குடும்ப படம்! (family photo)




படத்தை பார்க்க இன்னும் கீழே போங்க நண்பர்களே
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|







சிரிக்க மட்டுமே!
சிந்திப்பது உங்கள் இஷ்டம்!



109 வாங்கிகட்டி கொண்டது:

அகநாழிகை said...

வால்பையன், இது ஏற்கனவே பார்த்ததுதான். இருந்தாலும் ஏற்கனவே சிரித்ததை நினைவூட்டியதற்கு நன்றி.

சந்தனமுல்லை said...

:-)))

அன்புடன் அருணா said...

hahahahaha LOL!!!!
anbudan aruna

சின்னப் பையன் said...

ம்ம்ம்..

Anonymous said...

sinthikka vendiya visayam

//anbudan aruna//

avasarathula 'absurd' aurna-nu padichen :) he he

Anonymous said...

நகைச்சுவை என்றாலும், எனக்கு இதில் வருத்தமே. தவிர்த்திருக்கலாம்.

தருமி said...

நான் இந்தப் படம் மட்டும்தான் பார்த்திருக்கிறேன். மேலே உள்ள 'நோட்' எங்க இருந்து கிடச்சுது?

நல்லா 'படம் காமிக்கிறீங்க'!

kuma36 said...

///சிரிக்க மட்டுமே!///

அப்பாடா ஒரு வேளை குறைந்தது
ஹி ஹி ஹி

வினோத் கெளதம் said...

Vaals

Intha Photo Munadiye paathu iruken..

Anonymous said...

அட சூப்பருங்க! எல்லாருமே நல்லா இருக்காங்களே! ஆனா இப்படி இணையத்துல தைரியமா பதிக்கறது பெரிய விஷயம்ங்க! :)

Anonymous said...

sithikaratha appadinnaa.

உண்மைத்தமிழன் said...

வாலு..

நினைச்சேன் ஏதாவது வில்லங்கமா இருக்கும்னு..

ஆனா இம்புட்டு இருக்கும்னு நினைக்கலை..

ஏதாவது வசவு வந்தா சொல்லியனுப்புங்க.. அப்பால வர்றேன்..!

A Blog for Edutainment said...


அன்பு படைப்புலகம் வழங்கிய ‘மறைபொருள்’ குறும்படம் உங்கள் பதிவை நினைவூட்டுகிறது.


பகிர்ந்தமைக்கு நன்றி
by
A Blog for Edutainment

தேவன் மாயம் said...

இருந்தாலும் சங்கடமா இருக்கே!!

Prabhu said...

என்னதான் சொல்லுங்க, எங்க தல,தல தான்!

S.sampath kumar said...

:-)

ரவி said...

நல்லா இருக்கு கனேஷ்....ஆனா இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்திடப்போவுது ? டிஸ்கி போடுங்க,...

SK said...

இதுக்கு யாரு வந்து என்ன சொல்றா பாக்கலாம்.குசும்பன் இதையே போட்டு ஒரு தடவை யாரோ ஏதோ சொன்னதா நினைவு இருக்கு :)

kishore said...

உக்காரும் போது கிளிஞ்சிடாது?

Suresh said...

:-) மச்சி சூப்பர்

Arun Kumar said...

:)
ஏற்கனவே பார்த்த படம் தான்..புதுசா header சேர்த்து இருக்கீங்க ..

நல்லா இருக்கு :)

ராம்.CM said...

நல்லாயிருந்தது...சிரிக்க வைத்தது...

Venkatesh subramanian said...

நல்லா இருக்கு கனேஷ்....ஆனா இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்திடப்போவுது ?
-- ஆமோத்திக்கிறேன்

Jackiesekar said...

ஹா ஹா ஹாஹ ஹா ஹா ஹாஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹாஹாஹா ஹா ஹா

ஆ.ஞானசேகரன் said...

வேண்டாமோ.... என்றுதான் தோன்றுகின்றது...

கிரி said...

இந்த படத்தை ஏற்கனவே பார்த்து இருக்கிறேன் ..இதனோட இன்னொரு வெர்ஷனும் கூட வந்துள்ள்ளது.

Anonymous said...

கிகிகிகி

மேவி... said...

பெண்கள் மீது உள்ள அடக்கு முறையை காட்டுகிறது இந்த புகைப்படம் .......
மதத்தின் கோட்பாடுகளால் அவர்கள் சுயத்தை இழந்து கொண்டு இருக்கிறார்கள் ......
அது எந்த மதம்யாக இருந்தாலும் பெண்களுக்கு தன்னம்பிக்கை உட்ட வேண்டுமே தவிர சுயத்தை பறிக்க கூடாது..........

RAMYA said...

நடகட்டும் நடகட்டும்
ம்ம்ம்..........................

அ.மு.செய்யது said...

புகைப்பட பதிவு போட்டு ரொம்ப நாளாச்சில்ல..


குட் ஒன் !!!

அ.மு.செய்யது said...

//thevanmayam said...
இருந்தாலும் சங்கடமா இருக்கே!!
//

ஏங்க..

நட்புடன் ஜமால் said...

இந்த படம் இங்கு வந்து இருக்கு

பாருங்க

நன்றி நண்பரே இப்படி ஒரு படம் போட்டதற்கு

இங்கு கருத்து சொன்ன பலரை விளங்க உதவுகிறது.

மீண்டும் நன்றி

மேலே உள்ள சுட்டியில் பாருங்கள்.

Rajeswari said...

ஹ ஹா ஹா

கல்வி அபிவிருத்தி ஒன்றியம் said...

ஹா ஹா ஹாஹ
ஹா ஹா ஹாஹா
ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா
ஹாஹாஹா ஹா

தாங்க முடியல்லடா சாமி.....

ஈஸ்வரன் said...

//நல்லா இருக்கு கனேஷ்....ஆனா இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்திடப்போவுது ? டிஸ்கி போடுங்க,...//

இதில் மனம் புண்பட என்ன இருக்கிறது? படம் எடுப்பவரின் அப்பாவித்தனம் யாருக்குமே புன்னகையை வரவழைக்கும் இஸ்லாமியர்கள் உட்பட. கிண்டல் நட்பின் அடையாளம். சர்தார்களுடன் நட்பு பாராட்டுபவர்களே சர்தார் ஜோக் சொல்பவர்களாகவும் இருப்பார்கள். அந்த புரிதலினல்தான் சர்தார்களும் அதை ரசிக்கிறார்கள்.

Anonymous said...

உங்க நள்ள மனசு தான், அது மாதிரி தொந்தரவு இள்ளாமல் இருக்கக் காரணம் . ( மருபடியும் போழி சீசன் ஆரம்பிச்சிடுச்சாமே!! என்ன கொடுமை வால் இது ?//

எங்கடா காணொமேன்னு தேடிக்கிட்டு இருந்தேன். காரணம் என் பதிவை விட உங்கள் பின்னூட்டத்தையே மக்கள் அதிகம் ரசிக்கிறார்களாம்//

தள! என்ன தள! பொசுக்குன்னு பொட்டிய இறக்கி எம்மேள வச்சுட்ட , எனக்கு தமிலை படிக்க எலுத மட்டும் தான் தெறியும் , உன்னையாட்டும் நகைச்சுவையா எலுத எனக்கு வறுமா தள! ரொம்பத் தன்னடக்கம் வேணாம் ஆமா சொள்ளிட்டேன். ( Sorry for the re-telecast)

மின்னல்ப்ரியன் said...

ஹா...ஹா ....ஹா ...ஹா
அட மெய்யாலுமே சிரிச்சுட்டன் தல...

g said...

இதுமாதிரி ஒரு புகைப்படம் தேவையே இல்லையே நண்பா! அல்லாரும் ஒரேமாதிரி இருக்காய்ங்க...?

நல்லதந்தி said...

//நகைச்சுவை என்றாலும், எனக்கு இதில் வருத்தமே. தவிர்த்திருக்கலாம்.//
//இருந்தாலும் சங்கடமா இருக்கே!!//
//நல்லா இருக்கு கனேஷ்....ஆனா இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்திடப்போவுது ? டிஸ்கி போடுங்க,...//
//இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்திடப்போவுது ?
-- ஆமோத்திக்கிறேன்//
//வேண்டாமோ.... என்றுதான் தோன்றுகின்றது.//
//இதுமாதிரி ஒரு புகைப்படம் தேவையே இல்லையே நண்பா! அல்லாரும் ஒரேமாதிரி இருக்காய்ங்க...//

?????????????????????????

Anonymous said...

// செந்தழல் ரவி said...
நல்லா இருக்கு கனேஷ்....ஆனா இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்திடப்போவுது ? டிஸ்கி போடுங்க,...//
என்ன விளையாட்டு இது ... இது போல அவர்களைத் தொட்டால் சிணுங்கியாக , நகைசுவை உன்ர்வேஇல்லாதா ஜடமாக நினைப்பவர்களுக்கு வேண்டுமானால் ஒரு டிஸ்கி போடலாம். இங்கே மதத்திற்கு என்ன வேலை. இது போல் பொய்யான பரிவு காட்டும் மனிதர்களை என்ன செய்ய ............
Chandra Sekaran.

தாரணி பிரியா said...

:)

வியா (Viyaa) said...

:)

சிம்பா said...

எந்த தேதில படத்தை போட்டு சிந்தனை செய் மனமே என்று சொல்றீங்க...

சிரிக்க மட்டுமே முடிந்தது என்னால்.... ;)

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

எனக்கும் இந்த மின்னஞ்சல் வந்தது.
நீங்க சொல்றது நகைச்சுவைக்காக மட்டும் வச்சுக்கலாம்!
இதனால் யாருடைய மனசும் புண் பட்டுவிடக் கூடாது என்பது முக்கியம்.
நான் கூட என்னுடைய வேலையின் போது பெரும்பாலும் இதே தோற்றத்தில் தான் இருக்கிறேன். என்னுடைய சக ஊழிய நண்பர்களை எளிதாக அடையாளம் கண்டுகொள்ள இயலுமே. அவர்களுடைய நடை, பாவனைகள் நமக்குத் பழகியதுதானே!?

வால்பையன் said...

இதை நான் பதிவிட முக்கிய காரணம்
பதிவிட்ட அன்று ஏப்ரல் ஒன்னு!
எனது குடும்ப படத்தை நம்பி வருபவர்களை ஏமாற்ற நகைச்சுவையுடன் திருப்பி அனுப்ப எண்ணினேன்.

இதை நகைச்சுவையாக எடுத்து கொண்ட நண்பர்களுக்கும், இதை வைத்து அரசியல் செய்ய நினைத்த அன்பர்களுக்கும் எனது நன்றிகள்!

வால்பையன் said...

நன்றி அகநாழிகை

நன்றி சந்தனமுல்லை

நன்றி அன்புடன் அருணா

நன்றி ச்சின்னபையன்
அடுத்து உங்களுக்கு ம்ம்ம் தான்

நன்றி அனானி

நன்றி வடகரைவேலன்
ஏன் வருத்தம்

நன்றி தருமி
எல்லாம் மெயிலில் வந்தது தான்

நன்றி கலை-இராகலை

நன்றி வினோத் கெளதம்

நன்றி ஷி-நிசி

நன்றி அனானி
அப்படினா அரசியல் பண்றது

நன்றி உண்மைதமிழன்
வசவெல்லாம் பிரபலங்களுக்கு தான் வரும்

நன்றி A Blog for Edutainment

வால்பையன் said...

நன்றி தேவன்மயம்

நன்றி கணிணிதேசம்

நன்றி பப்பு

நன்றி சம்பத்குமார்

வால்பையன் said...

//செந்தழல் ரவி said...

நல்லா இருக்கு கனேஷ்...//

ஹா ஹா ஹா
ஜோக் அடிக்குறதா நினைப்பா!

உங்க பதிவிலேயே கணேஷ் சொல்லியிருக்கார் நீங்க தான் அவரோட குருன்னு அப்பவே தெரிஞ்சிக்க வேணாமா அது நானில்லைன்னு!

ஒருவேளை எனக்கு சொல்லி தர்ற அளவுக்கு உங்களுக்கு அறிவு இருக்குறதா நினைச்சிகிட்டா அதுக்கு நான் என்ன செய்ய முடியும்.

இவ்வளவு தான் உங்க டெக்னிக்கல் அறிவா! பத்தாது!

//இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்திடப்போவுது ?//

ஏன் புண்படுது! நான் என்னை உறிச்சா காட்டியிருக்கேன்!
சர்தார்ஜி ஜோக் போடும் போது சர்தார்ஜிக்களுக்கு புண்படாதா?
இந்து மதத்தை நார் நாராக கிழிக்கும் போது அவர்களுது மனம் புண்படாதா!
அங்கெயெல்லாம் ஒன்னும் சொல்ல காணோம். இங்க மட்டும்

உங்க பெயர் செந்தழல் ரவியா
செந்தழல் ரஃபிக்கா

எதா இருந்தாலும் உண்மைய சொல்லலாமே யார் என்ன சொல்ல போறா!

வால்பையன் said...

நன்றி எஸ்.கே
எனது இஸ்லாமிய நண்பர்களை பற்றி எனக்கு தெரியும். அவர்கள் பெண்ணடிமையை ஆதரிப்பது இல்லை

நன்றி கிஷோர்
ஹா ஹா

நன்றி சுரேஷ்

நன்றி அருண்குமார்

நன்றி ராம்

நன்றி வெங்கடேஷ்
என்னான்னே தெரியாம எதுக்கு ஆமோதிக்கிறிங்க!

நன்றி ஜாக்கி சேகர்

நன்றி ஞானசேகரன்
இல்லை நண்பரே! நமது நண்பர்கள் அப்படியல்ல

வால்பையன் said...

நன்றி கிரி

நன்றி தூயா

நன்றி MayVee

நன்றி ரம்யா

நன்றி அ.மு.செய்யது
மிக்க நன்றி நண்பரே!
எனக்கு உங்கள் மீதும் ஜமால் மீதும் நம்பிக்கை உண்டு நீங்கள் பெண்ணடிமையை ஆதரிப்பதில்லையென்று

வால்பையன் said...

நன்றி ஜமால்

நன்றி ராஜேஸ்வரி

நன்றி சந்ரு

நன்றி ஈஸ்வரன்
சரியான புரிதல்

நன்றி அனானி
எனக்கு ஆங்கிலம் கற்று தருகிறீர்களா
ஆங்கிலத்திலேயே பின்னூட்டம் போட்டால் நான் ஆங்கிலம் கற்று கொள்வேனாம். ஒகேவா

நன்றி மின்னல்பிரியன்

நன்றி ஜிம்ஷா
அதான் நகைச்சுவையே

வால்பையன் said...

நன்றி நல்லதந்தி
அதே டவுட்டு தான் எனக்கும்

நன்றி தாரணிபிரியா

நன்றி வியா

நன்றி சிம்பா
சிந்திப்பது உங்கள் இஷ்டம்னு சொல்லிட்டேனே

நன்றி ஜோதிபாரதி
புண்பட எதுமில்லை!

Anonymous said...

என்ன வால், இத்தனை பேறுக்கு நண்ரி சொன்ன நீங்கல் எனக்கு ஒரு நன்ரி கூட சொள்ளளையே ! உங்கல் ரசிகன் உங்கலை குறுவாக கொண்டவனுக்கு ஏன் இந்த அநீதி !

-சொள் அலகன்.

Prapa said...

தொடங்கிடீங்களா ! உங்க மொக்க ........

வீணாபோனவன் said...

சூப்பரா இருக்கு அருண்... ஆனால் இந்த பதிவை நீங்கள் தவிர்திருக்கலாம்... இதை அப்படியே copy பண்ணி என் நண்பர்களுக்கு அனுப்ப நினைத்தேன், ஆனால் அனுப்பவில்லை. ஏனேன்றால், என் நண்பர்கள் வட்டாரத்தில் பல நல்ல இஸ்லாமியர்களும் உண்டு. எனக்கு முதன்-முதலில் (1989) கணனி கற்றுத்தந்தவர் கூட ஓர் இஸ்லாமியரே. 20 வருடங்கள் ஆகியும் அவருடன் இன்றும் எனக்கு தொடர்புண்டு.தவிர, உங்களுக்கும் பல நல்ல இஸ்லாமிய நண்பர்கள் உள்ளார்கள் என்று எனக்கு நன்றாகவே தெரியும். உங்களது இந்த Post அவர்களை சிறிதேனும் பாதிக்காதா சகோதரா?. பேசாமல் நீங்க இதை அந்த பொறம்போக்கிகள் explainislam/answerislam/answerforislam? போன்ற நாதாரீ நாய்களுக்கு அனுப்பியிருக்கலாம்...

-வீணாபோனவன்,

Anonymous said...

நகைச்சுவை விளங்காது வீணாப் போனவர்களுக்கு சங்கம் தொடங்க இருக்கிறேன். சேர விருப்பமுள்ளவர்கள் இங்கே தெரிவிக்கலாம் (வால் அனுமதித்தால்) பத்துக்கு மேற்பட்டவர்கள் சேர்ந்தால் உடனே தொடங்கப்படும். எது விளையாட்டு எது வினை என்று விளக்கம் அளிப்பதே இதன் முக்கியப் பணி.

