அடைக்க வேண்டிய ஓட்டைகள்!


கிருஷ்ணமூர்த்தி சார் மாதிரி எனக்கு கொழ கொழன்னு கொழம்பு வைக்க தெரியாது, அதனால நறுக்குன்னு சொல்லிட்டு நகர்ந்துகிறேன்! நான் இந்த விசயத்தை பத்தி எழுத வேணாம்னு தான் நினைச்சேன், ஆனால் நண்பர்கள் விடுவதில்லையே!

சற்றேறகுறைய ஆறு மாதங்களுக்கு முன் ஒரு இஸ்லாமிய பெண் தடகள போட்டியில் வெற்றி பெற்றார், சிறப்பு என்னவென்றால் ஸ்கூபா டைவிங்கிற்கு பயன்படுத்தும் இறுக்கமான உடை அணிந்திருந்தார், அதே போன்ற தலைகவசம் கூட இருந்தது,(படத்தில் பார்க்க)இந்த செய்தியை புர்கா போட்டு போட்டியில் ஒரு பெண் வெற்றி பெற்றார் என்று பீர் அண்ணன் பதிவு போட்டு சொறிந்து கொண்டார்!(இது தான் புர்காவா!?)



ஏறக்குறைய 1700 வருடங்களுக்கு முன் உருவாக்கப்பட்டது தான் குரான், அதில் தான் புர்கா பற்றி எழுதியிருக்கிறது, அதற்கு முன்னாலும் கடவுள் நிறைய தூதர்களையும், கூடவே வேதம் என்ற பெயரில் சில கட்டுபாடுகளையும் அனுப்பியிருக்கிறார், ஆனால் அதிலெல்லாம் பெண்களின் உடை பற்றி ஒன்றுமில்லை, இஸ்லாமியர்களை பொறுத்தவரை குரானே இறுதி வேதம், அதனை அவரே!? சொல்லியிருக்கிறார், ஒரு முழுமையான வேதத்தை கொடுக்க இம்புட்டு டெஸ்டுகள் செய்யும் கடவுள் இதை தான் முழுமையான வேதம் என்று எப்படி அறிவிக்க முடியும், முதல் முயற்சியிலேயே சரியானவற்றை செய்யமுடியாதவர் எப்படி கடவுளாக இருக்க முடியும்!

கடவுள் மறுப்பாளர்கள் எப்போதும் தாங்கள் சொல்லவதை சரி என்றும், நீங்கள் நம்பி தான் ஆகவேண்டும் என்றும் சொன்னதில்லை, அந்த புத்தகத்துல போட்ருக்கு, அவர் சொன்னால் சரியாக தான் இருக்கும் என்று யாரிடமும், எதனிடமும் எங்கள் மூளையை நாங்கள் அடகு வைத்ததில்லை, நாங்கள் முன் வைப்பதெல்லாம் உண்மையின் அதிகபடியான சாத்தியகூறுகள், அதை சரியான வாதத்திற்கு எடுத்து கொள்ளாமல் சேனை கட்டிய குதிரையாக இருப்பது தான் உங்கள் விருப்பமென்றால் நாங்கள் ஒருபோதும் வருத்தப்பட போவதில்லை, நாங்கள் உலகை திருத்த வந்த அவதாரங்கள் கிடையாது!.

நாங்கள் என்ன சொன்னாலும் நீங்கள் அதை மறுபரீசிலனைக்கு எடுத்து கொள்ள மாட்டீர்கள் என எங்களுக்கும் தெரியும், இஸ்லாமிய பெண்களுக்கு பர்தா போடுவது பிடித்திருக்கிறது, எங்கள் பார்வையில் இஸ்லாமிய பெண்களுக்கு அடிமையாக அல்லது அடங்கி இருப்பது பிடித்திருக்கிறது, இஸ்லாமிய ஆண்களுக்கு பெண்களை அடிமையாக வைத்திருப்பது பிடித்திருக்கிறது, அதற்கு ஒரு சாக்கு “குரானில் இருக்கிறது” என்பது!, புர்கா அணிவது உங்கள் உரிமை தான், இல்லையென்று எந்த கடவுள் மறுப்பாளனும் சொல்லமாட்டான், ஆனால் அதனை கேள்விகுள்ளாக்க யாருக்கும் உரிமை இல்லை என்பது கேள்விக்கு பதில் சொல்லத்தெரியாதவர் மழுப்புவதற்காக சொல்வது!



திருட்டு டி.வி.டி, சாலையோர படுகொலை என எப்படி உங்களுடய சமுதாய அக்கறைகளை காட்டுகிறீர்களோ, அது தான் நாங்களும் செய்கிறோம், கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லையென்றால், தெரியவில்லை என்று பின் வாங்கி கொள்ளவேண்டும், அதை விட்டு எங்களை கேள்வி கேட்கும் உரிமை யாருக்குமில்லை, நீ அடைச்சுக்கோ, அமுக்கிகோ என்பது, நாங்கள் செய்வதெல்லாம் சரி, மற்றவர்கள் செய்வதெல்லாம் தவறு என்பதற்கு சமம்! நாங்கள் ஆரம்பித்தால் எல்லா ஓட்டையும் கார்க் புடிங்கி வெளி வரும்! இதுவரை நீங்கள் எந்த கேள்விக்கும் ஒழுங்காக பதில் சொல்லவில்லை என்பதை ஞாபகம் வைத்து கொள்ளுங்கள்!

172 வாங்கிகட்டி கொண்டது:

Radhakrishnan said...

அது சரி.

உங்களுக்கு அளிக்கப்பட்டு வரும் பதில்கள் அனைத்தும் உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றமாதிரி இல்லை என சொல்லுங்கள். பிரச்சினை தீர்ந்துவிடும்.

நாம் செய்யும் காரியங்களுக்கு இது போன்ற பொது நூல்களை காட்டிவிட்டால் பிரச்சினை இருக்காது என செயல்படுபவர்களை ஒன்றும் செய்ய இயலாது.

எனவே அவரவர் வசதிகேற்ப வாழ முற்படுபவர் அவரவர் வசதிகேற்ப பொது நூல்களை அடையாளம் காட்டுவார்கள்.

அடைக்க வேண்டியது ஓட்டைகளை அல்ல.

அமர பாரதி said...

வாலு, எதுக்கு யாருக்கு பதில்னு போட்டா நல்லா இருக்குமே.

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

வால்,
இதுவேதான்...

மதங்கள், கடவுள்கள் பற்றிய பிரச்சினைகளை விவாதிக்க வெளிக்கிட்டா அது அப்பிடித்தான் கிடக்குது. நீ போய்யா என்று சொல்றாங்கள்.

இது அண்மையிலதான் நடந்தது.

எனக்கு கடுங்கோபம். போங்கடா பன்னிப் பயலுகளா... காரண காரியத்துக்காக கைநீட்டிக் கேள்வி கேட்கத் தெரியாத அல்லது தைரியமில்லா உங்களுக்கெல்லாம் என்னத்துக்கடா வாழ்க்கை. சின்ன வயசிலேய எதையும் கேள்விகேட்கும் திறனை வளர்க்கவேண்டும்.

நாளை சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் செய்கிறேன்.

வால்பையன் said...

//உங்களுக்கு அளிக்கப்பட்டு வரும் பதில்கள் அனைத்தும் உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றமாதிரி இல்லை என சொல்லுங்கள். பிரச்சினை தீர்ந்துவிடும்.//

அதிகபட்ச சாத்தியகூறுகள் நாங்கள் கேட்பது, அதில் இருக்கு அதனால் நம்புகிறோம் என்பதல்ல

//நாம் செய்யும் காரியங்களுக்கு இது போன்ற பொது நூல்களை காட்டிவிட்டால் பிரச்சினை இருக்காது என செயல்படுபவர்களை ஒன்றும் செய்ய இயலாது.//

நிச்சயமாக, பெரியாரிஷ்டுகளும் அதை தான் செய்கிறார்கள்!

//அடைக்க வேண்டியது ஓட்டைகளை அல்ல. //

வேற என்ன தல இருக்கு அடைக்க!?

வால்பையன் said...

//அமர பாரதி said...

வாலு, எதுக்கு யாருக்கு பதில்னு போட்டா நல்லா இருக்குமே.//

பதிவின் நடிவில் வந்த ஒருவரி தான்!

இங்கே

வால்பையன் said...

//எனக்கு கடுங்கோபம்.//

கடுங்கோபம் நல்ல விவாதத்திற்கு அழகல்ல நண்பரே! நம்மை கோபபடுத்தினாலும் நாம் அமைதியாக கேள்வி கேட்டு கொண்டே இருக்க வேண்டும்!

கல்வெட்டு said...

வால் ,
டிவிக்கு நோட்டீஸ் போயிருக்கு. உங்களுக்கும் வேண்டுமா? :-)))

"கார்க்"தான் நமக்கு நல்லது.
இறைவனால் முடியாதது எதுவும் இல்லை.

பார்க்க:

::1::
விஜய் டிவி பர்தா விவாதம் ஒளிபர‌ப்பினால் முற்றுகை.

http://athiradenews.blogspot.com/2010/01/blog-post_3697.html


::2::

...முஸ்லிம்கள் என்று தங்களை சொல்லக் கூடிய ஒழுங்கீனமான பெண்களை வைத்து நிகழ்ச்சி தயாரித்து ஒளிபரப்பத் துடிக்கும் விஜய் டிவியே....

http://www.tntj.net/?p=9594

.

வால்பையன் said...

@ கல்வெட்டு

பெண்னினத்தின் பாதுகாப்பிற்கு பர்தா நல்லது என்று சொன்னதற்கு யாரிடம் இருந்து என்று கேள்வியை வைத்திருக்கிறேன் அங்கே, என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்!

கல்வெட்டு said...

//கேள்வியை வைத்திருக்கிறேன் அங்கே//

ம்ம்........

ஏதாவது பேசனும்னா அதுக்கு இஸ்லாம் சங்கம் ஸ்பெசல் ஆள் ஏற்பாடு பண்ணும். அவுங்கதான் மார்க்க ஞானிகள். சும்மா இஸ்லாமியர் என்று சொல்லி சில ஒழுங்கீனர்களை வைத்து பேசி வம்புபண்ண வேண்டாம். சாக்கிரதை

தகவல்....

http://www.tntj.net/?p=9594

...முஸ்லிம்கள் என்று தங்களை சொல்லக் கூடிய ஒழுங்கீனமான பெண்களை வைத்து நிகழ்ச்சி தயாரித்து ஒளிபரப்பத் துடிக்கும் விஜய் டிவியே....

....பர்தா அணிவது தான் பெண்ணினத்திற்கு பாதுகாப்பானதும் கண்ணியமானது என்பதை நிருபீக்க நேரடி விவாதத்திற்கு முஸ்லிம் நாங்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தயாராக இருக்கின்றது என்ற பகிரங்க விவாத நேரடி விவாத அழைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது......

.

வெற்றி said...

ரொம்பவே சென்சிடிவான விஷயத்தை டச் பண்ணிருக்கீங்க..கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க தல..

வால்பையன் said...

//இஸ்லாம் சங்கம் ஸ்பெசல் ஆள் ஏற்பாடு பண்ணும். //

கடவுள் மறுப்பாளர்கள் எல்லாருமே ஸ்பெஷல் தான்!

//சும்மா இஸ்லாமியர் என்று சொல்லி சில ஒழுங்கீனர்களை வைத்து பேசி வம்புபண்ண வேண்டாம். சாக்கிரதை//

பதில் சொல்ல தெரியாதவர்கள் உண்மையான இஸ்லாமியர்கள் இல்லை என்பது தானே அவர்கள் சொல்வது, சரிதானே!

//...முஸ்லிம்கள் என்று தங்களை சொல்லக் கூடிய ஒழுங்கீனமான பெண்களை வைத்து//

சுயமா சிந்திக்க ஆரம்பிச்சிட்டா இஸ்லாத்தில் இருக்கமுடியாதோ!?

//நேரடி விவாதத்திற்கு முஸ்லிம் நாங்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தயாராக இருக்கின்றது //

என்னான்னு அப்படியே அவர்களது வலையில் போட்டால் நாமும் கலந்து கொள்ளலாம், இதற்காக நாடு நாடாக சுற்ற நாம் என்ன புது மதமா ஆரம்பித்திருக்கிறோம்!

மந்திரன் said...

புர்கா , பர்கா .. என்னவோ இருந்துட்டு போகுது ..
ஆணாதிக்கம் , பெண்ணாதிக்கம் போன்ற பெரிய வார்த்தைகளை எல்லாம் "வால் " பார்த்துக்கொள்வார் .
என்னோட (என்னை போன்ற இளைஞர்கள் ) வருத்தம் அது அல்ல .
அவர்களின் அழகான முகத்தை வெறும் முகக்கண்ணாடிக்கு மட்டும் கொடுத்துவிட்டு வெறும் முகமில்லா பிம்பங்களாக அவர்கள் வருவது
ஒரு ரசிகனாக எனக்கு வருத்தம் அளிக்கும் விஷயம் .
கற்பு , கருப்பு ,குறுப்பு இப்படி எல்லாம் பேசாதீர்கள் ,
மதங்களை தாண்டி மனங்கள் மணக்க வேண்டும் .
இப்படி எல்லாம் பேச எதாவது கடவுள சீக்கிரம் கண்டுபிடிங்கப்பா ..
உருப்படும் இந்தியா ..

பதி said...

//ஒழுங்கீனமான பெண்களை வைத்து நிகழ்ச்சி தயாரித்து//

ஒழுங்கினை அளவிட இவர்கள் வைத்துள்ள அளவுகோல் எங்கு விற்பனைக்கு உள்ளது?

பிறரை அதுவும் பெண்களை எதனைக் கொண்டு ஒழுங்கீனமானவர்கள் என குறிப்பிட இவர்களுக்கு அதிகாரம் அளித்தது யார்?

இது போன்ற வார்த்தைகளுக்காக சம்பந்தப்பட்ட பெண்கள் இந்த அமைப்புகள் மேல் சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலாதா?

வால்பையன் said...

//ஒழுங்கினை அளவிட இவர்கள் வைத்துள்ள அளவுகோல் எங்கு விற்பனைக்கு உள்ளது?/

குரானில்!

//பிறரை அதுவும் பெண்களை எதனைக் கொண்டு ஒழுங்கீனமானவர்கள் என குறிப்பிட இவர்களுக்கு அதிகாரம் அளித்தது யார்?//

நாம தான் சரின்னு நின்னைச்சிகிற எல்லாரும் இப்படி சொல்லலாம்னு குரானில் சொல்லியிருக்கும் போல!

//இது போன்ற வார்த்தைகளுக்காக சம்பந்தப்பட்ட பெண்கள் இந்த அமைப்புகள் மேல் சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலாதா? //

நிச்சயமாக உண்டு, ஆனால் பெண்கள் சுதந்திரமாக கருத்து சொல்ல எந்த நாட்டில் ஏது உரிமை!?,

சுதந்திரமா அடக்கு முறைக்கு எதிராக கருத்து சொன்னா நாறக்குடி என்பது இஸ்லாம் வேதத்தில் உள்ள கருத்து!

மந்திரன் said...

//சம்பந்தப்பட்ட பெண்கள் இந்த அமைப்புகள் மேல் சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலாதா//
இயலாது . எல்லாம் ஒட்டு அரசியல் .

//ஒழுங்கினை அளவிட இவர்கள் வைத்துள்ள அளவுகோல் எங்கு விற்பனைக்கு உள்ளது?//
நல்லா கேட்டீங்க ஒரு கேள்வியை

மேவி... said...

ரைட்டு ......

குளிர் தேசதங்களில் அந்தகாலத்தில் பெண்களுக்கென இருந்த ஓர் உடை தான் பர்கா வின் முலம் என்று படித்து இருக்கிறேன் ..... அதை தான் இஸ்லாமியத்தில் கடை பிடித்தார்கள் என்று எங்கோ படித்து இருக்கிறேன் .....

ஒரு பெரிய புடவை போல் இருக்கும் துணியை உடலோடு சுற்றி கொள்வார்கள் ...... இப்பொழுது பர்கா அணியும் பெண்கள் அது போல் செய்வது இல்லையே ....

மேவி... said...

"ஒழுங்கினை அளவிட இவர்கள் வைத்துள்ள அளவுகோல் எங்கு விற்பனைக்கு உள்ளது?"


விற்பனைக்கு உள்ள அந்த அளவுகோலை அளக்க ஓர் அளவுகோல் இருக்கா

மேவி... said...

வால்ஸ் இதெல்லாம் ஆன்மீகம் இல்ல போல் இருக்கு ..அதான் யாரும் கும்மி அடிக்கல

கல்வெட்டு said...

//பதி said...
இது போன்ற வார்த்தைகளுக்காக சம்பந்தப்பட்ட பெண்கள் இந்த அமைப்புகள் மேல் சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலாதா?//

டியர் பதி,
நீங்கள் இஸ்லாமியரா? உங்கள் வீட்டுப் பெண்கள் புர்கா போட்டிருக்கிறார்கலா?

யார் கேள்வி கேட்கலாம் என்பதற்கு பீர் என்பவர் பதிவு போட்டு விளக்கியுள்ளார்.

பார்க்க...

http://jaihindpuram.blogspot.com/2010/01/blog-post_11.html

//பர்தாவிற்கு சம்பந்தம் இல்லாதவர்கள் அத்தனையையும் அடைத்துக்கொண்டிருந்தாலே பிரச்சனை ஒன்றும் இல்லை.//

எனவே கேள்வி கேட்க சில தகுதிகள் வேண்டும்.
இல்லாதவர்களை பீர் பொத்திக்கொன்டு போகச் சொல்லியுள்ளார்.

நாளை இஸ்லாமியர்களுக்கு ஏதேனும் பிரச்சனை (பர்தா மர்றும் குரான் விவாதங்கள் தவிர) என்றாலோ நீங்கள் தள்ளியிருப்பதே நல்லது. இதையும் பீர் அண்ணே ஒரு பதிவில் "கொள்கை மாறுபட்டல் வீட்டு விசேசங்களுக்குப் போக வேண்டாம் " என்று சொல்லியுள்ளார்.

.

மந்திரன் said...

செத்துப் போனவன் தான் சாவை பற்றி பேசுனும் என்றால் எப்படி தோணுமோ அபபடி தோன்றுகிறது அந்த பதிவை படிக்கையில் ..

