கமாக்கதைகள்!(இடம் மாறிய கால்) 1(69)

பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு அடிக்கும் காலிங் பெல் சத்தம் சுந்தருக்கு தொண்டைக்குள் கைவிட்டு எதையோ இழுப்பது போல் இருந்தது!, அகிலாவும் கிட்டதட்ட உறைந்தே போய் விட்டாள், ஊருக்கு போயிருக்கார் இன்னைக்கு வரமாட்டார்ன்னு சொன்னதால் தானே வந்தேன்! சே இப்படி மாட்டிகிட்டேனே, ஒரே அபார்ட்மெண்ட்ல இருந்துகிட்டு இனிமே எப்படி மூஞ்சிய பாத்துகிறது, எண்ணங்கள் தறிகெட்டு ஓடினாலும், உண்மையென்னவோ கதவில்லாத அறைக்குள் மாட்டி கொண்ட எலி தான்!

அகிலா தலை வழியாக நைட்டியை மாட்டி கொண்டிருந்தாள், இந்த பாழாப்போன உடம்புக்கு ஆசைபட்டு மானம் போகப்போகுதேன்னு நெற்றியில் அடித்து கொண்டான் சுந்தர், ஆரஞ்சு உதட்டில் விரல் வைத்து உஷ்ஷ்ஷ்ஷ் என்றாள்!, சுற்றும் முற்றும் ஒழிய இடம் தேடியவள் சட்டென்று முகம் மாறினாள், பால்கனியை கைகாட்டினாள், அதை ஒட்டி செல்லும் வேஸ்ட் வாட்டர் பைப் மூலமாக கீழே போகலாம்! ஆனால் அது வழியாக திருடர்கள் வரலாம் என்பதால் இடையில் எங்கேயும் ஆணி அடிக்காமல் சுத்தமான வழுக்கு கம்பம் போல் இருந்தது!

ஊருக்கு போயிருக்குற என் பொண்டாட்டிக்கு தெரிந்தால் என்ன ஆகும்! தலையில் அடித்து கொண்டு ஒரேடியாக போய்விடுவாள், இருக்குற மானமும் சுத்தமாக போய்விடும், ஒருவேளை அவள் இந்த மாதிரி சூழ்நிலையில் இருந்தாள் என்ன பண்ணுவாள், சே சே அவ அந்த மாதிரியெல்லாம் பண்ண்மாட்டாள், இப்படி நம்பி தானே இந்த ஆம்பளைங்க தப்பு பண்றோம், விரக்தியில் செத்து போகலாம் போல் இருந்தது சுந்தருக்கு, அகிலாவோ அவன் தலை மறந்த பின்னர் தான் கதவை திறக்க முடியும், அடுத்த பெல் சத்தமும் கேட்டது!



சுந்தர் கம்பியில் கால் வைத்து வெளிபுறம் வந்தான், பைப்பை இறுக பற்றியதும், பால்கனி கம்பியியிலிருந்து கையை எடுத்தான், அடுத்த நொடி சர்ர்ர்ர்ரென்று அவனது உடல்எடை பூமிக்கு துரோகம் செய்யாமல் அவனை கீழே இழுத்து சென்றது, பொத்தென்ற சத்தம் சுத்தமாக என்ன நடந்திருக்கும் என்று அகிலாவுக்கு உணர்த்தியது, கண்களை துடைத்தவாறு கதவின் தாழ்பாளை நீக்கினாள், வெளியே இரண்டு இளைஞர்கள்!