சிரித்து வாழ்பவன்

Indian Muslimah said...

வால்பையன் அவர்களே, இது நிச்சயமாக காமெடி ஆ தான் இருக்கு. மறுக்கவில்லை. எங்கள் மச்சி (மாமி மகள்) எங்கள் வீட்டுக்கு வரும்போது நாங்களும் 'யார் பா இது' என்று கிண்டல் செய்வோம். இதில் தவறொன்றும் இல்லை.

என்ன தான் காமெடிக்காக இந்த பதிவை போட்டாலும், இஸ்லாமிய பெண்களுடைய உடை அடிமைத்தனம் என்ற உங்கள் எண்ணத்தையும் சேர்த்து பதிவு செய்து விட்டீர்கள். அது உங்கள் எண்ணம், நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனாலும் ஒரு public forum என்பதால் என்னுடைய விளக்கத்தை கொடுக்க வேண்டியது கட்டயாமாக நினைக்கிறேன்.

நானும் ஒரு ஹிஜாப் அணியும் இஸ்லாமிய பெண் தான். நான் சென்னையில் உள்ள மிகவும் பிரபலமான மகளிர் கல்லூரியின் சிறந்த மாணவியாக ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டேன். பல பரிசுகளையும், கேடயங்களையும் வாங்கி உள்ளேன். பிறகு தமிழ் நாட்டின் மிகச்சிறந்த MBA institute இல் படித்துள்ளேன். CA நிகரான ICWA வும் படித்துள்ளேன். இப்போது ஒரு நிறுவனத்தில் நல்ல சம்பளத்தோடு analyst aaga வேலையும் பார்கிறேன்.

இத்தனை தூரம் எந்த விதமான கஷ்டங்களும் இல்லாமல் என்னை கொண்டு வந்ததுக்கு என் ஹிஜாப் ஒரு முக்கிய காரணம். நான் தெருவில் நடந்து செல்லும்போது என்னை பார்த்து யாரும் கமெண்ட் அடிக்கவில்லை. மாறாக வழி விட்டே நடந்தார்கள். என் வகுப்பிலும் என் அலுவலகத்திலும் வேலை பார்க்கும் ஆண்களில் பலர் என்னை அவர்களுடைய சொந்த சகோதரியை போலே பாவிக்கின்றனர். நிச்சயமாக என்னுடைய ஹிஜாப் நான் வாழ்வில் சாதிப்பதற்கு உறுதுணையாகத்தான் இருந்திருக்கிறதே ஒழிய ஒருக்காலமும் உங்களை போன்றவர்கள் கூறுவது போல் என்னை அடிமைபடுதவில்லை. எங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் மாற்று மத சகோதரர் ஒருவர் கூறினர் "உங்களை போன்றே எல்லா பெண்களையும் உடை அணிய செய்ய வேண்டும்". நான் சந்தித்த ஒரு மாற்று மத பெண் மருத்துவர் கூறினார் "நிச்சயமாக நானும் உங்களை போன்று உடை அணியலாமா என்று யோசித்து கொண்டிருக்கிறேன்"

இன்னும் melai நாடுகளில் இஸ்லாத்தை தழுவுபவர்களில் பலர் பெண்கள். அதற்கு முக்கிய காரணம் எங்கள் ஹிஜாப். please watch:

http://www.youtube.com/watch?v=25-o9OYrrVU&feature=ரேலடேது

இஸ்லாம் ஆண்களையும் பெண்களையும் தங்கள் பார்வைகளை தாழ்த்திக்கொள்ள உத்தரவிடுகிறது. ஒரு மனிதனின் கண்ணியத்தை காக்க கூடிய விஷயம் உங்களை போன்றவர்களின் கண்களில் அடிமைத்தனமாக தெரிகிறது போல.

Quran 24:30
"(நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன். "

மாறாக, பெண்கள் அளவிர்க்குறைவான உடை அணிந்து ஒரு commodity ஆக தங்களை தாமே தரம் தாழ்த்திக்கொள்வது தான் உங்கள் பார்வையில் பெண் விடுதலை போலும்.

மேலும் பிறர் இந்து மதத்தை இழிவாக பேசுகிறார்கள், அது போல் இஸ்லாத்தையும் பேசுவேன் என்பது போல் உள்ளது உங்களின் பல பதிவுகள்.

சுழியம் said...

//பலர் என்னை அவர்களுடைய சொந்த சகோதரியை போலே பாவிக்கின்றனர். நிச்சயமாக என்னுடைய ஹிஜாப் நான் வாழ்வில் சாதிப்பதற்கு உறுதுணையாகத்தான் இருந்திருக்கிறதே ஒழிய ஒருக்காலமும் உங்களை போன்றவர்கள் கூறுவது போல் என்னை அடிமைபடுதவில்லை. //

நாளைக்கே இந்த கமெண்டைப் போட்ட சகோதரி வேறு ஒரு உடையை உடுத்திக்கொண்டு தெருவில் போனாலும், அது உடலை முற்றிலுமாக மறைக்கும்படி இருந்தாலும், அவர் கேலிக்குள்ளாவார்.

ஆனால், ஜிஹாப் போட்டால் அவரை யாரும் கேலி செய்யமாட்டார்கள்.

ஜிஹாப் அணிபவர்களைத் தவிர மற்ற பெண்களைக் கேவலப்படுத்தலாம் என்கிற நிலையைத்தான் இது காட்டுகிறது.

அதாவது, ஒரு குறிப்பிட்ட உடையை அணிபவர்களைத் தவிர மற்றவர்களை என்ன வேண்டுமானாலும் கேலி செய்யலாம். கேட்க நாதி இல்லை.

இந்த நாதியற்ற நிலைக்குப் பெயர் பெண்ணடிமைத்தனம்.

Anonymous said...

\\நாளைக்கே இந்த கமெண்டைப் போட்ட சகோதரி வேறு ஒரு உடையை உடுத்திக்கொண்டு தெருவில் போனாலும், அது உடலை முற்றிலுமாக மறைக்கும்படி இருந்தாலும், அவர் கேலிக்குள்ளாவார்\\

ஐயா/அம்மா நான் இருப்பது தமிழ் நாட்டில். இந்த படத்தில் உள்ளதை போல் இல்லாமல், சேலையோ, சல்வாரோ, என்னை முழுவதுமாக மறைப்பதாக இருந்தால் என்னை யார் கேலி செய்ய போகிறார்கள். என்னுடன் படித்த பல மாற்று மத தோழிகள் தங்கள் தலைகளை தவிர்த்து முற்றிலும் மறைக்கும் ஆடைகளையே உடுத்துகின்றனர். எங்களுக்கு தெரியும் எங்கள் கண்ணியத்தை காப்பற்றக்கூடியது எது என்று.

எந்த உடையாக இருந்தாலும் அது தளர்வானதாகவும், கண்ணாடி போல் இல்லாமலும், ஆண்களை ஈர்க்கும் வண்ணம் இல்லாமல் இருந்தால் அதுவே ஹிஜாப் ஆகும்.

தயவு செய்து கூறாத ஒன்றினை பார்த்து நீங்களே எதாவது கற்பனை செய்து கொள்ளாதீர்கள்.

Indian Muslimah said...

\\அதாவது, ஒரு குறிப்பிட்ட உடையை அணிபவர்களைத் தவிர மற்றவர்களை என்ன வேண்டுமானாலும் கேலி செய்யலாம். கேட்க நாதி இல்லை\\

இப்படி நான் சொல்லவே இல்லையே. நான் கண்ணியத்துடன் நடந்தால் பிறரும் என்னை கண்ணியத்தோடு நடத்துவார்கள். இதை தான் நான் கூறினேன். நமது நாட்டில், அதுவும் குறிப்பாக தமிழ் நாட்டில் பெண்கள் யாவரும் தங்களை முழுவதுமாக மறைக்கும் உடையையே அணிகின்றனர். நாங்கள் தலையையும் சேர்த்து மூடிக்கொள்கிறோம். அவ்வளவு தான்.

எப்படி தான் சொல்லாத ஒரு விஷயத்துக்காக சண்ட மூட்டி விடுரின்களோ தெரியல.

சுழியம் said...

//எந்த உடையாக இருந்தாலும் அது தளர்வானதாகவும், கண்ணாடி போல் இல்லாமலும், ஆண்களை ஈர்க்கும் வண்ணம் இல்லாமல் இருந்தால் அதுவே ஹிஜாப் ஆகும். //

//நான் கண்ணியத்துடன் நடந்தால் பிறரும் என்னை கண்ணியத்தோடு நடத்துவார்கள். இதை தான் நான் கூறினேன்.//


அம்மா,

கண்ணியம் என்பதன் வரையறை என்ன? அதை யார் வரையறுக்கிறார்கள்? அத்தகைய வரையறை இதுவரை எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது?

முதலில் தளர்வான, உடலை வெளியில் காட்டாத உடை எதுவாயினும் சரி என்றுதான் ஆரம்பிக்கும். அதன் பின்னர், கண்ணிற்குக்கூட வலைபோட்டுக்கொள்ளவேண்டும் என்று இது அதிகரித்துக்கொண்டே போகும். ஏனெனில், இது ஒரு மனோவியாதி.

இயற்கையைப் புரிந்துகொள்ளாமல் நடக்கும் எதுவும் மனோவியாதிதான்.

பிரச்சினை நமது உடையில் இல்லை. பெண்களை போகப் பொருளாக நினைப்பதும், இயற்கை உணர்ச்சியான காமத்தை முட்டாள்தனமான கட்டுப்பாடுகளால் இல்லாததுபோலக் காட்டிவிடலாம் அல்லது கட்டுப்படுத்திவிடலாம் என்று நினைத்துக் கொள்வதாலும்தான் பிரச்சினை வருகிறது.

மனித மனமானது மறைக்கப்படுகிற பொருளின்மேல் அதிக ஆர்வம் கொள்ளும். அறியத் துடிக்கும். வெளிப்பட்ட, தெரிந்த பொருளின்மேல் ஆர்வம் காட்டாது.

ஆகவே நடைமுறையில் பெண்மையின் கவர்ச்சியை ஜிஹாப் அதிகரிக்கிறது. உண்மையில் ஜிஹாப் அணிந்த பெண்களின் கவர்ச்சியை ஆண்கள் ரசிக்கத் தவறுவதில்லை. Fetishகளில் பர்தா, ஜிஹாப் அணிகிற fetishகள் எண்ணிக்கையில் அதிகம். மனோதத்துவத் துறையில் பல்லாண்டு அனுபவம் உள்ளவர்கள் ஒத்துக்கொள்ளுகிற உண்மை இது.

எனவே, ஜிஹாப் என்பது மனவக்கிரத்தை அதிகரிக்குமே தவிர குறைக்காது. ஒரு பெண் எழுதுவதுபோல எழுதும் ஆண்கள்கூட இத்தகைய மனவக்கிரத்தின் அடையாளங்கள்.

மாறாக, வெளிநாடுகளில் உடல் தெரிய ஆடை அணிவதால் பெண்களுக்கு எந்த இழிவும் ஏற்பட்டுவிடுவதில்லை. பெண்களுக்கு எதிரான கொடுமைகள் மேற்கு நாடுகளைவிட இஸ்லாமிய நாடுகளில் அதிகமாக இருக்கின்றன.

இந்தியாவில் இருந்து வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு, ஜிஹாப்பைக் கட்டாயமாக்கியுள்ள அரபு நாடுகளில் பாதுகாப்பு இல்லை. அதனால் அரபு நாடுகளுக்கு பெண்கள் வேலை செய்யப்போவதில் பல கட்டுப்பாடுகளை இந்திய அரசாங்கம் விதித்துள்ளது.

http://www.arabtimesonline.com/client/faqdetails.asp?faid=214&faqid=1

http://www.rediff.com/news/2004/oct/02iype.htm

http://news.indiainfo.com/2000/07/26/gulf.html

நாம் எந்த விஷயங்களோடு காமத்தைத் தொடர்புபடுத்துகிறோமோ, அந்த விஷயங்கள் காமத்தைத் தூண்டும் சக்தியைப் பெறுகின்றன. ஜிஹாப், பர்தா போன்ற பழக்கங்கள் பெண்களின் உடல் உறுப்புகள் காமத்தைத் தூண்டும் பணியை மட்டுமே செய்கின்றன என்ற எண்ணப் பதிவை விதைக்கின்றன. எனவே, ஜிஹாப் கலாச்சாரத்தில் வளர்ந்த ஒரு ஆணுக்கு, பெண்களின் கை கால் விரல்கள்கூட காமத்தைத் தூண்டுகின்றன. கையுறை போட்டு விரல்களை மறைக்க அவர் தன் வீட்டுப் பெண்ணை வற்புறுத்துவார்.

மாறாக, பல்வேறு கலாச்சாரங்களில் நிர்வாணம் தூய்மையான புனித உணர்வுகளின் அடையாளமாக மதிக்கப்படுகிறது. காமத்தோடு முற்றிலும் தொடர்பு அற்றதாக நிர்வாணம் கருதப்படுகிறது.

பழகிப்போனால் நிர்வாணம்கூட எந்தக் காமத்தையும் ஏற்படுத்துவதில்லை. நிர்வாண சங்கங்களைச் சேர்ந்தவர்களுக்கு அங்குள்ளவர்களின் நிர்வாணம் காமத்தைத் தூண்டுவதில்லை. ஆடை அணிந்த மனிதர்களே அவர்களிடம் காமத்தைத் தூண்டுகின்றனர்.

ஜிஹாப் அணிந்த பெண்ணை, இந்திய ஆண்கள் கேலி செய்யாமல் இருப்பதற்குக் காரணம் பயம் மட்டுமே.

7ம் நூற்றாண்டில் இருந்து ஜிஹாபும் தொடருகிறது. கசையடிகளும், கல்லடிகளும் தொடருகின்றன. ஜிஹாப் கலாச்சாரத்தோடு, கசையடி-கல்லடி கலாச்சாரங்களும் இந்தியாவிற்கு இறக்குமதியாகின்றன.

சகோதரி, அதை நீங்கள் வரவேற்பது சொந்தச் செலவில் சூனியம் வைத்துக்கொள்ளும் செயல். முடிவற்ற வேதனையைத் தொடருகிறீர்கள்.

நடைமுறை உண்மைகளோடு ஒப்பிட்டு நமது நம்பிக்கைகளின் நம்பகத்தன்மையைப் புரிந்துகொள்ளுங்கள்.

ஆணும் பெண்ணும் எங்கனம் அடுத்தவர் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்துப் பழக வேண்டும், அவர்களுடைய வேறுபட்ட அணுகுமுறைகள், சமூகத்திலும்-குடும்பத்திலும் அவர்களுக்குள்ள கடமைகள், முறையற்ற காமத்தால் எழும் பிரச்சினைகள், காமமானது உளவியல் ரீதியாக ஏற்படுத்தும் பாதிப்புகள் போன்றவற்றைத் தெளிவாகச் சொல்லிக் கொடுப்பதுதான் நிரந்தர தீர்வு தரும்.

மனிதர்களுக்குப் புத்தி இருக்கிறது. மதப் புத்தகங்களுக்கு அது இல்லை.

Indian Muslimah said...

கண்ணியம் என்பது இறைவனால் ஏற்படுத்தப்பட்டது. இதன் தொடக்கமும் முடிவும் அது தான்.

\\முதலில் தளர்வான, உடலை வெளியில் காட்டாத உடை எதுவாயினும் சரி என்றுதான் ஆரம்பிக்கும். அதன் பின்னர், கண்ணிற்குக்கூட வலைபோட்டுக்கொள்ளவேண்டும் என்று இது அதிகரித்துக்கொண்டே போகும். ஏனெனில், இது ஒரு மனோவியாதி\\

அடடா. என்ன ஒரு கண்டுபிடிப்பு. இது எது வரை சென்றது ஐயா? 1400 ஆண்டுகளாக இந்த கட்டளை ஒன்றும் மாறவில்லையே.

\\பிரச்சினை நமது உடையில் இல்லை. பெண்களை போகப் பொருளாக நினைப்பதும், இயற்கை உணர்ச்சியான காமத்தை முட்டாள்தனமான கட்டுப்பாடுகளால் இல்லாததுபோலக் காட்டிவிடலாம் அல்லது கட்டுப்படுத்திவிடலாம் என்று நினைத்துக் கொள்வதாலும்தான் பிரச்சினை வருகிறது.\\

இந்த நினைப்பு எதனை நூற்றாண்டுகள் கடந்தாலும் மாறவே மாறது. ஒரு ஆண் ஒரு பெண்ணை போகப்பொருளாக பார்ப்பதும் பார்கததும் அவள் அணியும் உடையிலும் அவளுடைய நடதையிலுமே இருக்கின்றது. இதோ இதே வலையுலகத்தில் கொஞ்சம் உலவி வாருங்கள், தெரியும். உடை குறைப்பு விஷயத்தில் புரட்சி செய்து கொண்டிருக்கும் நடிகைகளுக்கு கிடைக்கும் கவனமும் சேவையின் மூலம் அன்னை தெரசாவிற்கு கிடைக்கும் கவனமும் ஒன்றா? இஸ்லாமிய பெண்கள் தலையையும் சேர்த்து மூடிக்கொள்கிறோம், அது தவிர கிறீஸ்தவ கன்னியாஸ்திரிகளும், மற்ற இந்து மதத்தை சேர்ந்த பெண்களுமே உடை விஷயத்தில் கவனமாக தான் இருக்கிறார்கள். எந்த ஒரு பண்பட்ட கலாச்சாரத்தை உடையவர்களும் இதை ஏற்றுக்கொள்வார்கள்.

\\ஆகவே நடைமுறையில் பெண்மையின் கவர்ச்சியை ஜிஹாப் அதிகரிக்கிறது\\

அப்படியா? மிகவும் விநோதமாக உள்ளது சுழியம் அவர்களே. மினி ஸ்கிர்ட் அணிந்த பெண்ணும் சல்வார் அணிந்த பெண்ணும் தெருவில் போகும்போது யாரை பார்த்து ஆண்கள் விசில் அடிப்பார்கள் என்று நான் கூறுவதற்கில்லை.

\\மாறாக, வெளிநாடுகளில் உடல் தெரிய ஆடை அணிவதால் பெண்களுக்கு எந்த இழிவும் ஏற்பட்டுவிடுவதில்லை\\

அப்படியா? நான் கொடுத்த youtube லிங்க் ஐ பார்த்தீர்களா? இன்னமும் இஸ்லாம் அதி வேகமாக பரவி வரும் மேலை நாடுகளில் இதை தழுவுபவர்கள் பெண்களே. ஒரு பெண் தான் கவர்ச்சியாக தோன்ற வேண்டும் என்பதற்காக எவ்வளவு மன உளைச்சலுக்கு உண்டாகிறாள் என்பது உங்களுக்கு தெரியுமா?
http://www.mscd.edu/~psychjrn/Vol.1.Issue1/Vol1.Issue1.Hamilton.pdf

\\இந்தியாவில் இருந்து வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு, ஜிஹாப்பைக் கட்டாயமாக்கியுள்ள அரபு நாடுகளில் பாதுகாப்பு இல்லை. அதனால் அரபு நாடுகளுக்கு பெண்கள் வேலை செய்யப்போவதில் பல கட்டுப்பாடுகளை இந்திய அரசாங்கம் விதித்துள்ளது. \\

சவுதி அரேபியாவில் மட்டும் தான் ஹிஜாப் என்பது கட்டாயமாகும். துபாய் போன்ற மற்ற நாடுகளில் அல்ல. மேலும் வக்கிரம் பிடித்த எண்ணம் கொண்ட ஆண்களும் பெண்களும் எல்லா நாடுகளிலும் எல்லா மதத்திலும் உள்ளனர். ஹிஜாப் கட்டயமக்கபட்டதால் தான் அங்கே பாதுகாப்பில்லாத சூழ்நிலை உள்ளத? ஏன் அப்போது அமெரிக்காவில் பெண்கள் மிக சுதந்திரமாக இருக்கிராகள? இந்தியாவில் பெண்கள் ஆசிட் வீசப்படாமல் இருக்கின்றார்கள என்ன?

\\மாறாக, பல்வேறு கலாச்சாரங்களில் நிர்வாணம் தூய்மையான புனித உணர்வுகளின் அடையாளமாக மதிக்கப்படுகிறது. காமத்தோடு முற்றிலும் தொடர்பு அற்றதாக நிர்வாணம் கருதப்படுகிறது.\\

மிருகங்களை போல் நிர்வாணமாக இருப்பதை பொறுத்துக்கொள்ளும் உங்களை போன்றவர்களுக்கு தங்களை முழுவதுமாக மறைத்து கொண்டிருக்கும் பெண்களை கண்டால் மட்டும் ஏனிந்த வெறுப்போ?

\\ஜிஹாப் அணிந்த பெண்ணை, இந்திய ஆண்கள் கேலி செய்யாமல் இருப்பதற்குக் காரணம் பயம் மட்டுமே. \\

திரும்பவும் கூறுகின்றேன், ஹிஜாப் என்பது புர்கா மட்டுமல்ல. மதுரையை சேர்ந்த என்னுடைய மாற்று மத தோழியை கண்டால் கூடத்தான் எல்லோரும் பயப்படுவார்கள். நீங்கள் கூறுவது வெறும் சப்பைக்கட்டு. ஹிஜாப் அணிந்த பெண் தோழியை சக தோழா-தோழியர் விளையாட்டாக கிண்டல் செய்வது உண்டு. இந்த படத்தில் உள்ளது போல. அதேர்க்கெல்லாம் பயந்த இருக்கிறார்கள்?

\\சகோதரி, அதை நீங்கள் வரவேற்பது சொந்தச் செலவில் சூனியம் வைத்துக்கொள்ளும் செயல். முடிவற்ற வேதனையைத் தொடருகிறீர்கள்.\\

உங்களை பார்த்தல் பாவமாக இருக்கிறது. ஹிஜாபின் மூலம் உண்மையான சுதந்திரத்தை அனுபவித்துக்கொண்டிருக்கும் பெண் நான். என் வாழ்வில் இன்னும் பல உயரங்களை தொடுவேன், என் ஹிஜாபின் துணையோடு.

ஆமாம், தன்னை முழுவதுமாக மறைத்துக்கொண்டிருக்கும் ஜெயலலிதாவும் பிரதிபா பாட்டீலும் சொந்த செலவில சூனியம் வைத்துக்கொண்டிருக்கிறார்கள?

\\ஆணும் பெண்ணும் எங்கனம் அடுத்தவர் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்துப் பழக வேண்டும், அவர்களுடைய வேறுபட்ட அணுகுமுறைகள், சமூகத்திலும்-குடும்பத்திலும் அவர்களுக்குள்ள கடமைகள், முறையற்ற காமத்தால் எழும் பிரச்சினைகள், காமமானது உளவியல் ரீதியாக ஏற்படுத்தும் பாதிப்புகள் போன்றவற்றைத் தெளிவாகச் சொல்லிக் கொடுப்பதுதான் நிரந்தர தீர்வு தரும்.\\

இஸ்லாத்தை பற்றி கொஞ்சமேனும் ஆராய்ந்து பார்த்தல் தெரியும் இதற்க்கு இஸ்லாம் ஒன்றும் மாற்றுக்கருத்து கூறவில்லை என்று.

--

சுழியம் said...

இஸ்லாமியப் பெண்ணாகத் தன்னைக் காட்டிக்கொள்பவருக்கு,

//...மினி ஸ்கிர்ட் அணிந்த பெண்ணும் சல்வார் அணிந்த பெண்ணும் தெருவில் போகும்போது யாரை பார்த்து ஆண்கள் விசில் அடிப்பார்கள் ...//

தெரியாது. நான் முத்தவா போலீசாக வேலை பார்த்ததில்லை.

ஒருவர் தனக்கு விருப்பமான முறையில் உடையணிய சுதந்திரம் வேண்டும் என்று எண்ணுகிறேன்.

எனது கருத்தும், உங்களுடைய கருத்தும் இங்கே இருக்கின்றன.

படிப்பவர்கள் முடிவு செய்துகொள்ளட்டும்.

அந்த சுதந்திரத்தையாவது எங்களுக்குத் தாருங்கள்.

நன்றி.

Anonymous said...

//இந்தியாவில் பெண்கள் ஆசிட் வீசப்படாமல் இருக்கின்றார்கள என்ன? //

மேலப்பாளையத்திலும், காஷ்மீரிலும் வீசுகிறார்கள்.

Indian Muslimah said...

\\இஸ்லாமியப் பெண்ணாகத் தன்னைக் காட்டிக்கொள்பவருக்கு,\\

ஆம், நான் இஸ்லாமிய பெண் என்று காட்டிக்கொள்வதில் எனக்கு பெருமையே.

\\எனது கருத்தும், உங்களுடைய கருத்தும் இங்கே இருக்கின்றன.

படிப்பவர்கள் முடிவு செய்துகொள்ளட்டும்.

அந்த சுதந்திரத்தையாவது எங்களுக்குத் தாருங்கள்.

நன்றி.\\

கண்டிப்பாக. உங்கள் சுதந்திரத்தை யார் இங்கே பறித்தார்கள்?

Anonymous said...
//மேலப்பாளையத்திலும், காஷ்மீரிலும் வீசுகிறார்கள்.//

யப்பா!! நாகர்கோயில், சென்னை எல்லாம் உங்கள் கண்ணுக்கு புலப்பட வில்லை போலும். பாவம் நீங்கள்.

Anonymous said...

ஜிஹாப் உடுத்திய பெண்களின் உண்மை நிலையை காணுங்கள்:

http://www.youtube.com/watch?v=eB3Sg6cgU9w

http://www.youtube.com/watch?v=QO9uVBePoe0&feature=related

http://www.youtube.com/watch?v=uTPGwAyEQZ8&feature=related

http://sivacalgary.blogspot.com/2006/08/blog-post_08.html

Indian Muslimah said...

\\ஜிஹாப் உடுத்திய பெண்களின் உண்மை நிலையை காணுங்கள்:\\

அந்த youtube லிங்குகளை பற்றி நான் ஒன்றும் கூறுவதற்கில்லை. அவை அவதூறு பரப்பும் கேவலமான மனித மிருகங்களினால் ஏற்படுத்தப்பட்டவை என்று அனைவருக்குமே தெரியும்


ஹிஜாபை இந்தியாவில் புகழ் பெற்ற பெண் எழுத்தாளர் திரு சகுந்தலா நரசிமனின் அனுபவத்தை பாருங்கள்:

http://www.tribuneindia.com/2008/20080824/spectrum/main2.htm

இதன் தமிழாக்கம்
, http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=976&Itemid=278

சவூதிக்கு சென்று உண்மையாகவே ஹிஜாப் உடுத்திய பெண்களின் உண்மை நிலையையும் தானும் அதை உடுத்தியதால் அறிந்த மாபெரும் உண்மையும் நீங்கள் இங்கு காணலாம்.

வால்பையன் said...

//என்ன தான் காமெடிக்காக இந்த பதிவை போட்டாலும், இஸ்லாமிய பெண்களுடைய உடை அடிமைத்தனம் என்ற உங்கள் எண்ணத்தையும் சேர்த்து பதிவு செய்து விட்டீர்கள். //

எல்லா விவாதங்களும் ஏற்றுகொள்ளப்படுகிறது!

மேலுள்ள வாக்கியங்கள் என்னை நேரடியாக குற்றம் சாட்டுவதால் என்னுடய பதில் அவசியமாகிறது.

பர்தா போடுவது பெண் அடிமை என்பதெல்லாம் எனக்கு இரண்டாம் பச்சம், நீங்க்ளே விருப்பட்டு போட்டு போது உங்களுக்கு நான் வக்காளத்து வாங்குவது போல் நடிக்க நான் வேலை வெட்டியில்லாமல் இல்லை.
(நண்பர் அதிரை ஃபாருக் வேலையில்லாமல் இருக்கிறார், அவரை கவனியுங்கள் முதலில்)

இந்த படத்தை பாருங்கள், சில மாதங்கள் கழித்து யாருக்காவது இந்த படத்தை காட்டா நேர்ந்தால் என்னவென்று அறிமுகம் செய்வார்கள் நினைக்கும் போதே சிரிப்பு வரவில்லை.

எனக்கு சிரிப்பு வரவழைத்த அதே படம் உங்களுக்கு கோபம் வரவைக்கிறது என்றால் எங்கே தவறு?

அலசுவோம் வாருங்கள்!

வால்பையன் said...

//உங்களை போன்றவர்களின் கண்களில் அடிமைத்தனமாக தெரிகிறது போல. //

அடிமைத்தனம் என்று நான் எங்கேயும் உபயோகபடத்தவில்லை.

அந்த வார்த்தையை அடிக்கடி உபயோகிப்பது நீங்கள் தான்.

சீருடைக்கும் பர்தாவுக்கும் வித்தியாசம் தெரிந்தவன் நான்!

அணிந்தே ஆகவேண்டும் என்பதால் சீருடை அடிமைத்தனம் இல்லை!

வால்பையன் said...

//மேலும் பிறர் இந்து மதத்தை இழிவாக பேசுகிறார்கள், அது போல் இஸ்லாத்தையும் பேசுவேன் என்பது போல் உள்ளது உங்களின் பல பதிவுகள். //

மன்னிக்கவும் இஸ்லாம் மட்டுமல்ல!
உலகிலுள்ள அனைத்து மதங்களையும் பேசுவேன்!
மனிதர்கள் கூண்டோடு செத்து கொண்டிருக்கிறார்கள் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் எல்லா மதமும் எனக்கு முட்டாள் மதங்கள் தான்!

வால்பையன் said...

//ஏனேன்றால், என் நண்பர்கள் வட்டாரத்தில் பல நல்ல இஸ்லாமியர்களும் உண்டு. //

அண்ணே என்ன இப்படி சொல்லி புட்டிங்க!
என்னை சுற்றி நல்ல மனிதர்கள் உண்டு! அதில் நல்ல இஸ்லாமியர்களும் உண்டு!

மதத்தை வம்புக்கு இழுக்க இதை விட ஆயிரத்து எட்டு குறிப்புகள் இருக்கு!
இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்கே!

ஒருவேளை படம் எடுப்பவர் முகம் தெரிந்திருந்தாலும் இதை வெளியிட்டிருக்க மாட்டேன்!

Indian Muslimah said...

\\நீங்க்ளே விருப்பட்டு போட்டு போது உங்களுக்கு நான் வக்காளத்து வாங்குவது போல் நடிக்க நான் வேலை வெட்டியில்லாமல் இல்லை.\\

நீங்கள் வக்காலத்து வாங்க வேண்டும் என்று யார் ஐயா கூறியது?

\\நன்றி அ.மு.செய்யது
மிக்க நன்றி நண்பரே!
எனக்கு உங்கள் மீதும் ஜமால் மீதும் நம்பிக்கை உண்டு நீங்கள் பெண்ணடிமையை ஆதரிப்பதில்லையென்று\\

உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் இந்த கமெண்டை படிக்கும் வரை எனக்கு இங்கே பின்னூட்டமிட வேண்டும் என்று கொஞ்சம் கூட தோன்றவில்லை. நிச்சயமாக நானும் இந்த படத்தை பார்த்து சிரித்தவள் தான். என் தம்பியிடம் கூட காண்பித்து சிரித்துக்கொண்டிருந்தோம். "வாப்பவ வாப்பான்னு சொல்லலாம், ஆனா வாப்பாவ (அப்பா) போப்பான்னு எப்படி சொல்லுவே" "அப்பாவ வாப்பான்ன அம்மாவ வாம்மான்னு கூப்பிடுவிங்களா" என்றெல்லாம் என்னுடன் படித்த தோழர்-தோழியர் என்னை கிண்டல் செய்ததுண்டு. பல நேரங்களில் என்னை அடையலாம் தெரியவில்லை என்று கூட என் தோழிமார்கள் என்னை கிண்டல் செய்வார்கள். இதில் ஒரு தவறும் இல்லை.

ஆனால் அந்த பின்னூட்டத்தில் நீங்கள் பெண்கள் இது போன்று உடை அணிவதை அடிமைத்தனம் என்று பதிவு செய்து விட்டதாலயே நான் அதற்க்கு பதில் கூற விரும்பினேன். மீண்டும் சொல்கிறேன், நிச்சயமாக அந்த படம் எனக்கோ, அல்லது என்னை போன்று இஸ்லாத்தை கடைப்பிடிப்பவர்களுக்கோ கோவம் வராது.

\\சீருடைக்கும் பர்தாவுக்கும் வித்தியாசம் தெரிந்தவன் நான்!

அணிந்தே ஆகவேண்டும் என்பதால் சீருடை அடிமைத்தனம் இல்லை!\\

இங்கே சீருடை எதற்காக வந்தது? அப்படி பார்த்தால் சவூதியில் கட்டாயமாக, அவர் முஸ்லிம் அல்லாதவராக இருந்தாலுமே பர்தா அணிய வேண்டும்.
நான் பல முறை கூறினேன், பர்தா என்பது படத்தில் உள்ளது போன்று மட்டும் உடை அணிவது இல்லை. எந்த உடை உடுத்தினாலும் அதை பெண்களுடைய கைகளும், முகத்தையும் மறைக்கும் வண்ணம் இருந்தால் அதுவே பர்தாவாகும். அப்படி உடை அணிந்தால் மட்டும் போதாது, பிறர் கவனத்தை ஈர்க்காவன்னம் இருக்க வேண்டும்.