பதி said...

கல்வெட்டு,

என்னுடைய கேள்வி எல்லாம் இவர்கள் யார் மற்றவர்களின் ஒழுங்கினைப் பற்றி பேச என்பது தான்..

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

நல்ல கருதுக்கள் Mr.வால்


இனிய தமிழர் திருநாள் நல்வாழ்துக்கள்

கல்வெட்டு said...

// பதி...
என்னுடைய கேள்வி எல்லாம் இவர்கள் யார் மற்றவர்களின் ஒழுங்கினைப் பற்றி பேச என்பது தான்..//

யார் இவர்களா ?
அவர்கள் இஸ்லாம் எனும் மதத்தைச் சார்ந்தவர்கள்.

அந்த மதத்தில் இருக்கும் விசயங்களை அவர்களைத்தவிர வேற யாரும் பேச/ கேள்வி கேட்க உரிமையில்லை. பார்க்க பீர் பதிவு.

**

சோமாலியாவில் பட்டினியால் சாகும் இஸ்லாமியருக்கு தமிழக இஸ்லாமியர் சங்கங்கள் மட்டுமே உதவி செய்யும்.

நீங்கள் உதவி செய்ய நினைத்தால் , பீரிடமும் அப்புறம் இந்த சங்க http://www.tntj.net/?p=9594 பொறுப்பாளர்களிடமும் ஒரு விவாதம் வைத்து வென்றுவிட்டு உதவவும்.

***

பார்தா தேவை இல்லை என்று சொன்ன பெண்களும் இஸ்லாமியர்தான். (விஜய்டிவீ கிளிப்பிங்ஸ் பார்க்க). அவர்கள் பர்தா வேண்டாம் என்று சொன்னதற்காக அவர்கள் ஒழுங்க்கீனர்கள் ஆகிவிட்டார்கள்.

கடைசி 1:40 நிமிட கிளிப்பிங்ஸில் அடுத்தவார பர்தா நிகழ்ச்சியின் முன்னோட்டம் உள்ளது.

http://video.yahoo.com/watch/6753138

***********

முக்கியம்....
பர்தா போட்டாலும் பெண்களுக்கு கடவுள் 100% பாதுகாப்பு கொடுக்கமுடியாது.
இது ஒரு மாதிரியான "உண்டு ஆன இல்லை அப்படியல்லாம் இருக்கலாம் ஆன இருக்காது ஏன் உனக்கு கேள்வி " என்ற சமாச்சாரம்..
பார்க்க...

அமிலப் பெண்கள் (இளகிய மனமுடையவர்கள் இப் பதிவைத் தவிர்க்கவும் )
http://rishansharif.blogspot.com/2009/01/blog-post_08.html

Ashok D said...

Excuse me, இரட்டை புள்ளி கோலம் புக்கு இங்க கிடைக்குமா?

கல்வெட்டு said...

//D.R.Ashok said...
Excuse me, இரட்டை புள்ளி கோலம் புக்கு இங்க கிடைக்குமா?//

D.R.Ashok,
சுவாமி நித்யானந்தாவிடம் கேட்டதெல்லாம் கிடைக்கிறதாம். பிச்சாத்து இரண்டு புள்ளிக்கோலபுக்கா கிடைக்காது?


பார்க்க அருள்வாக்கு:
http://charuonline.com/Sep2009/KadavulaiKanden.html

//நான் கேட்ட வரம் இதுதான்: ஸீரோ டிகிரி என்று ஒரு நாவல் எழுதியிருக்கிறேன். அது ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளது. டெஹல்கா போன்ற முக்கியமான பத்திரிகைகளில் அது பற்றிய உற்சாகமான மதிப்புரைகள் வந்துள்ளன. ஆனால் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் அதை எடுத்துச் செல்ல ஆள் இல்லை.

இந்த வரத்தைக் கேட்டு மூன்று வாரங்களுக்குள் உலகின் மிக முக்கியமான, 200 ஆண்டுகள் பழமையான ப்ரிட்டிஷ்/அமெரிக்கப் பதிப்பகம் ஒன்றிலிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது.//


உங்களுக்கு இரண்டு புள்ளிக்கோலபுக்கு கிடைக்க நானும் வேண்டிக்கிறேன்.

Anonymous said...

எங்க, இந்து எதிர்ப்பென்றால், நீ பார்ப்பானா என்று எதிர் கேள்வி கேட்டு வரும் முஸ்லிம் நண்பர்களும், பெரியார் பக்தர்களும் காணோம்?

வால்பையன் said...

//எங்க, இந்து எதிர்ப்பென்றால், நீ பார்ப்பானா என்று எதிர் கேள்வி கேட்டு வரும் முஸ்லிம் நண்பர்களும், பெரியார் பக்தர்களும் காணோம்?//

மூன்றாவது வருடமாக இணையத்தில் எல்லா மதங்களையும் கேள்வி கேட்டு கொண்டிருப்பதை அறியாமலா இருப்பார்கள்!.

Ashok D said...

அஹா ஃபுல் ஃபார்ம்ல இருக்கீங்க போல.. எனது ஒரு வரிக்கு இவ்வளவு பெரிய பதிலா நன்றிங்க கல்வெட்டு.

அப்புறம் உங்களுக்கு யாரு மேல நய்யாண்டி, சாரு மேலயா இல்ல நித்தியா மேலயா?

வால்பையன் said...

//அப்புறம் உங்களுக்கு யாரு மேல நய்யாண்டி, சாரு மேலயா இல்ல நித்தியா மேலயா? //

யாருங்க நையாண்டி பண்னது!
அவருக்கு வரம் கிடைச்சது, நீங்களும் கேளுங்கன்னு தானே சொன்னாரு!

சரி நீங்க நல்லவரா!?, கெட்டவரா!?
நையாண்டி யாரை பண்றாங்கன்னு உங்களுக்கு உண்மையிலேயே தெரியாதா!?

Ashok D said...

அன்பின் வாலுக்கு
//மதங்களையும் கேள்வி கேட்டு கொண்டிருப்பதை அறியாமலா இருப்பார்கள்//
நமக்கு எப்டி க்வாட்டரோ..அதுமாதிரி சிலருக்கு மதங்கள் என்பது self discipline மாதிரின்னு நினைக்கிறேன்

வால்பையன் said...

//நமக்கு எப்டி க்வாட்டரோ..அதுமாதிரி சிலருக்கு மதங்கள் என்பது self discipline மாதிரின்னு நினைக்கிறேன்//

ஒவ்வோரு மதத்திற்கும் ஒவ்வோரு சட்டதிட்டம் இருக்கும் பொழுது நீங்கள் சொல்வது சரிதான்! குவாட்டரை ஏன் நியாபக படுத்துறிங்க!

Ashok D said...

நீங்க எனக்கு கேள்வி கேக்கும்போது நான் உங்களுக்கான் கேள்விய typikaren என்னா ஒத்துமை

Ashok D said...

நமக்கு குவாட்டர் கடவுள்ளன்னா.. சிலருக்கு இயேசு அல்லா கிருஷ்னா அதுமாதிரி
ஆனா நம்ம சரக்கு சாப்டசொல்லொ எல்லாரும் உள்ள வந்துர்றாங்கோ..

கல்வெட்டு said...

//D.R.Ashok
அப்புறம் உங்களுக்கு யாரு மேல நய்யாண்டி, சாரு மேலயா இல்ல நித்தியா மேலயா?//

என்ன கொடுமை இது அசோக். சாரு என்ற பதிவர் சொல்றது உங்களுக்கு நையாண்டியா? அந்த மேட்டருக்கு சுட்டி கொடுத்திருக்கேன்.

நிச்சயம் நடக்கும். சென்ற வாரம் என் பையனுக்கு அ, ஆ புத்தகம் அவர்மூலமே கிடைத்தது. இப்பெல்லாம் எதுன்னாலும் ச்வாமிதான்.

இந்த பர்தா மேட்டர்கூட அவருக்கு இன்னும் தெரியாது. அப்ளிகேசன் போட்டால் தீர்வை கொரியரில் அனுப்பிவிடுவார். கையில காசு வாயில தோசை மாதிரி.

:-))

Ashok D said...

ஏம்பா கல்வெட்டு

சாமி விஷயத்த கல்லாய்க்காதபா.. அப்புறம் மாமி சாரி சாமி வந்து கண்ண குத்தும்

வால்பையன் said...

//சென்ற வாரம் என் பையனுக்கு அ, ஆ புத்தகம் அவர்மூலமே கிடைத்தது. இப்பெல்லாம் எதுன்னாலும் ச்வாமிதான்.//

சுவாமிகளுக்கு இப்போது இது தான் நல்ல தொழில் போல! பழைய தொழிலெல்லாம் முடுங்கிருச்சோ!?

வால்பையன் said...

//சாமி விஷயத்த கல்லாய்க்காதபா.. அப்புறம் மாமி சாரி சாமி வந்து கண்ண குத்தும் //

இருட்டில் சாமிக்கு கண்ணு தெரியுமா!?
நாலு கை இருக்குற இந்து சாமிக்கு ஏன் நாலு கால் இருக்குறதில்ல!?

Ashok D said...

//நாலு கை இருக்குற இந்து சாமிக்கு ஏன் நாலு கால் இருக்குறதில்ல!?//
நாலு கையா.. அதுக்கு மேலயே இருக்கும்... அது ஒரு குறியீடு வாலு... கடவுள் எல்லாம் செய்யும்ன்னு ஒரு குறியீடு.. காக்கும், அழிக்கும், விளையாடும், நய்யாண்டி பண்ணும் அதுமாதிரி... ஏதாவது problem வந்த escape ஆகி ஓட 2 கால்தானே besttu?

வால்பையன் said...

//ஏதாவது problem வந்த escape ஆகி ஓட 2 கால்தானே besttu?//

அதுவும் சரிதான்!

கல்வெட்டு said...

//D.R.Ashok said...
ஏம்பா கல்வெட்டு
சாமி விஷயத்த கல்லாய்க்காதபா.. அப்புறம் மாமி சாரி சாமி வந்து கண்ண குத்தும்//

சீரியசா போகும்போது இப்படி வரம்தரு கல்பதரு போன்ற காமெடிகள் தேவை அசோக்.

..ஆமா நீங்கா நல்லவரா கெட்டவரா?

இது ரொம்ப முக்கியம் ..

அண்ணே பீர் சொன்ன மாதிரி நீங்க பாட்டுக்க.. "குவார்ட்டர் அடிக்காதவர்கள் எல்லாம் ச்வாமி நித்யாவைப்பற்றிப் பேசக்கூடாது" ன்னு தடை போட்டா காமெடி ட்ரேக்குக்கு எங்க‌ போறது?

:‍-))

Ashok D said...

//அதுவும் சரிதான்!//
இப்பவாவது புரியுதே... சந்தோஷம்

Ashok D said...

அடப்பாவிகளா... நான் காமெடி பண்ணறனா...
சீரியஸா தான்ம்ப்பா பேசறேன்... ஆனா நான் பேசசொல்லோ காமெடி மாதிரி தெரியும் உத்து பாத்தா பல விஷயங்கள் புரியும்... கவனிக்க விஷமங்கள் அல்ல

வால்பையன் said...

//உத்து பாத்தா பல விஷயங்கள் புரியும்..//

எப்படி பார்த்தாலும் எழுத்து தான் தெரியுது! விஷயங்கள் எங்கேயோ போய் ஒளிஞ்சிக்கிச்சு!

Ashok D said...

//விஷயங்கள் எங்கேயோ போய் ஒளிஞ்சிக்கிச்சு!//

உண்மையிலே விஷயங்கள் வார்த்தைகளுக்கு நடுவிலே உள்ள spaceல தான் இருக்கு :)

thamizhparavai said...

ரொம்பத் தைரியம்தான் வாலு...

Sanjai Gandhi said...

இது ரத்த பூமிடோய்..

கல்வெட்டு said...

*** எல்லாம் சுபம் ***

காட்சி 1:
விஜய் டிவீ பர்தா நிகழ்ச்சி விள‌ம்பரம்
http://video.yahoo.com/watch/6753138

காட்சி 2:
விஜய் டிவி அலுவலக முற்றுகை அறிவிப்பு
http://www.tntj.net/?p=9594

காட்சி 3:
விஜய் டிவி நிகழ்ச்சி வாபஸ்
http://www.tntj.net/?p=9622

விளக்கங்கள் 4:
முற்றுகை இல்லை.
http://www.onlinepj.com/vimarsanangal/vijay_tv/

***

Anonymous said...

உங்கள் குழப்பங்களுக்கு இங்கே விடை இருக்கிறது.

http://onlinepj.com/pengal/hijab_en/

குடுகுடுப்பை said...

நோ கமெண்ட்ஸ்

Anonymous said...

வால்ஸ்,
தங்களின் அடுத்த இலக்கு மன்மோகன் சிங்கின் தலப்பா கட்டாமே? பட்டய கிளப்புங்க.

அது சரி(18185106603874041862) said...

//
கடவுள் மறுப்பாளர்கள் எப்போதும் தாங்கள் சொல்லவதை சரி என்றும், நீங்கள் நம்பி தான் ஆகவேண்டும் என்றும் சொன்னதில்லை, அந்த புத்தகத்துல போட்ருக்கு, அவர் சொன்னால் சரியாக தான் இருக்கும் என்று யாரிடமும், எதனிடமும் எங்கள் மூளையை நாங்கள் அடகு வைத்ததில்லை, நாங்கள் முன் வைப்பதெல்லாம் உண்மையின் அதிகபடியான சாத்தியகூறுகள், அதை சரியான வாதத்திற்கு எடுத்து கொள்ளாமல் சேனை கட்டிய குதிரையாக இருப்பது தான் உங்கள் விருப்பமென்றால் நாங்கள் ஒருபோதும் வருத்தப்பட போவதில்லை, நாங்கள் உலகை திருத்த வந்த அவதாரங்கள் கிடையாது!.
//

Well said mate...Well said...In fact, very well said!

நசரேயன் said...

அது சரி யை வழி மொழிகிறேன்

Anonymous said...

எல்லா இஸ்லாமியர்களையும் குறை சொல்லவில்லை. அப்படி சொன்னால் எனக்குத் தெரிந்த நல்லவர்களை கேவலப்படுத்துவது போல் இருக்கும். சிலர் செய்வதால் இஸ்லாம் என்றாலே பலருக்கு கடுப்பு வருகிறது.

யப்பா.. சிலர் சொன்னதை கேட்டால் இவனுங்களுக்கென்ன லூசா இல்லை எங்களுக்கு லூசா என்று நினைப்பீர்கள். மனிசனாக வாழ்ந்தால் "நல்ல முஸ்லிம் இல்லையாம்". நபிகள் சொன்னமாதிரி இருந்தால் தான் உண்மையான முஸ்லிமாம். அதுவும் அவர் கேனைத் தனமாக சொன்னால் கூட அதை ஏன் என்டு கேட்காது செய்யாட்டி அவர் உண்மையான முஸ்லிம் இல்லையாம். இது தான் எனக்கு சில பன்னாடைகளால் சொல்லப்பட்டது.

இஸ்லாத்தில் மரணத்துக்குப் "பின்" என்ன நடக்கும் என்று சொல்லுவார்களாம். அடுத்த நிமிசம் இருப்பம் என்டு தெரியாத வாழ்க்கை வாழும் எங்களுக்கு மரணத்துக்குப் பின் என்ன மண்ணாங்கட்டி நடந்தால் தான் என்ன?

rishansharif கூட ஹிஜாப் போடுவது தான் மேன்மையானது என்பது போல் எழுதியிருந்தார். Sad!!!

தெரியாமல் தான் கேட்கிறேன் Diving Suit-ல் உடல் அமைப்பு அப்பட்டமாக தெரியுமே. எப்படி இந்த மேதாவிகள் அதை போட விட்டார்கள். ஆச்சரியமாக இருக்கு.

இது என்னப்பா... இங்க ஹிஜாப் அட்டாச் பண்ணின full wet suit / swim suit இருக்கு நீச்சலுக்குப் போட. அப்படி போட்டு நீந்தவா வேணும்.

இன்னுமொரு கொடுமை "Surf" பண்ண போன இடத்தில் பார்த்தது. ஹிஜாப் போட்டுட்டு ஒரு பொண்ணு Surf பண்ண வந்திருந்தாங்க.. கடலில் surf பண்ணும் போது உயிரைப்பயணம் வைப்பது மாதிரி. கடலில் விழுந்தால் அலை புரட்டி எடுக்கும் போது ஹிஜாப் கழுத்தைச் சுற்றி இறுக்குமா அல்லது முகத்தை மூடி மூச்சை அடைக்குமா என்று சொல்ல முடியாது. அப்படி எல்லாம் போட்டு Surf பண்ண வேணுமா. ஏதாவது man made waves இருக்கிற இடம்ன்னா பரவாயில்லை. கடலில் கூட ஹிஜாப்புடன் தான் குதிப்பேன் என்பது ஆபத்தானது.

நான் நாத்திகன் அல்ல. அதற்காக மதவாதியும் இல்லை. மதங்கள் மனிதனால் மனித சமுதாயத்தை வழிகாட்ட உருவாக்கப்பட்டது. அந்த காலத்திற்கு அது உதவியது.. இப்பவும் அதே fundamental-ஐத் தான் கடைப்பிடிப்பேன் என்று பெண்களை வருத்தாதீர்கள். விரும்பிப்போடுவது வேறு. வற்புறுத்தி போட வைப்பது வேறு..

கொஞ்சம் மனிசத் தன்மையுடன் பெண்களை நடத்துங்கனு தான் அந்த மதவாதிகளிடம் கேட்பது. செவிடன் காதில் ஊதிய சங்கு மாதிரி கேட்பது வேஸ்ட் என்றாலும் கேட்காமல் இருக்க முடியவில்லை.

புள்ளா மூடி இருந்தவங்கள யாரும் ரேப் பண்ண மாட்டாங்களாம். அரை குறையா போட்டுட்டு இருப்பவங்களைத் தான் ஆண்கள் டீஸ் பண்ணுவாங்களாம் ரேப் பண்ணுவாங்களாம். அது தான் எங்களுக்கு இஸ்லாமிய சொசைட்டியால கொடுக்கப்பட்ட துண்டு பிரசுரத்தில் இருந்தது.

