2016!....

வருத்தம்!
மோடியின் டீமான்ஸ்டேசன் மாதிரி தீடீர்னு ப்ரேக் அப் பண்ணிக்கலாம்னு சொல்லுவான்னு எதிர்பார்க்கல. ஆதர்ச தம்பதிகள் மாதிரி ஆதர்ச காதலர்கள்னு எங்களை நினைச்சிகிட்டு இருந்தேன். ஆனால் தனிநபர் அவர் நலம் சார்ந்து எடுக்கும் முடிவு அவரது உரிமை. விளைவுகளுக்கும் அவரே பொறுப்பு. நெருக்கமானவர்களுக்கு ஆலோசனை சொல்லலாம். அதிகாரம் பண்ண நமக்கு உரிமை இல்லையே. ஆரம்பத்தில் கோவமாக வெளிபடுத்தினேன். பின் புலம்பலாக வந்தது. கோவம் போயிரும், பேசுவான்னு எதிர்பார்த்தா வீம்பா பத்து மாசத்துக்கு மேல நின்னுட்டா.
பேசும் போது பேசட்டும்னு நானும் விட்டுட்டேன்.

அதிர்ச்சி!
சொத்து குவித்து வழக்கில் தண்டனை பெற்று, மேல்முறையீட்டில் புகழ்பெற்ற குமாரசாமி குண்டங்க மண்டங்க கணக்கில் விடுதலை பெற்றாலும் மொத்தமாக ஊழலில் புரையோடி கிடத்த அதிமுகவை மக்கள் புறக்கணிப்பார்கள் என எதிர்பார்த்தேன். 200 ரூபாய்க்கு ஜனநாயகத்தை விற்று ச்சை இதுங்கெல்லாம் மனுசங்க தானான்னு துப்ப வைத்து விட்டார்கள்

ஆறுதல்!
மூன்று வருடங்கள் கழித்து என் குழந்தைகளை பார்க்கவும், அவர்களோட நேரம் கழிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. கடும் மன உளைச்சலில் இருந்த எனக்கு அது மாபெரும் ஆறுதலாக இருந்தது.

கடுப்பு!
இப்போதும் தொடரும் மதவாதமும், சாதிய அரசியலும்

காமெடி!
மக்கள் நல கூட்டணி

கோவம்!
ஊழலில் ஊறிய நாட்டில் திடீரென பண மதிப்பை திரும்ப பெறுதல் நல்ல பலனை கொடுக்கலாம் என பொது புத்தியில் நானும் நம்பினேன்.
முறையான செயல்திட்டவரைவு இல்லாமல்
”கொத்த தெரியாதவன் கையில் அம்மி கல்லை கொடுத்தது போல்” இந்தியாவை கொத்தி எடுத்து விட்டார் மோடி.

திட்டம் தோல்வி என்பதை ஒப்புக்கொள்ள மனமில்லாமல் பணமற்ற பரிவர்த்தனை என பிதற்றுவது. ஒவ்வொரு நாளும் மாற்றி மாற்றி அறிக்கை விட்டு காமெடி தர்பார் நடத்துவது என என்னை மட்டுமல்ல, நாட்டில் பலரின் கோவத்து ஆளான காமெடி பீஸ் மோடி.

இழப்பு!
இன்னும் சில வருடங்கள் வாழ்ந்திருக்கலாம் என பெரும் துயரில் விட்டு சென்ற மரணம் நா.முத்துகுமார். இன்றும் சிறந்த ஆற்றுபடுத்துனராய் இருப்பது அவர்கள் வரிகள் தான்.

கடுப்பு!
நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் அது நக்குறை தான் நக்கும்னு ஒரு பழமொழி இருக்கு. அது மாதிரி தான் அடிமைகளும், அவர்களையும் மேல உட்கார வைத்தாலும் காலை நக்குவதை விட மாட்டார்கள் என வருட கடைசியில் கடுப்பேற்றி விட்டார்கள்

பார்த்ததில் பிடித்தது!