\\மன்னிக்கவும் இஸ்லாம் மட்டுமல்ல!
உலகிலுள்ள அனைத்து மதங்களையும் பேசுவேன்!
மனிதர்கள் கூண்டோடு செத்து கொண்டிருக்கிறார்கள் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் எல்லா மதமும் எனக்கு முட்டாள் மதங்கள் தான்\\

ஏன் பகுத்தறிவு வாதிகள் என்று சொல்லிக்கொள்பவர்களால் செத்து மடியும் மக்களை எவ்வாறு காப்பற்ற முடிகிறது? எதை வைத்து மக்கள் கூண்டோடு சாவதையும் அவர்களின் இறை நம்பிக்கையும் முடிச்சு போடுகிறீர்கள்? சில விஷமிகள் மதத்தின் பெயரால் கண்டிப்பாக நாசம் விளைவிக்கிறார்கள். அதற்காக இறை நம்பிக்கையை குறை சொல்ல முடியாது. இதோ, சிங்களவர்கள் தமிழர்களை கொன்று குவிக்கிறார்கள், விடுதலை புலிகளும் இதற்க்கு விதிவிலக்கல்ல. இனத்தின் பெயரால் நடக்கும் இந்த படுகொலைகளுக்கு இறை மறுப்பாளர்கள் என்ன செய்தீர்கள்?

\\(நண்பர் அதிரை ஃபாருக் வேலையில்லாமல் இருக்கிறார், அவரை கவனியுங்கள் முதலில்)\\

சகோதரரே, அவர் என்ன செய்கிறார் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக எவரொருவரையும் இஸ்லாத்தில் வலுக்கட்டாயமாக இழுக்க முடியாது. ஏன் எங்கள் நபி (அவரின் மீது அமைதி உண்டாகட்டும்) அவர்களுக்கு கூட இறை seidhiyai eduthukkooruvadhu தான் kadamaiyae ozhiya yaarayum avargal varpurutha iyalaadhu. (islaam vaalmunaiyil parappapattadhu enbadhellam fascists kattavizhththu vitta பொய்). இங்கு கூட hijaabai thavaraana kannottathil paarkireergal enbdhaal தான் நான் என் vilakkaththai alikka vandhen.

"(2:256) (இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது. ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான்"

Anonymous said...

இங்கு கூட ஹிஜாபை தவறான கண்ணோட்டத்தில் பார்கிறீர்கள் என்பதால் தான் நான் என் விளக்கத்தை அளிக்க வந்தேன் . நீங்கள் உங்கள் கொள்கையயி மாற்றிக்கொள்ளவில்லை என்றாலும் இது ஒரு public forum ஆதலால் இஸ்லாத்தை பற்றிய தவறான செய்தியை சுட்டிக்காட்டவே உபயோகப்படுத்திக்கொண்டேன்.
ஒருவரை இஸ்லாத்துக்கு அழைக்கத்தான் முடியுமே ஒழிய அவரை கட்டாயப்படுத்தி எற்க்கவைப்பது எங்களை போன்ற எந்த இஸ்லாமியராலும் இயலாது காரியம்.

வால்பையன் said...

//உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் இந்த கமெண்டை படிக்கும் வரை எனக்கு இங்கே பின்னூட்டமிட வேண்டும் என்று கொஞ்சம் கூட தோன்றவில்லை. //

பதிவில் நான் எதையும் குறிப்பிடவில்லை!
பின்னூட்டத்தில் தான் அரசியல் ஆரம்பமானது, ஒருவர் ஆரம்பித்தார் வருத்தம் என்று! ஒருவர் சங்கடம் என்கிறார். ஒருவர் இஸ்லாமிய நண்பர்கள் கோபித்து கொள்பார்கள் என்கிறார்!

ஏன் அந்த வார்த்தைகள்!
இவற்றை பெண்ணடிமையாக பார்க்கும் உங்கள் பார்வை! நான் பொதுவாக சொன்னேன் எனது நண்பர்கள் பெண்ணடிமையை ஆதிப்பதில்லை என்று! இந்த படம் மட்டும் இல்லை!
பொதி சுமக்கும் கழுதை படமும் அந்தாறு பிள்ளைகளை தூக்கி திரியும் பெண்ணின் படத்தையும் போட்டு அரசியல் பண்ணலாம்!

//நிச்சயமாக அந்த படம் எனக்கோ, அல்லது என்னை போன்று இஸ்லாத்தை கடைப்பிடிப்பவர்களுக்கோ கோவம் வராது. //

மகிழ்ச்சியான செய்தி தானே!

//இங்கே சீருடை எதற்காக வந்தது? அப்படி பார்த்தால் சவூதியில் கட்டாயமாக, அவர் முஸ்லிம் அல்லாதவராக இருந்தாலுமே பர்தா அணிய வேண்டும். //

இங்கே கட்டாயம் என்ற வார்த்தை தான் நண்பர்களிடயே விவாதத்திற்கு அழைத்து சென்றது! உங்கள் மத அடிபொபடையில் கட்டாயம் என்பதால் மற்ற நண்பர்கள் வருத்தப்படுகிறார்கள், சங்கடப்படுகிறார்கள்!

//ஏன் பகுத்தறிவு வாதிகள் என்று சொல்லிக்கொள்பவர்களால் செத்து மடியும் மக்களை எவ்வாறு காப்பற்ற முடிகிறது? //


இயற்கை, தவிர நடக்கும் படுகொலைகளில் எதாவது ஒரு வகையில் மதம் கடவுள் சாதி ஒழிந்திருக்கிறது. அதனால் தான் நான் அதை எதிர்க்கிறேன்.

//சகோதரரே, அவர் என்ன செய்கிறார் என்று எனக்கு தெரியவில்லை.//

நானும் வந்த புதிதில் இப்படி தான் யார் என்ன பண்றாங்கன்னே தெரியாது!
ஆனா இப்போ சொல்லமுடியும் நீங்கள் இதற்கு முன் இதே பதிவில் பின்னூட்டம் இட்ட ஒரு ப்ளாக்கர்!

என்னிடம் இஸ்லாம் பற்றி பேசிய ஒரு ப்ளாக்கர்!

என்னை மத நம்ப்பிக்கையாளனாக மாற்ற முடியாது என்று உணர்ந்த ஒரு ப்ளாக்கர்!

இன்னும் சொல்ல போனால் நீங்கள் எனக்கு நல்ல நண்பர் சரியா!

வால்பையன் said...

//ஒருவரை இஸ்லாத்துக்கு அழைக்கத்தான் முடியுமே ஒழிய அவரை கட்டாயப்படுத்தி எற்க்கவைப்பது எங்களை போன்ற எந்த இஸ்லாமியராலும் இயலாது காரியம். //

இதில் தவறொன்றும் இல்லை!
பொழுது போகவில்லையென்றால் நானும் விளையாட வந்துவிடுவேன்!

நீங்கள் இஸ்லாத்துக்கு அழையுங்கள்!
நான் நாத்திகத்திற்கு அழைக்கிறேன்!

பேசி பார்ப்போம் பிடிச்சிருந்தா பழகவோம்! இல்லைனா நண்பர்களா இருப்போம்!

என்ன சொல்றிங்க!

Anonymous said...

Indian Muslimah said...

\\இஸ்லாமியப் பெண்ணாகத் தன்னைக் காட்டிக்கொள்பவருக்கு,\\

ஆம், நான் இஸ்லாமிய பெண் என்று காட்டிக்கொள்வதில் எனக்கு பெருமையே.

\\எனது கருத்தும், உங்களுடைய கருத்தும் இங்கே இருக்கின்றன.

படிப்பவர்கள் முடிவு செய்துகொள்ளட்டும்.

அந்த சுதந்திரத்தையாவது எங்களுக்குத் தாருங்கள்.

நன்றி.\\

கண்டிப்பாக. உங்கள் சுதந்திரத்தை யார் இங்கே பறித்தார்கள்?

//
நீங்கள் விரும்பும் இஸ்லாமிய சட்டம் வந்தால் என்ன ஆகும்.??

Indian Muslimah said...

\\நான் பொதுவாக சொன்னேன் எனது நண்பர்கள் பெண்ணடிமையை ஆதிப்பதில்லை என்று! இந்த படம் மட்டும் இல்லை!
பொதி சுமக்கும் கழுதை படமும் அந்தாறு பிள்ளைகளை தூக்கி திரியும் பெண்ணின் படத்தையும் போட்டு அரசியல் பண்ணலாம்!\\

சகோதரரே, அரசியல் பண்ணுவது என் நோக்கம் இல்லை. "ஹிஜாப் அணியும் பெண்கள் அடிமைப்படுத்தப்படுகிறார்கள்" என்பதை போன்ற தோற்றத்தை உங்களுது பின்னூட்டம் எனக்கு கொடுத்தது. அதற்குதான் நான் இவ்வளவு நீண்ட, நெடிய, விளக்கத்தை கொடுத்தேன்.

\\உங்கள் மத அடிபொபடையில் கட்டாயம் என்பதால் மற்ற நண்பர்கள் வருத்தப்படுகிறார்கள், சங்கடப்படுகிறார்கள்\\

ஐயா, என்னுடைய mba தோழி இந்து மதத்தின் மேல் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர். சில நாட்களில் விரதம் இருப்பார், சில நாட்களில் மாமிசம் உண்ண மாட்டார், அவர் அறையில் இருக்கும் பூஜை பொருட்களுக்கு அருகில் செருப்பின்றி நடக்க மாட்டார். அதே போல் நானும் ஒரு முஸ்லிம் பெண். நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பழக்கவழக்கங்களில் எவ்வளவோ வேறுபாடுகள் இருந்தாலும் ஒரு போதும் அது எங்களுக்கு ஒரு தடையாக இருக்காது. நான் அவளை மதிப்பதால் அவளுடைய நம்பிக்கையையும் மதிக்கிறேன், அவள் என்னை மதிப்பதால் என்னுடைய நம்பிக்கையை அவள் மதிக்கிறாள். அவ்வளவு தான். எங்களிருவருக்கும் உடை விஷயத்தில் கவனம் என்பது அதி முக்கியமானது. நான் முன்பு சொன்னது போல அவள் தலையை மறைக்கவில்லை, நான் மறைக்கிறேன், அது ஒன்று தான் வேறுபாடு.

\\இயற்கை, தவிர நடக்கும் படுகொலைகளில் எதாவது ஒரு வகையில் மதம் கடவுள் சாதி ஒழிந்திருக்கிறது. அதனால் தான் நான் அதை எதிர்க்கிறேன்.\\

மொழியும் ஒளிந்திருக்கிறது. இனமும் ஒளிந்திருக்கிறது. நிறமும் ஒளிந்திருக்கிறது. ஈழம், அபாரிஜின்கள், ஆப்பிரக்கர்கள். இவர்களையும் எதிர்ப்பீர்கள?

\\ஆனா இப்போ சொல்லமுடியும் நீங்கள் இதற்கு முன் இதே பதிவில் பின்னூட்டம் இட்ட ஒரு ப்ளாக்கர்!

என்னிடம் இஸ்லாம் பற்றி பேசிய ஒரு ப்ளாக்கர்!

என்னை மத நம்ப்பிக்கையாளனாக மாற்ற முடியாது என்று உணர்ந்த ஒரு ப்ளாக்கர்!

இன்னும் சொல்ல போனால் நீங்கள் எனக்கு நல்ல நண்பர் சரியா!\\

ஆமா, நான் முன்பு ஓரிரு முறை உங்கள் பதிவில் அனானியாக பின்னூட்டமிட்டேன். உங்கள் மத நம்பிக்கை மட்டுமல்ல, வேறு எந்த ஒரு மனிதருடைய மத நம்பிக்கையையும் அவரே உணரும் வரை மாற்ற முடியாது. இறைவனை தவிர ஒரு மனிதன் மனதை மாற செய்யும் சக்தி யாருக்கும் இல்லை, எங்கள் நபிக்கே கூட. எடுத்துக்கூறுவது மட்டும் தான் எங்கள் வேலை. அதுவும் நீங்கள் நினைப்பது போல் forcible பிரச்சாரம் செய்வது அல்ல. ஒரு நல்ல பேச்சுவார்த்தையின் மூலமே இது சாத்தியம் .

சகோதரரே, உங்களின் சில பதிவுகளை மட்டுமே படித்திருக்கிறேன் , நீங்கள் வேறு யாரோயோ நினைத்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன் .

\\நீங்கள் இஸ்லாத்துக்கு அழையுங்கள்!
நான் நாத்திகத்திற்கு அழைக்கிறேன்!\\

கண்டிப்பாக . உண்மைகளை அலசிப்பார்த்து , அதில் எது உண்மையான வழி என்பதை அறிவதில் தவறொன்றும் இல்லையே. உங்களுக்கு இஸ்லாத்தை பற்றி என்ன தெரிய வேண்டுமோ கேளுங்கள், கூறுகிறேன். இன்ஷா அல்லாஹ்


\\பேசி பார்ப்போம் பிடிச்சிருந்தா பழகவோம்! இல்லைனா நண்பர்களா இருப்போம்!\\

நன்றி சகோதரே.

Indian Muslimah said...

\\நீங்கள் விரும்பும் இஸ்லாமிய சட்டம் வந்தால் என்ன ஆகும்.??\\

ஒன்றும் ஆகாது. நன்மையே விளையும். இறைவன் நாடினால்.

----

ஒரு சின்ன விளக்கம்: சவூதியில் முஸ்லிம்மல்லாதவரை கட்டாயப்படுத்தி ஹிஜாப் அணிவித்தல் என்பது இஸ்லாத்தில் இல்லை. அவர்கள் இஸ்லாத்தில் இல்லாத எவ்வளவோ விஷயங்களை செய்கின்றனர். உதாரணம்: வட்டியை அனுமதித்தது.

Anonymous said...

Indian Muslimah said...

\\நீங்கள் விரும்பும் இஸ்லாமிய சட்டம் வந்தால் என்ன ஆகும்.??\\

ஒன்றும் ஆகாது. நன்மையே விளையும். இறைவன் நாடினால்.

----

ஒரு சின்ன விளக்கம்: சவூதியில் முஸ்லிம்மல்லாதவரை கட்டாயப்படுத்தி ஹிஜாப் அணிவித்தல் என்பது இஸ்லாத்தில் இல்லை. அவர்கள் இஸ்லாத்தில் இல்லாத எவ்வளவோ விஷயங்களை செய்கின்றனர். உதாரணம்: வட்டியை அனுமதித்தது.//

முஸ்லீம் அல்லாதவர் இஸ்லாம் சட்டப்படி அந்நாட்டின் உயர்பதவியை அடையமுடியுமா? அதை இஸ்லாம் அனுமதிக்கிறதா.

Indian Muslimah said...

இஸ்லாமிய நாடான மலைய்சியாவில் டத்தோ சாமிவேலு போன்றவர்கள் உயர் பதவியில் வசிப்பதை நீங்கள் பார்க்கவில்லையோ?

இஸ்லாமிய சட்டத்தில் முஸ்லிம்மல்லாதவர்களுக்கென்று இருக்கும் உரிமைகளும், சலுகைகளும் ஏராளம். இதோ, இந்த சுட்டியை பாருங்கள்:

http://www.islamreligion.com/articles/374/viewall/

"“Beware! Whoever is cruel and hard on a non-Muslim minority, curtails their rights, burdens them with more than they can bear, or takes anything from them against their free will; I (Prophet Muhammad) will complain against the person on the Day of Judgment.” (Abu Dawud)"

"யாரெல்லாம் முஸ்லிம்மல்லாதவர்கள் மீது கடுமையாக இருந்து, அவர்கள் உரிமைகளைப்பரித்து, அவர்கள் சக்திக்கு மீறியதை அவர்களின் மீது சுமத்தி அல்லது அவர்களின் சம்மதம் இல்லாமல் அவரிடமிருந்து ஏதேனும் பரிக்கிரார்களோ அவர்களை எச்சரிக்கை செய்கிறேன். நான் (நபி முஹம்மது) அவர்களின் மீது நியாயத்தீர்ப்பு நாளன்று புகார் தெரிவிப்பேன்" (அபு தாவூத் )

இஸ்லாம் சகோதரத்துவத்தையும் அன்பையும் மிக அதிகமாக போதிக்கிறது. ஒருவரின் பிறப்பை வைத்தோ அல்லது இனத்தை வைத்தோ அவர்களை எடை போடுவதை இஸ்லாம் அனுமதிக்காது. மாறாக ஒருவரின் நடத்தையையும் பண்பையும் அவரை பற்றி தீர்மானிக்கின்றன.

