நடிகர்கள் உண்ணவிரதம் 2


சுந்தர் சி
இலங்கையில் ஒரு கதையுண்டு.  அது ஒரு காதல் கதை, ஒருநாள் ஒரு காதலர்கள் ஒரு நல்ல செய்தியோடு சந்திக்கிறார்கள், யார் முதலில் சொல்வது என்பதில் காதலன் முந்துகிறான். அவனது செய்தி சிங்கள ராணுவத்தை எதிர்த்து போரிட அழைப்பு வந்திருக்கிறது, கேட்டவுடன் காதலியின் கண்ணில் நீர், உனது செய்தி என்னவென்று கேட்கிறான். அவள் சொல்கிறாள்,அடிமை ஈழத்தில் காதலர்களாக இருப்பதை விட சுதந்திர ஈழத்தில் கல்லறைகளாக இருப்பேன் என்று


அடிக்கடி விளம்பர இடைவேளை கொஞ்சம் எரிச்சலாகத் தான் இருக்கிறது.
அதிலும் வரவிருக்கும் புதிய ஜேம்ஸ்பாண்ட் படத்தின் விளம்பரத்தை ஐம்பது தடவை பார்த்துவிட்டேன்.

விஜயகாந்த்
நடிகர் சங்கத்தில் மத்திய அரசையும்,மாநில அரசையும் கூடவே இலங்கை அரசையும் கண்டித்து பேசக்கூடாது என்று தடை விதித்து விட்டார்களாம். இருப்பினும் நான் எதிர்பார்த்ததை போலவே இந்த மேடையை பொதுகூட்ட மேடையாக பயன்படுத்தி விட்டார். பேச மட்டேன்,பேச மாட்டேன் என்று நிறையவே பேசினார்.
பேச்சின் முடிவில் மெழுகுவர்த்தி கொளுத்தும்போது கூடவே கார்த்திகும் கட்டிகொண்டது எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை.

நடிகர் சங்கத்து பேச்சை முடித்து விட்டு விஜயகாந்த் வெளியே கிளம்பினார்(அப்போ உண்ணாவிரதம்) அங்கே தடை இருந்ததால் அரசியல் பேச முடியவில்லை என்று கூறிவிட்டு இன்றைக்கு நடக்கும் அரசாங்கம் ஈழ பிரச்சனையை சரியாக அணுகவில்லை, என்றும் ம்ற்ற விசயங்களை திசை திருப்பவே இதை பயன்படுத்துவதாகவும் கூறினார்.

எஸ்.ஜெ.சூர்யா
இவர் பேசியது எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது.
எதற்க்காக இலங்கை அரசை கொஞ்சவெண்டும். அவர்களுக்கு இங்கேயே ஈழமதுரை ஒன்றை தொடங்குவோம். ஈழசேலம் ஒன்றை ஆரம்பிப்போம் என்றார். குடும்பத்துக்கு பத்து ரூபாய் கொடுத்தாலும் போதும், நம் சகோதரர்கள் இங்கே நிம்மதியாக வாழ்வார்கள், இது எனக்கும் சரியாகத் தான் படுகிறது

நடிகர்கள் மேடையில் பேசிகொண்டிருக்கும் போதே உள்ளே வரும் நடிகர்களிடம் பேட்டி எடுத்து அலும்பு செய்தது சன் தொலைக்காட்சி, அதான் மேடையில் பேச போகிறார்களே அதற்க்குள் என்ன அவசரம் என்று தெரியவில்லை.

நடிகர்களின் நன்கொடை அல்லாது கூடவே அவர்களின் ரசிகர்களும் நன்கொடை வழங்கியது, அவர்கள் மேல் கொஞ்சம் மரியாதை வர வைத்துள்ளது.




6 வாங்கிகட்டி கொண்டது:

தமிழ் அமுதன் said...

நண்பரே! மன்சூர் அலிகான் பேசுனத
அப்படியே போடுங்க!

(சைகைல பேசுனத சொல்லல)

வால்பையன் said...

அம்புட்டு வேகம் எனக்கு வராதே த்லைவா! இருந்தாலும் கொஞ்சம் பதிவு செய்திருக்கிறேன்.

Kumky said...

:((

வால்பையன் said...

ஏன் இந்த சோகம் கும்கி

Anonymous said...

நன்றி.

வால்பையன் said...

நன்றிக்கு நன்றி தூயா

!

Blog Widget by LinkWithin