யார் நீங்க? என்றாள் அகிலா, இங்க பிரதீப்னு சாஃப்ட்வேர் இஞ்சினியர் குடியிருந்தாரே!, அகிலா முகம் சிவந்தது, பிரதீப்பா, அறிவு கெட்ட முண்டங்களா!, இது என்ன குடியிருக்குற வீடா இல்ல லாட்ஜாடா, நடுராத்தியில வந்து கதவை தட்டிட்டு பிரதீப் எங்கேனு எங்கிட்ட கேக்குற, இல்லய்ங்க என்ற சொல்ல வாயெடுத்த இளைஞர்களை பேசவிடவேயில்ல அகிலா!, போங்கடா அந்த தறுதல வீடு மேலயிருக்கு, தினம் ராத்திரியான குடிச்சிட்டு கூட்டமா சேர்ந்து ஆடவேண்டியது, உங்களை சொல்லி குத்தமில்லடா, இந்த செக்கரட்டரிய சொல்லனும், வாடகை வருதுன்னு மொட்டபசங்களை குடிவைக்கிறான் பாரு, நாளைக்கே இதுக்கு ஒரு முடிவு எடுக்குறேன்!
கோபத்தோடு படாரென்று கதவை சாத்தினாள் அகிலா!

86 வாங்கிகட்டி கொண்டது:

Kumky said...

அடாடாடா....

Kumky said...

அனுபவம் புதுமை” அவளிடம் கண்டேன்” அப்படீன்னு ஒரு பாட்டு கியாபகத்துக்கு வந்துட்டு..

அடி பலமோ..?

உண்மைத்தமிழன் said...

அடடா..

சும்மா நச்சுன்னு இருக்கு வாலு..!

அ.மு.செய்யது said...

//தினம் ராத்திரியான குடிச்சிட்டு கூட்டமா சேர்ந்து ஆடவேண்டியது,//

உண்மைய சொல்லுங்க....அகிலா வீட்டு கதவ தட்டினது நீங்க தான ??

( க‌தை வ‌டிவ‌ம் ந‌ல்லா இருக்கு !!! வ‌ள‌ர்க‌ வ‌ள‌ர்க‌ !! )

யுவகிருஷ்ணா said...

த பெஸ்ட் ஒன்!

அ.மு.செய்யது said...

//கும்க்கி said...
அனுபவம் புதுமை” அவளிடம் கண்டேன்” அப்படீன்னு ஒரு பாட்டு கியாபகத்துக்கு வந்துட்டு..

அடி பலமோ..?
//

ஓ இப்படியும் கேள்வி கேட்டிருக்கலாமோ ??

மொத்தத்துல உங்களயும் ஒரு கதை மாந்தராவே மக்கள் கற்பனை பண்ணி பாக்குறாய்ங்க !!

வெற்றி-[க்]-கதிரவன் said...

-:)

Arun Kumar said...

சூப்பரா இருக்கு

நிஜாம் கான் said...

அண்ணே! எங்கும் இதே மாதிரி இம்ச தான். பகல்ல இந்த சேல்ஸ் ரெப்புங்க தொல்லை. இப்படியிருந்தா நாங்கல்லாம் எப்படி பொழக்கிறது? கெரஹம் புடிச்சவனுங்க. நல்லா அனுபவிச்சி எழுதியிருக்கியண்ணேய்ய்ய்ய்!!!அருமை.

தமிழ் அமுதன் said...

கொக்கரக்கோ கும்மாங்கோ...!!!

வெண்பூ said...

நல்லா இருக்கு கதை.. ஈரம் படத்துல நந்தாவோட நண்பன் குடுக்குற லெக்சரோட பாதிப்பா?

Unknown said...

நல்லத்தான் இருக்கு, ஆனா முடிவு இன்னும் கொஞ்சம் வேற மாதிரி எழுதி இருக்கலாமோ..??

//.. நிஜாம் said...
நல்லா அனுபவிச்சி எழுதியிருக்கியண்ணேய்ய்ய்ய்!!!அருமை. ..//

தல இவுரு சொல்லுறது உண்மையா..??!!

Ashok D said...

நவீனகதை வடிவம் வாலுக்கு நன்றாகவே கைகூடியிருக்கிறது. வாழ்த்துக்கள்.

நிஜாம் கான் said...

//தல இவுரு சொல்லுறது உண்மையா..??!!//


ஆஹா! அடுத்த விவாதம் ஸ்டார்ட் ஆவப் போவுதா? அனுபவம் என்பது அந்தக் கதையோடு ஒன்றி நடையோடு எழுதுவது. இதுல இப்புடி ஒரு அர்த்தம் வேற இருக்கா? ஆள் வுடுங்க சாமி!