குரான் 49:13
"மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்"

“O mankind! We created you from a single (pair) of a male and female, and made you into nations and tribes, that you may know each other (and not hate one another). Surely, the most honored of you in the sight of God is (he who) is the most righteous of you. And God has full knowledge and is well acquainted (with all things).” (Quran 49:13)

"மக்களே, அறிந்து கொள்ளுங்கள்: உங்கள் இறைவன் ஒருவனே. நீங்கள் அனைவரும் ஆதமுடைய மக்கள். ஒரு அரபி அரபி அல்லாதவரை விட மேன்மையானவன் அல்ல, அரபி அல்லாதவர் ஓர் அரபியை விட மேன்மையானவன் அல்ல. வெள்ளை நிறத்தோல் உடையவன் கறுப்பாக இருப்பவனை விட மேன்மையானவன் அல்ல, கறுப்பாக இருப்பவன் வெள்ளையாக இருப்பவனை விட மேன்மையானவன் அல்ல. ஒருவரின் மேன்மை அவரின் இறை பக்தியிலும் நன்னடத்தையிலுமே உள்ளது"

இஸ்லாத்திற்குள் எவரொருவரையும் கட்டாயப்படுத்தி கொண்டு வர முடியாது:

குரான் (10:99) "மேலும், உம் இறைவன் நாடியிருந்தால், பூமியிலுள்ள யாவருமே ஈமான் கொண்டிருப்பார்கள்; எனவே, மனிதர்கள் யாவரும் முஃமின்களாக (நம்பிக்கை கொண்டோராக) ஆகிவிடவேண்டுமென்று அவர்களை நீர் கட்டாயப்படுத்த முடியுமா?"

நபி முஹம்மது அவர்களின் காலத்தில் கிறிஸ்தவர்களும் யூதர்களும் தங்களுக்குரிய வழிப்பாட்டுதளங்களை அவர்கள் எர்ப்படுதிக்கொண்டு தான் இருந்தனர்.

குரான் 22:(40) "இவர்கள் (எத்தகையோரென்றால்) நியாயமின்றித் தம் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்; 'எங்களுடைய இறைவன் ஒருவன்தான்' என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும் அவர்கள் சொல்லவில்லை); மனிதர்களில் சிலரைச் சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும் சிறிஸ்தவக் கோயில்களும், யூதர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வின் திரு நாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும்; அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கோனும், (யாவரையும்) மிகைத்தோனுமாக இருக்கின்றான்."

Indian Muslimah said...

இஸ்லாத்திற்குள் எவரொருவரையும் கட்டாயப்படுத்தி கொண்டு வர முடியாது:

குரான் (10:99) "மேலும், உம் இறைவன் நாடியிருந்தால், பூமியிலுள்ள யாவருமே ஈமான் கொண்டிருப்பார்கள்; எனவே, மனிதர்கள் யாவரும் முஃமின்களாக (நம்பிக்கை கொண்டோராக) ஆகிவிடவேண்டுமென்று அவர்களை நீர் கட்டாயப்படுத்த முடியுமா?"

நபி முஹம்மது அவர்களின் காலத்தில் கிறிஸ்தவர்களும் யூதர்களும் தங்களுக்குரிய வழிப்பாட்டுதளங்களை அவர்கள் எர்ப்படுதிக்கொண்டு தான் இருந்தனர்.

குரான் 22:(40) "இவர்கள் (எத்தகையோரென்றால்) நியாயமின்றித் தம் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்; 'எங்களுடைய இறைவன் ஒருவன்தான்' என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும் அவர்கள் சொல்லவில்லை); மனிதர்களில் சிலரைச் சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும் சிறிஸ்தவக் கோயில்களும், யூதர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வின் திரு நாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும்; அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கோனும், (யாவரையும்) மிகைத்தோனுமாக இருக்கின்றான்."

வால்பையன் said...

குரானிலிருந்து வார்த்தைகளை எடுத்து போடுவதை தயவுசெய்து தவிருங்கள்!
எனக்கு இந்த மாதிரி உதாரணம் சொல்லுதல் பிடிக்கவேர் பிடிக்காது!

நீங்க ஒரே வார்த்தையில முடிச்சிட்டிங்க!
லிங்கும் கொடுத்துட்டிங்க பின் மேலும் எதற்கு குரான் எனக்கு!

புத்தகத்தை நம்பி என்னால் வாழ்க்கையை கழிக்க முடியாது!
அது செக் புக்காக இருந்தாலும் சரி!

Anonymous said...

It is this Taliban and Talibani mindset that we should be scared of; both are already there in our midst. Mohammad Salim is not alone in wanting to emulate those who flaunt their “religious conscience, belief and custom” to the exclusion of a secular state’s enlightenment. What the Taliban are practising in Swat Valley and in the wastelands of Afghanistan is being preached by mullahs in India. And they are doing so openly. A casual reading of the fatwas listed on Darul Uloom Deoband’s Website, http://www.darulifta-deoband.org, will prove this point. Here are some randomly selected examples:

Fatwa 1587/1330=L/1429: “The best purdah for woman is that the palms and no part of her body and adornments is exposed, ie, the whole body is covered from head to toe. If it is possible to see through the purdah, then the eyes also should be covered...”

Fatwa 1141/1141=M/1429: Family planning is haram and unlawful in Islam. You should apprise your wife of the commandment of shari’ah...”

Fatwa 691/636=D/1429: It is not a good thing for women to do jobs in offices. They will have to face strange men (non-mahram) though in veil. She will have to talk and deal with each other which are the things of fitna (evils).”

Fatwa 1386/227=TL/1429: “It is unlawful for women to go out after applying perfume.”

From here to chopping off the thumbs of women who use nail varnish is a very small step.

Indian Muslimah said...

\\குரானிலிருந்து வார்த்தைகளை எடுத்து போடுவதை தயவுசெய்து தவிருங்கள்!
எனக்கு இந்த மாதிரி உதாரணம் சொல்லுதல் பிடிக்கவேர் பிடிக்காது!\\

மன்னிக்கவும். இஸ்லாத்தை பற்றிய வினாக்களுக்கும் ஐயங்களுக்கும் விடை சொல்லுவது இறை வேதமாகிய குரான், matrum நபி (அவரின் மீது அமைதி உண்டாகட்டும்) அவர்களின் வாழ்கை வரலாற்றில் இருந்து மட்டுமே என்னால் கூற முடியும்.

\\புத்தகத்தை நம்பி என்னால் வாழ்க்கையை கழிக்க முடியாது!
அது செக் புக்காக இருந்தாலும் சரி!\\

அது உங்கள் விருப்பம் சகோதரரே. நல்ல புத்தகங்கள் தான் ஒரு மனிதனின் பண்பை மேம்பட செய்கின்றன. இஸ்லாமியர்களை பொருத்தவரையில் இறைவனின் வார்த்தைகள் என்று நம்பப்படும் திருக்குரானில் உள்ள விஷயங்கள் யாவுமே ஒரு மனிதனை பண்பட்டவனாக மாற்றுகின்றன.

உங்களுக்கு விருப்பமில்லை என்றால் படிக்காதீர்கள். உங்களிடம் யாரும் குரானை கையில் தந்து திணிக்கவில்லை. மாறாக அதில் என்ன உள்ளது என்பதையே மேற்கோள் காட்டியுள்ளேன். நல்ல விஷயங்கள் எங்கிருந்தாலும் அதை தாராளமாக எற்றுக்கொள்ளகூடியவர்கள் இன்னும் இங்கு நிறைய பேர் இருக்கிறார்கள். :)

Anonymous said...

Anonymous, you can go and on picking up fatwas from the net and point out that this and this is oppression and this and this is backwardness. I can refute all your allegations and you may still pick them up from the hate websites or cook up new stories.

1. "“The best purdah for woman is that the palms and no part of her body and adornments is exposed, ie, the whole body is covered from head to toe. If it is possible to see through the purdah, then the eyes also should be covered...”

Now tell me, what is your problem on earth if women wrap up themselves completely when women themselves dont feel bad about it?

2. "Family planning is haram and unlawful in Islam"

Family planning in the sense that undergoing an operation to stop childbirth completely. Almost all women (and usually its only the womenfolk who have to undergo) face severe problems of obesity and uterus problems after undergoing this surgery. Family planning is always permissble through the use of contraceptives.

3. "It is not a good thing for women to do jobs in offices. They will have to face strange men (non-mahram) though in veil. She will have to talk and deal with each other which are the things of fitna (evils).” "

Women ARE PERMITTED to take up their profession provided they observe their hijaab, but free mixing of men and women is definitely not allowed in Islam. I dont have to say about some of the crooked minded men in offices who simply take the working women for granted. Thats why Islam has placed a restriction on this.

4.Fatwa 1386/227=TL/1429: “It is unlawful for women to go out after applying perfume.”

Isn't it a simple fact that perfumes kindle the desires of men?

From here to chopping off the thumbs of women who use nail varnish is a very small step

There is a saying in Tamil which goes "aaadu nanaiyudhaennu onaai azhudhuchaam". Likewise people like you who cover under the cloak of "liberating women" are only doing harm than any good. At any point of time, Muslim women are happy and safe about what they do and what is ordered to them by the Almighty.

People like you will never look at what Islam has done to elevate the status of women. It is only Islam which gives the woman the right to choose the person she wants to marry, the right to divorce, the right to earn but no obligation to spend on the family (only men are obliged to spend), the right to property (of half of what a man gets since she doesnt have to spend on family), the right to spiritual equality, the right to be deserved the kind treatment.

Now you may come up with the verse from the Quran which says "beat your wife lightly" and cook up a story Islam allows wife beating. For all your allegations and invented lies against Islam, please visit:

http://islamicresponse.blogspot.com/2008/07/allegation-that-islam-prescribesallows.html

--------------

IT is very funny that everytime I refute your allegations (i guess you are the same one who commented in Tamil) you only come up with newer things. i only hope the owner of this blog Mr. Valpaiyan does not mind using his space for this.

Anonymous said...

>>>>>>>>>>

\\நீங்கள் விரும்பும் இஸ்லாமிய சட்டம் வந்தால் என்ன ஆகும்.??\\

ஒன்றும் ஆகாது. நன்மையே விளையும். இறைவன் நாடினால்.


//ஒரு சின்ன விளக்கம்: சவூதியில் முஸ்லிம்மல்லாதவரை கட்டாயப்படுத்தி ஹிஜாப் அணிவித்தல் என்பது இஸ்லாத்தில் இல்லை. அவர்கள் இஸ்லாத்தில் இல்லாத எவ்வளவோ விஷயங்களை செய்கின்றனர். உதாரணம்: வட்டியை அனுமதித்தது//

<<<<<<<<<<

எதுவும் கட்டாயம் கிடையாதுன்னு இசுலாம் சொல்லுதுன்னு சொல்றீக. ஆனாக்க, எல்லா துலுக்க நாடுகள்ளயும் கட்டாயமாத்தான் இசுலாம் திணிக்கப்படுது.

பவர்ஃபுல்லா ஆகிறவரக்கும் அன்பு, சுதந்திரம், கட்டாயம் கிடையாதுன்னு பேசவேண்டியது. பவர்ஃபுல்லா ஆயிட்டா கல்லடியும், கசையடியும். நிக்க வச்சு சுடறதும்.

செக்யூலரிச நாடா இருந்த மலேசியாவ துலுக்க நாடா அறிவிச்சபின்னாடி என்னாச்சு?

அங்கே இருக்குர தமிழர்கள்மேல கொடுமய கட்டவிழ்த்து விட்டீங்க. அவங்க இந்துக்களா இருக்கறதத் தவிர வேற என்ன பாவம் பண்ணாங்க.

அமைதியான முறையில போராடுகிற எங்கள் ரத்தங்கள கொடூரமான முறையில அழிக்கிறீங்க.

ஒரு நாடு துலுக்க நாடா ஆயிட்டா அங்கே இருக்கிற மத்த மதத்தச் சேந்தவங்க எல்லாரையும் கம்ப்ளீட்டா அழிச்சிடறீங்க. பங்களாதேசத்திலயும், பாக்கிஸ்தான்லயும் இருக்கிற இந்துக்கள் எண்ணிக்கை ஏன் இந்த அளவு குறைஞ்சிக்கிட்டே போகுது? அவங்க மேல எவ்வளவோ கொடூரமான இன அழிப்பு நடக்குது. அதெயெல்லாம் நம்மூரு பத்திரிகைங்க வெளிய சொல்றதுக்கே பயப்படறாங்க.

ந்யூஸெ போட்டாக்க அந்த ந்யூஸ் பேப்பர் ஆபீஸ் மேல குண்டு வீசறது. போன மாசம்கூட கல்கத்தா ஸ்டேட்மென் பத்திரிக்கை எடிட்டர அரெஸ்ட் பண்ண வச்சீங்க. அவரு அப்படி என்ன தப்புப் பண்ணாரு? இசுலாத்தில சில குறைகள் இருக்குங்கற கட்டுரையப் போட்டாரு. அது தப்புன்னாக்க ஒரு மறுப்புக் கட்டுர எழுதணும். ஆனாக்க, நீங்க அராஜகம் பண்ணி வன்முறையத் தூண்டி எடிட்டர அரஸ்ட் பண்ண வச்சு ...

உங்களுக்கு வேற வழியே தெரியாது.

ஏதோ இண்டர்னெட் இருக்கக்கண்டு, உண்மைய கொஞ்சம் தெரிஞ்சிக்க முடியுது.

ஆனா, பல முசுலீம் நாடுகள்ள இண்டர்நெட்ட தடை பண்ணிருக்கீங்க.

எல்லா இசுலாமிய நாட்டிலயும் கொடூரமான சட்டங்களும், கொலை வெறியாட்டங்களும்தான்.

பெண்களுக்கெதிரான கொடுமைகள்ள இசுலாமிய நாடுகள்தான் முன்னணி வகிக்குது.

கேட்டாக்க அவங்க இசுலாத்த சரியா ஃபாலோ பண்ணலன்னு சால்ஜாப்பு.

1400 வருசமா இசுலாம் இருந்தும், இப்ப இருக்கிற எந்த முசுலீம் நாடுகளும் இசுலாத்த சரியா ஃபாலோ பண்ணலன்னாக்க அது எதக் குறிக்குது?

தியரியில நல்லா இருக்குற மாதிரி காட்டுற இசுலாம் நடைமுறையில நாறப்பொணம்தாங்கறதத்தான.

ஆனா, நடைமுறை உண்மையெல்லாம் பொய்யின்னு சால்ஜாப்பு தட்டியே ஊர ஏமாத்திடலாம்னு நெனக்கிறீக.

சால்ஜாப்பெல்லாம் நல்லாத்தான் இருக்கு.

ஆனா, நீங்க சொல்றமாதிரி எந்த நாட்டிலும் இசுலாமிய சட்டங்கள் நடைமுறையில இல்லயே.

கறுப்புத் துணி போட்டுக்கிட்டு நடக்க எனக்குப் பிடிக்கல, அதனால பர்க்கா இல்லாம முழுமையா உடம்ப மூடற ட்ரெஸ் போட்டுக்கிட்டு போற ஒரு முஸ்லீம் பெண்ணையாவது கல்ஃப் நாடுகள்ல காட்டுங்க. ஏன் ஒருத்தருக்குக்கூட அந்த சுதந்திரம் இல்ல?

இதுல ஷியாக்கள் நாங்க சொல்றதுதான் சரி. கருப்புத் துணியெல்லாம் போட வேண்டாம். மூஞ்ச மூட வேண்டாம். ஆனாக்க, தலய மூடணும்னு சொல்றாக.

இங்கே எளுதற அம்மணி அந்த கோஷ்டி போல இருக்கு.

இதேது சுன்னி முசுலீமாக இருந்தா உடம்பு முழுக்கவும் கருப்புத் துணி போடணும்னு சொல்லுதாக.

இவங்க மசூதிய அவங்க குண்டு வக்கிறாங்க. அவங்க தர்க்காவுல இவங்க குண்டு வக்கிறாங்க.

இந்தியாவுல தர்க்காமேல நடந்த அத்தனையையும் பண்றது சுன்னி முசுலீம்கதான்.

நாந்தான் சரின்னு அடுத்த மதத்துக்காரங்கள கொல்றது பத்தாதுன்னு அகமதியாக்காரங்களயும், சூஃபிங்களயும், மத்த ஆட்களையும் கொன்னுக்கிட்டே இருக்கீங்க. ஒரு குரூப்பு இன்னொரு குரூப்பு சரியில்லன்னு சொல்லுது. நாங்கதான் சரின்னு சொல்லுது. நாங்கதான் உண்மையான முசுலீமுங்குது.

இதில எத நம்பறது? எல்லாப் பயலுகளும் தான் சொல்றதுதான் சரின்னு சொல்லி வன்முறைய கட்டவிழ்த்துவிடறானுங்க.

கேட்டாக்க முகம்மது அப்படி சொல்லி இருக்கிறாரு. அவர் சொன்னது எல்லாமே கரக்ட்டுன்னு சொல்றீங்க. ஆனாக்க, மெக்கா மசூதிய தீவிரவாதிங்க பிடிச்சப்ப ப்ரெஞ்சு நாட்டு கிருத்துவர்கள்தான் வந்து காப்பாத்தித் தந்தாங்க. அந்தாள் சொன்னது பல நடக்கலன்ன சொன்னாக்க எங்க உணர்வ புண் படுத்திறீங்க, ஒங்கள கொல்லுவோம்னு ஃபத்வா போடறீங்க.

திருப்பி திருப்பிப் பொய் சொல்ற “தக்கியாவ” புனிதக் கடமையா வச்சிருக்கிற ஒங்ககிட்ட வேற என்ன பேசறது.

