ஜே.ஜே சில குறிப்புகள் பக்கம் 186


(ஜே.ஜே சில குறிப்புகள் புத்தகத்தில்) ஜே ஜே அவர்கள் அவரது டைரியில் 17.4.1749 அன்று எழுதியது

மனிதராசியில் ஒரு ஜீவனக்காவது சுயவாழ்வு இல்லை. சுய சார்பு வாழ்வு இல்லை. அடுத்தவன் மீது சாய்ந்து வாழ்கிறான். அடுத்தவன் மற்றொருவன் மீது, கணவன் மனைவி மீது. மனைவி குழந்தைகள் மீது. நண்பர்கள் மீது. அரசாங்கத்தின் மீது. தத்துவங்களின் மீது. ஓயாத சாய்வு. தன் காலை முற்றாக வெட்டி கொண்ட சாய்வு. இச்சாய்வுக்கு பெயர்களே உறவுகள். பிற உயிரினங்களுக்கு இந்த தீராத சாய்வு இல்லை.

புறாக்களுக்கு மனிதனை போல் அடிமைத்தனமான சாய்வு இல்லை. அவை இறக்கைகள் கொண்டவை. ஒருநாள் இவையும் நோயுற்றோ, விபத்தில் சிக்கியோ, வயோதிகம் கவிந்ததாலோ மரணத்தின் வாயில் விழும். வெளிக்கு தெரியாமல். சுவடு தெரியாமல், ஏதும் பரபரப்பின்றிஇவை மரணங்களில் ஒடுங்கும். ஆனால் இவற்றிற்கு வாழ்வே மரணம் அல்ல. மரணம் தான் மரணம். வாழ்வு சிறகடித்து வானில் பறக்கும் வாழ்வு. மனிதனோ கணங்த்தோறும் மரித்துகொண்டிருகிறான். மரணத்திற்கு பயந்து மரித்துகொண்டிருகிறான். உறவுகள் முற்றாக கசந்த பின்னும் தற்கொலை அச்சத்தை ஊட்டுகிறது அவனுக்கு. என்ன காரணத்திற்காக அவன் இங்கு புதைபட்டு கிடக்கிறான் என்பது அவனுக்கு இன்னும் சரிவரத் தெரியவில்லை. அவனுடைய பொறிகள் சந்கிலீயல் மண்ணுடன் பினைக்கபட்டுக் கிடக்கின்றன. தேனில் கால்கள் சிக்கிகொண்ட ஈ போல் அவன் அவஸ்தை படுகிறான். இந்தநிலையில் ஈக்களுக்கு தென் உணவல்ல. எழுந்து பறப்பதே அவற்றின் ஜீவ பிரச்சினை. அதற்காகத் தங்கள் முழு பலத்தையும் அவை திரட்டுகின்றன. ஆனால் காலிலோ திட்பத்தின் விலங்கு.

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin