தோழிக்கு!.....

நலமாய் இருப்பதாக இருவருமே நடித்துக்கொண்டிருப்பதால் சம்பிரதாயங்கள் தவிர்த்து நேராகவே விசயத்துக்கு வந்து விடுகிறேன்.

கடித தொடர்பு எனக்கு மிகவும் பிடித்த ஒன்று, ஹாஸ்டலில் படிக்கும் காலத்தில் ஒன்று, இரண்டு என நம்பரிட்டு அப்பாவிற்கு ஒரே சமயத்தில் 5 கடிதம் வரை எழுதுவேன். அவசர உலகின் மாற்றமா அல்லது உடனுகுடன் பதில் தந்த குறுசெய்திகளின் அழுத்தமா தெரியவில்லை முன்னை போன்ற கடிதம் எழுதுவதே அலுப்பளிக்கும் செயலாகமாறிவிட்டது.

ஒரு மனிதருக்கு சகமனிதனே சலிப்புளிக்கும் காலத்தில் செயல்கள் சலிப்படைவது இயல்பு தானே, கடமைக்கு பேசுறோம், கடமைக்கு வேலை செய்யுறோம், கடமைக்கு காதலிக்கிறோம், கடமைக்கு குடும்பம் நடத்துறோம் என்றாகிவிட்டது இயந்திர உலகில்.

கவிதா சொர்ணவள்ளி என்ற தோழர்,  தோழர் குமரகுருபரனை காதலித்தார். குமரகுருபரன் சமீபத்தில் இறந்து விட்டார். ஆனால் இன்றும் தோழர் கவிதா சொர்ணவள்ளியின் நினைவுகூறுகள்களை பார்க்கும் பொழுது உன்னை போல் யாரும் காதலிக்க முடியாது என்ற வார்த்தை எனக்கு பொருத்தமா என சந்தேகம் வருகிறது. தோழர் குமரகுருபரன் மீது பொறாமை வருகிறது.  உயிரோடுயிருக்கும் போது... சும்மா சும்மா உங்கிட்டவே பேசிகிட்டு இருப்பாங்களா? உன்னையே பார்த்துகிட்டு இருந்தா சலிப்பா இருக்காதா? நீ என்ன சின்ன குழந்தையா என் முத்தானைய பிடிச்சிகிட்டே திரியிற என்று கூறும் காதலர்கள் வாழும் மத்தியில் இறந்த ஒருவரின் காதலுயுடன் அந்த நினைவுகளுடன் வாழும் தோழர் காதலின் உச்சமாகவே உயர்ந்து நிற்கிறார்.

சோக தருணங்களை நினைத்து மன அழுத்தம் ஏற்படுத்திக்கொள்ளாதே என நண்பர்கள் சொல்வார்கள், எனக்கோ சந்தோச தருணங்களை நினைத்தால் தான் விழிதிரை நீர்படலத்தில் மறைகிறது.

தனிமையே துணையாக வாழ உன் போல் மனதிடம் என்னிடம் இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். இனிமேல் அதில் காயப்பட எங்கே இடம் இருக்கிறது என்ற மனதில் தான் அந்த திடம் உருவாகும்.

என் வருத்தமெல்லாம் உன் காயத்திற்கு என்னால் மருத்தளிக்க முடியாமல் போய்விட்டதே என்று தான்....

2 வாங்கிகட்டி கொண்டது:

Tamizh Pudalva said...

அருமையான நினைவு,பகிர்வு

Unknown said...

பகுதி நேரத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?

இன்று இருக்கும் கால கட்டத்தில் வீட்டில் இரண்டு பெரும் வேளைக்கு போனால் கூட குடும்ப செலவு சமாளிக்க முடியவில்லை .அப்படி இருக்கும் பொழுது மேற்கொண்டு எப்படி சம்பாதிப்பது என்று பலரும் தேடி அலைந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

சரி வீட்டில் கம்ப்யூட்டர் இருக்கிறது இன்டர்நெட் இருக்கிறது ஆன்லைன் வேலை செய்து மாதம் ஒரு 2000 சம்பாதித்தால் கூட வாடகை கட்டிவிடலாம் என்று எண்ணி நிறைய பேர் ஆன்லைன் வேலை தேடி ஏமாந்து கடைசியாக இந்த ஆன்லைன் வேலை என்றாலே ஏமாற்று என்று நினைப்பவர்கள் மத்தியில் .எங்களிடம் உள்ள நண்பர்கள் எப்படி ஆன்லைன் மூலமாக பணம் எடுக்கிறார்கள் .சரியான வழிமுறைகள் இருந்தால் கண்டிப்பாக ஆன்லைன் மூலமாக பணம் சம்பாதிக்க முடியும் என்பதற்கு நாங்கள் ஒரு முன் உதாரணம் .இங்கு ஏமாறுவதற்கு வாய்ப்பு இல்லை ஏமாற்ற எங்களுக்கு மனதும் இல்லை .நானும் உங்களை போன்று ஆன்லைன் வேலைகளை தேடி தேடி அலைந்தவனில் நானும் ஒருவன் இப்பொழுது .நான் அனைவருக்கும் வேலை கொடுக்கும் அளவுக்குஉள்ளேன். நீங்கள் வேலை செய்தால் கண்டிப்பாக பணம் பெற முடியும் .நீங்கள் வேலை செய்யும் பணம் உங்களது ஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் இல் தான் உங்களது பணம் இருக்கும் .
அதனால் எந்த பயமும் தேவை இல்லை நீங்கள் உழைக்கும் பணம் எங்களுக்கு தேவை இல்லை .உங்கள் உழைப்பு வீண் போகாது. எங்களது நேரமும் நாங்கள் வீணாக விரும்பவில்லை .தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளலாம் பயன் பெறலாம்.
நன்றி வாழ்க வளர்க
மேலும் விவரங்களுக்கு

Our Office Address
Data In
No.28,Ullavan Complex,
Kulakarai Street,
Namakkal.
M.PraveenKumar MCA,
Managing Director.
Mobile : +91 9942673938
Email : mpraveenkumarjobsforall@gmail.com
Our Websites:
Datain
Mktyping

!

Blog Widget by LinkWithin