நாங்க சொல்ற மாதிரிதான் ட்ரெஸ் போடணும்கிறானுங்க. ஏன்னாக்க, ஆம்பளங்களுக்கும், பொம்பளங்களுக்கும் ஒரே வகை உறவு மட்டும்தான் இருக்குங்கறானுங்க.

ஆம்பளங்களுக்கும், பொம்பளங்களுக்கும் வேற வேலைகளும் இருக்குங்கறத ஞாபகம் வச்சுக்கிட்டா, உடம்பில மூளை உள்ளிட்ட விஷயங்களும், அதற்கான உபயோகங்கள் என்னங்கறத தெரிஞ்சிக்கிட்டா பொத்தி பொத்தி பொண்ணுங்கள மண்ணுங்களா ஆக்கமாட்டீக.

Anonymous said...

\\செக்யூலரிச நாடா இருந்த மலேசியாவ துலுக்க நாடா அறிவிச்சபின்னாடி என்னாச்சு?

அங்கே இருக்குர தமிழர்கள்மேல கொடுமய கட்டவிழ்த்து விட்டீங்க. அவங்க இந்துக்களா இருக்கறதத் தவிர வேற என்ன பாவம் பண்ணாங்க.\\

அப்படியா? அங்கே இது போல புரளிகள கிளப்பி விடறது RSS போன்ற அமைப்புகள். இப்பமும் மலைய்சியவிலே தமிழர்கள் நல்லபடியாதான் இருக்குறாங்க.மலேசிய தமிழர்களை பற்றி முதலை கண்ணீர் வடிக்கும் உங்களுக்கு ஈழத்தமிழர் மீதுள்ள அக்கறை எங்கே?

\\அமைதியான முறையில போராடுகிற எங்கள் ரத்தங்கள கொடூரமான முறையில அழிக்கிறீங்க\\

எப்படி? குஜராத்ல நடந்ததே அது மாதிரியா?

\\பங்களாதேசத்திலயும், பாக்கிஸ்தான்லயும் இருக்கிற இந்துக்கள் எண்ணிக்கை ஏன் இந்த அளவு குறைஞ்சிக்கிட்டே போகுது? \\

கொஞ்சம் புள்ளி விவரம் தெரிஞ்சுக்கலாமா? மனித மிருகங்கள் மோடி வடிவதுளையும் இருக்கு, தாவூத் இப்ராஹீம் வடிவதுளையும் இருக்கு. நான் தைரியமா தாவூத்தை தீவிரதின்னு சொல்லி ஒதுக்குகிறோம், ஆனா நீங்க மோடி மஸ்தானை தலைல தூக்கி வைச்சுட்டு ஆடுரிங்கலே அது எப்படி? ஒரிஸ்ஸவில 2000 கிறிஸ்தவர்களை கொன்னது எல்லாம் எந்த கணக்கு?

\\ஆனாக்க, நீங்க அராஜகம் பண்ணி வன்முறையத் தூண்டி எடிட்டர அரஸ்ட் பண்ண வச்சு \\

நாங்க அராஜகம் பண்ணினா எங்களை தான் அரஸ்ட் பண்ணனும். அவரை பண்றாங்கன்னா அவரு மேல தப்பிருக்க போய் தானே?

\\ஆனா, பல முசுலீம் நாடுகள்ள இண்டர்நெட்ட தடை பண்ணிருக்கீங்க.\\

எந்த நாட்லங்கோ?

\\எல்லா இசுலாமிய நாட்டிலயும் கொடூரமான சட்டங்களும், கொலை வெறியாட்டங்களும்தான்\\

அப்படிங்களா? இங்க நிறைமாச கர்ப்பிணி பெண்ணை சீரழிச்சவனை ப்ரீயா விட்டுடோமே. இஸ்லாமிய தண்டனைய அவனுக்கு குடுத்தா இன்னொரு பெண்ணை ஏறெடுத்து பார்ப்பான அவன்?

\\பெண்களுக்கெதிரான கொடுமைகள்ள இசுலாமிய நாடுகள்தான் முன்னணி வகிக்குது.\\

அப்படீங்கள ஐயா? எந்த இஸ்லாமிய நாட்டுல வரதட்சணைக்காக ஸ்டவ் எரியுது, மூதேவி, முண்டம், வாழாவெட்டிங்க்ற பேரும், ஆசிட் வீசுறதும், உடன்கட்டை ஏறுறதும், பெண் பிள்ளை வேண்டாம்ங்க்ற மந்திரத்தையும் ஓதுறாங்க கொஞ்சம் சொல்லுங்க பாப்போம்?

\\1400 வருசமா இசுலாம் இருந்தும், இப்ப இருக்கிற எந்த முசுலீம் நாடுகளும் இசுலாத்த சரியா ஃபாலோ பண்ணலன்னாக்க அது எதக் குறிக்குது?\\

அப்படிங்களா? மனிதர்கள் இஸ்லாத்தை ஒழுங்கா ஃபாலோ பன்னளைங்க்ரதுக்காக மார்க்கத்தை குறை கூற முடியுமா?

\\இதுல ஷியாக்கள் நாங்க சொல்றதுதான் சரி. கருப்புத் துணியெல்லாம் போட வேண்டாம். மூஞ்ச மூட வேண்டாம். ஆனாக்க, தலய மூடணும்னு சொல்றாக.

இங்கே எளுதற அம்மணி அந்த கோஷ்டி போல இருக்கு\\

முகத்தை மூடுறதும் மூடாததும் எங்க இஷ்டம், உங்க வேலை என்னமோ அதை போய் பாருங்க

\\இவங்க மசூதிய அவங்க குண்டு வக்கிறாங்க. அவங்க தர்க்காவுல இவங்க குண்டு வக்கிறாங்க.

இந்தியாவுல தர்க்காமேல நடந்த அத்தனையையும் பண்றது சுன்னி முசுலீம்கதான்.\\

அப்படியா? அந்த சாமியாரம்மாவோட டெக்னிக்கா இது? பண்றதெல்லாம் அவங்க பண்ணிட்டு சுன்னி, ஷியன்னு பழியா தூக்கி போடுறது.

\\ஒரு குரூப்பு இன்னொரு குரூப்பு சரியில்லன்னு சொல்லுது. நாங்கதான் சரின்னு சொல்லுது. நாங்கதான் உண்மையான முசுலீமுங்குது. \\

உங்களுகென்ன பிரச்சினை இதுல? ஆடு நனையுதேன்னு ஓநாய்க்கு வருத்தமோ? அப்படி பார்த்தா நம்ம ஊருல இல்லாத ஜாதி பிரச்சனையா? ரெட்டை குவளை முறையும், அருவாள் வெட்டு சண்டையும் யாரோட சொத்து ஐயா? மார்க்கத்தை ஒழுங்காக விளங்காதவன் பண்ற வேலை அது.

\\ஆனாக்க, மெக்கா மசூதிய தீவிரவாதிங்க பிடிச்சப்ப ப்ரெஞ்சு நாட்டு கிருத்துவர்கள்தான் வந்து காப்பாத்தித் தந்தாங்க.\\

இது எப்ப நடந்தது?

\\திருப்பி திருப்பிப் பொய் சொல்ற “தக்கியாவ” புனிதக் கடமையா வச்சிருக்கிற ஒங்ககிட்ட வேற என்ன பேசறது.\\

இது என்ன கடமை?

---

\\உடம்பில மூளை உள்ளிட்ட விஷயங்களும், அதற்கான உபயோகங்கள் என்னங்கறத தெரிஞ்சிக்கிட்டா பொத்தி பொத்தி பொண்ணுங்கள மண்ணுங்களா ஆக்கமாட்டீக.\\

உங்களை மாதிரி ஆளுங்களை பார்த்தால் ரொம்ப பாவமா இருக்கு. பொண்ணுங்களை அவங்க கஷ்டப்படுற நேரத்துல தீண்டதகாதவங்கள ஆகுறதும், விதவைகளை மொட்டை அடிக்க செய்றதும் உங்க கண்ணுக்கு தெரியல போல. முஸ்லிமான பெண்களுக்கு அவள் கணவன் இறந்த பின்னும், அவனை விவாகரத்து செய்த பின்னும் கூட எளிதில் திருமணம் நடக்கும், அவளுக்கு மஹர் எனப்படும் தொகையை கொடுத்து.

ஆனால் இன்னமும் வரதட்சணை நம்ம நாட்டுல தான் தல விரிச்சு ஆடுது? போங்க, போங்க, பொய் முதல்ல வரதட்சணை கொடுமை, ஸ்டவ் வெடிக்கிறது, ஆசிட் ஊதுறது, மூதேவி, முண்டம்க்ற பட்ட பேரு கொடுக்கிறதெல்லாம் சரி செய்யுங்க அப்புறம் மத்தவங்கள பத்தி பேசுங்க.

குரான் அருளப்பட்ட முதல் வசனமே "Read in the name of your Lord who has created" தான்

இறைவனின் எத்தனையோ படைப்புகளை கண்டு சிந்திக்க சொல்கிறது குரான். கரு வளர்ச்சியில இருந்து big bang theory வரைக்கும் எல்லாமே பேசுறது குரான். அதனால, மூளைய உபையோகப்படுதரத பத்தி நீங்க எங்களுக்கு சொல்லி தர வேணாம். ஓகே ஆ?

வால்பையன் said...

நட்புகளா!
நான் எந்த மதத்தையும் ஆதரிக்காதவன்!
இங்கே இந்துவா , இஸ்லாமியமான்னு சண்டை போடாதிங்க!

வேண்டுமென்றால் மனிதமா! மதமான்னு சண்டை போடுங்க!

Anonymous said...

ஹா ஹா. சரி தான் சகோதரரே. அந்த மனிதர் வேண்டுமென்றே தாக்கி பேசியதால் அதற்க்கு பதிலளித்தேன். இனி அவரிடும் எந்த பின்னூட்டத்திற்கும் பதிலளித்து என் நேரத்தை வீனாக்கிகொள்ள விருப்பம்மில்லை.

எப்போது சபை நாகரிகத்தோடு பேசிக்கொண்டிருக்கும்போது "துலுக்க" என்ற வார்த்தையை பயன்படுத்த ஆரம்பித்தாரோ அப்போதே அவரிடம் பேசி எந்த பயனும் இல்லை என்பது விளங்கி விட்டது.

:)

குடுகுடுப்பை said...
This comment has been removed by the author.
குடுகுடுப்பை said...

மதம அரசியலில் கலக்காதவரை மனிதர்களுக்கு நல்லது, அப்படி இல்லை என்பது உண்மை

Anonymous said...

//மலேசிய தமிழர்களை பற்றி முதலை கண்ணீர் வடிக்கும் உங்களுக்கு ஈழத்தமிழர் மீதுள்ள அக்கறை எங்கே?//

விடுதலைப்புலிகளுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் எதிராக இலங்கையில் உள்ள இஸ்லாமியத் தமிழர்கள் நடந்துகொள்வது உலகம் அறிந்த விடயமாயிற்றே.

இலங்கை முஸ்லீம்களும், இந்துத் தமிழர்களும்: http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/2070817.stm

//எப்படி? குஜராத்ல நடந்ததே அது மாதிரியா?//

ஆமாம். கோத்ரா என்கிற ஊரில் ரயிலைச் சூழ்ந்துகொண்டு, வெளியே தாழ்ப்பாள்போட்டு, பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றார்களே அதைப் போலத்தான் மலேசியாவிலும் தமிழர்களைக் கொடுமைப்படுத்துகிறீர்கள்.

மலேசியாவில் தமிழர்களுடைய வீடுகள், கடைகள், கோயில்களை இடித்துத் தள்ளுகிறீர்கள்.

இறந்துபோனவர்களை இஸ்லாமிய முறையில் புதைக்க வைத்துப் பின்னர் அவர்களுடைய பிள்ளைகளும் இசுலாமியர்களாக மாறவேண்டும் என வற்புறுத்துகிறீர்கள்.

இந்து மதத்தில் தொடர விரும்புபவர்களை சீர்திருத்த நிலையங்களில் கொண்டுபோய் அடைத்து, சிறைக்கைதியைப் போலக் கொடுமைப்படுத்துகிறீர்கள்.

தமிழ் மொழியை அழிக்க முயலுகிறீர்கள். பத்திரிக்கைகளைத் தடை செய்கிறீர்கள்.

இன்னமும் சொல்லிக்கொண்டே போகலாம்.

//நான் தைரியமா தாவூத்தை தீவிரதின்னு சொல்லி ஒதுக்குகிறோம்,//

கோயம்புத்தூரில் மருத்துவமனையின் பிரசவஅறைகளில்கூட குண்டு வைத்த மதனியும், பாஷாவும், இந்தியப் பாராளுமன்றத்தைத் தாக்கிய அப்சல் குருவும் தீவிரவாதி என்று முதலில் ஒத்துக்கொள்ளுங்கள். அதன் பின்னால் வெறும் அடியாளான தாவுத்தைப் பற்றிப் பேசலாம்.

//ஒரிஸ்ஸவில 2000 கிறிஸ்தவர்களை கொன்னது எல்லாம் எந்த கணக்கு?//

தக்கியாவிற்கு சரியான உதாரணம். சும்மா 2000, 3000 என்று ஜீரோக்களைச் சேர்த்துப் புரளி பரப்பிக்கொண்டே இருப்பது. ஆதாரமில்லாத வழக்கமான பொய். மனசு சுத்தமாக இருந்தால், நேர்மையாக இருந்தால்தான் உண்மை பேச வரும். மதம் பிடித்துவிட்டால் பொய்தான் வரும்.

ஆதாரம் இல்லாத பொய்கள்.

//நாங்க அராஜகம் பண்ணினா எங்களை தான் அரஸ்ட் பண்ணனும். அவரை பண்றாங்கன்னா அவரு மேல தப்பிருக்க போய் தானே? //

பெட்ரோல் குண்டு எரிந்தவர்களை, வாகனங்களுக்குத் தீ வைத்தவர்களை விட, ஒரு கட்டுரையை பிரசுரிப்பவர் தவறு செய்தவர் என்றால்.....இஸ்லாத்திற்கு ஏற்ற ஆள்தான் நீங்கள்.

>>>>> \\ஆனா, பல முசுலீம் நாடுகள்ள இண்டர்நெட்ட தடை பண்ணிருக்கீங்க.\\

எந்த நாட்லங்கோ? <<<<<<<<<

இஸ்லாமிய பாக்கிஸ்தானும் இண்டர்னெட்டும்:

http://en.wikipedia.org/wiki/Internet_censorship_in_Pakistan

இஸ்லாமிய ஈரானும் இண்டர்னெட்டும்: http://en.wikipedia.org/wiki/Internet_censorship_in_Iran

இண்டெர்ன்நெட்டிற்கு எதிரான ஈரான்: http://stop.censoring.us/

http://regimechangeiran.blogspot.com/2005/09/internet-censorship-in-iran.html

http://www.policyinnovations.org/ideas/briefings/data/000004

http://1389blog.com/stop-blog-censorship/

//எந்த இஸ்லாமிய நாட்டுல வரதட்சணைக்காக ஸ்டவ் எரியுது, மூதேவி, முண்டம், வாழாவெட்டிங்க்ற பேரும், ஆசிட் வீசுறதும், உடன்கட்டை ஏறுறதும், பெண் பிள்ளை வேண்டாம்ங்க்ற மந்திரத்தையும் ஓதுறாங்க கொஞ்சம் சொல்லுங்க பாப்போம்? //

வரதட்சணை போன்ற கொடுமைகளைச் செய்யும் இசுலாம்: http://www.wluml.org/english/newsfulltxt.shtml?cmd%5B157%5D=x-157-71604

http://exposingislam.blogspot.com/2009/03/benefits-fraudster-goes-free-over-dowry.html

http://arabnews.com/?page=1&section=0&article=107995&d=19&m=3&y=2008

http://www.amnesty.org/en/library/info/ASA33/018/1999

http://www.guardian.co.uk/world/2008/sep/01/pakistan

http://www.islam-watch.org/SyedKamranMirza/honor_killing.htm

//மனிதர்கள் இஸ்லாத்தை ஒழுங்கா ஃபாலோ பன்னளைங்க்ரதுக்காக மார்க்கத்தை குறை கூற முடியுமா? //

மனிதர்களால் ஒழுங்காக ஃபாலோ பண்ண முடியாதத வச்சுக்கிட்டு என்ன பிரயோசனமுங்கோ?

//மூடுறதும் மூடாததும் எங்க இஷ்டம், உங்க வேலை என்னமோ அதை போய் பாருங்க //

இதத்தாங்க நான் ஆரம்பத்தில இருந்தே சொல்லிக்கிட்டு இருக்கேன்.

>>>>>//\ஒரு குரூப்பு இன்னொரு குரூப்பு சரியில்லன்னு சொல்லுது. நாங்கதான் சரின்னு சொல்லுது. நாங்கதான் உண்மையான முசுலீமுங்குது. \\


//உங்களுகென்ன பிரச்சினை இதுல? ஆடு நனையுதேன்னு ஓநாய்க்கு வருத்தமோ? அப்படி பார்த்தா நம்ம ஊருல இல்லாத ஜாதி பிரச்சனையா? ரெட்டை குவளை முறையும், அருவாள் வெட்டு சண்டையும் யாரோட சொத்து ஐயா? மார்க்கத்தை ஒழுங்காக விளங்காதவன் பண்ற வேலை அது. // <<<<<

யாருக்குமே புரியாத ஒரு மார்க்கம் அவசியமே இல்லை.