எங்க யுனியில நடந்தது:
நான் மாணவர் யூனியனின் ஒபிச்சர்.. ஆதலால் எல்லா பிரச்சனையும் எனக்கு விசாரிக்க சொல்லி வரும்... அதில் ஒன்டு கிறிஸ்மஸ் கொண்டாம் பற்றியது.. இஸ்லாம் மாணவர் ஒன்றியத்தின் தலைவரால் இஸ்லாம் மாணவர் ஒன்றிய உறுப்பினருக்கு அனுப்பிய மடல் என் பார்வைக்கு வந்தது.. அந்த மடலில் நிறைய சாரத்தை மேற்கோல் காட்டி, "Happy Christmas" என்டு கூட wish பண்ணுவது இஸ்லாமுக்கு எதிரானது அது இது என்டு பெரிய கூத்து.. அதில் சில YouTube வீடியோ Clipசும் சேர்த்து இருந்தது.. யாரோடயோ பிரசங்கம் வேற..

கூப்பிட்டுக் கதைத்தால், நான் இஸ்லாமிக் கோட்டுக்கு எங்களை இழுப்பேன் என்டு Blackmail வேற..இத்தனைக்கும் அந்த இஸ்லாம் மாணவர் ஒன்றிய தலைவர் PUBக்கெல்லாம் போவார்.. ஆனால் குடிக்க மாட்டார்.. தண்ணி அடிக்க மட்டார் - ஆனால் சிகரட் அடிப்பார்.. அப்பப்பா, எங்களைப் பார்த்து அவர் குடுக்கும் ஒரு SHIT லூக் ஒருக்கே.. சொல்லிமாளாது.. நிறைய பேர் அப்படித்தான் எங்களின் யுனியில்...

Facebook-க்கு நன்றி.. யாருடைய எக்கவுண்டும் ஹக் பண்ணக்கூடிய (ஆனால் ஹக் பண்ணாத புண்ணியவான் என்ட உயிர் தோழன்) ஆளைப்பிடித்து, அவனின்ட படங்களைப் பாக்கோணும் என்டு பாடு படுத்தினேன்.. அவரின் எக்கவுண்டில் ஒரு சில நண்பர்களுடன் மட்டும் சார் share பண்ணிய அல்பம் இருந்தது.. என்ன அல்பம் தெரியுமா? ஸ்ரிப்பர்ஸ் கிளப்பில் ஆள் அடித்த கூத்து Album..

அதை டவுன்லோட் பண்ணி, இதை நான் இஸ்லாமிக் கோட்டுக்கு அனுப்பட்டா என்டு கேட்க ஆள் கப்சிப்.. அவர் வாய் சொல்லு வீரர் என்டு தெரிந்த பின் வெறுப்பின் உச்சத்துக்கே போய்விட்டேன்.. ஆனாலும் "அதற்கும் இஸ்லாத்துக்கும் சம்பத்தமில்லை என்டு எனக்கு விளங்கும்.."

"எனக்கு இஸ்லாம் மதத்தின் மேல் கோவமில்லை.. அதை வதைத்து கூத்தடிக்குக்கு ஆட்களின் மேல் தான் கோவம்.."

Anonymous said...

இந்த ஆட்கள் "Radical / Extreme" ஆட்கள்... ஆனாலும் பொதுவாகவே, நிறயப் பேர் பெண்களை அப்படி இரு இப்படி இரு என்டு கொடுமைப் படுத்தும் போது எரிச்சலாக இருக்கும்... அதற்கு இஸ்லாம் மதத்தை மேற்கோள் காட்டும் போது வெருப்பு வருவதில் ஆச்சரியம் இல்லையே... அதிலும் உறவில்லாவிடினும் இந்த முட்டாள்களுக்குப் பயந்தே இஸ்லாம் சகோதரிகள் நடப்பார்கள்.. ஒரே யூனியில் படிப்பது என்பதற்காக, Even நாங்களும் அந்த முட்டாள்களின் விருப்பப் படி தான் நடக்கோணும் என்டு அந்த முட்டாள்கள் நடக்கும் போது அடிச்சு நொருக்கோணும் மாதிரி ஆத்திரம் வரும்.. அல்பம் என்ட கையில் இருப்பதால், கொஞ்சம் அடங்கி நடக்கினம்.. இல்லாவிட்டால்,, கடவுளே... ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சனையை கொண்டு வருவார்கள்..

என்னுடன் மாணவர் யூனியனில் ஒரு இலங்கை இஸ்லாமிய சகோதரரும், ஒரு மொறிசியஸ் மற்றும் இங்கிலாந்து இஸ்லாமிய சகோதரகளும் இருக்கிறார்கள்... அவர்கள் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு வந்தார்கள்.. இன்னும் நிறைய பேர் இஸ்லாமிய சகோதரகளும் வந்தார்கள்.

ஆனாலும் இந்த‌ அருமையான சகோதர்களின் முகமோ அல்லது வாப்பாதாத்தாவின் முகமோ எனக்கு ஞாபகத்தில் வரும் போது, இந்த வீணாப்போன கூத்து அடிக்கும் ஆட்களும் வந்து போவார்கள்.. அவர்களின் கூத்தால் வாப்பாதாத்தா போன்றவர்களின் நல்ல நடத்தைகளை யாரும் உணரமுடியாத நிலை.. ஏன் நானே மறக்கும் நிலை..

கேரளாவில் கிறிஸ்தவர் இந்துக்கோவிலுக்குப் போனால் பிரச்சனை.. எத்தனை பிரச்சனை..எல்லாவற்றுக்கும் காரணம் மதம் தான்... நல்லதை மதத்தில் இருந்து எடுப்பவர்கள் குறைவு..

ஏன் இஸ்லாம் மதத்திற்கு மாறினால் தான் மோட்சம் கிடைக்குமா? மதம் மாற வேண்டிய நிலையில் தான் மோட்சம் கிடைக்கும் என்டால் நான் நரகத்துக்கேப் போகத் தயார்... செத்த பிறகு என்ன நடக்கும் என்டு ஆராய்ச்சி செய்து இந்த வாழ்க்கையை வீணாக்குவதற்கு நான் தயாராக இல்லை..

இந்து மதத்தைப்பற்றி தாத்தா கூறியது, கிறிஸ்தவ மதத்தைப் பற்றி ஃபாதர் தாத்தா கூறியது (Rev-Thatha), இஸ்லாம் பற்றி வாப்பா தாத்தா கூறியது எல்லாவற்றையும் கவனித்து நான் விளங்கிக் கொண்டவை..
1‍) உயிகளிடத்தே அன்பு வேண்டும்
2) கடமையை செய்
3) பெற்றோரையும் ஆசிரியரையும் மதி
4) வாழு வாழவிடு
5) தீயனவற்றில் இருந்து விலகு

அதை விளங்காமல், வில்லங்க லொஜிக் (சிகரட் குடிக்கலாம்,, பப்புக்குப் போய் ஆட்டம் போடலாம் but should not take alcohol) என்டு எல்லாம் நினைக்கும் ஆட்களை விஷ வாயு அறைக்குள் போடோணும்...

பொதுவாகவே, மதங்களைப் பற்றியோ அல்லது இனத்தைப் பற்றியே கதைப்பதில் எனக்கு விருப்பமில்லை.. என்ன வேணும் என்டாலும் செய்யுங்கோ... மற்றவர்களைப் பாதிக்காத அளவில்..

ரோமன் கதோலிக் ஆட்கள் பிரச்சாரம் செய்ததை நான் பார்த்தில்லை.. ஆனால், பென்டிகொஸ் மற்றும் இஸ்லாமியர்கள் எனக்குப் பிரச்சாரம் செய்தார்கள்.. ஒரே அரியண்டம்.. ஒவ்வொரு நாளும் கதவைத்தட்டி எங்கள் இறைவனின் நல்லவரா என்டு கேட்டால் இல்லை என்டா சொல்ல முடியும்.. ஓம் என்டு சொன்னால், அப்ப எப்ப மதம் மாறுவாய் என்டு அரியண்டம் பிடிச்ச கேள்வி...மாறினால், உன் படிப்பு செலவை நாங்கள் ஏற்போம், தங்க நல்ல வீடு கிடைக்கும், போய் வர எங்கள் ட்ரைவர் உதவுவார். அது இது என்டு ஒரே அலம்பல்ஸ்... கடைசியாக ஒன் கம்பஸ் அக்கமடேசனுக்கு மாறின பிறகு தான் தொல்லை முடிந்தது..

முதலில் ஒழிக்க வேண்டியது மதத்தையும் தான்... இறைவன் நம்பிக்கயா; வீட்டில் இருந்து கும்பிடு.. ஏன் என்டால், இறைவன் எங்கும் நிறைந்தவன் என்டு கேள்வி..

எனக்கு கடவுள் இருக்கா இல்லையா என்ட ஆராச்சியில் எதற்கு...எங்களையும் வெறுப்பேற்றி தங்களையும் வதைக்கும் இந்த மனிதர்கள் எப்போது திருந்துவார்கள்

Anonymous said...

ooooooooops sry such a long comment :-(

பிரபாகர் said...

குடுகுடுப்பை சொல்றதுதான் நானும்...

பிரபாகர்.

Anonymous said...
This comment has been removed by the author.
கோவி.கண்ணன் said...

//நீ அடைச்சுக்கோ, அமுக்கிகோ என்பது, நாங்கள் செய்வதெல்லாம் சரி, மற்றவர்கள் செய்வதெல்லாம் தவறு என்பதற்கு சமம்! //

அவர் எழுதிய அந்த வரி எனக்கும் உடன்பாடு இல்லை. '...இனி நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்...' என்று எழுதியவர் போலவே இவர் மற்றொரு குரலாக ஒலிக்கிறார்.

'மூடிக் கொண்டு போங்க' என்று சொல்வது போன்றே எழுதுகிறார்கள். இணைய காவலர்களாக அவதாரம் எடுப்பவர்கள் தான் இது போன்ற மென்மையான மிரட்டலைவிடுவார்கள். அவரு கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டு வருகிறார் போல. நண்பர் என்ற முறையில் எனக்கு வருத்தம் தான்.

M.Rishan Shareef said...

//ஒரு இஸ்லாமிய பெண் தடகள போட்டியில் வெற்றி பெற்றார், சிறப்பு என்னவென்றால் ஸ்கூபா டைவிங்கிற்கு பயன்படுத்தும் இறுக்கமான உடை அணிந்திருந்தார், அதே போன்ற தலைகவசம் கூட இருந்தது,(படத்தில் பார்க்க)இந்த செய்தியை புர்கா போட்டு போட்டியில் ஒரு பெண் வெற்றி பெற்றார் என்று பீர் அண்ணன் பதிவு போட்டு சொறிந்து கொண்டார்!(இது தான் புர்காவா!?)//

புர்கா என்றால் கறுப்பு முழு நீள அங்கி மட்டுமல்ல, உடலை முழுதாக மறைக்கும் எதுவும் புர்காதான். அது சேலை, சல்வார் ஆகக் கூட இருக்கலாம். ஒரு கட்டுரை எழுதப்படும் முன்னால் எழுதப்பட வேண்டியது பற்றி எதுவும் ஆராய்ந்து பார்க்காமல், ஒருவரைச் சாட வேண்டும் என்பதற்காகவே எழுதப்படும் பிழையான தகவல்களோடு, உங்கள் அறியாமையையும் பதிவாக இட்டு பகிரங்கப்படுத்தியிருப்பது ஆச்சரியப்படுத்துகிறது வால்பையன் :)

sathishsangkavi.blogspot.com said...

வாலு இந்தத் தாக்கு தாக்கி இருக்கறீங்க....

என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

Vidhoosh said...

///நாங்கள் உலகை திருத்த வந்த அவதாரங்கள் கிடையாது!.///

இந்த "நான்"களில் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.

அருண்: ஏதோ ஒரு நம்பிக்கையைப் பற்றிக் கொண்டுதான் வாழ்க்கை நகருகிறது. உங்களுக்கு ஒரு நம்பிக்கை அடுத்தவருக்கு வேறொன்று. அவ்வளவுதான். யாரும் விளக்கம் கொடுக்கிறார்கள் என்பதற்காக யாரும் மாறப் போவதில்லை.

ஒரு மாவையே எத்தனை நாள் அரைத்துக் கொண்டிருப்பீர்கள். விவாதத் திறமையும், கேள்வி கேட்கும் ஆற்றலும் எல்லோருக்கும் வைப்பதில்லை. உங்களுக்கு இருக்கிறது. ஏதாவது ஆக்கபூர்வமாக விவாதிக்கலாமே. கொஞ்சம் யோசிங்க...

நேர்மையான நோக்கத்தோடு மட்டுமே மேலிருப்பதை சொல்லி இருக்கிறேன். வார்த்தைகளுக்கு இடையில் அர்த்தம் தேடி பார்க்காதீர்கள்.

-வித்யா

வால்பையன் said...

ரிஷான்!

இறுக்கமான என்ற வார்த்தையை குறிபிட்டுள்ளேன்! அதற்கு பதில் சொல்லுங்கள், பர்தான்னு போட்டிருக்குன்னு சொம்பை எடுத்துட்டு வராதிங்க!

இறுக்கமான உடையை மறைக்க தானே பர்தா!? அதுவே இறுக்கமாக இருந்தால்!? சொறிவதற்கு ஒரு அளவில்லையா!?

வால்பையன் said...

@ வித்யா!

இந்த விசயத்தை நான் எடிக்க கூடாது என்பதால் தான் நற்குடி விசயத்தில் ஒதுங்கியே இருந்தேன்! ஆறிபோன ஒன்றை மீண்டும் சூடு பண்ணி, ”கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை” அடைத்து கொள்ளுங்கள் என்றால், எப்படி பார்த்து கொண்டிருக்க முடியும்!

கேள்விகளுக்கு பதில் சொல்ல தெரியவில்லையென்றால் இப்படி தான் பேசுவதா!?, நான் ஒரு சாராரை மட்டும் கேள்வி கேட்கவில்லையே, எல்லா மதத்தினரையும் தானே கேட்கிறேன்!

மகா said...

no comments.....

ரவி said...

:)

கல்வெட்டை யாரும் வெட்டிடாமல் பாதுகாப்பு தரவியலுமா ? அவரிடம் ரெண்டு பலூன் வேண்டும்.

Ashok D said...

Very Good Morning... எல்லாம் எப்படி போயிட்டுயிருக்கு...

வால்பையன் said...

//Very Good Morning... எல்லாம் எப்படி போயிட்டுயிருக்கு//

நல்லா போயிட்ருக்கு!
கல்வெட்டுக்கு மட்டும் பாதுகாப்பு தேவைப்படுது, இல்லைனா கல்வெட்டை உடைக்ககூடும்!

எல்லாம் வல்ல இறைவன் தன்னால் தூக்க முடியாத கல்லை படைக்க முடியாதது போல் அவனால் படைக்கப்பட்ட மனிதர்களால் நம்ம கல்வெட்டையும் ஒன்னும் பண்ணமுடியாதுன்னு நம்புவோம்!

ஆமா, இந்த இபிலிஸை ஏன் அல்லாவால ஒன்னும் பண்ண முடியல!?

Ashok D said...

//இறைவன் தன்னால் தூக்க முடியாத கல்லை படைக்க முடியாதது போல் அவனால் படைக்கப்பட்ட மனிதர்களால் நம்ம கல்வெட்டையும் ஒன்னும் பண்ணமுடியாதுன்னு நம்புவோம்// :)))(ஏம்பா அவரு புனைப்பெயர்ல வந்து போறாரு.. நம்ம அட்ரஸ் போன் நம்பரெல்லாம் குடுத்துக்குன்னு உக்காந்துனு இருக்கும். அதான் கொஞ்சம் யோசனையா இருக்கு.

//இபிலிஸை ஏன் அல்லாவால ஒன்னும் பண்ண முடியல!?// இதுஎன்னா storyபா.. (வாலுக்கு நெறய விஷயம் தெரிஞ்சுக்குதுபா.. அதான் problemo)

வால்பையன் said...

//இபிலிஸை ஏன் அல்லாவால ஒன்னும் பண்ண முடியல!?// இதுஎன்னா storyபா.. (வாலுக்கு நெறய விஷயம் தெரிஞ்சுக்குதுபா.. அதான் problemo) //


இபிலீஸ் இஸ்லாமிய மதத்தில் சொல்லப்படும் சாத்தான்!
எனக்கு நிறைய விசயங்கள் எல்லாம் தெரியாது, தேவையான விசயங்கள் மட்டும் தெரியும்!

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

அல்லா யார்?

இபிலிஸ் யார்?

இரண்டு பேருக்குமிடையில வேறுபாடு என்ன?

அல்லாவின் விருப்பத்துக்கெதிரா செய்யக்கூடிய திறமை இருக்கிற இபிலிஸ் அல்லாவை விடப் பெரியவன் இல்லயா?

ஏன் இபிலிஸ் செய்கிற வேலைகளை அல்லாவால் தடுக்க முடியாதிருக்கிறது?

இதெல்லாம் மில்லியன் டாலர் கேள்விகள்.

வால்பையன் said...

//இதெல்லாம் மில்லியன் டாலர் கேள்விகள். //

ஒரு கேள்விக்கே பதிலைக் காணோம்!

Dr.Rudhran said...

சிறப்பான பதிவு. வாழ்த்துகள்.

Romeoboy said...

என்ன தல வர வர சீரியஸ் பதிவுகள் தான் அதிகமா இருக்கு. நீங்க கேக்குற கேள்விகளுக்கு பதில் எல்லாம் கிடைக்காது.

பின்னோக்கி said...

கொஞ்சம் லேட்டா வந்துட்டேன் போல. சீக்கிரம் வந்திருக்கனும்.

Anonymous said...

வால் எனக்கொரு சந்தேகம்! ஸீரோ டிகிரி விக்கிறதுக்கு உதவி பண்ணுன நித்யா, ஏன் சாருக்கு வசனம் எழுதும் வாய்ப்ப வாங்கிக் குடுக்கல? ஒரு வேளை, இப்லீஸ் தடுத்துட்டானோ?

priyamudanprabu said...

ம்ம்

நல்லா நடக்குது........

வால்பையன் said...

