இறப்பை கொண்டாடும் சாதி வெறி!

பரமகுடி நிகழ்வின் போது நான் இணையம் பக்க வர இயலாததால் முழுமையான தகவல் எதுவும் கிடைக்கவில்லை, ஆளுங்கட்சிக்கு எதிராக பத்திரிக்கை செய்தியையும் எதிர்பார்க்க முடியாததால் இணையத்தில் தேடி கொண்டிருந்தேன். ஒருவாறாக அறிய கிடைத்தபோது பங்காளி ராஜன் ஆல் இன் ஆல் தளத்தில் இந்த பதிவை வெளியிட்டிருந்தார்!.

அச்சம்பவத்தின் நிகழ்வு, சூழல் ஆகியவற்றை பார்க்கும் பொழுது அது நிச்சயமாக சாதிக்கலவரம் இல்லை, காரணம் தாழ்த்தபட்ட சாதி என அழைக்கப்பட்டவர்கள் தவிர வேறு யாரும் உயிரிழக்கவில்லை. அது காவல்துறைக்கும், ஊர்வலம் வந்த மக்களுக்கும் நடந்த மறியல், மோதலாகி பின் கலவரமாகி கடைசியில் படுகொலையில் முடிந்திருக்கிறது, ஆனாலும் ஒரு சில ஆவணங்களை பார்க்கும்பொழுது இது காவல்துறையினரால் திட்டமிட்டு நடத்தபட்ட படுகொலையோ என சந்தேகிக்க வைக்கிறது!

சாமி என்ற படத்தில் சாதி ஊர்வலத்தை தடுக்க படத்தின் நாயகன் பொறுக்கி(அப்படி தான் அவரே சொல்லிக் கொள்வார்) விக்ரம். கல், கப்படாக்களை வைத்திருப்பது போல் இங்கே காவல் துறை கற்களை சேமித்து வைத்திருக்கிறது, எதற்காக இருக்கும்? ஊர்வலத்தின் போது ரோடு பழுதுபட்டால் அதை சீரமைக்கவா?. அமைதியாக ஊர்வலம் நடக்க வேண்டும், பிற சாதியினர் வன்முறையை தூண்டிவிடக்கூடாது என்பதற்காக தான் காவல்துறை அங்கே அழைக்கப்பட்டிருக்க வேண்டும், ஆனால் வன்முறையை தூண்டியதே காவல்துறையை போலத்தானே தெரிகிறது!.



இவ்விசயத்தில் சரியாக ஆராயப்பட்டு, படுகொலைக்கு காரணமாக இருந்த காவல்துறையை சார்த்த உயர் அதிகாரி வரைக்கும் விசாரிக்கபட்டு, தக்க தண்டனை பெற வேண்டும் என்பது ஒருபுறம் இருக்க!
இறந்து போன மனிதர்களுக்காக வருத்தப்படாமல் அதை கொண்டாடியிருக்கும் சாதி வெறி பிடித்த இழிபிறவிகளின் செயலை தான் இந்த பதிவில் உள்ள படத்தில் காண்கிறீர்கள், அத்தோடு நிற்காமல் அந்த பதிவின் பின்னூட்டத்திலும் தனது சாதி வெறியை காட்டிக்கொண்டிருக்கிறார்கள், தம்மை தேவர் சாதி என அழைத்து கொள்ளும் கொட்டையெடுத்த புலிகள்!

இந்த கொட்டையெடுத்த புலிகள் தலைவராக கொண்டாடும் முத்துராமலிங்கம் இவர்களுக்கு என்ன செய்தார் என்று பார்த்தால், நிறைய பொய் சொல்லி தம்மை பெரிய அப்பாடக்கராக காட்டி கொண்டிருந்தார் என்பது மட்டுமே தெரிகிறது.

முக்குலத்தோர் என அழைக்கப்படும் கள்ளர், மறவர், தேவர் அகமுடையார் தனிதனியா அல்லது ஒரே குழுமமா என சந்தேகமாக இருக்கிறது, தெரிந்தோ தெரியாமலோ எனக்கும் இந்த கேடுகெட்ட சாதிக்கும் தொடர்பு இருக்கிறது. என் தாத்தா பெயர் மாயன், பெரியப்பா பெயர் பெரிய கருப்பன். சிறு வயதிலேயெ நகரத்துக்கு பெயர்ந்து விட்டதாலும், சுற்றிலுமான விளைவுகளால் ஊறிய பகுத்தறிவாலும் என்னால் சாதி என்ற ஒன்றை ஏற்று கொள்ள முடியவில்லை. ஆனாலும் ஒன்றை மட்டும் தெரிந்து வைத்திருக்கிறேன், மற்ற சாதியினர் அடையாளமாக பயன்படுத்துவதை போல இந்த சாதி இல்லை, இங்கே வெறி தலைவிரித்தாடுகிறது, தாழ்த்தபட்டவன் இறப்பை கொண்டாடும் கேடுகெட்ட செயலாக!.

சுதத்திரத்திற்கு முன் கள்ளர்கள் என அழைக்கபட்டவர்கள் எங்கே குற்றம் நடந்தாலும் கைது செய்யபட்டார்கள், பின் குற்றபரம்பரை என அழைக்கப்பட்டு தினம் காவல்நிலையத்தில் ஒரு முறை ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதிக்கபட்டது, அதை எதிர்த்து உடைத்தவர் இந்த அப்பாடக்கர் முத்துராமலிங்கம் அல்ல. ஒரு ஆங்கிலேயர், அச்சூழ்நிலையில் சாதியை மறந்து இஸ்லாமியர்களாக மதம் மாறியவர்கள் பலர், அம்மாதிரி மாறிய முன்னோர்கள் வம்சம் வந்தவர்களில் ஒருவர் தான் இன்று புதுகை அப்துல்லா என்ற பெயரில் பதிவெழுதி கொண்டிருக்கும் அப்துல்லா!

இம்மானுவேல் சேகரன் மற்றும் முத்துராமலிங்கத்திற்குடனான பகை இப்போது ஏற்பட்டதல்ல, அவர்கள் இருவரும் சம காலத்தில் வாழ்ந்தவர்கள் தாம், இம்மானுவேல் தாழ்த்தபட்டவர்களின் தலைவன் ஆவதை ஆரம்பத்திலிருந்தே முத்துராமலிங்கம் விரும்பவில்லை என்பது அப்போதைய ஆவணங்கள் நமக்கு சொல்கின்றன. தலித்துகளையும் நாமே பார்த்து கொள்கிறேன், இம்மானுவேலை தலைவனாக ஏற்று கொள்ளமுடியாது என்றும், அவன் எப்படி எனக்கு சமமாக உட்காரலாம் என்றும் தமது சாதி திமிரை காட்டி பேசியவர் தான் முத்துராமலிங்கம்!

தலித்துகள் என்று மட்டுமல்ல, முன்னாள் முதல்வர் காமராஜரையும் சாணாப்பயல் என்றும், சோத்துக்கு இல்லாதவன் என்றும் பேசி தமது சாதி திமிரை காட்டியவர் தான் இந்த முத்துராமலிங்கம்.
அசுரனின் இந்த பதிவில் உங்களுக்கு மேலதிக தகவல்கள் கிடைக்கும்!


அச்சம்பவத்திற்கு பிறகு பத்ரி எழுதிய பதிவு ஒன்றில் மற்றொரு சாதி வெறியர் தமது பதிவை இணைத்திருந்தார், அதில் இம்மானுவேல் ஒரு பொம்பளபொறுக்கி என்ற ரேஞ்சுக்கு குற்றசாட்டுகள் இருந்தன மேலும் ஒரு இடத்தில்

//காமராஜ் நாடார் விதைத்த காங்கிரஸ்-பார்வர்ட் பிளாக் கட்சி மோதல், மறவர்-பள்ளர் சண்டை என பெயர் சூட்டப்பட்டு சாதி சண்டையாக உருவெடுத்து இன்று தேவர்-தலித் சண்டையாக வளர்ந்து நிற்கிறது. ஒரே மண்ணில் அதுவும் வானம் பார்த்த பூமியில் இன்றும் உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்து இருக்கின்ற இரு சமூகங்களின் வாழ்வு திசை மாறி, தொழிற்சாலைகள் எதுவும் இன்றி, கருவேல் மரம் வெட்டி பிழைப்பு நடத்தும் நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். //

காமராஜ் நாடாரம்! அவர் தான் இந்த சண்டைக்கே மூல காரணமாம், எப்படி திரிக்கிறார்கள் பாருங்கள், தமது ஆதர்ஷ நாயகன் கடவுளாக்கப்பட வேண்டும் என்றால் தன் மனைவி வேசி என சொல்லவும் தயங்க மாட்டார்கள் போல.

//ஒரு புகைப்படம் கூட இல்லாத சமீபத்தில் வாழ்ந்த ஒருவரை தேசியத் தலைவர் என்றும், இராணுவத்தில் பணியாற்றியவர் என்றும், மக்களுக்காக போராடி சிறை சென்றவர் என்றும், பலமுறை போராட்டங்கள் நடத்தியவர் என்றும் கதை கட்டுவதை, புத்தகம் வெளியிடுவது, குருபூஜை கொண்டாடுவது, சமுதாய விடிவெள்ளி என்றழைப்பது, போராளி என்று பரப்புரை செய்வது, தேவர் ஐயாவின் அடைமொழிளிகளை இவருக்கு சூடி எதிர்ப்பு நிலைப்பாடு எடுப்பது போன்றவற்றை அறிவிற் சிறந்த சான்றோர் எங்ஙனம் எடுத்துக் கொள்வர்//

வரிசையா சொல்லிட்டு இன்னொனு சொல்றார் பாருங்க, தேவர் ஐயாவின் அடைமொழிகளாம், என்னமோ அந்த வார்த்தைகளோ அந்த முத்துராமலிங்கத்திற்காக தான் உருவாக்கபட்டது போல!

புத்தகம் வெளியிட்டார்கள், என்ன இருந்தது அதில், தேவர் சாதி அழிய வேண்டுமென்றா எழுதியிருந்தது, தாழ்த்தபட்டோர் எழ வேண்டுமென்று தானே இருந்தது, சமுதாய விடிவெள்ளி என்றழைத்தால் உன் வீட்டு சூரியன் காணாமல் போய் விடுமா என்ன?, என்ன ஒரு சாதி வெறி, தாம் ஒரு ஆதிக்க சாதி என்பதை மறைக்கக்கூட தெரியாத வெள்ளந்தி போல இந்த நண்பர், அநேகமாக பலமுறை மாற்றம் செய்து வெளியிட்டிருக்க வேண்டும், அதனால் தான் எதோ நடுநிலைவாதி போல் தம்மை அடையாளபடுத்தி கொள்ள அவர் முயச்சித்திருப்பது தெரிகிறது, ஆனாலும் பார்ப்பனியம் மறைய முடியா விசமாச்சே அய்யா!

இங்கே ஏன் பார்பனீயம் வந்தது!?

சாதிய கட்டமைப்பு, வர்ணாசிரம அடுக்கு எல்லாம் பார்பனீயத்தின் கொள்கைகள் தான். நிறவெறியை நாம் ரேஷிசம் என அழைப்பது போல் உயர்சாதி திமிரை பார்பனீயம் என்று அழைக்கிறோம். அதை முதன் முதல் பிராமணர்கள் கொண்டு வந்ததால் அவர்கள் பாப்பான் ஆனார்கள், உயர்சாதிய எண்ணம் இல்லாதவர்கள் பார்பனீயம் என்ற வார்த்தையை கேட்டு தம்மை தான் சொல்வது போல் நினைப்பதில்லை, மனதில் கொஞ்சமேனும் உயர்சாதிய திமிர் இருந்தாலும் உங்களால் தாங்கி கொள்ள முடியாது. தாம் விஷ்ணுவின் நெற்றியில் இருந்தவர்கள், பிறகு நெஞ்சிலுருந்து என வகைப்படுத்தி தம்மை மேல் சாதியாகவும் பின் வருபவனற்றை தமது அடிமை சாதியாகவும் கட்டமைத்து தமது வர்ணாசிரம சுவற்றை எழுப்பினான் பார்ப்ப்பனன்!

கீழே ஒரு தாழ்த்தபட்டவன் நிற்கிறான். அவன் தோளின் மேல், ஒரு மிகவும் பிற்படுத்தப்பட்டவன், அவன் தோளின் மேல் ஒரு பிற்படுத்தப்பட்டவன் இப்படி ஒவ்வொரு அடுக்காக அமைத்து உச்சாணி கொம்பில் தம்மை அமர்த்தி கொண்டதை தான் பார்பனீயம் என்கிறோம்!, இந்த சாதிய அடுக்கை உடைத்து விட்டால் அங்கே எப்படி இருக்கும் பார்பனீயம், தம்மை உயர்சாதியாக நினைத்து கொள்ளும் மூட,முட்டா தேவர் சாதியினர், அவர்கள் தோளில் அமர்ந்து ஒருவன் காதில் செய்து கொண்டிருக்கிறான் என்பதையே மறந்து விடுகிறார்கள்!

தே.மகன் படத்தில், ஸாரி சுருக்க சொன்னால் அர்த்தம் மாறுகிறது, தேவர்மகன் படத்தில் இன்னொரு சாதிவெறியர் சிவாஜி பேசுவது போல் ஒரு காட்சி.

”என்னய்யா பண்ணசொல்ற
போருக்கு கூப்பிட்டப்ப, வேல்கம்பையும், வீச்சருவாளையும் எடுத்துகிட்டு வெற்றிவேல், வீரவேல்னு போருக்கு போனவியக நம்ம பயலுக, இப்ப அதை கீழ போடச்சொன்னா எப்படி போடுவானுங்க?”

எப்படி தெரியுமா இருக்கு, எல்லையில் நிற்கும் ராணுவத்தினர் அதே துப்பாக்கியை கொண்டு வந்து ஊருக்குள் அனைவரும் போட்டு தள்ளிவிட்டு, பழகிடுச்சுங்க இப்ப கீழ போடச்சொன்னா எப்படின்னு கேக்க சொல்ற மாதிரி இருக்கு!

அடமுட்டாப்பதருகளா, இந்த சாதி உங்களுக்கு என்ன செய்தது, தமிழகம் விட்டு வேறு நாட்டிற்கு போய் நான் இந்த சாதி எனச்சொல், உன்னை மலத்திற்கு சமமாக தான் பார்ப்பான். அப்படிபட்ட சாதியை வைத்து எதை புடுங்கப்போகிறாய், உன்னையும் மற்றவர்கள் போல் தானே உன் அம்மா பெற்றாள். வாயில உன்னை வாந்தி எடுக்கலையே, என் எப்படி வந்தது இந்த உயர்சாதி திமிர்?

பகத்தறிவு ஒன்று தான் விலங்குகளிடமிருந்து மனிதனை வேறுபடுத்தி காட்டுவது, உண்மையில் நீங்களெல்லாம் மனிதர்கள் தானா?, உன் சாதி திமிர் இன்னும் எத்தனை உயிர்களை கொன்றுவிட்டு அடங்கும். இன்னும் நீ திருந்தவில்லை என்றால் உன்னையும் மனிதனாக நினைத்து இந்த பதிவிட்டதற்காக நான் வெட்கப்பட்டு கொள்கிறேன்!

228 வாங்கிகட்டி கொண்டது:

«Oldest   ‹Older   1 – 200 of 228   Newer›   Newest»
Alex said...

Superb article!

Alex said...

Superb article!

Rajan said...

முக்குலத்துக் கொட்டையெடுத்த புலிகளை இன்னமும் காணோம்!

மு.சரவணக்குமார் said...

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி பெங்களூரு நீதி மன்றத்தில் நேரில் ஆஜராவதை தவிர்க்க முதல்வர் இத்தகைய நாடகத்தை அரங்கேற்றுகிறாரோ என்னவோ!!, யார் கண்டது.

மு.சரவணக்குமார் said...

பரமக்குடியில் உள்ள எனது உறவினர் தந்த நேரடித் தகவல்களை வைத்துப் பார்க்கும் போது இப்படித்தான் தோன்றுகிறது.

தேவர் குருபூசையின் போது நடக்கும் மிக மோசமான அக்கிரமங்களை நேரில் பார்த்து வளர்ந்தவன் நான்....அப்போதெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த காவல்துறை இப்போது துப்பாக்கியை தூக்கியிருப்பது சந்தேகத்தையே கிளப்புகிறது.

சார்வாகன் said...

வணக்கம் சகோ,
இது நிச்சயமக் தவிர்க்க்ப் பட்டு இருக்க வேன்டிய பிரச்சினை.காவல் துறையின் நோக்கம்,செயல்கள் மிகவும் சந்தேகத்திற்கு உட்பட்டவை.

இதிலும் சிலர் மகிழ்ச்சி அடைகிறான் என்றால் அவனுடைய குணம் ம்னிதனுடையது அல்ல.இந்த குணம்தான் அவனுக்கு சாதி பெருமையாக இருக்கிறது போலும்.
அனைத்து குரு பூஜைகளுக்கும் தடை விதிக்க வேண்டும்.

மனிதனுக்கு சாதி,மத,இன‌ பெருமிதம் தேவையில்லை!!!!!!!!!!!

Sumi Sumaa said...

Super... keep it up... we are here to follow you......

ஜெயசீலன் said...

எனக்கென்னவோ சரவணக்குமார் சார் சொல்றது சரிதானோன்னு தோணுது... ஒரு விரிவான கட்டூரையை கொடுத்ததிற்காக நன்றி.

இனியா said...

Great blog!!!

இனியா said...

Great blog!!! Glad atleast some of our bloggers are raising their against this atrociy!

Pulavar Tharumi said...

ராணுவ உதாரணம் அருமை. ஆழ்ந்த சிந்தனையோடு எழுதப்பட்ட கட்டுரை.

புதுகை.அப்துல்லா said...

// முக்குலத்துக் கொட்டையெடுத்த புலிகளை இன்னமும் காணோம்!

//

ஏமாந்தவன், அப்பாவி இந்த மாதிரி எவனாவது இளச்சவாயன் மாட்டுனா அவனை ரெண்டு தட்டு தட்டிட்டு நாங்க வீரனுங்கன்னு சொல்றவனுங்க இங்க எப்படி வருவானுங்க :)))

புதுகை.அப்துல்லா said...

மத்த சாதிக்காரனுக்கு படிச்சா அறிவு வரும். இந்த முக்குலத்தோனுக்கு மட்டும் படிச்சா அறிவு இன்னும் மழுங்கி இன்னும் அதிகமா சாதி வெறி வரும். நல்லவேளை வால்பையன் நீங்க ரொம்பப் படிக்கலை :))

கோவி.கண்ணன் said...

// அவர்கள் தோளில் அமர்ந்து ஒருவன் காதில் செய்து கொண்டிருக்கிறான் என்பதையே மறந்து விடுகிறார்கள்!//

வரிக்கு வரி பட்டாசு. வெல்டன் வால்

Packirisamy N said...

excellent and much needed article.

Unknown said...

//காமராஜ் நாடாரம்! அவர் தான் இந்த சண்டைக்கே மூல காரணமாம், எப்படி திரிக்கிறார்கள் பாருங்கள், தமது ஆதர்ஷ நாயகன் கடவுளாக்கப்பட வேண்டும் என்றால் தன் மனைவி வேசி என சொல்லவும் தயங்க மாட்டார்கள் போல.//

தல, பொட்டுல அடிச்சிட்டீங்க.. சாதி வெறி படிச்சவங்ககிட்ட அதிகமா இருக்குறதுக்கு இதெல்லாம் சாட்சி.. மதுரைல நாம பாக்காததா?

Unknown said...

அருமையான் பதிவு.
வாழ்த்துக்கள்!

//பகத்தறிவு ஒன்று தான் விலங்குகளிடமிருந்து மனிதனை வேறுபடுத்தி காட்டுவது, உண்மையில் நீங்களெல்லாம் மனிதர்கள் தானா?, உன் சாதி திமிர் இன்னும் எத்தனை உயிர்களை கொன்றுவிட்டு அடங்கும். இன்னும் நீ திருந்தவில்லை என்றால் உன்னையும் மனிதனாக நினைத்து இந்த பதிவிட்டதற்காக நான் வெட்கப்பட்டு கொள்கிறேன்! //

யதார்த்தம் என்னான்னா, நீங்க வெட்கப்பட்டுதான் ஆகணும் வேற திருந்துற ஜென்மமா இவனுங்க...

Unknown said...

பின் தொடர...

குடுகுடுப்பை said...

பேஸ்புக்கில் இருக்கும் இந்த முக்குலத்து புலி அமைப்பை சேர்ந்த மூடர்கள் திருந்துவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு,மேலவலவு கலவரத்திற்கு பின்னர் நடத்த கேஸ்/பாதிப்பிற்கு பின்னர் மன வக்கிரம் இருந்தாலும் இயல்பு வாழ்க்கையின் பாதிப்பை உணர்ந்து திருந்தியிருந்தார்கள். இப்போது தொலை தூரத்தில் இருந்து தங்களின் முட்டாள்தனத்தையும் , மன வக்கிரத்தையும் வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார்கள்.

படித்த முக்குலத்தோன் இன்னும் அதிக சாதி வெறியோடு இருக்கிறான் என்ற அப்துல்லா கருத்தில் மாறுபடுகிறேன், முந்தைய கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு போன்றவர்களை மாடலாக கொண்டு செல்லாமல் மாங்காய் மடையன் சண்முகையா பாண்டியன் போன்ற மூடர்கள் செல்வதுதான் பிரச்சினை.

குடுகுடுப்பை said...

அடக்கி ஆள நினைத்தால் ஒரு நாள் அடங்கியவன் அடித்தே தீருவான். அதை அடக்கியவன் வாங்கியே தீரவேண்டும்.

நியோ / neo said...

kudos to your sharp analysis and "on your face" writing!

"thEvar" / mukkulathOr community is exposed once again as someone with Fascist outlooks in the tamil society.

It is imperative to note that this kind of caste hatred does not exist in the Northern TN even among Vanniyars and Dalits (atleast not in this scale and intensity).

The Kallar, Maravar and agamudaiyaar communities must be separated to avoid this big Mafia conglomeration of Mukkulathors.

The solution for this problem would have to start from that.

குடுகுடுப்பை said...

followup

உமர் | Umar said...

பிரிச்சு மேஞ்சிட்டீங்க தல.

SURYAJEEVA said...

கலக்கிட்டீங்க,

சொறியார் said...