>>>>> //\\ஆனாக்க, மெக்கா மசூதிய தீவிரவாதிங்க பிடிச்சப்ப ப்ரெஞ்சு நாட்டு கிருத்துவர்கள்தான் வந்து காப்பாத்தித் தந்தாங்க.\\

இது எப்ப நடந்தது?
<<<<<<
மெக்கா மசூதி ஆக்கிரமிப்பு: http://www.thinnai.com/?module=displaystory&story_id=20809043&format=html

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20809117&format=html

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20809185&format=html

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20809253&format=html

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20810094&format=html

>>>>///\\திருப்பி திருப்பிப் பொய் சொல்ற “தக்கியாவ” புனிதக் கடமையா வச்சிருக்கிற ஒங்ககிட்ட வேற என்ன பேசறது.\\

இது என்ன கடமை?
///<<<<<<<<<<<

இசுலாமிய தக்கியா:
http://www.islam-watch.org/Warner/Taqiyya-Islamic-Principle-Lying-for-Allah.htm

http://www.accessmylibrary.com/coms2/summary_0286-9730604_ITM

http://www.danielpipes.org/comments/25320

>>>> கரு வளர்ச்சியில இருந்து big bang theory வரைக்கும் எல்லாமே பேசுறது குரான். அதனால, மூளைய உபையோகப்படுதரத பத்தி நீங்க எங்களுக்கு சொல்லி தர வேணாம். ஓகே ஆ?
<<<<

குரான் பேசும் அறிவியல் குறித்து: http://arvindneela.blogspot.com/search?q=%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D

Anonymous said...

ஐயா அணோனி அவர்களே, சபை நாகரிகம் தெரியாத நீங்கள், ஆதாரமில்லாத அடுக்கடுக்கான பொய்களை கட்டவிழ்த்துக்கொண்டே போகலாம். அது உங்களுக்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட பண்பு போலும். உங்கள் கேள்விகளை எதிநோக்கியுள்ளேன், இனிமேலும் நீங்கள் புதிது புதிதை எதேனும் கண்டுபிடிப்பீர்கள் என்றும் எனக்கு தெரியும். அவதூறு பரப்புவதும் குட்டையை கிளப்புவதும் சிலரின் முழு நேர வேலை போல.

நம் நாட்டில் இந்துக்களும் முஸ்லிம்களும் மாமன் மச்சானை போல் பழகுகிறோம். சில விஷ ஜந்துக்களுக்கு அது பொறுக்கவில்லை போலும். என்ன தான் முயற்சித்தாலும் உங்களை கண்டால் எங்களுக்கு சிரிப்பாக தான் இருக்கிறது. நடத்துங்கள் உங்கள் நாரதர் வேலையயி. அது எங்கள் ஒற்றுமையை ஒன்றும் செய்யப்போவதில்லை.
-------
ஈழத்தமிழர்களை ஆதரிப்பதும் விடுதலைப்புலிகளை ஆதரிப்பதும் ஒன்றாகிவிடுமோ? விடுதலைப்புலிகள்

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/2070817.stm

\\The differences were further accentuated in the early 1990s, when Tamil Muslims from the northern province were forcibly evicted by Tamil Tigers when they captured the Jaffna peninsula.


They speak the same language, but find it difficult to see eye-to-eye on political issues

About 65,000 Muslims from the north of the country have lived as refugees in the south and parts of the east ever since\\

காத்தான்குடியில் பள்ளியில் சிறுவர்களை கூட விட்டு வைக்காமல் சுட்டவர்களை சாதி மத பேதம் பார்க்காமல் எந்த ஒரு மனிதனுமே வெறுப்பான். அதற்க்கு முஸ்லிம்கள் ஒன்றும் விதிவிலக்கல்ல.

http://www.spur.asn.au/kattankudi_muslim_mosque_massare_by_ltte_1.htm

மலேசியா விவகாரம் முற்றிலுமாக rss விஷக்கிருமிகளால் பரப்பப்பட்டது. இதோ ஆதாரம்:

http://www.panthic.org/news/129/ARTICLE/3738/2007-12-12.html

\\It is hoped the hundred thousand strong peaceful and prosperous Sikh community in Malaysia will maintain a safe distance, and shun the activities of the uppity Hindu Rights Action Force (a Malaysian ‘child’ of the Neo-Nazi Rashtryia Savak Sangh - RSS - of India) which fascist body has tried to embarrass the Malaysian government with an illegal and noisy, 10, 000 man protest rally in Kuala Lumpur, on 25 November, 2007. That activity was intentionally synchronized with the summit meet of the British Commonwealth countries (including Malaysia) which was being held Khalistan Calling 12 December, 2007.\\

\\கோயம்புத்தூரில் மருத்துவமனையின் பிரசவஅறைகளில்கூட குண்டு வைத்த மதனியும், பாஷாவும், இந்தியப் பாராளுமன்றத்தைத் தாக்கிய அப்சல் குருவும் தீவிரவாதி என்று முதலில் ஒத்துக்கொள்ளுங்கள். அதன் பின்னால் வெறும் அடியாளான தாவுத்தைப் பற்றிப் பேசலாம்\\

கண்டிப்பாக. கோயமுத்தூரில் குண்டு வைத்து அப்பாவி மக்களை கொன்ற அல் உம்மாவை சேர்ந்தவர்கள் பயங்கரவாதிகளே. மறுப்பொன்றும் இல்லை. இந்தியாவில் உள்ள எந்த முஸ்லிமும், அதை ஒத்துக்கொள்வான். ஆனால் கர்பிணி பெண்ணை கூட விட்டு வைக்காமல் சீரழித்தவன் இன்னும் வெளியில் உலவிக்கொண்டிருக்கிரானே, 140 முஸ்லிம்களை நானே கொன்றேன் என்று பெருமையாக பஜ்ரங்கி கூறினானே அவனுக்கு mentor ஆனா மோடியை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுகிறீர்களே அதெற்கென்ன? அமைதியாக இருந்த அயோத்தியில் சென்று பள்ளியை இடித்து, பல ஆயிரம் இந்துக்களையும் முஸ்லிம்களையும் அடித்துக்கொண்டு சாகவைத்தவனை அடுத்த பிரதமர் என்று கூரிக்கொல்லுவது எந்த ஊரில் நியாயம்?

\\தக்கியாவிற்கு சரியான உதாரணம். சும்மா 2000, 3000 என்று ஜீரோக்களைச் சேர்த்துப் புரளி பரப்பிக்கொண்டே இருப்பது. ஆதாரமில்லாத வழக்கமான பொய். மனசு சுத்தமாக இருந்தால், நேர்மையாக இருந்தால்தான் உண்மை பேச வரும். மதம் பிடித்துவிட்டால் பொய்தான் வரும்\\

நீங்க சொன்ன பொய்களை விடவா? 2000 per குஜராத்திலும், 58 கிராமங்களையும் நாசமக்கியதை எங்கென்று சொல்லுவது? நான் எண்ணிக்கையை அதிகரித்தாலும் அங்கு நடந்தது தவறு என்று ஒத்துக்கொள்கிற தைரியம் இருக்கிறதா உங்களுக்கு? உங்கள் சாயம் வெளுத்து விட்டதே ஐயா.

Internet CEnsorship

ஐயா, இன்டர்நெட் ஐ தடை செய்வதற்கும், சென்சார் செய்வதற்கும் உள்ள வேறுபாடு அறியாமலா இருக்கிறீர்கள்? பாவமையா நீங்கள்.

---

exploringislam மற்றும் islamwatch ஆகிய இரண்டு தளங்களுமே இஸ்லாத்தை வெறுப்பவர்களால் ஏற்படுத்தப்பட்டது. அங்கேயும் உங்களை போன்றவர்கள் கட்டவிழ்க்கும் பொய்களுக்கு பதில் கூற எனக்கு நேரம் இல்ல. ஆனால் மற்ற தளங்களின் மூலம் உங்கள் சாயம் இன்னும் வெளுக்க போகிறது:

1. http://arabnews.com/?page=1&section=0&article=107995&d=19&m=3&y=2008

\\“I have no option but to seek the mercy of the governor after the Shariah court rejected my plea for divorce from my husband who had been torturing me both mentally and physically,” Um Hassan told Arab News yesterday.

The woman claims the judge told her that her only option was “khula,” a form of divorce initiated by women that requires them to reimburse dowry paid to them by their husbands at the time of marriage.\\

இதோ, அவள் கணவன் அவளை கொடுமைப்படுதிகிறான் என்பதற்காக மிகச்சுலபமாக அவள் தனக்கு விவாகரத்து கோருகிறாள். பெண்களுக்கும் "குலா" எனப்படும் விவாகரத்து செய்யும் உரிமையை இந்த தளம் மிக எளிதாக விளக்குகிறது.

2. http://www.guardian.co.uk/world/2008/sep/01/pakistan

\\Under tribal - not religious - tradition, marriages are carefully arranged by elders. Marrying without permission is considered an affront to the honour of the tribe.\\

இங்கே இஸ்லாம் எங்கு வந்தது? கொஞ்சம் கூற முடியுமா? முன்னேறிய நாடான நமது இந்தியாவிலேயே இறந்த மாட்டின் தோலை உரித்த தலித்துகளை கொலை செய்யும்போது கொஞ்சம் கூட முன்னேறாத பாகிஸ்தானில் காட்டு மிராண்டிகளுக்கா பஞ்சம்?

3. http://www.wluml.org/english/newsfulltxt.shtml?cmd%5B157%5D=x-157-71604

உங்களுக்கு இதில் என்ன பிரச்னை?

\\மனிதர்களால் ஒழுங்காக ஃபாலோ பண்ண முடியாதத வச்சுக்கிட்டு என்ன பிரயோசனமுங்கோ?\\
\\யாருக்குமே புரியாத ஒரு மார்க்கம் அவசியமே இல்லை.\\

ஒரு வகுப்பிலே நாலு முட்டபையளுங்க கணக்குல தோத்தா கணக்கு பாடமே வேண்டாமா? ஹையோ ஹையோ.

\\இதத்தாங்க நான் ஆரம்பத்தில இருந்தே சொல்லிக்கிட்டு இருக்கேன்.\\

போய் எதாச்சும் வேலை இருந்தால் பாருங்கண்ணே.

\\http://www.thinnai.com/?module=displaystory&story_id=20810094&format=html \\

இந்த மாதிரி மூளை கேட்டவன் உளறுனதை எல்லாம் படிச்சு நேரத வீணாக்க விரும்பல. உக்காந்து யோசிப்பைங்க போல.

\\http://www.accessmylibrary.com/coms2/summary_0286-9730604_இடம்\\

தீவிரவாதிகளுக்கு மதம், மொழி, இனம் ஒரு பேதம் கிடையாது. எங்கயோ எவனோ ஒருத்தன் புதுசா கண்டுபிடிச்சதை உலக முஸ்லிம்கள் எல்லாரும் பின்பற்றுராங்கன்னு சொல்றீகளே, இதை உங்க ஊருல "மெய்" நு சொல்லுவாங்களோ? தகியானு ஒன்னு இருக்குறதே நீங்க சொல்லி தான் ஐய தெரியுது

http://arvindneela.blogspot.com/search?q=%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%௮

இந்த தளத்தை பார்த்தாலே தெரியுது rss காரனுடைய தளம்னு. இஸ்லாம் கூறும் அறிவியல் தெரியனும்னா இங்க பாருங்க:

On Embryology
http://www.mcabayarea.org/Multimedia/tabid/245/articleType/ArticleView/articleId/111/Embryology-in-Quran--Prof-Keith-Moore.aspx

Iron Came down from space
http://www.youtube.com/watch?v=bQGso2JlHaM

http://www.islamguiden.com/arkiv/quran_science.pdf

Anonymous said...

http://www.grandestrategy.com/2009/03/quran-and-modern-science.html

Anonymous said...

The science that these people claim to be of islamic is actually predates Islam.

Show us one nobel Laurette from arab world.

where are those wonderful mathematicians, scientists of the Arab?

All killed by Islam.

வால்பையன் said...

அன்பு அனானிகளா

ரெண்டு வருத்தம்

முதல்லயே சொல்லிட்டேன்

தனி மதத்தை உயர்த்தி பேச இது இடமில்லை.

காரணம் மதத்தை நான் ஆதரிக்கவில்லை

அப்புறம்

ஆங்கிலத்தில் பின்னூட்டம்

நான் படிக்கிற மாதிரி பின்னூட்டம் போடுங்க

எனக்கு தமிழை தவிர வேறு மொழி படிக்க தெரியாது

கோவி.கண்ணன் said...

உடலையும், முகத்தையும் மறைத்து உடை அணிவது மதக் கட்டுப்பாடு, அதற்கு நாங்கள் கட்டுப்படுகிறோம், எங்களுக்கு வசதியாக இருக்கிறது என்று கூற எவருக்கும் உரிமை இருக்கிறது.

ஆனால் இப்படி அணிவது தான் சிறந்தது என்று பொதுவாக கட்டமைப்பது சரி கிடையாது. இவை தவறான பொருளையே தரும். மீசை வழித்த ஆண்கள் ஆண்களா ? என்று கேட்பது போன்றாகும்.

ஐரோப்பிய பெண்களும், சீனப் பெண்களும் தொடை தெரிய உடை அணிகிறார்கள் என்பதற்காக எவரும் சுதந்திரமாக தொட்டுப் பார்க்க முடியாது, அப்படி அணியும் பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்கள் என்று சொல்வதும் முறையாகுமா ?

மனதுக்கு திரையிட்டால் விழிகளுக்கு திரை தேவை இல்லை, ஏனெனில் மனக்கண் ஆடையையும் ஊடுறுவ வல்லது.

Baski said...

முகம் மறைக்கும் இந்த கலாசாரம் அடிமைத்தனமே.. !!

சும்மா சப்பைகட்டு கட்டாதீர்கள்.

முகம் தெரிய உடை உடுத்தும் பெண்கள் எல்லாம் உங்களை விட நல்ல உயரத்தில் தான் இருகிறார்கள்.

நீங்களே ஒரு நிர்வாக அதிகாரி யாக வேண்டுமென்றால் உங்கள் முகம் தெரிய தான் ஆக வேண்டும்.

பாத்திமா பீவியும் , ஜெயலலிதாவும், சோனியா காந்தியும் , பிரதிபா படேலும் , அன்னை தெரசா வும் முகம் மறைய உடை அணிந்ததா இந்நிலையை அடைத்தார்கள் ???

ரொம்ப பேச வேண்டாம்... ஒரு நடைமுறை சந்தேகம்.

நீங்களும், உங்கள் சகோதரிகளும், சித்தி, அத்தை எல்லோரும் ஒரு பொருட்காட்சி போறீங்க... அங்க வந்தவங்க எல்லோரும் முகம் மறைத்து உடை அணிது வாரங்கனு வைசுபூம்...

ஒரு கணத்தில் யாரு யாரோட இருக்கீங்கனு தெரியாதே ?? என்ன பண்ணுவீங்க..!!!

இதற்கும் நீங்கள் ஒரு சப்பைகட்டு பதில் தயாரிக்கலாம்.

ஏன் (why/why-not) என்ற கேள்வி கேட்க அனுமதி இல்லாத உங்கள் நிலையை அடிமை நிலை என்று சொல்லாமல் என்ன சொல்லுவது ???

பைக்கில் போகும் பொது ஹெள்மெட் (தலை கவசம்) அணியணும்.

பனி பொழியும் பொது அல்லது குளிரும் போது தான் கம்பளி உடை (சுவட்டேர்) போட்டுக்கணும்.

அதுபோல், பெண்கள் முகம் பாத்ததுமே காமவெறி தலைகேரும் சமுதாயத்தில் நீங்கள் சொல்லும் முறை உசிதமானது தான்..

இது பாரத நாடு. இங்கு இந்த உடை தேவை இல்லை. ஒத்துகொள்வீர்களா ???

Poornima Saravana kumar said...

ha ha ha:))))))))))

naan than 100

Poornima Saravana kumar said...

comment has been saved and will be visible after blog owner approval
//

avvvvvvvvvvvvvv

vaal ippati pannittingale:(

Indian Muslimah said...

\\ஆனால் இப்படி அணிவது தான் சிறந்தது என்று பொதுவாக கட்டமைப்பது சரி கிடையாது.\\

ஐயா, என்னை பொறுத்த வரையில் இது சிறந்தது. அவ்வளவு தான்.