//விஜய் டிவி அலுவலக முற்றுகை அறிவிப்பு//

பர்தா பற்றிய நிகழ்ச்சி இஸ்லாமியர்களுக்கும், இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கும் நடப்பதாக கூட இருக்கலாம், பர்தா பற்றியே எவனும் பேசக்கூடாது என்பது, இஸ்லாத்தின் பார்பனிய தன்மையை காட்டுகிறது, சந்தேகமில்லாமல் சொல்வேன், இது அப்பட்டமான பார்பனீயம் தான், அவர்கள் தான் விவாதத்திற்கு தயார் எங்கிறார்களே, மக்கள் முன்னிலையில் செய்வதும், தொலைகாட்சியில் தெரிவதும் ஒன்றே தானே, ஏன் அவர்கள் அதில் கலந்து கொள்ளவில்லை!

அவர்களால் முடியாது, இங்கே கேட்ட கேள்விகளுக்கே பதில் சொல்லமுடியாதவர்கள், தொலைகாட்சியிலா பதிலளிக்க போகிறார்கள், வேலையை விட்டுட்டு நேரில் போய் வேற கேள்வி கேட்கனுமாம், ஏன் பதிவிலேயே பதில் சொல்லலாமே! அப்ப மண்ட வேலை செய்யாதோ!?

கல்வெட்டு said...

அசோக்,
புனைப்பெயரில் என்ன இருக்கு.
அல்லா is the Arabic word for GOD.

ஆனால் பலர் "அல்லா" என்பதே ஒரு கடவுளின் பெயர் என்றுதான் நினைக்கிறார்கள். இஸ்லாத்தில் கடவுளுக்கு பெயர் ,உருவம்,பாலினம் என்று எதுவும் கிடையாது.

நம்ம கடவுள் அப்படின்னு தமிழில் சொல்றத அவுங்க அல்லான்னு அரபியில் சொல்றாங்கா. அதையே இங்கிலிபீசில் காட் அப்படின்னி சொல்லலாம்.

மேட்டர் என்னன்னா , பெயரில் என்ன இருக்கு அசோக் ?

நான் கல்வெட்டு மற்றும் பலூன்மாமா என்ற அடையாளத்தில் எழுதுகிறேன்.

நேரில் காட்சி கட்டணம்
மிகச் சிலருக்கே நான் நேரில் காட்சி தந்துள்ளேன். காட்சியளிக்க 100000000000000000000000000 அமெரிக்க டாலர்கள் வேண்டும். அல்லது நித்தியானந்தா போன்ற கடவுளின் அவதாரங்களில் சிபாரிசுக்கடிதம் வேண்டும்.

:-))))

****

இரவி,
மத்தவங்க சும்மா இருந்தாலும் நீங்க , கல்வெட்டை அடிக்காதீங்க, அடிக்காதீஙக் எனேறு சொல்லி உசுப்பேத்தியே அடிவாங்க வச்சுருவிங்க போல.
நிம்மதியாய் இருக்க விடுங்கப்பு.

:-)))))

சரி சரி அடுத்தமுறை பார்க்கும்போது உங்கள் குழந்தைக்கு ஸ்பெசல் பலூன் பண்ணிக்கொடுத்திரலாம்.

***

வால்,

இஸ்லாத்தில் உள்ள இஸ்லாம் பெண்கள், அதுவும் அவர்கள் அணியும் பர்தா பற்றி அவர்களே ஒரு டிவியில் பேச இஸ்லாம் சங்க பொறுப்பாள‌ர்களின் அனுமதி வேண்டும் போல தெரிகிறது.

அந்த அளவு கருத்துச் சுதந்திரம் உள்ள இடத்தில் நாமெல்லாம் பதிவர் பீர் சொன்னபடி பொத்திகொண்டு இருப்பதுதான் நல்லது.

உண்மையில் பதிவர் பீர் நமக்கு நல்ல அட்வைஸ் கொடுத்துள்ளார். அழிவில் இருந்து காப்பாற்றிய பதிவர் பீர் வாழ்க.

**

தமிழ் புத்தாண்டையும் தமிழர்களின் திருநாள் பொங்கலையும் சாதி,மதம் பார்க்காமல் அனைத்து தமிழர்களும் கொண்டாடுவோம்.

வால்பையன் said...

//இஸ்லாத்தில் உள்ள இஸ்லாம் பெண்கள், அதுவும் அவர்கள் அணியும் பர்தா பற்றி அவர்களே ஒரு டிவியில் பேச இஸ்லாம் சங்க பொறுப்பாள‌ர்களின் அனுமதி வேண்டும் போல தெரிகிறது.//

பெண்களின் பாதுகாப்பிற்கு பர்தா நல்லது என்று இஸ்லாமியர்கள் கூறினால், பர்தா அணியாத பெண்கள் பாதுகாப்பற்று இருக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது, எவ்வாறு என கேள்வி கேட்கும் ஆர்வமும் கூடவே வருகிறது, அதற்கு இஸ்லாம் சங்கமத்திடமிருந்து நற்குடி இஸ்லாமியர்கள் யாராவது கேட்டு பதிலளித்தால் நாம் அடைத்து கொண்டே போலாமே!

//கருத்துச் சுதந்திரம் உள்ள இடத்தில் நாமெல்லாம் பதிவர் பீர் சொன்னபடி பொத்திகொண்டு இருப்பதுதான் நல்லது.//

ஓ! இந்த விசயத்தில் கருத்து சுதந்திரம் பீருக்கு மட்டும் தான் போல!

//பதிவர் பீர் நமக்கு நல்ல அட்வைஸ் கொடுத்துள்ளார். அழிவில் இருந்து காப்பாற்றிய பதிவர் பீர் வாழ்க.//

பீர் நம்மை அழிவிலிருந்து காப்பாற்றுகிறாரா!? இல்லை அழித்து கொண்டிருக்கும் மதத்தில் சேர்ந்த இஸ்லாத்தை காப்பாற்ற நினைக்கிறாரா!?

இதுவரை ஒரு இஸ்லாமியர் கூட வந்து பதில் சொல்லவில்லையே, நமது கேள்விக்கு ”எல்லாம்” இருக்கும் குரானிலேயே பதிலில்லையா!?

நமக்காகவே அல்லா இன்னொரு தூதரையும் கூடவே புதிய வேதத்தையும் அனுப்புவாரோ என சந்தேகப்படுகிறேன்!

வால்பையன் said...

//தமிழ் புத்தாண்டையும் தமிழர்களின் திருநாள் பொங்கலையும் சாதி,மதம் பார்க்காமல் அனைத்து தமிழர்களும் கொண்டாடுவோம். //

அப்துல்கலாம் கனவு காணச் சொன்னாருன்னு இப்படியா கனவு காண்றது!

கல்வெட்டு said...

.

//வால்...

நமக்காகவே அல்லா இன்னொரு தூதரையும் கூடவே புதிய வேதத்தையும் அனுப்புவாரோ என சந்தேகப்படுகிறேன்!//

ஆங் அசுக்கு புசுக்கு ஆசையப்பாரு அய்யாவுக்கு.

விஜய்டிவிக்கு வச்சமாதிரி ஆப்பு வைக்காமா இருந்தாலே போதும்.

வால்பையன் எழுதும் பதிவுகள் இஸ்லாம்சங்க தணிக்கைக்குப்பிறகே வெளிவரும் என்ற நிலை வராதவரை நல்லது.

எதுக்கும் வீட்டுக்கு வெளியில் ஆர்ப்பாட்டம் நட்க்குதான்னு எட்டிப்பாருங்க வால். காலம் கெட்டுக்கிடக்கு.

***

//இப்படியா கனவு காண்றது!//

:‍‍-)))

.

வால்பையன் said...

//எதுக்கும் வீட்டுக்கு வெளியில் ஆர்ப்பாட்டம் நட்க்குதான்னு எட்டிப்பாருங்க வால். காலம் கெட்டுக்கிடக்கு.//

உயிருக்கு சேதாராம் ஆகாத வரைக்கும் சந்தோசம்!

இர்ஷாத் said...

1. சோனியா காந்தி, ஜெயலலிதா, கனிமொழி, ஹிலரி கிளின்டன் என சகல பெண்களும் தத்தமது கலாச்சாரத்தில் உள்ள ஆகக்கூடிய அளவு மறைக்கக்கூடிய உடைகளையே அணிகின்றனர். சிவசேனைக்கட்சியில் உள்ள பெண்களும் கவர்ச்சி நடிகைகள் போல் அணிவதில்லை.

இன்னும் மத நம்பிக்கையற்றவர்களும் தன் தாய் மகள் என்போர் அதிகுறைந்த உடையுடன் திரிவதை விரும்பமாட்டார்கள். இதன் மூலம் சமய நம்பிக்கைகளுக்கப்பால் பெண்கள் உடலை மறைத்தலை விரும்புகிறார்கள் என்பது தெளிபு.

இதற்கான காரணம் தன் உடலை மற்றவர்கட்கு வெளிச்சம் போட்டுக்காட்டுவது ஒழுக்கமல்ல இவர்கள் அனைவரும் கருதுகிறார்கள்.


2. இவ்வாறான ஆகக்கூடியளவு மறைக்கும் உடைகளில் முஸ்லிம்களால் அணியப்படுவது அபாயா என்ற உடையாகும். இந்திய கலாச்சாரத்தில் காணப்படும் ஆகக்கூடியளவு மறைக்கக்கூடிய உடையாக சேலையோ, சல்வாரோ இருக்கிறது.

3. முஸ்லிம்களுக்கு முன்மாதிரியாக குர் ஆன் மட்டுமல்லாமல் நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் அங்கீகாரம் என்பனவும் ஆமைகின்றன.

4. முஸ்லிம்பெண்கள் அந்நிய ஆண்களுக்கு முன் தம்மை மறைக்கிறார்கள். இங்கு அந்நியர் என்பதும் ஆண்கள் என்பதும் கவனிக்கவேண்டியது. எனவே இவர்கள் சகோதரர்கள், பிள்ளைகள் மற்றும் பெண்கள் இருக்கும் இடத்தில் தாம் விரும்பியவாறு வசதியான உடையை அணியலாம்.

5.போதுமானளவு மறைக்கக்கூடிய உடைகளை (அரேபியாவில் அபாயா, பாகிஸ்தானில் சல்வார், மலேசியாவில் அவர்களது உடை என்பன) அணியுமாறு இஸ்லாம் கட்டளையிடுகிறது. அவர்களது உடல்மைப்பின் காரணமாக தாமாக தெரிபவை பற்றீயெல்லாம் இஸ்லாம் கண்டிப்புக்காட்டவில்லை.

6. அபாயா என்ற நாகரீகம் (இன்கு நாகரீகம் என்பதை கவனத்தில் கொள்க) ஏறத்தாள 2 தசாப்தங்களுக்கு முன் தான் இந்திய துணைக்கண்ட பகுதியில் பரவியது. அதற்குமுன் முஸ்லிம் பெண்கள் தமது மார்க்கத்தில் சொல்லப்பட்டவாறு அன்றிருந்த நாகரீகத்திற்கேற்ப மறைத்துக்கொண்டார்கள். இதன் காரணமாகத்தான் முஸ்லிம்களுக்கென வித்தியாசமான சேலை அணியும் முறை வழக்கிலிருக்கிறது.

வால்பையன் said...

@ இர்ஷாத்

பர்தா போடுவதை இங்கே பிரச்சனையாக எடுத்து கொள்ளவில்லை, இருந்தாலும் வந்துட்டிங்க,வாங்க!

உடல் மறையக்கூடிய அளவுக்கு உடல் உடுத்த வேண்டும் என்பது இஸ்லாத்தின் சட்டமா!?

ஒரு பெண்ணின் பாதுகாப்புக்கு இவ்வளவு அக்கறை காட்டும் கடவுள், ஆண்களின் உணர்ச்சிகளுக்கு உடை போட்டிருக்கலாமே!?

பெண்களின் பாதுகாப்புக்கு தான் பர்தா என்றால், பர்தா அணியாத பெண்கள் பாதுகாப்பற்று இருக்கிறார்களா!? அதை நிறுபிக்க முடியுமா!?

குரானில் இருக்கிறது என்பதை தவிர வேறு என்ன சரியான காரணம் உங்களால் சொல்லமுடியும்!?

ஒரு பெண்ணின் எந்த பகுதிகளெல்லாம் உணர்ச்சியை தூண்டும் பகுதிகள் என குரானில் சொல்லப்பட்டிருக்கா!? அல்லது பெண்ணே ஒரு போகபொருள் தான், அவளை பார்த்தாலே டென்ஷன் ஆகும் என்றிருக்கிறதா!?

குரானில் இருக்கும் பெண்ணிய கட்டுபாடுகள்(அடக்குமுறைகள்) அனைத்தும் ஒரு ஆணின் பார்வையிலேயே எழுதப்பட்டிருக்கிறது, அவைகள் முகமதுவின் சொந்த விருப்ப, வெறுப்புகள் என்பதை எவ்வாறு மறுக்கிறீர்கள்!?

உலகம் தோன்றியதிலிருந்து கடவுள் வரிசையாக தூதர்களை அனுப்பக் காரணம் என்ன!? தாம் படைத்த மனிதர்கள் தம் கட்டுபாட்டில் இல்லாது போனதற்கு கடவுளின் எந்த செயல் காரணம்!?

கல்வெட்டு said...

.


//இர்ஷாத் said...
...சோனியா காந்தி, ஜெயலலிதா, கனிமொழி, ஹிலரி கிளின்டன் என சகல பெண்களும் தத்தமது கலாச்சாரத்தில் உள்ள ஆகக்கூடிய அளவு மறைக்கக்கூடிய உடைகளையே அணிகின்றனர்.//

...போதுமானளவு மறைக்கக்கூடிய உடைகளை (அரேபியாவில் அபாயா, பாகிஸ்தானில் சல்வார், மலேசியாவில் அவர்களது உடை என்பன) அணியுமாறு இஸ்லாம் கட்டளையிடுகிறது. //

***

1. அரேபியாவில் அபாயா
2. பாகிஸ்தானில் சல்வார்
3. மலேசியாவில் அவர்களது உடை என்பன...

...எல்லாம் சரிதான்.

இந்திய மூஸ்லீம்களுக்கு மாநில வாரியாக எந்த உடைகளை இஸ்லாம் கட்டளையிடுகிறது?

Q1: ஏன் இவர்கள் அராபிய அபாயாவை பின்பற்றுகிறார்கள்?

Q2: தமிழக உடையான சேலை தவறா?

Q3: அல்லது உண்மையிலேயே நல்ல இலகுவான உடையான சுரிதார் தவறா?

Q4: அல்லது உடல்ரீதியாக சுலபமாகவயும் வசதியாகவும் இருக்கும் பேண்ட் சட்டை தவறா?

Q5:இந்திய இஸ்லாம் பெண்கள் போலிஸ் போன்ற‌ சீருடை வேலைகளில் சேரமுடியாதா?


.
பொத்திக்கொண்டு போகச் சொன்ன பதிவர் பீரின் பத்வாவை மீறி உள்ளேன். அய்யோ என்ன நடக்குமோ. உயிர் பயம் உள்ளது. ப்ளீஸ் பீர் மன்னித்துவிடுங்கள்.

Rajan said...

Ennada nadakkuthu inga ....
Engooda irundhavan enga ?

Rajan said...

Islam oru iniya maargam - ungal win tv' yil ..... Paarthu rasiyungal

Anonymous said...

அமெரிக்காவுக்கு பிழைப்பு ஆயுதம்.

சங் பரிவாருக்கு பிழைப்பு ஹிந்துத்வா.

ஷகிலாவுக்கு பிழைப்பு ஆபாசம்.

பன்றிகளுக்கு பிழைப்பு சாக்கடை.

நாத்திகர்களுக்கு பிழைப்பு கடவுளையும் மதத்தையும் திட்டுவது.

ஆத்திகர்களுக்கு பிழைப்பு இவர்களுக்கு பதில் சொல்லிக்கொண்டிருப்பது.

போங்கயா போக்கத்தவய்ங்களா. போய் நல்ல பிழைப்பு பிழைங்கயா

"நல்ல பிழைப்பு"=?????
அப்படின்னா என்னன்னே தெரியலையா? யாரும் யாரையும் திட்டாமா சண்டைபோடாம சிரிச்சு பேசி எலாருக்கும் உதவி மகிழ்ச்சியா ஆக்கப்பூர்வமா வாழ்ந்துட்டு போறதுதான்.

திருவள்ளுவர் said...

தம்பி வாலு, நம்மை கொஞ்சம் கண்டுகிறது....

http://kuralamutham.blogspot.com/2010/01/186.html

ஊர்சுற்றி said...

//மதங்களை தாண்டி மனங்கள் மணக்க வேண்டும் .
இப்படி எல்லாம் பேச எதாவது கடவுள சீக்கிரம் கண்டுபிடிங்கப்பா ..
உருப்படும் இந்தியா ..
//
ரிப்பீட்டேய்ய்ய்!!!

மரா said...

பொங்கல் வாழ்த்துக்கள் vaalu

Ashok D said...

இவ்வளவு நடந்துபோச்சா?

Ashok D said...

யப்பா கல்வெட்டு என் போட்டோ ப்ளாகுல இருக்கு உன் போட்டோ இருக்கா.. அதான்பா மேட்டரு... வாலுக்குகூட ஈரோடுல சில வெயிட்டான ஆளுகல தெரியும்.. நமக்கு ஒருத்தரையும் தெரியாது... இருந்தாலும் நான் தைரியசாலிதான்.. ஏன்னா இறைவன் சப்போட்டுதான் :))

Ashok D said...

//சோனியா காந்தி, ஜெயலலிதா, கனிமொழி, ஹிலரி கிளின்டன் என சகல பெண்களும் தத்தமது கலாச்சாரத்தில் உள்ள ஆகக்கூடிய அளவு மறைக்கக்கூடிய உடைகளையே அணிகின்றனர். சிவசேனைக்கட்சியில் உள்ள பெண்களும் கவர்ச்சி நடிகைகள் போல் அணிவதில்லை//
வாலு இந்த காமெடிக்கெல்லாம் பதில் சொல்லறதில்லையா

Ashok D said...

ஒகே comment followup sollikudutha vaal vaazhga

கல்வெட்டு said...

