தவக்க(ளை)லை பதிவும் அதன் விளக்கமும்!

முதலில் வெளிநாட்டிலிருந்து அழைத்த நண்பருக்கு!

உங்கள் கோபம் உங்களவில் நிச்சயமாக நியாயமானதே! யாரிடமோ கேள்வி கேட்க ஏன் அனைவரையும் இழுக்கிறீர்கள் என்கிறீர்கள், மேலும் நீங்களே ஒப்புகொள்கிறீர்கள் சாதி ஒரு ”டேட்டா” மட்டுமே அதனால் பயன் ஒன்றும் இல்லை என்று, தேவையில்லாமால், தான் இந்த சாதி என பின்னூட்டத்தில் சொல்லி போனதால் தான் அந்த பதிவு என மறுபடியும் தெரிவித்து கொள்கிறேன்! மேலும் எச்சகலை ஏன் என நீங்கள் கேட்டதற்கு ராஜன் அளித்த விளக்கம்!


வடகலை, தென்கலை அப்படியே தான் இருக்கு, அதை எந்த தவக்கலையும் மாத்த முடியல, நான் சொல்ல வந்தது பார்பனீயத்தின் விசம் தெரியாமல் அதற்கு பால் வார்க்கும் பார்பினீயத்திற்கு தொடர்பு இல்லாதவர்களை என்கிறார்! மேலும் சரியான வாதத்திற்கு வராமல் தாடிகாரன், குண்டம்மா என அனானியாக வந்து தாக்குபவர்கள் எச்சக்கலையாக அல்லாமல் என்னவாக இருப்பார்கள் என்கிறார், அந்த வார்த்தை நிச்சயமாக முகமூடி அணிந்த பார்பனீயவாதிகளையும், அவர்களது அல்லக்கைகளையும் மட்டுமே குறிக்கும், நன்றாக பாருங்கள் அந்த பதிவின் தலைப்பு ”புதிதாக எச்சக்கலை” என்று தான் குறிப்பிட்டுள்ளார்!

நன்றி:குமுதம்

இங்கு மோடி படம் ஏன் என்று கண்டுபிடிபவர்களுக்கு தவக்களை சூப் இலவசம்

*****

அசோக்கின் பதிவிற்க்கு பிறகு, சாட்டிலும், போனிலும் நான் உங்கிட்ட அப்படியா நடந்துகிட்டேன் என கேட்கும் போது தான் நீங்களும் அவாள் என்பதே எனக்கு தெரிகிறது, நான் யாரிடமாவது நீங்க என்ன சாதி, உங்க சொத்து நிலவரம் என்ன என்று உங்கள் பர்சனல் டேட்டா கேட்டிருக்கிறேனா!?, நட்பாய் இருப்பதற்கு சாதி ஒரு தகுதி இல்லையே! நான் அவ்வாறு நினைப்பேன் என ஏன் நினைக்கிறீர்கள்


****


அசோக்கின் இந்த பதிவு ஒரு முக்கிய சர்ச்சைகுறிய பதிவு!

அதில் முதல் சர்ச்சைகுறிய பின்னூட்டம்

dondu(#11168674346665545885) said...

//என்னுடைய கேள்வி.. எல்லா front seatயையும் பார்ப்பனர்களே முந்திக்கொள்வது ஏன்?//
ம்ம்ம் ம்யூசிகல் சேர் போட்டி வச்சாங்க, பார்ப்பனர்கள் ஜெயித்தார்கள். அதுக்கென்ன இப்போ?

அன்புடன்,
டோண்டு ராகவையங்கார்



அந்த பதிவை முதலில் ராஜன் படித்ததால் முன்னாடியே பின்னூட்டம் இட்டுள்ளார்!


ராஜன் said...

பதிவு பத்தி எனக்கு ஒன்னும் தெரியாது ! அங்க நடந்தது பார்பன ஆதிக்கமா ? அதுவும் தெரியாது ! இங்க பின்னூட்ட அரசியலும் மைனஸ் ஒட்டு போட்டு எதிர்க்கும் பெரியமனுசத் தனமும் வியக்க வைக்கிறது ! கோவம் வந்தால் பின்னூட்டத்தில் காட்டலாம்... இங்கு குழையவும் அங்கு உதைக்கவும் எப்படி கூடுகிறது ?


இதன் மூலம் அவர் அறிவித்தது என்னவென்றால், எங்களுக்கு நடந்தது தெரியாது, ஆனால் வரும் எதிர்வினைகள் நடந்திருக்கலாம் என சந்தேகிக்க வைக்கிறது என்பதே!
அவரது கருத்தும் எனது கருத்தும் ஒன்றாக இருந்ததால் “போட்டு தாக்கே” என்ற பின்னூட்டம் மட்டும் நான் போட்டேன்!


******

பார்பனீயம் என்றால் என்ன என்பதற்க்கு சரியான அர்த்தம் தெரியாமல் அல்லக்கைகள் நம்மிடமே சண்டைக்கு வருகின்றன! புரிந்து கொள்ளுங்கள் தோழர்களே, எந்த கேள்விக்காகவாது அவர்கள் பதில் சொல்லியுள்ளார்களா!? அதிலேயே தெரியவேணாம் அவர்களின் சார்புநிலை!, பலிகடா ஆகாதீர்கள்! பிரியமுடன் வசந்தின் இந்த பதிவை பாருங்கள், அதற்கும் சரியான விளக்கம் இல்லை, அதில் ஒருவர் அதிலென்ன தப்பு என்று வியாக்கியானம் வேறு பேசுகிறார்!

பெரியாரிஷ்ட் என்றால் என்ன?

பெரியாரின் கொள்கைகளான பெண்விடுதலை, வர்ணாசிர எதிர்ப்பு, குலதொழில் எதிர்ப்பு, சாதி மறுப்பு, கடவுள் மறுப்பு அதிமுக்கியமாக பெரியார் துதி பாடுதல்!

பார்பனிஷ்ட் என்றால் என்ன?

ஆணாதிக்கம், வர்ணாசிர கொள்கை, குலத்தொழில் கொள்கை, சாதிபற்று, அதிமுக்கியமாக இந்துத்துவா வெறி!

மேலுள்ள கொள்கைகள் உள்ளவர்கள் பார்பனீயம் கடைபடிப்பவர்கள் தான், நான் பார்ப்பான், நீ என்னை தான் சொல்ர என்றால் அதுக்கு நாங்க ஒன்னும் பண்ணமுடியாது, கவுண்டனிஷ்ட், தேவரிஷ்ட் என்பது போல் அழைக்க வேண்டுமென்றால் உங்களை அய்யரிஷ்ட், அய்யாங்காரிஷ்ட் என்று அழைக்கும் போது எங்களுக்கு உத்தரவிடுங்கள், உங்கள் பார்பனீய தனத்தை மறைக்க உயர்சாதியியம் என ஈயம் பூசி, தப்பி கொள்ள நினைக்கலாகாது, நாங்கள் பெண்டெடுப்பதில் பி.ஹெட்.டி பண்ணியிருக்கோம், விடமாட்டோம்!


******


இவ்விடத்தில் நிச்சயமாக இதை சொல்லியே ஆகவேண்டும்!

பெரியாரின் சமூக பணி குறைந்தது ஐம்பது வருடங்கள் இருக்கும், அதன் பிறகும் அவரது இயக்கமான திராவிடர் கழக இயக்கத்தை, திராவிடர் கழக நிறுவனமாக வீரமணி பொறுப்பேற்று நடத்தி கொண்டிருக்கிறார், அக்கட்சியின் இணைய கொள்கைபரப்பு செயலாளர் சொல்கிறார், பெரியாருக்கு பிறகு வீரமணி தான் பொருத்தமானவராம், அஸ்ட்ராலஜியா, நியுமரலாஜியான்னு தெரியல, நல்ல ஜோதிடரிடம் எத்தனை பொருத்தம் என கேட்க வேண்டும்,இது பத்தாதுன்னு பெரியார் கழகம் என்று தனியாக ஒரு இயக்கம், அனைத்தும் இருந்தும் இன்னும் கிராமங்களில் இரட்டை குவளை முறை இருப்பது வெட்ககேடு, உங்களுகெல்லாம் பெரியார் பெயர் சொல்லவே தகுதியில்லை,


நாங்கள் ஆளுக்கொரு ஊராக இருக்கிறோம் தனிமரமாக, உங்களோட சேர்ந்து செயல்படலாமே எனலாம், வீரமணி வந்தால் சலாம் போடு, கொளத்தூர் மணி வந்தால் கும்பிடு போடுன்னு பெரியாரின் அதி முக்கிய கொள்கையான சுயமரியாதை என்றால் என்னவிலை என கேட்க வைத்து விடுவீர்கள்!, தாமதமானாலும் நாங்கள் செயல்படபோவது உறுதி!, இது துண்டு இணைப்பாக இருந்தாலும் பெரியாரிஷ்டுகள் டவுசர் ஒருநாள் பெரிதாக கிழிபடபோவதும் உறுதி!

243 வாங்கிகட்டி கொண்டது:

«Oldest   ‹Older   1 – 200 of 243   Newer›   Newest»
சங்கர் said...

\\பெரியாருக்கு பிறகு வீரமணி தான் பொருத்தமானவராம்\\

அப்புடியா?

Mythees said...

//இங்கு மோடி படம் ஏன் என்று கண்டுபிடிபவர்களுக்கு தவக்களை சூப் இலவசம்//

அப்ப எனக்கு தவக்களை சூப் கிடைக்காத

கோவி.கண்ணன் said...

//அசோக்கின் பதிவிற்க்கு பிறகு, சாட்டிலும், போனிலும் நான் உங்கிட்ட அப்படியா நடந்துகிட்டேன் என கேட்கும் போது தான் நீங்களும் அவாள் என்பதே எனக்கு தெரிகிறது, நான் யாரிடமாவது நீங்க என்ன சாதி, உங்க சொத்து நிலவரம் என்ன என்று உங்கள் பர்சனல் டேட்டா கேட்டிருக்கிறேனா!?,//

மிகக் கேவலம்.
:)

என்னிடம் இது போல் யாரும் கேட்கவில்லை, நானும் அசோக் பதிவுக்கு பின்னூட்டம் போட்டேன். என்னுடைய நண்பர்கள் சாதியைத் துறந்தவர்கள் என்பது எனக்கு பெருமையாக இருக்கு.

மோனி said...

..//தாமதமானாலும் நாங்கள் செயல்படபோவது உறுதி!, இது துண்டு இணைப்பாக இருந்தாலும் பெரியாரிஷ்டுகள் டவுசர் ஒருநாள் பெரிதாக கிழிபடபோவதும் உறுதி!//..

ஆகவே...
இங்கே...
நான்...
சொல்லுவதென்னவென்றால்...

(இருங்கப்பா ஒரு சோடா குடிச்சிக்கிறேன்)

டவுசர் கிழிபட போவது உறுதி, உறுதி,, உறுதி.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஆஜர் தல..

ஆடு ஏதாவது வந்துச்சா?

Unknown said...

//இங்கு மோடி படம் ஏன் என்று கண்டுபிடிபவர்களுக்கு தவக்களை சூப் இலவசம்//

மோடிக்கு பிடிச்ச சூப் தவக்களை சூப்.கரெக்டா?

Sabarinathan Arthanari said...

@வால்பையன்

அனைத்து தரப்பினரையும் விமர்சனம் செய்தல் நல்ல முயற்சி தான்.

எனக்கு ஒரு கேள்விக்கு நேரடியான பதில் தேவை. ”பார்ப்பான்” எனும் சொல் வழக்கு மொழியில் (சாதாரண மக்களிடம்) என்ன பொருளில் பயன் படுத்த பட்டு வருகிறது ?

அகல்விளக்கு said...

Present Sir....

கும்மி இன்னும் வரலியா....

நானும் அப்பாலிக்கா வர்றேன்...

வால்பையன் said...

//”பார்ப்பான்” எனும் சொல் வழக்கு மொழியில் (சாதாரண மக்களிடம்) என்ன பொருளில் பயன் படுத்த பட்டு வருகிறது ? //


சாதாரன மக்களுக்கு பார்பான் என்ரால் என்னவென்றே தெரியாது! கிராமபுறங்களில் அய்யர் என்றாலும், அய்யங்கார் என்றாலும் சாமி என்ற ஒரே வார்த்தை தான் பயன்படுகிறது, அந்த வார்த்தையை தனதாக்கி கொள்ளும் எந்த தெள்ளவறியும் நான் சாமியில்லை, சாமி கோவிலில் இருக்கு என்ற சொன்னதாக ஆதாரம் இல்லை!

ஆரியத்திலிருந்து பிரிந்து இந்தியா வந்த இனம் உருவாக்கிய பார்பனிசத்தை முதலில் கடைபிடித்தவர்கள் பார்பனியர்கள், அதை ஊரெங்கும் பரப்பி இன்று வீட்டுக்கு ஒரு பார்பனன்!

Rajan said...

//உங்கள் கோபம் உங்களவில் நிச்சயமாக நியாயமானதே! யாரிடமோ கேள்வி கேட்க ஏன் அனைவரையும் இழுக்கிறீர்கள் என்கிறீர்கள், மேலும் நீங்களே ஒப்புகொள்கிறீர்கள் சாதி ஒரு ”டேட்டா” மட்டுமே அதனால் பயன் ஒன்றும் இல்லை என்று, தேவையில்லாமால், தான் இந்த சாதி என பின்னூட்டத்தில் சொல்லி போனதால் தான் அந்த பதிவு என மறுபடியும் தெரிவித்து கொள்கிறேன்!//

நியாயமாக நடுநிலையாளர்களுக்கு அந்தப் பதிவினால் கோவம் ஏற்ப்பட்டிருக்க தேவையே இல்லை .

Rajan said...

//முதலில் வெளிநாட்டிலிருந்து அழைத்த நண்பருக்கு!//

நான் மார்க் பேசறேன் ! அங்க என் பிரதர் ஸ்டீவ் இருக்காரா ?

Rajan said...

//மேலும் எச்சகலை ஏன் என நீங்கள் கேட்டதற்கு ராஜன் அளித்த விளக்கம்!//
அந்த வார்த்தை பிரயோகம்தான் தவறு என்றால் அடுத்து பலான கெட்ட வார்த்தை களுக்குத்தான் தாவ வேண்டும்

Rajan said...

//இங்கு மோடி படம் ஏன் என்று கண்டுபிடிபவர்களுக்கு தவக்களை சூப் இலவசம்//

மோடி மஸ்தான் வேலை செய்வதாலா ?

Rajan said...

//அசோக்கின் பதிவிற்க்கு பிறகு, சாட்டிலும், போனிலும் நான் உங்கிட்ட அப்படியா நடந்துகிட்டேன் என கேட்கும் போது தான் நீங்களும் அவாள் என்பதே எனக்கு தெரிகிறது,//
நான் அப்பிடியே சாக் ஆயிட்டேன் !

Rajan said...

//நான் யாரிடமாவது நீங்க என்ன சாதி, உங்க சொத்து நிலவரம் என்ன என்று உங்கள் பர்சனல் டேட்டா கேட்டிருக்கிறேனா!?, நட்பாய் இருப்பதற்கு சாதி ஒரு தகுதி இல்லையே! நான் அவ்வாறு நினைப்பேன் என ஏன் நினைக்கிறீர்கள்//

நல்ல கேள்வி

Rajan said...

//அசோக்கின் இந்த பதிவு ஒரு முக்கிய சர்ச்சைகுறிய பதிவு!//

ஆமாப்பா ஆமாம்

Rajan said...

//அதிமுக்கியமாக பெரியார் துதி பாடுதல்!//

இவனுகளுக்கு ஒரு நாள் இருக்கு

Rajan said...

//ஆணாதிக்கம், வர்ணாசிர கொள்கை, குலத்தொழில் கொள்கை, சாதிபற்று, அதிமுக்கியமாக இந்துத்துவா வெறி!// அப்புராநியாக பில்ட் அப் பண்றது !

Rajan said...

//நாங்கள் பெண்டெடுப்பதில் பி.ஹெட்.டி பண்ணியிருக்கோம், விடமாட்டோம்!//

சின்னப் பொண்ணுக்கு பெண்டு எடுத்து டாக்டர் பட்டத்துக்கு வேற சிபாரிசு செய்யப் பட்டிருக்கோம்

Rajan said...

//”பார்ப்பான்” எனும் சொல் வழக்கு மொழியில் (சாதாரண மக்களிடம்) என்ன பொருளில் பயன் படுத்த பட்டு வருகிறது ?.//

சூத்திரன் என்ற சொல் வழக்கு பிராமண சொல் வழக்கு மொழியிலும் வாழ்முறையிலும் எந்த நிலையில் வைக்கப் பட்டு இருக்கிறது ?

Sabarinathan Arthanari said...

//சாதாரன மக்களுக்கு பார்பான் என்ரால் என்னவென்றே தெரியாது!//

வால்பையன் said...

மன்னிக்கவும், விவரம் தெரியாமல் எழுதி விட்டேன் ,
பார்ப்பனீயம் என்பது நாஜியிஷம் போல் ஒரு இஷமா ?
நான் சிறு வயதில் பிராமணர்களை பாப்பான் என்று கூற கேள்வி பட்டிருக்கிறேன்.
அதனால் தான் அப்படி எழுதி விட்டேன்

வால்பையன்
--http://valpaiyan.blogspot.com/2008/01/blog-post_30.html

Dr.Rudhran said...

பார்ப்பானை ஐயர் என்ற காலம் போச்சு என்று அவர்களில் ஒருவனாய்ப் பிறந்தவன் எப்போதோ சொன்னோனே... இன்னும் என்ன யார் பார்ப்பான் என்று கேள்வி?
சாதி வெறியுடன், திமிருடன், திருட்டுத்தனத்துடன், தன்மானமற்ற தன்னலம் பேணும் குயுக்தியுடன் எவன் செயல்பட்டாலும் அவன் பார்ப்பனீயக் கீழ்மையுடையவன். அவன் எந்தக் குடும்பத்திலும் பிறக்கலாம், எந்த மதத்திலும் இருக்கலாம், ஆனால் இப்படிப்பட்டவர்களைச் சுட்டிக்காட்டும்போது, அரிப்பு மிகுந்து, ஆத்திரம் மிகுந்து துள்ளி வெளிவருவான்- நாம் அடையாளம் கண்டுகொள்ள.

வால்பையன் said...

//வால்பையன் said...

மன்னிக்கவும், விவரம் தெரியாமல் எழுதி விட்டேன் ,
பார்ப்பனீயம் என்பது நாஜியிஷம் போல் ஒரு இஷமா ?
நான் சிறு வயதில் பிராமணர்களை பாப்பான் என்று கூற கேள்வி பட்டிருக்கிறேன்.
அதனால் தான் அப்படி எழுதி விட்டேன்//


எனதினிய நண்பருக்கு!
நான் பள்ளிபடிப்பை தாண்டாதவன் ஆனால் புத்தகங்கள் படிக்கும் ஆர்வம் உள்ளவன், மேலும் இன்று வரை படித்தும், கற்று கொண்டும் தான் இருக்கிறேன் என்பதில் எந்த மாற்று கருத்துமில்லை! அன்று எனகிருந்த சந்தேகம் நான் கேட்டேன்,

இன்று எனது புரிதலை உங்கள் முன் வைத்திருக்கிறேன்! உங்களுடய கருத்தும் வரவேற்க்கப்படுகிறது!

Rajan said...

//அரிப்பு மிகுந்து, ஆத்திரம் மிகுந்து துள்ளி வெளிவருவான்- நாம் அடையாளம் கண்டுகொள்ள. //

பார்ப்பான் எவ்வளவு சூதானமாக இருந்தாலும் அவன் தனது தெள்ளவாறித் தனத்தை யாராவது சொல்லும்போது அடங்கியிருக்க மாட்டான் .பார்பன புத்தி இருக்கவும் விடாது . துள்ளி வந்து குடுமியை ஆட்டாமல் அடங்க மாட்டான்

Sabarinathan Arthanari said...