ஹேமா said...

வாலு,கதை இன்றைய வாழ்வின் இயல்பு நிலை.முடிவு இன்னும் நல்லாக் கொண்டு வந்திருக்கலாமோன்னு இருக்கு.

பீர் | Peer said...

கால் எங்க இடம் மாறுச்சு.. ஒருவேளை பைப்லையா இருக்குமோ?

பிரபாகர் said...

அருமைய இருக்கு வாலு....

பிரபாகர்.

மேவி... said...

அருமை .... நல்ல இருக்கு ... இன்னும் பிட் சேர்த்து இருக்கலாம்

உங்கள் ராட் மாதவ் said...

பின் நவீனத்துவ எழுத்தாளர் லிஸ்டுல உங்களையும் சேர்த்தாச்சுங்க.... :-)

அப்பாவி முரு said...

//வாடகை வருதுன்னு மொட்டபசங்களை குடிவைக்கிறான் பாரு, நாளைக்கே இதுக்கு ஒரு முடிவு எடுக்குறேன்//

மொட்டப் பசங்க என்ற வார்த்தைக்கு கடும் கண்டங்கள்....

VISA said...

கத சூப்பர். ethir kathai.....

இடம் மாறிய கால்.(I mean LEG)

இப்போ என்னோட கதை. இப்படி தான் ஒருத்தன் ஒரு வீட்டுக்கு போய் ஜல்சா பண்றான். அப்போ காலிங் பெல் அடிக்க தபு தபுன்னு தண்ணி பைப் வழியா இறங்குறான். கீழே விழுந்து பூ ஜாடியெல்லாம் உடஞ்சு ஒரே சவுண்டு. காலு மடங்கிடிச்சு. நிமிக்க முடியல வலிய பொறுத்துகிட்டு வெளிய வந்து அவனோட பைக் எடுத்துகிட்டு அவன் வீட்டுக்கு போய் கதவ தட்டினா பொண்டாட்டி கதவ திறக்கல. இரண்டு நிமிஷத்துல பின் பக்கமா பூ ஜாடியெல்லாம் உடையுற சத்தம் கேட்டுது.

VISA said...

//இன்னும் பிட் சேர்த்து இருக்கலாம்//

ஆமாப்பா குறஞ்ச பச்சம் ஒரு கிஸ் ஒரு ஸ்டிரிப் ஆட் பண்ணியிருக்கலாம்.:(

Prabhu said...

இதுதான் பின்நவீனத்துவமா?

அது சரி(18185106603874041862) said...

க்ளாஸ்!

அறிவிலி said...

கஷ்டம் மட்டும் எப்பவும் ஆம்பளைங்களுக்குதான்... பாவம்.

கலையரசன் said...

அது உண்மையான பைப்தானே தல?

Ungalranga said...

வுயுந்தவன் பூட்டானா? இர்க்கானா?

நீ செகண்ட் பார்ட் இன்னோரு தபா எழுதறதா இர்ந்தா இருந்தான்னு வெச்சிக்கோ..!

இல்லாங்காட்டி பூட்டான்னே சொல்லிக்கலாம்.

எப்பூடி என் ஐடியா?!

kishore said...

yen ippadi?

அக்னி பார்வை said...

Pefect

அப்துல்மாலிக் said...

Good Narration

swizram said...

//நல்லத்தான் இருக்கு, ஆனா முடிவு இன்னும் கொஞ்சம் வேற மாதிரி எழுதி இருக்கலாமோ..??//

ஐ ரீப்பீட்டு .....

@வாசு
//இப்போ என்னோட கதை. இப்படி தான் ஒருத்தன் ஒரு வீட்டுக்கு போய் ஜல்சா பண்றான். அப்போ காலிங் பெல் அடிக்க தபு தபுன்னு தண்ணி பைப் வழியா இறங்குறான். கீழே விழுந்து பூ ஜாடியெல்லாம் உடஞ்சு ஒரே சவுண்டு. காலு மடங்கிடிச்சு. நிமிக்க முடியல வலிய பொறுத்துகிட்டு வெளிய வந்து அவனோட பைக் எடுத்துகிட்டு அவன் வீட்டுக்கு போய் கதவ தட்டினா பொண்டாட்டி கதவ திறக்கல. இரண்டு நிமிஷத்துல பின் பக்கமா பூ ஜாடியெல்லாம் உடையுற சத்தம் கேட்டுது.//

இதுதான் வாழ்கை சக்கரமோ??!!!