அப்புறம் இந்த தலித்துகளின் பிரச்சனைக்கு தீர்வாக பெரியார் உள்ளிட்ட நாத்திகர்கள்(எப்படி இவர் நாத்திகர் என அழைக்கப்படலாம் என தெரியல) கிரிதுவனாக மாறினால் கூட அங்கும் மேல் சாதி(பிற்பட்ட சாதி மக்கள்)பாதிரியாராக முடியும்.ஆனால் ஒரு தலித் பாதிரியாராக இயலாது!அதனால் மத மாற்றம் தீர்வல்ல!!மத மருப்புதான் தீர்வு!பெரியார் ஒரு religious consultant அதாவது ஹிந்து மதம் சரியில்லை அதனால் நீங்கள் இஸ்லாத்தை தழுவுங்க க்ரிதுவதுக்கு போங்கன்னு சொல்றவரு எப்படி நாத்திகன் ஆக முடியும்?பிற்பட்ட மக்களை மட்டும் எழுச்சி அடைய வைத்த அரசியலை துவக்கி வைத்ததே பெரியார்தான்!!தலித்துகளுக்கு எதிராக கோபால கிருஷ்ணா நாய்டு அவர்களை கொளுத்தியபோது பொத்தி கொண்டு இருந்தார்!!ஆமா சாதி பற்று மாறுமா என்ன?

மனித புத்திரன் said...

நம்ம பெரியார் சாமி தென் மாவட்டங்களில் ஏனய்யா ஆலய நுழைவு போராட்டம் நடத்தல?ஏன்னா பார்ப்பனர்களை என்ன வேணும்னாலும் பேசலாம்!!ஆனால் தேவர் வன்னியர்களை தப்பா பேசுனா அறிவால்தான் பேசும் அதனால்தான் பெரியார் சாமி வைக்கத்தில் மட்டும் ஆலய நுழைவை பத்தோட பதினொன்னா செய்தார்!!இங்க செய்யல!!

Vadakkupatti Raamsami said...

தென் மாவட்டங்களில் தலித் மக்கள் கலவரம் செய்தார்களாம்!!ஏன் செய்தார்கள்?பிற்பட்ட மக்களின் தொடர் தீண்டாமை தொல்லைகளால் ஏற்பட்ட குமுறல் வன்முறையாக வெடித்துள்ளது !!தலித் மக்களை ஓரம்கட்டி பிற்பட்ட மக்களை மட்டும் எழுச்சி பெற செய்த திராவிட அரசியலால் வந்த விளைவு இது!இதை துவக்கி வைத்த பெருமை பெரியாரையே சாரும்!!இதை சொன்னா நம்ம மேல பாயுறாங்க!!யோவ உண்மையாதான் சொல்றேன்!
**********************************************************************************
ஒரு சின்ன சாம்பிள்.பெரியார் பேசியது:
தாழ்த்தப்பட்டவர்களை கொடுமைப்படுத்தினால் தாழ்த்தப்பட்டவர்கள் என்ன செய்ய
வேண்டும் என்று ஈவேரா கூறுகிறார் :-
‘‘உங்களை யாராவது கிராமவாசிகள் துன்புறுத்தினால், இழிவாய் நடத்தினால் எதிர்த்து நிற்க வேண்டும். முடியாவிட்டால் வேறு பட்டணங்களுக்குக் குடியேறிவிட வேண்டும். அங்கும் ஜீவனத்திற்கு மார்க்கமில்லாவிட்டால் இம்மாதிரியான கொடுமையான மதத்தை உதறித் தள்ளிவிட்டு சமத்துவமுள்ள மதத்திற்குப் போய்விட வேண்டும். அதுவும் முடியாவிட்டால் வெளிநாடுகளுக்காவது கூலிகளாய்ப் போய் உயிரையாவது விட வேண்டும். இம்மாதிரியான உறுதியான முறைகளைக் கையாளத் துணியவில்லையானால், உங்கள் மீது சுமத்தப்பட்ட இழிவு சுலபத்தில் ஒழியாது என்றே சொல்லுவேன்.’’ (குடியரசு 16-6-1929)
இதுதான் அவருடைய தீர்வு. இதில் கிராமவாசிகள் யார்? பிராமணர்களா? பிற்படுத்தப்பட்டவர்களா? கிராமவாசிகள் தொண்ணூற்றைந்து சதவீதம்பேர் பிற்படுத்தப்பட்டவர்கள்தானே? அவர்கள் தானே தாழ்த்தப்பட்டவர்களை கொடுமைப்படுத்துகிறார்கள்? அதை நேரடியாக சொல்லாமல் கிராமவாசிகள் என்ற அடைமொழி கொடுப்பது ஏன்? அவர்களை காப்பாற்றுவதற் காகத்தானே? இதே அந்த கிராமவாசியின் இடம் அக்ரஹாரமாக இருந்தால் பிராமணர்கள் என்றுதானே சொல்லியிருப்பார்? பின் ஏன் பிற்படுத்தப்பட்டவர்களை நேரடியாக சொல்லாமல் கிராமவாசிகள் என்று சொல்ல வேண்டும்?

ஏனென்றால் அவர்கள் தன் சமுதாயம் அல்லவா?

Vadakkupatti Raamsami said...

அதாவது பெரியாரு ஏன்னா சொல்றாருன்னா யாருன்ன தீண்டாமை செய்தா ஊற வுட்டு ஒடுங்கன்னு சொல்றாரு!!இவுரு அந்த பிற்பட்ட சாதி மக்களை எதிர்க்க மாட்டாராம்!!ஏன்னா சாதி பற்று!!

aotspr said...

அருமையான பதிவு.
தொடர்ந்து எழுதுங்கள்.

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

குடுகுடுப்பை said...

முட்டாள் தேவன்களின் மூடத்தனத்தில் பல அறிவு ஜீவி வெறியர்கள் குளிர்காய்கிறார்கள்.

ஆளவந்தான் said...

//
மத்த சாதிக்காரனுக்கு படிச்சா அறிவு வரும். இந்த முக்குலத்தோனுக்கு மட்டும் படிச்சா அறிவு இன்னும் மழுங்கி இன்னும் அதிகமா சாதி வெறி வரும்.
//
ஆமாண்ணே.. என்னா படிச்சு என்னத்த கிழிச்சானுவ.. I am proud to be a brahmin ‘னு அழகா இங்கிலீஷ்’ல சொல்ல தெரியலியே இவனுங்களுக்கு!

ஆளவந்தான் said...

ஃபாலோ அப்

வால்பையன் said...

இங்கே மைனஸ் ஓட்டு போட்டிருக்கும் இமலாதித்தன் ஏற்கனவே ஒருமுறை என்னிடம் அவரது சாதி திமிர் பற்றீ பேசி வாங்கி கட்டி கொண்டார், கொஞ்சநாளாக காணாமல் போயிருந்தவர் இப்பொழுது மைனஸ் ஓட்டுடன் தனது ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறார்!

அப்படியே அவர் கொட்டையெடுத்த புலியா இல்லையா என தனது கருத்துகள் மூலம் தெரிவு செய்தால் நலம்!

Thaniyan Pandian said...

அருமை தோழர் வாழ் பையன் அவர்களுக்கு,

உங்களின் உண்மையான பெயர் தெரியவில்லை. உங்களின் வீரியமான ஆனால் விவேகம் குறைந்த வார்ந்தைகளை நான் மதிக்கிறேன்.
நான் சமூக பற்றாளன் தான். அதில் மாறுபட்ட கருத்து இல்லை. நான், எனது தயார், சித்தப்பா, பெரியப்பா எனது சொந்த பந்தங்கள் சிறப்பாக இருக்க வேண்டும் என்று ஒரு தனி மனிதனாய் நான் நினைப்பதை குறை சொல்ல எந்த ஒரு வேசி மகனுக்கும் தகுதி கிடையாது. உரிமையும் கிடையாது. (நீங்கள் பயன்படுத்திய மொழியில் நானும் சொல்கிறேன். புரிதல் நன்றாக இருக்கும் என்பதால்) மற்ற எவனையும் சுரண்ட வேண்டிய அவசியம் எனக்கில்லை. இனியும் இருக்காது.

நான், எனது பெற்றோர்கள், உறவினர்கள், சுற்றத்தார், மொழி, நாடு, கண்டம் எல்லாம் இயற்கையானவை. மனிதனால் பல ஆயிரம் ஆண்டுகளாக கட்டி எழுப்பபட்டவை. அடிப்படையில் மதங்களும் மனிதனுக்கு அன்பைத் தான் போதிக்கின்றது. மொழியும், பழக்கவழக்கங்களும் மனிதனின் வளர்ச்சிப் படிநிலைகள் தான். நாத்திகமும் ஒரு கூறு தான். ஆனால் முழுமையானது அல்ல. அது கேள்விகள் மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கும் ஒரு அறிவியல் கூறு. அதில் முழுமை என்றுமே இருக்காது. பிரச்சனைகளை கூறு போட்டுகொண்டே முழுமை கொள்ளாமல் சில பல கூறுகளுக்கு குழப்பங்களை மட்டுமே தீர்வாக கொண்டிருக்கும். ஆனால் ஆன்மிகம் அன்பையும், அமைதியையும், எல்லோரையும் உயிர்களாக பாவிக்கும் தன்மையையும், தவறு செய்யும் மனிதனை பக்குவப்படுத்தும் அணிகலனாக இருக்க உதவும் மனிதனின் கண்டுபிடிப்பு தான். எந்த ஒரு மனிதனின் பண்பாட்டு கூறுகளும் வளர்ச்சிக்கூறுகளும் யாரையும் துன்புறுத்துவதை வலியுறுத்துவதில்லை.

பசும்பொன் தேவர் ஐயா பற்றி பலவாறு புனையப்பட்ட கதைகளுக்கு அவரது உண்மையான வாழ்வு ஒன்றே விடை அளிக்கும்.காமராஜ் நாடார் என்று சொல்லும் போது பொய் பெயர் கொண்ட வால்பையன் துள்ளிக் குதிக்கிறார். வரலாற்றின் மூலங்களை தூரத்திலிருந்தும் பார்க்காத நாத்திகத் தன்மை கொண்டவர் என்பதை வெளிப்படையாகவே சொல்லியுள்ளார். தன்னுடைய சாயல்குடி கூட்டம் தொடங்கி கடைசி கூட்டமான தமுக்கும் கூட்டம் வர தேசியத்தையும் தெய்வீகத்தையும் போற்றி வந்தவர் பசும்பொன் தேவர் ஐயா. எந்த ஒரு சூழ்நிலையிலும் நிலை பிறழாத வாழ்வுக்கு சொந்தக்காரர் அவர். வீரிய தமிழ் குடிக்கு சிறந்த எடுத்துக்காட்டு தேவர் ஐயா. மேலும் பல சொல்லலாம். கேளையும் கிண்டல்களும் ஒருபக்கம் சாபு மட்டுமே உள்ள இத்தளத்தில், எனது தளத்தில் உள்ள சில கட்டுரைகளை நடுநாயகமாக ஒற்றை சார்பு இல்லாமல் முழுமையாக படிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.



பலருக்கும் தெரியாத பசும்பொன் தேவர் ஐயாவின் நீதிமன்ற விளக்க உரை
http://pasumponayya.blogspot.com/2011/07/blog-post.html

பசும்பொன் பெருமகனார் மீது காமராஜ் நாடாருக்கு வெறுப்பு தோன்றக் காரணம்
http://pasumponayya.blogspot.com/2011/08/blog-post.html

குள்ளநரிக் கூட்டம் ரத்தம் குடிக்க ...
http://pasumponayya.blogspot.com/2011/08/blog-post_8664.html

தலித் மக்களுக்காக தேவர்
http://pasumponayya.blogspot.com/2011/08/blog-post_6607.html

நாத்திகம் பெயரில், புரட்சி என்ற பெயரில், பூசல்களை பெரிதுபடுத்தி தற்காலிக அரிப்பை சொரிந்து சுகம் கொள்ள வேண்டாம்.
நல்லவை நினைத்து, நல்லவை செய்து, நல்ல தலைமுறையை உருவாக்குங்கள்.

வாழ்க வளமுடன்!!!

Rajan said...

முதுகுளத்தூர் கலவரத்தின் போது, மஞ்சள் வேட்டிய மறவர்களெல்லாம் கட்டிட்டு சண்டைக்குப் போங்கன்னுதாம் முராலிங்கம்! எதுக்குன்னா தலித்துகளுக்கும் இவனுகளுக்கும் டிஃபரன்ஸ் தெரிய யூனிஃபார்மாம்! எனக்கென்ன டவுட்டுன்னா ஒடனே அத்தனை மஞ்ச வேட்டிக்கு எங்க போனாங்க? வெள்ள வேட்டிலயே கக்ஸ் போயி மஞ்சளாக்கி கிட்டானுகளா?

வால்பையன் said...

@ தனியன் பாண்டியன்!

என் பெயர் மட்டுமல்ல, எனது அலைபேசி எண் கூட எனது தளத்தில் பதிய பட்டிருக்கு, ஐந்து வருடமாக நான் இணையத்தில் இயங்கிம் கொண்டிருக்கிறேன், எனது அடையாளத்தில் உங்களுக்கு சந்தேகம் இருப்பின் நீங்கள் எவ்வளவு புதியவர் என அறிந்து கொள்ள முடிகிறது!


//பசும்பொன் தேவர் ஐயா பற்றி பலவாறு புனையப்பட்ட கதைகளுக்கு அவரது உண்மையான வாழ்வு ஒன்றே விடை அளிக்கும்.காமராஜ் நாடார் என்று சொல்லும் போது பொய் பெயர் கொண்ட வால்பையன் துள்ளிக் குதிக்கிறார். //

தேவர் ஐயா என்று அழைத்து காமராஜரை நாடார் என நிறுத்தி கொள்ளும் பொழுதே உங்களது சாதி பற்றும், தனிமனித துதியும் இருக்கிறது, பின் எவ்வாறு முத்துராமலிங்கத்தை பற்றிய உண்மையை உங்களால் ஏற்று கொள்ள முடியும்!?

இங்கே நாத்திகம் ஆத்திகம் பற்றி பேசவில்லை!

உன் சாதி திமிரினால் உன்னால் என்ன சாதிக்க முடிந்தது என்பதே என் கேள்வி!

இரா.ச.இமலாதித்தன் said...

//தம்மை தேவர் சாதி என அழைத்து கொள்ளும் கொட்டையெடுத்த புலிகள்!//

ஒன்னாப்பு ல இருந்து காலேஜ் வரையிலும் என்ன சாதின்னு கேட்டுகேட்டு தான் கோட்டா கொடுத்துட்டானுங்க... என்ன பண்றது... அதுலேர்ந்தே என் சாதியை சொல்லவேண்டி இருந்தது. இப்போவும் அதை பழக்கம்தான்.. தொட்டில் பழக்கம் மாதிரி தொற்றிக்கொண்டுவிட்டது. :)
தேவர் ன்னு நான் என் சாதியை சொல்வதால் நான் புலியல்ல... ஆனால் கொட்டைஎடுக்கல :)
உங்களை மாதிரியான சாகச மனிதன் இல்லைனாலும் சக மனிதன் தான்.

//முக்குலத்தோர் என அழைக்கப்படும் கள்ளர், மறவர், தேவர் தனிதனியா அல்லது ஒரே குழுமமா என சந்தேகமாக இருக்கிறது,//

ஒரு சின்னத்திருத்தம், கள்ளர்,மறவர்,அகமுடையார் - இந்த மூன்றையும் சேர்த்துதான் முக்குலத்தோர் ன்னு சொல்றாங்க.

//தெரிந்தோ தெரியாமலோ எனக்கும் இந்த கேடுகெட்ட சாதிக்கும் தொடர்பு இருக்கிறது.//

இந்த கேடுகெட்ட சாதியோடு தொடர்பு இருப்பதால், கொஞ்சம் சரியாவது பதிவுல எழுதுங்க... குறைந்த பட்சம் சாதி பெயரையாவது சரியா எழுதுங்க.அதுக்கு அப்பறம் தே.சாதியோ/ மு.சாதின்னோ அடைமொழிகள் போட்டுங்குங்க :)

//மூட,முட்டா தேவர் சாதியினர், அவர்கள் தோளில் அமர்ந்து ஒருவன் காதில் செய்து கொண்டிருக்கிறான் என்பதையே மறந்து விடுகிறார்கள்!

தே.மகன் படத்தில், ஸாரி சுருக்க சொன்னால் அர்த்தம் மாறுகிறது, //

அட! என்ன மாதிரியான தத்துவம்...? அருமை... இன்னும் புதுப்புது அடைமொழிகளை கொடுங்க.. இதையே கேட்டு புழிச்சு போய்டுச்சு...

//அச்சூழ்நிலையில் சாதியை மறந்து இஸ்லாமியர்களாக மதம் மாறியவர்கள் பலர், அம்மாதிரி மாறிய முன்னோர்கள் வம்சம் வந்தவர்களில் ஒருவர் தான் இன்று புதுகை அப்துல்லா என்ற பெயரில் பதிவெழுதி கொண்டிருக்கும் அப்துல்லா!//

புதுகை அப்துல்லா அண்ணே! நீங்களும் இதே தே.வம்சம் தானா? :) அதான் ஒருநாள் முஸ்லிம் அனைவரும் இந்துக்கள் ன்னு சு.சாமி சொன்னபோது பொங்கி இருந்தீங்களா...? குற்ற பரம்பரை/கைரேகை சட்டத்தை எதிர்த்து ஆங்கிலேயன் கிட்டயும் கொஞ்சம், உங்க முன்னோர்கள் பொங்கி இருந்தால் இப்படி மதம் மாறிக்கிற வேண்டிய அவசியம் இருந்திருக்காது :)
பயந்தவன் வாழ்ந்ததில்லை ன்னு சொல்லுவாங்க: ) நீங்க பயந்ததால் இன்னைக்கு நல்லா வாழ்றீங்க :)
கூட்டி கழிச்சு பார்த்தால் நீங்களும் ஒருவகையில் எனக்கு பங்காளி முறை தான் :)

//சுதத்திரத்திற்கு முன் கள்ளர்கள் என அழைக்கபட்டவர்கள் எங்கே குற்றம் நடந்தாலும் கைது செய்யபட்டார்கள், பின் குற்றபரம்பரை என அழைக்கப்பட்டு தினம் காவல்நிலையத்தில் ஒரு முறை ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதிக்கபட்டது, அதை எதிர்த்து உடைத்தவர் இந்த அப்பாடக்கர் முத்துராமலிங்கம் அல்ல. ஒரு ஆங்கிலேயர், //

ஆங்கிலேயர் தான் என்பதற்கு ஆதாரம் கொடுங்களேன்... நானும் தெரிஞ்சிக்கிறேன்... அதுக்கு அப்பறம் அப்பாடக்கர் யாருன்னு தெரிஞ்சிக்க வாய்ப்பு வரும். :)

//பகத்தறிவு ஒன்று தான் விலங்குகளிடமிருந்து மனிதனை வேறுபடுத்தி காட்டுவது, உண்மையில் நீங்களெல்லாம் மனிதர்கள் தானா?//

பகுத்தறிவு என்னமோ பார்ப்பனியத்தை எதிர்த்து தலித்தியம் பேசுற அறிவுஜீவிகளுக்கு மட்டும்தான் இருக்குன்னு நீங்க நினைத்தால், அதற்க்கெல்லாம் என்னமாதிரியான முட்டா சாதி தேவர் மகன் அல்லது தே.மகனுக்கு/சாதிவெறியனுக்கு விளக்கம் கொடுக்குற அறிவு எனக்கில்ல. :)

//உன்னையும் மனிதனாக நினைத்து இந்த பதிவிட்டதற்காக நான் வெட்கப்பட்டு கொள்கிறேன்! //

நான் வெட்கப்படுகிறேன் :) உங்களது பதிவிற்கும் கமென்ட் சொல்வதை நினைத்து :))

டிஸ்கி:
உங்களை மாதிரியான "அறிவுஜீவிகள்" புனிதமான வாரத்தைகளோடு அர்ச்சிக்க தொடங்கினால், நேரம் கிடைக்கும்போது, இவர்கள் எல்லாம் மனிதர்களா என்று வெட்கப்பட்டுகொண்டே என்னிடம் இருந்து பதில் வரலாம். :))

வால்பையன் said...

//நாத்திகம் பெயரில், புரட்சி என்ற பெயரில், பூசல்களை பெரிதுபடுத்தி தற்காலிக அரிப்பை சொரிந்து சுகம் கொள்ள வேண்டாம்.
நல்லவை நினைத்து, நல்லவை செய்து, நல்ல தலைமுறையை உருவாக்குங்கள்.//

படுகொலைகளுக்கு கொக்கரித்து விட்டு எம்மை பார்த்து சொரிந்து கொள்ள வேண்டாம் என்கிறீர், உம்மனதில் என்ன பெரிய அப்பாடக்கர் என்ற நினைப்பா?

நல்லவை செய்து என்றால் என்ன?
தாழ்த்தபட்டவை எல்லாம் கொல்லுவதா?
என்ன தான் வேசம் போட்டாலும் உம்மால் ஆதிக்க சாதி திமிரை மறைக்க முடியவில்லை என்பதை தான் பதிவிலேயே சொல்லிவிட்டேனே!

Bleachingpowder said...

அடச்சே ஓட்ட மாத்தி குத்தட்டேன்னு நினைக்குறேன் தல. வெல்கம் பேக் ;)

இரா.ச.இமலாதித்தன் said...

//இங்கே மைனஸ் ஓட்டு போட்டிருக்கும் இமலாதித்தன் ஏற்கனவே ஒருமுறை என்னிடம் அவரது சாதி திமிர் பற்றீ பேசி வாங்கி கட்டி கொண்டார், கொஞ்சநாளாக காணாமல் போயிருந்தவர் இப்பொழுது மைனஸ் ஓட்டுடன் தனது ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறார்!

அப்படியே அவர் கொட்டையெடுத்த புலியா இல்லையா என தனது கருத்துகள் மூலம் தெரிவு செய்தால் நலம்!//

என்னத்த வாங்கி கட்டிகிட்டேன் ன்னு கொஞ்சம் தெளிவா சொல்லுங்க அண்ணே! சும்மா வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லகூடாது... நீங்க தான் என்கிட்டே "இனிமேல் உங்களை எத்தனை பேரு கட்டம் கட்ட போறாங்க பாருங்க இமலாதித்தன்" ன்னு சொன்னீங்க... இதுவரைக்கும் ஒரு கட்டம் கூட காணும்... :)
உங்களுக்காக தான் ஒரு தனி பதிவையே என் வலைத்தளத்தில் போட்டேன் :)
காணமல் எல்லாம் போகல அண்ணே! நம்ம ஆட்டம் வழக்கம்போல் போயிகிட்டே இருக்கு.... பூனை கண்ணை மூடிகிட்டா உலகம் இருண்டுடாது ன்னு உங்களுக்கு தெரியாதாதா அண்ணே :))

வால்பையன் said...

@ இமலாதித்தன்

குற்ற பரம்பரை முறையை ஒழித்தது முத்துராமலிங்கம் தான் என நீங்கள் நினைக்கீறீர்களா?

அதற்கான சுட்டியை தேடி கொண்டிருக்கிறேன், ஒழித்தது ஆங்கிலேயன் தான் என்றால் நீங்கள் கொட்டை எடுத்த புலி என்பதை ஒப்பு கொள்கிறீர்களா?