@வால்பையன்,

நண்பா, சாதியை ஒழிக்க வேண்டும் என்பதில் இரு வேறு கருத்து இருக்க முடியுமா என்ன ?

ஆனால் இப்போராட்டத்தை எதை நோக்கி எடுத்து செல்கிறோம் என்பதில் எனக்கு மிகுந்த கவலை உள்ளது.

என்னை பொருத்த அளவில்
1. நம் மக்கள் மதவழிபாடுகள் செய்தாலும் செய்யா விட்டாலும்,
2. பூசை செய்தாலும் செய்யாவிட்டாலும் அக்கறை கிடையாது

ஆனால் அறியாமை, கல்வி அறிவின்மை, சுரண்டல் ஒழிக்க பட வேண்டும் என்பதே முக்கிய கருத்து.

ஆனால் இப்போதய நிலையில் மதத்தை எதிர்ப்பவர்களுக்கு கூட மதம் தான் முன் நிற்கிறது. மக்களின் முன்னேற்றம் குறித்த அக்கறை பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டதோ எனும் அக்கறை எழுகிறது.

நிற்க.

“பார்ப்பனியம்” எனும் சொல்லின் கீழ் மற்ற சாதியினர் மறைந்து கொள்கின்றனர் என்பது தான் என்னுடைய ஐயம்.

Sabarinathan Arthanari said...

மற்ற சாதியினர் என்பதை அடக்கு முறையில் ஈடுபடும் மற்ற இனத்தினர் என பொருள் கொள்ளுங்கள்.

வால்பையன் said...

//
“பார்ப்பனியம்” எனும் சொல்லின் கீழ் மற்ற சாதியினர் மறைந்து கொள்கின்றனர் என்பது தான் என்னுடைய ஐயம். //

நிச்சயமாக தனிதனியாக தோலுரிப்போம்!

மனிதநேயமே முக்கிய குறிக்கோளாக இருக்கிறது, தனிமனித முன்னேற்றம் அனைவருக்கும் சாத்தியமே, அவனது இடத்தை இன்னொருவன் அடைக்காமல் இருக்கும் வரை, முதலில் அவன் பெர்த்தை அவனுக்கு கன்பார்ம் பண்ணி கொடுப்போம்!

பொறுமையாக களையெடுத்தலே சிறந்த அறுவடைக்கு உதவும் என நம்புகிறேன்!

வால்பையன் said...

//மற்ற சாதியினர் என்பதை அடக்கு முறையில் ஈடுபடும் மற்ற இனத்தினர் என பொருள் கொள்ளுங்கள். //


அவர்கள் அவ்வாறு அடையாளபடுத்தி கொள்ளும் சாதி ஒரு மாயை என புரியவைக்கும் பொருட்டே இதை செய்கிறோம் நண்பரே! சாதி அடுக்குகளே பார்பனீயத்தின் ஒரு அங்கம் தான்!

Sabarinathan Arthanari said...

அறியாமையை ஒழிக்க ஒரே வழி எளிய மக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்ய பட வேண்டும்,

ஜீவாதாரங்களான உணவு, கல்வி, மருத்துவம், வேலை உறுதி செய்ய பட வேண்டும்

சிந்திக்க பழகி விட்டால் தவறான மூட நம்பிக்கைகள் தாமாக விலகி விடும் என்பது என் கருத்து

Sabarinathan Arthanari said...

@வால்பையன்

நம்ம வட்டார பகுதியையே ஒரு உதாரணத்திற்கு எடுத்து கொள்வோம்.

ஈ வெ ரா வாழ்ந்த இப்பகுதியிலேயே நகரத்தை விட்டு கிராம பகுதிகளுக்கு சென்றால் சில மக்களின் இன்றைய நிலை என்ன ?

இவற்றிற்கான காரணம் என்ன ? இதை தான் நான் சிந்திக்கிறேன்
சாதி இல்லாத தமிழினம் !! (சாதியமும், சுயவஞ்சகமும்)

ஓரளவு பொருளாதார முன்னேற்றமான ஈரோட்டிலேயே இக்கதி எனில் பின் தங்கிய மாவட்டங்களான தென் தமிழக கிராமங்களின் நிலையை நினைக்கவே பதறுகிறதே :(

மணிஜி said...

உங்கள் புரிதலுக்காக.. ராஜனின் பதிவில் பதிவர் சந்திப்பில் பிராமணியம் என்ற வார்த்தை இருந்ததால்தான் விளக்கம் தரவேண்டியதாக இருந்தது. அது முற்றிலும் தவறான பிரசாரம்.சந்திப்பை பற்றி எழுதிய பதிவர் சென்ஷேஷனுக்காகவே அப்படி எழுதினார்.அவரே அவர் பதிவில் மறைமுகமாக சொல்கிறார். அது தொடர்பான விளக்கமே உங்களிடம் சொன்னேன்.மற்றபடி பார்ப்பணியம்,புண்ணாக்கு எதைப் பற்றியும் நீங்கள் எழுதுங்கள். நீங்கள் பழகியவரை மேற்படி பதிவர்களிடம் அந்த குணாதிசயத்தை நீங்கள் கண்டதுண்டா என்பதே என் கேள்வி.பொதுவாக நீங்கள் எழுதியிருந்தால் விடுங்கள். பதிவர் என்ற வார்த்தை வந்ததால்தான் இந்த விளக்கம். நன்றி அருண்..

Dr.Rudhran said...

இதெல்லாம் என்னமோ இப்போதைய விஷயம் போல நடிப்பவர்களுக்காக, 1930 காலத்து வடகலை ஐயங்கார் விஷயம் இன்னும் கொஞ்சம் படித்து விட்டு எழுதுகிறேன்..
அவர் பெயர் எம்.கே.ஆச்சார்யா.
அவர் எதிர்த்தவர் பெயர் அம்பேத்கர்!

இன்னும் கொஞ்சம் விவரங்கள் சேகரிக்க வேண்டியுள்ளது, இது ஒரு முன்னோட்டம் தான்!!

வாக்காளன் said...

ஆஜர் ..

உமர் | Umar said...

நானும் இங்கதான் இருக்கேன். 4 மணிக்கு அப்பாலிக்கா கும்மில கலந்துக்கிறேன். அகல்விளக்கு ஆரம்பிங்க. நான் வந்து சேர்ந்துக்கிறேன்.

Rajan said...

//அது முற்றிலும் தவறான பிரசாரம்.சந்திப்பை பற்றி எழுதிய பதிவர் சென்ஷேஷனுக்காகவே அப்படி எழுதினார்.//

அன்பின் மணிஜி! பதிவர் சந்திப்பு குறித்து ஏதும் கருத்து சொன்னதாக பதிவில் இல்லையே. DR அசோக்கினுடயதோ டோண்டுவினுடையதோ உ .த - வினுடயதோ எது சென்சேஷன் எது ஆதி சேஷன் என்றெல்லாம் ஆராயவும் முற்ப்படவில்லை. பதிவர் சந்திப்பில் பார்பநீயப் பிரச்சனை எழுந்த போது (அவர் விளம்பரத்துக்காக பதிவிட்டார் என்றே வைத்துக் கொள்ளுங்கள்) அதற்க்கு பதில் வந்த விதம் குறித்தே வினவியுள்ளேன். ஏன் அனுசரித்தும், கண்டு காணாமல் போகவும் வலியுறுத்திக் கொண்டு இருந்தார்கள்

வினவு said...

நிஜ வாழ்வில் இருக்கும் பார்ப்பனியத்தின் சூழ்ச்சி பதிவுலகிலும் பல்வேறு முறைகளில் வெளிப்படுகிறது. என்றாலும் பார்ப்பனிய எதிர்ப்பும் அதை ஏற்க முடியாது என்ற பிரகடனமும் பதிவுலகில் வளர்ந்து வருகிறது. வாழ்த்துக்கள்!

Sabarinathan Arthanari said...

@Dr.Rudhran,

கீழ் கண்டவை உதவலாம்.

http://www.ambedkar.org/ambcd/16A.%20Evidence%20Taken%20Before%20The%20Joint%20Committee%20PART%20I.htm#a14

http://www.scribd.com/doc/11143272/gandhicollected-works-vol-58

Unknown said...

////ஆனால் இப்படிப்பட்டவர்களைச் சுட்டிக்காட்டும்போது, அரிப்பு மிகுந்து, ஆத்திரம் மிகுந்து துள்ளி வெளிவருவான்- நாம் அடையாளம் கண்டுகொள்ள...///

என்னது,துள்ளி குதித்து வெளியே வந்திருக்கும் இந்த வெள்ளை தாடி கிழட்டு முகம் ,பார்ப்பனீய வில்லன் முகமா?நம்பவே முடியவில்லையே.பார்த்தால் சாதரண டிவி சீரியல் வில்லன் முகம் போல் தான் இருக்கிறது.திராவிடீய பார்ப்பனியன் போலிருக்கிறது.அது தான் பலே வில்லனாக தன்னை அறிவித்திருக்கிறான்.

வால்பையன் said...

நண்பர் அண்ணாதுரை, நாங்கள் பதிவில் யாரை எச்சக்கலை என குறிப்பிட்டுள்ளோம் என்பதை சரியாக கண்டுபிடித்தால் உங்களுக்கு “அண்ணாதுரை” எழுதிய ”வேலைக்காரி” பரிசு!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...
This comment has been removed by the author.
முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...
This comment has been removed by the author.
முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...
This comment has been removed by the author.
Sanjai Gandhi said...

//பெரியாரிஷ்டுகள் டவுசர் ஒருநாள் பெரிதாக கிழிபடபோவதும் உறுதி!//

innum kiliyalaina nenaichitu irukinga? :)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அண்ணாதுரை சார்..

ராசி பலன் வேணுமுனா கீழ்கண்ட ஐடி-க்கு மெயில அனுப்புங்க..சொல்றோம்..


annadurai@pai.murugappa.com
annaduraic1969@gmail.com

..

கூடவே, மரியாதை எப்படி கொடுப்பதுனு சொல்லிக்கிடுக்கிறோம் சார்...

பார்ப்பான் said...

ஓஹோ. அண்ணாதுரைவாள் பாரி இண்டஸ்ட்ரியில் வேலை பார்க்குறன் போலிருக்கே. யாராவது ஆப்பு கீப்பு வெச்சுடபோறா. பார்த்து ஓய்.

பார்ப்பான் said...

ஓஹோ. அண்ணாதுரைவாள் பாரி இண்டஸ்ட்ரியில் வேலை பார்க்குறன் போலிருக்கே. யாராவது ஆப்பு கீப்பு வெச்சுடபோறா. பார்த்து ஓய்.

Unknown said...

அண்ணே, கீழ் ஜாதியுள்ளும் உள் ஜாதி பார்த்து தன கல்யாணம் செய்கிறார்கள். தாய் குலம், பங்காளி குலம் என்று பார்க்கிறார்கள். முதலில் அதை நிறுத்தி மருத்துவர் சான்றிதல் பெற்று இரு மனங்களை ஒன்று சேர்க்க வழி செய்தால் ( தகுதி அடிப்படையில் ), நாளைய மக்கள் பார்பனியத்தை ஒழித்து விடுவார்கள். பார்ப்பனீயம் என்பது ஒரு வகை கள்ளி செடி, டில்லி முள் என்றும் ஈரோடு பகுதியில் சொல்வார்கள். அதை தான் பெரியார் நாயக்கர் உபயோகித்தார்.

Unknown said...

///நண்பர் அண்ணாதுரை, நாங்கள் பதிவில் யாரை எச்சக்கலை என குறிப்பிட்டுள்ளோம் என்பதை சரியாக கண்டுபிடித்தால் உங்களுக்கு “அண்ணாதுரை” எழுதிய ”வேலைக்காரி” பரிசு///

என்னங்க இது கடினமான அவுட் ஆப் சிலபஸ் கேள்வியை கேட்டுவிட்டீங்க.சரி ஆண்டவன் மேல் பாரத்தை போட்டுவிட்டு முயற்சிப்போம்.
1) சைக்கிள் கடை ராஜன்..இல்லை.ராஜன், அரை டிக்கட் பெண்கள் கை தட்டுகிறார்களே என்பதற்க்காக ரெள்டி மாதிரி பேசும் சொறியன்.அவ்வளவே எச்சக்கலை கிடையாது.
2)பட்டாபட்டி..உஹூம்..இது கிளி சோசியம் மற்றும் சில்லறை திருட்டுதனம் செய்து பிழைப்பை நகர்த்தும் ஒரு பொடியன்.இந்த மூஞ்சியை எச்சக்கலை என்று சொல்வது ஓவர்.
3)கும்மி..இது ஒரு தண்ட சோத்து தடி மாடு என்று சொல்லலாமே தவிர எச்சக்கலையெல்லாம் கிடையாது.
4)வால்பையன்..இது பேட்டை தாதா.கட்டப் பஞ்சாயத்து செய்து கொள்ளை அடிக்கும் ஈரோட்டு லோக்கல் வில்லன்.

மலேஷியாவில் இருக்கும் ப்ன்னி.அரசு என்னும் ஜாதி வெறியன் தான் வால் பையன் தாதா வழங்கும் எச்ச்க்கலை பட்டம் பெற லாயக்கானவன்.

சரியான பதிலை சொல்லிவிட்டதால்,நீங்க வைத்துக் கொண்டிருக்கிற அண்ணாதுரையின் வேலைக்காரியை,பெரிய தாடி மருத்துவர் ஐயாவுக்கே பார்சல் பணணிடுங்க.அவரே வைத்துக் கொள்ளட்டும்.
பி எஸ் வீரப்பா லெவலில் வில்லத்தனம் பண்ணும் இந்த திராவிடீய பார்ப்பனீய வில்லனுக்கு அது தான் தக்க ஒரு தண்டனையாக இருக்க முடியும்.(ஆமாம் பெரிய பரிசு அறிவித்த பாண்டிய மன்னனின் மூஞ்சியைப் பாரு.என்னவோ ஆயிரம் பொற்காசு கொடுக்கற மாதிரி.சரியான கஞ்ச பிசினாறி ஐயா நீங்கள்.)

வால்பையன் said...

//வால்பையன்..இது பேட்டை தாதா.கட்டப் பஞ்சாயத்து செய்து கொள்ளை அடிக்கும் ஈரோட்டு லோக்கல் வில்லன்.//


ஹாஹாஹா!
எப்படி இப்படி உண்மையெல்லாம் புட்டு புட்டு வைக்கிறிங்க! நீங்க பெரிய ஜோசியகாரரு தான்!, அப்படியே இண்டர்நேஷனல் வில்லன் ஆகுறதுக்கு ஒரு ஐடியா கொடுத்தா பரவாயில்லை!

அப்புறம் நான் கேட்டது பதிவில் யாரை எச்சக்கலை என்று சொல்லியிருக்கிறோம் என்று! நீங்க யாரை அப்படி நினைத்துள்ளீர்கள் என்று அல்ல!

பெங்களூரில் மழையெல்லாம் எப்படியிருக்கு!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

//
பட்டாபட்டி..உஹூம்..இது கிளி சோசியம் மற்றும் சில்லறை திருட்டுதனம் செய்து பிழைப்பை நகர்த்தும் ஒரு பொடியன்.இந்த மூஞ்சியை எச்சக்கலை என்று சொல்வது ஓவர்.
//

நல்ல வேளை அண்ணாதுரை சார்.. எங்க என்னைய , மணியாட்டிட்டு, செல் போன் வெச்சு பூசை பன்ணுன , கம்மனாட்டிககூட சேர்த்துடுவீங்களொனு நினைச்சுட்டேன்..

நடக்கட்டும் நாட்டியம்..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அப்புறம் அண்ணாத்துரை சார்.. 1969-ல பொறந்துட்டு, இன்னுமா, ராசி பலனை கேட்டுகிட்டு சுத்தறீங்க..?

Need any help?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

//
ஆண்டவன் மேல் பாரத்தை போட்டுவிட்டு முயற்சிப்போம்.//


பாவமையா உங்க ஆண்டவன்.. இதுக்கும் கூப்பிடனுமா?
பார்த்து..உமக்கு குழந்தை பிறந்தைக்கூட ஆண்டவர் கொடுத்ததுனு சொல்லிட்டு திரியாதே..

Dr.Rudhran said...

thank you sabari

sriram said...

அன்பின் அருண்,

என் வேண்டுகோளுக்கிணங்க பதிவிட்டமைக்கு நன்றி. நாந்தான் பேசினேன்னு எழுதியிருந்தாலும் தவறொன்றுமில்லை, நான் எப்போதும் அனானியாக வருவதுமில்லை / முகமூடி
அணிவதுமில்லை. I stand by the words I spoke yesterday.

//உங்கள் கோபம் உங்களவில் நிச்சயமாக நியாயமானதே//

எதற்கு இந்த வார்த்தை விளையாட்டு அருண்? என் கோபம் என்னளவில் நியாயமானதே என்று நீங்கள் சொல்லி எனக்குத் தெரிய வேண்டியதில்லை, அதில் நியாயம் இருக்கா இல்லயான்னு
உங்கள் நிலைப்பாட்டைச் சொல்லுங்கள்.

// நீங்களே ஒப்புகொள்கிறீர்கள் சாதி ஒரு ”டேட்டா” மட்டுமே //

நான் இதுவரை ஐயங்கார் பிரிவில் பிறந்தவன் என்பதை இதுவரை எங்கும் பதிவிட்டதில்லை - இதற்கான நீண்ட விளக்கத்தை நேற்றே சொன்னேன்.நான் சொன்னது போல அது ஒரு
Data மட்டுமே, நான் இந்தியாவில் பிறந்ததால் இந்தியன், தமிழகத்தில் பிறந்ததால் தமிழன், இரண்டு ஐயங்கார்கள் சேர்ந்து பெத்தெடுத்ததால் ஐயங்கார். இதில் எதுவும் என் முயற்சியில்
பெற்றெடுத்த பட்டங்களில்லை எனவே இதில் நான் பெருமை கொள்ள எதுவிமில்லை. இந்தியன் என்பதில் உள்ள சிறு பெருமை கூட எனக்கு ஐயங்கார் என்பதில் இல்லை.

//தான் இந்த சாதி என பின்னூட்டத்தில் சொல்லி போனதால் தான் அந்த பதிவு என மறுபடியும் தெரிவித்து கொள்கிறேன்//

அதத்தானே நானும் சொல்றேன் - தனிமனிதன் ஒருவன் தவறு செய்தால் அவனைக் கண்டியுங்கள், எனக்கும் தவறென்று பட்டால் நானும் இணைகிறேன், அதை விடுத்து ஒரு சமூகத்தையே
சாடுவது என்ன நியாயம்??

//வடகலை, தென்கலை அப்படியே தான் இருக்கு, அதை எந்த தவக்கலையும் மாத்த முடியல, நான் சொல்ல வந்தது பார்பனீயத்தின் விசம் தெரியாமல் அதற்கு பால் வார்க்கும் பார்பினீயத்திற்கு
தொடர்பு இல்லாதவர்களை என்கிறார்//

சத்தியமா புதசெவி.

//சரியான வாதத்திற்கு வராமல் தாடிகாரன், குண்டம்மா என அனானியாக வந்து தாக்குபவர்கள் எச்சக்கலையாக அல்லாமல் என்னவாக இருப்பார்கள் என்கிறார்,//

கண்டிப்பா ஒத்துக்கறேன். கருத்து என்னோடதா இருந்தா, முகமும் என்னுடையதாகவே இருக்கும், இருக்கணும்.இது உங்களுக்கு தெரியும்னு நெனைக்கிறேன்.

