட்ரஸ் கொடுத்துருக்காங்க.

காலையிலயே நேரமா போயிட்டோம். அவரு விசயம் கேட்டுட்டு இருங்க தள(இலை) பறிச்சிட்டு வர்றேன்னு போயிட்டாரு, அரைச்சு பத்து போடுவாரு போலன்னு நினைச்சேன். ஒரு மண்பானை எடுத்துட்டு வந்து அது மேல இலையை கசக்கி + மார்க் போட்டாரு. நான் வேடிக்கை பார்த்துகிட்டே இருந்தேன்

உள்ளிருந்து ஒரு தாம்பாளதட்டு எடுத்துட்டு வந்தாரு, என்ன வைத்திய முறைன்னே புரியாம ஆச்சர்யமா பார்த்துகிட்டு இருந்தேன், அந்த தாம்பாளத்தில் முழுக்க தண்ணீர் ஊற்றினார். என்னை செருப்பை கழட்டிட்டு ஓரமா நிற்க சொன்னாரு. கவனிக்க, என்னை தொடக்கூட இல்லை.

கொஞ்சம் பேப்பர் எடுத்துட்டு வந்து அதை தீயிட்டு மண்பானைக்குள் போட்டாரு, அப்படியே தாம்பாளத்தட்டில் கவுத்துனாரு, கொஞ்சநேரத்தில் தட்டில் இருந்த தண்ணியை பானை உறிஞ்சிகிச்சு, பார்த்திங்களா மூச்சுகட்டு தான் இதுன்னாரு. இந்த தண்ணி கொஞ்ச கொஞ்சமா ரிலீஸ் ஆகும். அப்படியே உங்களுக்கு மூச்சுகட்டும் ரிலீஸ் ஆகும்னாரு.

எங்கம்மா வலி குறைஞ்சிருக்காடான்னுச்சு, பானைக்கு வைத்தியம் பார்த்தா எனக்கெப்படிமா குறையும்னு கேட்டேன். அவரு ஸ்ட்ராங்கா சொல்றாரு, சாயங்காலம் 6 மணிக்கு வாங்க கண்டிப்பா வலி இருக்காதுன்னு, ஒரு டம்பளர் எடுத்துட்டு வாங்க இதே ஜிமிக்ஸ் வேலையை நான் செஞ்சு காட்டுறேன்னு சொன்னேன். அதுக்கு மேல இருந்த நான் சண்டை போடுவேன்னு எங்கம்மா கூட்டிட்டு வந்துருந்துச்சு.

இந்த சீன பாரம்பரிய வைத்தியத்தை லோக்கலிலும் செய்யுறாங்க, பழைய பத்துபைசாவில் ஒரு சூடம் வச்சு என் முதுகில் வலி இருக்கும் இடத்தில் வச்சாங்க. அதை பற்றவைத்து அதன் மேல் டம்ப்ளரை கவுத்தினாங்க, உள்ளே வெற்றிடம் ஆகி என்னை கெட்டியா பிடிச்சிகிச்சு. பத்துநிமிடம் அப்படியே தான் இருந்தது.

முன்னைக்கு கொஞ்சம் நல்லா குனிய முடியுது, வலியும் குறைஞ்சிருக்கு, இன்னும் ரெண்டு நாளைக்கு இதையே செய்யலாம்னு இருக்கேன். இந்த வைத்திய முறையை கராத்தேகிட் படத்தில் ஜேடன் ஸ்மித்துக்கு ஜாக்கிசான் பண்ணுவார்

2 வாங்கிகட்டி கொண்டது:

கிருஷ்ண மூர்த்தி S said...

:):):)

HariShankar said...

ஏற்கனவே இதே FB'le படிச்சுட்டேன் தல :)

!

Blog Widget by LinkWithin