கள்ளன், மறவன் மற்றும் இதர புண்ணாக்குகளை பற்றி தெரிய வேண்டிய அவசியமெனக்கில்லை, நான் சாதியை முற்றிலுமாக வெறுப்பவன்.

உங்கள் சாதிய பற்றையும், திமிரையும் ஏற்கனவே பார்த்தவன் என்பதால் இது ஒன்றும் எனக்கு புதிதல்லவே, நியாபகம் இருக்கா அந்த சாட் உரையாடல்கள், அப்போதே மூக்கடைப்பட்டு போனீரே!

Bleachingpowder said...

//பொய் பெயர் கொண்ட வால்பையன் துள்ளிக் குதிக்கிறார். //

சார்..பத்து வருசமா கோமாவுல இருந்து வந்திருக்காங்க போல

Rajan said...

முத்து ராமலிங்கத்தின் துதிபாடுவது உங்களது சொந்த விருப்பம். யார் வேண்டுமானாலும் எந்த சாக்கடையை வேண்டாலும் கோவிலென்று சொல்லலாம் அது தனிப்பட்ட புரிதல்.எதிர் சாதியினர் என்ற ஒரே காரணத்துக்காக முக்குலத்துப்புலிகள் தலித்கள் சிலரது துர்மரணத்தைக் கொக்கரித்துக் கொண்டாடுவதை என்னவென்று சொல்கிறீர்கள்?

வால்பையன் said...

//என்னத்த வாங்கி கட்டிகிட்டேன் ன்னு கொஞ்சம் தெளிவா சொல்லுங்க அண்ணே! சும்மா வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லகூடாது... நீங்க தான் என்கிட்டே "இனிமேல் உங்களை எத்தனை பேரு கட்டம் கட்ட போறாங்க பாருங்க இமலாதித்தன்" ன்னு சொன்னீங்க... இதுவரைக்கும் ஒரு கட்டம் கூட காணும்... :)
உங்களுக்காக தான் ஒரு தனி பதிவையே என் வலைத்தளத்தில் போட்டேன் :)
காணமல் எல்லாம் போகல அண்ணே! நம்ம ஆட்டம் வழக்கம்போல் போயிகிட்டே இருக்கு.... பூனை கண்ணை மூடிகிட்டா உலகம் இருண்டுடாது ன்னு உங்களுக்கு தெரியாதாதா அண்ணே :)) //

அந்த பதிவின் சுட்டியை கொடுங்கள், என்ன மாற்றம் செய்திருக்கீறீர்கள் என பார்க்கிறேன்!

இரா.ச.இமலாதித்தன் said...

//நியாபகம் இருக்கா அந்த சாட் உரையாடல்கள், அப்போதே மூக்கடைப்பட்டு போனீரே! //

அது என்ன மூக்குடைப்பு கொஞ்சம் தெளிவா சொல்லுங்களேன்.. கொஞ்சம் ஆதாரத்தோடு.. :)

வால்பையன் said...

@ இமலாதித்தன்

உரையாடல் நடந்தது உமது தளத்தில், அதற்கு தான் லிங்க் கேட்டேன்!

தமது சாதிதிமிரில் எழுதிவிட்டு, அதை பெருமையாக மீண்டும் ஒரு மூறை பேசி கொள்கிறீர்கள்!

உங்கள் சாதி உங்களுக்கு என்ன கொடுத்தது என்ற கேள்விக்கு பதிலை காணோமே!?

இரா.ச.இமலாதித்தன் said...

//
அதற்கான சுட்டியை தேடி கொண்டிருக்கிறேன், ஒழித்தது ஆங்கிலேயன் தான் என்றால் நீங்கள் கொட்டை எடுத்த புலி என்பதை ஒப்பு கொள்கிறீர்களா?
//

முத்துராமலிங்க தேவரின் பங்கு துளியும் இல்லையென்று நீங்கள் நிருபியுங்க முதலில்... அதுக்கு அப்பறம் கொட்டை/புலி யை பற்றி பேசலாம் :)

இரா.ச.இமலாதித்தன் said...

//உங்கள் சாதி உங்களுக்கு என்ன கொடுத்தது என்ற கேள்விக்கு பதிலை காணோமே!?//

என்கிட்டே இருந்து எதையும் என்னுடைய சாதி பெற்றுகொள்ள வில்லைஎன்றாலும், உங்களை மாதிரியான அறிவுஜீவிகளின் அறிமுகம் கிடைச்சு இருக்கு பாருங்க, இதுதான் என் சாதியால் கிடைத்தது :)

இதை விட வேற என்ன வேண்டும்? :)

கோவி.கண்ணன் said...

//உங்கள் சாதிய பற்றையும், திமிரையும் ஏற்கனவே பார்த்தவன் என்பதால் இது ஒன்றும் எனக்கு புதிதல்லவே, நியாபகம் இருக்கா அந்த சாட் உரையாடல்கள், அப்போதே மூக்கடைப்பட்டு போனீரே!

September 15, 2011 11:23 AM//

இதுவேற நடந்ததா ? எங்கூருகாரப் புள்ளைக்கு நான் தான் மூக்குல மருந்து தடவனும் :)

கோவி.கண்ணன் said...

//உங்கள் சாதி உங்களுக்கு என்ன கொடுத்தது என்ற கேள்விக்கு பதிலை காணோமே!?

September 15, 2011 11:29 AM//

பார்பனர்களுக்காவது பூணூல் கிடைச்சது, இவர்களுக்கு ஒண்ணையும் காணும் ஒருவேளை மஞ்சள் வேட்டிக்கு மாறுவாங்களோ

வால்பையன் said...

@ இமலாதித்தன்

சும்மாவே, நான் அங்கே போய் சண்டை போட்டேன், மடியில் பீரங்கியை கட்டி வச்சிருக்கேன் என பீலா விட்டவர் தான் இந்த முத்துராமலிங்கம், அவர் என்ன சொன்னாலும் நம்ப முட்டாபய கூட்டம், பின் ஏன் சொல்ல மாட்டீர்கள் குற்றபரம்பரையை ஒழித்தது நான் தான் என்று சொன்னால்!

கோவி.கண்ணன் said...

//சொன்னாலும் நம்ப முட்டாபய கூட்டம், //

படிக்கிறச்ச நம்(ப)முட்டாபய கூட்டம்னு படிச்சு அதிர்ச்சி ஆகிட்டேன் எங்கே உங்களையும் சேர்த்துச் சொல்றிங்களோன்னு, பிறகு தான் 'நம்புவதற்கு' என்ற பொருளில் புரிந்து கொண்டேன்
:)

வால்பையன் said...

@ இமலாதித்தன்

என்னை உங்களுக்கு அடையாளம் காட்டியது உங்கள் சாதியா? என்ன உளறுகிறீர்கள்?

உங்கள் சாதிய திமிர் தானே இப்பொழுது உங்களை உலகுக்கே காட்டி கொண்டிருகிறது, அனைவரும் உங்கள் முகத்தில் காறீ துப்பி கொண்டிருகிறார்கள், ஒருவேளை அதற்கு தான் சாதியை பெருமையாக நினைக்கிறீர்களோ?

வால்பையன் said...

@ கோவி கண்ணன்

என் உயிர் இருக்கும் வரை சாதியையும், மதத்தையும் அடையாளமாக நான் பயன்படுத்த மாட்டேன்!

periyar said...

இது "ஆயிரம் கொட்டை நசுக்கி சாறு பிழிந்துண்டோன்' என்கிற பட்டம் வாங்கிய சூப்பர் ஹீரோ ராஜன் லீக்ஸின் பதிவில் போட்டது.

//துபாய்க்காரன் கிட்ட புலி, சிங்கம்னு பீலா உடறது தானே! கொட்டைய பிதுக்கி கைல குடுத்துருவான்//

தப்பு.கையில கொடுக்கமாட்டாங்க.அவங்களே வாயில போட்டு சாப்ட்ருவாங்க.ஜிஹாதி தாடி வெறி நாய்ங்க அந்த ரேஞ்சுல இருக்க்றவங்க.அது மட்டுமல்ல ராஜன் வால்பையன் போன்ற நாத்திகம் என்ற பெயரில் கேவலமாக சவுண்ட் விடும் பார்ட்டிகளின் கொட்டைகளுக்கும் அதே கதி தான்;ஹலால் முறையில் அறுத்து சாப்பிட்டுவிடுவார்கள்.போகட்டும், அதுவல்ல முக்கிய விஷயம்.
பரமக்குடியில் கலவரத்தில் இறங்கிய கும்பல் மீது போலிஸ் துப்பாக்கியால் சுட்ட விவகாரத்தில் அநாவசியாமக் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் பெயரை இழுப்பானேன்.தமிழகம் ஈன்ற ஒப்பற்ற தலைவரான தேவர் அய்யாவை கொச்சைப் ப்டுப்ப்தி பேசுவ்து வேதனை அளிக்கிறது.அவரை வெறும் சாதி தலைவராகப் பார்ப்பது அநியாயம்.

தலித் மக்கள் காலம் காலமாக ஒடுக்கப்பட்ட்டிருக்கிறார்கள் என்பது உணமைதான்;அதற்காக ஜான் பாண்டியன் போன்ற கொலைகாரப் பாவிகளின் வன்முறையை ஆதரித்துப் பேசாதிர்கள்.
மேலும் ஜான் பாண்டியன்,இம்மானுவேல் சேகரன் போன்றவர்களின் மூஞ்சியைப் பாருங்கள்.ஒவ்வொரு மூஞ்சியும் சொமாலிய கடற்கொள்ளைசெய்யும் வெறிநாய்களின் மூஞ்சியைப் போல் இருக்கும்;ஆனால் பெயரில் ஜான்,இம்மனுவேல்,பால்,வில்லியம் என்றெல்லாம் வெட்கமிலாமல் சேர்த்துக் கொள்வார்கள்.தூய திராவிட தமிழ்ப் பெயர் வைத்தால் என்ன?எதற்கு இந்த ஆங்கில மோகினி மயக்கம் என்ற கேள்வி எழுகிறது.ஜான் பாண்டியன்,திருமாவளவன் போன்ற அயோக்யர்கள் வன்முறையில் ஈடுபட்டால் பார்த்து சும்மாயிருக்க இங்க மஞ்சள் துண்டு குடும்ப ஆட்சியா நடக்கிறது?

வால்பையன் said...

குற்றபரம்பரை ஒழிப்பு பற்றிய சுட்டி கிடைத்தால் கொடுக்கவும், நான் சில மாதங்களுக்கு முன்னால் படித்தது தான் தற்பொழுது தேடும் குறிச்சொல் அகப்பட மாட்டேங்கிறது!

வால்பையன் said...

//ஜான் பாண்டியன்,இம்மானுவேல் சேகரன் போன்றவர்களின் மூஞ்சியைப் பாருங்கள்.ஒவ்வொரு மூஞ்சியும் சொமாலிய கடற்கொள்ளைசெய்யும் வெறிநாய்களின் மூஞ்சியைப் போல் இருக்கும்;//

ஏற்கனவே ராஜன் சொன்னது தான், உம்ம போட்டோவை அனுப்பவும், அதை பார்த்து முடிவு செய்து கொள்ளலாம் எது எப்படி இருக்குன்னு!

வால்பையன் said...

எனக்கென்னவோ இவர்களை பார்த்தால் “ செவப்பா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்” என சொல்லும் கூட்டம் மாதிரியே தெரியுது, அம்புட்டு அறிவு அவரளூக்கு,

முகத்தை பார்த்தால் கொள்ளக்காரன் மாதிரி தெரியுதாம்

Rajan said...

தேவரைப் பாத்தா கூட கோவில்களில் நடனம் ஆடும் தேவர்அடியார்கள் போல நளினமாக ஹேர்ஸ்டைல் வைத்து மழ மழவென ஷேவிங் செய்து கொண்டு இருக்கிறார்! பாகவதர் மாதிரி இருக்கார்னு சொல்லி உப்புமா கச்சேரிக்கு அனுப்பிடலாமா!

இரா.ச.இமலாதித்தன் said...

//உங்கள் சாதிய திமிர் தானே இப்பொழுது உங்களை உலகுக்கே காட்டி கொண்டிருகிறது, அனைவரும் உங்கள் முகத்தில் காறீ துப்பி கொண்டிருகிறார்கள், ஒருவேளை அதற்கு தான் சாதியை பெருமையாக நினைக்கிறீர்களோ? //

அது என்னத்திமிரோ, இதெல்லாம் உங்களை மாதிரியான அறிவுஜீவிக்கு தானே தெரியும்... நான் என்னுடைய வலைப்பக்கத்தின் முதல் பதிவில் என் அண்ணனின் "பாலகேசன் தேவர்" என்ற பெயரிலுள்ள தேவரை ஏன் உபயோக படுத்துறீங்க ன்னு திமிர்த்தனமா நீங்க தானே வந்தீங்க?

யாரு காரித்துப்பினாலும் எனக்கென்ன வந்துச்சு? உங்களையும் தான் பல பேரு காரிதுப்புரானுங்க உங்களுக்கெல்லாம் அது தெரியாததா என்ன? சும்மா துடைச்சு விட்டுகிட்டு போயிகிட்டு தானே இருக்கீங்க... உங்களை மாதிரி இல்லைனாலும், அந்த அறிவுஜீவியாகளைஎல்லாம் பொருட்படுத்தாமல் போயிகிட்டே இருக்க வேண்டியதுதான்..

இங்கே கமென்ட் பண்ணுவதால் உங்களை பொருட்படுத்துகிறேன் என்றோ/ உங்களை அறிவுஜீவி இல்லையென்றோ நினைதுவிட்டதாய் தவறாக என்ன வேண்டாம்,

இந்த இணைய புலிகளான அறிவுஜீவிகள் காறித்துப்பாமல் ஒருவேளை என்னை புகழ்ந்துவிட்டால் மட்டும் ஆயிரம் வருடம் வாழவா போகிறேன்...?

இந்த அறிவுஜீவிகளுக்கு சொரிந்துதுவிட்டு, சுகம் காணுவது மட்டும் தானே தெரியும். அப்போதுதானே அவர்களின் பதிவுக்கு அதிக ஹிட்ஸ் கிடைக்கும் :)

karuppu said...

நல்லதொரு உண்மையான பதிவு தோழரே...

எல்லோரும் அங்கே தொடர்ந்து பேருந்துகளை உடைக்கிறார்கள் , கலவரம் செய்கிறார்கள் என சொல்கிறார்கள்.ஏன் யாராவது காவல்துறை தினமும் ஆள் பிடிக்கிறேன் என்ற பெயரில் இரவில் கிராமம் கிராமமாக அப்பாவி மக்களை துன்புருத்துவதில் என்ன நியாயம் இருக்கிறது.அதை பற்றி ஒரு மனிதரும் வாய் திறக்கவில்லையே ஏன்?

Thaniyan Pandian said...

உன் சாதி திமிரினால் உன்னால் என்ன சாதிக்க முடிந்தது என்பதே என் கேள்வி!

சேர சோழ பாண்டியர் பொதுநல அறக்கட்டளை ஆரம்பித்தோம்.
வசதியற்ற ஒரு மாணவனுக்கு இளங்கலை படிப்புக்கான கட்டணங்கள் கட்டினோம்.
இருபத்தியொரு பேருக்கு வேலை வாங்கி கொடுத்தோம்.
இன்றும் அந்த மாணவனுக்கும் மேற்படிப்பிற்கு உதவி செய்து கொண்டிருக்கிறோம்
கோவை அருகே ஒரு பள்ளியில் மாணவர்களுக்கு கல்வி ஆலோசனை வழங்கினோம்.
பசும்பொன்னில் வரலாறு சம்பந்தமான் தெளிவு கிடைக்க புத்தக சாலை அமைத்தோம்.
வரலாற்றுத் இணைய தளம் ஆரம்பித்து பலரது உண்மை திறத்தை, பொய்முகத்தை கிழித்து எறிந்தோம்.
உற்றார் உறவினர்கள் நல்ல நிகழ்வுகளுகுக்கும், துக்க நிகழ்வுகளுக்கும் எல்லை தாண்டி இன்றும் சென்று வந்து கொண்டிருக்கின்றோம்.
மேற்கொண்டி கல்விக்கூடங்கள், வேலைவாய்ப்பு உதவிகள் இன்றும் செய்து கொண்டு இருக்கின்றோம்.

சாதி இல்லை இல்லை என்று சொல்லி நீ என்ன கிழித்தாய் என்று கேட்கத் தோன்றுகிறது.
ஆனால் நீங்கள் பெரியவராகக் கூட இருக்கலாம் என்பதால் தாங்கள் என்ன செய்தீர்கள் என்பதை சொல்ல வேண்டாம்.
அது எனக்கு தேவை இல்லாதது. வாழ்க வளமுடன்!

Thaniyan Pandian said...

எம் முகவை மண் பத்தி உங்களுக்கு என்ன தெரியும். இவ்விரு மக்களின் உழைப்பு வானம் பார்த்த பூமியை செழிப்பாக்கிய மிகப் பெரிய விவசாயக் குடி மக்கள் அங்கு இருப்போர். கடைசி வரை எவரும் சண்டையிட அதை கைப்பற்ற பயந்த பூமி. மறவர்கள் மட்டுமல்ல, அவர்களோடு தோளோடு தோல் கொடுத்த மற்ற மக்களும் உண்டு. ஒரு சாதிக்காரன் மட்டும் இருந்த ஊர் எங்கும் அங்கே எங்கும் கிடையாது. நிளுடமை சமூகம் படிநிளைகளோடு தான் இருக்கும், இருந்தது. இந்த அடிப்படை கூட தெரியாத மக்களாட்சியில் இருந்து கொண்டு பேசும் முட்டாள்களை எப்பொழுதும் புரியவைப்பது மிகக் கடினமே. இது கூட தெரியாமல் சமத்துவபுரம் என்று, உழைத்து ஓட்டுவீடு கட்டுபவனையும் ஒழுகும் இடிந்துபோகும் அரைகுறை காறை வீட்டில் குடியேற்றிய கொடுமை ஊழல் செய்தது சிலரை மட்டுமே சாரும். அனால் எல்லாவற்றிற்கும் மேலாக காமராசர் செய்த அரசியல் சதி இன்று வரை ஓயாமல் இருப்பது தான் வேதனை.

Thaniyan Pandian said...

///இருப்பின் நீங்கள் எவ்வளவு புதியவர் என அறிந்து கொள்ள முடிகிறது!///
நானும் பல ஆண்டுகளாக இணையத்தில் தான் உலவிக் கொண்டிருக்கிறேன்.பத்து ஆண்டுகளுக்கும் மேல் அதில் தான் எனது பணியும் கூட.உங்களுடன் கருத்து பரிமாற்றம் செய்யும் அந்த நற்காரியம் முன்னமே நடக்காமல் போனதற்கு வருத்தமெல்லாம் ஒன்றும் இல்லை.

//உங்கள் சாதி உங்களுக்கு என்ன கொடுத்தது என்ற கேள்விக்கு பதிலை காணோமே!?
எனக்கு எந்தனையோ தந்திருக்கிறது. நான் வளர்ந்தது அண்டவெளியில் இல்லை. எனது சுற்றத்தாரின் அரவணைப்பில் தான், இம்மண்ணில் தான்.
கெட்டவைகள் எங்கு தான் இல்லை. அதை மட்டும் பார்த்து, பழகி, புலம்புபவன் மடையன். அதை திருத்தி தானும் திருந்தி சமூகத்திற்கு நன்மை செய்பவன் பெரும்பிறவி கொண்டவன். இந்த பெரும் பேரு பலருக்கும் அமைவதில்லை. என் பிறப்பினால் நான் அடைந்த அன்பிற்கும், அமைதிக்கும், வீரியத்திர்க்கும், பிறருக்கு உதவும் தயாளகுணத்திற்கும் எனது முன்னோர்களையும், எனது பெற்றோர்களையும், உற்றோர்களையும் வணங்குகிறேன். அவர்களை என்றும் போற்றுவேன், அவர்களிடமும் சில தவறுகள் இருந்தாலும்.

வால்பையன் said...

@ தணீகை பாண்டியன்

நீங்கள் செய்த நல்ல காரியங்களையெல்லாம் சாதி இல்லாமல் பண்ணால் யாரும் ஏற்று கொள்ளமாட்டார்களா?

நான் கேட்டது, நான் இந்த சாதிக்காரன் என பெருமையாக நினைக்கும் அளவுக்கு உங்களுக்கு இந்த சாதி செய்தது என்ன?

உங்களூக்கு கீழ் தாழ்த்தபட்டவர்கள் யாரும் இல்லை, நீங்கள் தான் தாழ்த்தபட்டவர்கள் என்றால் உங்களால் இந்த சாதியை பெருமையாக நினைக்க முடியுமா? கொஞ்சம் மனசாட்சியுடன் பேசுங்கள்!

குடுகுடுப்பை said...

அய்யா தனியன் பாண்டியன்,
முகவை மாவட்டத்தில், தலித்துகளும் தேவர்களும் பொருளாதார ரீதியாக ஒரே தராசில் இருப்பவர்களே, உயர் சாதி பெருமை பேசி ஒரு மயிருக்கும் ஆகப்போவதில்லை, கலவரத்தில் செத்துப்போனவனை பார்த்து மகிழ.ச்சியடையும் மூடர்களை திருத்துவதும் சமுதாய கடமைதான் அதைச்செய்யுங்கள், அடுத்ததாக தமிழகத்தில் ஒரு புரட்சியாக தலித்துகளை கோவிலுக்குள் நுழைய வழிவிடுங்கள், சேர்ந்து சாமி கும்பிட்ங்களேன் எதையும் துணிந்து செய்யும் நீங்கள் இதை செய்யுங்களேன் முதலில்,

Rajan said...

தேவரய்யா சிலைகளில் அடிக்கடி பீயை வாறித் தெளித்துவிடுகிறார்கள் எதிர் கோஷ்டிகள்! முக்குலத்துப்புலிகள் அதற்கொரு அறக்கட்டளை நிறுவி 24 மணிநேர பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்தால் என்ன?

மு.சரவணக்குமார் said...

1755ம் ஆண்டில் கோவில்பட்டிக்கு அருகே நடந்த போரில்தான் வெள்ளையர்கள் இந்திய மண்ணில் தங்களது முதல் தோல்வியை சந்தித்தனர். அவர்களை தோற்கடித்தது பூலித்தேவன் என்ற பாளையக்காரர்.அவரது தளபதிகளாய் நின்று களமாடிய வீரத் தளபதிகள் ஒண்டிவீரன் என்ற அருந்ததிய இனத்தவனும், வெண்ணிக்காலாடி என்ற தேவேந்திர இனத்தவனும்தான்.

அந்த காலகட்டத்தில் இந்த இனத்தவர் தங்களிடையே ஒற்றுமையாகவே இருந்திருக்கின்றனர் என்பது இந்த நிகழ்வின் மூலம் அறிய முடிகிறது.