//அசோக்கின் பதிவிற்க்கு பிறகு, சாட்டிலும், போனிலும் நான் உங்கிட்ட அப்படியா நடந்துகிட்டேன் என கேட்கும் போது தான் நீங்களும் அவாள் என்பதே எனக்கு தெரிகிறது,
நான் யாரிடமாவது நீங்க என்ன சாதி, உங்க சொத்து நிலவரம் என்ன என்று உங்கள் பர்சனல் டேட்டா கேட்டிருக்கிறேனா!?//

இதே லாஜிக் எனக்கும் அப்ளை ஆகும் இல்லயா? நானும் இதுவரை என் ஜாதியைப் பற்றியோ உங்களின் ஜாதியைப் பற்றியோ பேசியிருப்பேனா?
அருண், சத்தியமா சொல்றேன், நேற்றைக்கும் இன்றைக்கும் தான் நான் என் வாழ்க்கையில் ஜாதி என்கிற வார்த்தையை உபயோகித்து இருக்கிறேன்.இந்த நீண்ட பின்னூட்டத்தில்
இத்தனை முறை அந்த வார்த்தையை எழுதி இருப்பதைப் பார்த்து எனக்கே என் மேல் வெறுப்பு வருகிறது. நான் என் வாழ்க்கையில் ஜாதியை உணர்ந்ததே இலலை (இந்த இடத்தில்
என் பெற்றோருக்கு நன்றி சொல்லணும் - பெத்தது மூணுக்கும் ஜாதி வெறி இல்லாம வளர்த்ததுக்கு). என் வாழ் நாள் முழுமையும் நகரங்களிலேயே இருந்திருக்கிறேன் - அதுவும் ஒரு
காரணமாக இருக்கலாம்.

உண்மை இப்படி இருக்கையில், பொத்தாம் பொதுவாக சொன்னால் கோபம் வருமா வராதா? (உங்க தோஸ்த் ஸ்ரீ யின் பாப்பாரத்தா... ளி பதிவை மறுபடியும் படிங்க). ஈரோட்டில்
இருக்கறவங்க எல்லாரும் குடிகாரங்கன்னு நான் சொன்னா ஈரோடு கதிர் என்னை செருப்பால அடிக்க மாட்டாரா? (sorry அருண் ஒரு உதாரணத்துக்குச் சொல்ல வேண்டியிருக்கு,
உங்களை புண்படுத்தும் நோக்கமில்லை, Sorry கதிர்- ஈரோடு கதிர் என்றால் எல்லாருக்கும் தெரியுமென்பதால் உங்க பேரை உபயோகித்தேன்).

D.R.அஷோக் / டோண்டு மேட்டர் - புண்ணியவான்களே இதுதான் என் வாதத்தின் சாராம்சமே - தனிமனிதனின் கருத்துக்காக ஒரு சமூகத்தையே கீழ்த்தரமான வார்த்தைகள் கொண்டு
சாடுவது எப்படி சரியாகும்?? - உங்க கருத்தை முன் வையுங்க, டோண்டுவின் கருத்தை அவர் முன் வைக்கட்டும், அவர் தன் பக்கத்தில் அனுமதிக்காத பட்சத்தில் உங்க பக்கத்தில்
பதிவாக இடுங்கள் - படிக்கறவங்க முடிவு செய்யட்டும் யார் சரின்னு...

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

வடகலை, தென்கலை அப்படியே தான் இருக்கு, அதை எந்த தவக்கலையும் மாத்த முடியல, //


வரைகலை கேள்விப்பட்டிருக்கேன் அது என்னா வடகலை? வட நாட்டுக் கலையா? தென் கரை கேள்விப்பட்டிருக்கேன் அது என்னா தென்கலை? தென் நாட்டுக் கலையா?

தவக்களை கேள்விப்பட்டிருக்கேன்!
தவக்கலையும் தான்!

நித்தி முகத்துலக் கூட அது தெரியுதே!

:)))

sriram said...

//ஆணாதிக்கம், வர்ணாசிர கொள்கை, குலத்தொழில் கொள்கை,சாதிபற்று, அதிமுக்கியமாக இந்துத்துவா வெறி மேலுள்ள கொள்கைகள் உள்ளவர்கள் பார்பனீயம் கடைபடிப்பவர்கள்//

இதில் எதையும் நான் நம்புவதுமில்லை, கடைபிடிப்பதுமில்லை. இங்க நான் எனக்காக மட்டும் வாதாட வில்லை, என்னைப் போன்ற, ஸ்ரீயைப் போல நினைக்கும்
பல்லாயிரக்கணக்கான நண்பர்களுக்காகப் பேசறேன். குலத்தொழில் - இது ஒரு பெரிய ஜோக் - எங்க தாத்தா வக்கீல், அப்பா TNEB யில் அதிகாரி, நான் Marketing Manager-
இப்போ எங்க இருக்கு குலத்தொழில்??

உங்க லாஜிக் படி நான் பாப்பானில்லை.உங்க பார்வையில் நான் என்னன்னு தெளிவாச் சொல்லுங்க. தெரிந்தோ தெரியாமலோ வழக்கத்தில் பாப்பான் என்ற் சொல் ஐயர் மற்றும் ஐயங்கார்களை
மட்டுமே குறிக்கும் சொல்லாக வழக்கில் உள்ளது.உயர் சாதீயம் என்கிற வார்த்தையை உபயோகிப்பதில் உங்களுக்கு என்ன தடை? உங்க நோக்கம் ஜாதி வெறியை மற்றும் உயர் ஜாதி
அடக்குமுறையை எதிர்ப்பதாக மட்டுமே இருந்தால், உயர் சாதீயம் என்ற வார்த்தையைக் கொண்டும் அவற்றைச் செய்ய முடியும். “பாப்பான்” என்கிற வார்த்தையை மட்டுமே
உபயோகிப்பேன்னு நீங்க சொல்வது உங்க நோக்கத்தை கேள்விக்குறியாக்குகிறது......

நேத்தும் சொன்னேன், இப்பவும் சொல்றேன் - Generalization வேண்டாம், வார்த்தைகளில் நாகரிகம் வேண்டும். உங்க செய்கைகளில் இப்படி அமைந்தால் - ஜாதி பத்தி யாராவது
பேசினால், அவர்களை எதிர்ப்பதற்கு என் போன்ற பல பேர் உங்களுக்கு துணை நிற்கிறோம். இல்ல, நாங்க இப்படித்தான் இருப்போம் / சொல்வோம்னு நீங்க சொன்னால் Good Luck,
இது பத்தி பேசுவதற்கு வேறொன்றுமில்லை.

அன்பின் ராஜன்,

உங்க பதிவில் நீங்க அஷோக்கின் கருத்தை ஆமோதிப்பதாகத் தவறாகக் கருதிவிட்டேன், ஒரு பின்னூட்டம் குறித்து மட்டுமே உங்க கருத்துன்னு இன்னிக்கு மறுபடியும் படித்து தெளிந்தேன்.
அது உங்க கருத்து, மற்றும் டோண்டு அவர்களின் கருத்து. தவறாக புரிந்து கொண்டு அருணிடம் சொல்லியதற்கு மன்னிப்பு கோறுகிறேன்.

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

வால்பையன் said...

//உங்கள் கோபம் உங்களவில் நிச்சயமாக நியாயமானதே//

எதற்கு இந்த வார்த்தை விளையாட்டு அருண்? //


உங்கள் புரிதலில் என மாற்றி கொள்க!
ராஜன் எச்சக்கலை என்ற வார்த்தையை எதற்காக பயன்படுத்தினார் என்பதையும், இங்கிருக்கும் சில பின்னூட்டம் அதன் நியாயத்தையும் உங்களுக்கு உணர்த்தும்!

//இதே லாஜிக் எனக்கும் அப்ளை ஆகும் இல்லயா? நானும் இதுவரை என் ஜாதியைப் பற்றியோ உங்களின் ஜாதியைப் பற்றியோ பேசியிருப்பேனா?//


நான் முன்பே அறியாத சிலரை தெரிந்து கொள்ள நேரிட்டது, அதற்காக தான் அதை தனி பேராவாக கொடுத்துள்ளேன், அது வேறு சேப்டர்


*****


பார்பனீயத்தின் விளக்கம் தனியாக கொடுக்கப்பட்டுள்ளது, அய்யர், அய்யங்கார் என தனியாக எந்த சாதி துவேஷமும் எங்களிடம் இல்லை!
இது ஒட்டு மொத்த சமூகத்தையும் குற்றம் சாட்டும் நோக்கமும் அல்ல!
தயவுசெய்து பார்பனீயம் என்றாலே அது உங்களை குறிப்பது போல் எடுத்து கொள்ள வேண்டாம்!


உங்களது நீண்ட கருத்திற்கு நன்றி!

sriram said...

கோவி.கண்ணன் said...
//அசோக்கின் பதிவிற்க்கு பிறகு, சாட்டிலும், போனிலும் நான் உங்கிட்ட அப்படியா நடந்துகிட்டேன் என கேட்கும் போது தான் நீங்களும் அவாள் என்பதே எனக்கு தெரிகிறது,
நான் யாரிடமாவது நீங்க என்ன சாதி, உங்க சொத்து நிலவரம் என்ன என்று உங்கள் பர்சனல் டேட்டா கேட்டிருக்கிறேனா!?,//

மிகக் கேவலம்.
:)

என்னிடம் இது போல் யாரும் கேட்கவில்லை, நானும் அசோக் பதிவுக்கு பின்னூட்டம் போட்டேன். என்னுடைய நண்பர்கள் சாதியைத் துறந்தவர்கள் என்பது எனக்கு பெருமையாக இருக்கு//

கோவி கண்ணன், நீங்க எதை கேவலம்னு சொல்றீங்க? நான் அருணுடன் பேசியது ஒரு மணி நேரம், அருண் பதிவிட்டது அதன் Gist மட்டுமே, நான் சாதியை துறந்தவனா இல்லயான்னு
எனக்குத் தெரியாது, ஆனால் ஜாதியைத் தூக்கிப் பிடிப்பதில்லை.

//நியாயமாக நடுநிலையாளர்களுக்கு அந்தப் பதிவினால் கோவம் ஏற்ப்பட்டிருக்க தேவையே இல்லை//
நான் நடுநிலையானவன் என்பது எனக்கும் என் நண்பர்களுக்கும் தெரியும், எனக்கு கோவம் வந்தது, ஒக்காந்து யோசிச்சுப் பாருங்க புரியும்

////நான் யாரிடமாவது நீங்க என்ன சாதி, உங்க சொத்து நிலவரம் என்ன என்று உங்கள் பர்சனல் டேட்டா கேட்டிருக்கிறேனா!?, நட்பாய் இருப்பதற்கு சாதி ஒரு தகுதி இல்லையே!
நான் அவ்வாறு நினைப்பேன் என ஏன் நினைக்கிறீர்கள்//

நல்ல கேள்வி//

இதுக்கு மொதல்ல பதில் சொல்ல விட்டுட்டேன் ராஜன்.
நான் அவ்வாறு நினைப்பதாக உங்களிடம் சொன்னேனா அருண்? உங்களை அப்படி எண்ண வைத்தது எது? நான் சொன்னதெல்லாம் Generalization வேண்டாம், வார்த்தைகளில் நாகரிகம் வேண்டும்
அவ்வளவே...

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

sriram said...

அன்பின் அருண்
என் கருத்து முழுவதுமாக வருவதற்குள் பதில் சொல்லிட்டீங்க.
முழுசா படிச்சிட்டு, முழுசா பதில் சொல்லுங்க
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

smart said...

இவ்வளவு பேசி கடைசியில் வசந்த உடைய போஸ்ட காரணம் காட்டுகிறேரே! அதற்கு கமென்ட் மாடுலேஷன் வைத்து நாத்திக திமிரை காட்டிவிட்டீகளே

அதற்கு என்ன பதில் வைத்துள்ளீர்கள்?

வால்பையன் said...

//தெரிந்தோ தெரியாமலோ வழக்கத்தில் பாப்பான் என்ற் சொல் ஐயர் மற்றும் ஐயங்கார்களை
மட்டுமே குறிக்கும் சொல்லாக வழக்கில் உள்ளது.//


அது தாங்களாகவே சிலர் சூட்டி கொண்டது!, நிச்சயமாக பார்பனீயம் சகல அர்த்தங்களையும் கொண்டது, சாதியை குறிப்பிடுவது அல்ல! அய்யாங்கார் என்று சாதி பெயர் இருக்கும் போது ஏன் தனீயாக உங்களுக்கு மட்டும் பார்பான் என யோசிக்க


//உயர் சாதீயம் என்கிற வார்த்தையை உபயோகிப்பதில் உங்களுக்கு என்ன தடை? //

எங்கள் பார்வையில் எந்த கம்முனாட்டி சாதியும் உயர்சாதி இல்லை என்பதால் அதை உபயோகிக்க தடை!


//“பாப்பான்” என்கிற வார்த்தையை மட்டுமே
உபயோகிப்பேன்னு நீங்க சொல்வது உங்க நோக்கத்தை கேள்விக்குறியாக்குகிறது......//

பாப்பான் என்றால் நீங்கள் எடுத்து கொள்ளும் விதம் தான் உங்களுக்கு இந்த எண்ணத்தை தருகிறது, பார்பனீயத்தை கடைபிடிக்காத தாங்கள் அதை கடந்து சென்று விடலாம்!


//ஜாதி பத்தி யாராவது
பேசினால், அவர்களை எதிர்ப்பதற்கு என் போன்ற பல பேர் உங்களுக்கு துணை நிற்கிறோம். இல்ல, நாங்க இப்படித்தான் இருப்போம் / சொல்வோம்னு நீங்க சொன்னால் Good Luck,
இது பத்தி பேசுவதற்கு வேறொன்றுமில்லை.//


இந்த கேள்விக்காக தான் கடைசியாக தி.க வையும், பெரியார் கழகத்தையும் இழுக்க வேண்டியதாயிற்று! எங்களுக்கும் மனிதநேயத்துடம் கூடிய அனைவருக்கும் சமமான உரிமையுள்ள தேசத்தை காண தான் ஆசை! விரைவில் செயலில் இறங்குவோம்!

smart said...

கமென்ட் மாடுலேஷன் மூலம் எனது விளக்கமும் அதன் தொடர்பான கேள்விகளையும் நிராகரித்ததிலே தெரிகிறது. உங்கள் உயர்சாதி நாத்திகம். என்னைப் போல உள்ள சாதாரண நாத்திகனை வளரவிடாமல் தடுக்கும் உங்கள் குறுகிய புத்தி தெரிகிறது.

இந்த காமெடிக்கும் மட்டும் வரிந்து கட்டிக்கொண்டு வந்து ஏன் என்னைமட்டும் தாக்குகிறேர்கள் என்று கேட்டீரே இப்படி எழுதினால் நீங்கள்தான் முதல் சிக்குகிறேர்கள்

வால்பையன் said...

//இவ்வளவு பேசி கடைசியில் வசந்த உடைய போஸ்ட காரணம் காட்டுகிறேரே! அதற்கு கமென்ட் மாடுலேஷன் வைத்து நாத்திக திமிரை காட்டிவிட்டீகளே

அதற்கு என்ன பதில் வைத்துள்ளீர்கள்? //


கமெண்ட் மாடுரேஷன் யார் வைத்தா?

பார்பனீயம் என்றால் என்ன என்று விளக்கமா சொல்லியிருக்கேன், அதில் அதிமுக்கியமாக என்ன என்று பாருங்கள், அதில் அடக்கும் அந்த பதிவு!

sriram said...

//பார்பனீயத்தை கடைபிடிக்காத தாங்கள் அதை கடந்து சென்று விடலாம்!//

கண்டிப்பா கடக்க முயல்கிறேன் அருண்

//எங்களுக்கும் மனிதநேயத்துடம் கூடிய அனைவருக்கும் சமமான உரிமையுள்ள தேசத்தை காண தான் ஆசை! விரைவில் செயலில் இறங்குவோம்!//

ஜாதி இல்லாதன்னு சொல்ல மாட்டேன் அருண், ஜாதி இரு Data ஆக மட்டும் இருக்கும் வரையில்.
சமமான உரிமையுள்ள, மனித நேயம் மிக்க இந்தியா என் கனவும் கூடத்தான் அருண், அதனை அடைய நான் உழைக்கத் தயார்.

அது சரி, எழுத்தில் நாகரிகம் பத்தி நீங்க எதுவும் சொல்லவே இல்லயே??

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

வால்பையன் said...

//என்னைப் போல உள்ள சாதாரண நாத்திகனை வளரவிடாமல் தடுக்கும் உங்கள் குறுகிய புத்தி தெரிகிறது.//

நாத்திகனில் சாதாரண நாத்திகன், ஸ்பெஷல் நாத்திகன் என்று இருக்கா என்ன!?

அவரவர் பதிவில் கமெண்ட் மாடுரேஷன் வைத்து கொள்வது அவரவர் விருப்பம், நேரம் இருக்கும் போது வெளியிடுவார், என்னிடம் கேட்டால் எனக்கு என்ன தெரியும்!

smart said...

எப்போதும் அடுத்தவரை குத்தம் சொல்லும் முன் தன் முதுகையும் பார்க்கவேண்டும்.
சர்ச்சைக்குரிய இடுகையை ஏன் நீங்கள் இந்த தளத்தில் பதியாமல் ஆலின் ஆள் தளத்தில் பதிந்தீர்கள் என்னைக்கண்டு அச்சமா? அல்லது உயர் சாதி நாத்திக திமிரா?

வால்பையன் said...

//அது சரி, எழுத்தில் நாகரிகம் பத்தி நீங்க எதுவும் சொல்லவே இல்லயே??//


அவரை சீண்டாதவரை தான் யாரையும் சீண்டுவதில்லை என உறுதியளித்திருக்கிறார்!

அதற்காக தனி பதிவும் எழுத உள்ளார்!
தனிமனித நாகரிகம் கடைபிடிக்க அவர் தயார், அவர்களது மூடநம்பிக்கைகெல்லாம் ஏன் மரியாதை தரனும்னு கேட்கிறார்!

வாக்காளன் said...

அசட்டு அம்பி அண்ணாதுரை , சைக்கிள் கடைல இருந்து இங்க வந்துடீய நீ. பெரியவ சொன்ன கேட்கனும்னு நோக்கு தெயர்யாத ?
ஆத்துல ஜோலி இல்லையா அசடு.
இங்க வா டா அம்பி , புள்ளையார் கிள்ள மனிஆட்ட ஆள் வேணும்ட.. வந்து பொழப்ப பாப்பிய அத விட்டு இப்படி அசமஞ்சமா கமென்ட் போடறனு சுத்திண்டு இருப்பிய.. அபிஷ்டு அபிஷ்டு.. சீக்கிரம் வாட , நம்ம தேவநாத குருக்கள் வந்த்திஉர்கர், நித்யா வந்திருக்கார், மற்றும் நம்ம உற்றார் உறவினர் எல்லாம் வந்திருக்க .. கோயிலுக்கு நெறைய பொம்மனாட்டிகள் வர்ற பாரு.. சீக்கிரம் ரெண்டு பாக்கட் ஹான்ஸ் வாங்கிண்டு வா டா அம்பி..
அவா பேசுறத கேட்டு பதில் போட்டிண்டு இருந்த .. இங்க வேலைய யாருடா பார்ப்பா.. நீக்கு கோவம் வர மாதிரி நடந்துக்கபடது.. ! மனுடு மண்டு

-- காஞ்சி சுப்புணி..

வால்பையன் said...

//எப்போதும் அடுத்தவரை குத்தம் சொல்லும் முன் தன் முதுகையும் பார்க்கவேண்டும்.
சர்ச்சைக்குரிய இடுகையை ஏன் நீங்கள் இந்த தளத்தில் பதியாமல் ஆலின் ஆள் தளத்தில் பதிந்தீர்கள் என்னைக்கண்டு அச்சமா? அல்லது உயர் சாதி நாத்திக திமிரா? //

நாங்க படுத்துகிட்டும் போர்த்திகுவோம், போர்த்திகிட்டும் படுத்துகுவோம்! எங்க எழுதுனா என்ன, உங்கள் திருப்பணியை தொடர்க!

நாத்திகத்தில் உயர்சாதி எங்கிருந்து வந்தது!? நீர் தெளிவாய் தானே உள்ளீர்?

smart said...

