புதிய சபாநாயகர்!

வாமு.கோமுவிடம் நண்பராகி பேசிக் கொண்டிருந்த பொழுது ஒருநாள் சொன்னார், இப்பகுதியில் அருந்ததியர் சமூகம் அதிகம் என்று, அப்படின்னா என்னான்னே எனக்கு தெரியாதுங்க என்றேன். பார்பனீயத்தின்(கவனிக்க-பார்பனீயம், பார்ப்பான் அல்ல) அடையாளம் தவிர்த்த மற்றவர்கள் பெரும்பாலும் சக மனிதராக தான் தெரிகிறார்கள், அதில் ஏன் பெரும்பாலும்னு பின்னாடி சொல்றேன்!

 பழைய சபாநாயகர் எதன் காரணமாகவோ!? ராஜினாமா செய்து புது சபாநாயகர் பொறுப்பேற்று இருக்கிறார், அவரும் அருந்ததியினர் சமூகமாம், சட்டசபையில் அவுங்க பேசியபொழுது தான் எனக்கே தெரிந்தது. பேசியவர்களில் புதிய தமிழகம் கட்சியையும், மனிதநேய மக்கள் கட்சியையும்(இது இஸ்லாம் கட்சி) விட்டுருவோம், இரண்டிலும் பெரும்பாலும் தாழ்த்தபட்டவர்களும் அல்லது முழுமையாகவே தாழ்த்தப்பட்டவர்களும் தான் உள்ளனர்.

 தி.மு.க என்ற கட்சி என்றைக்காவது ஒரு தொகுதியில் ஆதிக்க சாதியில்லாத சமூகத்தில் இருந்த ஒருவரை வேட்பாளாராக நிறுத்தியுள்ளதா?. சரி அது பழம் தின்னு கொட்டை போட்ட கட்சி. வெற்றிபெறும் வேட்பாளரை தான் நிறுத்தனும்னு நினைக்கும். தே.மு.தி.க வேட்பாளரை தேடிய கதை நமக்கு தெரியாதா?. இதை விட கொடுமை தமிழகத்தில் இன்று நடந்து கொண்டிருப்பது.

 கொஞ்சநாளைக்கு முன்னர் தான் நாட்டைகாலி பண்ணும் (காடுவெட்டி) குரு, மாற்று சாதியில் கல்யாணம் பண்ணா வெட்டுங்க என்று மேடை போட்டு கத்தினான், இப்போ கவுண்டர்கள் பின்புறம் அழுக்காகாமல் பாதுகாக்கும் இன்னொரு பரதேசி கலப்பு மணத்தை எதிர்ப்போம்னு நாமக்கல்லில் கூட்டம் போடுறானாம், இதற்கு கெளரவகொலை என்ற பெயர் வேறு, கொலைக்கு கொலை தண்டனையாகாதுன்னு நாம பேசிகிட்டு இருக்கோம், கெளரவகொலை செய்யும் இந்த மனநோயாளிகளை நாட்டில் வைத்து கொண்டு இங்கே சமதர்ம ஆட்சி எங்கிருந்து நடத்துவது!

 பார்வேர்ட் ப்ளாக், கவுண்டர்கள் கட்சி, சரத்குமார் நடத்தும் நாடார்கள் கட்சி, தாழ்த்தபட்ட சமூகத்திலிருந்து வந்திருக்கும் சபாநாயகரை வரவேற்குதாம், அட பரதேசி நாய்களா உங்க வீட்டு பெண்ணையோ, பையனையோ ஒரு தாழ்த்தபட்ட சமூகத்தினருக்கு மணம் முடித்து வைப்பீர்களா? காதலித்தாலும் கூட. நாடார் சமூகமெல்லாம் ஒருகாலத்தில் ரவிக்கை அணியாமல் செல்ல வேண்டும் என்ற சட்டம் உயர்சாதியினரால் போடப் பட்டிருந்ததாம், ஆனா இன்னைக்கே அவனே கொஞ்சம் உயர்ந்து விட்டதால் போடும் ஆட்டம் என்ன? திருநெல்வேலி தாழ்த்தபட்ட மக்களிடம் கேட்டுபாருங்கள் தெரியும். நண்டு கொழுத்தா வலை தங்காது என்ற பழமொழி இந்த மாதிரி தீடிர்னு ஒருபடி ஏறுனுவங்களுக்குத்தான் போல, ஒருகாலத்தில் நம்தோழில் அமர்ந்து நம் காதில் தாண்டா ஏறுஓட்டி கொண்டிருந்தார்கள் என்பது மறந்து தொலைக்கும் மானங்கெட்ட ஜென்மங்கள்!


இந்த பணிதல் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?

இந்த பார்வேர்ட்ப்ளாக். பார்பணீயத்தின் தற்கால வாரிசுன்னே சொல்லலாம், பரமக்குடி துப்பாக்கிக்சூடு நடந்த போது நாய்கள் செத்ததற்கு ஏன் இவ்வளவு கூப்பாடு என ஃபேஸ்புக்கில் சிரித்த தமிழ்நாட்டு ஹிட்லர்கள், ராஜபக்ஸேக்கள். அந்த கட்சியில் ஒருஆள் எந்திரிச்சு ஆத்துறான் பாரு, யம்ம்மம்மாம்மா முடியல. இவனுங்க மூணு பேருமே ஏன் எதிர்கட்சி வரிசையில் உட்கார்ந்திருந்தானுங்கன்னு சத்தியமா எனக்கு தெரியல. அ.தி.மு.க காரன் போடும் ஜால்ராவை விட சத்தம் அதிகமாக இருந்தது. 