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

எப்ப இருந்து இப்படி?
ஆனா அருமையாய் இருக்கு தல.

தலைப்பு தான் ஒன்னும் பிரியல

Unknown said...

பலமா அடிகிடி படலைதானே தலை

நான் said...

ம்ம்ம் மிக அழகாக கதை சொல்ல வருகிறது உங்களுக்கு...

மகேஷ் : ரசிகன் said...

அசத்தல் :)

Anonymous said...

பொதுவாக இப்படியான கதைகளை எழுதிறவங்க ஆபாசம் தூக்கலா எழுதுவாங்க. ஆனா நீங்க அழகா, சூப்பரா எழுதியிருக்கீங்க.

கிரி said...

அருண்! கலக்கல்

நீங்க பயன்படுத்தி இருக்கும் வார்த்தைகள் அருமை.. உதாரணம்.. பூமி இழுப்பது

சுரேகா.. said...

:)

அடடே..!

வடை போச்சே!!!

சூப்பர் தலைவா!
:))

மேவி... said...

என் பிளாக்யை வந்து பாருங்க

sarathy said...

Good...
Vaalu...

cheena (சீனா) said...

ம்ம்ம்ம்ம்ம் - கத நல்லா இருக்கு - ஆனா முடிவிலே என்ன சொல்ல வரே வாலு - வந்து போனவந்தான் ப்ரதீப்ப்பா

இளவட்டம் said...

mmm.. nalla irukku val.

Unknown said...

நல்லருக்கு வால்.

அகிலா சொல்லி "view mirror" மாட்ட சொல்லுங்க :D

உண்மையாவே இது போல நிறையா நடந்துகிட்டுத்தான் இருக்கு, தெரிந்தது கொஞ்சம், தெரியாதது பல மடங்கு.

Admin said...

என்னவோ நடக்குது ஒண்ணுமே புரியல்ல...

பித்தனின் வாக்கு said...

என்ன ஆச்சுண்ணா எதாது மருதம்,இந்து நேசன் பத்திரிக்கை கதா ஆசிரியர் ஆகிட்டிங்களா. இல்ல
படிச்சிங்களா?

மணிஜி said...

அவன் சவ அடக்கத்திற்கு அவள் போனாளா?

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

அருமை வால்

அடலேறு said...

ரசனை!!!

ஈரோடு கதிர் said...

நல்லாயிருக்கு

பரிசல்காரன் said...

//யுவகிருஷ்ணா said...

த பெஸ்ட் ஒன்!//

வேறென்ன சொல்ல?

யோ வொய்ஸ் (யோகா) said...

வால்ல்ல்ல்ல்ல்ல்ல்ல நல்லாயிருக்கு

கண்ணகி said...

நன்றி. வால். என் பதிவை பார்த்ததர்கு. உங்கள் பககத்து ஊர் அக்காதான். .. கமா. கதை நடை தேர்ந்த் எழுத்தள்ர் போல் உள்ள்து. அடிக்கடி வந்து பாருங்கள்.

Beski said...

தல... ஹி ஹி ஹி.
நல்லாயிருக்கு.

Bhuvanesh said...

ஹி ஹி.. எனகென்னமோ இது இடம் மாறிய வால் னு தோணுது..

//கமாக்கதைகள்!(இடம் மாறிய கால்) 1(69)"//

இந்த மாதிரி இன்னும் இருக்கா? இல்ல இத அப்படியே தொடர் கதையா எழுதப்போறீங்களா?

Bhuvanesh said...

ஹி ஹி.. எனகென்னமோ இது இடம் மாறிய வால் னு தோணுது..