//அவரவர் பதிவில் கமெண்ட் மாடுரேஷன் வைத்து கொள்வது அவரவர் விருப்பம், நேரம் இருக்கும் போது வெளியிடுவார், என்னிடம் கேட்டால் எனக்கு என்ன தெரியும்//

அப்படிஎன்றால் அவர் இடுகையை இங்கு சுட்டிக்காட்டி பதிலில்லை என கூறியது உங்கள் பார்ப்பனீய நாத்திகத்தைக் காட்டுகிறது ???????????


{-உங்கள் பதிவு பற்றி பின்னர் விவாதிப்பேன்.}

வால்பையன் said...

//அப்படிஎன்றால் அவர் இடுகையை இங்கு சுட்டிக்காட்டி பதிலில்லை என கூறியது உங்கள் பார்ப்பனீய நாத்திகத்தைக் காட்டுகிறது ???????????//


அடடே!
நீங்க அப்படியா!?

சரி சரி, பார்த்து போங்க!

smart said...

//நாங்க படுத்துகிட்டும் போர்த்திகுவோம், போர்த்திகிட்டும் படுத்துகுவோம்! எங்க எழுதுனா என்ன, உங்கள் திருப்பணியை தொடர்க!//


//நாத்திகத்தில் உயர்சாதி எங்கிருந்து வந்தது!? //
இது இதுதான் உங்கள் உயர்சாதி திமிர். கேள்வி கேட்டால் பதில் சொல்லவேண்டும்

வாக்காளன் said...

Sriram,
//பாப்பான் என்ற் சொல் ஐயர் மற்றும் ஐயங்கார்களை
மட்டுமே குறிக்கும் சொல்லாக வழக்கில் உள்ளது.உயர் சாதீயம் என்கிற வார்த்தையை உபயோகிப்பதில் உங்களுக்கு என்ன தடை? உங்க நோக்கம் ஜாதி வெறியை மற்றும் உயர் ஜாதி
அடக்குமுறையை எதிர்ப்பதாக மட்டுமே இருந்தால், உயர் சாதீயம் என்ற வார்த்தையைக் கொண்டும் அவற்றைச் செய்ய முடியும். “பாப்பான்” என்கிற வார்த்தையை மட்டுமே
உபயோகிப்பேன்னு நீங்க சொல்வது உங்க நோக்கத்தை கேள்விக்குறியாக்குகிறது......//


ஐயர், ஐயங்கார் .. அப்புறம் என் பார்பான் என்று சொன்னால் கோவம் வருகிறது.. அதிலும்.. இங்கே பார்பனியம் என்று சொன்னால் என் குதித்து வர வேண்டும்.. நான் பார்பான் இல்லை நான் ஐயர் அயங்கார் என்று போகலாமே.. அப்படி பார்த்தல் கூட பார்பாநீயம் என்று தானே சொலிறார்கள் .. பார்ப்பான் என்று இல்லை..
// உயர் சாதீயம் என்ற வார்த்தையைக் கொண்டும் அவற்றைச் செய்ய முடியும்//

இப்போது உயர் சாதியம் என்று சொல்லிக்கொள்ள வேண்டுமா??? என்ன கொடுமை டா இது.. திட்டும் போது கூட தங்களை உயர் சாதியம் enRe திட்ட வேண்டும் என்று எதிர்பர்கிரார்களா? இந்த உயர் சத்தியம் என்பதை நிறுவியது யார்? தெரியுமா? தலையில் இருந்து , வாலில் இருந்து , காலில் இருந்து என்று கதை அளந்து மேல் , கிழ் என்று பிரித்து யார் ?? யார் கூட வேண்டாம் - பிரித்தது எது? வேதம? வர்நாசிரமமா ?

/“பாப்பான்” என்கிற வார்த்தையை மட்டுமே /
பப்பன் இல்லை .. பார்பனீயம், பார்பனீயம் .. ஜாதி திமிர், ஜாதி அடிப்படியில் பிரிவு, மற்றும் பல விஷயங்களை செய்பவர்கள் யாவரும் பார்பனீயத்தை கடைப்பிடிப்பவேறே .. பார்பனீயம்.. பார்பனீயம்.. .. பார்பனீயம்.. .. பார்ப்பான் அல்ல அல்ல..

கோவி.கண்ணன் said...

//கோவி கண்ணன், நீங்க எதை கேவலம்னு சொல்றீங்க? நான் அருணுடன் பேசியது ஒரு மணி நேரம், அருண் பதிவிட்டது அதன் Gist மட்டுமே, நான் சாதியை துறந்தவனா இல்லயான்னு
எனக்குத் தெரியாது, ஆனால் ஜாதியைத் தூக்கிப் பிடிப்பதில்லை.
//


இது தான் படுகேவலம், வால்பையன் எழுதிய இந்த இடுகையிலும் உங்கள் பெயரைக் குறிப்பிட்டு இருப்பதாக நான் படிக்கவில்லை.

நீங்களாக வந்து உங்களைத்தான் நான் சொல்கிறேன் என்று வெளிப்படுத்திக் கொள்வதற்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@smart said...

//அவரவர் பதிவில் கமெண்ட் மாடுரேஷன் வைத்து கொள்வது அவரவர் விருப்பம், நேரம் இருக்கும் போது வெளியிடுவார், என்னிடம் கேட்டால் எனக்கு என்ன தெரியும்//

அப்படிஎன்றால் அவர் இடுகையை இங்கு சுட்டிக்காட்டி பதிலில்லை என கூறியது உங்கள் பார்ப்பனீய நாத்திகத்தைக் காட்டுகிறது ???????????
//



அடேங்கப்பா..Smartக்கு என்னா கோபம்?..

ஏன் வால்.. அவரு மாடுரேஷன் வைத்து கொள்வதற்க்கு காரணம் நீங்கதான் போலிருக்கு..

என்ன சார் நீங்க?

வால்பையன் said...

//இது இதுதான் உங்கள் உயர்சாதி திமிர். கேள்வி கேட்டால் பதில் சொல்லவேண்டும்//


நாங்க படுத்துகிட்டும் போர்த்திகுவோம், போர்த்திகிட்டும் படுத்துகுவோம்!

இது தான் எனது பதில், எனக்கு வால்பையன் இல்லாமல் தனியாக நான்கு ப்ளாக் இருக்கு, எனது புரோபைலில் பார்க்கவும், நான் எங்கு வேண்டுமாலும் எழுதுவேன்! இங்கு தான் எழுதனும்னு எந்த சட்டமும் எனக்கு இல்லை!

வால்பையன் said...

//அவரு மாடுரேஷன் வைத்து கொள்வதற்க்கு காரணம் நீங்கதான் போலிருக்கு..//


ரொம்ப நாளாவே இவரு இப்படி தான் சார் பேசிகிட்டு திரியுறாரு! இது என்ன பதிவு, என்ன பேசிகிட்டு இருக்கோம்னு கொஞ்சம் யாராவது இவருக்கு எடுத்து சொல்லுங்களேன்!

smart said...

/// மேலும் சரியான வாதத்திற்கு வராமல் தாடிகாரன், குண்டம்மா என அனானியாக வந்து தாக்குபவர்கள் எச்சக்கலையாக அல்லாமல் என்னவாக இருப்பார்கள் என்கிறார்,///
சரியான வாதமிட்டால் மறுமொழியை தூக்கிவிடுவார்கள்.

வால்பையன் said...

//சரியான வாதமிட்டால் மறுமொழியை தூக்கிவிடுவார்கள். //


எது, ங்கோத்தா, ங்கொம்மான்னு திட்டுறதா!?, அது தான் உங்கள் ஊரில் சரியான வாதமா!?
உங்கள் ப்ளாக்கில் மதுரைகாரன் என்ற பெயரில் பின்னூட்டம் போட்டாரே ஞாபகமிருக்கா!?

Ashok D said...

சென்ஷேனல், வெட்டிபந்தா, எங்க ஆத்துல வேலைக்காரி வர லேட்டாயிடுச்சு, இதெல்லாம் யாரு சொல்லுவாங்க செய்வாங்க.

சென்ஷேனலா எழுதனும்ன்னா டெய்லி ஒன்னு என்னால எழுத முடியும்... ஏன்னா கணிப்பொறியும் நெட் கணக்‌ஷனும் + உள்ளே பெரும்பொறியும்(பொரி அல்ல) எப்பொழுதும் சாத்தியமெனக்கு... ஆனால் நான் படிப்பதிலையே நேரம் செலவழித்துதான் நிறைய.. சரி இனி இந்த ‘மாயக்கவிஞன்’ முயற்சி செய்கிறேன் ;)

”ஒரு சமுதாயம் மட்டுமே கால காலமாக உழைப்பே இல்லாமல் தொடர்ந்து மற்றவரை ஆண்டுக்கொண்டு அறிவுரை வழங்கிகொண்டு சௌகரியமாக வாழ்ந்துக்கொண்டிருக்கிறதே...” என்று ’பல மணிநேரம் நாயாய் உழைக்கும் மக்களின் ஒருவனிலிருந்து வந்த சின்ன சாடல்தான் அந்த சிறிய பதிவு’ :)

sriram said...

//இது தான் படுகேவலம், வால்பையன் எழுதிய இந்த இடுகையிலும் உங்கள் பெயரைக் குறிப்பிட்டு இருப்பதாக நான் படிக்கவில்லை.

நீங்களாக வந்து உங்களைத்தான் நான் சொல்கிறேன் என்று வெளிப்படுத்திக் கொள்வதற்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும்.//

கோவி கண்ணன் , நான் உங்களை எதுக்கும் பொருப்பாக்க வில்லை, நான் கேட்டது விளக்கம்.

நான் ஜாதியை தூக்கிப் பிடிப்பதில்லை என்பது உங்களுக்கு கேவலமாகத் தெரிந்தால், I care a Damn...

இப்பவும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

smart said...

//ம்ம்ம் ம்யூசிகல் சேர் போட்டி வச்சாங்க, பார்ப்பனர்கள் ஜெயித்தார்கள். அதுக்கென்ன இப்போ?
அன்புடன்,டோண்டு ராகவையங்கார்//

vs

//நாங்க படுத்துகிட்டும் போர்த்திகுவோம், போர்த்திகிட்டும் படுத்துகுவோம்! எங்க எழுதுனா என்ன, உங்கள் திருப்பணியை தொடர்க!//

என்னங்க நீங்க ரெண்டு பேரும் ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள் போல

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@smart
உங்கள் ப்ளாக்கில் மதுரைகாரன் என்ற பெயரில் பின்னூட்டம் போட்டாரே ஞாபகமிருக்கா!?
//


அது அன்னைக்கு.. இது இன்னைக்கு..

( எப்படியும் இதைத்தான் சொல்லப்போறாங்க ஸ்மார்ட்)

கோவி.கண்ணன் said...

//உயர் சாதீயம் என்கிற வார்த்தையை உபயோகிப்பதில் உங்களுக்கு என்ன தடை? //

ஒருத்தன் தன்னை மகராஜா என்று அழைத்துக் கொண்டு மற்றவனை தொழிலாள நாய் என்பான், நாமும் மகராஜா என்று அழைத்துக் கொள்பவனையும் அவனைப் போன்ற மற்றவனை மகராஜாக்கள் செய்வது அடவடி என்று சொல்லனுமா ?

முதலில் மகராஜான்னு பெயரை சூட்டிக் கொண்டவனிடம் நீ மகராஜன் இல்லை அவனைப் போல் நீயும் ஒரு மனுசன் தான், நீயாக வைத்துக் கொண்ட பெயரை நான் எப்படி அழைப்பது என்று தான் சொல்ல முடியும்,
மகராஜாவையும் அவனை பின்பற்றும் மற்றவர்களையும், உயர்சாதி என்று (பார்பனர்களையும் பார்பனரைப் போன்ற சாதி அபிமானிகள் ஏனையோர்களையும்) எதற்கு உயர்வு படுத்தச் சொல்றிங்க ?

வள்ளல் என்று நடிக்கிறவனையெல்லாம் வள்ளல்கள் என்றே அழைக்க வேண்டும் என்று சொல்வது முரணானது, நீங்கள் குறிப்பிடும் 'உயர்சாதி' அதே போன்றவை தான்

sriram said...

//அவரை சீண்டாதவரை தான் யாரையும் சீண்டுவதில்லை என உறுதியளித்திருக்கிறார்!

அதற்காக தனி பதிவும் எழுத உள்ளார்!
தனிமனித நாகரிகம் கடைபிடிக்க அவர் தயார், அவர்களது மூடநம்பிக்கைகெல்லாம் ஏன் மரியாதை தரனும்னு கேட்கிறார்!//

ரொம்ப நல்லது ராஜன், இனி உங்க எழுத்துக்களை இந்த மாதிரி எதிர் பார்க்கிறேன்.

மூட நம்பிக்கைகளைச் சாடுங்கள், வேண்டாமென்று சொல்லவில்லை. பூனை / ராகு காலம் / எம கண்டம் / ஆடி மாசம் எல்லாம் ஹம்பக், கண்டியுங்கள், ஆனால் எழுத்தில் கண்ணியம் இருக்கட்டும்

என்றும் அன்புடனும் தோழமையுடனும்

பாஸ்டன் ஸ்ரீராம்

smart said...

//இதன் மூலம் அவர் அறிவித்தது என்னவென்றால், எங்களுக்கு நடந்தது தெரியாது, ஆனால் வரும் எதிர்வினைகள் நடந்திருக்கலாம் என சந்தேகிக்க வைக்கிறது என்பதே!//

உண்மையில் அந்த பதிவை நான் கவனிக்கவில்லை இந்த சுட்டிகளின் மூலம் தெரிகிறது அந்த பதிவுக்கு யார் காரணமென்று.

Ref:இங்கு மோடி படம் ஏன் என்று கண்டுபிடிபவர்களுக்கு தவக்களை சூப் இலவசம்

smart said...

//@smart
உங்கள் ப்ளாக்கில் மதுரைகாரன் என்ற பெயரில் பின்னூட்டம் போட்டாரே ஞாபகமிருக்கா!?//
நான் அது நீங்கன்னு நினைச்சேன்

sriram said...

//முதலில் மகராஜான்னு பெயரை சூட்டிக் கொண்டவனிடம் நீ மகராஜன் இல்லை அவனைப் போல் நீயும் ஒரு மனுசன் தான், //

அடங்கொன்னியால.. இதத்தானே நானும் சொல்றேன், நான் தமிழன், இந்தியன், ஐயங்கார், இது ஒரு data, அதுக்கு மேல ஒண்ணுமில்ல, யாராவது ஐயங்கார் ஜாதி ஒசந்த்து, கவுண்டர் ஜாதி ஒசந்தது, XYZ ஜாதி தாழ்ந்ததுன்னு சொன்னா அவனை இழுத்துப் போட்டு ஒதைங்க, நானும் வர்றேன் ஒங்களோட.

ஒரு ABC ஜாதியைச் சேர்ந்தவன் செய்யும் தப்புக்காக மொத்தமாக குத்தம் சாட்டுவது தவறுன்னு தானே சொல்றேன்.

அருணிடமிருந்தும் இதுக்கு இது வரை பதில் வரவில்லை

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

smart said...

//பார்பனீயம் என்றால் என்ன என்பதற்க்கு சரியான அர்த்தம் தெரியாமல் அல்லக்கைகள் நம்மிடமே சண்டைக்கு வருகின்றன!//

அதை ஒரு பார்ப்பனர் சொல்லுவதா தா தா தா தா தா தா தா தா தா தா தா தா தா தா தா தா தா தா தா தா

கோவி.கண்ணன் said...

//நான் ஜாதியை தூக்கிப் பிடிப்பதில்லை என்பது உங்களுக்கு கேவலமாகத் தெரிந்தால், I care a Damn...

இப்பவும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்//

கைசிவந்திருக்கும் என்று சொன்னவுடனே கையைப் பார்த்துட்டு என்னையும் சந்தேகப்படுகிறீர்களா ? என்று கேட்பது போல் இருக்கு. உங்களை யார் கையைப் பார்க்கச் சொன்னது ? நீங்க சாதி அபிமானி இல்லை என்றால் நீங்க ஏன் பொறுப்பேற்றுக் கொள்ள சலனப்பட வேண்டும் ? சாதியில் இருக்கும் நல்ல பிள்ளைகள் சாதி சிம்பளா ? அப்ப தேவநாதன் போன்ற மற்றவர்களும் அதே சாதியில் தானே இருக்காங்க. அவர்களுக்கும் பொறுப்பேற்றுக் கொள்வது யார் ? உங்களை அப்படி பொறுப்பேற்றுக் கொள்ளச் சொல்கிறவர்களிடம் நான் சாதி அபிமானி இல்லை என்று சொல்லும் உரிமை உங்களுக்கு உண்டு, அதுவும் நீங்களாக வெளிப்படுத்திக் கொண்டால் மட்டுமே.

பாப்பான் என்றால் இப்படி பறையன் என்றால் இப்படி நாடான் என்றால் இப்படி, செட்டி என்றால் இப்படி இருப்பானுங்க என்று காலம் காலமாக சொல்லிவருகிறார்கள், அந்த கட்டமைபின் பொது குணங்களில் யாரும் இல்லை என்னும் போது சாதி தூவேசம் என்னும் பேச்சுக்கே இடமில்லை.

பார்பனர்கள் அனைவரும் நல்லவர்கள் என்று நான் குறிப்பிட்டால், அப்படியெல்லாம் சொல்லாதீர்கள் தேவநாதன் போன்ற கழுசடைகளும் எங்கள் சாதியில் உள்ளன என்று உண்மைவிளம்பியாக நீங்கள் சொல்பவராக இருந்தால் நீங்கள் சாதி குறித்து நல்ல மதிப்பு வைத்திருக்கிறீர்கள் என்று சொல்ல முடியும்

smart said...

//எந்த கேள்விக்காகவாது அவர்கள் பதில் சொல்லியுள்ளார்களா!? //

இந்த கேள்விக்கு எனது கடந்த பதில்கள் சவுக்கடி

கோவி.கண்ணன் said...

//
அருணிடமிருந்தும் இதுக்கு இது வரை பதில் வரவில்லை

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
//

வாலும் சொல்லி இருக்கார்,

இந்திய நோயான சாதியத்தை சாடுவதற்கு அதற்கு தலைமை ஏற்பதுடன், ஞாயப்படுத்துவதற்கும் வருண அடுக்கில் மேலே உள்ளவர்களாகவும் பார்பனர்கள் தங்களை அறிவித்துக் கொண்டுள்ளதால், ஒட்டுமொத்த சாதி இழிவுகளின் அடையாளமாக 'பார்பனீயம்' என்ற சொல் எனக்கு ஞாயமாகவே படுகிறது.

வால்பையன் said...

//ஒரு ABC ஜாதியைச் சேர்ந்தவன் செய்யும் தப்புக்காக மொத்தமாக குத்தம் சாட்டுவது தவறுன்னு தானே சொல்றேன்.//

ஒரு சாதிகாரன் எதாவது குற்றம் செய்தால் அவன் என்ன சாதி என ஆராய வேண்டிய அவசியமில்லையே!, ஒரு சாதிகாரன் சாதி திமிரை காட்டினால் அவனுடன் சேர்த்து அந்த சாதியையும் திட்டுவதில் தப்பில்லையே! ஏனென்றால் அந்த சாதி தானே அவனுக்கு சொல்லி கொடுத்தது நாம் உயர்சாதி என்று!

smart said...
This comment has been removed by the author.
smart said...

