வாஞ்சிநாதனும், வெளியே தெரியும் குடுமியும்!

வாஞ்சிநாதனுக்கு முட்டு கொடுக்கும் பதிவுகள் எல்லாத்தையும் பார்த்திங்களா? அவங்க எல்லாருமே கிராஸ் பெல்டா தான் இருப்பாங்க. லாஜிக் ரொம்ப சிம்பிள். வாஞ்சிநாதனின் ஒரிஜினல் பேரு சங்கரன், அவனோட அப்பா பேரு ரகுபதி அய்யர்.

மிக வலுவான வாதத்தை எடுத்து வைத்த மாதிரியும், நாமெல்லாம் அவதூறு பரப்புவது மாதிரியும் அந்த பதிவுகளும், பின்னூட்டங்களும் இருக்கும். அவங்க அறிவுக்கு ஒரு சாம்பிள் சொல்றேன். நேற்று மத்திய அமைச்சர் ஹர்சவர்தன். அசைவம் சாப்பிட்டால் புற்றுநோய் வரும்னு கருத்து சொல்லியிருக்காரு. வேற எந்த நாட்டிலாவது இப்படி ஒரு கூமுட்டை கருத்தை கேட்டதுண்டா..

வாஞ்சிநாதன், ஆஷ் துரையை சுட்டுகொன்று தானும் தற்கொலை செய்துகொண்டான். அவனை சுதந்திர போராட்ட வீரராக கொண்டாடும் பார்பன கூட்டம், பகத்சிங் பற்றி பேசாது. ஏன்னா பகத்சிங் தன்னை நாத்திகன் என்று சொல்லிக்கொண்டவர். தைரியமான தூக்குமேடை ஏறியவர். பக்தாளுக்கு நாத்திகன்னா தான் பிடிக்காதே.



வாஞ்சிநாதன் தற்கொலை செய்துகொண்ட பொழுது அவனது சட்டை பையில் இருந்து ஒரு கடிதம் எடுக்கப்பட்டது. ஆனால் அந்த கடிதத்தில் பல பகுதிகள் மறைக்கப்பட்டன என்பதே உண்மை. ஏன்னா அப்ப காங்கிரஸை நடாத்திக்கொண்டிருந்ததும் கிராஸ் பெல்டுகள் தான். மேலோட்டமாக மாட்டுகறி தின்பவன் எப்படி நாட்டை ஆளலாம் அதனால் தான் கொன்றேன்னு இருக்கும் வெளியிடபட்ட செய்தியில்

பார்பனர்கள் வாதம், அந்த வழக்கு இந்தியாவில் தானே நடந்தது. வாஞ்சிநாதன் ஒடுக்கப்பட்டோர்க்கு எதிரான செயல்பட்டான் என்ற குறிப்புகள் இல்லையே என்று.

இக்கணம் பார்பனர்களுக்கும், காவி டவுசர்களுக்கும் ஒரு சவால் விடுறேன். குஜராத்தில் நடந்த போலி என்கவுண்டர் வழக்கின் ஆவணங்களை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வாங்கி தர முடியுமா? வாஞ்சி நாதன் பற்றிய என் கருத்துகளை வாபஸ் வாங்கிகிறேன். ஏன்னா அந்த ஆவணங்கள் போன வருசமே காணாமல் போனதாக குஜராத் காவல்துறை அறிவித்துவிட்டது. இதை தான் அதிகாரமையத்தின் ஆவண போக்குன்னு சொல்வாங்க.

குற்றாலத்தில் ஒடுக்கப்பட்டோர் குளிக்க தடை இருந்தது, ஒடுக்கப்பட்ட கர்ப்பிணி பெண் அக்ரஹாரத்தில் நுழைய தடை இருந்தது என்பதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாத வாதங்களாம். அது ஆஷ்துரைக்கு யோக்கியன் வேடம் போட நாம் இடும் கட்டுகதைகளாம்

சமகாலத்தில் ரெண்டு வருசம் இருக்கும்னு நினைக்கிறேன். ஒடுக்கப்பட்ட ஒருவரின் பிணத்தை ஊர் தெருவுக்குள் எடுத்துசெல்ல கூடாது என பிரச்சனை பண்ணி அது கோர்ட் வரைக்கும் போய், அப்படியும் விட மாட்டோம்னு சொல்லி காவல்துறை அந்த பிணத்தை எடுத்து செல்கிறது..