பத்தாண்டுகளுக்கும் மேல் நடந்த இந்த போரின் பின்னரே ஆங்கில அரசானது இவர்களை பிரித்தாள முடிவெடுத்து சாதீயத்தை நுழைத்தனர். அதன் பலனைத்தான் இன்று வரை தென் மாவட்டங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றன.

Thaniyan Pandian said...

உங்களுடன் வாதிட்டுக் கொண்டிருப்பது மட்டுமே எனது வேலை இல்லை. சமூகம் என்றாலே எல்லோரும் தான்.
சாதி பார்க்காமல் அடிப்படை மனிதம் கொண்டு எவ்வளவோ நடந்திருக்கின்றது. நானும் சிலவற்றை செய்திருக்கிறேன்.
ஒரு நண்பர் நீங்கள் தான் எனக்கு வேலை வாங்கி கொடுத்தீர்கள் என்று சொல்லும் போது அதில் கிடைத்த மகிழ்வு வார்த்தைகளில் சொல்ல முடியாது. எதையும் எதிர்பார்க்காமல் எல்லோருக்கும் செய்யும் போது கிடைக்கும் மகிழ்ச்சி அதை உணர்பவருக்கு மட்டுமே புரியும்.

நீங்கள் எல்லோரும் தேவர் இன மக்களை, முக்குலத்தோரை எதிரியாக பாவித்து அதையே பரப்புரை செய்யும் முட்டாள்தனத்தை மறுத்து எம்மில் அனைத்து இனத்தினரைப் போல் எல்லாம் கலந்தவர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லவே எனது வாதம்.

எம்மவர்கள் பலரும் இவர்களிடம் பேசிப் பலனில்லை, வெட்டி வேலை, பேசாமல் ஆகின்ற வேலையை பார்ப்போம் என்று விலகியவர்கள் அதிகம். ஆங்கிலேயரின் கொடூர குள்ளநரித்தனத்திற்கு, பிரித்தாளும் கொள்கைக்கு, பொருளாதார (ஒட்டுமொத்த) நசுக்களுக்கு பெரும்பான்மை இலக்கானது எமது பகுதி. ஏனென்றால் இவர்களை பணம் கொண்டோ, பலம் கொண்டோ அடக்க முடியவில்லை. அவ்வளவு வீரியமும், விவேகமும், சமூக ஒழுங்கும், கட்டமைப்பும் கொண்ட மக்கள். வெளிநாட்டினருக்கு கூலி வேலை செய்யும் கூட்டமாக ஒட்டு மொத்த படித்த கூட்டமும் மாறும் என்று அன்றே கூறியவர் பசும்பொன் ஐயா அவர்கள். ஈழம் சென்று நீங்கள் (தமிழர்கள்) ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே நினைத்ததை சாதிக்க முடியும். எப்பொழுதும் நமக்கு துரோகம் தான் எதிரி என்றவர். நாம் பாரதம் அடிமைப்பட்டது பலத்தாலோ, வீரத்தாலோ அல்ல. அங்கும் துரோகம் என்றவர். இன்றும் அது தான் ஈழத்தில் நடந்திருக்கின்றது.

தமிழ் தலைவன்கள் எல்லாம் சுயநலம் பிடித்த பேயைப் போல் தன குடும்பம் குட்டியை காப்பாற்றிக் கொண்டு அரசியல் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கின்றான். அதற்கு மேல் அவர்களால் ஒன்று செய்ய முடியாது. அவர்களின் ஆண்மை திறம் அவ்வளவு தான். ஈழத்தில் நாம் தான் நம் இனம் தான் அழிந்து போனது. ஆனால் இதற்கு நேர் எதிர்மறையாக ஒழுக்கத்தையும் நேர்மையையும் யாருக்கும் அஞ்சாத நேர்கொண்ட பார்வையையும் கொண்ட ஒரு உண்மை தமிழர் பசும்பொன் தேவர் திருமகனார். அதற்கான தனது பங்களிப்பையும் செய்ய அவர் தவறவில்லை. பலரையும் அரசியலில் ஈடுபட்டு நாட்டிற்கு உழைக்கத் தூண்டியவர். அதற்காக நிதி உதவிகளை பெற வேண்டாம் என்று நாட்டிற்கு சேவை செய்ய சொன்னவர்.

மேலும் எழுதும் எண்ணமில்லை.

"நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை." - தமிழ் மறை.

வாழ்க வளமுடன்!!!

Thaniyan Pandian said...

உங்களுடன் வாதிட்டுக் கொண்டிருப்பது மட்டுமே எனது வேலை இல்லை. சமூகம் என்றாலே எல்லோரும் தான்.
சாதி பார்க்காமல் அடிப்படை மனிதம் கொண்டு எவ்வளவோ நடந்திருக்கின்றது. நானும் சிலவற்றை செய்திருக்கிறேன்.
ஒரு நண்பர் நீங்கள் தான் எனக்கு வேலை வாங்கி கொடுத்தீர்கள் என்று சொல்லும் போது அதில் கிடைத்த மகிழ்வு வார்த்தைகளில் சொல்ல முடியாது. எதையும் எதிர்பார்க்காமல் எல்லோருக்கும் செய்யும் போது கிடைக்கும் மகிழ்ச்சி அதை உணர்பவருக்கு மட்டுமே புரியும்.

நீங்கள் எல்லோரும் தேவர் இன மக்களை, முக்குலத்தோரை எதிரியாக பாவித்து அதையே பரப்புரை செய்யும் முட்டாள்தனத்தை மறுத்து எம்மில் அனைத்து இனத்தினரைப் போல் எல்லாம் கலந்தவர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லவே எனது வாதம்.

எம்மவர்கள் பலரும் இவர்களிடம் பேசிப் பலனில்லை, வெட்டி வேலை, பேசாமல் ஆகின்ற வேலையை பார்ப்போம் என்று விலகியவர்கள் அதிகம். ஆங்கிலேயரின் கொடூர குள்ளநரித்தனத்திற்கு, பிரித்தாளும் கொள்கைக்கு, பொருளாதார (ஒட்டுமொத்த) நசுக்களுக்கு பெரும்பான்மை இலக்கானது எமது பகுதி. ஏனென்றால் இவர்களை பணம் கொண்டோ, பலம் கொண்டோ அடக்க முடியவில்லை. அவ்வளவு வீரியமும், விவேகமும், சமூக ஒழுங்கும், கட்டமைப்பும் கொண்ட மக்கள். வெளிநாட்டினருக்கு கூலி வேலை செய்யும் கூட்டமாக ஒட்டு மொத்த படித்த கூட்டமும் மாறும் என்று அன்றே கூறியவர் பசும்பொன் ஐயா அவர்கள். ஈழம் சென்று நீங்கள் (தமிழர்கள்) ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே நினைத்ததை சாதிக்க முடியும். எப்பொழுதும் நமக்கு துரோகம் தான் எதிரி என்றவர். நாம் பாரதம் அடிமைப்பட்டது பலத்தாலோ, வீரத்தாலோ அல்ல. அங்கும் துரோகம் என்றவர். இன்றும் அது தான் ஈழத்தில் நடந்திருக்கின்றது.

தமிழ் தலைவன்கள் எல்லாம் சுயநலம் பிடித்த பேயைப் போல் தன குடும்பம் குட்டியை காப்பாற்றிக் கொண்டு அரசியல் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கின்றான். அதற்கு மேல் அவர்களால் ஒன்று செய்ய முடியாது. அவர்களின் ஆண்மை திறம் அவ்வளவு தான். ஈழத்தில் நாம் தான் நம் இனம் தான் அழிந்து போனது. ஆனால் இதற்கு நேர் எதிர்மறையாக ஒழுக்கத்தையும் நேர்மையையும் யாருக்கும் அஞ்சாத நேர்கொண்ட பார்வையையும் கொண்ட ஒரு உண்மை தமிழர் பசும்பொன் தேவர் திருமகனார். அதற்கான தனது பங்களிப்பையும் செய்ய அவர் தவறவில்லை. பலரையும் அரசியலில் ஈடுபட்டு நாட்டிற்கு உழைக்கத் தூண்டியவர். அதற்காக நிதி உதவிகளை பெற வேண்டாம் என்று நாட்டிற்கு சேவை செய்ய சொன்னவர்.

மேலும் எழுதும் எண்ணமில்லை.

"நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை." - தமிழ் மறை.

வாழ்க வளமுடன்!!!

கோவி.கண்ணன் said...

//உங்களூக்கு கீழ் தாழ்த்தபட்டவர்கள் யாரும் இல்லை, நீங்கள் தான் தாழ்த்தபட்டவர்கள் என்றால் உங்களால் இந்த சாதியை பெருமையாக நினைக்க முடியுமா? கொஞ்சம் மனசாட்சியுடன் பேசுங்கள்!//

பதில் சொல்லமாட்டாரு, தேவன்டா மறவன்டா ன்னு நெஞ்சை நிமிர்த்தி வசனம் பேசுறவங்க மற்றவர்களைத் தாழ்ந்தவர்கள் என்று சொல்லுவார்களா அப்படி ஒரு நிலை இருந்தால் அதைப் பெருமையாகத்தான் பேசுவார்களா ?

Packirisamy N said...

//உங்களூக்கு கீழ் தாழ்த்தபட்டவர்கள் யாரும் இல்லை, நீங்கள் தான் தாழ்த்தபட்டவர்கள் என்றால் உங்களால் இந்த சாதியை பெருமையாக நினைக்க முடியுமா? கொஞ்சம் மனசாட்சியுடன் பேசுங்கள்!//

அருமையான கேள்வி !

புதுகை.அப்துல்லா said...

இமலாதித்தன் -

அண்ணே, என் பாட்டன் முப்பாட்டன் மாறுனதுக்குக் காரணம் பயம் இல்லை. திருடனுங்களோடு திருடனா வாழந்து நாய் பொழப்பு பொழக்கிறதுக்கு நல்ல பொழப்பு பொழைக்கலாம்ங்குற எண்ணம். எத்தனை கஷ்டம் வந்தாலும் யோக்கியனா வாழ நினைக்கிறதுதான் வீரம்!!


// கூட்டி கழிச்சு பார்த்தால் நீங்களும் ஒருவகையில் எனக்கு பங்காளி முறை தான் :)

//

தன் சாதியை பெருமையா சொல்லிக்கிற எந்தப் பங்காளியும் எனக்குத் தேவையில்லை. ஆளவந்தான்,குடுகுடுப்பை மாதிரி பங்காளிகள்தான் எனக்கு வேனும் :)

வால்பையன் said...

//நீங்கள் எல்லோரும் தேவர் இன மக்களை, முக்குலத்தோரை எதிரியாக பாவித்து அதையே பரப்புரை செய்யும் முட்டாள்தனத்தை மறுத்து எம்மில் அனைத்து இனத்தினரைப் போல் எல்லாம் கலந்தவர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லவே எனது வாதம்.//

அய்யா அறிவு ஜீவி

இந்த பதிவின் நோக்கம் ஒரு சாதியினரை எதிரியாக பாவிப்பதல்ல, இறந்துபோன தாழ்த்தபட சமூகத்தினரை நாய் என்று கூறீய சாதி வெறீபிடித்த பேய்களுக்காக தான் இந்த பதிவு!

முத்துராமலிங்கத்தை கேள்வி கேட்டு புட்டோம்னு எங்களை ஒரு குறிப்பிட்ட சாதிக்கெதிரானவர்களாக திரிக்காதீர்கள், நாங்கள் முற்றிலுமான சாதி எதிர்பாளர்கள்!

இரா.ச.இமலாதித்தன் said...

அப்துல்லா அண்ணே,

வீரத்துக்கு யார்வேண்டுமானாலும் விளக்கம் கொடுக்கலாம்.நீங்க கொடுத்திருக்கும் விளக்கம் வீரம் சார்ந்தது அல்ல.பயத்தினால் மதம் மாறினார்கள் என்பதே உண்மையாக இருக்க முடியும்.
யோக்கியம் என்பது ஒரு கூட்டத்தில் இருந்துகொண்டே திருத்த முயற்சிப்பது தானே ஒழிய, பயந்து ஓடி ஒளிந்தவர்களை யோக்கியவாதி ன்னு சொல்ல முடியாது. :)


நீங்களும் பங்காளி முறை என்று சொன்னதன் அர்த்தம் உங்களை பங்காளியாக ஏற்றுக்கொண்டேன் என்றோ, என்னையும் உங்களது பங்காளியாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கோரிக்கை வைக்கவோ அல்ல.

அனால், நீங்கதான் பஸ்ல அடிக்கடி "பங்காளிங்க தான் எனக்கு சரி" ன்னு சொல்லி கேலி பண்ணி இருந்தீங்க... அந்த மாதிரியாகத்தான் நானும் உங்களை சொல்லி இருந்தேன்.

வால்பையன் said...

//"நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை." - தமிழ் மறை.//


சாதிவெறி பிடித்து திரிபவன் தான் நல்லவன் என்றால் நாட்டுக்கு மழையே தேவையில்லை என்பேன்!

வால்பையன் said...

//வீரத்துக்கு யார்வேண்டுமானாலும் விளக்கம் கொடுக்கலாம்.நீங்க கொடுத்திருக்கும் விளக்கம் வீரம் சார்ந்தது அல்ல.பயத்தினால் மதம் மாறினார்கள் என்பதே உண்மையாக இருக்க முடியும்.//

சாதியால் பிரிந்து கிடப்பதை விட்டு, சாதியற்ற இஸ்லாத்தை தழுவியது உங்களுக்கு பயமென்றால் உலகிலேயே பயமற்ற மதமாக இஸ்லாம் தான் உள்ளது என்பேன்!

இரா.ச.இமலாதித்தன் said...

இசலாதில் சாதி/பிரிவினை இல்லையென்று சொல்கிறீர்களே, நீங்கள் புரிந்து தான் பேசுறீங்களா?

அப்பறம் ஏன் பாகிச்தான்/ஈராக் ல எல்லாம் அடிக்கடி மனித வேடிகொண்டு ஒரு குறிப்பிட்ட இஸ்லாத் பிரிவு மசூதிகளில் மட்டும் வெடிக்கிறது?

சியா, சன்னி,
தமிழகத்தில் ராவுத்தர்,மரைக்காயர், இதுபோல் பல இருக்குங்க.

வால்பையன் said...

@ இமலாதித்தன்

அவர்கள் மாறும் போது இங்கே ஒரே ஒரு பிரிவினர் தான் இருந்தார்கள், ஷியா சன்னி என்றால் அப்பொழுது அவர்களுக்கே தெரியாது.

முகமதுவை மட்டுமே ஏற்று கொள்வது, அவருடய வழித்தோன்றலையும் ஏற்று கொள்வது போன்ற கொள்கை முரண்பாடுகள் அதி தீவிரம் பெற்றது நாகரிக உலகில் தான்!

புதுகை.அப்துல்லா said...

பயந்து எவன் மாறுனான்? திருட்டு தொழில் வேண்டாம்னுதான் மாறுனான். எல்லாரையும் திருத்த எல்லாராலயும் இப்பவே முடியலையே.. அப்ப மட்டும் எப்படி முடிஞ்சிருக்கும்? அதான் அடுத்தவனைத் திருத்துற வேலையை விட்டுட்டு தான் திருந்துற வழியைப் பார்த்துட்டான் :0)

அப்புறம் பஸ்சில் நான் பங்காளிகள் என்று குறிப்பிடுவது நான் பதிவெழுத வந்த காலத்தில் வந்த சக கும்மி தோழர்களை. அதில் யார் யார் என்னென்ன சாதின்னு எனக்கு இப்ப வரைக்கும் தெரியாது. அதுக்கும் இதுக்கும் முடிச்சு போடாதிங்க.

புதுகை.அப்துல்லா said...

// தமிழகத்தில் ராவுத்தர்,மரைக்காயர், இதுபோல் பல இருக்குங்க

//

ராவுத்தர் மரைக்காயருக்கு பொண்ணு குடுப்பாரு. எடுப்பாரு. நீங்க முக்குலத்தோர் அல்லாத யாருக்காவது பொண்ணு குடுப்பீங்களா?

அப்புறம் எப்படி ராவுத்தர்,மரைக்காயரை ஜாதின்னு சொல்றீங்க? குதிரை வீரர்களாக இருந்தவர்கள் ராவுத்தர்கள், கடல் வணிகம் புரிந்தவர் மரைக்காயர். ராவுத்தர் வீட்டுக்குள்ள மரைக்காயரை விடுவாரு, மரைகாயர் வீட்டுக்குள்ள ராவுத்தரை விடுவாங்க. இவன் பொண்ணை அவன் கட்டிக்குவான், அவன் பொண்ணை இவன் கட்டிக்குவான். எந்த ராவுத்தரும் மரைக்காயரை ஈனச்சாதின்னு சொன்னதில்லை. எந்த மரைக்காயரும் ராவுத்தரை ஈனச் சாதின்னு சொன்னதில்லை :))

Rajan said...

பரமக்குடில செத்த பொணத்து மேல கூத்தடிக்கிற எச்சக்கலைகளப் பத்தி என்ன நெனைக்கறன்னு கேட்டா பாகிஸ்தானு ஈராக்குன்னுகிட்டு! மிஸ்டர் இமலாதித்தன்! டைரக்டா பதில் சொல்லுங்க... இந்த களேபரத்துல ஏழு நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை (அவர்கள் தலித்துகள் என்பதால்)நியாயப்படுத்துகிறீர்களா!? #தவிர முக்க்லத்துப்புலி சிங்கம் போன்ற பெயர்களில் ஒரு விருந்தாளிக்கு பிறந்த கூட்டம் பிணம் மீது கொக்கரித்த சில்லறைத் தனம் குறித்தும் தங்கள் கருத்தை அறிய ஆவல்

Rajan said...

//ராவுத்தர் மரைக்காயருக்கு பொண்ணு குடுப்பாரு. எடுப்பாரு. நீங்க முக்குலத்தோர் அல்லாத யாருக்காவது பொண்ணு குடுப்பீங்களா?//

ஒரு மைண்ட் வாய்ஸ்: எப்பிடிப் போனாலும் அல்லைலயே ஒதைக்கறாய்ங்களே அவ்வ்வ்வ்!

Rajan said...

//இவன் பொண்ணை அவன் கட்டிக்குவான், அவன் பொண்ணை இவன் கட்டிக்குவான். எந்த ராவுத்தரும் மரைக்காயரை ஈனச்சாதின்னு சொன்னதில்லை. எந்த மரைக்காயரும் ராவுத்தரை ஈனச் சாதின்னு சொன்னதில்லை :)) //

ஒரு மைண்ட் வாய்ஸ்: இந்தாளு என்னென்னமோ சொல்றாரே! ஆழம்பாக்காம __ல உட்டுட்டமோ!

இரா.ச.இமலாதித்தன் said...

//// தமிழகத்தில் ராவுத்தர்,மரைக்காயர், இதுபோல் பல இருக்குங்க

//

ராவுத்தர் மரைக்காயருக்கு பொண்ணு குடுப்பாரு. எடுப்பாரு. நீங்க முக்குலத்தோர் அல்லாத யாருக்காவது பொண்ணு குடுப்பீங்களா?

அப்புறம் எப்படி ராவுத்தர்,மரைக்காயரை ஜாதின்னு சொல்றீங்க? குதிரை வீரர்களாக இருந்தவர்கள் ராவுத்தர்கள், கடல் வணிகம் புரிந்தவர் மரைக்காயர். ராவுத்தர் வீட்டுக்குள்ள மரைக்காயரை விடுவாரு, மரைகாயர் வீட்டுக்குள்ள ராவுத்தரை விடுவாங்க. இவன் பொண்ணை அவன் கட்டிக்குவான், அவன் பொண்ணை இவன் கட்டிக்குவான். எந்த ராவுத்தரும் மரைக்காயரை ஈனச்சாதின்னு சொன்னதில்லை. எந்த மரைக்காயரும் ராவுத்தரை ஈனச் சாதின்னு சொன்னதில்லை :)) //

ராவுத்தரும்,மறைக்கரும் இஸ்லாம் தானே... பொண்ணு கொடுப்பாங்க எடுப்பாங்க... இவங்கள எதுக்கு ஈனசாதி ன்னு திட்டபோறாங்க? :)

முக்குலத்தோர் ன்னு சொல்ற மூணு சாதிளையும் பொண்ணு கொடுப்பாங்க, எடுப்பாங்க, ஈனசாதி ன்னு இவன்ககுள்ளஎம் திட்டிக்க மாட்டாங்க... :)

இரா.ச.இமலாதித்தன் said...

ராஜன் அண்ணே!

இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை நான் ஆதரிக்கவில்லை...

ஆனால், தேவர் சாதியை சேர்ந்தவன் தான், அந்த இளைஞர்களை சுட்டு கொன்றான் என்பதுபோன்ற விமர்சனங்களை தான் ஏற்கமுடியவில்லை.

வால்பையன் said...

@ இமலாதித்தன்

ராஜன் பதிவில், தேவர் சாதி வெறி பிடித்த பன்றிகள் போட்ட ஆட்டத்தை முதலில் பாருமைய்யா,

நாங்க என்னமோ இது சாதிகலவரம்னு சொன்ன மாதிரி பேசுறீரு, இது தான் நீர் பதிவை படிச்ச லட்சணமா?

Rajan said...

//முக்குலத்தோர் ன்னு சொல்ற மூணு சாதிளையும் பொண்ணு கொடுப்பாங்க, எடுப்பாங்க, ஈனசாதி ன்னு இவன்ககுள்ளஎம் திட்டிக்க மாட்டாங்க.//

கள்ளர் வீட்டுப் பொண்ண அகமுடையார் பையனுக்கு கல்யாணம் பண்ணி வெக்கறது இயல்பான நிகழ்வா???

சும்மா போற போக்குல அடிச்சுவிடறார்!

வால்பையன் said...

எனக்கும் அந்த டவுட் இருக்கு பங்கு, சாதியத்தில் பெரிய பரிட்சியம் இல்லையென்றாலும் சிறுவயதில் குலதெய்வ கோவிலில் பிரித்து பேசியதை பார்த்திருக்கிறேன்!

இரா.ச.இமலாதித்தன் said...

வால்பையன்

என் லட்சணம் அவ்ளோதான்! விடுங்க... அந்த பத்து பேரு சொல்வதுதான் ஒட்டு மொத்த தேவர் இனத்தின் அதிகாரபூர்வ பேச்சென்று நீங்கள் ஏற்றுகொண்டால் அதற்க்கு நான் பொறுப்பல்ல.

புதுகை.அப்துல்லா said...

// அப்புறம் எப்படி ராவுத்தர்,மரைக்காயரை ஜாதின்னு சொல்றீங்க?