//பார்பனிஷ்ட் என்றால் என்ன?
ஆணாதிக்கம், வர்ணாசிர கொள்கை, குலத்தொழில் கொள்கை, சாதிபற்று, அதிமுக்கியமாக இந்துத்துவா வெறி!//

உங்கள் விளக்கம் படி
ஆணாதிக்கம், உங்கள் பிளாக்கில் பெண்கள் மறுமொழிக்கு ஒதிக்கீடு உண்டா? பெண்களை கேவலமாக எழுதி அதை பெண் விடுதலை என்கிறீர்கள்
வர்ணாசிர கொள்கை, உங்கள் வர்ணாசிரம் ஒரு வேளை நாத்திகம். மற்றவர் எதை சொன்னாலும் காத்து கொடுக்காமல் இது என் கருத்து. அது உங்கள் கருத்து என மறுக்கிறீர்கள்
குலத்தொழில் கொள்கை, அப்பா நீங்க செஞ்ச தொழில் குலத்தொழில் போல
சாதிபற்று, உங்கள் உயர் சாதி நாத்திகர்களை மட்டும் உங்கள் கூட்டாளியாக சேர்கிறீர்கள் (என்னை?)
அதிமுக்கியமாக இந்துத்துவா வெறி! இதைமட்டும் பெரிதாக காட்டி தப்பிக்க முயலுகிறேர்கள் உண்மையில் ஒரு வெறி உங்களிடமும் உள்ளது.

வால்பையன் said...

@ ஸ்மார்ட்

எனக்கு உங்க காமெடி ரொம்ப பிடிச்சிருக்கு!

ப்ளீஸ் கண்டினியூ!

Unknown said...

//“பார்ப்பனியம்” எனும் சொல்லின் கீழ் மற்ற சாதியினர் மறைந்து கொள்கின்றனர் என்பது தான் என்னுடைய ஐயம்//

இதில் ஐயம் என்ன வேண்டியிருக்கிறது?யாரை சொல்கிறீர்கள்?ருத்ரன்,ராஜன்,வால்,கோவி.கண்ணன் போன்ற உயர் சாதி வெறியர்களைத்தானே?இந்த மூஞ்சிகளுக்கு ஜாதி வெறி மட்டுமல்ல,இன வெறியும் சேர்ந்தே இருக்கிறது.

Sabarinathan Arthanari said...

@வால்பையன்

பார்ப்பான் என்ற சொல் வழக்கில் சாதி வெறி பிடித்த எல்லோரையும் குறிக்கிறது என சொல்கிறீர்கள். அப்படி இருக்கின் ஒரு பிரச்சிணையும் இல்லை.

பார்ப்பான் எனும் சொல்லை கூகிள் தட்டி பார்த்து விட்டு நிலைமை அது தானா என நீங்களே சொல்லவும்

http://www.google.co.in/search?hl=en&client=firefox-a&hs=XlE&rls=org.mozilla%3Aen-US%3Aofficial&q=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D&meta=&aq=f&aqi=&aql=&oq=&gs_rfai=

நான் கூற வருவது தவறு செய்யும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை திட்டுவதை நிறுத்த அல்ல.

ஆனால் அவர்கள் பெயரை பழித்து கொண்டு மற்றவர்கள் தங்களின் குற்றங்களை மறைக்கிறார்கள் என.

புரியுமென நினைக்கிறேன்.

கோவி.கண்ணன் said...

//annadurai said...
//“பார்ப்பனியம்” எனும் சொல்லின் கீழ் மற்ற சாதியினர் மறைந்து கொள்கின்றனர் என்பது தான் என்னுடைய ஐயம்//

இதில் ஐயம் என்ன வேண்டியிருக்கிறது?யாரை சொல்கிறீர்கள்?ருத்ரன்,ராஜன்,வால்,கோவி.கண்ணன் போன்ற உயர் சாதி வெறியர்களைத்தானே?இந்த மூஞ்சிகளுக்கு ஜாதி வெறி மட்டுமல்ல,இன வெறியும் சேர்ந்தே இருக்கிறது.
/

பாலா என்கிற சல்மா என்கிற ஜெராமன் வந்துட்டான்.

Sabarinathan Arthanari said...

இன்றும் கூட மக்கள் பேச்சு வழக்கில் சாதி பெயர் சொல்லி குறிப்பிட்ட மக்களை திட்ட “பார்ப்பான்” என்ற சொல்லை தான் பயன்படுத்துகிறார்கள்.


நீங்கள் “பார்ப்பனீயம்” எனும் சொல்லை பயன்படுத்தினால் அதன் வீரியம் தவறு செய்யும் மற்ற மக்களை சென்று சேர்வதில்லை.

smart said...

அண்ணே அவசரமில்லை, நின்னு நிதானமா யோசிச்சு சொல்லுங்க நான் அப்புறமா வரேன் .
சும்மா காமெடி காமெடின்னு சொல்லி பல்லிளிக்க வேண்டாம்

sriram said...

//ஒரு சாதிகாரன் எதாவது குற்றம் செய்தால் அவன் என்ன சாதி என ஆராய வேண்டிய அவசியமில்லையே!, ஒரு சாதிகாரன் சாதி திமிரை காட்டினால் அவனுடன் சேர்த்து அந்த சாதியையும் திட்டுவதில் தப்பில்லையே! ஏனென்றால் அந்த சாதி தானே அவனுக்கு சொல்லி கொடுத்தது நாம் உயர்சாதி என்று!//

அருண், உங்க Comedy Sense க்கு ஒரு அளவே இல்லயா?? எந்த சாதியும் யாருக்கும் தவறான கருத்தை போதிப்பதில்லை. ஒருவன் அவ்வாறு நினைத்தால் அது அவனுடைய தவறு, அதுக்காக சமூகத்தையே சாடுவது தவறு.
இது உங்களுக்கு புரியலயா? இல்ல புரியாத மாதிரி நடிக்கிறீங்களா??

வால்பையன் said...

@ சபரிநாத்

நான் பார்பனீயத்தை பற்றி தான் பேசி கொண்டு இருக்கிறேன்! அதை கடைபிடிப்பவர்கள் மற்றும் உருவாக்கியவர்கள் தங்களுக்கே வைத்து கொண்ட பெயர் தான் பார்பனர்கள், அதனால் தான் பார்பான் என்றால் எங்களை தான் குறிக்கிது என்கிறீர்கள்!

பார்பான் என்பது சாதி என்றால், அய்யர், அய்யங்கார் என்பது என்ன?

இணையத்தில் இருப்பவை எல்லாம் உதாரணத்திற்கு சரிபட்டு வருமா தோழரே!

sriram said...

//ஒட்டுமொத்த சாதி இழிவுகளின் அடையாளமாக 'பார்பனீயம்' என்ற சொல் எனக்கு ஞாயமாகவே படுகிறது//

உங்களுக்கு நியாயமாகத் தெரிவது எனக்கு நியாயமாகத் தெரியவில்லை கோவி கண்ணன்.

நான் என் நிலைப்பாட்டைத் தெரிவித்து விட்டேன், உங்களுக்கு அது பற்றி ஒரு கருத்து இருப்பது உங்கள் உரிமை.

smart said...

//எது, ங்கோத்தா, ங்கொம்மான்னு திட்டுறதா!?, அது தான் உங்கள் ஊரில் சரியான வாதமா!?
உங்கள் ப்ளாக்கில் மதுரைகாரன் என்ற பெயரில் பின்னூட்டம் போட்டாரே ஞாபகமிருக்கா!?//

உங்களை பற்றி பேசையில் உங்கள் மொழியில் பேசியிருப்பார். அது உங்களை மனதார பாதித்தால் நான் மனதார மன்னிப்பு கேட்கிறேன்

sriram said...

//இணையத்தில் இருப்பவை எல்லாம் உதாரணத்திற்கு சரிபட்டு வருமா தோழரே!//

தோஸ்த், நிமிஷத்துக்கு நிமிஷம் உங்க காமடி சென்ஸ் அதிமாகிக் கொண்டு போவதின் மர்மம் என்ன?
உங்களுக்கு சாதகமா இருக்குற வரையில் இணையத்தை நம்புவீங்க, இல்லன்னா சரிப் படாதுன்னு ஒதுக்குவீங்க இல்ல??

Sabarinathan Arthanari said...

@வால்பையன்
//பார்பான் என்றால் எங்களை தான் குறிக்கிது என்கிறீர்கள்!//

திரும்ப திரும்ப என் சாதி பெயரை தெரிந்து கொள்ளவே முயற்சிக்கிறீர்கள் போலும்.

நான் என்ன சொல்ல வேண்டும் என எதிர் பார்க்கிறீர்கள் ?

பார்ப்பானா இல்லையா என்றா ?
[அதாவது நான் என் சாதிக்கு பரிந்து பேசுகிறேன் என்றா ?]

sriram said...

ஒரு விஷயம்,
எனக்கும் நண்பர் சபரிக்கும் பதில் அளிக்கையில் மட்டுமாவது நாகரிகத்தை கடைபிடிக்க்கும் அருணுக்கும், கோவி கண்ணனுக்கும், ராஜனுக்கும் (அருண் மூலம் பதில் சொன்னாலும்) மிக்க நன்றி.
இதை எல்லாரும் எல்லா நேரத்திலும் கடை பிடித்தால் நல்லா இருக்கும்

வால்பையன் said...

//இணையத்தில் இருப்பவை எல்லாம் உதாரணத்திற்கு சரிபட்டு வருமா தோழரே!//

தோஸ்த், நிமிஷத்துக்கு நிமிஷம் உங்க காமடி சென்ஸ் அதிமாகிக் கொண்டு போவதின் மர்மம் என்ன?
உங்களுக்கு சாதகமா இருக்குற வரையில் இணையத்தை நம்புவீங்க, இல்லன்னா சரிப் படாதுன்னு ஒதுக்குவீங்க இல்ல?? //


சரி நீங்க தான் சொல்லுங்களேன்!
அய்யர், அய்யாங்கார் என்று இருக்க, பார்பான் என்ற பொது பெயர் ஏன்!?
பார்பனீயம் என்பதும் என் புரிதல் விளக்கமாக சொல்லியாயிற்று, உங்கள் புரிதல் என்ன? பார்பனீயத்திற்கும், உங்களுக்கும் எந்த அடிப்படையில் முடிச்சி போட்டு கொள்கிறீர்கள்!


நண்பர் சபரிநாத் கொடுத்த சுட்டியில் பெரியாரிஷ்ட் பதிவுகள் தான் தென்பட்டது! அவர்களுக்கு பார்பனிய எதிர்ப்பு என்றால் என்னவென்றே தெரியாது, அவர்களிடம் உதாரணம் எடுத்தால் என்னை நானே ஏமாற்றி கொள்வது மாதிரி!

smart said...

//உங்களுக்கு சாதகமா இருக்குற வரையில் இணையத்தை நம்புவீங்க, இல்லன்னா சரிப் படாதுன்னு ஒதுக்குவீங்க இல்ல?//

You are Right sir.

கோவி.கண்ணன் said...

// Sabarinathan Arthanari said...
இன்றும் கூட மக்கள் பேச்சு வழக்கில் சாதி பெயர் சொல்லி குறிப்பிட்ட மக்களை திட்ட “பார்ப்பான்” என்ற சொல்லை தான் பயன்படுத்துகிறார்கள்.
//

சபரி, அப்ப சாதிவெறியர்கள் அனைவரையுமே பார்பனர்கள் என்று திட்டுவோம், அழைப்போம், சாதிகள் காணாமல் போய்விடும் எல்லோரும் பார்பனர்கள் ஆகிவிடுவார்கள் :)

நான் சீரியசாக சொல்கிறேன் !

வால்பையன் said...

//நீங்கள் “பார்ப்பனீயம்” எனும் சொல்லை பயன்படுத்தினால் அதன் வீரியம் தவறு செய்யும் மற்ற மக்களை சென்று சேர்வதில்லை. //


கொண்டு சேர்ப்போம்!

தலித் என்பது பொது பெயர் என்று வைத்து கொள்வோம், அந்த குறிப்பிட்ட குழுவிவினரை திட்ட தலித்தான் என்றா சொல்கீறார்கள்!, உங்கள் புரிதலில் பார்பான் என்றால் கெட்ட வார்த்தை என்றால் அதை ஏன் கட்டி அழ வேண்டும்!

smart said...

//வெறியுடன், திமிருடன், திருட்டுத்தனத்துடன், தன்மானமற்ற தன்னலம் பேணும் குயுக்தியுடன் எவன் செயல்பட்டாலும் அவன் பார்ப்பனீயக் கீழ்மையுடையவன். அவன் எந்தக் குடும்பத்திலும் பிறக்கலாம், எந்த மதத்திலும் இருக்கலாம், ஆனால் இப்படிப்பட்டவர்களைச் சுட்டிக்காட்டும்போது, அரிப்பு மிகுந்து, ஆத்திரம் மிகுந்து துள்ளி வெளிவருவான்- நாம் அடையாளம் கண்டுகொள்ள//


Thanks dear Rudhran, This explanation is more than enough to find the real பார்ப்பனீயர் வால்பையன்

வால்பையன் said...

//எந்த சாதியும் யாருக்கும் தவறான கருத்தை போதிப்பதில்லை. ஒருவன் அவ்வாறு நினைத்தால் அது அவனுடைய தவறு, அதுக்காக சமூகத்தையே சாடுவது தவறு.
இது உங்களுக்கு புரியலயா? இல்ல புரியாத மாதிரி நடிக்கிறீங்களா??//


சக்கிளிநாயே என்று ஒருவன் திட்டப்படுகிறான் என்றால் அதுக்கு காரணம் அவனது சாதி வெறி தானே!, அவனுக்கு சொல்லி கொடுத்தது தானே!

Ashok D said...

பாஸ்டன் ஸ்ரீராம், மற்றும் அய்யங்கார் அய்யர்களை முன்வைத்து

பிராமணர்கள் மென்மையானவர்கள் மேண்மையானவர்கள் என்பது எனக்கு தெரியும். என் எதிரி கேபிள் அங்கிளோ, தண்டோரா அங்கிளோ அல்ல. உண்மையில் அவர்கள் நண்பர்கள்தான். டோண்டு அவர்கள்கூட என் தகப்பன் வயதுதான். ஒரு போட்டாவில் குழந்தைதனமாக அழகாக கூட இருந்தார். நான் புதிதாக வேலை சேர்ந்த இட்த்தில் என் நண்பன் தான் பாஸ் அவன் அய்யங்கார் இன்று தான் தெரிந்துக்கொண்டேன். இதுவரைக்கும் அய்யர்ன்னு நெனச்சிட்டுயிருந்தேன் 
நண்பனிடம் ஏற்ற தாழ்வு இருந்த்தில்லை. இதுமாதிரி சமனாமாக பார்க்கும் பார்வைகொண்டவனே நானும். ஆனால் இந்த பார்பனீய அலப்பறை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியவேண்டும் என்று இல்லை.

அன்புடன்
அஷோக் சிங்(கால் இல்லை)கம்
என்ன பில்டப்பு.. பெயர்ல தான்ப்பா 

Sabarinathan Arthanari said...

@வால்பையன்

நண்பா,

“பார்பணீயம்” என்ற சொல் 19/20ம் நூற்றாண்டில் ஈ வெ ரா/ திராவிடர் கழகத்தால் உருவாக்க பட்டது. அது ”பார்ப்பான்” என்ற சொல்லில் இருந்து தான் உருவானது.

ஏனெனில் அப்போது சில சமூகத்தினர் தான் சாதி வெறியை கொண்டிருந்தனர்.

அந்த வகையில் அக்கால கட்டத்தில் அது சரியானது தான்.

இப்போதைய நிலையில் எல்லா சாதி வெறியர்களையும் குறிப்பிட ஒரு பொது வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என சொல்கிறேன்.

இது எல்லா சாதியையும் குறிக்க வேண்டும். ஏன் மத / இன ரீதியாக தன்னை உயர்த்தி கொள்பவர்களையும் குறிக்க வேண்டும் என்கிறேன்.

[இதை தான் நீங்களும் பதிவில் எழுதி இருப்பதாக கருதுகிறேன்]

smart said...

//பெரியாரிஷ்டுகள் டவுசர் ஒருநாள் பெரிதாக கிழிபடபோவதும் உறுதி!//

டவுசர் கிழிப்பதே ஒரு தொழிலாய் செய்கிறீகளோ
உங்களைப் போன்றவர்கள் பேசுவதற்கு சுதந்திரம் வாங்கியவரையே கிழிக்க நினைப்பது நல்ல பற்று தொடர்க உம்பணி

Ashok D said...

//தலித் என்பது பொது பெயர் என்று வைத்து கொள்வோம், அந்த குறிப்பிட்ட குழுவிவினரை திட்ட தலித்தான் என்றா சொல்கீறார்கள்!, உங்கள் புரிதலில் பார்பான் என்றால் கெட்ட வார்த்தை என்றால் அதை ஏன் கட்டி அழ வேண்டும்!//

யப்பா வால்.. நீ நெசமாலுமே பெரிய ஆளுபா...

வால் comment moderation போடவும்... இல்லனா filthy minds will come inside and destroy the flow of existing :)

sriram said...

//பிராமணர்கள் மென்மையானவர்கள் மேண்மையானவர்கள் என்பது எனக்கு தெரியும். //

நீங்க ஏன் இன்னொரு பிரச்சனையை கெளப்புறீங்க?? பிராமணர்கள் மேன்மையானவர்கள்னு யாருங்க சொன்னது

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

smart said...

///வால் comment moderation போடவும்... இல்லனா filthy minds will come inside and destroy the flow of existing :)///
ஆமா ஆமா அப்பத்தான் எனபதிவுக்கு பதிலே வரவில்லைன்னு கூப்பாடு போடமுடியுமா? M.r. D.R.Ashok

smart said...

ஏன்பா பகுத்தறிவாளிகளே கொஞ்சமாவது பகுத்தறிவா இந்த D.R.ashokக்கு சொல்லிகொடுக்க கூடாத

Ashok D said...

//M.r. D.R.Ashok//

smartu.. M r க்கு நடுவுல புள்ளி வரகூடாது... (உங்க styலயே பதில்)

இப்ப புரியுதா smarta இருக்கறது அடுத்தவங்களுக்கு எவ்வளவு கஷ்டத்த கொடுக்கனும்ன்னு ;)

Sabarinathan Arthanari said...

@வால்பையன்

நீங்கள் நான் ஒரு குறிப்பிட்ட சாதியை சார்ந்தவன் என்று guess செய்து பின்னூட்டம் போட்டீர்கள் போல.

//[அதாவது நான் என் சாதிக்கு பரிந்து பேசுகிறேன் என்றா ?] //
என்ற கேள்விக்கும் பதிலில்லை.

நான் பொது தளத்தில் தன் சாதியை வெளிப்படுத்துபவர்களை புழுவினும் கேவலமாக தான் கருதுகிறேன்.

ஆனால் நான் எழுதும் கருத்துக்கள் சிலரை சந்தேக பட வைப்பதும் சரியானது தான்.

உங்களுக்கு ஒரு மறைமுகமான பதில் ”நான் பழகும் சமூகத்தின் சுயவஞ்சகத்தை எதிர்த்தே இக்கருத்துக்களை வெளியிடுகிறேன்” என்பதே.

Ashok D said...

//நீங்க ஏன் இன்னொரு பிரச்சனையை கெளப்புறீங்க?? பிராமணர்கள் மேன்மையானவர்கள்னு யாருங்க சொன்னது//

அது ஒரு 5-6 months க்கு முன்னால R.p.ராஜநாயஹம் அவர்களின் ப்ளாக்ல போட்ட commenttu பா.. இங்க ரிப்பிட்டு உட்டுக்கனன் :)

Ashok D said...

இது follow-up kku

smart said...

//smartu.. M r க்கு நடுவுல புள்ளி வரகூடாது... (உங்க styலயே பதில்)//

நான் அந்த மரியாதைய கொடுத்து எழுதலை. அது வேற அர்த்தம். ஏன் நீங்களா வந்து மரியாதை கேட்குறீர்கள்.
M.R.D.R.Ashok

Ashok D said...

smartu...
நல்லா சமாளிக்கற...

அதுக்குள்ள என்ன அனானியா வந்து என் ப்ளாக்ல பின்னூட்டம்... போடற .

Ashok D said...

உன் ip அட்ரஸ் தெரிஞ்சு உன்னை உதைக்கனம்னா.. itz easy to me.. but..

