அரசு பேருந்தும், இன்சூரன்ஸும்!

சொந்த பயன்பாட்டுக்கோ, பயணியர் பயன்பாட்டுக்கோ எந்த வாகனமாக இருந்தாலும் இன்சூரன்ஸ் கட்டிப்பாக கட்டியாக வேண்டும். இல்லையென்றால் அபராதம்.

இருசக்கர வாகனத்துக்கு இன்சூரன்ஸ் 1000 ரூபாய், இன்சூரன்ஸ் இல்லையென்றால் அபராதம் 1500. தேதி முடிந்து ஒரு வாரம் தான் ஆகியிருந்தாலும் காவலர் கறாராக இருப்பார். உங்களுக்கு எதாவது ஆச்சுன்னா வீட்டுக்கு எப்படி பணம் கிடைக்கும்? அக்கறை இல்லையா, கண்ணீர் இல்லையா, கடையடைப்பு இல்லைன்னான்னு.

விசயம் என்னான்னா

இந்த இன்சூரன்ஸ் அரசு பேருந்துகளுக்கும் பொருந்தும். விபத்து ஏற்பட்டாலோ, யாரேனும் மரணம் அடைந்தாலோ நிவாரண தொகை இன்சூரன்ஸ் நிறுவனம் கொடுத்துவிடும் ஆனால் தமிழ்நாட்டில் பல வருடங்களாகவே அரசு பேருந்து விபந்தில் சிக்கி அடிப்பட்டவர்கள், இறந்தவர்கள் பேருந்து நிறுவனம் நிவாரணம் வழங்குவது இல்லை. அரசை கேட்டால் அது தன்னாட்சி என்பார்கள். கவனிக்க மட்டும் ஒரு ஐ.ஏ.எஸ் போடுவார்கள்

எனக்கு நினைவு தெரிந்தே பல வருடங்களாக நீதிமன்றங்கள் நிவாரணம் அளிக்காத அரசு பேருந்தை ஜஸ்தி செய்ய தீர்ப்பு வழங்கியுள்ளது. நம் நாட்டு நீதி விசாரணையை பற்றி உங்களுக்கு தெரியும். நிலுவைகள் கிடக்கும் வழக்குகள் மட்டும் லட்சகணக்கில் உள்ளது. வழக்கு தொடந்தர்வரே செத்து போன வழக்கு ஆயிரகணக்கில் இருக்கும்.

இறந்தவர் குடும்பமும், ஊனமுற்றவர் குடும்பமும் வழக்குக்காக அலைய முடியாமல் விட்ட வழக்குகள் எத்தனை இருக்கும். ஏன் இந்த மெத்தன போக்கு. அப்படியே போக்குவரத்துதுறை இன்சூரன்ஸ் கட்டியிருந்தால் அவர்களுக்கு ஜஸ்தி ஆன பேருந்துகளை விட குறைவாக தான் செலவாகிருக்கும். ஏன் அரசு பேருந்துகளுக்கும் இன்சூரன்ஸ் கட்டாயம் என நீதி மன்றம் உத்திரவிட மறுக்கிறது.

பொதுநல வழக்கு ஒன்று போடலாமா?

1 வாங்கிகட்டி கொண்டது:

Unknown said...

லாமே!!!

!

Blog Widget by LinkWithin