//கமாக்கதைகள்!(இடம் மாறிய கால்) 1(69)"//

இந்த மாதிரி இன்னும் 68 இருக்கா? இல்ல இத அப்படியே தொடர் கதையா எழுதப்போறீங்களா?

Sanjai Gandhi said...

//அதை ஒட்டி செல்லும் வேஸ்ட் வாட்டர் பைப் மூலமாக கீழே போகலாம்! //

வேஸ்ட் வாட்டர் ட்ரீட்மெண்ட் ப்ளாண்டுக்கு ஒரு ஆர்டர் வாங்க தாங்கோ வால்@சுந்தர். :)

.. கதை இவ்ளோ தானா?

Sanjai Gandhi said...

//நல்லா அனுபவிச்சி எழுதியிருக்கியண்ணேய்ய்ய்ய்!!!அருமை.//
ஏன் நிஜாம் அவர் வயித்தெரிச்சலைக் கிளப்பறிங்க.. அதான் கதவை தட்டிட்டாங்களே.. :)

அமர பாரதி said...

கதை நல்லாருக்கு வால். முடிவு அருமை. ஆனா இன்னும் நல்லாயிருந்திருக்கலாமோ?

ஹேமா,
//வாலு,கதை இன்றைய வாழ்வின் இயல்பு நிலை.// அப்படியா????????

Nathanjagk said...

தலைப்பில இருக்கிற சுறுசுறு கதையில ​கொஞ்சம் கம்மிப்பா!!
இடம் மாறிய கால் என்றதும்... ஸ்ஸ்ஸ் என்று வந்தேன்; புஸ்ஸென்று முடிச்சிட்டீங்களே!!
இன்னும் ​கொஞ்சம் விர்ரிவா எழுதியிருக்கலாம்.

குசும்பன் said...

அ-புனைவா தல?:)))

Rajan said...

எது பண்ணாலும் ப்ளான் பண்ணி பண்ணனும்..... இல்லாட்டி இப்பிடித்தான்!!!!

தினேஷ் said...

தல ஈரத்தோட பாதிப்பா?

Suresh Kumar said...

aakaa கலக்கல்

லிங்காபுரம் சிவா said...

Kalakkal kaamak kathai

NILAMUKILAN said...

எல்லாரும் காம கதைகள் நு சொல்றாங்க. தலைப்புல கமா கதைகள் நு இருக்கு. அப்டின்னா தொடர் கதையா? இல்ல நீங்க ஸ்பெல்லிங் மிச்டகே பண்ணிடிங்களா? இல்ல நான் தான் மொதல்ல கண்டு புடிச்சேனா?

கதை நல்லா இருக்கு. கதவை தட்டி பிரதீப் வீடு இதுவா? அப்டின்னு கேக்கறதோட முடிச்சிருந்தா.. இன்னும் நச்சுனு இருந்திருக்கும்....

வாழ்த்துக்கள்.

Anbu said...

super anna...

மைனர் குஞ்சு said...

எப்பிடி கண்ணு எல்லாத்தையும் நேர்ல இருந்து பாத்தா மாதிரியே சொல்ற?

सुREஷ் कुMAர் said...

//
கமாக்கதைகள்!(இடம் மாறிய கால்)
//
அடாஅடாஅடா..டாடாடாடா..
டட்டடா..டா..டா..டா..

Ashok D said...

அதென்ன வால் நன்றியெல்லாம் போடமாட்றீங்க.. பிரபல பதிவர் ஆகிட்டா.. அப்படிதானா???


ஒருவேளை வேலை பளுவா??

அன்புடன் மலிக்கா said...

சீக்கிரம்வந்து எல்லாருக்கும் ஒரு நன்றின்னு சொல்லிவிடுங்கோ எனக்கும் சேர்த்து

சிவாஜி said...

இடம் மாறிய கால்!!!

தமிழ் ஆங்கிலம் இரண்டுக்கும் சேர்ந்த சிலேடையா???
Nice.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

, கதைதான் வாலு!

நன்று!

Unknown said...

யோவ் வாலு.... சுந்தருங்குற பேருல மாடியில இருந்து கீழ குதுச்சது நீதான.....??