உன்னை மாதிரி மெண்டல் பசங்களுக்கு நாங்க டைம் வேஸ்ட் பண்றதில்ல

உன் commenta என் ப்ளாக்கல் பப்ளிஷ் பண்ணிட்டேன்..

நீ என்னதான் Smarta இருந்தாலும் என்கிட்ட உன் பப்பு வேகாது

Ashok D said...

Gudnite vaal... நாளைக்கு பார்க்கலாம்

smart said...

நீங்க இவ்வளவு பெரிய அறிவாளியா இருப்பேங்கனு தெரியாது அசோக் தெரிஞ்சிருந்தா உண்மையிலே ஏதாவது கமென்ட் போட்டுரிப்பேன்.

IPயை கண்டுபிடிக்க முடியாது. அதுக்கும் மேல கண்டுபிடிச்சாலும் என்னை கண்டுபிடிக்கமுடியாது. அப்படியே கண்டுபிடிச்சாலும் உதைக்க நீங்க இந்தியாவைவிட்டு வெளிய வரணும். In fact athu naanillai.

எல்லாத்துக்கும் மேல நான் நாகரீகமாகதான் எழுதுகிறேன் அதானால் கருத்துச் சுதந்திரமுள்ளது.

anyway someone is thinking like me a smart

smart said...

//Gudnite vaal... நாளைக்கு பார்க்கலாம்//

வால் சார் நல்லா யோசிச்சிட்டு நாளைக்கு வாங்க இந்த பதிவைப்பற்றி விவாதிக்க இன்னும் நிறைய இருக்கு

கல்வெட்டு said...

//
sriram said...தமிழன், இந்தியன், ஐயங்கார், இது ஒரு data,//

தமிழன் ‍- தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவன்.

இந்தியன் - இந்தியாவை பிறப்பு நாடாகக் கொண்டவன் சிட்டிசன்ஷிப்

இந்த டேட்டாக்கள் எப்படி வந்தது என்று எனக்குத் தெரியும்.

என்னால் அமெரிக்க குடியுரிமை வாங்கி எனது இந்திய சிட்டிசன்ஷிப்பை மாற்றமுடியும். நான் மட்டும் அல்ல யாரும் இந்திய அமெரிக்க குடியிரிமைச் சட்டங்களுக்கு உட்பட்டு. ----சோ இந்த டேட்டா நான் விரும்பினால் மாற்ற முடியும்.

தாய் மொழி: தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவன் ஒரு ஸ்பானிஸ் மங்கையை மணக்கும் பட்சத்தில் பிறக்கும் குழந்தையின் தய்மொழி மாறிவிடும் ......சோ தமிழன் என்பது பரம்பரையாய வந்த டேட்டா என்றாலும்... வேண்டாம் என்றால் அடுத்த தலிமுறைக்கு செல்வதை தடுக்கலாம்.

1. அய்யங்கார்??? என்ற டேட்டா (ஜஸ்ட் டேட்டாதானே) இது எப்படி உங்களுக்கு வந்தது?

2. நீங்கள் நினைத்தால் மாற்ற முடியுமா?

3. அப்படி முடியாது என்றால் ஏன் மாற்றக்கூடிய டேட்டாக்களுடன் கம்பேர் செய்கிறீர்கள்?

4.உங்களின் குழந்தைகளை இந்த டேட்டா இணைப்பு இல்லாமல் வளர்ப்பீர்களா? (ஜஸ்ட் டேட்டாதானே)

***

கல்வெட்டு said...

.


யார் வேண்டுமானாலும் பதில் சொல்லலாம்

1. பார்ப்பனர் என்பது சாதியா ?

2. பார்ப்பனர் என்பது என்ன ?

3. யார் யார் பார்ப்பனர்கள்?

4. எப்படி அவர்கள் பார்ப்பனர் ஆனார்கள்?(சட்ட வரைவு?)

5. தமிழக அல்லது இந்திய சட்டங்களில் எந்த அட்டவணையில் பார்ப்பனர் என்ற சாதி சொல்லப்பட்டுள்ளது?

6. "ரேசிஸ்ட்" என்று சொன்னால் அது எந்த ஒரு குறிப்பிட்ட இனத்தைக் குறிக்குமா? அல்லது நிற வேறுபாடு பாட்டும் அனைவரையும் சுட்டுமா?

7.பாஸிஸ்ட் என்று சொன்னால் ஒரு கட்சியைக் குறிக்குமா அல்லது பாஸிசம் காட்டும் எல்லாக் குழுக்களையும் சுட்டுமா?

8.ஏன் பார்ப்பணிசம் என்றால் "அய்யர்" மற்றும் "அய்யங்கார்" என்ற சாதியினர் மட்டும் அது அவர்களைச் சுட்டுவதாகவே எடுத்துக்கொள்கிறார்கள்?

9.பார்ப்பனீயத்தை எதிர்க்கும் ( அய்யர் அய்யங்கார் உட்பட அனைத்து இந்துக்களும்) அதற்கு ஆதாரமான வர்ணாசிரமக் கொள்கையையும்(வேதம்) வருணம் போதிக்கும் கடவுள்களையும் தீயில் போட்டுக் கொழுத்தத் தயாரா?

என்ற கேள்விகளுக்கான உங்களின் பதிலை நேரடியாக எந்த தொடுப்பும் இல்லாமல் உங்கள் புரிதலாகச் சொல்லுங்கள்.

.

Selvakumar said...

அன்பு வால், ராஜன், தோழர்கள்,
பார்ப்பனியம் என்று சொல்லும் போது, அதற்கு பரிந்து பேசும் நபர்களை குறிக்கும் போது உங்களுக்கு ஏன் “குடுமி” மட்டுமே ஞாபகம் வருகிறது. சாதீய அடக்குமுறை அட்டூழியம் செய்யும் பிராமணரல்லாத பிற சாதியினர் குடுமி வைப்பதில்லையே. உங்கள் மனதிலேயே பதிந்த விஷயம் பார்ப்பான் என்ற சொல்லில் அய்யர் சாதியினரை மட்டுமே குறிப்பதையே. “உயர் சாதீயம்” என்ற சொல்லில் “உயர்” என்பது பிரச்சினையானால் “சாதி மடமை” அல்லது வெறும் “சாதீயம்” அல்லது வேறு ஏதாவது பொதுவான பெயர் வைத்துக் கொள்ளலாமே.

காரணம் இரண்டு. 1.. பொதுத்தளத்தில் பார்ப்பானியம் என்பது ஒரு குறிப்பிட்ட சாதியினை மட்டுமே குறிக்கிறது.2. . நண்பர் சபரி சொல்வது போல் அடக்குமுறை அநியாயங்கள் செய்யும் பல சாதியினர் அந்த சொல்லில் குறிப்பிடப்படாமல் தப்பப்பிப்பதை என்ன சொல்லியும் நியாயப்படுத்த முடியாது. அகராதி விளக்கங்கள் எப்படியோ இருக்கட்டும். மனதைத் தொட்டு சொல்லுங்கள் “பார்ப்பான் ஒழிய வேண்டும்” என்று நீங்கள் ஈரோடு பஸ் நிலையத்தில் உரக்க கத்தினால் தனது தலித் கூலித் தொழிலாளியை மாடு போல நடத்தும் ஒரு கவுண்டர் சாதி மனிதருக்கு அது ஒரு இம்மியளவேனும் உரைக்குமா? இந்த சமுதாயத்தின் பொது புரிந்து கொள்ளல் எப்படியோ அதற்கேற்றவாறு போராடுதலே பயனுள்ள செய்கை. தீண்டாமையும் சாதி வெறியும் தலை விரித்து ஆடும் கிராமங்களில் எத்தனை பிராமணர்கள் அதற்கு காரணமாக உள்ளனர்? அப்படிப்பட்ட கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் ஒவ்வொரு நாளும் ஆதிக்க சாதியனருக்கு அடிபணிந்து வாழும் பரிதாப மக்களுக்கு பயன் தரக்கூடிய, நம்பிக்கை தரக்கூடிய, ஆதிக்கம் செய்பவரை நேரடியாகத் தாக்கும் வகையில் ஏதும் வினை புரிந்திருகிறீர்களா? அல்லது பொருளாதார நலன்கள் தவிர்த்து பிற ஆதிக்க மனப்பான்மை அதிகமின்றி நகரங்களிலும் பிற நாடுகளிலும் இருக்கும் பிராமணரை மட்டுமே வம்புக்கிழுத்து முழு சக்தியையும் செலவு செய்ய போகிறீர்களா?

நட்புடன், செல்வா.

smart said...

//அய்யங்கார்??? என்ற டேட்டா (ஜஸ்ட் டேட்டாதானே) இது எப்படி உங்களுக்கு வந்தது?//

சார் கல்வெட்டு,
ஜாதி மாறி கல்யாணம் பண்ணாகூட ஜாதி மாறும்

// அப்படி முடியாது என்றால் ஏன் மாற்றக்கூடிய டேட்டாக்களுடன் கம்பேர் செய்கிறீர்கள்?//
இப்ப மாற்ற முடியும் என்கிறப்பட்சத்தில் கம்பேர் செய்யலாமா?

smart said...

//1.. பொதுத்தளத்தில் பார்ப்பானியம் என்பது ஒரு குறிப்பிட்ட சாதியினை மட்டுமே குறிக்கிறது.2. . நண்பர் சபரி சொல்வது போல் அடக்குமுறை அநியாயங்கள் செய்யும் பல சாதியினர் அந்த சொல்லில் குறிப்பிடப்படாமல் தப்பப்பிப்பதை என்ன சொல்லியும் நியாயப்படுத்த முடியாது. அகராதி விளக்கங்கள் எப்படியோ இருக்கட்டும். மனதைத் தொட்டு சொல்லுங்கள் “பார்ப்பான் ஒழிய வேண்டும்” என்று நீங்கள் ஈரோடு பஸ் நிலையத்தில் உரக்க கத்தினால் தனது தலித் கூலித் தொழிலாளியை மாடு போல நடத்தும் ஒரு கவுண்டர் சாதி மனிதருக்கு அது ஒரு இம்மியளவேனும் உரைக்குமா? இந்த சமுதாயத்தின் பொது புரிந்து கொள்ளல் எப்படியோ அதற்கேற்றவாறு போராடுதலே பயனுள்ள செய்கை. தீண்டாமையும் சாதி வெறியும் தலை விரித்து ஆடும் கிராமங்களில் எத்தனை பிராமணர்கள் அதற்கு காரணமாக உள்ளனர்? அப்படிப்பட்ட கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் ஒவ்வொரு நாளும் ஆதிக்க சாதியனருக்கு அடிபணிந்து வாழும் பரிதாப மக்களுக்கு பயன் தரக்கூடிய, நம்பிக்கை தரக்கூடிய, ஆதிக்கம் செய்பவரை நேரடியாகத் தாக்கும் வகையில் ஏதும் வினை புரிந்திருகிறீர்களா? அல்லது பொருளாதார நலன்கள் தவிர்த்து பிற ஆதிக்க மனப்பான்மை அதிகமின்றி நகரங்களிலும் பிற நாடுகளிலும் இருக்கும் பிராமணரை மட்டுமே வம்புக்கிழுத்து முழு சக்தியையும் செலவு செய்ய போகிறீர்களா? //

போட்டு தாக்கே

Selvakumar said...

“பார்ப்பனியத்தை ஒழிப்போம்” என்ற கோஷம் வேலை வெட்டியில்லாத தங்களை பார்பானராக நினைத்துக் கொள்ளும் சில அய்யர் சாதி காரர்களைத் தவிர பிற யாவருக்கும் ஒரு உருத்தலையும் உருவாக்காது. பெரும்பாலான அய்யர் சாதிக்காரர்கள் பணம் சம்பாதித்தலைத் தவிர இது போன்ற சமுதாய விஷயங்களில் தலையிடாமல் ஒதுங்கி விட்டனர். வர்ணாஸ்ரம தர்மத்தை ஒழிப்போம், மனு தர்மத்தை எரிப்போம் என்ற குரல்களுக்கு அர்த்தம் கூட பலருக்கு தெரியாது. கிளிப்பிள்ளையைப் போல இதை திரும்ப திரும்ப சொல்வதில் என்ன பயன்? மைனாரிட்டிகளாகவும், பலவீனர்களாகவும் இருக்கும் அவர்களை திட்டுவதை விட்டு விட்டு சாதீய அடக்குமுறைக்கு செய்ய வேண்டியதை செய்வோம். உங்கள் ஒவ்வொரு பதிவும் தாழ்த்த்பட்டிருக்கும் சமுதாய தோழர்களை மிருகங்களைப் போல நடத்தும் பிற ஆதிக்க சாதியினரை சிந்திக்கவும், வெட்கப் படவும் வைக்க வேண்டும். இல்லையெனில் இது எந்த சமுதாய மாற்றத்தையும் உருவாக்காது.
நட்புடன், செல்வா.

Radhakrishnan said...

பல விசயங்கள் புரிந்தும் புரியாதது போலவே இருக்கிறது அருண். ஆனால் வேடிக்கை பார்ப்பதில் இருக்கும் சுவாரஸ்யமே தனிதான்.

smart said...

//உன் ip அட்ரஸ் தெரிஞ்சு உன்னை உதைக்கனம்னா.. itz easy to me..//

இப்படி சொல்லி சொல்லி மைனாரிட்டி உண்மையான நாத்திகர்களை ஒழிக்க முடிவு செய்து விட்டேர்கள.

smart said...

//பல விசயங்கள் புரிந்தும் புரியாதது போலவே இருக்கிறது அருண். ஆனால் வேடிக்கை பார்ப்பதில் இருக்கும் சுவாரஸ்யமே தனிதான்//

மதிப்புக்குரிய ராதாகிருஷ்ணன் அவர்களே,
அப்படி வேடிக்கைப் பார்ப்பதால்தான் இப்படி எதையாவது எழுதி பிழைப்பு நடத்துகிறார்

sriram said...

அன்பின் செல்வா..
நான் சொல்ல நினைத்ததை, ரொம்ப நேரமா நிலை நிறுத்த நினைக்கும் கருத்துக்களை, அருமையா 2 பின்னூட்டங்களில் சொல்லி இருக்கீங்க
Hats off to you...

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

கல்வெட்டு said...

.

//smart said...
சார் கல்வெட்டு,
ஜாதி மாறி கல்யாணம் பண்ணாகூட ஜாதி மாறும்//

ஜாதி அர்த்தமில்லா டேட்டா என்றால் இப்போதே விட்டுவிட வேண்டியதுதானே? ஏன் விட முடியாத இல்லை விருப்பம் இல்லையா?

அய்யங்கார் + எந்தசாதியில்(உதாரணம்: பறையர், பள்ளர் , சக்கிலியர் ,நரிக்குறவர்) திருமணம் நடந்தால் ....எந்த சாதி டேட்டா (ஜஸ்ட் டேட்டாதானே) குழந்தைக்கு வரும்?

அப்படி அய்யங்கார் + (உதாரணம்: பறையர், பள்ளர் , சக்கிலியர் ,நரிக்குறவர்) திருமணம் நடந்து அத்தம்பதிகளுக்கு பிறக்கும் குழந்தைகள் உதாரணம்: பறையர், பள்ளர் , சக்கிலியர் ,நரிக்குறவர்) தங்களை அடையாள‌ப்படுத்திக்கொண்டு வாழும் ஒரு உதாரண‌ம் சொல்ல முடியுமா?

***

தலித்தா தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் ஒருவர் அய்யர் பெண்னை மணந்தபின் அவர் குழந்தைகளை தமிழ் அய்யர் என்றுதான் அடையாளப்படுத்துகிறார்.

ஆதாரம்:
http://pathivubothai.blogspot.com/search/label/தலித்


http://pathivubothai.blogspot.com/2008/08/blog-post_7020.html
//நான் தலித் என்று சொல்வதில் எந்த தவறும் இல்லை. மகார் இனத்தில் பிறந்தவன். ஒரு உயர்ந்த ஜாதி (தமிழ் ஐயர்) பெண்ணை மனம் செய்துள்ளேன் காதல் புரிந்து. அவரகள் வித்தியாசமான குடும்பம்.//

http://pathivubothai.blogspot.com/2008/08/blog-post_9417.html
//எத்தனை முறை தான் சொல்வது, ஒரு தமிழ் நங்கையை கட்டி உள்ளேன். என் குழந்தைகள் தமிழாக வாழ்கிறார்கள். அவர்கள் ஸ்கூல் ரெகார்ட்ஸ் படி நான் 'தமிழ் ஐயர்' அம்மா ஜாதி, மொழி என்று எழுதியுள்ளேன்.....//

.

Sabarinathan Arthanari said...

பணிச்சுமையில் வால்பையனின் பின்னூட்டங்களை தவிர வேறு சில பின்னூட்டங்களுக்கு சரியான(?) முறையில் பதில் சொல்ல முடியவில்லை.

இதை விட கேவலமாக என்னாலும் பின்னூட்டம் போட இயலும்.[உதா: எனக்கு சாதி லேபிள் குத்தும் முயற்சியையும் குடுமி வைக்கும் முயற்சியயைும் கொலை வெறியோடு செய்து தங்களது சுய அரிப்பை சொறிந்து கொண்டார்கள் போல.]

வாந்தி எடுப்பதற்கு திரும்பி வாந்தி எடுத்தல் பரிகாரம் இல்லையென்பதால் இத்தோடு விடுகிறேன்.

யாருக்காவது இப்போது நேரடியாக பேச விருப்பம் இருந்தால் தாராளமாக தொடர்பு கொள்ளலாம். எனக்கு கொங்கு வட்டார தமிழ் (?!) பாசை சரளமாக வரும்.

பாவம் எதேனும் உருப்படியாக படிக்க வரும் வலையுலக வாசகர்களை விட்டு விடுங்கள்.

கல்வெட்டு said...

// செல்வா said...

அப்படிப்பட்ட கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் ஒவ்வொரு நாளும் ஆதிக்க சாதியனருக்கு அடிபணிந்து வாழும் பரிதாப மக்களுக்கு பயன் தரக்கூடிய, நம்பிக்கை தரக்கூடிய, ஆதிக்கம் செய்பவரை நேரடியாகத் தாக்கும் வகையில் ஏதும் வினை புரிந்திருகிறீர்களா? //

அசுரன் என்பவர் எழுதிய பக்கங்கள்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
http://poar-parai.blogspot.com/2006/07/blog-post_31.html

பாரதியின் மீசை
http://poar-parai.blogspot.com/2006/06/blog-post_16.html

.

smart said...

//ஜாதி அர்த்தமில்லா டேட்டா என்றால் இப்போதே விட்டுவிட வேண்டியதுதானே? ஏன் விட முடியாத இல்லை விருப்பம் இல்லையா?//


என்னங்க கல்வெட்டு,
சாதி மாற்றமுடியாதுன்னு சொன்னேங்க அதற்கு விளக்கம் கொடுத்த, மாறியவுங்களை காட்டு என்கிறீர்கள். சரி நானும் அப்படி மொழி மாறியவுங்களை காட்டு என்றால் என்ன செய்வீர்கள்?
முதலில் புரிந்து கொள்ளுங்கள் அதாவது சாதியும் மாற்றக்கூடியதே நம் விரும்பும் பட்சத்தில் விலக வேண்டியது தானே. அதே நேரத்தில் விருப்பமிருந்தால் வைத்துக்கொள்ளட்டும் (உங்கள் உதாரண சுட்டி போல)

முடிவாக மொழி, நாடு, தொழில், போன்ற சாதியும் ஒரு வகை பிரிவு அவ்வளவுதான்

smart said...

//அசுரன் என்பவர் எழுதிய பக்கங்கள்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்

பாரதியின் மீசை//

சார் கல்வெட்டு,

திரு.செல்வா கேட்பது கண்டமேனிக்கு ஒரு சமுகத்தை மட்டும் தாக்கி எழுதும் திரு. வால்பையனை. அதனால் நீங்கள் நண்பர் வால்பையன் எழுதிய சுட்டிகளை தாருங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

கல்வெட்டு said...