//

நாங்க எங்க சொன்னோம்? நீங்கதான் சொல்லுறீங்க? :)))


// முக்குலத்தோர் ன்னு சொல்ற மூணு சாதிளையும் பொண்ணு கொடுப்பாங்க, எடுப்பாங்க, ஈனசாதி ன்னு இவன்ககுள்ளஎம் திட்டிக்க மாட்டாங்க... :)

//

அப்படி வாங்க வழிக்கு :)))

வால்பையன் சொன்னது மேல்சாதி,கீழ்சாதி இழிவில்லாத இஸ்லாம் என்று. நீங்க என்ன சொன்னீங்க... யார் சொன்னது அப்படி? அங்கயும் ஜாதி இருக்குன்னு சொன்னீங்க. இப்ப என்ன சொல்றீங்க.. இஸ்லாம்குள்ள பொண்ணு குடுக்குறீங்க எடுக்குறீங்கன்னு, வெரிகுட் :)))

இரா.ச.இமலாதித்தன் said...

வால்,

நான் பதிவிட்ட இன்னும் ஒரு சில பின்னூட்டங்கள் வெளியாக வில்லை.ஆனால் அதற்க்கு நீங்கள் சொன்ன பதில் மட்டும் வந்திருக்கு! அதையும் கொஞ்சம் சரி பார்த்துக்கொள்ளுங்களேன்.

வால்பையன் said...

@ இமலாதித்தன்

அந்த மூன்று பேர்களூக்குள் பெண் கொடுத்து எடுப்பதல்ல இப்போது பிரச்சனை,

எதன் அடிப்படையில் தேவர் சாதி பெரிய புடுங்கி சாதி என சொல்கிறீர்கள் என்பதே கேள்வி, அப்துல்லாவின் பதிலுக்கு துடுப்பை திருப்பி வேறு பக்கம் ஓட்டாதீர்கள்!

உங்கள் சாதி தான் தாழ்த்தப்பட்ட சாதி என்றால் இப்படி பெருமையாக சொல்ல முடியுமா என கேட்டிருந்தேன்

Rajan said...

தேவர் சாதிக்காரர்களின் யோக்கியதை மசுரைப்பாரீர்னு பதிவு போடலைங்க! சில்ல சில்ற நாய்களின் பொறுக்கித்தனத்த பாரீர்னுதான் போட்டோம்! இங்க கேள்வி என்னன்னா?! இப்பிடி வெறி பிடிச்சு சுத்துற அளவுக்கு தேவன்ற சாதி என்ன ___யா குடுத்துச்சுங்கறதுதான்!

புதுகை.அப்துல்லா said...

இன்னோரு முக்கியமான விஷயம், நான் இமலாதித்தண்ணனுக்கு நாங்க ஏன் மதம் மாறுனோன்னுதான் சொல்றேனே தவிர என் மதத்தை தூக்கிப் பிடிக்கலை. அவரவர் மார்க்கம் அவரவரக்கு என்ற என் கொள்கையில் எந்த சமரமும் இல்லை.

இரா.ச.இமலாதித்தன் said...

//உங்கள் சாதி தான் தாழ்த்தப்பட்ட சாதி என்றால் இப்படி பெருமையாக சொல்ல முடியுமா என கேட்டிருந்தேன்//

நான் என் சாதியின் பெயரை சொல்வதால் அது பெருமை இல்லையென்றே கருதுகிறேன்.

நான் பறையர் இனத்திலோ, பள்ளர் இனத்திலோ பிறந்திருந்தாலும் என் சாதியை சொல்லி இருப்பேன்,

அதை பெருமை என்று நீங்கள் எடுத்தாலும், எடுக்காவிட்டாலும்...

Rajan said...

தேவன்னு பேருக்கு பின்னாடி போட்டுக்கறது எதுக்கு? தீண்டத்தகாதவர்கள்னு மத்த ஆதிக்க சாதியினர்லாம் உங்களை ஒதுக்கி வெச்சிருந்தா அப்பகூட பெருமையா பின்னாடி தேவன்னு போட்டுக்குவீங்களா?!

Rajan said...

//ஆனால், தேவர் சாதியை சேர்ந்தவன் தான், அந்த இளைஞர்களை சுட்டு கொன்றான் என்பதுபோன்ற விமர்சனங்களை தான் ஏற்கமுடியவில்லை. //

இந்தப் பதிவில் அப்படி எங்கயாச்சும் சொல்லிருக்கா?! கிடையாது. அந்த சுற்றுவட்டாரத்திலேயே உங்கள் சாதியைச் சார்ந்த ஒருவரும் இல்லை என்றே வைத்துக் கொள்வோம். எந்த சம்பந்தமும் இல்லாமல் இறந்தவர்களை உச்சபட்ச குரூரத்துடன் வன்மம் பொதிய வசை பாடும் இவர்களுக்குள் சாதீயம் இந்த அளவுக்கு ஊறியதெப்படி? அணுக்கத்திலிருப்பவர் தாங்கள் என்பதால் ஒரு விளக்கம் எதிர்நோக்கி வினவுகிறோம். பதில் சொல்லுங்கள்

காவ்யா said...

//நான் என் சாதியின் பெயரை சொல்வதால் அது பெருமை இல்லையென்றே கருதுகிறேன்.
நான் பறையர் இனத்திலோ, பள்ளர் இனத்திலோ பிறந்திருந்தாலும் என் சாதியை சொல்லி இருப்பேன், அதை பெருமை நான் என் சாதியின் பெயரை சொல்வதால் அது பெருமை இல்லையென்றே கருதுகிறேன். நான் பறையர் இனத்திலோ, பள்ளர் இனத்திலோ பிறந்திருந்தாலும் என் சாதியை சொல்லி இருப்பேன், அதை பெருமை என்று//

இமல்

இப்படி பிறந்தால்…இருந்தால் என்றெல்லாம் பேசுவது ஏமாற்று வேளை.
பறையரும் பள்ளரும் சக்கிலியரும் தங்களின் ஜாதிகளை மறைத்துத்தான் பிறரோடு வாழ்கின்றனர். மதுரையில் ஜாதியைச் சொன்னால் வீடு தரமாட்டார்கள். அருந்த்தியர் காலனியில் நல்ல வீடு இருந்தாலும், குறைந்த வாடகை என்றாலும் வீட்டு வாடகைக்கு எவரும் வரமாட்டார்கள். மதுரையில் அவர்கள் வாழும் காலனிக்குச் சென்று பார்க்கவும். மதுரை மாநகரத்தில் தலித்துகளுக்கு மட்டுமே இன்றும் சேரிகள் இருக்கின்றன. ஒருகாலத்தில் ஊரின் எல்லையான இடங்களில் வைக்கப்பட்ட அவர்கள் இன்று அவ்வெல்லைகள் ஊருக்குள் வந்தாலும் அவர்கள் காலனிகளுக்குள் நுழையமுடியா நிலைமையே. பலவிதமான வகைகளில் தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது மதுரை மாவட்ட்த்தில் மட்டுமல்ல. மதுரை மாநகரிலுள்ளேயும்.
இப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்வோர் எப்படி பறையன், பள்ளன், சக்கிலியன் என்று ஊரறிய பிறரோடு வாழவரும்போது சொல்லமுடியும் இமலாதித்தன். பட்டால்தானே வலிக்கும் ? படாமாலே எப்படி சொல்கிறீர்கள்?
ஆனால் பிறஜாதியினருக்கு இப்பிரச்சினையில்லை. தேவர் என்றும் ஐயர் என்றும் ஐயங்கார் என்றும் பிள்ளை, முதலியார், நாடார்கள் என்றெல்லாம் சொல்லிப்பெருமைப்பட்டுக்கொள்கிறார்கள்.
ஏன் அப்படி என்றால், நம் சமூகம் தலித்துகளை கேவல்மாகப் பார்ப்பதால். இன்றுதான் தலித்து தலைவர்கள் அதை மாற்ற் முயற்சி செய்கிறார்கள். ஆனால் முடியவில்லை

கல்வெட்டு said...

http://amizhtha.wordpress.com/category/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%85%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/

-குற்றப் பரம்பரைச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களை மீட்டெடுத்து அவர்களுக்கு மறுவாழ்வையும் அவர்களது வாழ்வில் புரட்சிகர மாற்றங்களையும் உண்டாக்கிய நீதிக்கட்சியின் வேட்பாளராக இராமநாதபுரம் ராஜாவான சண்முக இராஜேசுவர சேதுபதி களத்தில் நின்றார்.


-அவரை எதிர்த்து குற்றப் பரம்பரைச் சட்டத்திற்கு எதிராக அதுவரை ஒரு துரும்பைக்கூட அசைக்காத காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக முத்துராமலிங்கத் தேவர் நிறுத்தப்பட்டார்.

-இந்தத் தேர்தலில் முத்துராமலிங்கத் தேவருக்கு எதிராக அவரது தந்தையார் உக்கிரபாண்டித் தேவரே நேரடியாக பெரியாருக்கும் நீதிக்கட்சிக்கும் ஆதரவாகப் பிரச்சாரம் செய்தார்.

Vairavan said...

ஆனால் இறந்தவர்கள் தலித்துகள் என்பதால் வன்முறையும் கலவரமும் நியாயமாகுமா?. பதட்டமான நேரத்தில் காவல் துறை முடிந்தவரை பொறுமை காப்பார்கள். ஆனால் நிலைமை மோசமாகும்போது அவர்கள் ஏதேனும் செய்யத்தான் வேண்டும். அது இப்படியாகும்போது குற்றம் காவல் துறை மீதுதான் என்று ஓட்டுக்காக அனைத்து கட்சியும் சொல்லத்தான் செய்யும். ஒருவேளை திரு. ஜான் பாண்டியனை அங்கு அனுமதித்து வேறு மோசமான நிகழ்வு ஏற்பட்டிருந்தால் அப்போதும் காவல் துறையே குற்றவாளி!

காவ்யா said...

பாண்டியன்!

உங்கள் சுயபுராணத்தை நன்றாகப்பாடியிருக்கிறீர்கள். இருக்கட்டும். உங்களால் ஒரு தலித்து இளைஞனோடு தோளில் கைபோட்டு உங்களூரில் நடக்கமுடியுமா ? உங்களைப்போன்ற உங்கள் ஜாதியினரும் செய்ய முடியுமா ? முடியாது. ஏனென்றால், அப்படிச் செய்யும் போது, ஒரு பள்ளனை உங்களுக்குச் சமமாக எடுத்துக்கொண்டேன் என ஊரறியச் சொன்னதாகும். செய்து காட்டுங்கள். உங்களோடு பிறரையும் செய்யச்சொல்லிக் காட்டுங்கள் பார்ப்போம்.

எங்கோயோ எவருக்கோ கல்வி உதவி செய்தோமெனச்சொல்லும் உங்கள் தேவர் பட்டாளம் ஏன் தலித்துகளுக்கு உதவக்கூடாது? தனக்குப் போகத்தானம் என்றால், உங்களவருக்குச் செய்துவிட்டுச் செய்யலாமே? வேறெங்கோ கல்வி உதவி செய்தேன் என்றால், உங்களவருக்குச் செய்து முடித்துவிட்டேன் என்று பொருளாகும். அப்படியானல் நும்மோடு வாழும் பள்ளருக்குச் செய்யலாமே?
மதுரை மாநகரின் 21 சேரிகள் இருக்கின்றன. பழங்கானத்திலேயே கூட மயானத்துக்குப் பக்கத்தில் பள்ளர் தெரு இருக்கிறது. தாத்தனேரியிலே ரேசன் கார்டுகளில் பள்ளர் தெரு என்றே எழுதப்படுகிறது. ஹீரா நகர் பெரிய சாக்கடைபக்கத்திலேயே இருக்கிறது. அருந்ததியர்கள் அங்கு விலங்குகளைப் போல அடிப்படை வசதிகளற்று வாழ்கிறார்கள். வேறெங்காவது போய்த் தொலைய வேண்டியதுதானே? என்று கேட்டால் வேறெங்கும் எங்களை இருக்கவிட மாட்டார்கள் எனச் சொல்கிறார்கள்.
இவர்கள் இன்று நேற்றா இருக்கிறார்கள் ? நாயக்கர்கள் காலத்துக்கு முன்னே இருக்கிறார்கள்.. 300 வருடங்களுக்குமுன் வந்த சௌராட்டியரை உயர்வாக எடுத்துக்கொண்ட தென்மாவட்ட்த்தமிழர்கள், தலித்துகளை ஏற்கவில்லை.
இவர்கள் எங்கேயும் இல்லை. உங்கள் மதுரையில்தான். .
“போற்றிப்பாடடி பெண்ணே, தேவர் குலத்து மண்ணை” என்றெல்லாம் பாடி ஜாதிப்பெருமை பேசும் உங்களைப்போல, “‘போற்றிப்பாடடி பெண்ணே, அருந்த்தியர்//பள்ளர்/பறையர் குலத்து மண்ணே” என்று இவர்களால் பாட முடியுமா ? முடிந்தால் என்ன ஆகும்? 7 கொலைகள் அல்ல 70 கொலைகள் அல்லவா விழும்!
பாண்டியன், நீங்கள் பாடிய சுயபுராணம் உணமையென்றால், மதுரை 21 சேரிகளில் 10 க்கும் மேலான என்.ஜீ.ஓக்கள் இருக்கின்றன. அதிலெதிலாவது உங்கள் பணி தொடரட்டும். இல்லையென்றால் உங்கள் ஜாதி ஜனத்தை, சேர, சோழ, பாண்டியர்கள் என்ற வரலாற்று வறட்டுக் கவுரத்தைவிட்டுவிட்டு, பள்ளர்களை சகோதர்ரகளாக சம்மாக ஏற்றுக்கொள்ளச் செய்யுங்கள்.

Samantha said...

superb sir...

காவ்யா said...

கொலைகளுக்கு முன்பே கலவரம் ஜானைக் கைது பண்ணியதால் மட்டுமா ? சேகரனின் குருபூஜை வணக்கம் தடை செய்யும் நோக்கமே இஃது என்று எடுத்துக்கொள்ளப் பட்டதாலேயே இக்கலவரம்.
தேவர் குருபூஜைக்கு வரவிருந்த தேவரின தலைவர்களை ஏன் கைது பண்ணுவார்களா?. மாட்டார்கள். அங்குதான் இருக்கிறது அரசின் உள்ளோக்கம். தலித்துகளை அலட்சியப்படுத்தலாம். தேவர்களை முடியாது. அவர்கள் ஆதிக்கச்சக்திகள்.
இதற்குத் தடையென்றால், அதற்கும் தடையென்றுதானே இருக்கவேண்டும்? ஜான் கலவரத்தை உண்டு பண்ணுவார் என்று எதிர்பார்த்தால், தேவர் குருபூஜைக்கு வந்தவர்கள் என்ன பஜனைகளாப் பாடிவந்தார்கள் ? ஒவ்வொரு ஆண்டும், தேவர் குருபூஜை தேவரின மக்களைக் கூட்டி ஜாதி வைரியத்தை ஏற்றத்தான் பயன்படுகிறது என்பதை இங்கு எழுதும் பாண்டியன், இமல் போன்றோராலும் மற்றவராலும் மறுக்கமுடியுமா ? சென்னையில் கூட செய்தார்களாம். ஒரு பதிவாளர் அதன்போது எழுப்ப்பட்ட ஜாதிவெறிக் கோஷங்களைப்பற்றி எழுதியிருந்தார்.
ஆக, இரு குருபூஜைகளுமோ தவறான வழியில் மக்களை இழுத்துக் கொண்டு செல்லப்ப யன்படுத்தப்படுகின்றன. இப்படியிருக்கையில் ஏன் ஜானை மட்டும் கைது பண்ணி குருபூஜையைக் கொலைக்களமாக்க வேண்டும் ? ஜானை அனுமதித்தால் மோசமான நிகழ்வுகள் ஏற்படும் என்று போலிசு ஊகித்திருந்தால், அவரை ஒரேயடியாகத் பரமக்குடிக்குள் எப்போதுமே நுழையக்கூடாதென்று சொல்லியிருக்கலாமே? ஏன் வரவிட்டுப் பின்னர் வந்தவுடன்ர் என்று காத்திருக்கவேண்டும்?
தலித்து ஓட்டுக்களை விட தேவர் செல்வாக்குத்தான் இன்றைய அரசுக்கு அதிகம் வேண்டுவதாக இருக்கிறது. நெல்லைமாவட்ட்த்தில் இரு தொகுதிகளுக்கு மேல் பள்ளர்களால் தர முடியாது. அ.தி.மு.க தேவர் பார்ட்டி; ஜெயலலிதா தேவர்களின் கைப்பாவை என்பதெல்லாம் ஊரறிந்த இரகசியங்கள்.
குருபூஜைகள் என்பது அவர்கள் சமூகத்துக்குழைத்தவர்களூக்கு அவர்கள் செய்யும் மரியாதை. அதைத் தடுப்பது ஜனநாயகத்துக்கு எதிரானது. நாளை விநாயகர் ஊர்வலத்தையும் மீலாது நபி ஊர்வலத்தையும் கூட தடைசெய்யலாம்.
தடைபண்ணுவது thorwoing the baby with bath water.
அரசு செய்யவேண்டுவது என்னவென்றால், முதலில் இந்த விசயத்தை ஒரு தாற்காலிக Law and Order problem என்றெண்ணாது, நிரந்தர தீர்வு காண வேண்டும். என்னென்ன தியதிகளில் இவை வருகின்றன என்று தெரியும். அதற்கு முன் இக்குருபூஜைகள் எப்படிக்கொண்டாடப்பட வேண்டும் சட்டம் ஒழுங்கு பிர்ச்சினை வராமல் தடுக்க என்று வரையறைகளை ஜாதித்தலைவர்களோடு ஆலோசித்துப் போட வேண்டும். மீறியவர்களுக்கு என்ன தண்டனைகள் என்று அவ்வரையறைகளிலேயே சொல்லப்பட வேண்டும் எந்தந்த தெருக்களில் ஊர்வலம் வரவேண்டும் போன்று.
ஜாதித்தலைவர்களும் மக்களும் மட்டும்தான் கலந்து கொள்ளவேண்டும். அரசியல் கட்சி வைத்திருப்போர் தடை செய்யப்படவேண்டும். அவர்கள் தனி நபராக வரலாம். ஆனால் தொண்டர்களோடு வரக்கூடாது. இன்னதியதியில் இன்ன்னேரத்தில் வர முன்ன்னுமதி கேட்டிப்பெற வேண்டும் எல்லாத்தலைவர்களும்.
குருபூஜைகள் கலவ்ரங்களாக மாறாமலிருக்க அரசு மனது வைத்தால் முடியும்.

குடுகுடுப்பை said...

அப்துல்லா பிரான்மலைக்கள்ளன் அவ்வளவு பேரும் திருட்டுதொழில் நடத்தியவர்களா? என்ன, அவர்களில் யாரோ சிலர் நடத்தியதற்கு அனைவரும் ஆங்கில அரசால் குற்றம் சாட்டப்பட்டவர்கள், திருட்டுத் தொழிலிருந்து விடுபட மதம் மாறினேன் என்று சொல்வது ஏற்றுக்க்கொள்ளத்தக்க வாதம் அல்ல.புதுக்கோட்டை மாவட்டடதில் பகட்டுவான்பட்டி,கோமாபுரம் என்று ஒரு ஊர் உள்ளது, அந்த ஊரில் உள்ள கள்ள சாதி மக்கள் மாடு திருடுவார்கள், அதற்காக அந்த மாவட்ட கள்ளர்கள் எல்லாம் திருடர்கள் என்றாகி விடுமா?

குடுகுடுப்பை said...

இந்த பதிவு இந்த மூடர்களின் உயர்சாதி வெறி பற்றியதால் அப்துல்லா அவர்களின் கருத்துக்களை பற்றிய வேறு இடத்தில் விவாதிப்போம்.

Unknown said...

நீங்க எழுதறது கி.மு.அரசியல். இன்றைய அரசியலை எப்படி சொல்ல, ஜாதி வெறியர்கள் என்றா, டீசண்ட் தாதாக்கள் என்றா..? அத சொல்லலியே!

Santhini said...

இரத்தம் சுண்டும் வயதில் அண்ணா ஹசாரே ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் இறங்கியது போல, சாதியை/சாதிப் பெயர்களை / சாதீய அடையாளங்களை ஒழித்துக் கட்டும், போராட்டத்தில்.....நாமெல்லாம் குதித்தால் என்ன? சாதிக்கு எதிராக பொங்கியெழும் மனித நேய பெருந்தகை-களுக்கெல்லாம் பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் மட்டுமில்லாமல், இரத்தம் துள்ளும் இள வயதிலேயே களத்தில் இறங்கும் பேராண்மை உண்டா ?

Manithan said...

For Kaviya,

எங்கோயோ எவருக்கோ கல்வி உதவி செய்தோமெனச்சொல்லும் உங்கள் தேவர் பட்டாளம் ஏன் தலித்துகளுக்கு உதவக்கூடாது?

Check this link

http://www.blogbharti.com/kuffir/caste/michael-thevar-a-man-with-a-mission/

Manithan said...

பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவ நீதி விசாரணை அறிக்கை

http://savukku.net/home1/1241-2011-09-14-09-15-52.html

Bala Murugan said...

திருட்டு நாய்களா? ஜாதி ஜாதி ன்னு சொல்லி ஏன்டா தலித் நாய்களா, நீங்களா உங்களை அசிங்க படுத்திகிறீங்க???? இப்போ எல்லாம் நீங்க முக்குலதொருக்கு தானே பிறந்து இருக்கீங்க??? உங்கள பாதி பேர் அப்படி தானே டா.. அப்புறம் ஏண்டா

Bala Murugan said...

நண்பர்களே, தலித் மக்களுக்கு அதிகம் சப்போர்ட் பண்ணும் முன்னே அவர்கள் பண்ணும் அட்டுழியங்களை பாருங்கள்,, அப்புறம் சொல்லுங்கள்,, சட்டம் இப்போது அவர்கள் கையில், அதை வைத்து யாரையும் அவர்கள் தீண்டாமை கொடுமை என்று பொய் சொல்லி கேஸ் கொடுக்கிறார்கள்,, இன்னும் பல அட்டுழியங்கள்,, வெறுமனே டிவி யும் நியூஸ் யும் பார்த்து முக்குலத்தூர் மேல புகார் கூற வேண்டாம்.. நிலைமை ஐ நேரில் கண்டு பின் எழுதுங்கள்...

Rajan said...

//தலித் மக்களுக்கு அதிகம் சப்போர்ட் பண்ணும் முன்னே அவர்கள் பண்ணும் அட்டுழியங்களை பாருங்கள்//

அட்டூழியங்கள் என்னென்ன நண்பா! ஒவ்வொன்றாக சொல்லுங்கள்! பிசிஆர் கேஸ் கொடுப்பதுதான் அட்டூழியமா! சரி அடுத்து?

Rajan said...