\\ஐரோப்பிய பெண்களும், சீனப் பெண்களும் தொடை தெரிய உடை அணிகிறார்கள் என்பதற்காக எவரும் சுதந்திரமாக தொட்டுப் பார்க்க முடியாது, அப்படி அணியும் பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்கள் என்று சொல்வதும் முறையாகுமா ?\\

உடையை ஒழுங்காக அணியாதவர்கள் ஒழுக்கக்கேடானவர்கள் என்று சொல்வதற்கு யாருக்குமே உரிமை இல்லை. என்னை பொறுத்த வரையில் என் மார்க்கம் அறிவுறுத்திய உடைக்கோட்பாடு மிகவும் சிறந்தது. அதை நான் பின்பற்றுகிறேன்.

----
முகத்தை மறைப்பது கட்டாயம் கிடையாது. அது ஒருவரின் விருப்பம். அனால் முகம் கைகள் தவிர எல்லாவற்றையும் மறைப்பது கட்டாயம். அவ்வளவு தான். நான் என் அலுவலகத்தில் என் முகத்தை மூட மாட்டேன். ஆனால் நான் நடந்து செல்லும் பாதையில் ஆண்கள் கூட்டம் அதிகம் இருந்தால் என் முகத்தை மூடுவேன். அவ்வளவு தான்.

\\அதுபோல், பெண்கள் முகம் பாத்ததுமே காமவெறி தலைகேரும் சமுதாயத்தில் நீங்கள் சொல்லும் முறை உசிதமானது தான்..

இது பாரத நாடு. இங்கு இந்த உடை தேவை இல்லை. ஒத்துகொள்வீர்களா ???\\

ஐயா, காம வெறிப்பிடிதவர்களுக்கு நாடு, மொழி, இனம், மதம் ஒரு சாக்கு கிடையாது. ஆண்களும் பெண்களும் இருக்கும் எல்லா இடத்திலும் அவர்கள் இருக்கிறார்கள். நம் நாட்டிலும் பெண்கள் ஒன்றும் ஒரு கொடுமையும் செய்யப்படாமல் இருப்பதில்லை. ஒரு கம்புக்கு புடவையை சுற்றினாலும் இச்சையோடு பார்க்கும் ஆண்கள் எல்லா இடத்திலும் உள்ளார்கள். அவர்கள் எட்டு வயது சிறுமி என்றோ அல்லது தனக்கு மகள் முறை என்றோ தோன்றவே தோன்றாது. உலகத்தின் எந்த மூலையிலும் சில வெறிப்பிடித்த ஆண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆக பெண்களாகிய நாங்கள் கவனமாக இருக்கிறோம், அவ்வளவு தான்.

http://www.tamilvanan.com/content/2009/04/10/control-sex-feelings/

வால்பையன் said...

//ஒரு கம்புக்கு புடவையை சுற்றினாலும் இச்சையோடு பார்க்கும் ஆண்கள் எல்லா இடத்திலும் உள்ளார்கள். //


எங்கே கள்ளன் பயம் உள்ளதோ அங்கே பொருளை பாதுகாப்பாக வைத்திருப்பார்கள்!

தமிழகத்தில் மேலாடை அணியும் முறையே ஆங்கில ஆதிக்கத்தின் பின் வந்தது! இன்றும் கேரளாவில் பெண்கள் ஜாக்கெட்டின் மேல் எதுவும் சுற்றுவதில்லை!

சுருக்கமாக சொலதென்றால் திறந்து கிடக்கும் வீட்டில் திருடன் நுழைவதில்லை! பூட்டிய வீட்டில் தான் திருடுவான்!

உங்கள் மார்க்கம் மிக முக்கியம் உங்களுக்கு! அது எதை சொன்னாலும் அப்படியே ஏற்று கொள்வீர்கள்!
எனக்கு அப்படியில்லை எதையும் கேள்வி கேட்டு தான் பழக்கம்!

வேறொரு விவாதத்தில் கண்டிப்பாக சந்திப்போம்!

Anonymous said...

தூங்கிக்கொண்டிருப்பவர்களை எழுப்பலாம், தூங்குபவரை போல் நடித்துக்கொண்டிருப்பவரை எப்படி எழுப்ப இயலும்?

\தமிழகத்தில் மேலாடை அணியும் முறையே ஆங்கில ஆதிக்கத்தின் பின் வந்தது! இன்றும் கேரளாவில் பெண்கள் ஜாக்கெட்டின் மேல் எதுவும் சுற்றுவதில்லை!

\சுருக்கமாக சொலதென்றால் திறந்து கிடக்கும் வீட்டில் திருடன் நுழைவதில்லை! பூட்டிய வீட்டில் தான் திருடுவான்!\\

ஐயா, என்னை தயவு செய்து மன்னித்து விடுங்கள் இப்படி கேட்டமைக்கு. இருந்தாலும் என்னால் கேட்காமல் இருக்க இயலவில்லை. மேற்கூறிய படி ஒருவர் தன் தங்கையையோ அல்லது தமக்கையயோ அல்லது தாயையோ அல்லது மகளையோ மனைவியையோ இக்காலத்தில் மேலாடை இல்லாமல் வெளியே செல்வதை நினைத்துப்பார்க்க இயலுமா?

சகோதரரே, இந்த கேள்வி உங்களை புண்படுத்தியிருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். அல்லது இந்த பின்னூட்டத்தை தணிக்கை செய்து விடுங்கள். ஒரு விவாதத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம், அனால் அது நடைமுறை வாழ்வுக்கு ஒத்து வராது. அதை நீங்கள் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

---

கேரளாவில் பெண்களுக்கு கிடைக்கும் 'மரியாதை' ஊர் அறிந்தது. நம் சென்னையில் பத்து மணிக்கு கூட ஓரளவுக்கு தைரியத்துடன் பெண்கள் நடமாடலாம் ஆனால் கொச்சி போன்ற நகரங்களில் கூட அது சாத்தியமில்லை.

Kerala has seen the number of sexual harassment cases going up from 562 in 1990 to 1,809 in 1999.
(கேரளாவில் பாலியல் வன்கொடுமை வழக்குகள் 562 இல் இருந்து 1,809 ஆக வெறும் பத்தாண்டுகளில் உயர்ந்துள்ளது)
http://www.expressindia.com/news/ie/daily/20001011/ina11061.html

\\உங்கள் மார்க்கம் மிக முக்கியம் உங்களுக்கு! அது எதை சொன்னாலும் அப்படியே ஏற்று கொள்வீர்கள்!
எனக்கு அப்படியில்லை எதையும் கேள்வி கேட்டு தான் பழக்கம்\\

நிச்சயமாக. ஆனால் எதையும் கண்மூடித்தனமாக செய்ய சொல்லவில்லை எங்கள் மார்க்கம். ஒவ்வொரு மார்க்க செயலுக்கும் ஓர் அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது. நீங்கள் கேள்விகள் கேட்பதை கண்டிப்பாக நான் வரவேற்கிறேன்!

வால்பையன் said...

//ஒருவர் தன் தங்கையையோ அல்லது தமக்கையயோ அல்லது தாயையோ அல்லது மகளையோ மனைவியையோ இக்காலத்தில் மேலாடை இல்லாமல் வெளியே செல்வதை நினைத்துப்பார்க்க இயலுமா?//

உங்களை கேள்வி கேட்க எனக்கு உரைமை உள்ளது போல், என்னை கேள்வி கேட்கவும் உங்களுக்கு முழு உரிமை உண்டு.

நான் சொன்னது ஆங்கிலேய வருகையின் போது, அதன் பின் எல்லாம் மாறிவிட்டதே! இப்போதும் அதே போல் செய்ய வேண்டிய அவசியமில்லை, மேலும் இருக்கும் இடத்தின் தட்பவெப்பதிற்கேற்ப எப்படி உடை அணியவேண்டுமென்று என் மனைவியோ, மகளோ விரும்பினால் அதை அப்படியே ஏற்பேன்.

அவர்களுது மனநலத்தில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது, தனக்கு தேவையான சரியானவற்றை அவர்களால் சரியாக தேர்ந்தெடுக்க முடியும் என நம்புகிறேன்.

//இந்த கேள்வி உங்களை புண்படுத்தியிருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். அல்லது இந்த பின்னூட்டத்தை தணிக்கை செய்து விடுங்கள்.//

உங்கள் பக்க கேள்விகளை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை என்றால் நான் வாத்திற்கே வந்திருக்க கூடாது.

வால்பையன் said...

//(கேரளாவில் பாலியல் வன்கொடுமை வழக்குகள் 562 இல் இருந்து 1,809 ஆக வெறும் பத்தாண்டுகளில் உயர்ந்துள்ளது)//

குற்றங்கள் அதிகரித்தற்கு காரணமாக நீங்கள் எதை சொல்கிறீர்கள்.

பாலியல் குற்றங்களோ, திருட்டோ, சாலை விபத்தோ
அடிப்படை காரணம் மக்கள் தொகை பெருக்கம், அதுவே அனைத்திற்கும் காரணம்.
சரியான உணவு இல்லை.
கல்வி இல்லை,
அடிப்படை பொருளாதார தேவைகள் இல்லை,

இவையே அனைத்து குற்றங்களுக்கும் காரணம்.

மனம் பக்குவப்பட்டால் நிர்வாணம் மனதிற்கு ஆடையாகும்.
இல்லையென்றால் உங்கள் கண் கூட எக்ஸ்ரே எடுக்கும்.

Anonymous said...

'திருட்டு பயத்தை' பற்றி கூறி நீங்கள் கேரளாவை உதாரணமாக காட்டினீர்களே அதற்கு தான் அந்த புள்ளி விவரங்களை காட்டினேன். மேலும் பெண் என்றாலே போகப்பொருள் தான் என்று நினைப்பவர்கள் எல்லா இடத்திலும் உள்ளார்கள் என்பதற்காகவும் அதை பதிவு செய்தேன்.

\\பாலியல் குற்றங்களோ, திருட்டோ, சாலை விபத்தோ
அடிப்படை காரணம் மக்கள் தொகை பெருக்கம், அதுவே அனைத்திற்கும் காரணம்.
சரியான உணவு இல்லை.
கல்வி இல்லை,
அடிப்படை பொருளாதார தேவைகள் இல்லை,

இவையே அனைத்து குற்றங்களுக்கும் காரணம்.\\

பாலியல் குற்றங்களையும் சாலை விபத்தையும் முடிச்சு போடுவது விநோதமாக உள்ளது சகோதரரே. எந்த ஆராய்ச்சியில் இதனை கண்டு பிடித்தீர்கள்? பாலியல் வன்முறைக்கான அடிப்படை காரணங்கள்:

- அதிகப்படியான மது உட்கொள்ளுதல் (alcoholism)
- பெண்களை போகப்பொருளாக காண்பிக்கும் மீடியா, அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு

http://www.ccasa.org/documents/Root_Causes_Short_Descriptions.pdf

பெண் விடுதலை என்பது அவளது ஆடை குறைப்பு விஷயத்தில் மட்டுமே இருக்கிறது என்ற ஆணாதிக்க மனோபாவம் தான் ஆண்களை முழு உடையுடனும் (கோட், சூட்) பெண்களை அரை குறை ஆடைகளுடனும் இந்த 'மாடர்ன்' கலாச்சாரத்தில் பார்க்கிறோம்.

\\மனம் பக்குவப்பட்டால் நிர்வாணம் மனதிற்கு ஆடையாகும்.
இல்லையென்றால் உங்கள் கண் கூட எக்ஸ்ரே எடுக்கும்\\

இந்த பக்குவம் நூற்றில் எதனை பேருக்கு வரும் கூறுங்கள் பார்ப்போம்? இது ஒரு விவாதத்திற்கு வேண்டுமானால் நன்றாக இருக்குமே ஒழிய நடைமுறைக்கு ஒவ்வாத விஷயம்.

இதோ, மனநல மருத்துவர்களின் சமீபத்திய ஆராய்ச்சி:

\\Men see bikini-clad women as objects, psychologists say\\

(ஆண்கள் பிகினி அணியும் பெண்களை ஒரு பொருளாக மட்டுமே பார்க்கின்றனர், மனநல மருத்துவர்கள்)

http://www.cnn.com/2009/HEALTH/02/19/women.bikinis.objects/index.html

வால்பையன் said...

//பெண் விடுதலை என்பது அவளது ஆடை குறைப்பு விஷயத்தில் மட்டுமே இருக்கிறது என்ற ஆணாதிக்க மனோபாவம் தான்//

ஒரு பெண்ணே விரும்பி ஏற்று கொள்ளும் பட்சத்தில், அதெல்லாம் முடியாது நீ இப்படி தான் உடை அணிய வேண்டும் என்பது தான் ஆணாதிக்கம்,

நான் ஆணாதிக்கமும் பேச வரவில்லை, பெண்ணாதிக்கமும் பேச வரவில்லை.

//பாலியல் குற்றங்களையும் சாலை விபத்தையும் முடிச்சு போடுவது விநோதமாக உள்ளது சகோதரரே. //

குற்றங்கள் உயர்துள்ளது என்ற போது, மக்கள் தொகை பெருக்கம் முக்கியகாரணம் என தெரிவிக்கவே சாலை விபத்தையும் எடுத்தேன்.

//அதிகப்படியான மது உட்கொள்ளுதல் (alcoholism)
- பெண்களை போகப்பொருளாக காண்பிக்கும் மீடியா, அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு//

மது உட்கொள்ளுவதால் பக்கத்து வீட்டுக்குள் நிழைந்து விடுவோம் என முன்முடிவுக்கு வராதீர்கள்.
பாலியல் குற்றங்களுக்கு மனரீதியான பல பாதிப்புகள் இருக்கிறது. நீங்கள் கொடுத்துள்ள சுட்டிகள் அதில் ஒரு பகுதியாக இருக்கலாம்.

நான் சுட்டிகளை பார்த்து பக்குவமடையவில்லை, வாழ்ந்து பார்த்து தான் பக்குவமடைந்தேன்.

//ஆண்கள் பிகினி அணியும் பெண்களை ஒரு பொருளாக மட்டுமே பார்க்கின்றனர், மனநல மருத்துவர்கள்//

பொருளாக என்றால், புரியவில்லை.
மனநல மருத்துவர்கள் சொன்னார்கள் என்பதற்காக என்னால் ஏற்றுகொள்ள முடியாது!

அவர்கள் மனதில் தோன்றுவதை கூட அவர்கள் சொல்லலாம்.

சரி பர்தா மேல அணிபவர்கள் எல்லாம் உள்ளே பிகினியா அணிந்துள்ளார்கள்!

நீங்கள் ஏன் பிகினிக்கு போகிறீர்கள்.

Anonymous said...

\\பொருளாக என்றால், புரியவில்லை.\\

பொருளாக என்றால் போக பொருளாக, சக மனுசியாக இல்லாமல் .

\நீங்கள் ஏன் பிகினிக்கு போகிறீர்கள்.\

ஐய நீங்கள் தானே நிர்வாணம் கூட புனிதமானது என்று கூறினீர்கள்.

\\மனநல மருத்துவர்கள் சொன்னார்கள் என்பதற்காக என்னால் ஏற்றுகொள்ள முடியாது
அவர்கள் மனதில் தோன்றுவதை கூட அவர்கள் சொல்லலாம்.\\

மனநல மருத்துவர்கள் அவர்களின் ஆய்வில் கூறுவதை "மனதில் தோன்றுவதாக " என்னும் உங்களின் வலைப்பூவில் நேரத்தை நான் வீனடித்துக்கொண்டிர்ருக்கிறேன் என்று எனக்கு உணர்த்தி விட்டீர்கள். நன்றி.

வால்பையன் said...

ஏப்ரல் முதல் தேதி போட்ட பதிவை இதுவரை இழுத்து வந்ததற்கு உங்களுக்கும் நன்றி!

அதாவது தனக்கு சாதகமான செய்திகளை மட்டும் சுட்டி கொடுப்பது!
முன் முடிவோடு வாதாடுவது போன்ற உங்களுடய செயல்களால் நானே சலித்து போய் தான் இருந்தேன்!

சுட்டி கிடைக்கவில்லை என்றால் பரவாயில்லை, அடுத்த பதிவுக்குள் நிறைய சுட்டி கிடைக்கலாம்

//ஐய நீங்கள் தானே நிர்வாணம் கூட புனிதமானது என்று கூறினீர்கள்.//

நிர்வானம் புனிதமானது என்று நான் கூறியிருந்தால் அதற்கு நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.
ஒன்றை புனிதமானது என்று நான் ஒப்பு கொண்டால் நானும் ஒரு வித மதநம்பிக்கைக்குள் விழுந்து விட்டேன் என்று அர்த்தம்.

எங்கே சொன்னேன் என்று நானும் தேடி பார்க்கிறேன், உங்கள் அலுவலகத்தில் வீணடிக்கப்பட்ட நேரத்தில் எனக்காக நீங்களும் கொஞ்சம் தேடி தாருங்கள்!

//மனதுக்கு திரையிட்டால் விழிகளுக்கு திரை தேவை இல்லை, ஏனெனில் மனக்கண் ஆடையையும் ஊடுறுவ வல்லது.//

இது அண்ணன் கோவி கண்ணன் எழுதியது, இதை தழுவி தான் என்னூடய பின்னூட்டம் இருந்த மாதிரி எனக்கு நினைப்பு!

!

Blog Widget by LinkWithin