// அசோக்,
யப்பா கல்வெட்டு என் போட்டோ ப்ளாகுல இருக்கு உன் போட்டோ இருக்கா.. அதான்பா மேட்டரு//

ஒருவேளை உங்களுக்கு வால் பதிவில் எனது ப்ரோபைல் போட்டோ தெரியாமல் இருக்கலாம்.
http://www.blogger.com/profile/11753241221184588821

நீங்கள் சாருன்ற பதிவர அதிகம் படிப்பீங்களா? அவர் சாமி பத்தி உணர்சி வசப்பட்டு பாபா படத்துல ஓட்கா வழிதுன்னு சொல்றமாதிரியா நீங்க புரபைல பார்த்து ஒன்னும் தெரியலன்றீங்க.

:-))

Ashok D said...

kalvettu
சாருவ எனக்கு பிடிக்கும்தான்

Ashok D said...

குட் நைட் நாளைக்கு பார்க்கலாம் :) இன்ஷா அல்லா

kailash,hyderabad said...

பிரான்ஸ் நாட்டில் , பொது இடங்களில் புர்கா அணிந்தால் 700 யுரோ அபராதம் விதிக்கப்படும்,
கட்டாயப்படுத்தி அணிய சொல்லும் ஆண்களுக்கு அபராதம் இருமடங்காக விதிக்கப்படும்
என்று அந்த நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார். - செய்தி
அதைப்பற்றி தங்கள் கருத்து ?

" பத்த வச்சிட்டியே பரட்டை !"
:))))))

ஜெய்லானி said...

சுமார் 50 வருடம் முன்பு வரை குர் ஆன் மற்றும் ஹதிஸ்(நபியின் வாழ்கை நடைமுறை மற்றும் செயல் முறை விளக்கம்)தமிழில் இல்லை.ஆனால் தற்போது இரண்டுமே கிடைக்கிறது.அடுத்தவர்களிடம் விளக்கம் கேட்கவேண்டிய அவசியமே இல்லை.குருடன் யானையை பார்தது போல் இருக்கக் கூடாது.ஒரு சில (முஸ்ஸீம்)ஆண்,பெண் செய்யும் தவறுகளுக்கு ஒட்டு மொத்த இஸ்லாத்தை குறை சொல்வது சரியில்லை.நபியின் ஒவ்வொரு அசைவும்,வரலாற்றில் பதியப்பட்டுள்ளது.தனிமனித வாழ்கைக்கு தேவையான அத்தனை விஷயங்களும் அந்த இரண்டு புத்தகத்தில் உள்ளது.படித்து பார்தால் உண்மை புரியும் .நீருக்கு வடிவம் இல்லை இருக்கும் பாத்திரத்திற்கேற்ப வடிவம் பெருகிறது அதுப்போல் நமது புலன் அறிவுக்கு எவ்வளவு எட்டுமோ அதுதானே எட்டும்.இது நமது தவறு தானே தவிர படைத்த இறைவனின் தவறு இல்லை.

கலகலப்ரியா said...

good one.. well written...

kailash,hyderabad said...

பூமி தோன்றி 400 கோடி வருடமாகிறது. பாலூட்டிகள் தோன்றி சுமார் 40 கோடி வருடம் ஆகிறது.
மனிதன் தோன்றி வெறும் 1 .5 லட்சம் வருஷம் ஆகிறது. நாகரிக மனிதனின் வரலாறு அதிகமாக
போனால் வெறும் 15 ,000 வருடங்களே.இந்த கடந்த வருடங்களில் பூமி பலமுறை எரிமலை,கடல்,பனி மற்றும் விண்வெளி பாறை தாக்குதல் மூலமாக (உயிரினங்கள்) சுத்தமாக அழிந்து புதிதாக உருவாகி வந்திருக்கிறது.

4 கோடி வருடங்களாக பூமியின் மகாராஜவாக திரிந்த டைனசார்கள் ஒரே நாளில் காலி.
5000 வருடங்களாக சிறந்து விளங்கிய எகிப்து நாகரிகம் போயே போச்சு,அவங்க கும்பிட்ட சாமியும் அவங்களோட சேந்து அழிஞ்சு போச்சு.பாவம்.

இனி எதிர்காலத்தில,

கடந்த காலத்தில நடந்த மாதிரியே ice age , பூமியின் வெப்பநிலை உயர்ந்து கடல் மட்டம் பெருகி பாதி மக்கள் காலி.
கட்ட கடைசீல விளக்குல எண்ண தீந்தா அணைஞ்சு போற மாதிரி சூரியன்ல் சரக்கு தீந்து அணையுரப்ப பூமியும் காலி. இதுக்கு நடுவுல போனசா டைனசர்கள் அழிய காரணமான மாதிரி, விண்வெளியில் இருந்து பாறை விழவும் வாய்ப்பு இருக்கு. சூரியன் எரிபொருள் தீர இன்னும் 400 கோடி வருஷம் இருக்கு .ஆனா கண்டிப்பா தீந்து பூமி பந்து வெறும் வேறு ஐஸ் பந்தா மாறிடும்.

ஆக 400 கோடி வருட ஹிஸ்டரில 4000 வருடம் கூட இல்லாத இந்த மதங்கள புடிச்சிகிட்டு என்னா ஆட்டம் ஆடறாங்க.

இந்த அழிவை தடுக்க முடியாது. (சுனாமிய தடுக்க முடியுமா?) ,ஆனா அழிவோட பாதிப்பை குறைக்க விஞஞானிகளால் தான் முடியும்.மதமோ மதவாதிகளோ ஒண்ணும் கிழிக்க முடியாது,

விஞ்ஞானி ச்ம்ப்யுட்டர கண்டுபுடிச்சா இந்த மத வெறி புடிச்ச ஆளுங்க அதுல வந்து சாம்பிராணி பத்தி கொளுத்தராங்களே!

டியர் சயின்டிஸ்ட்ஸ் ,
நீங்க எதிர்காலத்தில வேற கிரகத்துக்கு ராக்கெட்ல தப்பிச்சி போறப்ப இந்த மதவாதிகள இங்கேயே
கழட்டி விட்டுட்டு போயிடுங்க .
ஏன்னா அவங்கள காப்பாத்த அவங்களோட கிருஷ்ணரும்,ஏசுவும் ,அல்லாவும் இருக்காங்க.

ஆதாரத்துக்கு இங்கே பாருங்க.

http://teachernotes.paramus.k12.nj.us/Nolan/CP%20Bio.htm

இன்னும வேணுன்னா கூகிள்ல எர்த் ஹிஸ்டரின்னு அடிச்சு பாருங்க .

கல்வெட்டு said...

..

பிரான்ஸ் மக்களுக்கு பதிவர் பீரோட "மத்தவங்க பொத்திக்கிட்டு இருங்க " பத்வா பற்றியோ, விஜய் டிவி ஆப்பு வாங்குனது பத்தியோ தெரியாதுபோல.

இப்படி அநியாயம் செய்றாங்க.


* France passed a law in 2004 banning students and staff from wearing "conspicuous" religious symbols in schools – including veils – to defend secularism.

புதிய சட்டம் பரிசீலனை.

* Women who wear the burka in public will be fined £700 under laws being considered in France.

* MPs will vote on the proposal this month after a long impassioned debate over the merits of outlawing the burka and niqab.


http://www.telegraph.co.uk/news/worldnews/europe/france/6946579/Women-who-wear-burkas-in-France-face-700-fine.html

.

பி.ஏ.ஷேக் தாவூத் said...

"தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்."
விளங்கினால் சரிதான்.

kailash,hyderabad said...

மேலே போட்ட பின்னுட்டம் சம்பந்தமா இன்னும் கொஞ்சம் links :

http://www.thinnai.com/?module=displaystory&story_id=40108051&format=html

http://www.unmuseum.org/deaddino.htm

http://www.astronomycafe.net/qadir/q617.html

http://en.wikipedia.org/wiki/Siberian_Traps

http://en.wikipedia.org/wiki/Norilsk

http://en.wikipedia.org/wiki/Environment_of_China

இர்ஷாத் said...

1.பெண்கள் உடல் மறைய்க்கூடிய்வாறு உடை உடுத்தல் எந்த கலாச்சாரத்திலும் மதத்திலும் நாத்திகத்திலும் பின்பற்றப்படுகின்றது. முழுக்கை சட்டையும் கால்சட்டையும் அணியும்போது ஆண்கூட தன் உடலை நன்கு மறைத்துக்கொள்கிறான். ஆண்கள் பெரும்பாலும் அவ்வாறான உடைகளையே அணிகின்றனர். அது ஏன்? இது தொடர்பாக கேள்விகள் கேட்கத்தேவையில்லை. ஏன் என்பது கேள்விகேட்கும் அனைவருக்கும் நன்கு தெளிவானது. அதனால்தான் அவர்களது அம்மா, நமீதா மாதிரி உடையணியாமல் கண்ணியமாக உடையணிகிறார்கள். இதில் கேள்விகேட்பது ஹிட்ஸ் அதிகரிப்பதற்கே..

2.ஆண்களை தூண்டவேண்டாம் என்றே இவ்வாறான கண்ணியமான உடை அணியப்படுகிறது.

3.அமெரிக்காவில் பிரான்ஸில் பெண்கள் மீதான வன்முறை அதிகம் என்பது தெரியாதா?

4.குர் ஆனை ஏற்றுக்கொள்ளாத உங்கள் தாய் சகோதரி போன்றோர் ஏன் கண்ணியமாக உடை அணிகிறார்கள்? இதுவே கண்ணியமாக உடை உடுத்துவதற்கான காரணம். சில கேள்விகளை அவர்களிடமே கேளுங்கள். தெளிவான பதில் கிடைக்கும். இஸ்லாம் மனித வாழ்வில் கடைப்பிடிக்கவேண்டிய அனைத்து விடயங்களைப்பற்றியும் பேசுகிறது. அதன் அடிப்படையில் உடை பற்றி ஆண் பெண் இருவருக்கும் (இருவருக்கும் என்பதை கவனத்தில் கொள்க) அது பேசுகிறது.

5.எந்தப்பகுதிகள் எல்லாம் உணர்ச்சியை தூண்டும் என்று உங்களுக்கு தெரியும். பெண்போகப்பொருள் என இஸ்லாம் கூறவில்லை. மதிப்பு மிக்க ஒரு பெருளை பாதுகாப்பில்லாமல் நீங்கள் வைப்பீர்களா? பெண் மதிபுமிக்கவளாகும்.

6.இஸ்லாம் பற்றிய அடிப்படை கேள்விகளை கேட்டு இழுக்கவேண்டாம். இணைய வசதி உங்களுக்கு இருக்கிறது. தேடிப்பாருங்கள்.

http://www.irf.net/
http://www.onlinepj.com/

7.இஸ்லாம் மாநில வாரியாகவோ நாடுவாரியாகவோ கட்டளைகளை பிறப்பிக்கவில்லை. மறைக்கவேண்டிய பகுதிகளை மறைக்கும்படி சொல்கிறது. எதை கொண்டு மறைப்பது என்பது பெண்கள் முடிவெடுப்பார்கள். (மாநில் வாரியாக என்றால் தெலுங்கானாவுக்காக இன்னொரு உடையை கண்டுபிடிக்க வேண்டுமா) என்ன கொடுமை இது. சிரிக்கும்படியாக கேள்விகளை வைத்து இழுக்க வேண்டாம்.

8.அபாயாவை அணிவது அரேபியாவை பின்பற்ற அல்ல. அது இலகுவான ஆடை. வேண்டுமானால் உங்கள் பெண்களிடம் வாங்கிக்கொடுத்து அவர்களது கருத்தை கேட்டறியுங்கள்

9.சேலை தவறா இல்லையா என்று தெளிவாக விளக்கியுள்ளேன். தமிழ் விளங்கும் யாருக்கும் விளங்கியிருக்கும்.

10.இந்தியாவில் சீக்கியருக்கு தலைப்பாகை அணிய அனுமதித்ததுபோல் முஸ்லிம்பெண்களுக்கும் பொருத்தமான சீருடை அறிமுகப்படுத்தப்படும் பட்சத்தில் அவர்கள் சேர்ந்து கொள்ளலாம். இணையத்தில் தேடிப்பாருங்கள். எப்படி முஸ்லிம்பெண்கள் முக்கியமான துறைகளில் இருக்கிறார்கள் என்று தெரியும். (உலகமே தெரியாதா)

Anonymous said...

http://www.onlinepj.com/

see the debate invitation. Why dont u all go there?

online pj இன் பகிரஙக அழைப்பு.. முதுகெலும்ம்புள்ளவன் போவான்/ள்

Anonymous said...

ஹிஜாப் ஏன்?

வாசியுங்கள்

http://onlinepj.com/pengal/hijab_en/

கல்வெட்டு said...

இர்ஷாத்,

கேட்ட 5 கேள்விகளுக்கு 10 பதில்கள் குடுத்து விளக்கிவிட்டீர்கள்.
மிக்க நன்றி!

Anonymous said...

3.அமெரிக்காவில் பிரான்ஸில் பெண்கள் மீதான வன்முறை அதிகம் என்பது தெரியாதா?//

நல்ல ஜோக். அமிலம் ஊற்றப்பட்டது இங்கேயா?

COMMON MAN said...

இந்து மதத்தை எதிர்த்தபோது வெளியில் யாராவது இருக்கிறார்களா என்று நீங்கள் பார்த்ததில்லை,மிரட்டல் /ஜாக்கிரதபா கமெண்ட்ளையும் யாரும் சொல்லவில்லை, எழுதுவதற்கு முன் நீங்களும்
கிருஷ்ணமூர்த்தி சார் மாதிரி எனக்கு கொழ கொழன்னு கொழம்பு வைக்க தெரியாது, அதனால நறுக்குன்னு சொல்லிட்டு நகர்ந்துகிறேன்! நான் இந்த விசயத்தை பத்தி எழுத வேணாம்னு தான் நினைச்சேன், ஆனால் நண்பர்கள் விடுவதில்லையே!
என்று சொல்லவில்லை, சோ ஒரு வன்முறை வரும் என்ற எதிபார்ப்பு தானாகவே வந்துவிடுகிறது . சொள் அளகன், கூட கூட கும்மி அடித்துக்கொண்டி இருக்கும் rajan RADHAMANALA N பல மாற்று மத நண்பர்கள் அன்று உங்களுக்கு சப்போர்ட் செய்தவர்கள் இன்றைக்கு காணோம். மிரட்டப்பட்டிருக்கலாம், அல்லது பயந்திருக்கலாம் அவ்வளவு சுதந்திரம் அங்கே ! இந்து மதாந்த்தையும், பார்பனர்களையும் நீங்கள் எவ்வளவு தாக்கினாலும் மறுத்து. அல்லது பாராட்டியோ பதில் போடும் பொதுவான மத அடையாளமில்லாத நண்பர்கள் இப்போதும் உங்களுடநிருந்தால் இதற்கும் பதில் போட்டால் அவர்கள் நண்பர்கள், எப்போதும் உங்களோடு இருப்பவர்கள், சகிப்புத்தன்மை, இதுதான் செய்ய வேண்டும் என்ட கட்டுப்பாடுகள் இல்லை, யாரும் தலைவனில்லை தானே வளர்ந்து கல்லடிகள் பட்டு இன்றும் விஷ செடிகளுக்கு அடைக்கலம் குடும்க்கும் ஒரு வாழ்வுமுறை அது. நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன் வால். இப்போது விஜய் டிவி யின் வீரம் புரிந்திருக்கும், அடுத்து பார்பனர்கள் ஏன் மாட்டுக்கறி சாப்பிடகூடாது என்று கோபிநாத் வீரமாக பேசுவார். இந்து மதத்தில் உள்ள சுதந்திரம் 'பாரத தாயை பினாளிளிருந்து புனரருவதை ஆதரித்து கலைக்கண்ணோடு பார்ப்பவர்கள், தான் வாழும் ஒரு நாட்டின் சட்ட திட்டத்தை மதிக்காது ஒரு பாடலை பாடுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்தது எல்லாவற்றிர்க்கும் புத்தகங்களில் அனுமதி தேடுபவர்கள் உங்களுக்கு பார்பவர்களை விட நல்லவர்களாகவே தெரிவார்கள் என்றால் உங்களால் சமூகத்தை கேள்வி கேட்க்கும் உரிமை இல்லாது போய் விடுகிறது. அடுத்து கிருத்துவம் பக்கம் போவீர்கள் என்று நினைக்கிறேன் பார்பன எவ்ளோவ் வீணா திட்டிக்கோ மாவனே எம் பக்கம் வந்த நீ நாஸ்த்தி யென்ற பதில் உங்களுக்கு கிடைக்கும். இந்து மதம் திறந்த வீடு எதுவும் வரலாம் என்ன வேணாலும் சொல்லாலாம். மற்ற வீடுகளில் காவல்கள் அதுகம். சதை பத்திரம். மீண்டும் நீகள் இந்து மதத்திலுள்ள ஓட்டைகளை சுட்டிக்காட்ட வருவீர்கள் வரவேண்டும். அப்போது இன்றைக்கி பம்மிய +கோழை களை+ இனம் கண்டு கிட்ட சேர்க்க வேண்டாம். அது நோக்கத்தை சிதைக்கும்.அல்லது அவர்கள் உங்களுக்கு முக்கியமெனில் நிறைய குப்பை குவியல்கள் கிடைக்கும்.

வால் நீங்கள் சொல்ல வருவது ஜாதி மதம் வேண்டாம் நல்ல மனிதர்களாக இருப்போம் என்பது, அதை கடைபிடிக்க இங்கு எவனு
மில்லை.. எனினும் உங்களுக்கும் ஒரு ஏதாவது முத்திரை குத்தி சீக்கிரம் ஓரம்கடிவிடுவார்கள் என்பதை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது. தயாவு செய்து பதிவுலக கோபிநாத் ஆகிவிடவேண்டாம்!

செல்லதுரை said...

//இர்ஷாத் said...
1. சோனியா காந்தி, ஜெயலலிதா, கனிமொழி, ஹிலரி கிளின்டன் என சகல பெண்களும் தத்தமது கலாச்சாரத்தில் உள்ள ஆகக்கூடிய அளவு மறைக்கக்கூடிய உடைகளையே அணிகின்றனர். சிவசேனைக்கட்சியில் உள்ள பெண்களும் கவர்ச்சி நடிகைகள் போல் அணிவதில்லை//

**********

இது பெரிய காமெடி.... அவர்கள் அந்த உடலை மூடும் உடை அணிவதற்கான காரணமே, உள்ளே புல்லட் ப்ரூஃப் அணிவதுதான்...

இதில் எங்கே வந்தது இஸ்லாம்...