//இப்போ எல்லாம் நீங்க முக்குலதொருக்கு தானே பிறந்து இருக்கீங்க??? உங்கள பாதி பேர் அப்படி தானே டா.. அப்புறம் ஏண்டா // இதற்கு அர்த்தம் என்ன நண்பா.. இப்போதெல்லாம் முக்குலத்தோர் இணக்கத்துடன் பள்ளர் பறையர் இன்னபிற தாழ்த்தப்பட்டவர்கள் குடும்பங்களில் பெண் எடுத்து பெண்கொடுத்து சமாதானமாகி பிள்ளைகள் பெற்று அவர்களும் வளர்ந்து விட்டனர் என்பதா?

குடுகுடுப்பை said...

Bala Murugan has left a new comment on the post "இறப்பை கொண்டாடும் சாதி வெறி!":

திருட்டு நாய்களா? ஜாதி ஜாதி ன்னு சொல்லி ஏன்டா தலித் நாய்களா, நீங்களா உங்களை அசிங்க படுத்திகிறீங்க???? இப்போ எல்லாம் நீங்க முக்குலதொருக்கு தானே பிறந்து இருக்கீங்க??? உங்கள பாதி பேர் அப்படி தானே டா.. அப்புறம் ஏண்டா //
இந்த மாதிரி கேடுகெட்ட கமெண்ட் போடுற உன் மேல பிசிஆர் தான் போடுவாய்ங்க, போய் திருந்தி பிழைப்பைபார், இல்லை உங்களது நோக்கம் குட்டையக்குழப்பும் போலியாக இருந்தால் அதை தொடர்ந்து செய்யவும்

வருண் said...

அண்ணே பாலமுருகா!

ரொம்ப ப்ரவோக்கிங் காமெண்ட்ஸ் எழுதி சிறுபிள்ளைத்தனம் செய்து முக்குலத்தோரை ரொம்ப மோசமாக்கிவிடாதீங்க!

அப்புறம் நீங்க இப்படி எழுத்வதால நீங்க முக்குலத்தோர்னும் நாங்க எல்லாம் நம்புவோம்னு நெனச்சுக்காதீங்க! ஒரு சில கேவலமான தமிழன்கள் (உன்னைப்போலதான்) எதையாவது இப்படி ஒளறி பல கலவரங்களை உண்டாக்கிவிடுவது.

vaal: What the fuck are you doing man? Clean up your comments! Otherwise, you are RESPONSIBLE for all this NONSENSES. MInd it. I am serious here!

ஓ, உங்களுக்கு ஆங்கிலம் தெரியாது இல்லை. இந்த பாலமுருகன் உளறல்களை எடுக்கலைனா, நீங்கதான் இங்கே சாதிக்கலவரத்தை உண்டாக்குவதா ஆகும்.

PATTUKOTTAI (Ethu Enga Area) said...
This comment has been removed by the author.
வருண் said...

இந்தப் பதிவில் வரும் பின்னனூட்டங்களில் இருந்து முதுகுளத்தூர், கமுதி, பரமக்குடி, ராம்நாட் பக்கம் போகாதவங்களுக்கு அந்த மக்களின் "ஆட்ட்டூட்" தெளிவாத் தெரியும்!

கஞ்சிக்கு வழியிருக்காது, படிப்பறிவு இருக்காது, ஆனா தண்ணியப்போட்டுட்டு தன் "உயர்சாதி"னு பெருமையிலே வாழும் முட்டாள்கள் நிறைந்த இடம்!

ஆமா. வெள்ளைக்காரன் ஆளும்போது இவனுக வீரம்லாம் எங்கேப்பா போச்சு? சும்மா கீழ்சாதிக்காரன், முடியாதவனை அடிச்சே பொழைப்பை ஓட்டிட்டானுக. இல்லைனா ஏன் வெள்ளைக்காரன் வந்து நம்மள ஆள்றான்?? அதாவது தெரியுமா இந்த முண்டங்களுக்கு? வெள்லைக்காரன் ஆளும்போது உன்னால ஒண்ணும் புடுங்க முடியலைனு??? வீரம் மயிறு மண்ணாங்கட்டி எல்லாம் வெட்டிப் பேச்சு பேசியே வீணாப்போயிட்டானுக!

ஆளவந்தான் said...

ku.ku,

intha maathiri poi CASE podurathu illenru solreengala? vaaiyai thiranthaale "jaathi yai solli thittinaan"nu CASE podalam. Prove panni veliyila varrathukkulla avan thaavu theenthirum. intha saatharaanamana vishayam kooda ungalukku theriyaathathu aacharyama thaan irukku,

thavira inge yaaravathu John Pandian public'la pesinathai ner'la kettu irukeengala?

PS: I Have no tamil font :(

வருண் said...

***இரா.ச.இமலாதித்தன் said...

அப்துல்லா அண்ணே,

வீரத்துக்கு யார்வேண்டுமானாலும் விளக்கம் கொடுக்கலாம்.நீங்க கொடுத்திருக்கும் விளக்கம் வீரம் சார்ந்தது அல்ல.பயத்தினால் மதம் மாறினார்கள் என்பதே உண்மையாக இருக்க முடியும்.**

அண்ணே விமலாதித்தரே!

எனக்குத்தெரிய நெறைய வீரமறவர்களும், தேவர்களும், கிருத்துவத்துக்கு மாறி இருக்காங்க?

கிருத்தவமும் இன்னொரு மதம்தான், இஸ்லாம் போலவே!

வீறமறவர்களுக்கும் பயம்தான் மதமாற்றத்துக்குக் காரண்ம்ங்கிறீங்களா? என்ன இப்படி சொல்லிப்புட்டீங்க! :)))

காவ்யா said...

Manithan

அது சரி . நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் இதென்ன ? முதுகுளத்தூரில், கமுதியில், பரமக்குடியில், ஒரு சக தலித்துடன் தோள் மேல் கை போட்டுக்கொண்டு, இவனும் நானும் சமம் என்று சொல்ல உங்களால் முடியுமா ? அத்தலித்து எந்தவொரு குற்றமும் செய்யாதவன். அவனை சகோதரனாக ஏற்றுக்கொள்ள தேவர்கள் உங்களை அனுமதிப்பார்களா ?

வருண் said...

***//நான் என் சாதியின் பெயரை சொல்வதால் அது பெருமை இல்லையென்றே கருதுகிறேன்.
நான் பறையர் இனத்திலோ, பள்ளர் இனத்திலோ பிறந்திருந்தாலும் என் சாதியை சொல்லி இருப்பேன், அதை பெருமை நான் என் சாதியின் பெயரை சொல்வதால் அது பெருமை இல்லையென்றே கருதுகிறேன். நான் பறையர் இனத்திலோ, பள்ளர் இனத்திலோ பிறந்திருந்தாலும் என் சாதியை சொல்லி இருப்பேன், அதை பெருமை என்று//***

நான் அப்படிப் பிறந்திருந்தால் இப்படி இருந்து இருப்பேன் என்று சொல்வதெல்லாம் சுத்தமான மடத்தனம்! If you are brought up in a completely different settings, you WILL BE DIFFERENT.

If you were brought up in US, you would never care what the fuck your caste were! YOu would worry about some other issues like your dark skin in front of whites. And your look and racial issues and so on. So, please dont say,

நான் படிச்சிருந்தால் முதல் மாணவனா வந்திருப்பேன்...

நான் தலித்தா இருந்தால் சாதியச் சொல்லியிருப்பேன்.. all that bullshit.

காவ்யா said...

Manithan

அது சரி . நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் இதென்ன ? முதுகுளத்தூரில், கமுதியில், பரமக்குடியில், ஒரு சக தலித்துடன் தோள் மேல் கை போட்டுக்கொண்டு, இவனும் நானும் சமம் என்று சொல்ல உங்களால் முடியுமா ? அத்தலித்து எந்தவொரு குற்றமும் செய்யாதவன். அவனை சகோதரனாக ஏற்றுக்கொள்ள தேவர்கள் உங்களை அனுமதிப்பார்களா ?

kaliraj said...
This comment has been removed by the author.
kaliraj said...

தேவர் தெய்வம் அவர் வழியில் நான் நடப்பேன்

குடுகுடுப்பை said...

ஆளவந்தான்
பொய் பிசிஆர் வழக்குகளே மிக அதிகம், இங்கே நான் சொல்லியிருப்பது குட்டையில் மீன் பிடிக்க வந்த பாலமுருகனுக்காகவே. அதே நேரம் வன்கொடுமை செய்பவனை தீண்டாமை சட்டத்தில் போடுவதில் தவறில்லை.

Thekkikattan|தெகா said...

இங்கே எனக்கு ஒரு விடயம் புரியவில்லை. உலக அரசியலும், ஈழத்தின் வீழ்ச்சிக்கெல்லாம் முடிச்சு போடத் தெரிந்த பெரியவர்கள் எப்படி இன்றைய பரமக்குடி சகோதரர்களுகிடையே வெட்டி சாய்த்துக் கொள்வதில்தான் அதே உலக அரசியலுக்குப் பின்னான சில்லரத்தைனமும் என்பதனை விளங்கிக் கொள்ள முடியவில்லை.

ஈழத்தில் தமிழர்களுக்கிடையே ஒற்றுமை இல்லாமை இதே முட்டாத் தனத்தில்தானே. ஒருவன் தோளில் இன்னொருவனை தூக்கி பிடித்துக் கொண்டு இவனுக்கு நான் பெரியவன், அவனுக்கு நான் சிறியவன் என்று.

இதில் என்ன பெருமை இருந்துவிட முடியும். எப்படி இத்தனை திருகல் தமிழில் விசயங்களை சொல்ல முடிந்தவர்களால் ஒரு சிறிய லாஜிகள் விடயத்தை புரிந்து கொள்ள முடியவில்லை.

ஒரு இனமாக மேலே எழும்ப வேண்டுமானால், முதலில் இந்த குறுகிய சின்னப்புத்தியை விட்டொழிக்க வேண்டுமென்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியுமா?

... தொடர்கிறது

Thekkikattan|தெகா said...

...தொடர்ச்சி

முதலில் மனிதர்களாக இருக்க மனசாட்சி வேண்டும். நேர்மையான கேள்விகளை நமக்குள்ளே எழுப்பி அவைகளுக்கு முகம் கொடுக்க பழகிக்கொள்ள வேண்டும். பிறகு புத்திசாலித்தனமான கேள்விகள், உரையாடல்கள். தவிர்த்து, இது போன்ற மட்டகரமான நிகழ்வுகளுக்கெல்லாம் சால்ஜாப்பு சொல்லிக் கொண்டிருப்பது எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதாகத்தான் அமைந்து போகும்.

எரிச்சலாக வருகிறது. சில பின்னூட்டங்களை படிக்கவே. தமிழ் திருகி எழுதும் ஜாதி போஸ்ட்டுகள் இதனையும் படிச்சு பார்த்துட்டு சொல்லுங்க இயற்கையின் தேர்ந்தெடுப்பு சாதீக்கலவரம்...

ஆளவந்தான் said...

The.Ka,

You have got the right point here - I was supposed to highlight on this. I cannot write it in tamil now. I will comment on ths later.!

Thekkikattan|தெகா said...

ஆளவந்தான் - நன்றி.

உங்களுக்கு ஒரு வேண்டுகோள். நீங்க ஒரு பஸ் விடுங்க :) ஏன் அப்படியாக ஒடுக்கப்பட்டவர்கள் தனக்கென சிறிதே குரல் எழுப்ப முடியும் என்று உணரும் பொழுது திமிரி அடித்து, நீங்க சொன்ன வழிகளிலெல்லாம் பொய் கேசு கொடுக்கிற அளவிற்கு ஆகிப் போகிறது என்று அங்கே விவாதிக்கிற மாதிரி.

அதுக்கு பின்னாக மிகப் பெரிய சமூக உளவியல் சங்கதி இருக்கிறது பேசுவோம், அங்கே.

வருண் said...

***ராஜன் said...

//முக்குலத்தோர் ன்னு சொல்ற மூணு சாதிளையும் பொண்ணு கொடுப்பாங்க, எடுப்பாங்க, ஈனசாதி ன்னு இவன்ககுள்ளஎம் திட்டிக்க மாட்டாங்க.//

கள்ளர் வீட்டுப் பொண்ண அகமுடையார் பையனுக்கு கல்யாணம் பண்ணி வெக்கறது இயல்பான நிகழ்வா???

சும்மா போற போக்குல அடிச்சுவிடறார்!
செப்டம்பர் 15, 2011 4:06 PM ***

They do have problems with themselves! Who is superior and all that bullshit! LOL Whoever is majority in that "area" is considered superior in that area.

I know some cases where agambadiyaar and mElagaaravargal (MK caste), பொண்ணு கொடுத்து எடுத்துக்கொள்வது!

The fact is, these days, agambadiyar are coming under "BC" and the other two (மறவர், கள்ளர்) comes under "MBC" I believe. So, how can they all be the "same"? LOL

They all the three unite only for illtreating the dalits if you carefully look at their unity!

குடுகுடுப்பை said...

வருண்
உங்கள் கமெண்டுகள் அருமை.

குடுகுடுப்பை said...

They all the three unite only for illtreating the dalits if you carefully look at their unity!
//
முழுவதும் சரியல்ல, அவரவர் பகுதிகளில் அவரவர்கள் சுப்பீரியாரிட்டியை தனியாக காண்பிக்கிறார்கள், முக்குலத்தோர் என்று எந்த ஒற்றுமையும் கிடையாது, மற்றவர்கள் இந்த மூவரையும் கிடைத்த வார்த்தை இது அவ்வள்வே

குடுகுடுப்பை said...

மற்றவர்கள் இந்த மூவரையும் திட்ட கிடைத்த வார்த்தை இது அவ்வள்வே

வருண் said...

முக்குலத்தோர் என்ற வார்த்தையை வச்சு யாரையும் திட்ட முடியாதுங்க!

அதே சமயத்தில் சேருவாரு நண்பர்கள், ஒரு கள்ளரை "அவன் கள்ளப்பய" னு திட்டுவதையும், ஒரு மறவரை/தேவரை, அவன் மறவன், மறவன் உறவும் சரி பனைமறத்து நிழலும் சரினு திட்டுவதையும் பார்த்து கேட்டு இருககேன்! அதேபோல தேவர் நண்பர்கள் அவங்க ரெண்டுபேரையும் திட்டுவதையும் பார்த்து இருக்கேன்! :)))

இதைப்பத்தி நேரயாவே பேசலாம்

இதைப்பத்தி நெறையா பேசலாம். ஆனால் the bottomline is: இவங்க மூவரும் ஒரு தலித்தையும் தன் சகோதரனாக, நண்பனாக, தனக்கு சமமாக இவர்கள் என்னைக்கு "உணருகிறார்"களோ அன்னைக்குத்தான் இவங்களுக்கு அறிவு வந்து இருக்குனு நம்புவேன்.

Otherwise they all being stupid and ignorant and not knowing how to treat another human being equally.

Thekkikattan|தெகா said...

//இவர்கள் என்னைக்கு "உணருகிறார்"களோ அன்னைக்குத்தான் இவங்களுக்கு அறிவு வந்து இருக்குனு நம்புவேன். //

சரிதான் நீங்க கூற வருதுது. அந்த உணர்வு எப்படியாக அவர்களின் உணர்வுகளுக்குள் வைத்து கரைக்கபெறுவது. என்னன்ன வழிகளில் அவர்களின் பாசத்தினை பிணைப்பது, வருண்?

குடுகுடுப்பை said...

Otherwise they all being stupid and ignorant and not knowing how to treat another human being equally.
//
agree.
இந்த மூவரும் இதை சேர்ந்து செய்யுறாங்கன்னு சொல்றத ஒத்துகலைங்க, மூவரும் சேர்ந்து ஒரு ஏரியாவில இருக்கிறதும் இல்லை. ஆனால் ஆங்காங்கே யாராவது முக்குலத்தோர்னு தட்டி பிடிச்சு எதையாவது உளருவது நடக்கிறது.

வருண் said...

It is very simple, thega. Good and bad people are everywhere. அது முக்குலத்தோர்லயும் சரி, தலித்களிலும் சரி. ஒருவருக்கு நல்ல நண்பர் தலித்தில் உள்ள ஒரு நல்லவர்லயும் கெடைக்கலாம். அதேபோல் முக்குலத்தோரில் பெரிய பெரிய துரோகிகளையும் பார்க்கலாம். சாதி அடிப்ப்படையில் நட்பு பாராட்டாமல் "நல்லவர்" யார், யார் தரமானவங்க, யாரு நம்பிக்கையானவங்கனு சாதியைத் தூக்கி எறிந்துவிட்டு அங்குள்ளவனை மனுஷனா பார்க்கக் கத்துக்கனும். For that basically one need to understand that nobody is inferior to him/her just because he was born in such and such family. When you dont want to accept someone is superior bcos he is born in such and such community, then you should never think that someone is inferior to you either!

Now, why do you think yourself is superior? Ask yourself! Dont tell me because I belong to this community we are blah blah blah. That is bullshit. Tell about your talents, qualities and that your high standards and abilities which makes you superior. NOt your CASTE! That will not make you superior or inferior! It is as simple as that but you can complicate the hell out of it! :)

வருண் said...

***குடுகுடுப்பை said...

Otherwise they all being stupid and ignorant and not knowing how to treat another human being equally.
//
agree.
இந்த மூவரும் இதை சேர்ந்து செய்யுறாங்கன்னு சொல்றத ஒத்துகலைங்க, மூவரும் சேர்ந்து ஒரு ஏரியாவில இருக்கிறதும் இல்லை. ஆனால் ஆங்காங்கே யாராவது முக்குலத்தோர்னு தட்டி பிடிச்சு எதையாவது உளருவது நடக்கிறது.
செப்டம்பர் 16, 2011 2:02 ***

உண்மைதான் முக்குலத்தோர்கள் சேர்ந்து எதுவும் செய்வதில்லை. ஆனால் நம்ம "பாலமுருகன்" மாதிரி கேவலமாக வசனம் பேசுறவங்களை என் கண் முன்னால பார்த்து இருக்கேன். அப்படி பேசிட்டு தனியாப் போகும்போது அவங்ககிட்ட மரண அடி வாங்கி ஆஸ்பத்திரியில் படுத்து இருக்கவனையும் பார்த்து இருக்கேன். இந்த மாதிரி எளக்காரமா இன்னொரு சாதிக்காரனைப் பேசும்போது அவங்களுக்கு ரத்தம் கொதிக்கிறதுல எந்தத்தப்பும் இல்லையே? இப்படி தரித்திரமாப் பேசித்தான் எல்லாம் எழவும் ஆரம்பிக்கிது அப்புறம் கடைசியில் வந்து தலித்கள் சாவில் முடியுது! :(

குடுகுடுப்பை said...

முன்னமே சொன்னது போல் அடக்க நினைப்பவர் அடி வாங்கியே ஆகவேண்டும் இது காலத்தின் கட்டாயம்.

tekvijay said...

//தே.மகன் படத்தில், ஸாரி சுருக்க சொன்னால் அர்த்தம் மாறுகிறது, தேவர்மகன் படத்தில் இன்னொரு சாதிவெறியர் சிவாஜி பேசுவது போல் ஒரு காட்சி.

”என்னய்யா பண்ணசொல்ற
போருக்கு கூப்பிட்டப்ப, வேல்கம்பையும், வீச்சருவாளையும் எடுத்துகிட்டு வெற்றிவேல், வீரவேல்னு போருக்கு போனவியக நம்ம பயலுக, இப்ப அதை கீழ போடச்சொன்னா எப்படி போடுவானுங்க?”

எப்படி தெரியுமா இருக்கு, எல்லையில் நிற்கும் ராணுவத்தினர் அதே துப்பாக்கியை கொண்டு வந்து ஊருக்குள் அனைவரும் போட்டு தள்ளிவிட்டு, பழகிடுச்சுங்க இப்ப கீழ போடச்சொன்னா எப்படின்னு கேக்க சொல்ற மாதிரி இருக்கு!//

கேவலமான கற்பனை!! அபத்தமான புரிதல்..

அந்த சாதியை சேர்ந்த சாதி வெறியரா இந்த மேற்சொன்ன வசனங்களை பேசும்முன்னால் காட்டுமிராண்டிகள் என தன் சாதியையும், இந்த சாதியைச்சேர்ந்ததால் தானும் ஒரு காட்டுமிராண்டிப்பய என விளித்துக்கொண்டு, ஆனால் நிஜத்தில் அந்த வன்முறையை முற்றிலும் எதிர்ப்பது போல நடித்தாரே..

கொட்டை எடுத்த புலியை திட்டுகிரீர்களா சரி, எவ்வளவு திட்டினாலும் தகும். சிவாஜி எப்படிங்க சாதி வெறியரானார்?!? எல்லா சாதியிலும் பரதேசிகளும் உண்டு உத்தமர்களும் உண்டு. பாத்து பேசுங்க

blog vanished said...

கள்ளர்கள் என்பவர்கள் தமிழர்களே அல்ல

இங்கே சொல்லப்படும் கள்ளர் என்பது சாதியே அல்ல. அது ஒரு குழு. ஆங்காங்கே ஊரைவிட்டு ஒதுக்கப்பட்டு சாப்பிட வழியில்லாமல் ஊர்மக்களை கொள்ளையடித்து வாழ்ந்த கூட்டம். ஒருகட்டத்தில் ஊருக்குள் வந்தவர்கள். உசிலம்பட்டியில் நீண்ட காலமாக வாழ்ந்து வந்த வடுகர்கள் என்ற வடநாட்டு ஆதிகுடிகளின் பெண்களை திருமணம் செய்து புது சந்ததியை உருவாக்கியவர்கள். தென்மாவட்ட உழைக்கும் வர்க்கத்தின் நிறம் கறுப்பு. இப்போதும் கூட பிரமலைக்கள்ளர்களில் பலரது நிறம் செக்கச்சேவல் என்று அக்கரகாரத்து ஐயரின் நிறத்தை விட சிவப்பாக இருப்பார்கள். இதற்கு காரணம் அவர்கள் வடுகர்களிடம் திருமண உறவு வைத்து அதிலிருந்து பிறந்தவர்கள் தான். இது போல் மதுரை மேலூருக்கு அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்த கள்ளர் குழு அங்கிருந்த கோனார், பிள்ளைமார் போன்ற சாதிமக்களின் பெண்களுடன் திருமண உறவு வைத்துக் கொண்டதாக சொல்லப்படுவதுண்டு.
ஆக....இவர்களுக்கு வேரும் கிடையாது. கொட்டையும் கிடையாது. இவர்கள் தமிழர்களும் அல்ல. வடமாநில மக்களின் கலப்பு ரத்தம் தான் இவர்களிடம் ஓடுகிறது என்பது ஒருவகையில் உண்மை. வன்முறை இல்லாத சமூகத்தில் திடீரென புகுந்து கொள்ளையடிக்கும் போது பயன்படுத்திய வன்முறையை பிரயோகித்து பெண்களை கவர்ந்து கொண்டது இவர்களுக்கு கிடைத்த லாபம். இந்த வன்முறை நன்றாக செயல்படுகிறது என்பதை தெரிந்து கொண்ட பிறகு தான் இவர்கள் மற்றவர்களை எளிதாக வன்முறை மூலம் அடக்கி விட முடியும் என்ற முடிவுக்கே வந்தார்கள். பசும்பொன் முத்துராமலிங்கத்திற்கு தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட வன்முறை கும்பலின் கூட்டு தேவைப்பட்டதால் கள்ளர்களையும் இணைத்துக் கொண்டு, மறவர், அகமுடையார், கள்ளர் முக்குலம் என்ற புதிய நிலைப்பாட்டை எடுத்தார் என்பது தான் உண்மை. இப்போதும் கூட கள்ளர் எனக்கூறப்படும் பெண்களில் முகத்தில் வடநாட்டு பெண்களின் முகத்தில் காணப்படும் செம்புள்ளிகளை பலரிடம் காணமுடியும்.
இந்த உண்மை இவர்கள் சாதியிலேயே பலருக்கும் தெரியும். வரலாறுகளை மறைத்து பெரிய வீரவேசமான இனமாக சொல்லிக் கொள்வதுண்டு. ஆனால் இவர்கள் தமிழ்நாட்டில் என்ன தான் சாதித்தார்கள் என்பது தான் தெரியவில்லை. இவர்கள் வீட்டு பெண்கள் தங்கள் கணவர்களையே "டே, பொண்டுகா" என்று அழைப்பதை சாதாரணமாக கேட்க முடியும். ஆக..இவர்களுக்கு கொட்டை எடுக்கப்பட்டுவிட்டது என்பதற்கு வேறு யாரும் சான்றிதழ் கொடுக்க வேண்டாம். அவர்கள் வீட்டு வீரப்பெண்மணிகளே கொடுத்துவிட்டார்கள். ஆக.கொட்டையுமில்லை. இவர்கள் தமிழனுமில்லை.