இறுதியாக சபாநாயகர் பேசினாரய்யா, அங்க தான் பெரிய காமெடியே. மத்த கட்சியினரை அழைக்கும் பொழுது பெயர் சொல்லி அழைத்தவர் இங்கே மாண்புமிகு அம்மா பேசுவார் என்றார்,( சபாநாயகருக்கு அம்மாவா, இல்ல நாலு குழந்தைங்க பெத்தவரா) இனி எங்கிருந்து சட்டசபை நடுநிலை பெறும், அதுமட்டுமா. தமிழகத்தின் விடிவெள்ளி, புரட்சித்தலைவரின் ஒரே வாரிசு(வாரிசுன்னா மக தானே, உறவே மாறுதேய்யா) அடுத்த பிரதமர் அதுவும் இந்திய தாழ்த்தபட்ட மக்கள் இவருக்கு லெட்டர் போட்டு எப்படியாவது அவரை பிரதமர் ஆக்கிருங்கன்னு கேட்டா மாதிரியே பேசினார்.

 தாழ்த்தபட்ட சமூகத்தினர் ஒருவர் நல்ல பதவியில் வருவது மிகவும் வரவேற்கதக்கது, ஆனால் உயர்சாதியாக இருந்தாலும் ஓ.பன்னீர்செல்வம் இருந்த மாதிரியே இன்னொரு அடிமை சபாநாயகராக வருவது எந்த அளவில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உதவியாக இருக்கும், என் உயிர் அம்மா போட்ட பிச்சை, அவுங்க வந்து தான் நான் பார்த்துக்கிறேன்னு எனக்கும் என் குடும்பத்தாருக்கும் ஆறுதல் சொன்னாங்க என்று வெளிப்படையாக சொன்ன சபாநாயகர். அவருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்தவர் பெயரை ஏன் சொல்லவில்லை!?. பணம் யாரு வேண்டுமானாலும் கொடுக்கலாம். ஏன் அந்த புரட்சிதலைவியே அறுவை சிகிச்சை செய்திருக்கலாமே!, அல்லது இவர் தான் நீங்களே பண்ணிருங்க, நீங்க தான் டாக்டர் பட்டம் வாங்கியிருக்கிங்களேன்னு சொல்லியிருக்களாமே!?

 ஒருமனதாக தேர்ந்தெடுத்ததின் காரணம் தனபால் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் என்பது தான் என்று தெரிந்தும், அம்மா போட்ட பிச்சை என்றே கடைசி வரை சொன்னவர் எங்கிருந்து மக்களின் நலனுக்காக எதிர்கட்சிகள் பேசுவதை ஏற்கவோ, ஆதரிக்கவோ அல்லது பேச நேரம் ஒதுக்கவோ போகிறார்?. மக்களின் நலன் காக்கும் அம்மாவின் பொற்கால ஆட்சி என்ற புகழாரம் வேற. எது பொற்கால ஆட்சி? பேருந்து கட்டணத்தை உயர்த்தியதும், மின்சார கட்டணத்தை உயர்த்தியதுமா? அப்படினா சந்திரகுப்தமெளரியர் நடத்தியது கற்கால ஆட்சியா?

 வரலாறு இனி நாசமாய் போகட்டும்!

5 வாங்கிகட்டி கொண்டது:

ரவி said...

எது எப்படியோ. சட்டசபை வைரவிழா காணும் இந்த நேரத்தில் இவர் அந்த பதவியை அலங்கரிப்பதில் எனக்கு மகிழ்ச்சியே...

விஜி said...

பதிவு எழுத நேரம் இருக்கிறது போன் அட்டெண்ட் பண்ண நேரம் இல்லை

பால.சரவணன் said...

நல்ல விதமா சொன்னீங்க தல

வெண்பூ said...

நான் இவ‌ருக்கு ஓட்டு போட‌லைன்னாலும், எங்க‌ள் ராசிபுர‌ம் எம் எல் ஏ ச‌பாநாய‌க‌ர் ஆகி இருக்கிறார் என்ற‌ அள‌வில் என‌க்கு ம‌கிழ்ச்சியே... இவ‌ரை எதிர்த்தி போட்டியிட்ட‌ வி பி துரைசாமி போன‌ ச‌ட்ட‌ச‌பையில் துணை ச‌பாநாய‌க‌ர். எங்க‌ ஊர் "ச‌பாநாய‌க‌ர்க‌ளின் தொகுதி" ஆகிடுச்சி :)

ராஜகுரு said...

அடிமைகளும் அரக்கர்களும் அப்பாவிகளும் விதிவிலக்கின்றி அனைத்துச் சாதிகளிலும் உள்ளனர்..மேலும் 'பதவி வரும்போது பணிவும் துணிவும் வரவேண்டும்' என்ற பாடல் வரிகளை பின்பற்றுவோர் இங்கு வெகு அரிது...அதனால் பொத்தாம்பொதுவாக அனைத்துச் சாதியினரையும் வளைத்துவளைத்துத் திட்டுவதற்குப்பதில் இயன்றவரை கல்வியை வலியுறுத்துங்கள்...அனைத்து அடிப்படை பிரச்சினைகளையும் தீர்க்கும் ஆற்றல் கல்விக்கு மட்டுமே ஓரளவு உள்ளது...இறுதியாக ஒன்று சொல்கிறேன்...மனிதன் கோழை ஆனால் மனிதர்கள் வீரர்கள்...அதுவே வன்முறையின் வித்து...

!

Blog Widget by LinkWithin