செல்லதுரை said...

//இர்ஷாத் said...
1. சோனியா காந்தி, ஜெயலலிதா, கனிமொழி, ஹிலரி கிளின்டன் என சகல பெண்களும் தத்தமது கலாச்சாரத்தில் உள்ள ஆகக்கூடிய அளவு மறைக்கக்கூடிய உடைகளையே அணிகின்றனர். சிவசேனைக்கட்சியில் உள்ள பெண்களும் கவர்ச்சி நடிகைகள் போல் அணிவதில்லை//

**********

இது பெரிய காமெடி.... அவர்கள் அந்த உடலை மூடும் உடை அணிவதற்கான காரணமே, உள்ளே புல்லட் ப்ரூஃப் அணிவதுதான்...

புல்லட் ப்ரூஃப் அணிவது தங்களை ஆசிட் மற்றும் வெடி வீசும் “தாலிபன்”களிடம் இருந்து காப்பாற்றி கொள்ள தான்....

இதில் எங்கே வந்தது இஸ்லாம்...

ஆஃப்கனிஸ்தான்ல தாலிபன்கள் பள்ளி செல்லும் பெண் குழந்தைகள் மேல் ஆசிட் அடிப்பதை ஒரு வீர செயலாக செய்கிறார்கள்... பள்ளிகளை குண்டு வீசி தகர்த்து எறிகிறார்கள்... இங்க பேசிக்கிட்டு இருக்கற நேரத்துல நீங்க எல்லாம் அங்க போய், ஒரு ஸ்கூல் கட்டி கொடுக்கலாம்... இல்லன்னா, வாத்தியார் ஆகி, பாடம் நடத்தலாம்..

COMMON MAN said...

அபுறம் சுனாமியும், பூகம்பமும் வந்தால் எந்த சாமியும் ஏன் காப்பாத்துவது இல்ல?

புடவ கடையில் இருக்கர பொம்மைய பார்த்தாலே நிரய பேருக்கு நட்டுக்கு, இதுல எத போட்டு மூடினாலும் வேச்ட். அப்ப மத்த பெண்கல அவனுங்க பார்த்தா நட்டுக்காதா.. என் பொண்டாட்டி போத்திகினு இருக்கனும் அடுத்தவன் பொண்டாட்டிய பார்த்துக்கோ என்பதுபோலதான் இருக்கு. சரி எங்க சாமி சொல்லிருக்குன்னா அப்ப மூடிக்கினு இருக்காதவங்களோட இவனுங்கலுக்கு என்ன வேல??

வெரும் புர்கா மட்டும் போட்டுகிட்டா அது பொப்மலன்னு தெரியாதா..பொனத்தையே நக்கர மனுசனுங்க கிட்ட இதெல்லாம் வேலைக்காவுமா??

சொல்ல வந்த கருத்த விட்டு உங்கல காயடிக்கவே கூப்பிடுவாட்னுங்க..உசார்.

இர்ஷாத் said...

செல்லத்துரை உங்க அம்மா சகோதரி பொண்டாட்டி எல்லாரும் உள்ளே புல்லட் ப்ரூப் போடுறதுக்கா கண்ணியமாக உடுக்கிறாங்க? கேக்கிறதுக்கு முந்தி யோசிக்க மாட்டீங்களோ? :D :D :D

செல்லதுரை said...

//இர்ஷாத் said...
1. சோனியா காந்தி, ஜெயலலிதா, கனிமொழி, ஹிலரி கிளின்டன் என சகல பெண்களும் தத்தமது கலாச்சாரத்தில் உள்ள ஆகக்கூடிய அளவு மறைக்கக்கூடிய உடைகளையே அணிகின்றனர். சிவசேனைக்கட்சியில் உள்ள பெண்களும் கவர்ச்சி நடிகைகள் போல் அணிவதில்லை////

**********

நீங்க இவிய்ங்கள் தானே உதாரணம் காட்டி உதார் விட்டீங்க.... அதுக்கு தான் சொன்னேன்...

இப்போ, உங்க பேச்சு ட்ராக் மாறுதே... அது ஏன்???

நான் சொன்னது மேல் குறிப்பிட்டுள்ளவர்களின் உடை பற்றிய கமெண்ட்... அதுவும் நீங்க குறிப்பிட்டு சொன்னதால....

இப்போ வேணும்னே பேச்சு மாத்தறீங்க.... நீங்களும் பேசுறதுக்கு முன்னாடி கொஞ்சம் யோசிக்கோணும்

இர்ஷாத் said...

செல்லத்துரை, நான் குறிப்பிட்ட பெண்களின் பெயர்களை சொன்னதன் காரணம்
1. அவர்களை சொன்னால்தான் பலருக்கு உதாரணம் விளங்கும்

2. அவர்கள் அவ்வாறு ஆடை அணிவதற்கு காரணம் தங்கள் கண்ணியம் பற்றிய அக்கறையே

நீங்கள் அதற்கு இன்னொரு காரணத்தை கற்பிதம் செய்து கொண்டதால், உங்களுக்கு நன்கு அறிமுகமான சொந்த வீட்டுப்பெண்களை உதாரணமாக காட்டினேன்.

Anonymous said...

பர்தாவை நபி கொண்டு வந்த காரணம் மிகவும் கேவலமான ஒன்று !.அதைச் சொல்வது சங்கடமான விஷயம்.

Anonymous said...

//அதைச் சொல்வது சங்கடமான விஷயம்//

சங்கடமான விஷயம் முஸ்லீம்களுக்கு மட்டும்.

அன்புடன் நான் said...

விடுங்க வாலு....

உங்களுக்கும்... குடும்பத்தினருக்கும்.... பொங்கல் வாழ்த்துக்கள்.

கும்மி said...

அனைவருக்கும் வணக்கம்! நான் இஸ்லாமியப் பெற்றோருக்குப் பிறந்து, தற்பொழுது இஸ்லாமியனாய் அல்லாமல், மனிதனாய் வாழ்பவன். நான் ஏதும் பதிவுகள் எழுதியதில்லை. ஆனால், நற்குடி பதிவரும், நங்கநல்லூர் expressum, வாய் வைத்து வயிறு வளர்க்கும் PJ-யின் அடிப்பொடிகளும் பண்ணும் பம்மாத்து வேலைகளை பார்க்கும்பொழுது, இது குறித்து சில கருத்துக்களை இங்கே கூறியே ஆகவேண்டும் என்பதால்தான் இந்த கும்மி.

புர்கா பாதுகாப்புக்கானது, என்று கூறுபவர்களுக்கு ஒரு சிறு (?) சம்பவத்தை நினைவுபடுத்த விரும்புகின்றேன். INTJ-யின் பாக்கர், TNTJ-யில் இருந்து வெளியேற்றப்பட்டது ஏன் என்று அனைவருக்கும் தெரியும். Win TV ஊழல் மற்றும் அடைக்கலம் தேடி வந்த பெண்களுக்கு படுக்கையில் அடைக்கலம் கொடுத்த நிகழ்வு. அப்பொழுது அந்தப் பெண்களின் புர்கா பாதுகாப்பற்றதாகி விட்டதே?

இவர்கள் அழைப்பு விடுத்திருக்கும் விவாதம் என்னவாகும் என்பதை, TNTJ மற்றும் சுன்னத் ஜமாஅத் விவாதத்தின் முடிவு நமக்கு ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டது. அந்த விவாதத்தின் முடிவு என்னவென்று தெரியாதவர்கள் சன் செய்திகளையும், ஜெயா செய்திகளையும் ஒருங்கேப் பார்த்தால் என்ன தோன்றுமோ, அதுதான் இங்கும் நடக்கும்.

விபரம் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள், மார்க்க அறிஞர்களை அணுகி விபரம் பெற்றுக்கொள்ளச் சொல்கின்றனர். இப்படிதான் நாகர்கோவில் மாவட்டத்தில் ஒரு கவிஞர், கவிதை எழுதினார்.

இத்தனை நபிகளில், ஏன் வாப்பா இல்லை ஒரு பெண் நபி? (எண்டர்: தேவையான அளவு. உதவி தேவைப்படுவோர் கேபிளை அணுகவும்)

நான்கு மத்ஹபுகளை பின்பற்றும் ஜமாஅத் அறிஞர்கள் அளித்த தீர்ப்பு நினைவிருக்கின்றதா? அவருடன் யாரும் அன்னம், தண்ணி புழங்கக்கூடாது தீர்ப்புதான். இதுபோல்தான் யாரும் கேள்வி கேட்டால் உங்கள் மார்க்க அறிஞர்கள் நடந்து கொள்வார்கள்.

உங்கள் மார்க்க அறிஞர்களில் யாருக்கேனும் தமிழை ஒழுங்காக பேசவாவது தெரியுமா? நான் ஒரு சிறு பட்டியல் அளிக்கின்றேன்

இருக்கின்றனர் - இருக்குகின்றனர்
செய்கின்றார் - செய்குகின்றார்
பார்க்கின்றார்- பார்க்குகின்றார்

இப்படித்தான் உங்கள் மார்க்க அறிஞர்கள் தமிழை கொலை செய்வார்கள். கேட்டால் அவர்கள் இரண்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர்கள், அவர்களது தமிழ் அறிவு அவ்வளவுதான் இருக்கும் என்று கூறுவீர்கள். ஆனால் PJ-யின் அறிவு?

டார்வினின் கூற்றைப் பற்றி பேசும்போது, உங்களுடைய அறியாமையை உலகம் உணர்ந்துகொண்டது. உங்களிடம் வந்தால் , நீங்கள் அளிக்கும் பதில் எப்படி இருக்கும் என்று அனைவருக்கும் தெரியும். அதனால் இந்த வெற்று வாதங்களை நிறுத்திக் கொள்ளுங்கள்.

வால்பையன் அவர்களே! நேற்று (13-01-2010) பக்கிர் முகம்மது அல்தாபியிடம் ஒரு பெண் கேட்ட கேள்வி. "என் மகனுக்கு 12 வயதாகிறது. அவனை Hostel-லில் சேர்க்கலாமா?" இது போன்ற அறிவிலிகள் இருக்கும் வரை, நாம் என்னதான் உண்மை சொன்னாலும் அவர்கள் கூண்டை விட்டு வெளியில் வரமாட்டார்கள்.

Radhakrishnan said...

// வால்பையன் said...

வேற என்ன தல இருக்கு அடைக்க!?//

ஓட்டை வாய்களை அடைக்க வேண்டும் எனச் சொல்லனும் போல இருக்கு அருண். நீயும் தான் ஓட்டை வாய் என என்னையும் சொல்லி விடுவார்கள் என்பதால் பேசாமல் இருந்துவிடுகிறேன்.

இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

Anonymous said...

குற்றச்சாட்டுகள் யார் மீதுதான் இல்லை.. நாத்திகனுக்கும் ஆத்திகனுக்கும் அது பொதுதானே..

இஸ்லாத்தில் ஒவ்வொரு குற்றத்துக்கும் தண்டனையுண்டு. அது என்ன இஸ்லாம் அல்லாத மக்களுக்கு கொடுக்கவா?

மனிதன் தவறு செய்வான் என்பது நிச்சயம். அம்மனிதனுக்குத்தான் அத்தண்டனை. எனவே இஸ்லாத்தை பின்பற்றுபவன் குற்றஞ்செய்யமாட்டான் என்று எந்த நியதியும் இல்லை.

ஆனால் அவன் மற்றவர்களை விட அதிகமாக தவிர்ந்துகொள்வான்.

இவ்வளவு சின்ன விடயத்தை விளங்கமுடியாதது, இஸ்லாத்தில் இருந்தால் என்ன.. கும்மி அடிச்சாத்தான் என்ன?

கும்மி அடிப்பவர்களை கும்முபவன் said...

////கும்மி said...

அனைவருக்கும் வணக்கம்! நான் இஸ்லாமியப் பெற்றோருக்குப் பிறந்து, தற்பொழுது இஸ்லாமியனாய் அல்லாமல், மனிதனாய் வாழ்பவன்.////--->>> அட பரிதாபமே...! அப்போ நீங்கள் மனிதர்களுக்கு பிறக்க வில்லையா கும்மி..?

தருமி said...

வால்ஸ்,
// பெண்ணே ஒரு போகபொருள் தான், அவளை பார்த்தாலே டென்ஷன் ஆகும் //

பெண்களை horizontally-ஆக மட்டுமே பார்ப்பவர்களுக்கான கேள்வி இது; இல்லையா வால்ஸ்?

தருமி said...
This comment has been removed by the author.
Anonymous said...

தருமி, பெண்கள் போகப்பொருள் அல்ல என்று நம்புபவர்கள்தான் மூடிக்கிட்டு இருக்க சொல்லுவாங்க என்று சொல்கிறார். அப்படியான தருமியின் தாய், சகோதரி, மனைவி, மகள் எல்லோரும் தொறந்து போட்டுட்டு இருப்பங்க போல.. தருமியின் வாதத்தை நியாயப்படுத்த.. அட்ரஸ் குடுப்பீங்களா?

தருமி said...

// பெண்போகப்பொருள் என இஸ்லாம் கூறவில்லை.//

'மூடியே இருக்க வேண்டும்' என்பதே 'பெண்போகப்பொருள்' மட்டுமே என்பதற்காகத்தானே?!

Anonymous said...

தருமிக்கு சொன்னபிறகுதான் பாரதூரம் விளங்கிச்சு போல.. பரவாயில்லை.... பெண்களை horizontally-மட்டுமல்லாமல் vertical ஆகவும் பார்க்கும் அவர் பெண்கள் எப்படி இருப்பாங்க என்று கூட கேட்டுப்பார்போமே...

Anonymous said...

தருமி சொன்ன கருத்துக்கு பதில் சொன்னதும், ஜாகா வங்கிய தருமியும், அதற்கு பதிலாக நான் கேட்ட கேள்வியை delete பண்ணிய வால் பையனுக்கும் வெட்கமில்லையா? அல்லது இப்போதுதான் உண்மை உறைக்கிறதா?

Anonymous said...

தருமி, பெண்கள் போகப்பொருள் அல்ல என்று நம்புபவர்கள்தான் மூடிக்கிட்டு இருக்க சொல்லுவாங்க என்று சொல்கிறார். அப்படியான தருமியின் தாய், சகோதரி, மனைவி, மகள் எல்லோரும் தொறந்து போட்டுட்டு இருப்பங்க போல.. தருமியின் வாதத்தை நியாயப்படுத்த.. அட்ரஸ் குடுப்பீங்களா?

வெல்ல முடியாத கருத்தை சொல்லி hit வாங்குபவன் மீண்டும் ஒருதடவை இத delete பண்ணுவான். அவனுக்கு வால் இருக்கும் அளவுக்கு மூளை இல்லை என்று காட்ட..

வெட்கமில்லையா?

shame shame puppy same..

கல்வெட்டு said...

.
தருமி,
ஹதீஸ்கள்,பத்வாக்கள் எல்லாத்தையும் விட்டுவிட்டு ஒரிஜினல் குரானை மட்டும் பார்த்தால்...

குரான் பெண்களைப் போகப்பொருள் என்று சொல்லவில்லை என்பது எனது புரிதல். போகப்பொருளாகப் பார்க்கும் ஆண்கள் என்று மறைமுகமாக ஆண்களைத்தான் சொல்கிறது.
...
"sexual appetite (காமப் பசி )உள்ள ஆண்கள் பார்வையில் இருந்து தவிர்க்க தலையில் உள்ள துணி மார்பகங்களை போர்த்தும் வண்ணம் அணியவும்" என்றே சொல்கிறது.

24:31 மற்றும் 24:32 தெளிவாகச் சொல்கிறது.குரானின் இந்த வரிகளில் ஏதும் தவறு இருப்பதாகத் தெரியவில்லை.

குடும்ப உறுப்பினர்கள் தவிர்த்து மற்றவர்களிடம் பெண்கள் வெறும் மேல் சட்டையுடன் இருக்கக்கூடாது. தலையில் போடும் துணியை எடுத்து (draw their head-coverings over their bosoms, and that they disclose not their beauty) மேல் சட்டைக்குமேல் மார்பகத்தில் போர்த்தும் படி அணிய வேண்டும். அவ்வளவுதான் கட்டளை.

பிரச்சனை என்னவென்றால் தவறான புரிதல்.
குரான் அந்தக்கால அரபியா பாணி "அபாயா" உடையை உதாரணமாகக் கொண்டு இந்த விளக்கம் கொடுத்து உள்ளது.

இந்தியாவில் இது சேலை முந்தானையின் மூலமே சுலபமாக முடிந்திவிடும் விசயம்.

அல்லது சுரிதார் துப்பட்டா அதே வேலையைச் செய்கிறது.


====

மார்பகத்தைப் பற்றிச் தெளிவாகச் சொன்ன குரானில் , முகத்தை மூடச் சொல்லியுள்ள வசனங்கள் எது என்று தெரியவில்லை.

முகத்தை மூடச்சொல்லி குரானில் எந்த அதிகாரம் சொல்கிறது என்று தெரிந்தவர்கள் சொன்னால் நல்லது.

===========================

.

கல்வெட்டு said...

.


24:31 மற்றும் 24:32

[24:31] قُل لِّـلْمُؤْمِنِيْنَ يَغُـضُّوْا مِنْ اَبْصَارِهِمْ وَيَحْفَظُوْا فُرُوْجَهُمْ‌ؕ ذٰلِكَ اَزْكٰى لَهُمْ‌ؕ اِنَّ اللّٰهَ خَبِيْرٌۢ بِمَا يَصْنَعُوْنَ‏
[24:31] قُل لِّلۡمُؤۡمِنِينَ يَغُضُّواْ مِنۡ أَبۡصَـٰرِهِمۡ وَيَحۡفَظُواْ فُرُوجَهُمۡ‌ۚ ذَٲلِكَ أَزۡكَىٰ لَهُمۡ‌ۗ إِنَّ ٱللَّهَ خَبِيرُۢ بِمَا يَصۡنَعُونَ

Say to the believing men that they restrain their eyes and guard their private parts. That is purer for them. Surely, Allah is well aware of what they do.