Unknown said...

அப்பத்த அரசியல் வாதிகள் ரெளடிகள்,இந்தைய அரசியல்வாதிகள் தாதாக்கள்.
இன்றைய போலிஸ்காரங்களை சுருக்கமா
சொன்னா, ஒவ்வொரு போலிசும் ஒரு சர்வாதிகாரி. சரியா..

Tharman said...

blog vanished said...
கள்ளர்கள் என்பவர்கள் தமிழர்களே அல்ல
////

semma comedy boss neenga, kallar thamizhan illa seri, inimay maravar agamudayar yaarumay thamizhanay illa athu aduthu nu solvinga seri unga computer unga key board, neenga mattum thaan thamizhargala ?? right vidunga, ippadi solli thaan oru edathula unga ellathayum pithukki eduthu utkara vechurkkanunga, ingayum athu thaan unga nelamai ... 7 per sethuttanunga seri,avanunga enna suthanthira porattathilaya sethanunga?? police eh adichanunga police retaliate panuchu, ithai ethirka thiraniyilla, itha pathi thaiyriama road la vanthu poraduratha ututtu inga vanthu ivan pondatti avana enna koopdra, aduthavan veetukulla etti parkarathellam oru pozhappa ?? thorantha veetukulla yetho nulaiyara maathiri ulla nulanju yellathayum parka vendithu, athay mathiri oru seyal thaan aduthavan wall eh irukkura vishayatha thirudi inga vanthu podrathu, aaga motham un veeta paakama aduthavan veetla enna nadakuthunu pakrathu thaan un main velaya pochu, ithula naanga thaan THAMIZHARGAL nu perumai vera .... vetka kedu

தன்னிகரில்லா தமிழன் said...

@emal & thaniyan
இவர்கள் எழுத பட்ட வார்த்தைகளையே தின்று வாழ்கின்ற மனிதர்கள் ,

திசை தடுமாறுகின்ற மேதையின் பொய்களை மூட்டை கட்டி தன் முதுகில் சுமந்து நிற்பவர்கள்.

இவர்கள் வார்த்தை ஏமாற்றமடைந்த மனதின்(மனிதனின்) கழிவுகள் ..

கழிவுகளை இவர்களே அள்ளி கொள்ளட்டும் முடிந்தால் தின்றும் கொள்ளட்டும்..

இவர்களை வார்த்தை கழிவுகளை நீங்கள் பொருட்படுத்த வேண்டாம்,,,

எழுஞாயிரை எவரும் கை கொண்டு மறைத்திட இயலாது...

ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவனும் மறைவதில்லை...தேவனும் மறைவதில்லை ..

இனிமேல் இவர்களிடம் உரையாற்றி உங்களது பொன்னான நேரத்தை பொறுப்பு அற்றவர்களிடம் வீணாக்க வேண்டாம்,,,

Prakash said...

கள்ளர்களில் இருவகை உண்டு, தஞ்சை பகுதியில் இருப்பவர்கள் Wet Land Kallars என்றும், மதுரை பக்கம் உள்ளவர்கள் Dry Land Kallars , இதில் Dry Land Kallars எனபடுகிற பிரான் மலை கள்ளர், மறவர் மற்றும் அகமுடையார் (மதுரைக்கு கீழே உள்ளவர்கள் மட்டும்) சேர்த்து முக்குலத்தோர் என்று அழைக்கபடுகின்றனர்.

தஞ்சை பகுதி கள்ளர்களும், வட தமிழகத்தில் உள்ள அகமுடையர்கள் (அகமுடை முதலியார்) அந்த முக்குலதோர் பட்டியலில் வரமாட்டார்கள்.

வருண் said...

***blog vanished said...

கள்ளர்கள் என்பவர்கள் தமிழர்களே அல்ல

இங்கே சொல்லப்படும் கள்ளர் என்பது சாதியே அல்ல. ***

'ப்ளாக் வானிஷ்ட்" சொல்ற 'உண்மையை" எல்லாரும் கேடுக்கோங்கப்பா! என்கே இருந்துடா வருதுக இதமாதிரி அட்ரெஸஸில்லாத மூதேவிகள்!

Blog-vanished or whater fuck you are!If you want to say anything concrete/reliable come up with a decent id, moron!

வருண் said...

***காவ்யா said...

Manithan

அது சரி . நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் இதென்ன ? முதுகுளத்தூரில், கமுதியில், பரமக்குடியில், ஒரு சக தலித்துடன் தோள் மேல் கை போட்டுக்கொண்டு, இவனும் நானும் சமம் என்று சொல்ல உங்களால் முடியுமா ? அத்தலித்து எந்தவொரு குற்றமும் செய்யாதவன். அவனை சகோதரனாக ஏற்றுக்கொள்ள தேவர்கள் உங்களை அனுமதிப்பார்களா ?***

நீங்க பருத்திவீரன் படம் பார்த்து இருக்கீங்களா? அந்தப் படத்த கவனிச்சுப் பாருங்க. அமீர் நெறையா விசயத்தை அழகா சொல்லியிருப்பார்.

அது சினிமா. நீங்க சொல்ற நட்பெல்லாம் நடந்துக்கிட்டுதான் இருக்கு. தேவர்கள் எல்லாரும், இரக்கமில்லாதவர்களோ, மோசமானவர்களோ கெடையாது. It is all ignorance. Not many try to teach them, they are not different from you. எனக்குத் தெரியவே ஒரு சில நண்பர்கள் இவர்களுடன் "மிங்கிள்" ஆகி, எப்போவாவது ஒரு சில "எம்பாரஸிங்" சூழ்நிலை வரும்போது அதை சகித்துக்கொண்டும் இருக்காங்க.

நம்ம பாரதிராஜா, இளையராஜா நட்புகூட ஒரு உதாரணமா எடுத்துக்கலாம். However, BR belongs to kaLlar, not maRavar. :)

Ashok D said...

சாதியம் = கிராமங்கள் = பழக்கம்

நான் பட்டினம்.. இரு மாதங்களுக்கு முன்னால் வீடு பார்க்க ரொம்ப சிரமப்பட்டேன்... ஜாதிய பத்தி பேசரவனெல்லாம் USசோ அல்லது பிற நாடோ போகும்போது அவனுங்க ஜாதிய சொம்புகல தூக்கியெறிந்துவிட்டு பெட்டி பாம்பா நடப்பதை பார்த்துயிருக்கிறேன்...

நல்ல முயற்சி வால்.. தொடருங்கள்... நாங்க இருக்கோம்

Ashok D said...

பின் தொடர்தலுக்காக

குடுகுடுப்பை said...

சாதியம் = கிராமங்கள் = பழக்கம்

நான் பட்டினம்.. இரு மாதங்களுக்கு முன்னால் வீடு பார்க்க ரொம்ப சிரமப்பட்டேன்... ஜாதிய பத்தி பேசரவனெல்லாம் USசோ அல்லது பிற நாடோ போகும்போது அவனுங்க ஜாதிய சொம்புகல தூக்கியெறிந்துவிட்டு பெட்டி பாம்பா நடப்பதை பார்த்துயிருக்கிறேன்...
//
ingayum jaathi sangamellaam irukkungo:))))))))))) maraimugama

வருண் said...

***குடுகுடுப்பை said...
maraimugama***

Seems like there are some spies too to "learn" about all these. LOL

JK!

Anyway,

ku ku, in a long run, when their daughte chooses a black guy as her partner and planning to marry him, they will realize how stupid they were.It is happening now! It is just a qustion of time to dissolve all the "jaathi changam"!

kannan said...

தேவர் என்று பெயருக்கு பின்னால் போட்டுக்கொள்வது சாதியை குறிப்பதற்காக அல்ல ... அது பிறர் அளித்த பட்டம் .. அது காலப்போக்கில் அப்படியே தொடர்கிறது அவ்வளவவுதான் ..

kannan said...

இதுமாதிரியான வீண் விவாதங்கள் தேவையே இல்லை. அனைவரும் தமிழர்கள் ... நம்மைவைத்து அரசியல்வாதிகள் அரசியல் செய்கிறார்கள்... அவரவர் தன் வேலையை சரியாக செய்ய வேண்டும்.. நன்றாக உழைத்து வாழ வேண்டும் .. அனைவர்க்கும் ஒரு வேண்டுகோள் .. தயவுசெய்து ஆண்மை தவறேல் என்ற சினிமா படத்தை காணுமாறு கேட்டுக்கொள்கிறேன்.. பெண்களை ஆபாசபடுட்டதாதீர்கள் .. பெண்களை மரியாதையோடு நடத்துங்கள் ..

Unknown said...

வேறு பதிவு எதும் போடவில்லையா சகோதரரே...?

anthony said...

தோழர்களுக்கு , நம்ம அண்ணன் விமலாதித்தன் ஆண்ட பரம்பரை என்ற அங்கிகாரம் வேண்டி அம்பி ஒருவனோடு கும்மி அடித்ததை பற்றிய என்னுடைய "சாதி வெறியை தூண்டி விடுவது யார் ?" பதிவின் இணைப்பை தருகிறேன். வாசித்து விட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள்

http://meenavarthuyaram.blogspot.com/2011/08/blog-post_13.html

anthony said...

தனியன் தம்பியின் உளறல்கள் பற்றிய மற்றுமொரு பதிவின் இணைப்பையும் கீழே தந்து இருக்கிறேன்

http://meenavarthuyaram.blogspot.com/2011/09/1.html

படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்

anthony said...

இந்த தேவர் பட்டத்தை வன்னியர்களும் தங்களுடையது என்று உரிமை கொண்டாடுகிறார்களே ... மொத்தத்தில் அந்த பட்டம் யாருக்கு சொந்தமானது என்று முடிவுக்கு வாங்க சாமிகளா ....

இதுல அகமுடையார் என்று ஒரு கூட்டம் இப்பவெல்லாம் அவங்களை முதலியார் பிள்ளை என்று அடையாளபடுத்தி கொள்ளுறாங்க .... கள்ளர் மறவர் எல்லாம் அவங்களுக்கு கீழே உள்ளவங்களாம் . ஏற்கனவே அதற்கான துண்டு பிரசுரங்கள் அடித்து அமர்க்களம் பண்ண ஆரம்பிச்சாச்சு

இவனுங்க இதை எங்கே போய் நிப்பாட்ட போறானுங்களோ

கொங்கு நாடோடி said...

புள்ளை குட்டிகளை படிக்க வையுங்கடா...

எவனுக்கோ கூட்டம். போறது உங்களோட உடமை, உயிர். அவனுக்கு ஒரு மயிரும் போகபோறது இல்லை, லாபம் தான்

எனக்கு இது சரின்னுதான் படுது, அடுத்து மு.க, பயகிரி, கைதுக்கு கூட்டம் கூட மாட்டாங்க இல்ல.

Bala Murugan said...

தோழர்களுக்கு , நம்ம அண்ணன் விமலாதித்தன் ஆண்ட பரம்பரை என்ற அங்கிகாரம் வேண்டி அம்பி ஒருவனோடு கும்மி அடித்ததை பற்றிய என்னுடைய "சாதி வெறியை தூண்டி விடுவது யார் ?" பதிவின் இணைப்பை தருகிறேன். வாசித்து விட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள்

http://meenavarthuyaram.blogspot.com/2011/08/blog-post_13.html

Post a comment.

Unsubscribe to comments on this post.

Posted by anthony



enakku anuppum munne athil irundha 1st comments padichiyaaa??? romba arivaali maadiri pesa vendam...........

Bala Murugan said...

இரா.ச.இமலாதித்தன் said...
//உங்கள் சாதி தான் தாழ்த்தப்பட்ட சாதி என்றால் இப்படி பெருமையாக சொல்ல முடியுமா என கேட்டிருந்தேன்//

நான் என் சாதியின் பெயரை சொல்வதால் அது பெருமை இல்லையென்றே கருதுகிறேன்.

நான் பறையர் இனத்திலோ, பள்ளர் இனத்திலோ பிறந்திருந்தாலும் என் சாதியை சொல்லி இருப்பேன்,

அதை பெருமை என்று நீங்கள் எடுத்தாலும், எடுக்காவிட்டாலும்...


correct,,, nandraga sonneenga,, athu yen matravungalukku poraamaiyooooo!!!!!!!!!!

ready 123 said...

motha sanda poduratha nirutunga , entha thalaivanum avana numbunavan sethuda sapdama thoongama , iruka mattan . pavam 7 pera nambi avanga appa amma enna kanavula irunthankalo
ineme ithu nadakama irukanumna ella guru poojavum tadai pannunga , avanavan pollapa parunga

smart said...

///அண்ணே, என் பாட்டன் முப்பாட்டன் மாறுனதுக்குக் காரணம் பயம் இல்லை. திருடனுங்களோடு திருடனா வாழந்து நாய் பொழப்பு பொழக்கிறதுக்கு நல்ல பொழப்பு பொழைக்கலாம்ங்குற எண்ணம். எத்தனை கஷ்டம் வந்தாலும் யோக்கியனா வாழ நினைக்கிறதுதான் வீரம்!!///


அபுதுல்லா அண்ணணின் இந்த வரியில் உள்ள சமய வெறியை சாடி எழுத மனமிலாதவர்கள்தான் சாதி வெறியைப் பற்றி பேசிவது நகைப்பாகயுள்ளது. இலவசமா கிடைச்சா எதையும் எழுதுற ஆள் என்பது தெரிந்து விட்டது.

smart said...

சார், ரொம்ப நாளா ஆளவே காணாம் ஹோட்டல் கடைய மூடியாச்சா?

smart said...

//தலித்துகள் என்று மட்டுமல்ல, முன்னாள் முதல்வர் காமராஜரையும் சாணாப்பயல் என்றும், சோத்துக்கு இல்லாதவன் என்றும் பேசி தமது சாதி திமிரை காட்டியவர் தான் இந்த முத்துராமலிங்கம்.//

தமிழ் எழுத்தாளர் சாருவை நீங்கள் திட்டி உங்கள் சாதி திமிரை காட்டிவிட்டு இப்ப நல்லவராக நடிப்பதேனோ? உங்கள் சாதியை இணையத்தில் வெளிப்படுத்துவதன் நோக்கமென்னா?

ஒரு முன்னாள் தலைவரை, ஒரு சமுகத்தின் புகழ் பெற்றவரை எப்படி போது இடத்தில் எழுத வேண்டும் என்கிற அடிப்படை அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள் வால்.
அவரை பழிப்பதாலோ திட்டுவதாலோ இந்த சாதி சண்டை தீராது. சாதி சண்டையை எதிர்ப்பவர்கள் எத்தனை பேர் சாதி ஓதிக்கீடை எதிர்ப்பார்கள்? எல்லாம் திராவிட கஸ்மாலங்கள் இழுத்துவிட்ட சனியன்கள்.

smart said...

///உங்களூக்கு கீழ் தாழ்த்தபட்டவர்கள் யாரும் இல்லை, நீங்கள் தான் தாழ்த்தபட்டவர்கள் என்றால் உங்களால் இந்த சாதியை பெருமையாக நினைக்க முடியுமா? கொஞ்சம் மனசாட்சியுடன் பேசுங்கள்!///

என்ன மடதனமான வாதம் பெருமை கொள்வதால் மற்றவைகள் எல்லாம் சிறுமை என்று சொல்வதா? தமிழன்னு பெருமையா சொன்னா கன்னடன், ஹிந்திக்காரன்,குஜராத்திஎல்லாம் சிருமைன்னு அர்த்தமா?
அவன் பெருமை பட்டா நீயும் உன்னது பெருமைன்னு பட்டுகோ. அவனுடைய பெருமையில் பொறாமை படுவதே சிறுமை.

smart said...

உங்கள் சாதீய பார்வையில் உள்ள பொத்தலை சுட்டிக் காட்டுவதே நோக்கம். மற்றபடி, அந்த கலவரத்தை நியாயப்படுத்தவில்லை, கலவரம் யார் செய்தாலும் தண்டிக்கப்படவேண்டும்

smart said...

follow-upkku

குடுகுடுப்பை said...

smart has left a new comment on the post "இறப்பை கொண்டாடும் சாதி வெறி!":

///அண்ணே, என் பாட்டன் முப்பாட்டன் மாறுனதுக்குக் காரணம் பயம் இல்லை. திருடனுங்களோடு திருடனா வாழந்து நாய் பொழப்பு பொழக்கிறதுக்கு நல்ல பொழப்பு பொழைக்கலாம்ங்குற எண்ணம். எத்தனை கஷ்டம் வந்தாலும் யோக்கியனா வாழ நினைக்கிறதுதான் வீரம்!!///


அபுதுல்லா அண்ணணின் இந்த வரியில் உள்ள சமய வெறியை சாடி எழுத மனமிலாதவர்கள்தான் சாதி வெறியைப் பற்றி பேசிவது நகைப்பாகயுள்ளது. இலவசமா கிடைச்சா எதையும் எழுதுற ஆள் என்பது தெரிந்து விட்டது. //

மதம் மாறாதவங்கெல்லாம் திருடிக்கிட்டா இருக்காங்க, சில நேரங்களில் பதில் தேவையில்லை, புரிதல் மட்டும் போதுமானது.அவர் மதம் மாறியதற்கு சொல்லப்படும் காரணத்தை நான் ஏற்கவில்லை என்பதை முன்பே இப்பதிவின் பின்னூட்டத்தில் சொல்லியிருக்கிறேன், மற்றபடி இந்தப்பதிவு குறிப்பிட்ட நிகழ்வு பற்றியதாக இருப்பதே நல்லது.

குடுகுடுப்பை said...

smart said...
///உங்களூக்கு கீழ் தாழ்த்தபட்டவர்கள் யாரும் இல்லை, நீங்கள் தான் தாழ்த்தபட்டவர்கள் என்றால் உங்களால் இந்த சாதியை பெருமையாக நினைக்க முடியுமா? கொஞ்சம் மனசாட்சியுடன் பேசுங்கள்!///

என்ன மடதனமான வாதம் பெருமை கொள்வதால் மற்றவைகள் எல்லாம் சிறுமை என்று சொல்வதா? தமிழன்னு பெருமையா சொன்னா கன்னடன், ஹிந்திக்காரன்,குஜராத்திஎல்லாம் சிருமைன்னு அர்த்தமா?
அவன் பெருமை பட்டா நீயும் உன்னது பெருமைன்னு பட்டுகோ. அவனுடைய பெருமையில் பொறாமை படுவதே சிறுமை.//

நீங்கள்தான் மடத்தனமாக பேசுகிறீர்கள், கன்னடன் என்று பெருமையாக அளவிற்கு நான் பறையன், நான் சக்கிலியன் , பள்ளன் என்று பெருமையாக அளவிற்கா சாதீயமும் அதன் கொடுமைகளும் இருக்கிறது.

குடுகுடுப்பை said...

ஒரு முன்னாள் தலைவரை, ஒரு சமுகத்தின் புகழ் பெற்றவரை எப்படி போது இடத்தில் எழுத வேண்டும் என்கிற அடிப்படை அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள் வால்.
அவரை பழிப்பதாலோ திட்டுவதாலோ இந்த சாதி சண்டை தீராது. சாதி சண்டையை எதிர்ப்பவர்கள் எத்தனை பேர் சாதி ஓதிக்கீடை எதிர்ப்பார்கள்? எல்லாம் திராவிட கஸ்மாலங்கள் இழுத்துவிட்ட சனியன்கள்//

இது திராவிடர்களை கேவலமாக பேசுவதில் வராதா?

மா .இ லட்சுமணன் said...
This comment has been removed by the author.
மா .இ லட்சுமணன் said...

"இறப்பை கொண்டாடும் சாதி வெறி!" தலைப்பு நல்லாத்தான் இருக்கு, ஆனால் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள அனைத்தும் வன்முறையை தூண்டிவிடுரமாதிரி இருக்கு!... கட்டுரையில் குறிப்பிட்டவைகள் அனைத்தும் அரசாங்கத்திடம் கேட்கவேண்டிய கேள்விகள்...இந்த கட்டுரையை படிக்கவே ரொம்ப கேவலமா இருக்கு சாதியைகூட ஒழித்துவிடலாம் போல ஆனால் சாதிவெறியர்களை ஒழிக்க முடியாது!.......

வருண் said...

***smart said...

///உங்களூக்கு கீழ் தாழ்த்தபட்டவர்கள் யாரும் இல்லை, நீங்கள் தான் தாழ்த்தபட்டவர்கள் என்றால் உங்களால் இந்த சாதியை பெருமையாக நினைக்க முடியுமா? கொஞ்சம் மனசாட்சியுடன் பேசுங்கள்!///

என்ன மடதனமான வாதம் பெருமை கொள்வதால் மற்றவைகள் எல்லாம் சிறுமை என்று சொல்வதா? தமிழன்னு பெருமையா சொன்னா கன்னடன், ஹிந்திக்காரன்,குஜராத்திஎல்லாம் சிருமைன்னு அர்த்தமா?
அவன் பெருமை பட்டா நீயும் உன்னது பெருமைன்னு பட்டுகோ. அவனுடைய பெருமையில் பொறாமை படுவதே சிறுமை.