Eswari said...

//
லவ்டேல் மேடி said..
யோவ் வாலு.... சுந்தருங்குற பேருல மாடியில இருந்து கீழ குதுச்சது நீதான.....??//

இதை இதை தான் எதிர்பார்த்தேன் Super question.

Eswari said...

ஆனாலும் நீங்க இப்படி குதிச்சாலும் Nice, Super சொல்லி பாராட்ட பலர் இருக்காங்க. So மெதுவா பொறுமையாவே குதிக்கலாம்.

ஊடகன் said...

அருமை தோழா........!

Anonymous said...

இன்னா தள எப்படி இறுக்கே ? கதை பராவாயிள்ள

சொள் அலகன்

ஊர்சுற்றி said...

கலக்கிட்டீங்க தல.

RAGUNATHAN said...

அட, தலைப்ப அவசரத்துல காம கதைனு படிச்சட்டேங்க.... :)


கதை நன்று :)

ஈ ரா said...

அய்யய்யோ,

இன்னாபா இது கொடுமை...?

வால்பையன் said...

நன்றி கும்க்கி
நன்றி உண்மைத்தமிழன்
நன்றி அ.மு.செய்யது
நன்றி யுவகிருஷ்ணா
நன்றி ஞானபித்தன்
நன்றி அருண்குமார்
நன்றி நிஜாம்
நன்றி ஜீவன்
நன்றி வெண்பூ
நன்றி பட்டிகாட்டான்
நன்றி அசோக்
நன்றி ஹேமா
நன்றி பீர்
நன்றி பிரபாகர்
நன்றி மேவி
நன்றி ராம் மாதவ்
நன்றி அப்பாவி முரு
நன்றி விசா
நன்றி பப்பு
நன்றி அதுசரி
நன்றி அறிவிலி
நன்றி கலையரசன்
நன்றி ரங்கன்
நன்றி கிஷோர்
நன்றி அக்னிப்பார்வை
நன்றி அபுஅச்ப்ஸர்
நன்றி ரசனைக்காரி
நன்றி பாலகுமாரன்
நன்றி குமாரசாமி
நன்றி கிறுக்கன்
நன்றி மகேஷ்
நன்றி அனானி
நன்றி கிரி
நன்றி சுரேகா
நன்றி சாரதி
நன்றி சீனா
நன்றி இளவட்டம்
நன்றி மஸ்தான்
நன்றி சந்ரு
நன்றி பித்தன்
நன்றி தண்டோரா
நன்றி கிறுக்கல் கிறுக்கன்
நன்றி அடலேறு
நன்றி கதிர்
நன்றி பரிசல்காரன்
நன்றி யோ வாய்ஸ்
நன்றி வாத்து கோழி
நன்றி எவனோ ஒருவன்
நன்றி புவனேஷ்
நன்றி சஞ்சய்
நன்றி அமரபாரதி
நன்றி ஜெகநாதன்
நன்றி குசும்பன்
நன்றி ராதாமணாளன்
நன்றி சூரியன்
நன்றி சுரேஷ்குமார்
நன்றி சிவா
நன்றி நிலாமுகிலன்
நன்றி அன்பு
நன்றி மைனர் குஞ்சு
நன்றி சுரேஷ்குமார்
நன்றி மலிக்கா
நன்றி சிவாஜி
நன்றி ஜோதிபாரதி
நன்றி மேடி
நன்றி ஈஸ்வரி
நன்றி ஊடகன்
நன்றி சொள் அலகன்
நன்றி ஊர் சுற்றி
நன்றி ரகுநாதன்
நன்றி ஈ ரா

மங்களூர் சிவா said...

சூப்பர்!

விழுந்தவன் செத்தானா பொழைச்சானா??

Asir said...

Kalakkal

கவிதை பூக்கள் பாலா said...

எல்லாம் சரி, ஏதும் உங்க அனுபவம் இல்லையே அருண் ,
சும்மா ......

ayyanan said...

kathai supper

Unknown said...

நல்ல நடை நல்ல கதை.... வளர்க

!

Blog Widget by LinkWithin