//திரு.செல்வா கேட்பது கண்டமேனிக்கு ஒரு சமுகத்தை மட்டும் தாக்கி எழுதும் திரு. வால்பையனை. அ//

பார்ப்பனியம் என்பது சமூகமோ அல்லது சாதியோ அல்ல. அது ஒரு வசைச்சொல். வர்ணாசிரம தர்மம் கடைபிடிக்கும் எல்லாரையும் குறிக்கும். நாசிஸ், ரேசிஸ்ட் போல.

smart said...

//பார்ப்பனியம் என்பது சமூகமோ அல்லது சாதியோ அல்ல. அது ஒரு வசைச்சொல். வர்ணாசிரம தர்மம் கடைபிடிக்கும் எல்லாரையும் குறிக்கும். நாசிஸ், ரேசிஸ்ட் போல.//

கல்வெட்டு நண்பரே,
நீங்க சொல்வது உண்மை. ஆனால் நண்பர் வால்பையன் இந்த இடுகையில் ஒரு சமுகத்தை தானே தாக்கி எழுதியுள்ளார்?

S said...

என் சக பணியாளர் ஒருவர் உயர் ஜாதியானாலும் கீழ்ஜாதிப் பெண் ஒருவரைக் காதலித்து மணந்து தன்னை அந்த கீழ்சாதியாக அடையாளப்படுத்திக் கொண்டு பதவிஉயர்வு(!) பெற்று வாழ்கிறார். அதாவது நம் இந்திய சட்டப்படி மனைவியின் ஜாதியே ஏற்றுக்க கொள்ளப்படுகிறது. மேல் குறிப்பிட்ட 'தமிழ் அய்யர்' அந்த அடிப்படையில்தான்.

செல்வாவின் பின்னூட்டங்கள் அருமை.

S said...

கலப்பு மணங்களை ஆதரிக்கும் விதமாக அந்த சட்டங்கள் இயற்றப்பட்டிருகின்றன என்றும் தெரிகிறது. ஆனால் கொடுமை என்னவென்றால் ஆண்கள் (கீழ் ஜாதி அடையாளத்தை துறக்க விரும்புவர்களும் அரசு சலுகை பெற விரும்புபவர்களும்)அதை சுயநலத்துக்கு பயன்படுத்துகின்றனர்.

Unknown said...

ஏன்டா ஏன்?..
போய் புள்ள குட்டிகளை படிக்க வைங்கடா..
நீரு என்னையா செய்ற இங்க ,HINDU-ல ஸ்பெஷல் எடிசன் போட்டிருக்கானம் போய் படி போ..

கல்வெட்டு said...

.



------------------------------

//smart said...

// கல்வெட்டு said .. பார்ப்பனியம் என்பது சமூகமோ அல்லது சாதியோ அல்ல. அது ஒரு வசைச்சொல். வர்ணாசிரம தர்மம் கடைபிடிக்கும் எல்லாரையும் குறிக்கும். நாசிஸ், ரேசிஸ்ட் போல. //

கல்வெட்டு நண்பரே,
நீங்க சொல்வது உண்மை. ஆனால் நண்பர் வால்பையன் இந்த இடுகையில் ஒரு சமுகத்தை தானே தாக்கி எழுதியுள்ளார்?
//

....

வால் பார்ப்பனர்களைத்தான் திட்டினார்.

பார்ப்பனியம் கடைபிடிப்பவர்கள் அனைவருக்கும் பொதுவான வசைச்சொல்தானே?

இதில் எப்படி ஒரு சமூகம் மட்டும் பாதிக்கிறது?

எனக்கு புரியவில்லை அது எனது குறை.

நீங்கள் முடிந்தால் நான் கேட்டுள்ள‌
கேள்விகளுக்கு பதில் அளியுங்கள். உங்களுக்கு விளக்கம் கிடைக்கலாம்.

http://valpaiyan.blogspot.com/2010/04/blog-post_08.html?showComment=1270747455312#c3527374609936532709

***

சுருக்கமாக எனது கருத்து...

1.இந்துமதத்தின் ஆணிவேர் வர்ணாசிரமம்.

2.வர்ணம் வர்ணாசிரமம் வர்ணதர்மம் (எப்படிக் கூபிட்டாலும் நாய் நாய்தான்) என்பது.....
மனிதனை பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டி வர்ண ஏணியில் உள்ள ஒரு சாதி அடுக்கில் உட்காரவைப்பது.

3.ஒருவன் தான் இந்து என்று சொன்னால் அவன் அறிந்தோ அறியாமலோ வர்ணாசிரமம் அமைத்துக் கொடுக்கும் சாதிய ஏணியில் ஏதோ ஒரு இடத்தில் அமர்ந்து கொள்கிறான்.

4.அப்படி ஒருவன் வர்ணாசிரமம் அமைத்துக் கொடுக்கும் சாதிய ஏணியில் ஒரு இடத்தில் அமரும்போது, அவன் அறிந்தோ அறியாமலோ தனக்கு மேலும் கீழும் ஒரு பிரிவினரை வரித்துக் கொள்கிறான்.

5.இந்துமதம் என்று சொல்லிக்கொள்ளும் அனைவரும் பார்ப்பனீய கருத்தாக்கத்தின் பயனர்கள் (மேல் அடுக்கு) அல்லது பாதிக்கப்பட்டவர்கள் ( கீழ் அடுக்கு)

6. வர்ணாசிரமத்திற்கு ஆதாரமான வர்ணாசிரமக் கொள்கையையும்(வேதம்) வருணம் போதிக்கும் கடவுள்களையும் தீயில் போட்டுக் கொழுத்ததாதவரை இதற்கு தீர்வு இல்லை.

யார் இதைச் செய்ய ஆரம்பிக்க வேண்டும்?

வர்ணத்தின் காவலர்களாக‌, வேதத்தின் காப்பிரை‌ட் ஓனர்களாக காட்டிக்கொள்ளும் வர்ணத்தின் முதல் அடுக்கு மக்கள்.

ஏன் இவர்கள் செய்ய வேண்டும்?

இந்த நாள்வரை வேதத்தின் காவல்ர்களாக இவர்கள்தா தங்களை அடையாளபப்டுத்திக் கொள்கிறார்கள். மேலும் வர்ணம் நல்லது என்று காஞிச் முதல் ஜெயமோகன் வரை சொல்கிறார்கள். எனவே இவர்கள்தான் முதல் கல்லை எடுக்க கடமைப்பட்டவர்கள்.

இவர்களை எப்படி அடையாளம் காண்பது?
இவர்கள் அதற்கு சில உடை ,சிகை, நூல் , மொழி என்று தனிப்பட்ட அடையாள‌ங்களை தெரிந்தே வெளிப்படுத்துகிறார்கள்.

இவர்கள் வர்ணாசிரமத்திற்கு ஆதாரமான வர்ணாசிரமக் கொள்கையையும்(வேதம்) வருணம் போதிக்கும் கடவுள்களையும் இவர்களாகவே தீயில் போட்டுக் கொழுத்த முன்வர வேண்டும்.

இப்படி வர்ணத்தின் காவலர்களே அதை தூக்கிப்போட்டு மிதித்து தாங்களாகவே பீயள்ளவும், வயல் வேலை செய்யவும் முன் வரும் போது , ஏற்கனவே பீயள்ளவும், வயல் வேலையும் செய்யும் மற்றவர்கள் ... அட என்று ஏணியில் இருந்து குதித்துவிட வாய்ப்பு உள்ளது.

.

இது நடக்குமா ?
நிச்சயம் நடக்காது.


ஏன் ?
இதே வலையுலகில் கடந்த 10 வருடங்களாக இன்னும் பார்ப்பனீயம் என்றால் என்ன என்று தினமும் எங்காவது ஒரு பதிவு வருகிறது. யாரும் மாறிவிடவில்லை....சமுதாயம் அப்படியேதான் உள்ளது.


:-((((

.

--------------



.

S said...

பார்ப்பனீயம் என்ற வார்த்தை தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. (பார்ப்பனன் என்பது தமிழ்ச் சொல்லா?) வேறு வார்த்தைகளை தேர்ந்து உபயோகிக்க முயல்வது நல்லது.

ராஜ நடராஜன் said...

//பெரியாரின் சமூக பணி குறைந்தது ஐம்பது வருடங்கள் இருக்கும், அதன் பிறகும் அவரது இயக்கமான திராவிடர் கழக இயக்கத்தை, திராவிடர் கழக நிறுவனமாக வீரமணி பொறுப்பேற்று நடத்தி கொண்டிருக்கிறார், அக்கட்சியின் இணைய கொள்கைபரப்பு செயலாளர் சொல்கிறார், பெரியாருக்கு பிறகு வீரமணி தான் பொருத்தமானவராம், அஸ்ட்ராலஜியா, நியுமரலாஜியான்னு தெரியல, நல்ல ஜோதிடரிடம் எத்தனை பொருத்தம் என கேட்க வேண்டும்,இது பத்தாதுன்னு பெரியார் கழகம் என்று தனியாக ஒரு இயக்கம், அனைத்தும் இருந்தும் இன்னும் கிராமங்களில் இரட்டை குவளை முறை இருப்பது வெட்ககேடு, உங்களுகெல்லாம் பெரியார் பெயர் சொல்லவே தகுதியில்லை, //

வால்பையன்!பதிவுகள் தர்க்கரீதியாக எழுதி விட்டு போக வேண்டிய திசை நோக்காமல் பின்னூட்டத்தில் எல்லோரும் கும்மியடிக்கிறார்களே என்று நினைப்பதுண்டு.முன்பொரு முறையும் இதனை இலை மறை காயாக சுட்டிக்காட்டியதுமுண்டு.

அந்த மனிதன் தனது தள்ளாத வயதிலும் உழைத்த உழைப்புக்கு மதிப்பில்லாமல் அடைப்பான்காரர்கள் நாத்திகம் என்ற சொல்லையே ஹைஜாக் செய்து விட்டார்கள்.

சிந்தனைகளை வரவேற்கிறேன்.கூடவே தர்க்க ரீதியான எழுத்துக்களோடும் பின்னூட்டங்களோடு செல்வது மட்டுமே எதிர் தரப்பையும் விவாதத்திற்கு இட்டுச் செல்லுமென நினைக்கிறேன்.மூணு கலைகள் பின்னூட்டங்கள் மகுடத்துக்கு மட்டுமே கொண்டு செல்லும்.ஆனால் பின்னூட்ட்டங்கள் மகுடத்துக்கு அழகு சேர்ப்பனவையா என்பதை உங்கள் தராசுக்கு விட்டு விடுகிறேன்.இல்ல இப்படி அடிச்சாத்தான் கேட்கிறாங்கன்னு உங்கள் குழு நினைத்தால் அவையெல்லாம் தற்காலிக உங்கள் வெற்றிகள் மாத்திரமே.

smart said...

//பிராமின் என்றால் பார்ப்பனர். //
என்று சொல்லிக் கொள்ளும் பலர்{126th comment} உங்கள் போலி நாத்திகக் கூட்டத்தில் இருக்கிறார்கள். அத்தகைய மனநிலையுடைவர்கள் இருக்கும் வரை உங்கள் பதிவுகள் திரு.செல்வா கூறியது போல சாதியை ஒழிக்க முடியாது

ராஜ நடராஜன் said...

//பொறுமையாக களையெடுத்தலே சிறந்த அறுவடைக்கு உதவும் என நம்புகிறேன்!//

ஓ!தெரிஞ்சுதான் வச்சிருக்கீங்களா?வாழ்த்துக்கள்.

smart said...

கல்வெட்டண்ணே,
உங்கள் கேள்விக்கு பதில் சொல்ல ஒரு நல்ல இந்து வருவர்.

பார்ப்பனம் என்பது ஒரு சாதியில்லைன்னு சொல்றாரு. பிராமின் தான் பார்ப்பனன் என்பவர்களுக்கும் சப்போட்டு (3rd comment) செய்கிறார். நீங்கள் அவருக்காக பாயின்ட் எடுத்துக் கொடுக்கிரீகள். இருவரும் ஒரு தெளிவாக வாருங்கள். அப்பத்தானே விவாதிக்க முடியும்.
நான் சொல்றது சரிதானா அண்ணே

ராஜ நடராஜன் said...

//என்னது,துள்ளி குதித்து வெளியே வந்திருக்கும் இந்த வெள்ளை தாடி கிழட்டு முகம் ,பார்ப்பனீய வில்லன் முகமா?நம்பவே முடியவில்லையே.பார்த்தால் சாதரண டிவி சீரியல் வில்லன் முகம் போல் தான் இருக்கிறது.திராவிடீய பார்ப்பனியன் போலிருக்கிறது.அது தான் பலே வில்லனாக தன்னை அறிவித்திருக்கிறான்.//

இதுவரைக்கும் மேலான பின்னூட்டங்கள் அதன் பாதையிலேயே பயணிக்கிறது.இங்கே துவங்குகிறது இந்த பதிவின் நோக்கத்தின் கோணலும் திசை திருப்பலும்.

smart said...

//வால்பையன்!பதிவுகள் தர்க்கரீதியாக எழுதி விட்டு போக வேண்டிய திசை நோக்காமல் பின்னூட்டத்தில் எல்லோரும் கும்மியடிக்கிறார்களே//

ஐயா உங்கள் கருத்து அருமை. விவாதிக்க வேண்டியதை விட்டுவிட்டு
mythees,மோனி,பட்டாபட்டி,Vilwam, அகல்விளக்கு, வாக்காளன்,கும்மி, SanjaiGandhi™
போன்றவர்களை களை எடுக்க வேண்டும்

கல்வெட்டு said...

.


// smart said.....

கல்வெட்டண்ணே,
உங்கள் கேள்விக்கு பதில் சொல்ல ஒரு நல்ல இந்து வருவர்.

பார்ப்பனம் என்பது ஒரு சாதியில்லைன்னு சொல்றாரு. பிராமின் தான் பார்ப்பனன் என்பவர்களுக்கும் சப்போட்டு (3rd comment) செய்கிறார்.//




பார்ப்பனீயம் , பார்ப்பனர் எனது புரிந்ததா என்ரு தெரியவில்லி இப்போட்க்ஹு பிராமின் என்ற ஒன்றைக் கொண்டுவந்து விட்டீர்கள்.

இந்து மதத்தில் பிரம்மன் என்ற ஒரு சாமி உண்டு.

வர்ணாசிரமப்படி மனிதர்களை உண்டாக்கியது இவர்தான்.
இவரின் தலை... கால் என்‌ பாகங்களில் இருந்தே மனிதர்கள் வர்ண வேறுபாடுகளுடன் பிறந்தனர் அல்லது படைக்கப்பட்டனர்.


வர்ணத்தின் சிருஸ்டிகர்த்தா பிரம்மன் தான்.

இவரின் பேரைச் சொல்லி (ஒரு சமூகம் இருக்குமானல் சந்தேகமில்லை பார்ப்பனீயத்தின் தலைமைபீடம் அவர்கள்தான். ஆப்பு அவர்களிடம் இருந்தே தொடங்க வேண்டும்.

சரியாகத்தான் வால் சப்போர்ட் செய்துள்ளார்.

.

ஸ்மார்ட்,
ஒருவழியாக பார்ப்பனீயத்தின் ஆணிவேர்ச் சமுதாயம் அனைவருக்கும் தெரிய நீங்கள் உதவி செய்துள்ளீர்கள்.

நன்றி உங்களுக்கு!!!



.

smart said...

//ஸ்மார்ட்,
ஒருவழியாக பார்ப்பனீயத்தின் ஆணிவேர்ச் சமுதாயம் அனைவருக்கும் தெரிய நீங்கள் உதவி செய்துள்ளீர்கள்.
///

என்னங்க திரும்ப காமெடி செய்றேங்க பார்ப்பனீயம் என்பதற்கு விளக்கம் கொடுத்துட்டேங்களே அப்புறம் எதற்கு திரும்ப ஆணிவேர் கிளை வேர் என மண்ணை நோண்டுகிறேர்கள். மரத்தை வேட்டுங்கப்பா

smart said...

இந்தப்பதிவுக்கு முதல் இடம் வழங்கப்படுகிறது.

கல்வெட்டு said...

.

//smart said...
என்னங்க திரும்ப காமெடி செய்றேங்க பார்ப்பனீயம் என்பதற்கு விளக்கம் கொடுத்துட்டேங்களே அப்புறம் எதற்கு திரும்ப ஆணிவேர் கிளை வேர் என மண்ணை நோண்டுகிறேர்கள். மரத்தை வேட்டுங்கப்பா//

என்ன கொடுமை ஸ்மார்ட் இது?

எல்லாம் முடிந்ததாக நான் நினைத்துக் கொண்டு இருந்தபோது, நீங்கள்தான் "வர்ணாசிரம் சிருஸ்டிகர்த்தா , இன்னும் மக்களை வர்ண‌ம் பார்த்து படைத்துக் கொண்டு இருக்கும் பிரம்மன்" என்ற ஒரு கடவுளின் பெயரைக்கொண்டு ஒரு சமுதாயமே இயங்கிவருகிறது என்று எடுத்துக் கொடுத்தீர்கள். !!!!

பிரம்மன் பேர் சமுதாயத்தை விட்டுவிட்டு வர்ணாசிரமரத்தை எங்கிருந்து வெட்டுவது?

முதலில் ஆப்பை அங்கே போடுங்கள். உங்களைப் போன்ற நல்லவர்கள் நினைத்தால் "வர்ணாசிரம் சிருஸ்டிகர்த்தா பிரம்மன்" பேரை வெட்கம் இல்லாமல் பெருமையாக தங்கள் சமூகத்திற்கு வைத்துக் கொண்டு அதையும் பொது வெளியில் சொல்லிக் கொண்டு இருக்கும் மக்களைத் திருத்திவிடலாம்.

கில்லாடியாப்பா நீங்கள். எப்படியோ இலக்கை அடைந்து விட்டீர்கள்.

உங்கள் முயற்சி வாழ்க.

.

smart said...

//"வர்ணாசிரம் சிருஸ்டிகர்த்தா , இன்னும் மக்களை வர்ண‌ம் பார்த்து படைத்துக் கொண்டு இருக்கும் பிரம்மன்//

கல்வெட்டு ஐயா,
பார்ப்பனீயம் என்றால் பிராமின் என்று இன்னும் நினைக்கும் கூட்டத்தைத் தான் நான் சுட்டிக்காட்டினேன். நீங்கள் புதிதாக பிரம்மன் அது இது என்று புது கதையை அரம்பிக்கிறேர்கள்

smart said...

//இந்து மதத்தில் பிரம்மன் என்ற ஒரு சாமி உண்டு.

வர்ணாசிரமப்படி மனிதர்களை உண்டாக்கியது இவர்தான்.//

நீங்க அதை நம்புகிறேரா! அப்ப நீங்க இந்து மதவாதியா? அண்ணே வால், இவர்தான் முதல் மதவாதி இவரை முதலில் சீர்திருத்துங்கள்

smart said...
This comment has been removed by the author.
smart said...

//கில்லாடியாப்பா நீங்கள். எப்படியோ இலக்கை அடைந்து விட்டீர்கள்.

உங்கள் முயற்சி வாழ்க.//

ஒரு மதவாதியின் வாழ்த்தாக இருந்தாலும் நன்றிகள்

கோவி.கண்ணன் said...

//இது நடக்குமா ?
நிச்சயம் நடக்காது.

ஏன் ?
இதே வலையுலகில் கடந்த 10 வருடங்களாக இன்னும் பார்ப்பனீயம் என்றால் என்ன என்று தினமும் எங்காவது ஒரு பதிவு வருகிறது. யாரும் மாறிவிடவில்லை....சமுதாயம் அப்படியேதான் உள்ளது.


:-((((//

ஆனால் ஒருசிலர் தவிர்த்து கேள்வி கேட்டவர்களே திரும்பவும் அதே கேள்வியை கேட்கவில்லை என்பதால் கேட்டவர்கள் புரிந்து கொண்டு விட்டார்கள் என்பதாக திருப்தி பட்டுகொள்ளலாமே கல்வெட்டு அண்ணா.