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍====


[24:32] وَقُل لِّـلْمُؤْمِنٰتِ يَغْضُضْنَ مِنْ اَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوْجَهُنَّ وَلَا يُبْدِيْنَ زِيْنَتَهُنَّ اِلَّا مَا ظَهَرَ مِنْهَا‌ وَلْيَـضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلٰى جُيُوْبِهِنَّ‌ وَلَا يُبْدِيْنَ زِيْنَتَهُنَّ اِلَّا لِبُعُوْلَتِهِنَّ اَوْ اٰبَآٮِٕهِنَّ اَوْ اٰبَآءِ بُعُوْلَتِهِنَّ اَوْ اَبْنَآٮِٕهِنَّ اَوْ اَبْنَآءِ بُعُوْلَتِهِنَّ اَوْ اِخْوٰنِهِنَّ اَوْ بَنِىْۤ اِخْوَانِهِنَّ اَوْ بَنِىْۤ اَخَوٰتِهِنَّ اَوْ نِسَآٮِٕهِنَّ اَوْ مَا مَلَـكَتْ اَيْمَانُهُنَّ اَوِ التّٰبِعِيْنَ غَيْرِ اُولِىْ الْاِرْبَةِ مِنَ الرِّجَالِ اَوِ الطِّفْلِ الَّذِيْنَ لَمْ يَظْهَرُوْا عَلٰى عَوْرٰتِ النِّسَآءِ‌ وَلَا يَضْرِبْنَ بِاَرْجُلِهِنَّ لِيُـعْلَمَ مَا يُخْفِيْنَ مِنْ زِيْنَتِهِنَّ‌ؕ وَتُوْبُوْۤا اِلَى اللّٰهِ جَمِيْعًا اَيُّهَ الْمُؤْمِنُوْنَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ‏
[24:32] وَقُل لِّلۡمُؤۡمِنَـٰتِ يَغۡضُضۡنَ مِنۡ أَبۡصَـٰرِهِنَّ وَيَحۡفَظۡنَ فُرُوجَهُنَّ وَلَا يُبۡدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنۡهَا‌ۖ وَلۡيَضۡرِبۡنَ بِخُمُرِهِنَّ عَلَىٰ جُيُوبِہِنَّ‌ۖ وَلَا يُبۡدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ أَوۡ ءَابَآٮِٕهِنَّ أَوۡ ءَابَآءِ بُعُولَتِهِنَّ أَوۡ أَبۡنَآٮِٕهِنَّ أَوۡ أَبۡنَآءِ بُعُولَتِهِنَّ أَوۡ إِخۡوَٲنِهِنَّ أَوۡ بَنِىٓ إِخۡوَٲنِهِنَّ أَوۡ بَنِىٓ أَخَوَٲتِهِنَّ أَوۡ نِسَآٮِٕهِنَّ أَوۡ مَا مَلَكَتۡ أَيۡمَـٰنُهُنَّ أَوِ ٱلتَّـٰبِعِينَ غَيۡرِ أُوْلِى ٱلۡإِرۡبَةِ مِنَ ٱلرِّجَالِ أَوِ ٱلطِّفۡلِ ٱلَّذِينَ لَمۡ يَظۡهَرُواْ عَلَىٰ عَوۡرَٲتِ ٱلنِّسَآءِ‌ۖ وَلَا يَضۡرِبۡنَ بِأَرۡجُلِهِنَّ لِيُعۡلَمَ مَا يُخۡفِينَ مِن زِينَتِهِنَّ‌ۚ وَتُوبُوٓاْ إِلَى ٱللَّهِ جَمِيعًا أَيُّهَ ٱلۡمُؤۡمِنُونَ لَعَلَّكُمۡ تُفۡلِحُونَ

And say to the believing women that they restrain their eyes and guard their private parts, and that they disclose not their natural and artificial beauty except that which is apparent thereof, and that they draw their head-coverings over their bosoms, and that they disclose not their beauty save to their husbands, or to their fathers, or the fathers of their husbands or their sons or the sons of their husbands or their brothers, or the sons of their brothers, or the sons of their sisters, or their women, or what their right hands possess, or such of male attendants as have no sexual appetite, or young children who have no knowledge of the hidden parts of women. And they strike not their feet so that what they hide of their ornaments may become known. And turn ye to Allah all together, O believers, that you may succeed.


.

கல்வெட்டு said...

டிச்கி:
குரான் சரியா தவறா என்று குரானை அருளிய இறைவனிடம் மட்டுமே உரையாட முடியும்.

இறைத்தூதர் முகம்மது உட்பட அனைவரும் குரானின் வாசகர்களே. தவிர உருவாக்கியவர்கள் இல்லை.

மனிதன் குரானை சரியென்றோ தவறு என்றோ யார் யாரிடம் போய் நிரூபிப்பது?

குறைந்தபட்சம் உள்ளது உள்ளபடி என்னதான் சொல்கிறது என்று பார்த்தாலே பிரச்சனை இல்லை. உடை குறித்து இஸ்லாம் நண்பர்கள் சொல்லும் அதிகப்படியான பயமுறுத்தல்கள்தான் பிர‌ச்சனையே. :-(((

தருமி said...

//தருமியின் வாதத்தை நியாயப்படுத்த.. அட்ரஸ் குடுப்பீங்களா? //

பேரில்லாம வந்து உன் 'புத்தி'யைக் காமிச்சிட்டியே!

Anonymous said...

உங்க கருத்த எப்படி பின்பற்றிறீங்க என்டு பாக்கத்தான ராசா

Unknown said...

"வாலை" நிமிர்த்த முடியுமா?
http://athikkadayan.blogspot.com/2010/01/blog-post_13.html

Anonymous said...

காட்டியும் மூட்டியும் விடக்கூடிய ஆளுய்யா
பர்தா போடுராங்க போடாம பொராங்க உமக்கு என்ன வந்தது இஸ்லாதுக்கு எதிராக மத்த வெறி பிடித்த மிருகமாகவே உமது பதிவு உம்மை அடையாளம் காட்டுகிறது.

காலப் பறவை said...

நல்ல பதிவு ஜி

Anonymous said...

உஷார்>>>>>>>>>>>>>


ஆயிரத்தில் ஒருவன் = 50/100

நாணயம் = 20/100

குட்டி = -50/100

தெலுகு ஆர்யா பார்த்தவர்கள் படம் பார்த்தா "BLOOD" கண்டிப்பாக உஷார்.
-பாதிப்பு அடைத்தவன் "SAME BLOOD"

வால்பையன் said...

//பதிலாக நான் கேட்ட கேள்வியை delete பண்ணிய வால் பையனுக்கும் வெட்கமில்லையா? //

கூமுட்ட, நேத்து ஆபிஸ் லீவு, இப்ப தான் ஆபிஸிக்கே வர்றேன், நான் இப்படி டெலிட் பண்ணியிருக்க முடியும், மேலும் நான் டெலிட் பண்ண்ணுவனா, மாட்டனான்னு எல்லாருக்கும் தெரியுமே, நீ என்ன புதுசா!?

கும்மி said...

அத்திக்கடையாரே! அத்திக்கடை, பொதக்குடி, கூத்தாநல்லூர் பகுதிகளில் புர்கா அணிந்த பெண்களின் மாண்புகள் குறித்தும், தஞ்சை மற்றும் திருச்சி லாட்ஜ்கள் குறித்தும் ஒரு பதிவிடலாமே! நாளை நான் இது குறித்து கும்மி அடிக்கின்றேன்.

கும்முபவரே! உங்களுடைய விவாதத்தின் முடிவை நீங்கள் எப்படி அறிவிப்பீர்கள் என்பதை குறித்து நான் கூறியதற்கு பதில் கூறிவிட்டு, பிறகு என்னை கும்முங்கள். நான் கூறிய எதற்குமே பதில் கூறவில்லையே? எப்படி பூசி மெழுகுவது என்பதை PJ-யிடம் கற்று கொள்ளவும்.

கும்மி said...

Anony: பெண்கள் குறித்த பாக்கரின் பார்வை என்னவென்று நீங்கள் ஏன் பேச மறுக்கிறீர்கள்?

யுனாநிமஸ் said...

டியர் வால்ஸ்,
ஹிந்துக்களின் அக்னிசாட்சி, தாலியை பற்றி, மஞ்சள் குங்குமம் மல்லிகைப்பூ இவை பற்றி என்றாவது எழுதியது உண்டா?

கிருத்துவர்களின் அப்பம், இயேசு சொன்னதற்கு மாறாக கிருத்துவர்களின் 'கடவுள் மூவர்' கோட்பாடு என இப்படி ஏதும் எழுதி இருக்கிறீர்களா?

சீக்கியர்களின் டர்பனையும், இடுப்புக்கத்தியையும் பற்றி எழுதியது உண்டா?

முஸ்லிம்களை பற்றி மட்டுமே எழுதுவதால் உங்களை யாரும் இறை மறுப்பாளன் என்றோ நடுநிலையாளன் என்றோ சொல்லப்போவதில்லை. இஸ்லாமாபோபியாகாரன் என்றே சொல்வார்கள். அப்படியென்ன இஸ்லாம் மீது நாத்திகர்கள் உங்களுக்கெல்லாம் அவ்வளவு காண்டு?

காய்த்தமரமோ அது.... உங்களால் தினமும் கல்லடி படுகிறேதே?

A Man without TAIL said...

கோவில் சிலைகளில் பெண்கடவுள் சிலைகளுக்கு உயர்ரகப் பட்டுத் துணி போர்த்தியிருப்பார்கள். அம்மண கோலத்தில் செதுக்கப்பட்ட சிலைகளுக்கு பட்டுத்துணி போர்த்தி, அம்மன் என்று மரியாதை செய்கிறார்கள். கடவுளை வழிபடும்போது மனம் அலைபாய்வதைத் தடுக்கவே சிலைகளுக்கும் ஆடை அணிவிக்கிறார்கள்.

ஆபாசப் படங்களில் அங்கம் தெரியக் காட்சிப்படுத்தப்படுபவர்கள் பெண்களே! துரிதமாக பாலியல் வசப்படுத்தும் ரசாயன மாற்றம் பெண்ணைவிட ஆணுக்கே அதிகம் என்று மருத்துவம் சொல்கிறது.பெண்ணின் சிறு அங்கமும் ஆணுக்கு பாலியல் உணர்வை தூண்டுகிறது என்பது மறைக்கமுடியாத உண்மை!

ஜனாதிபதியாக பதவியேற்கும் சில நாட்களுக்கு முன்பு பர்தாவைப் பற்றி விமர்சித்த திருமதி.பிரதீபா பாட்டீல் இன்றுவரை முக்காடிட்டு, கைகளை மறைக்கும் பர்தாவுக்கிணையான உடையணிகிறார். முஸ்லிம் பெண்களை பர்தா அணியச்செய்து அவர்களின் உரிமையை இஸ்லாம் பறிக்கிறதெனில் இந்திராகாந்தி முதல் ப்ரதீபா பாட்டீல்வரை முக்காடுடிட்டுக்கொள்வதற்கும் இஸ்லாம்தான் காரணமா?

இஸ்லாம் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டமார்க்கமல்ல. ஒருபக்கம் ஆபாச போஸ்டரை கிழிக்கும் போராட்டங்களை நடத்திக்கொண்டு இன்னொரு பக்கம் பர்தாவை விமர்சிப்பது நேர்மையான கருத்தாடலா? பர்தா தேவையில்லை என்போர் பிகினி அல்லது டூ பீஸில் வாதிடுவதுதானே நேர்மையான விவாதமாகும்?

Islaam-அம்மார்க்கம் செய்த வாழ்வியல் முறை அம்மார்க்கத்தை தமதாகத் தேர்ந்தெடுத்தவர்களுக்கு. அது கடித்தால் வலி அவர்களுக்கு. அது இன்பமளிதால் அதன் சுகமும் அவர்களுக்கு.

மற்றவர்களுக்க் என்ன வந்தது?

தமிழ் வலைப்பதிவுகளிலும்கூட பர்தா குறித்த விமர்சனங்கள் அவ்வப்போது வைக்கப்படுகிறது. பள்ளிகளில் முஸ்லிம் மாணவிகள் பர்தா அணியக்கூடாதென்ற தடை பிரான்ஸ்,ஜெர்மனி போன்ற நாடுகளில் சட்டமாக்கப்பட்டுள்ளது. பிரிட்டனிலும் பர்தா தடைசெய்யப்பட வேண்டுமா என்ற கருத்துக்கணிப்பை பிரபல பிபிசி நிறுவனம் நடத்துகிறது. In this controversy, in Britain, the whole people have decided that the issue should be left to Muslim women. Let them take it if they like it. If not, let them fight against it.

கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள் முஸ்லிம் பெண்களை போன்று பர்தா அணிகின்றனர். காரணம் தாங்கள் புனிதமானவர்கள், கண்ணியமானவர்கள் என்று பிறர் அறிய வேண்டும் என்பதற்காக.
நிச்சயமாக அந்த உடை அவர்களுக்கு ஒரு கண்ணியத்தை தருகிறது என்பதை மறுக்க முடியாது (அவர்களையும் கற்பழிப்பது என்பது ஈனப்பிறவிகளான இந்திய hindhuthva பாசிஸ்டுகளால் மட்டுமே முடியும்).

But, இஸ்லாம் தன்னை பின்பற்றும் அணைத்து பெண்களுக்கும் இந்த கண்ணியத்தை வழங்க விரும்புகிறது. Is it wrong?

சில மாதங்களுக்கு முன்பு NDTV - இல் தலைநகர் டில்லியில் பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் குற்றங்கள் பற்றி ஒரு நிகழ்ச்சி . பேட்டியாளர் பெண்கள் இதை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்று கேட்கிறார் . அதற்கு ஒரு இளம் பெண் சொல்கிறார் .

" பெண்கள் தங்கள் ஆடை விசயத்தில் கவனமாக இருக்க வேண்டும் "

சொன்னால் புரியாதவர்கள் பட்டுத் தெரிந்து கொள்கிறார்கள்.

ஆணும் பெண்ணும் சமம் என்பவர்கள் போராட்டம் நடத்த வேண்டிய இடம் பொதுக் கழிப்பிடங்கள்தான். ஏனென்றால் அங்குதான் ஆண்கள்-பெண்கள் என தனித்தனி படம்போட்டு பாகுபாட்டை வலியுறுத்துகிறார்கள். என்ன கொடுமைசார் இது!

Sujaathaa's fan said...

பிரச்னை குர்ஆனில் இல்லை; நம்மிடம்தான் - திரு.சுஜாதா ரங்கராஜன்

"திருக்குர்ஆனுடன் என் முதல் பரிச்சயம் என் தந்தை மூலம் ஏற்பட்டது. அவருக்கு நான் நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாசுரங்களை பெங்களூரில் படித்துக் காட்டிக்கொண்டு இருக்கும்போது, திடீரென்று 'குர்ஆன் படிக்கலாம். அதில் என்னதான் சொல்லியிருக்காங்கன்னு பார்க்கலாம்டா' என்றார்.

நான் உடனே புத்தகக் கடைக்குப் போய், 'தி மீனிங் ஆஃப் தி க்ளோரியஸ் குர்ஆன்' என்ற ஆங்கிலப் புத்தகத்தை வாங்கி வந்தேன். சில நாள்கள் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தைத் தள்ளிப்போட்டு, திருக்குர்ஆனை முழுவதும் படித்தோம். அதில் சொல்லியிருக்கும் கடவுள் கருத்துக்கள் நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் இருப்பதைப் போல் உணர்ந்தோம்.

'வாழ்வுக்கான நடைமுறைக் குறிப்புகளும், எவரும் ஒப்புக்கொள்ளும்படியாக இருக்கிறதே! எந்த நாட்டுக்கும், எந்தச் சமயத்துக்கும் ஆட்சேபம் இருக்க முடியாதே! இதில் வெறுப்பதற்கு என்ன இருக்கிறது!' என்று வியந்தோம்.

திருக்குர்ஆனை முதலில் இருந்து கடைசி வரை தேடிப் பார்த்தாலும், மற்றவர் பேரில் வெறுப்பை வளர்க்கும் வாசகங்கள் எதுவும் இல்லை.

பிரச்னை குர்ஆனில் இல்லை. நம்மிடம்தான்.

திறந்த மனதுடன் அதைப் படித்துப் பார்க்க விரும்பிய, என் கண்களைத் திறந்த என் தந்தையார் தீவிர வைணவர்."
---> சுஜாதா (தினமணி ரம்ஜான் மலர் - 2003)

Anonymous said...

மதம் பிடித்தால் மனிதம் அழியும்.

உமக்கும் மதம் பிடித்து விட்டது உடனே ஒரு மனொத்ததுவ டாக்டரை பார்க்கவும்.

கடவுளால் அம்மணமாக படைக்கப்பட்ட ஜீவராசி said...

A Man without TAIL said...
கோவில் சிலைகளில் பெண்கடவுள் சிலைகளுக்கு உயர்ரகப் பட்டுத் துணி போர்த்தியிருப்பார்கள். அம்மண கோலத்தில் செதுக்கப்பட்ட சிலைகளுக்கு பட்டுத்துணி போர்த்தி, அம்மன் என்று மரியாதை செய்கிறார்கள். கடவுளை வழிபடும்போது மனம் அலைபாய்வதைத் தடுக்கவே சிலைகளுக்கும் ஆடை அணிவிக்கிறார்கள்.//

அந்த கோவில் கோபுரத்தில் உறவு காட்ச்சிகல் சிலையாக வடிக்கப்படிருக்குமே பார்த்ததில்லை??

உங்க மனம் அலைபாயுது சரி..அதுக்கு எல்லாரையும் ஏன் கூட்டு சேக்கரீங்க??

//கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள் முஸ்லிம் பெண்களை போன்று பர்தா அணிகின்றனர். காரணம் தாங்கள் புனிதமானவர்கள், கண்ணியமானவர்கள் என்று பிறர் அறிய வேண்டும் என்பதற்காக.
நிச்சயமாக அந்த உடை அவர்களுக்கு ஒரு கண்ணியத்தை தருகிறது என்பதை மறுக்க முடியாது (அவர்களையும் கற்பழிப்பது என்பது ஈனப்பிறவிகளான இந்திய hindhuthva பாசிஸ்டுகளால் மட்டுமே முடியும்).//

அவங்க உங்க ஊர்ல சர்ச் கட்ட வுட்டுட்டு பிட் நொடீஸ் குடுத்து மதம் மார கூவும்போது இத சொல்லு நைனா..

