கிறுக்கல்கள்

எல்லோருக்கும்
எதோ ஒரு காரணம்
கிடைத்து விடுகிறது
என்னை வெறுக்க
எனக்கு மட்டும்
எதோ மிச்சமிருக்கிறது
அது நீயாகத்தான்
இருக்கக்கூடும்


**


தொலைந்து போனேன்
என்பதற்கெல்லாம்
அர்த்தம் தேடாதீர்கள்
என்னை நான்
மறந்து போனேன்
என்பதையும்
அவ்வாறே சொல்லலாம்
அன்றொருநாள்
அவள் தொப்புள் குழியில்
தொலைந்த போது
யோசித்தது
 
**
 
தொலைந்து போவதற்கு
முந்தைய நொடி வரை
அனைத்தும் இருந்தது
அனைத்தையும் தொலைத்ததால்
தொலைந்து போனவன் ஆனேன்
 
**
 
இழப்பதற்கு
உயிர் மட்டுமே
மிச்சமிருக்கிறது
யாருக்கு
நிரூப்பிப்பது
என்பதில் தான்
குழப்பம்.
 

**

என் தோளிலிருந்து
மார்பு வரை
உன்னை குடியமர்த்த
எத்தனித்து விட்டேன்
வாடகையாய்
நொடிக்கொரு
முத்தம் கொடு
போதும்


**

அள்ளித்தெளிப்பதெல்லாம்
கோலம் ஆகா
கவிதையும் அவ்வாறே
அதற்கென்று ஒரு அமர்வும்
பேரிழப்பும் தேவைப்படுகிறது


**

சொல்லித்தான்
தெரியவேண்டுமா
என் வானுக்கு
நீ ஒருவளே
நிலவென்று


**

ஆணின் காதலைவிட
பெண்ணின் காதல்
நூறுமடங்கு அதிகம்
புரிந்து கொள்ள
கொஞ்சம் பிரிந்திருக்க
வேண்டும்.


**

புதிதாய் பேனா கொடுத்து
எழுதிப்பாரு கண்ணம்மா என்றால்
ஐ லவ் யூடா மாமா
என எழுதிக்கொடுக்கிறாள்
இப்பொழுது முத்தம்
நான் யாருக்கு தரவேண்டும்
பேனாவுக்கா
அவளுக்கா


**

காதல்
சாவிலிருந்தும்
மீட்கும்
போராடும் சக்தியை
கொடுக்கும்
நம்மை
தோண்டி எடுக்கும்
புதிதாய்
பிறக்க வைக்கும்


**

பட்டாம்பூச்சியின்
சிறகைப்போல்
என் மேனியெங்கும்
வண்ணம் பூசியிருக்கிறாள்
முத்தத்தடத்தில்
என் மொத்ததடமும்
மாறிவிட்டது!


**

நண்பனை போல்
தாங்கும் தோள்களையும்
தாயைப்போல்
பாச தலைகோதலையும்
மகளைப்போல்
அன்பு அதட்டல்களையும்
காதலியால் மட்டுமே
கொடுக்க முடிகிறது
யாதுமாகி என் வாழ்வில்
நிறைந்திருக்கிறாள்!


**     

   

3 வாங்கிகட்டி கொண்டது:

Gopikrishnan said...

super! :)

சாய்ரோஸ் said...

அனைத்து வரிகளுமே ரசிக்க வைத்தன... மிக மிக அருமையான காதல் எழுத்து...

Gaya3 said...

அருமை.... கொடுபதற்க்கு உயிர் மட்டுமே மிச்சமனபோதும் , அதை பெறுவதற்கு தகுதியான ஒருவர் தேவை....

!

Blog Widget by LinkWithin