September 22, 2011 6:56 AM***

சுமார்ட்டு: பாப்பானிடம் போயி தீட்டுனா என்னடா நாயேனு கேளு! சொல்லுவா, ஒரு சில சாதிக்காரங்க எல்லாம் கீழ்சாதி, பாப்பான்ந்தான் உயர்ந்தவன்னு சொல்லுவான்.

இவன் பள்ளிக்குடம் போகக்கூடாது! இவன் கோயிலுக்குள்ள போகக்கூடாது! ஏன்னா இவன் "கீழ்சாதி"னு முட்டாப் பாப்பான் எல்லாம் நம்பினான். They fucked up the whole INDIA. Get that in your dumb brain, "moron smartu"!

பார்ப்பான் தான் பெரிய புடுங்கினு மட்டும் சொல்லல, மற்றவன் மட்டம்னு சொல்றான், அதான் தீண்டாமை!

சும்மா எதையாவது ஒளறக்கூடாது. வந்து சேர்ந்து இருக்கு பாரு, சுமார்ட்டு, மண்ணாங்கட்டினு!

Where the hell you have been? Now you "show up" to cover paappaan's boottom or not??

மா .இ லட்சுமணன் said...

வால்பையன் அவர்களுக்கு
//சாமி என்ற படத்தில் சாதி ஊர்வலத்தை தடுக்க படத்தின் நாயகன் பொறுக்கி(அப்படி தான் அவரே சொல்லிக் கொள்வார்) விக்ரம். கல், கப்படாக்களை வைத்திருப்பது போல் இங்கே காவல் துறை கற்களை சேமித்து வைத்திருக்கிறது//
சாமி படத்துல விக்ரம் செய்தால் கைதட்டி விசில் அடிக்கிறிங்க ஆனால் நிஜத்துல நடந்தா மட்டும் ஏத்துகிரமாட்டாங்க இந்த இடத்துலதான் இருக்கான் சாதி வெறியனுங்க, வன்முறையில் ஈடுபடுவர்கள் கீழ்சாதி என்ன மேல் சாதி என்ன!.. இதுதாண்டா போலீஸ்னு சலாம் போடுறத விட்டுட்டு தேவைஇல்லாமல் வாய்க்கு வந்தபடி கிரிக்கி வச்சிரிக்கிங்க, இது போன்ற வன்முறை நடக்காமல் இருக்க கட்டுரை எழுதுவிங்கனு பார்த்த வன்முறையை தூண்டிவுடுரா மாதிரி எழுதிரிக்கிங்க!.......
(நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும்)

பல்பு பலவேசம் said...

கழக கண்மணிகள் ஆடும் மங்காத்தா!!
http://www.youtube.com/watch?v=0XE23Snz8Ew&feature=player_embedded

Bala Murugan said...

சார், ரொம்ப நாளா ஆளவே காணாம் ஹோட்டல் கடைய மூடியாச்சா?

chinna pullaga kooda ellam vilaiyaada vendaam nnu than!!!!!!!!!!!!!!!!

Baskar Perumal said...

சம்பவம் நடந்த அன்று நான் மதுரையில் இருந்தேன். காலை முதலே ஜான் பாண்டியன் கட்சியினர் செய்த ஆர்ப்பாட்டம் மதுரையை நாற அடித்து கொண்டிருந்தது. பரமக்குடியில் துப்பாக்கி சூட்டிற்கு முன்னரே ஒன்றிரண்டு பேருந்துக்கள் அடித்து நொறுக்கப்பட்டன! ஆக, அவர்களிடமும் அன்று வெளிப்பட்டது ஜாதிய வெறிதான். நீங்கள் கேட்டதை நானும் கேட்கிறேன் இந்த வெறி அவர்களுக்கு பெற்று தந்தது என்ன? அவ்வபோது ஏற்படும் உயிர் பலியை தவிர. உங்கள் கட்டுரையில் அந்த வன்முறையை பற்றி ஒன்றும் காணோமே! வன்முறை எங்கிருந்து வந்தாலும் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று, இக்கட்டுரை அதனை செய்யவில்லை. மற்றொரு ஜாதியை அவ்வளவு கேவலமாக வர்ணித்தவர்கள் அன்று ஆர்ப்பாட்டம் செய்த தலித்துக்களை செய்வார்களா? மாட்டார்கள். Prevention of Atrocities against SC/ST Act பாய்ந்துவிடும் என்று அவர்களுக்கு தெரியும். இன்னொரு ஜாதியை திட்டுவதன் மூலம் ஜாதிகள்ளற்ற சமூகம் உருவாகிவிடாது!

கவிதை பூக்கள் பாலா said...

வாலு நீங்க வாளு இல்ல தலை தான் அசத்தல் பதிவு அதோட தில்லான பதிவும் கூட வாழ்த்துக்கள் .

ஆர்.தியாகு said...

"//காமராஜ் நாடாரம்! அவர் தான் இந்த சண்டைக்கே மூல காரணமாம், எப்படி திரிக்கிறார்கள் பாருங்கள், தமது ஆதர்ஷ நாயகன் கடவுளாக்கப்பட வேண்டும் என்றால் தன் மனைவி வேசி என சொல்லவும் தயங்க மாட்டார்கள் போல.//"


உண்மை என்ன தெரியுமா ???

முதல்வர் பதவியில் இருந்தபோது வெறும் காமராஜராய் இருந்தாவர் தனது ஜாதி தாகத்தை 1969 -ல் நாகர்கோயில் பாராளுமன்ற இடை தேர்தலில் நிற்கும்போது காமராஜர் நாடார் என பெயர் மாற்றி நின்று தீர்த்தார்
. 1971 பாராளுமன்ற தேர்தலிலும் காமராஜர் நாடார் என்ற பெயருடனே நின்றார் .

இந்திய அரசினால் உருவாக்கப்பட்ட லோக் சாபா இனையதளத்தை பாருங்கள்

http://164.100.47.132/LssNew/members/state1to12.aspx?state_name=Madras


http://164.100.47.132/LssNew/members/state1to12.aspx?state_name=Tamil%20Nadu

http://en.wikipedia.org/wiki/Nagercoil_(Lok_Sabha_constituency)

வெறும் காமராஜராய் இருந்தாவர் காமராஜர் நாடார் ஆன கதை இதுவே, இதைதான் தேவர் காமராஜரை சாதி வெறிபிடித்தவர் என பொதுமேடையில் 15 வருடங்களுக்கு முன்பே
கண்டித்தார். பிளாக்கில் எல்லோரும் பொய் எழுதுவதில் வல்லவராய் போனார்கள் , உங்களை போன்று உண்மை தெரியால் அல்லது சரியாக வரலாறு தெரியாமல் சாபாஷ் சொல்பவர்களால்- நன்றி - ஆர்.தியாகு

ஆர்.தியாகு said...

முதல்வராக இருந்த போது வெறும் காமராஜர் . தோற்று உடுங்கியபின் 1969-ல் நாகர்கோயில் பாராளுமன்ற இடைதேர்தலில் “காமராஜ் நாடார் ஆனார்”. 1971-ல் நாகர்கோயில் பாராளுமன்ற தேர்தலிலும் அதே சாதி வெறி. இதைதான் காலம் என சொல்லவேண்டும். இதோ இந்திய அரங்கத்தின் பாராளுமன்ற இனையதளத்தில் காணுங்கள்..

மேலே குறிப்பிட்ட முகவரி சரியானது ஆனால் அது வேலை செய்யவில்லை ஆதனால் கீழ்கண்டவாறு முயற்ச்சித்தால் நிச்சயம் பாரளூமன்ற தளத்தில் தகவல் அறியலாம்.

http://loksabha.nic.in/

Select : “Memebers” ( from the Left side Tabs)

Select : “Former Memeber Bio-Profiles”

Select : “Fourth Lokshaba” ( from the Left side Tabs)

Select : “State wise list” (from right side tabs)

Select : “Madras”

Now see the Nagarcoil memeber Name which is displayed as “Kamaraj Nadar,Shri K. ” as a official name declared by the canditate.

thanks comrades.

Unknown said...

அருமை நண்பா

பாரதி said...

எந்த ஜாதியும் உயர்ந்ததும் அல்ல ,தாழ்த்தும் அல்ல,
இந்த பதிவின் மூலம் நீங்கள் தான் ஜாதி வெறியர் என்று சொல்லுகிறிர்கள் .....அனேக வார்த்தைகளில் நாகரிகமும் இல்லை பண்பாடும் இல்லை( தே.மகன் படத்தில், ஸாரி சுருக்க சொன்னால் அர்த்தம் மாறுகிறது, ,அடமுட்டாப்பதருகளா,,,கொட்டையெடுத்த புலிகள்.,,,பெரிய அப்பாடக்கராக) ,
உங்களுக்கு ஒரு ஜாதியை பிடிக்கவில்லை என்று சொல்லாமல் சொல்லி நீங்கள் தான் ஜாதி வெறியர் என்று நீருபித்து வீட்டிர்கள் ...
ஒருவரின் பேச்சும் செயலும் எப்போதும் அடுத்தவர் மனதை புண்படுத்தாமல் இருக்க வேண்டும் ...உங்கள் செயல்கள் உங்களுக்கும் உங்கள் சமூகத்துக்கும் உயர்வனதாக இருக்க வேண்டும் ,மற்றவரை திட்டுவதலோ அல்லது கொச்சை படுத்துவாதலோ உங்கள் சமுகத்துக்கு என்ன பயன் ..
நீங்களும் முன்னேறி உங்கள் சமுகத்தையும் முன்னேற்றுவது தான் உங்களின் கடமை . அது தான் நீங்கள் யார் என்பதை சொல்லும் ......நன்றி

வவ்வால் said...

வால்,
மிக நல்ல காத்திரமான பதிவு, ஆனால் இன்னும் கொஞ்சம் சீர்பட எழுதி இருக்கலாம்! முரட்டு வாதமாக எழுதியது போல ஒரு தோற்றம் தேவையில்லை.

Anonymous said...

ஆளாளுக்கு அடிச்சிக்கிறீங்க.தே.மகன்.கொட்டை எடுத்தபுலி எல்லாம் நல்லா இருக்கு.ஆனா இதே வார்த்தைய தே.மகன் மூஞ்சிக்கு நேரா நின்னு சொல்லுங்க கொட்டை எடுக்காத புலிகளே.இணையத்துல மறைவுல வாய்சொல்வீரமா?அவனவன் ஜாதிய உயர்வா காட்டணும்னு தான இப்பல்லாம் எல்லாபயலும் ஆண்ட பரம்பரைங்கிறீங்க.உழுபறையர்னு சொல்லப்பட்ட பள்ளர்கள் இப்போ மள்ளர் மூவேந்தர்னு சொல்லகாரணம் பார்பனியத்தை எதிர்க்கவா அல்லது போலி அந்தஸ்துக்காகவா?மூவேந்தருக்கும் சோறு போட்டவங்க உழைப்பாளிவர்க்கம்னு கலப்பில்லாத தமிழன்டா பள்ளன்டான்னு நெஞ்ச நிமிர்த்தி சொல்லு ஆம்பள.ஆதிதிராவிடர் பறையர் எப்பவும் தன்னை பறையர்னு சொல்ல வெட்கப்பட்டதில்ல. கௌரவமான ஜாதி.இங்கருக்க ஒவ்வொரு தமிழனிலும் பள்ளரும் பறையரும் தான் இனக்கலப்பில்லாத உழைப்பாளி வர்க்கம் களவாடாத வர்க்கம். மழவர்,மள்ளர்னு தமிழ்ல சொல்லப்பட்ட வார்த்தை மறவனாகும்,கள்ளன்னு சொல்லப்பட்டது களவன் ஒற்று காவலன்.களவு என அர்த்தம் அகமுடையார் தனிஜாதியே கிடையாது அகப்பணி பிள்ளைல இருந்து கோனார் முதலி வரை எல்லாரும்பார்த்த வேலை குழு அல்லது சேர்வை கலப்பு மக்கள் என்பதாகும்,இது தெரியுமா அவங்க தன்னை உயர்வா நினைக்க காரணம் போர்க்குணம் வீரம்.உழைப்பாளி வர்க்கமான நீங்கள் ஏன் பள்ளர மள்ளர்னு புரட்டணும்?தாழ்வு மனப்பான்மையா பொய்யே பலமுறை சொன்னால் உண்மைன்ற கோயபல்ஸ் தியரியா?வேளாளன்னா கேவலமா?திரைமறைவு திமிர் செல்லாது,தாழ்வுமனங்கொண்டுஎவனையும் ஏசாமல் உம்மை உயர்த்த முயலுங்கள்.பேண்ட பரம்பர புகழ் வேண்டாம்.ஆதி தமிழன் பட்டமே போதும்.பறையரென்றுரைப்போம்.பரணியெங்கும் செழிப்போம்.

படைதாங்கி said...

வால் பய்யனே முதலில் நீங்கள் இன்ன சாதி அப்பனுக்குதான் பிறந்தேன் என்று சொல்லிவிட்டு விவாதத்தைத் தொடரலாமே. சிலர் அடி வாங்குவதற்கு முன்னர் தன்னைத் சோழர் என்றும் அடிக்குப் பின்னர் தலித் என்றும் நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர். அதே போல நீங்கள் உங்களை முக்குலத்தான் எனச் சொல்லிக்கொண்டே பள்ள (குழி தோண்டும்) வேலைகளைச் செய்கிறீர். இதற்குப் பெயர்தான் பேடித்தனம்.

rowdy said...

இங்க பேசும் எல்லோரும் போண்டுகன் (சரவனன குமார் தவிர ).ஜாதி ஒழிக்கவும் தேவர் ஜாதி பற்றியும் பேசுகிறார்கள்.முதலில் யாரவது தென் மாவட்டங்கள் வந்து தேவர் ஜெயந்தியை நிறுத்துங்கள் என்று எந்த போண்டுகன் சொல்லுங்கள்.அந்த போண்டுகனுக்கு வீரம் பட்டம் கொடுக்கிறோம் .நெட்ல நீ பேசின அவ்வளோ பெரிய அப்பா டக்கர் நீ . நேருல வந்து பேசுங்க டா போண்டுகங்கள .

Amuthan said...

##இந்த சாதி உங்களுக்கு என்ன செய்தது, தமிழகம் விட்டு வேறு நாட்டிற்கு போய் நான் இந்த சாதி எனச்சொல், உன்னை மலத்திற்கு சமமாக தான் பார்ப்பான். அப்படிபட்ட சாதியை வைத்து எதை புடுங்கப்போகிறாய், உன்னையும் மற்றவர்கள் போல் தானே உன் அம்மா பெற்றாள்.##

உண்மையில் ஜாதியை கொண்டாடும் பல பேர் சொந்த ஊர்களை விட்டு வெளியே செல்வதுமில்லை , புதிய மனிதர்களிடம் நட்புறவை வளர்ப்பதுமில்லை . அதனால் தான் அவர்கள் கிணத்து தவளைகளாக இருக்கிறார்கள் ...

மா .இ லட்சுமணன் said...
This comment has been removed by the author.
மா .இ லட்சுமணன் said...

அப்படியே இதையும் படிங்க:

http://www.thevarthalam.com/thevar/?p=1773

http://thevarcommunity.blogspot.com/2011/10/last-year-poster-not-seen-much.html

யார் இந்த இமானுவேல் சேகரன் ?
செட்டியார் இனத்தை சேர்ந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட காரணத்தால், அப்பெண்ணின் உறவினர்களின் தூண்டுதலின் பெயரில் கொல்லப்பட்டவர்தான் இந்த இமானுவேல்… ஒரு கும்பக்கார பெண்ணிடம் (கரகாட்டம் ஆடுபவர்) தொடுப்பு வைத்திருந்ததாகவும் அதனால் வீட்டில் ஏற்பட்ட பிரச்சனைக்காகவும் இம்மானுவேல் சேகரனின் மனைவியே பரமக்குடி காவல் நிலையத்தில் அவருக்கு எதிராக புகார் கொடுத்து இருக்கிறார் . காவல்நிலையப் புகார் ஆவணமாக உள்ளது. மேலும் அங்கே இருந்த பிராமிணர் உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு அதற்கான தொகை தராமல் தகராறு செய்வதையும் வாடிக்கையாக கொண்டிருந்ததும் பலருக்கு தெரிந்திருக்கின்றது. அவரது அண்ணன் துரைசாமி என்பவர் இமானுவேலுக்கு புகைப்படமே இல்லை, இப்பொழுது இருப்பது வரைந்த படமே என்கிறார். இராணுவத்தில் சேர்ந்திருக்கின்றாரே அந்த புகைப்படம் இருக்குமே என்று நாம் நமக்குள் மட்டுமே கேள்வி கேட்டுக்கொள்ள முடிகிறது. . ஐம்பது ஆண்டுகள் கடந்து திடீரென்று நினைவு நாள் கொண்டாடப்படும் அரசியலும், புது புது வரலாற்று ஆக்கங்களும், அவற்றிற்கு மத சமூக அடையாளங்கள் அடிப்படையில் ஆதரித்து வரவேற்பதும் நமக்கு புரியாமல் இல்லை.சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவரிடம் ஒரு புகைப்படம் கூட இல்லை என்பது தான் உண்மை. அவரது அண்ணன் துரைச்சாமி என்பவர் தான் “அவனுக்கு ஒரு போட்டோ கூட கிடையாது, இப்போது இருப்பதெல்லாம் அனுமானத்தில் வரைந்தது தான்” என்று கூறியிருக்கின்றார். ஒரு புகைப்படம் கூட இல்லாத சமீபத்தில் வாழ்ந்த ஒருவரை தேசியத் தலைவர் என்றும், இராணுவத்தில் பணியாற்றியவர் என்றும், மக்களுக்காக போராடி சிறை சென்றவர் என்றும், பலமுறை போராட்டங்கள் நடத்தியவர் என்றும் கதை கட்டுவதை, புத்தகம் வெளியிடுவது, குருபூஜை கொண்டாடுவது, சமுதாய விடிவெள்ளி என்றழைப்பது, போராளி என்று பரப்புரை செய்வது, தேவர் ஐயாவின் அடைமொழிகளை இவருக்கு சூடி எதிர்ப்பு நிலைப்பாடு எடுப்பது போன்றவற்றை அறிவிற் சிறந்த சான்றோர் எங்ஙனம் எடுத்துக் கொள்வர் என்பதும் நமக்கு புரியாமல் இல்லை.வரலாற்றில் சுவடு இல்லை என்பதற்காக உழைக்கும் மக்கள் இப்படி சில அரசியல்வாதிகளினால் தூண்டப்பட்டு தவறான பாதையில் செல்வது சமூகத்தின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கவே காரணமாகும் என்பதில் ஐயமில்லை.

premgiDeventhiran said...

many of our people don't know about this news we should spread this news. thank you for giving this real fact.AVE the name of DEVENTHIRAN.

Anonymous said...

anthony said...இந்த தேவர் பட்டத்தை வன்னியர்களும் தங்களுடையது என்று உரிமை கொண்டாடுகிறார்களே ..//////


நண்பா வன்னியர்களுக்கும் முக்குலத்தோர்க்கும் பொதுவாக சுமார் 200 பட்டங்கள் ஒரே மாதிரி இருக்கும் ...தேவர், வாண்டையார் என்று 200 க்கும் மேற்ப்பட்ட பட்டங்கள் இருவருக்கும் உள்ளது ....வட தமிழகத்தில் மழவராயர் பட்டத்தோடு வாழ்பவர்கள் வன்னியர்கள் ....அதேபோல அதே பட்டத்துடன் தெற்கே முக்கோல்தோர் உள்ளனர் ...இவர்கள் இருவருமே தமிழகத்தின் மறப்படைகளாய் வாழ்ந்தவர்கள் ..அதனால்தான் இருவருக்கும் ஒரே பட்டம் உள்ளது ...இவை மன்னர் காலத்தில் மன்னன அளித்தது

chinnavan said...

@vasanth சண்ட போடதீங்க ஏட்டைய இந்த ப்ளாக் அ படிச்சு பார்த்து தெரிஞ்சுகோங்க http://thathachariyar.blogspot.in/2010/10/1.html

பெருமாள் தேவன் செய்திகள் said...

வால் பையன் அவர்களே, நீங்கள் இப்படியே எழுதுங்கள். இதுதான் நீ எங்கள் தேவர் குலத்திற்கு செய்யும் சேவை. உங்களைப் போல பலர் எழுத எழுத எங்கள் குலம் ஒன்று சேரும். உயரும். உங்கள் எழுத்துக்களுக்கு நன்றி.

Unknown said...

naaga en uyar jaathi veriyar hal na oru atha appanukku poranthavanga....ungala mathiri virunthukku vantha avangalukku poranthanvanga illa.

பெருமாள் தேவன் செய்திகள் said...

//இந்த கொட்டையெடுத்த புலிகள் தலைவராக கொண்டாடும் முத்துராமலிங்கம் இவர்களுக்கு என்ன செய்தார் என்று பார்த்தால், நிறைய பொய் சொல்லி தம்மை பெரிய அப்பாடக்கராக காட்டி கொண்டிருந்தார் என்பது மட்டுமே தெரிகிறது.//

இதுல சத்தியமா உங்க சாதிவெறி தெரியல.

வால்பையன் said...

// சத்தியமா உங்க சாதிவெறி தெரியல.//

தேவன், நான் எங்கே, எந்த சாதியை உயர்த்தி பேசியிருக்கிறேன் என காட்ட முடியுமா?

பெருமாள் தேவன் செய்திகள் said...

தேவர் என்ன பொய் சொல்லி தன்னை அப்பாடக்கரா காட்டிக்கிட்டார்னு சொல்ல முடியுமா?

அப்படியே நீங்க எந்தச் சாதியைச் சேர்ந்தவர்னு சொல்லிட்டா வசதியா இருக்கும்.

வால்பையன் said...

//தேவர் என்ன பொய் சொல்லி தன்னை அப்பாடக்கரா காட்டிக்கிட்டார்னு சொல்ல முடியுமா?

அப்படியே நீங்க எந்தச் சாதியைச் சேர்ந்தவர்னு சொல்லிட்டா வசதியா இருக்கும்.//

தேவையான சுட்டிகள் பதிவில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

நான் மனித இனத்தை சேர்ந்த ஆண் சாதி.

பெருமாள் தேவன் செய்திகள் said...

தன் சாதிவெறியை சான்றிதழில் பத்திரப் படுத்திவிட்டு அடுத்தவரின் சாதிவெறியை பேசும் வீரர்கள் இணையத்தில் அதிகம். அவர்களின் சுட்டிகளை நீங்கள் கொடுத்திருந்தால் ஆச்சரியமில்லை. இருங்க பொறுமையா வர்றேன்.

«Oldest ‹Older   1 – 200 of 228   Newer› Newest»

!

Blog Widget by LinkWithin