ஆபாசப் படங்களில் அங்கம் தெரியக் காட்சிப்படுத்தப்படுபவர்கள் பெண்களே! துரிதமாக பாலியல் வசப்படுத்தும் ரசாயன மாற்றம் பெண்ணைவிட ஆணுக்கே அதிகம் என்று மருத்துவம் சொல்கிறது.பெண்ணின் சிறு அங்கமும் ஆணுக்கு பாலியல் உணர்வை தூண்டுகிறது என்பது மறைக்கமுடியாத உண்மை!//

பாத்து உங்களுக்கும் பொண் குலந்தங்க பொரக்கும்...

// பர்தா தேவையில்லை என்போர் பிகினி அல்லது டூ பீஸில் வாதிடுவதுதானே நேர்மையான விவாதமாகும்?//

நீங்க அருத்து போட்ட்ர வேண்டியதுதானே அடக்க முடியாத காமத்த அதுபோட்டு மூடி அடக்க முடியுமா??

சகிக்கல..ய்யா...

// யுனாநிமஸ் said...
டியர் வால்ஸ்,
ஹிந்துக்களின் அக்னிசாட்சி, தாலியை பற்றி, மஞ்சள் குங்குமம் மல்லிகைப்பூ இவை பற்றி என்றாவது எழுதியது உண்டா?

கிருத்துவர்களின் அப்பம், இயேசு சொன்னதற்கு மாறாக கிருத்துவர்களின் 'கடவுள் மூவர்' கோட்பாடு என இப்படி ஏதும் எழுதி இருக்கிறீர்களா?//

வால் பக்கத்த...மொதல்லேர்ந்து படியுங்க அடுத்தவன் செத்தா நமக்கென்ன. நம்ம பின்னாடி கை வைக்கும்போது பாத்துக்கலாம்னு புலியம்பழ்ம் துன்னுகினு இருந்தா இப்படித்தான் கேள்வி வரும்.. இனிமே தொடர்ண்டு படி ... உனக்கே புரியும்.




//பிரச்னை குர்ஆனில் இல்லை. நம்மிடம்தான்.//


Sujaathaa's fan said...
கூடவே மத்த மத சம்பண்ட பட்ட நூல்கலையும் சேர்த்துகொள்ளவும்..

A Common Man for Indian Peace said...

{{{{in Britain, the whole people have decided that the issue should be left to Muslim women. Let them take it if they like it. If not, let them fight against it.}}}} -- They are the real human beings who are to be followed by the world. They have showed the world to understand the so called term here - 'unity in diversity'. Let us all follow their decision and put a full stop to this debate.

செங்கொடி said...

மெய்தான், எங்கே இவர்களால் பதில் சொல்ல முடியாமல் போகுமோ அங்கெல்லாம் புனித நூல் தொடங்கி பல ஆயுதங்களை வரிசையாக கொண்டுவருவார்கள். ஆனால் பதில் மட்டும் கிடைக்காது.

தோழமையுடன்
செங்கொடி.
www.senkodi.wordpress.com

Anonymous said...

வால் நீ டிலீட் பண்ணல? வெட்கம் இல்லாம் பொய் சொல்லாத்.. நான் போஸ்ட் பண்ணின கொமன்ட் டிலீட் ப்ண்ணப்பட்டது. ஆதாரம் வேணுமா? ஸ்கிரீன் சொட் வெச்சிருக்கேன். எனக்கு நீ இப்படி பண்ணுவே என்று டவுட் இருந்துச்சு. தருமி ஒரு கொமன்ட் போட்டு அத அவனே டிலீட் பண்ணல? அதுக்கு பிறகு நீ டிலீட் பண்ணல? ஸ்கிரீன் சொட் பப்ளிஸ் பண்ணினா ப்லொக் எழுதறதயே நிறுத்துவையா?

Anonymous said...

கும்மி, யாரு நல்லவன் யாரு கெட்டவன் என்று தீர்மானிக்கமுடியாததாலேயே ஹிஜாப் அணிகிறார்கள். ஹிஜாப் மாற்று மதத்தவர்களுக்கு முன் தான் அணிய வேண்டும் என்றா இங்கு சொல்கிறோம்? இது கூட விளங்காம வந்துட்டான் கும்மியடிக்க..

வால்பையன் said...

அனானி,

நேத்து நான் ஆபிஸ் பக்கமே வரல, நான் டெலிட் பண்னல, ஸ்கீரீன் ஷாட் கொடுங்க, நான் நிறுத்திகிறேன், நாடும், நாட்டு மக்களும் நல்லா இருக்கட்டும்,

இன்னொரு விசயம், யாரையும் மரியாதை குறைவா பேசாதிங்க! அதுவும் அனானியா வந்து!

Anonymous said...

send ur email.. to send screen shot

வால்பையன் said...

arunero@gmail.com

beer mohamed said...

வால் பையன் தன் வாலை சுருட்டி கொள்ள வேண்டும் தான், தாங்கள் வீட்டில் பெண்கள் யாரும் இல்லையா, இந்துக்களுக்கு தாலி எப்படி வேலியோ அப்படி தான் இஸ்ஸலாத்தில் அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு, இதை யாரும் கட்டாயபடுத்த வில்லை அவர்கள் மதம் சார்ந்த கலாச்சாரம் தான் அவர்கள் பயன்படுத்துகின்றனர், பர்தா என்பது பொதுவான உடை தான் அது எந்த நாடு என்பது இல்லை தான், வால்பையன் சீக்கீயர்களை பார்த்து நீங்கள் ஏன் தலைப்பாகை போடுகிறீர்கள் எண்று கேட்கட்டுமே, அப்படி பர்தா போடுவது அவருக்கு தவறு என தெரிந்தால் அவர் வீட்டு பெண்களை கேட்டு தெரிந்து கொள்ளட்டுமே எதற்க்கு இஸ்ஸலாத்தில் புகுந்து தேவையில்லாமல் கேள்வி ஏன் அதிக பின்னோட்டம் கிடைக்கும் என்றா

http://athiradenews.blogspot.com

வால்பையன் said...

உங்க பதிவுல பர்தா பத்தி பேசாம அடைச்சுகோங்கன்னு எழுதியிருந்திங்களே, அது ஹிட்ஸுக்கா!? இல்ல பட்ஸுக்கா!?

பூனூல், பர்தா, டர்பன் எல்லாமே பார்பனிய குறியீடுகள் தான், எந்த வித அடையாளங்களையும் நான் அதிலே சேர்க்கிறேன்!

நான் இஸ்லாத்துக்கு எதிரி அல்ல, கடவுளுக்கும், மதத்திற்கும் எதிரி!

Ashok D said...

//நான் இஸ்லாத்துக்கு எதிரி அல்ல, கடவுளுக்கும், மதத்திற்கும் எதிரி!//

இந்த வரிக்காகவே இனி வால் என் நண்பனே...
இப்படிக்கு
இஸ்லாம், புர்கா, என் வீட்டு பெண், உன் வீட்டு பெண் என்று பிரிக்க தெரியாத .. எல்லோரையும் மனிதராக பார்க்கும் மனிதர்கள் :)

A Man without TAIL said...

///நான் இஸ்லாத்துக்கு எதிரி அல்ல, கடவுளுக்கும், மதத்திற்கும் எதிரி!--வால்பையன் said...
January 15, 2010 9:58 PM/// செமக்காமடி. செமப்பெத்தல். இதுக்குத்தான் எல்லாரும் சொல்றாங்க வால்ஸ், கொஞ்சம் அடச்சுக்கங்கன்னு. மாட்டுப்பொங்கலும் அதுவுமா முழுத்தண்ணியில ஒரே மப்புல கண்டபடி உளறாதீங்க வால்ஸ். "எனக்கு எல்லா உணவையும் பிடிக்கும். ஆனா, டைஜஸ்டிவ் சிஸ்டமும் எக்ஸ்கிரீட்டறி சிஸ்டமும் தான் பிடிக்காது".---இதில் என்ன உளறல் இருக்கிறது என்று நாளை உங்களுக்கு போதை & ஹாங்ஓவர் தெளிந்தபின்னால் நிதானமாய் படித்து பதில் சொல்லவும்.

Rajan said...

//வால் பையன் தன் வாலை சுருட்டி கொள்ள வேண்டும்//

ரொம்ப நீளமா இருக்குன்னு சொல்றார் .... சுருட்டுனாலும் பிரயோஜனமில்ல !

Rajan said...

//இந்துக்களுக்கு தாலி எப்படி வேலியோ அப்படி தான் இஸ்ஸலாத்தில் அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு,//

இந்துக்களுக்கு தாலி அடமானம் வெக்கறதுக்கு தான் உதவும் .... பாதுகாப்புன்னு சொல்லமுடியாது ! அவசர ஆத்தரத்துக்குனு சொல்லலாம் ....

Rajan said...

//இதை யாரும் கட்டாயபடுத்த வில்லை அவர்கள் மதம் சார்ந்த கலாச்சாரம் தான் அவர்கள் பயன்படுத்துகின்றனர், பர்தா என்பது பொதுவான உடை தான் அது எந்த நாடு என்பது இல்லை தான்//

அப்பறம் ?

Rajan said...

// வால்பையன் சீக்கீயர்களை பார்த்து நீங்கள் ஏன் தலைப்பாகை போடுகிறீர்கள் எண்று கேட்கட்டுமே,//

கொண்ட ஊசி வெக்கறதுக்கு

Rajan said...

//எதற்க்கு இஸ்ஸலாத்தில் புகுந்து தேவையில்லாமல் கேள்வி ஏன் அதிக பின்னோட்டம் கிடைக்கும் என்றா//

அதுக்குள்ளே போயி எதுக்கு தல பூந்திங்க ?

Rajan said...

//முஸ்லிம்களை பற்றி மட்டுமே எழுதுவதால் உங்களை யாரும் இறை மறுப்பாளன் என்றோ நடுநிலையாளன் என்றோ சொல்லப்போவதில்லை. இஸ்லாமாபோபியாகாரன் என்றே சொல்வார்கள். அப்படியென்ன இஸ்லாம் மீது நாத்திகர்கள் உங்களுக்கெல்லாம் அவ்வளவு காண்டு?

காய்த்தமரமோ அது.... உங்களால் தினமும் கல்லடி படுகிறேதே?//

அடி படுதா ? அப்ப ஓகே ! ஸ்டாட் மீசிக் ......

Rajan said...

//கூட கூட கும்மி அடித்துக்கொண்டி இருக்கும் rajan RADHAMANALA N பல மாற்று மத நண்பர்கள் அன்று உங்களுக்கு சப்போர்ட் செய்தவர்கள் இன்றைக்கு காணோம். மிரட்டப்பட்டிருக்கலாம், அல்லது பயந்திருக்கலாம்//

யோவ் ! பொங்கல் லீவுல ஊருக்கு போயிருந்தா இந்த உப்புசம் பண்றீங்களே ,,,, இன்னு ரெண்டு நாள் போனா போட்டோவுக்கு மாலை போட்டுருவீங்களே!

மிரட்டப் படுவதா ? மேட்டர் என்னன்னா வேற மதத்துக் காரங்க கிட்ட வாதத்துக்கு போனா ஏதாவது பதில் சொல்ல டிரை பண்ணுவாங்க ! இவங்களுக்குதான் அதுவும் தெரியாதே ! தெரிஞ்சத செய்யறாங்க .... விடுங்க

இதுக்கு உங்கள கண்டா பயம்னு நெனச்சுகிட்டா நாங்க எதுல சிரிக்கரதுன்னு தெரியல

Anonymous said...

http://www.youtube.com/watch?v=tnIr8gxe3Rk&feature=player_embedded

மனிதன் என்ற விலங்கு said...

வால், நல்ல விஷயம். வாழ்த்துக்கள்.

கொஞ்சம் செக்குலரா கேள்வி கேட்போம்.....

இந்துகளுக்கு,
எதுக்கு பட்டை/மொட்டை/அபிசேகம்/அர்ச்சனை ?
கொஞ்சம் உபயோகமாக எதாச்சும் செய்ய கூடாதா?
திருவிழா/பண்டிகை என்றால் கயு வில் நின்று... முண்டி... தள்ளி..... சாமி பார்க்க தான் வேண்டுமா?
அஞ்சு ரூபா செலவு பண்ணி ஒரு நல்ல காபி குடிக்க மனசு வராது. ஆனால் கோயிலுக்கு போய் நூறு ரூபா போடுவான்(?). உங்க கையாலே வேற நல்ல காரியத்துக்கு அதை கொடுக்கலாமே.


இஸ்லாமியருக்கு,
புர்கா கட்டாய படுத்துவது ஏன்??
முகம் மூட சொல்வது (பர்தா) ஏன்??
ஆனா ஊனா என்ற பாத்வா ஏன்?
உங்களுக்கு மாற்றம் பிடிக்காதா ??
"மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது." யாரோ சொன்னது .. எங்கோ கேட்டேன்.. இங்கே சொல்லிட்டேன்.
மாறுங்க நண்பர்களே.

சீக்கியர்களுக்கு,
நம்ம பிரதமருக்கும் அணைத்து சீக்கிய மதத்தவருக்கும் .. எதற்கு தாடி / தலைப்பா.??

கிறித்தவர்களுக்கு,
எதுக்கு சண்டே காலையில் 'அல்லேலுயா' .. காலையில் காமெடி டைம் பார்க்கலாமே.
then... மதம் மாற்ற புரோக்கர்களுக்கு என்ன பேர் சொல்லி அழைக்கலாம்?


மனிதன் படைத்தது தான் கடவுள்.... தனது பயம் போக்க தன்னம்பிக்கை வளர்க்க கடவுள் நம்பிக்கை உதவியது.
இப்போ சிலருக்கு கடவுள் நல்ல தொழில். பலருக்கு கடமை. இன்னும் சிலருக்கு மான பிரச்னை...

Anonymous said...

ஒரு பெண்ணை கற்பழித்தால் அதற்க்கு 4 சாட்சி கேக்கும் மதம் எப்படடிபட்டதாய் இருக்கும் !!!

Anonymous said...

அடைக்க வேண்டிய ஓட்டைகள்.

இஸ்லாம் பற்றி அடிப்படை அறிவு இல்லாமல் இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.எல்லாவற்றையும் சுட்டிக்காட்ட நேரம் இல்லை,சில பின்வருமாறு.

//கூடவே வேதம் என்ற பெயரில் சில கட்டுபாடுகளையும் அனுப்பியிருக்கிறார், ஆனால் அதிலெல்லாம் பெண்களின் உடை பற்றி ஒன்றுமில்லை,\\

பைபிள் சொல்வதைப் பாப்போம் -

(பைபிள் - 1 கொரின்தியன்ஸ் 11 :6 )

"ஹிஜாப் அணிந்து கொள்ளாத பெண்,தனது தலை முடியையும் வெட்டிக் கொள்ளட்டும், ஆனால் தலை முடியை வெட்டிக் கொள்வதோ ,மொட்டை அடித்துக் கொள்வதோ பெண்ணுக்கு அவமானம் ஆனதால்,அவள் ஹிஜாபையே அணிந்து கொள்ளட்டும்."

**(For if a woman is not covered, let her also be shorn. But if it is shameful for a woman to be shorn or shaved, let her be covered.)**

**(If a woman will not wear a veil, let her also cut off her hair. But since it is a dishonor to a woman to have her hair cut off or her head shaved, let her wear a veil.)**

(Bible - 1 Corinthians 11:6 )

மேலும் நீங்கள் யாராவது, கிறிஸ்தவத் தேவாலயங்களுக்கு போனீர்களானால்,அங்குள்ள பெண் சந்நியாசிகளைப் பாருங்கள், அவர்கள் முஸ்லிம் பெண்களைப் போன்றே உடையணிந்து இருப்பதைக் காண்பீர்கள்.

இந்து வேதங்கள் சொல்வதைப் பாப்போம் -

“When Brahma has made you a woman, you should lower your gaze and should not look up. You should put your feet together and you should not reveal what the garment and the veil conceals.”
[Rig Veda Book no. 8 Hymn no. 33 V. no. 19]

“When Purshuram comes, Rama tells his wife Sita that “He is our elder, please lower your gaze, and put on the veil.
[Mahavir Charitra Act 2 Page 71]

இப்படி வேதங்களிலும்/ஆகமம்களிலும் ஹிஜாபைப் பற்றி இருந்தாலும் அதை அதிகம் நடை முறைப்படுத்துவது முஸ்லிம்கள் மட்டுமே. கொஞ்சமாவது ஆராய்ந்து எழுதுங்கள்.

வால்பையன் said...

ஆக மொத்தம் எல்லா மதமும் பெண்னடிமைதனத்தை தான் முன் வைக்கிறது என அமைதியின் தூதர் சொல்லிவிட்டார்!


"ஹிஜாப் அணிந்து கொள்ளாத பெண்,தனது தலை முடியையும் வெட்டிக் கொள்ளட்டும், ஆனால் தலை முடியை வெட்டிக் கொள்வதோ ,மொட்டை அடித்துக் கொள்வதோ பெண்ணுக்கு அவமானம் ஆனதால்,அவள் ஹிஜாபையே அணிந்து கொள்ளட்டும்."


மொட்டை அடிக்கனுமாமே!, ஏன் ஆண்களுக்கு மொத்தமாக நறுக்கி விட வேண்டும் என எந்த மத புத்தகத்திலும் எழுதவில்லை!

சரி, இஅவர் காட்டிருயிக்கும் பைபிள் பழைய ஏற்பாடு என தெரிகிறது, ஆதாமின் இரண்டு மகன்களில் ஒருவன் இன்னொருவனஒ கொன்று கடவுளின் கோபத்திற்கு ஆளாகி ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியேற்றப்படுகிறான், ஆனால் அடுத்து பைபிளில் அவனுக்கான தூணையை(மனைவியை) தீடி கொண்டான் என்றூ இருக்கிறது, அதெல்லாம் யார் படைச்சா? ஏன் இந்த முரண்பாடு பைபிளின் ஆரம்பத்திலேயே!

இவையெல்லாம் மத புத்தகங்கள் டுபாக்கூர் என்று தானே காட்டுகின்றன!

Naran said...

பெண்களின் நிலை இன்னமும் இழிவாகத்தான் இருக்கு.ஒங்களை போன்ற நிஜ பகுத்தறிவு வாதிகள்(கருணாநிதி வீரமணி போல அல்லாமல்) மூலம்தான் விடுதலை சாத்தியம்.தொடர்ந்து எழுதுங்கள்.

!

Blog Widget by LinkWithin