கோவி.கண்ணன் said...

இது பாலோ அப்புக்கு.

smart said...

அண்ணே கோவி.கண்ணன்,
"இது பாலோ அப்புக்கு" என்றால் என்ன அண்ணே ?

கோவி.கண்ணன் said...

//smart has left a new comment on the post "தவக்க(ளை)லை பதிவும் அதன் விளக்கமும்!":

அண்ணே கோவி.கண்ணன்,
"இது பாலோ அப்புக்கு" என்றால் என்ன அண்ணே ? //

ஒவ்வொரு பின்னூட்டத்தையும் வலைப்பதிவில் வந்து படிக்க நேரம் எடுக்கிறது. பாலோ அப் செய்தால் மின் அஞ்சலுக்கு பின்னூட்டங்கள் வந்துவிடும்

Rajan said...

அன்பின் ஸ்ரீராம் !

புரிதலுக்கு மிக்க நன்றி.

வால்பையன் said...

@ செல்வா!

இணையத்தில் பெரும்பாலானோர் படித்தவர்கள், ஸ்மார்ட் மாதிரி ஒரு சிலர் தான் படித்தாலும் என்ன சொல்கிறோம் என புரியாதவர்கள்! இணையத்தில் யாரை குறிப்பிடுகிறோம் என்பதை பெரும்பாலானோர் அறிவார்கள்!

பொது வீதியில் நாம் செயல்பட வாய்ப்பு கிடைத்தால் அந்த குறிப்பிட்ட பிரச்சனையை பாமரனுக்கும் போய் சேரும் வகையில் தான் குறிப்பிடுவோம்!.

உங்கள் ஆலோசணைக்கு நன்றி!

Rajan said...

@ செல்வா //“பார்ப்பனியத்தை ஒழிப்போம்” என்ற கோஷம் வேலை வெட்டியில்லாத தங்களை பார்பானராக நினைத்துக் கொள்ளும் சில அய்யர் சாதி காரர்களைத் தவிர பிற யாவருக்கும் ஒரு உருத்தலையும் உருவாக்காது.//

எல்லாருக்கும் உறுத்த வேண்டிய அவசியமென்ன ! பார்பநீயத்துள் பார்ப்பணம் பீடித்த அய்யர்களும் ஐயங்கார்களும் அடக்கம். இங்கு பார்பனீயம் அய்யர்களுக்கும் அய்யங்கார்களுக்கும் இல்லை எனவோ குறைவெனவோ வாதாட யாருமில்லை . உமது கேள்வி எம்மை மட்டுமே திட்டுவதாக நாங்கள் கருதுவதால் இதனை நிறுத்த வேண்டும் என்பதே அல்லவா. நாங்கள் தான் பார்பனீயம் பிராமணர்களை மட்டும் குறிக்கவில்லை என்று சொல்லி விட்ட பின்னும் உமது புரிதலின் பேரில் மாற்றி அழைக்க முகாந்திரம் ஏதும் இல்லை நண்ப

Rajan said...

//அல்லது பொருளாதார நலன்கள் தவிர்த்து பிற ஆதிக்க மனப்பான்மை அதிகமின்றி நகரங்களிலும் பிற நாடுகளிலும் இருக்கும் பிராமணரை மட்டுமே வம்புக்கிழுத்து முழு சக்தியையும் செலவு செய்ய போகிறீர்களா?//

சாதி அடுக்குகளை உருவாக்கியதோடு இன்று வரை அதனை தூக்கிப் பிடித்துக்கொண்டு நிற்பவன் பிராமணன் தான். இன்னமும் கூட குலக் கல்வி வர்ணம் தேவை என்று பிதற்றும் சமூகமாக பிராமணம் இருக்கிறது. பிராமணர்களை அப்புரானிகலாக சித்தரிக்க முயல்வதை நிறுத்த வேண்டும். இங்கு பார்பான் என்பதற்கு பதிலாக வேறெதைப் போட்டிருந்தாலும் பிராமணர்களுக்கு உரைக்காதே என்று ஒரு வகுப்பினன் வந்து சொல்வான் , பின் நிதம் இது தொடரவா ? மற்றெல்லா சாதீயப் புற்றீசல்களை அடக்குவதும் தொடங்கும். ஆனால் பார்பனீயத்தின் பிடி தளராது பிராமண மனங்களில் இருப்பதைக் கண்ணுற்றால் பெண்டேடுத்துவிட்டு மறுவேலை பார்க்கத்தோன்றுகிறது

வால்பையன் said...

//supersubra has left a new comment on your post "தவக்க(ளை)லை பதிவும் அதன் விளக்கமும்!":

http://www.godisimaginary.com//


ராஜன், அடுத்து இந்த வெள்ளை அங்கியை கிழிப்போமா!?

Rajan said...

//
1. பார்ப்பனர் என்பது சாதியா ?//

நான் சொல்லிவிடுவேன் அப்பறம் இங்கிதம் குறித்து போதிக்கத் துவங்கிவிடுவார்கள் காலையிலேயே தூக்கம் வந்து விடும்

Rajan said...

//2. பார்ப்பனர் என்பது என்ன ?//

தன் பிறப்பு வழி மற்றும் குடிப் பெருமை குறித்த கர்ப்பிதங்களை கழுதை போல் அப்படியே நம்பி மேட்டிமைத் திமிரை தன் குழுவிலும் பொது வெளியிலும்வெளிப்படுத்துவது

Rajan said...

//3. யார் யார் பார்ப்பனர்கள்?//

கமெண்டு போட்டிருக்கிறார்கள் நிறைய பேர் !

Rajan said...

//4. எப்படி அவர்கள் பார்ப்பனர் ஆனார்கள்?(சட்ட வரைவு?)//

அதைத்தான் மண்டை மயிரப் பிடித்து இழுத்து கேட்க வேண்டும்

Rajan said...

//5. தமிழக அல்லது இந்திய சட்டங்களில் எந்த அட்டவணையில் பார்ப்பனர் என்ற சாதி சொல்லப்பட்டுள்ளது?//

வேதத்தில் இருக்குமோ என்னவோ ? பார்பன சொத்து பிரிவினை தகராறுகளுக்கு வேத விர்ப்பன்னர்களை வைத்து சமரசம் காணலாமே கோர்டுக்கு என்ன மயிருக்கு போகிறார்கள் . பாதி வக்கீல்கள் பிராமணர்களாய் இருக்கின்றனர். லா கட் ஆப் ஆப்பு வெச்சுட்டதால கொஞ்ச வருசமா ஆட்டம் அடங்கி இருக்கு . அதுக்காகவே சங்கர ,விநாயகா கல்வி நிறுவனங்கள் சட்டக் கல்லூரிக்கான உரிமம்கோரியிருக்கின்றன

Rajan said...

//6. "ரேசிஸ்ட்" என்று சொன்னால் அது எந்த ஒரு குறிப்பிட்ட இனத்தைக் குறிக்குமா? அல்லது நிற வேறுபாடு பாட்டும் அனைவரையும் சுட்டுமா?//

இதுக்கு ஏதாகிலும் டிசைனா பதில் சொல்றானுங்கலான்னு பாப்போம்

Sabarinathan Arthanari said...

வாங்க சாதியை ஒழிக்கலாம் [நகைச்சுவை பதிவு]

நேற்று நடந்த விவாதத்தின் கடுமையை குறைக்கும் பொருட்டு எழுதிய பதிவு. நகைச்சுவையாகவே நண்பர்கள் எடுத்து கொள்ள வேண்டுகிறேன்.

Unknown said...

// மேட்டிமைத் திமிரை தன் குழுவிலும் பொது வெளியிலும்வெளிப்படுத்துவது//

இப்படி மேட்டிமைத் திமிரை வெளிப்படுத்துவது,ராஜன்,ருத்ரன்,கும்மி,வால்பையன்,கோவி.கண்ணன் போன்ற வெறியர்களைத் தவிர வேறு யார் என்று கேட்கிறேன்.

Rajan said...

@அண்ணாதுரை
//இப்படி மேட்டிமைத் திமிரை வெளிப்படுத்துவது,ராஜன்,ருத்ரன்
,கும்மி,வால்பையன்,கோவி.கண்ணன் போன்ற வெறியர்களைத் தவிர வேறு யார் என்று கேட்கிறேன்.///

இங்கே நாங்கள் மட்டுமே ! மற்ற இடங்களில் நிறைய பேர் இருப்பார்கள் என நினைக்கிறேன்

ஆவுடையப்பன் : மாண்புமிகு பேரவை உறுப்பினர் அண்ணாதுரை கேட்ட கேள்வி மிக மொக்கையாக இருப்பதால் மேலும் விவாதிக்க ஒன்றுமில்லை எனக் கருதி காறித் துப்பப் படுகிறது

பேரவை உறுப்பினர்கள் : ( டிக்கியை தட்டி ஆர்ப்பரிக்கின்றனர் )

பித்தனின் வாக்கு said...

// அந்த வார்த்தை பிரயோகம்தான் தவறு என்றால் அடுத்து பலான கெட்ட வார்த்தை களுக்குத்தான் தாவ வேண்டும் //
இராஜன் அவர் அந்த வார்த்தைக்குத்தான் அர்த்தம் கேக்கின்றார்,உங்களின் சுய விமர்சனத்தை அல்ல.

//இங்கு மோடி படம் ஏன் என்று கண்டுபிடிபவர்களுக்கு தவக்களை சூப் இலவசம்//
இப்ப இந்தியாவில் வர்ற போற தெரு நாய் எல்லாம் அவரை வைச்சுத்தான் கிண்டல் பண்ணுது, நம்ம பண்ணா என்ன தப்பு. சரியா?
தவக்களை சூப்பை சூடாக, கடலை மசாலுடன் எடுத்து வைக்கவும்.

// நான் அப்பிடியே சாக் ஆயிட்டேன் ! //
சாக் ஆனா பரவாயில்லை மாமு, சோக் ஆனாத்தான் அடைப்பு எடுப்பது கஷ்டம்.

//நான் யாரிடமாவது நீங்க என்ன சாதி, உங்க சொத்து நிலவரம் என்ன என்று உங்கள் பர்சனல் டேட்டா கேட்டிருக்கிறேனா!?, நட்பாய் இருப்பதற்கு சாதி ஒரு தகுதி இல்லையே! நான் அவ்வாறு நினைப்பேன் என ஏன் நினைக்கிறீர்கள்//

அப்படி நீங்க கேட்டால் என்ன எலக்சன் ஷீட் தர்ப்போறிங்களா, இல்லை நிக்கப் போறிங்களான்னு கேட்டு,குவாட்டரும்,கோழி பிரியானியும்,
ஜநூறு ரூவாயும் உஷார் பண்னிருப்பனே.

// சின்னப் பொண்ணுக்கு பெண்டு எடுத்து டாக்டர் பட்டத்துக்கு வேற சிபாரிசு செய்யப் பட்டிருக்கோம் //
இது வேறய்யா ? சரி சரி அந்த சீ.டீ எப்ப ரீலீஸ் பண்ணுவீங்க. ஆல் இந்தியா மற்றும் அகில உலக உரிமம் எனக்குத்தான் தரனும்.

// சாதி வெறியுடன், திமிருடன், திருட்டுத்தனத்துடன், தன்மானமற்ற தன்னலம் பேணும் குயுக்தியுடன் எவன் செயல்பட்டாலும் அவன் பார்ப்பனீயக் கீழ்மையுடையவன். அவன் எந்தக் குடும்பத்திலும் பிறக்கலாம், எந்த மதத்திலும் இருக்கலாம், ஆனால் இப்படிப்பட்டவர்களைச் சுட்டிக்காட்டும்போது, அரிப்பு மிகுந்து, ஆத்திரம் மிகுந்து துள்ளி வெளிவருவான்- நாம் அடையாளம் கண்டுகொள்ள. //
பரவாயில்லை டாக்டர் அய்யா ஒரு சில சமயம் தெளிவாகத்தான் சொல்றார்.

// பார்ப்பான் எவ்வளவு சூதானமாக இருந்தாலும் அவன் தனது தெள்ளவாறித் தனத்தை யாராவது சொல்லும்போது அடங்கியிருக்க மாட்டான் .பார்பன புத்தி இருக்கவும் விடாது . துள்ளி வந்து குடுமியை ஆட்டாமல் அடங்க மாட்டான் //
அவன் குடுமி ஆட்டுவான் சரி, இராஜன் எதை ஆட்டுவார், சீய் நினைத்துப் பார்த்தால் அசிங்கமாய் இருக்கு.

/ / நிச்சயமாக தனிதனியாக தோலுரிப்போம்! //
என்ன அண்ணே தோலுரிச்சுப் பார்த்தா நல்லா இருக்காது. சதைப் பிண்டமாக அசிங்கமாய் இருக்கும்.

சாதி இல்லாத சமுதாயம் என்னும் கனவு கண்டிப்பாக நிறைவேறும், அது நீங்கள் எல்லாம் கொடிப் பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் கண்டிபாய் வரும். ஆனால் அது எப்படி இருக்கும் தெரியுமா? நீங்கள் நினைப்பது போல இன,மத,மொழி,வேற்றுமை அற்ற ஒரு ஒற்றுமையான சமுதாயம் என்றுமே உருவாகாது. ஏன்னா அது கோல்டன் பாலிசியாக இருக்கும் ஆனா நடைமுறையில் சாத்தியம் இல்லை.
இனி வரும் சமுதாயம் பணத்தின் அடிப்படையிலும், சமுதாயத்தில் அந்தஸ்த்தின் அடிப்படையிலும் இருக்கும். எந்த சாதியாக இருந்தாலும் அவன் பணம்,அதிகாரம் செல்வாக்கு இருந்தால் அவந்தான் பெரிய மனிதனாக மதிக்கப் படுவார். தனி மனித ஒழுக்கங்கள் புறந் தள்ளப் படும்.
நம் மகளே கூட டாடி உங்கிட்ட ஒரு மண்ணும், பணமும் இல்லை, அவனிடம் இருக்கு போகின்றேன் என்று கெட்டவனுடன் ஓடும் காலம் வரும். குடும்பம், கலாச்சாரம் எல்லாம் ஒரு பார்மாலிட்டியாக பெயரளவில் இருக்கும், பணம் மட்டுமே அதிகாரத்தில் இருக்கும். அடுத்து வரும் நூறு அண்டுகளுக்கு இந்த பணம்தான் ஆட்சி செய்யும். இதை விட்டு நாம் சாதி, சாக்கடை, அய்யிரு,தயிரு,மோரு என்று எல்லாம் கும்மி அடிப்பது வீண்.

இது என் கருத்து வால்ஸ். நன்றி.

Rajan said...

//அவன் குடுமி ஆட்டுவான் சரி, இராஜன் எதை ஆட்டுவார், சீய் நினைத்துப் பார்த்தால் அசிங்கமாய் இருக்கு.//

நான் ஆட்டும்போது வாயத் தொரந்துடாதீங்க பித்தன்ஸ் ! தொண்டில போயி அடைச்சுக்கும் !

Rajan said...

//இராஜன் அவர் அந்த வார்த்தைக்குத்தான் அர்த்தம் கேக்கின்றார்,உங்களின் சுய விமர்சனத்தை அல்ல. //

அப்பிடியா ? சரிங்க சார்

Rajan said...

//சாக் ஆனா பரவாயில்லை மாமு, சோக் ஆனாத்தான் அடைப்பு எடுப்பது கஷ்டம்.//


நெறையா தடவ உங்களுக்கு அடச்சிருக்கும் போல !

Rajan said...

//இதை விட்டு நாம் சாதி, சாக்கடை, அய்யிரு,தயிரு,மோரு என்று எல்லாம் கும்மி அடிப்பது வீண்.//

சொல்லியாச்சா ! கெளம்புங்க டீ ஆறிடப் போவுது

Unknown said...

//கேள்வி மிக மொக்கையாக இருப்பதால் மேலும் விவாதிக்க ஒன்றுமில்லை எனக் கருதி காறித் துப்பப் படுகிறது
//

அது சரி,சைக்கிள் கடை ராஜன்,கும்மி,ஏழரை போன்ற பொறிக்கிப் பசங்க கேட்கிற கேள்விகள் தான் யுனைடெட் நேஷன்ஸ்ல கேட்கப்படுகிற கேள்விகள் போல உலகத் தரம் வாய்ந்ததா இருக்கும்.அடேங்கப்பா.என்ன பணிவு என்ன பண்பு.

Rajan said...

//'அது சரி,சைக்கிள் கடை ராஜன்,கும்மி,ஏழரை போன்ற பொறிக்கிப் பசங்க கேட்கிற கேள்விகள் தான் யுனைடெட் நேஷன்ஸ்ல கேட்கப்படுகிற கேள்விகள் போல உலகத் தரம் வாய்ந்ததா இருக்கும்.அடேங்கப்பா.என்ன பணிவு என்ன பண்பு.//

போங்க மாமா என்ன ரொம்ப புகழ்றீங்க

Rajan said...

அன்னாத்தொரை அன்னாதொரை நீங்க பல்லாண்டு வாழனும் அண்ணாத்தொர !

கோயில் கொளம் கண்டதில்ல இப்படி ஓர் சாமி

புண்ணியந்தான் செஞ்சிருக்கு பெங்களூரு பூமி

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...
This comment has been removed by the author.
முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

Blogger பட்டாபட்டி.. said...

@annadurai said...
//யுனைடெட் நேஷன்ஸ்ல கேட்கப்படுகிற கேள்விகள் போல உலகத் தரம் வாய்ந்ததா இருக்கும்.
//

அட.. வெளி நாட்டுக்காரனுகளோட கொம்பு/சொம்பு தூக்கியா நீ..சர்தான்

Unknown said...

//அன்னாத்தொரை அன்னாதொரை நீங்க பல்லாண்டு வாழனும் அண்ணாத்தொர !

கோயில் கொளம் கண்டதில்ல இப்படி ஓர் சாமி

புண்ணியந்தான் செஞ்சிருக்கு பெங்களூரு பூமி//

என்ன ராஜன்,முந்திரி கொட்டை மாதிரி கவிதையெல்லாம் எடுத்து விடறீங்க.உங்க சியர் லீடர் சின்ன தாடி அம்மா வரவில்லையே.அதுக்குள்ள எதுக்கு "கும்மா கும்மா கும்மாடி" கவிதையெல்லாம்?அந்த அரை டிக்கட் அம்மா இருந்தாலாவது கை தட்டி கோவிந்தா போடுவாங்க,உங்களுக்கு உற்சாகமா இருக்கும்.இப்ப பாருங்க உங்க கவிதையை கேட்டவுடன் முண்டம் பட்டா பட்டி தான் குரங்கு போல் தாவி வந்திருக்கிறது.கொடுமைடா சாமி.

Rajan said...

@ அண்ணாத் தொரை

சேலத்துல முக்கியப் பிரமுகர் கைதாமே ! அப்பிடியா

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

//கொடுமைடா சாமி.//

அத மட்டும் விட்டுடாதே..ஆமா .. ராசி பலனுக்கு , மெயில் அனுப்பச்சொன்னேனே..I am waiting..ராசா..

annadurai@pai.murugappa.com
annaduraic1969@gmail.com

Dr.Rudhran said...

எனக்கும் பதில் வரவில்லை!
இருந்தால்தானே? மறைவிலிருந்து வர கொஞ்சம் மானமும் ரோஷமும் தைரியமும் இருந்தால்தானே?
ஓ! இது தான் பார்ப்பனீயம் என்பதை சற்றே மறந்து சக மனிதனாய் நினைத்து விட்டேன்!!

periyar said...

ஆ பெரிய தாடிய திராவிடீய வில்லன் துள்ளி எழுந்து வந்து விட்டது.இனி என்ன ஆகப்போவுதோ?

«Oldest ‹Older   1 – 200 of 243   Newer› Newest»

!

Blog Widget by LinkWithin