ஹிந்தியில் பிங்க்
தனிமனித உரிமைக்கு குரல் கொடுப்பவன் தான் என்றாலும் என் விசயத்தில் கோட்டை விட்டேன் செய்தது தவறு தான் என உணராமல் நம்மால் தவறை திருத்திக்கொள்ள முடியாது. முற்றிலுமாக உணர பிங்க் உதவி செய்தது

மலையாளத்தில் ஜேக்கபிண்டே சொர்க்கராஜ்யம்
இது ஒரு உண்மை கதை. நம்பிக்கை இழந்தவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் படம். பிடிப்பு இல்லாமல் வாழ்ந்துக்கொண்டிருந்த எனக்கு நம்பிக்கை அளித்தது

தமிழில் முக்கியான படங்கள் என பாராட்டு பெற்ற படங்கள் எதுவும் நான் பார்க்கவில்லை.

படித்ததில் பிடித்தது!

வா.மு.கோமுவின் தனாவதி நாவல்
கல்யாணம் ஆகாத ஒருவன் தனாவதியாக மாறுகிறான். அதாவது பிறருக்கு பெண் பார்த்து கொடுக்கும் கல்யாண புரோக்கர் வேலை.
கோமுவுக்கே உரிய வட்டார மொழி நடை. நகைசுவை நாவலில் கட்டிபோட்டாலும் இன்னொரு சிறப்பம்சம் மங்கலதேவதைகள் நாவலை போலயே இதுவும் சினிமாவுக்கு உரிய கதை. நல்ல திரைகதை அமைத்தால் மிகசிறந்த நகைச்சிவை படமாக எடுக்கலாம்.

**
கடந்த மூன்று வருடங்களாக ராஜபோதை என்ற நாவலை எழுதி வந்தேன். கதையோட ஒன்லைன்
பணம், புகழ்,பெண் என்ற போதையில் மயங்கி கிடக்கும் மூன்று வெவ்வேறு மனிதர்களின் வாழ்க்கை. கோர்வையாக இல்லாவிட்டாலும் தனி தனியா நூறு பக்கங்கள் வரை எழுதியிருப்பேன். தொகுக்கும் முன்னே ப்ரேக் அப் ஆன கடுப்பில் சிஃப்ட்+டெலிட் கொடுத்துட்டேன்.
வரும் ஆண்டு அதை கொண்டு வர முயற்சி பண்ணனும்

தண்ணிய விடப்போறேன், தம்மை விட போறேன்னு வெட்டி சபதம் போட விரும்பல. அவைகள் என் மன அழுத்தத்தின் போது ஆறுதலாக இருந்த நண்பர்கள். அவர்கள் ஆறுதல் தேவைபடாத மாற்று கிடைக்கும் வரை அவர்கள் நட்பு எனக்கு அவ்வபோது தேவைபடும் தான்.

நிறைய அனுபவங்கள் கொடுத்தது இந்த வருடம். என் தவறுகளை திருத்திக்கொண்டு சரியான முடிவெடுத்து எதிர்காலத்தை சிறப்பாக்க முயற்சி செய்வேன். நீங்களும் நம்பிக்கையோடு அடியெடுத்து வையுங்கள். சேர்ந்து பயணிப்போம்



#வால்பையன்

1 வாங்கிகட்டி கொண்டது:

said...

நிறையவே விபரம் இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான்...முன்னவர்களுக்கு தங்களது கருத்தை உறுதிப்படுத்தும் வித்தை தெரியும்...பின்னவர்களுக்கு தெரியாது.

உலகில் தனி மனித பிரச்னைக்கு ( அப்படி இருப்பதாக நினைப்பவர்களுக்கு) அவர்களிடம் இருக்கும் திருத்திக்கொள்ள முடியாத பழக்கம்தான் காரணமே அன்றி பிறர் அல்ல.

தீதும் நன்றும் பிறர் தர வாரா...


மீண்டு(ம்) வர வாழ்த்துக்கள்.

!

Blog Widget by LinkWithin