இவ்வளவு அறிவியல் வளர்ச்சி பெற்ற இந்த காலத்திலே இப்படி கூமுட்டைகள் இருக்கும் பொழுது அந்த காலத்தில் எவ்ளோ கொழப்பெடுத்து ஆடியிருப்பானுங்க பார்ப்பனர்கள். அவனுங்க சும்மா இருந்தாலும் போய் தொலையிறானுங்கன்னு விட்றலாம். ஆட்சி கையில் இருக்கு என்ற தைரியத்தில் வரலாற்றை திரிக்க பார்க்கும் போது தான் அவனுங்க மேல எரிச்சல் அதிகமாகுது.

2 வாங்கிகட்டி கொண்டது:

பொன்.பாரதிராஜா said...

அன்புள்ள வாலு...

ஒரு வரலாற்று உண்மைகளை சொல்லும்போது உங்களுக்கு தோன்றுவதை எழுதுவதை விட ஆதாரங்கள் தந்து எழுதுவது உதவியாக இருக்கும்...

வாஞ்சிநாதனின் கடிதத்தில் பாதி மறைக்கப் பட்டிருப்பதாகவும் அதற்கு காரணம் காங்கிரஸ் cross belts என்கிறீர்கள்..

ஆனால் ஆட்சி செய்து கொண்டிருந்தது British அரசு...

கடிதத்தை கைப்பற்றுவதும் அதை வெளியிடுவதும் யார் பொறுப்பு?

போலவே வாஞ்சிநாதனின் கடிதத்தில் மாட்டுக்கறி பற்றிய குறிப்புகள் இருந்தாலும் வ.உ.சிதம்பரனாரின் சுதேசி கப்பலுக்கு கொடுத்த தொல்லைகள் பற்றிய குறிப்புகளும் உள்ளன...

அக்ரகாரத்தில் தாழ்ந்த ஜாதி பெண்களை அனுமதிப்பது போன்ற செயல்களுக்கு ஒரு பிராமணன் துப்பாக்கி ஏந்தி சென்று அதிகாரத்தில் இருக்கும் ஒருவனை சுட்டுக் கொன்று விட்டு தற்கொலை செய்து கொள்வான் என்பது சிறிது கூட நம்பும்படியாக இல்லை.

வாஞ்சிநாதனின் குறிக்கோள் கண்டிப்பாக நாட்டுப்பற்று மட்டும்தான் என்பது என் கருது..

எல்லா பார்ப்பானும் கெட்டவன் அல்ல...எல்லா தலித்தும் நல்லவனும் அல்ல...

நான் பார்ப்பான் அல்ல...

https://en.wikipedia.org/wiki/Vanchinathan

வால்பையன் said...

//அக்ரகாரத்தில் தாழ்ந்த ஜாதி பெண்களை அனுமதிப்பது போன்ற செயல்களுக்கு ஒரு பிராமணன் துப்பாக்கி ஏந்தி சென்று அதிகாரத்தில் இருக்கும் ஒருவனை சுட்டுக் கொன்று விட்டு தற்கொலை செய்து கொள்வான் என்பது சிறிது கூட நம்பும்படியாக இல்லை.// தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்டவரின் பிணம் ஊருக்குள் எடுத்து செல்லக்கூடாதுன்னு ஒரு பிரச்சனை நடந்ததே. அதை நம்புறிங்களா?

காங்கிரஸ் வெள்ளைகாரன் கட்சி தான். இவர்கள் தத்து எடுத்துகிட்டாங்க

!

Blog Widget by LinkWithin